
சுவிற்சர்லாந்து தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியால் நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி, சிறுவர்களிற்கான சுவட்டுமைதான மெய்வன்மைப் போட்டிகள், பார்வையாளர்களிற்கான போட்டிகள் என மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
06-07-08.2011 (சனி,ஞாயிறு) ஆகிய இரு நாட்களும் காலை 8.30 தொடக்கம் விளையாட்டுவிழா நடைபெற்றது. ஈகைச்சுடரேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் செய்யப்பட்டு தமிழீழ தேசியக் கொடி, சுவிஸ் நாட்டின் தேசியக் கொடி, தமிழீழ விளையாட்டுத்துறைக் கொடி, தமிழர்இல்லக் கொடி ஆகியவை ஏற்றப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழையாட்டு விழா ஆரம்பமாகியது.
வின்ரத்தூரில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் உதைப்பந்தாட்டம், (ஆண்,பெண் இருபாலாருக்குமானது) கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்துத் துடுப்பாட்டம், கரம், குறிபார்த்துச் சுடுதல், குறிபார்த்து எறிதல், குண்டெறிதல், ஈட்டியெறிதல், கயிறுழுத்தல், சங்கீதக்கதிரை, கிளித்தட்டு (தாச்சி) சிறுவர்களிற்கான சுவட்டுமைதான மெய்வன்மைப் போட்டிகள் என நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் விளையாட்டுக் கழகங்களும், விளையாட்டு வீரர் - வீராங்கனைகளும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
கழகங்களிற்கிடையிலான போட்டிகளில் பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து கழகங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். காலநிலை மப்பும், மந்தாரமும், மழையுமாக இருந்த போதும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்புற நடைபெற்றன. தமிழ் விளையாட்டு வீரர்களிற்கு ஒரு களமமைத்துக் கொடுக்கும் இடமாக இந்த விளையாட்டு விழா அமைந்ததெனவும், தாயகத்தையும், தமிழீழத்தையும் நினைத்து கொள்ளும் இடமாகவும் இது இருந்ததென பலரும் பாராட்டினார்கள்.












No comments:
Post a Comment