கொஞ்சம் ரூட் மாறியிருந்தால் 'மாமனாரின் இன்ப வெறி' பட ரேஞ்ச்நடிகையாகியிருப்பார் அமலாபால். அதிர்ஷ்டம் விக்ரம் ரூபத்தில் வந்து அவரது வாழ்க்கையே திருப்பி விட்டு விட்டது. தனது தெய்வ திருமகள் படத்தில் அமலாவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து அவரது தரத்தை உயர்த்திவிட்டார் சீயான். அதே விக்ரம் கேட்டால் கூட சட்டு புட்டென்று கால்ஷீட்டை எடுத்து நீட்டிவிட முடியாதளவுக்கு அமலா பிஸியோ பிஸி.
சிம்பு நடிக்கவிருக்கும் வடசென்னை படத்தில் நடிக்க அமலாவைதான் கேட்டிருக்கிறாராம் வெற்றி மாறன். இதுவரைக்கும் ஓ.கே சொல்லவில்லை இவர். சந்தோஷமான சம்பளம், தானாக கிடைக்கும் நெகட்டிவ் பப்ளிசிடி இவ்வளவையும் மீறி கால்ஷீட் கொடுக்க விடாமல் தடுப்பது அமலாவின் அண்டை மாநில படங்கள்தான். அவைதான் குறுக்கே நிற்கிறதாம் வடசென்னைக்கு. இதற்கிடையில் சிம்புவுடன் கார்த்திகா நடிப்பதாக இன்னொரு வதந்தியும் றெக்கை கட்டி பறக்க, மெல்லவும் முடியாமல் முழுங்கவும் இயலாமல் அவஸ்தைப்படுகிறார் சிம்பு.
சிம்புவுக்குதான் கால்ஷீட் இல்லை. ஆனால் சிங்கம் பார்ட் 2 வில் சூர்யாவுடன் நடிக்க அமலாவைதான் அழைத்தாராம் ஹரி. வலிய வந்த சந்தோஷத்தை. வாசலிலேயே நிற்க வைக்க தயாராக இல்லை அமலா. கால்ஷீட் டைரியை புரட்டி துழாவி தேதிகளை கொடுத்துவிட சொல்லிவிட்டாராம் மேனேஜரிடம்
No comments:
Post a Comment