Saturday 2 July 2011

தலை இருக்க வால் ஆடலாமா? தள்ளாடித் தவிக்கும் தமிழீழப் போராட்டம்!

தலை இருக்க வால் ஆடலாமா? தலைப்பு புரிகிறவர்களுக்கு புரியட்டும்! இனி விடயத்துக்கு வருவோம்:

மே 18 போர் முடிவுக்கு வந்தது. அங்கே இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லி, அதனூடாக இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, தமிழர்கள் இலங்கையில் வாழமுடியாது எனக் காட்டி, தனியாகப் பிரிந்துசெல்ல சர்வதேசத்தின் உதவியை நாடி சில செயல்பாட்டாளர்கள் சென்றுகொண்டிருக்க, தலைமைப் பொறுப்பை ஏற்பது யார்? இதற்கெல்லாம் தலைமை வகிப்பது யார்? என்ற போட்டி ஒரு பக்கம் ஆரம்பித்துவிட்டது! பழமொழிகள் பல பாட்டி சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஒரு புது மொழி சொல்லட்டுமா?

ஆடான 'ஆடுகள்' எல்லாம் தவிடு பிண்ணாக்குக்கு என்று அலைய, ஒரு 'சொத்தி' ஆடு மட்டும், மக்டொனால்ஸுக்கு அலைந்ததாம் என்ற கதைபோல ஆகிவிட்டது, புலம் பெயர் தமிழீழ செயல்பாட்டாளர்கள் நிலை! நான் தான் 'தலைமைப் பீடம்' என்று ஒரு குழுவும், நான் தான் தேசிய செயல்பாட்டாளர் என மறு குழுவும், இல்லை.. இல்லை... சர்வதேசமே என்கையில் தான் என மற்றொரு குழுவுமாக அணிசேர்ந்து, ஒருவரை ஒருவர் காலை வாருவதைப் பார்த்தால், இதற்காகவா 33,000 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

இவர்கள் தான் ஒருவருக்குள் ஒருவர் மோதுகிறார்கள் என்றால், தருணம் பார்த்து எரியும் நெருப்பில் 'சுப்பர்' பெற்றோலை ஊற்றுகிறார்கள் சில (நா.நபர்கள்)! அவர்களை பற்றிச் சொல்லவே தேவையில்லை. யார் என்று உங்களுக்கே புரியும்! சமீபத்தில் நடந்த மில்டன் கீன்ஸ் பிரச்சனை ஒரு நல்ல உதாரணம்! விளையாட்டுப் போட்டி நடக்கிறதாம், ஆனால் அதனை நடத்துபவர்கள் சரியில்லை என்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக முதலில் செய்தி வந்தது அதனைத் தொடர்ந்து சங்கதி இணையத்தில் அந்த விளையாட்டு விழாவில் சிலர் பேசிய அருமையான வசனங்கள் ஒலிநாடாவாகப் போடப்பட்டிருந்தது. அதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால் அங்கே சென்ற குழப்பகாரர் ஒருவர் கூறுகிறார்

அடுத்த மாவீரர் தினத்தையும் இதுபோல தாம் நடத்தவிடமாட்டேன் என்று!

மாவீரர் தினத்தை நடாத்தும் குழுவிடம் கணக்கு கேட்டால், அவர்கள் காட்ட மறுப்பதாக ஒரு குற்றச்சாட்டை, 'வருடல்' என்னும் இணையத்தளம் முன்வைக்கிறது. சங்கதி வெளியிட்ட ஒலி நாடாவுக்கு எதிராக, ஒரு நேர்காணலை எடுத்து 'வருடல்' இணையம் வெளியிட்டுள்ளது. அதில் நடந்த குழப்பம் அனைத்தும் பொதுமக்களால் நடாத்தப்பட்டதாக சொல்ல முனைகிறது.

அவ்வாறாயின் அந்த ஒலிநாடாவில் பேசப்படும் கெட்ட வார்த்தைகள் அனைத்தும், பொதுமக்களால் தான் பேசப்பட்டதா என்ற விளக்கத்தை அவ்விணையம் கொடுக்கவில்லை. ஏனென்றால் தலைமைச் செயலகத்துக்கு ஆதரவாக- அதன் ஊது குழலாக- அவ்விணையம் செயல்பட்டு வருகின்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி.. மாவீரர் தினத்தை நடத்தும் குழுவினரிடம் கணக்கைக் கேட்டால் காட்டமாட்டேன் என்கிறார்கள் என்கிறார்களே, அப்படி என்றால் அடுத்த மாவீரர் தினத்தை அதிருப்தியடைந்திருக்கும் குழு எடுத்து அல்லது பொறுபேற்று நடத்தலாமே? ஏன் நடத்த முன்வரவில்லை? அதாவது எக்ஸ்ஸெல் எனப்படும் அந்தப் பாரிய ஹாலுக்கே சுமார் 40,000 பவுண்டுகளுக்கு மேல் வரும். அதனைப் போட்டு பின்னர் பல செலவுகளைச் செய்து நேர்த்தியாக வருடா வருடம் மாவீரர் தினத்தை நடாத்திவரும் ஒரு குழுவிடம் சென்று, காசுக்கணக்கு கேட்டு, அவர்களைத் தூற்றி, அந் நிகழ்வை நடத்தவிடாமல் தடுப்பது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரல் ஆகும். காசுக் கணக்கை ஒருவர் காட்டவில்லை என்றால் மக்களிடம் இப் பிரச்சனை முன்வைக்கப்படவேண்டும்!

மக்கள் தான் கேள்வி கேட்கவேண்டும், தனியாக இயங்கிவரும் குழுக்கள் கேட்கத் தேவை இல்லையே. அதிருப்தியாளர்கள் மக்களிடம் சென்று சொல்லலாம். நுளம்பு வீட்டில் இருக்கிறது என்பதற்காக வீட்டையே நெருப்பிட்டுக் கொளுத்திய கதையாக உள்ளது இது. காசுக் கணக்கால் மாவீரர் தினம் தடைப்படுவதால், சிங்களவர்களுக்கு லாபம் தமிழர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது. இதனை தமிழர்களாகிய நாம் செய்தால் சிங்களவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்? எதனோடு வேண்டும் என்றாலும் விளையாடுங்கள் மாவீரர் தினத்தோடு விளையாடவேண்டாம்! சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக மாவீரர் தினத்தோடு விளையாடி அதனை நிறுத்தும் நாசகார வேலைகளுக்கு பிரித்தானிய மக்கள் என்றும் அனுமதிக்க மாட்டார்கள்! இவ்வாறு செய்ய முனைபவர்கள் இனம்காணப்பட்டு மக்களால் ஒதுக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்! இதனை அதிர்வு எழுதுவதால் அதிர்வு மாவீரர் நாள் செய்யும் கோஷ்டியோடு கைகோத்து நிற்கிறது என்று ஒரு கதையைக் கிளப்ப சில நொடிகள் போதும் என்பது எமக்கும் தெரியும்! ஆனால் மக்களின் நிலை என்ன என்பதனை அதிர்வு இணையம் நன்கு அறியும்! மக்கள் எப்போதும் தெளிவாகவே உள்ளனர். அதனால் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதனை அவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள்!

சமீபத்தில் 'ஈழ முரசு' பத்திரிகை வெளியிட்டு வரும் 'ஈழ முரசு லீக்ஸ்' என்னும் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அது ப.நடேசன் அவர்களின் மின்னஞ்சலை உடைத்து எடுக்கப்பட்ட செய்தி என சில இணையங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இதனை ஒரு தேசத்துரோகமாகவும் சித்தரிக்க அவர்கள் தவறவில்லை. ப.நடேசன் அவர்கள் இறந்த பின்னர் அவர் நினைத்து வைத்திருந்த விடயங்கள், அவர் மக்களுக்கு சொல்ல முனைந்த செய்திகள் மற்றும் தமிழீழ போராட்டத்தின் முக்கிய வரைவுகள், அதன் தொலைநோக்குச் சிந்தனைகள் என்பன மிக முக்கியமான ஒன்று. அவை வெளியே வரவேண்டிய விடயங்கள். அது பரகசியமுமல்ல. அவை ப.நடேசன் இறந்த பின்னர் அவரோடு சேர்ந்து அழிந்துபோகக் கூடாது! இது என்ன சிங்களவர் கைகளில் போய் கிடைக்கவேண்டுமா? தமிழர்கள் மத்தியில் அல்லவா போய் சேரவேண்டும். சர்வதேசத்துக்கு அல்லவா போய் கிடைக்கவேண்டும்!

இதனை வெளியிடுவதால் சிலருக்கு களங்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தால், அவர்கள் இதனை தவறான பாதையில் இட்டுச்செல்கின்றனர். ப.நடேசனின் மின்னஞ்சல் உடைக்கப்பட்டது குற்றம் என்று புது வியாக்கியானம் சொல்லுகின்றனர். ஈழ முரசு பத்திரிகை பிரித்தானியா வெம்பிளிப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனைச் சிலர் சென்று தூக்கி எறிந்துள்ளதோடு, இனி ஈழமுரசுப் பத்திரிகையை இங்கே வைக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இவ்வளவு நாளும் தேசிய விடுதலைப் பத்திரிகையாக இயங்கிவந்த ஈழ முரசு திடீரென துரோகி ஆக்கப்படுகிறது. இந்தக் கலாச்சாரம் முதலில் அகலவேண்டும்! இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை என்று வாய் கிழியக் கத்துகிறோம், பிரித்தானியாவில் தமிழ் ஊடகங்களுக்கு முதலில் சுதந்திரம் உண்டா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

ஊடகவியலாளர் மாநாடு நடத்துகிறோம் வாருங்கள் என ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். அக் குழுவால் நடாத்தப்படும் நிகழ்வில் கலந்துகொள்ளாவிட்டால் அவர்கள் தேசத்துரோகி ஆக்கப்படுகிறார்கள். இன்னும் ஒரு கோஷ்டி ஊடகவியலாளர்களையும், இணையத்தள உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கும். ஆனால் பூட்டிய அறைக்குள் இது நடக்கும் என அறிவிக்கும். நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என உத்தரவும் போடும். பத்திரிகையாளர் ஊடகவியலாளர்கள் வரவேண்டும் ஆனால் நடந்ததைக் கூறக்கூடாது, அப்படி என்றால் எதற்கு கூட்டம்? நடந்ததை வெளியே சென்று மக்களுக்கு சொல்லவேண்டும் அல்லவா? மறைப்பதால் என்ன லாபம், இல்லை இதில் என்ன ஊடக தர்மம் இருக்கிறது? இதைத்தான் 'சொல்லலாம்' இதைச் 'சொல்லக்கூடாது' என்பார்களோ தெரியவில்லை (வரும் ஆனா வராது.....எண்ட மாதிரி)

புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்கள், ஒரு சில அமைப்புகள் சார்பாகவே இயங்கிவருகின்றன. நாடு கடந்த அரசாங்கத்தின் ஊது குழலாக சில ஊடகங்களும், தலைமைச் செயலகத்தின் ஊது குழலாக சில ஊடகங்களும், கிளை அல்லது BTF GTF சார்பாக சில ஊடகங்கள் என, பல ஊடகங்களும் அடிபணிவு ஊடகமாக உள்ளது. அதிர்வு இணையத்தில் BTF ஐ பற்றி எழுதினால், அவர்கள் BTF சார்ந்தவர்கள் என்று கூறி மற்றைய குழுக்கள் புரளிகளைக் கிளப்பிவிடுகிறார்கள். எவர் ஒருவர் உண்மையாக ஈழ விடுதலைக்கு பாடு படுகிறார்களோ, இல்லை இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முற்பட்டுச் செயல்படுகிறார்களோ அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது அவசியம், அது நா.க அரசாக இருக்கலாம் இல்லை தலைமைச் செயலகமாக இருக்கலாம் இல்லையேல் GTF, BTF ஆக இருக்கலாம். இங்கு பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தி, மகிந்த அரக்கன், இன அழிப்பு குற்றச் சாட்டிலிருந்து தப்பிவிட உதவி செய்ய வேண்டாம். மகிந்தன் தப்பினால்தான், அண்ணன் கேப்பீயும் தப்புவார் எண்டு கணக்குப் போடுபவர்களும், இத்தகைய குழப்பங்களையும் ஏற்படுத்துவார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

இவர்களில் எவராவது இலங்கை அரசுக்கு எதிராகச் செயல்பட்டால், நாம் அவர்கள் குறித்த செய்திகளை வெளியிடத் தயார். ஆனால் வெறுமனே, காகித அறிக்கைகளை வெளியிடும் அமைப்புகளை நாம் முன்நிலை படுத்த விரும்பவில்லை. அவர்கள் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தால் அதனை நாம் பிரசுரிக்க பின் நிற்கப்போவதும் இல்லை! எனவே கோஷ்டி மோதலையும், பலப் பரீட்சைகளையும், தமிழீழம் கிடைத்தபின்னர் வைத்துக் கொள்வோமே. அப்போது ஆளும் கட்சி எதிர் கட்சி, என்று சொல்லி நீங்கள் எவ்வளவு சண்டை போட முடியுமோ போடுங்கள். அப்போது உங்களை எவரும் தடுக்கப்போவது இல்லை


அதுவரை மாவீரர் கண்ட கனவுகளை நனவாக்க நாம் ஏன் இணைந்து செயல்படக்கூடாது ? ? ?

அதிர்வுக்காக வல்லிபுரத்தான்!

சென்சர் செய்யாத போர்க்குற்ற வீடியோவை இலங்கைக்கு சனல் 4 அனுப்பியுள்ளது

சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போர்க்குற்ற வீடியோக்களில் ஒன்று, இலங்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவை எதுவித சென்சரும் செய்யாமல் உள்ளதை உள்ளபடியே இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளது சனல் 4 தொலைக்காட்சி.

இலங்கை கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே இந்த வீடியோவை தாம் அனுப்பி வைத்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. இதனைத் தாம் இன்று பெற்றுக்கொண்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிசெய்துள்ளது. இந்த வீடியோவின் காட்சிகளை இலங்கை அரசு சிங்கள ஊடகங்களுக்கும் வழங்கியுள்ள நிலையில், சில சிங்கள ஊடகங்கள் அதனை வெளியிட்டு மக்கள் கருத்தை அறிய முற்படுகின்றன.

இக் காணொளியில் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் உள்ள தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் இலங்கை இராணுவம் சுடும் காட்சிகளும் அவர்கள் சிங்கள மொழியில் பேசிக்கொண்டு இருப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந் நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சில சிங்கள இணையங்கள், சிங்கள மக்களின் பின்னூட்டங்களையும் அதில் பிரசுரித்துள்ளனர்.

சுமார் 90 வீதமான சிங்களவர்கள் இந்த வீடியோக் காட்சிகள் பொய் என எழுதியுள்ளதோடு, சிங்களம் பேசும் இராணுவத்தினர் தமிழர்கள் என்றும், அவர்கள் பேசும் சிங்களம், ஒரு தமிழர் சிங்களம் பேசினால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு அமைந்துள்ளது என்று நக்கல் அடித்தும் எழுதியுள்ளனர்.

போர் குற்றங்கள் நடைபெற்றிருந்தால் தாம் அதனை ஆராய்வோம் என அறிவித்த இலங்கை, சனல் 4 இடம் இருந்து இந்த வீடியோக்களைப் பெற்று அதனைப் பற்றி ஆராயாது, அதனை சிங்கள ஊடகங்களிடம் கொடுத்து பிரசுரிக்கச் செய்து அதனை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையிலேயே இறங்கியுள்ளது.

இவர்களா இந்தக் கொலைகள் குறித்து நேர்மையான விசாரணைகளை நடத்தப்போகிறார்கள்? சர்வதேசம் எப்போது தான் கண் விழிக்கும்?

காணாமற் போகப்போகும் கனகராயன்குளம்----புத்தர் வந்தார்; வெள்ளரசும் வந்தது

கனகராயன்குளத்தை பௌத்த மயப்படுத்தும் நடவடிக்கைளில் சிறிலங்கா இராணுவம் ஈடுபட்டுள்ளது.

பாரம்பரிய தமிழ்க் கிராமமான கனகராயன்குளத்தில் சிறி சம்புத்த ரஜமகா விகாரை என்ற பெயரில் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படவுள்ளது.

இங்கு சிறியளவிலான புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் நிலையில்- அடுத்த கட்டமாக விகாரை அமைக்கப்படவுள்ள இடத்தில் அரச மரக்கன்று ஒன்றை நாட்டும் பௌத்த சமய நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்டுள்ளன.

கனகராயன்குளத்தில் அமையவுள்ள சிறி சம்புத்த ரஜமகா விகாரையின் விகாராதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வண.எட்டம்பகஸ்கட கல்யாணதிஸ்ஸ நாயக்க தேரர் அனுராதபுர புனித வெள்ளரச மரத்தின் கிளையொன்றை கொண்டு இங்கு வந்துள்ளார்.

வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, அந்த அரசமரக் கன்றை விகாராதிபதியிடம் இருந்து பெற்று அதனை விகாரைப் பகுதியில் நாட்டியுள்ளார்.

சிங்கள பௌத்த பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க சுபநேரத்தில் இந்த அரச மரக்கன்று நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா இராணுவத்தின் 56வது டிவிசன் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரியந்த நாபாகொட, 56-1 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரணவக்க, மற்றும் படை அதிகாரிகயுளும் கலந்து கொண்டனர்.

அத்துடன் அயல் கிராமங்களில் வாழும் தமிழ்மக்களையும் சிறிலங்காப் படையினர் கட்டாயமாக இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தனர்.

கனகராயன்குளத்தில் புதிய விகாரையை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினர் அங்கு முன்னர் ஒரு பௌத்த விகாரை இருந்ததாக வரலாற்றைத் திரிபுபடுத்தவும் முயன்றுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சிறி சம்புத்த ரஜமகா விகாரை இங்கு அமைந்திருந்ததாக சிறிலங்காப் படையினர் கூறியுள்ளனர்.

அத்துடன் முன்னர் இந்த விகாரையில் இருந்த பிக்குகள் புலிகளின் தீவிரவாதம் உச்சமடைந்திருந்த போது அங்கிருந்து வெளியேறி விட்ட நிலையில்- அங்கிருந்த பழைய அரசமரம் தானாகவே இறந்து போய் விட்டதாகவும் கட்டுக்கதை ஒன்றை சிறிலங்கா இராணுவம் அவிழ்த்து விட்டுள்ளது

கனகராயன்குளத்தில் எந்தவொரு காலத்திலும் பௌத்த விகாரை இருக்கவில்லை என்பதும், சிறிலங்கா அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கையை மறைப்பதற்காகக் கூறப்படும் கட்டுக்கதையே இது என்பதும் குறிப்பிடத்தக்கது(நன்றி புதினப்பலகை ).




விசா மோசடி கும்பலுடன் போய் கொரியாவில் மாட்டிய நடிகை லக்ஷா மீட்பு!


சென்னை: படப்பிடிப்பு என்ற பெயரில் விசா மோசடி கும்பலுடன் போய் மாட்டிக் கொண்ட கவர்ச்சி நடிகை லக்ஷா பெப்சி சங்கத்தின் துணையுடன் மீட்கப்பட்டார்.

பிரபல கவர்ச்சி நடிகை லக்ஷா. இவர் முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதாவின் மகள். லாலி, என்ற படத்தில் லக்ஷா நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புக்காக தென் கொரியாவுக்கு லக்ஷாவை அழைத்து சென்றனர்.

அவருடன் சில நடன கலைஞர்களும் , துணை நடிகர்கள் என்ற பெயரில் மேலும் 29 பேரும் ஏறிக்கொண்டனர். தயாரிப்பாளர் செல்லவில்லை. தென் கொரியாவில் லக்ஷா பங்கேற்ற நடன காட்சி 4 நாட்கள் படமாக்கப்பட்டது. அப்போது டெல்லியில் இருந்து சென்ற 29 பேரும் திடீரென மாயமானார்கள்.

லக்ஷாவும் சென்னையில் இருந்து சென்ற நடனக் குழுவினரும் நாடு திரும்ப தென் கொரியா விமான நிலையத்துக்கு வந்தபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். டெல்லியில் இருந்து வந்த 29 பேரும் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்றனர்.

பெப்சி தலையீடு

லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் அங்குள்ள ஓட்டலில் சிறை வைக்கப்பட்டனர். லக்ஷா தாய் பபீதா இதுகுறித்து பெப்சி யூனியனில் புகார் செய்தார். பெப்சி நிர்வாகிகள் தலையிட்டனர். அவர்கள் முயற்சியால் லக்ஷா விடுவிக்கப்பட்டார்.

நேற்று அவர் டெல்லி வந்து சேர்ந்தார். இன்று காலை அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் சென்னை வந்து சேர்ந்தார். லக்ஷா மீட்கப்பட்டது பபிதா கூறுகையில், "சிறு தயாரிப்பாளர்கள்தான் இந்த மாதிரி வேலையைச் செய்கின்றனர்.

சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத 29 பேரை டெல்லியில் இருந்து அழைத்து போனதால்தான் தென் கொரியாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் தென் கொரியாவுக்கு போகவில்லை. இதில் மோசடி நடந்துள்ளது. என் மகளை மீட்டுத் தந்த பெப்சிக்கு நன்றி," என்றார்.

பாலா மீது மேலும் ஒரு முஸ்லிம் அமைப்பு புகார்!


சென்னை: குர்பானி பற்றி அவதூறாக வசனம் வைத்ததற்காக இயக்குநர் மீது பாலா மீது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் போலீஸ் கமிஷனரிடம் புதிய புகார் கொடுத்துள்ளது.

ஏற்கெனவே தேசிய லீக் இது குறித்து கமிஷனரிடம் புகார் செய்துள்ள நிலையில், இப்போது இரண்டாவது புகார் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் அக்ரம்கான் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கொடுத்த புகார் மனுவில், "சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது.

எனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

எங்கேயும் எப்போதும்..ஈகோ இல்லாத அனன்யா, அஞ்சலி


எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகர் விமலுக்கு பதிலாக புதுமுகம் ஷர்வானந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் அஞ்சலியும், அனன்யாவும் இரு நாயகிகளாக நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் சேர்ந்து ஆர். முருகதாஸ் தயாரிக்கும் படம் எங்கேயும் எப்போதும். இதில் 2 நாயகன்கள், நாயகிகள். ஜெய், அஞ்சலி, ஷ்ர்வானந்த் மற்றும் அனன்யா நடிக்கின்றனர். ஷர்வானந்திற்கு இது தான் முத்ல படம். இந்த படத்தி்ற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் முருகதாஸ் உதவியாளர் சரவணன்.

இது குறித்து சரவணன் கூறியதாவது,

இந்த படத்தில் 2 காதல் ஜோடிகள் உள்ளன. இது அவர்களின் காதல் கதை தான். கிளைமாக்ஸில் 2 ஜோடிகளும் இணைவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வில்லனும் கிடையாது, காதல் எதிரிகளும் கிடையாது. என்னடா வில்லனே இல்லை என்று நினைக்கிறீர்களா?

வில்லன் இல்லாமலேயே காதல் என்னவாகிறது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுகிறோம். ஹீரோயின் லிஸ்டில் சமமான இடத்தில் இருப்பவர்கள் அஞ்சலி, அனன்யா. கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் நடிக்கின்றனர். அவர்கள் சேர்ந்து வரும் காட்சிகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷர்வானந்த் கதாபாத்திரத்தில் விமல் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. 90 சதவீத படபிடிப்பு முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம்

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கை ராணுவப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை ராணுவ செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்கே தலைமையிலான குழுவுடன் இந்திய ராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதலை தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங் தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப் போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்துவருகின்றன.

தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டசபையின் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும்.

இந்திய ராணுவத்தின் இம்முடிவு, அது தமிழினப் படுகொலையில் இலங்கை ராணுவத்திற்கு முழுமையாக உதவியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாகும்.

இலங்கை ராணுவத்தின், அந்நாட்டு அரசின் மனிதாபிமான முகம்தான் இன்றைக்கு உலகெங்கிலும் கண்டனத்திற்குரியதாக உள்ளது. ஐ.நா. அமைதிப் படையின் அங்கமாக ஹைட்டி நாட்டிற்குச் சென்ற இலங்கை ராணுவத்தினர், அந்நாட்டின் சிறுமிகளை பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்று குற்றம்சாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் ராணுவமோ அந்நாட்டிற்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிக் கற்றுத் தரப்போகிறேன் என்கிறது. இதைவிடக் கேலிக் கூத்தும், கொடூரமும் வேறு என்ன இருக்க முடியும்?

பன்னாட்டு மனிதாபிமானப் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவின் ராணுவம், அந்தப் பிரகடனங்களின்படி குற்றமிழைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவால் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாட்டிற்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது, மனிதாபிமான பிரகடனங்களை அவமதிப்பது ஆகும்.

இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை இலங்கைத் தொடர்பான இந்திய அரசின் தவறான போக்கு தடையற்று தொடருவதையே காட்டுகிறது. இதனை தமிழர்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கு நியாயமற்றதாகவே எதிர்காலத்திலும் இருக்கும் என்பதற்கு இந்திய ராணுவத்தின் இந்த முடிவு ஒரு அறிகுறியாகும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம்

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கை ராணுவப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை ராணுவ செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்கே தலைமையிலான குழுவுடன் இந்திய ராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதலை தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங் தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப் போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்துவருகின்றன.

தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டசபையின் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும்.

இந்திய ராணுவத்தின் இம்முடிவு, அது தமிழினப் படுகொலையில் இலங்கை ராணுவத்திற்கு முழுமையாக உதவியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாகும்.

இலங்கை ராணுவத்தின், அந்நாட்டு அரசின் மனிதாபிமான முகம்தான் இன்றைக்கு உலகெங்கிலும் கண்டனத்திற்குரியதாக உள்ளது. ஐ.நா. அமைதிப் படையின் அங்கமாக ஹைட்டி நாட்டிற்குச் சென்ற இலங்கை ராணுவத்தினர், அந்நாட்டின் சிறுமிகளை பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்று குற்றம்சாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் ராணுவமோ அந்நாட்டிற்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிக் கற்றுத் தரப்போகிறேன் என்கிறது. இதைவிடக் கேலிக் கூத்தும், கொடூரமும் வேறு என்ன இருக்க முடியும்?

பன்னாட்டு மனிதாபிமானப் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவின் ராணுவம், அந்தப் பிரகடனங்களின்படி குற்றமிழைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவால் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாட்டிற்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது, மனிதாபிமான பிரகடனங்களை அவமதிப்பது ஆகும்.

இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை இலங்கைத் தொடர்பான இந்திய அரசின் தவறான போக்கு தடையற்று தொடருவதையே காட்டுகிறது. இதனை தமிழர்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கு நியாயமற்றதாகவே எதிர்காலத்திலும் இருக்கும் என்பதற்கு இந்திய ராணுவத்தின் இந்த முடிவு ஒரு அறிகுறியாகும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளே கவனம் தலையில்லாத பரியலம் எண்ட பேயள் ஊர் முழுக்க உலாப்போகுது...

உலாப்போகும் பரியலங்களும் உறங்கிக் கிடக்கும் உண்மைகளும்...

சிறீலங்காவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சனல் 4ற்குப் பின்னர் ஏதாவது ஆக்கபூர்வமாக நடந்துள்ளதா.. இதுதான் இன்றைய தினத்தில் ஆர்வத்தைத் தூண்டும் கேள்வியாகும்..

புண்ணியவான் மகிந்தராஜபக்ஷ என்ன சொல்கிறார்..?

சனல் 4 ஐ உற்றுப் பாருங்கள் அது பொய்யான காணொளி என்பதை நீங்கள் தெளிவாகக் காண்பீர்கள் என்று கூறுகிறார். இப்படியொரு கருத்தை பழைய டிங்கிரிபண்டா சொல்லியிருந்தால்கூட விட்டிருக்கலாம், ஆனால் சொன்னவர் நாட்டின் அதிபர். மகிந்த சிந்தனை ஒரு விடயத்தை எப்படி உற்றுப்பார்க்கிறது என்பதற்கு இதைவிட இனி உதாரணம் தேவையில்லை. இதே கண்ணோடு இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் அவர் பார்ப்பதால் இனி அவரிடம் கேட்கவும், பேசவும் ஏதாவது இருக்குமா எனபது பெரிய கேள்விதான்.

பாரதமாதா புகழ் மன்மோகன் சிங் என்ன சொல்கிறார்..?

சிறீலங்கா அரசை நாம் கட்டாயப்படுத்த முடியாது, அதனுடைய போக்கில் அதைவிட வேண்டுமேயல்லாது வேறு எதையும் செய்வதற்கில்லை. இந்திராகாந்தி, பார்த்தசாரதி, பண்டாரி காலத்து குரல் மறுபடியும் கேட்டுள்ளது. மன்மோகன் சிங் இப்போது யூலைக்கலவரத்திற்கு கொஞ்சம் முன்னாடி நிற்கிறார். இவருக்கு இலங்கைப் பிரச்சனை விளங்க வாய்ப்புக்கள் எதுவும் இல்லை. சனல் 4 காட்சிகள் ஏதோ சந்திரமண்டலத்தில் நடந்தது போல அவருடைய கருத்து இருக்கிறது. எதற்காக போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தீர்கள்.. எதற்காக அவர்களுக்கு ஆயுதம் கொடுத்தீர்கள்.. இப்போது எதற்காக இப்படி சொல்கிறீர்கள்… என்பதை இந்தியாவிடம் கேட்க நம்மிடம் வலு இல்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் தங்கபாலுவின் அறிக்கைகள் என்ன சொல்கின்றது..?

மகிந்த ராஜபக்ஷ பச்சைப் பொய்யர் என்று அறிக்கை விட்டுள்ளார். ஏன் பச்சைப் பொய்யர் என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் இப்படியுள்ளது. இந்திய அரசு இலங்கைத் தமிழர் விடயத்தில் யாதொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று மகிந்த கூறுகிறார். இது அப்பட்டமான பொய், உண்மையில் இந்திய அரசு அழுத்தியுள்ளது என்பது இவருடைய அறிக்கையின் சாராம்சம். அடுத்த தேர்தலில் தங்கபாலு பிரபாகரன் ரீ ஷேட் போட்டு மேடைக்கு வந்து வாக்குக் கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. சீமானை விழுத்த சிதம்பரமும் புலிக்கொடியோடு மேடைக்கு வந்தாலும் வரலாம்.

அதிரடி அன்பழகன் கூத்து..

இதுவரை காலமும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நாடகமாடிய கலைஞர் இப்போது அதிரடி அன்பழகன் என்பவரை உசுப்பேற்றி விட்டுள்ளார். கலைஞர் குடும்பத்தின் பழைய இறப்பர் ஸ்டாம்பு அன்பழகன் அல்ல இவர், புதியவர். அதிரடி இவருக்குப் பட்டப் பெயர். ஆக தமிழகத்தில் எல்லோரும் புலி வேடம் போட தயாராவது தெரிகிறது. தமிழகத் தேர்தல் செய்த வேலை.

ஐ.நா செயலர் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள்..

ஐ.நா செயலர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தவறு இழைத்துள்ளார் என்று இப்போது மேலை நாடுகளில் பொதுவான கருத்து நிலவுகிறது. சிறீலங்கா அதிபரால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளார் என்று ஓர் அறிக்கை வந்துள்ளது. ஆய்வாளரையும் புண்ணாக்குகளையும் விட்டுவிட்டு தெருவால் போன தமிழ் மூதாட்டி ஒருவரிடம் இவரைப்பற்றி விசாரி;த்துப் பார்த்தோம். அவனும் புத்தசமயம் இவனும் புத்தசமயம், அசூசி யக்காசியும் புத்த சமயம் அதுதான் இப்பிடி செய்தவங்கள் என்று கூறினார்.

தமிழர் கூட்டமைப்பு என்ன சொல்கிறது..

வடக்கில் முழுமையான இராணுவ ஆட்சிதான் நடைபெறுகிறது என்று கூட்டமைப்பு நேற்று முழுவதும் கதறியுள்ளது. அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இராணுவம் அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது. அளவெட்டியில் புகுந்த இராணுவம் கூட்டமைப்பிற்கு கொட்டன் அடி போட்டு கோபம் தணிந்துள்ளது. இந்த மோதல் கூட்டமைப்பின் மெய் பாதுகாவலருக்கும் இராணுவத்துக்கும் நடந்த மோதல் என்று மகிந்த சிந்தனை கூறியுள்ளது. சிங்கள இராணுவத்தை படலைக்கு படலை நிறுத்தவா முப்பது வருடங்கள் போராடினோம் என்ற கேள்வியே இப்போது கூட்டமைப்பின் கண்ணீராக நிற்கிறது. கூட்டமைப்பிடம் கண்ணீரை விட வேறு என்ன இருக்கிறது.?

பொது மக்கள் என்ன சொல்கிறார்கள்..?

வாழ அச்சத்தில் வாழ்வதாகக் கூறுகிறார்கள். அந்தக் காலத்தில் பரியலம் என்ற தலையில்லாத பேய்கள் ஊர் முழுதும் இரவில் நடமாடும் என்று பாட்டி கதை கூறுவாள். காலனித்துவ கால அன்னியப் படைகளையே பரியலங்கள் என்று பாட்டி கதை அடையாளப்படுத்தும். இப்போதும் அங்கு பரியலங்கள் நடமாடுகின்றன. அது மட்டுமல்ல உரிமை கேட்க முடியாதபடி அன்றாட வாழ்க்கைச் செலவு அவர்களை அழுத்துகிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா இல்லாமல் வாழ முடியவில்லை என்கிறார்கள். முள்ளிவாய்க்காலுக்கு முந்தித்தன்னும் எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள்.

முடிவுதான் என்ன..?

அனைத்து அரசியல் சக்திகளும் தங்களுடைய இருத்தலைத் தக்க வைப்பதற்காக ஏதோ ஒரு நியாயத்தை கூறிக்கொண்டிருக்கிறன.

இல்லாமல் போனவர்களின் இலட்சியங்கள் பற்றி யாரும் அக்கறைப்படவில்லை.. வீதியில் சிதறிக்கிடக்கும் உடலத்தை பார்க்க மனமின்றி அதைக் கடந்து போகும் மனிதர்களைப்போல பொறுப்புள்ள உலகத் தலைவர்கள் கடந்து போகிறார்கள்.

தூ..

தூ
என்ற ஓர் எழுத்துக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்..

அலைகள் வாராந்தப் பார்வை

பிள்ளைகளே கவனம் தலையில்லாத பரியலம் எண்ட பேயள் ஊர் முழுக்க உலாப்போகுது...

உலாப்போகும் பரியலங்களும் உறங்கிக் கிடக்கும் உண்மைகளும்...

சிறீலங்காவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சனல் 4ற்குப் பின்னர் ஏதாவது ஆக்கபூர்வமாக நடந்துள்ளதா.. இதுதான் இன்றைய தினத்தில் ஆர்வத்தைத் தூண்டும் கேள்வியாகும்..

புண்ணியவான் மகிந்தராஜபக்ஷ என்ன சொல்கிறார்..?

சனல் 4 ஐ உற்றுப் பாருங்கள் அது பொய்யான காணொளி என்பதை நீங்கள் தெளிவாகக் காண்பீர்கள் என்று கூறுகிறார். இப்படியொரு கருத்தை பழைய டிங்கிரிபண்டா சொல்லியிருந்தால்கூட விட்டிருக்கலாம், ஆனால் சொன்னவர் நாட்டின் அதிபர். மகிந்த சிந்தனை ஒரு விடயத்தை எப்படி உற்றுப்பார்க்கிறது என்பதற்கு இதைவிட இனி உதாரணம் தேவையில்லை. இதே கண்ணோடு இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் அவர் பார்ப்பதால் இனி அவரிடம் கேட்கவும், பேசவும் ஏதாவது இருக்குமா எனபது பெரிய கேள்விதான்.

பாரதமாதா புகழ் மன்மோகன் சிங் என்ன சொல்கிறார்..?

சிறீலங்கா அரசை நாம் கட்டாயப்படுத்த முடியாது, அதனுடைய போக்கில் அதைவிட வேண்டுமேயல்லாது வேறு எதையும் செய்வதற்கில்லை. இந்திராகாந்தி, பார்த்தசாரதி, பண்டாரி காலத்து குரல் மறுபடியும் கேட்டுள்ளது. மன்மோகன் சிங் இப்போது யூலைக்கலவரத்திற்கு கொஞ்சம் முன்னாடி நிற்கிறார். இவருக்கு இலங்கைப் பிரச்சனை விளங்க வாய்ப்புக்கள் எதுவும் இல்லை. சனல் 4 காட்சிகள் ஏதோ சந்திரமண்டலத்தில் நடந்தது போல அவருடைய கருத்து இருக்கிறது. எதற்காக போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தீர்கள்.. எதற்காக அவர்களுக்கு ஆயுதம் கொடுத்தீர்கள்.. இப்போது எதற்காக இப்படி சொல்கிறீர்கள்… என்பதை இந்தியாவிடம் கேட்க நம்மிடம் வலு இல்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் தங்கபாலுவின் அறிக்கைகள் என்ன சொல்கின்றது..?

மகிந்த ராஜபக்ஷ பச்சைப் பொய்யர் என்று அறிக்கை விட்டுள்ளார். ஏன் பச்சைப் பொய்யர் என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் இப்படியுள்ளது. இந்திய அரசு இலங்கைத் தமிழர் விடயத்தில் யாதொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று மகிந்த கூறுகிறார். இது அப்பட்டமான பொய், உண்மையில் இந்திய அரசு அழுத்தியுள்ளது என்பது இவருடைய அறிக்கையின் சாராம்சம். அடுத்த தேர்தலில் தங்கபாலு பிரபாகரன் ரீ ஷேட் போட்டு மேடைக்கு வந்து வாக்குக் கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. சீமானை விழுத்த சிதம்பரமும் புலிக்கொடியோடு மேடைக்கு வந்தாலும் வரலாம்.

அதிரடி அன்பழகன் கூத்து..

இதுவரை காலமும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நாடகமாடிய கலைஞர் இப்போது அதிரடி அன்பழகன் என்பவரை உசுப்பேற்றி விட்டுள்ளார். கலைஞர் குடும்பத்தின் பழைய இறப்பர் ஸ்டாம்பு அன்பழகன் அல்ல இவர், புதியவர். அதிரடி இவருக்குப் பட்டப் பெயர். ஆக தமிழகத்தில் எல்லோரும் புலி வேடம் போட தயாராவது தெரிகிறது. தமிழகத் தேர்தல் செய்த வேலை.

ஐ.நா செயலர் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள்..

ஐ.நா செயலர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தவறு இழைத்துள்ளார் என்று இப்போது மேலை நாடுகளில் பொதுவான கருத்து நிலவுகிறது. சிறீலங்கா அதிபரால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளார் என்று ஓர் அறிக்கை வந்துள்ளது. ஆய்வாளரையும் புண்ணாக்குகளையும் விட்டுவிட்டு தெருவால் போன தமிழ் மூதாட்டி ஒருவரிடம் இவரைப்பற்றி விசாரி;த்துப் பார்த்தோம். அவனும் புத்தசமயம் இவனும் புத்தசமயம், அசூசி யக்காசியும் புத்த சமயம் அதுதான் இப்பிடி செய்தவங்கள் என்று கூறினார்.

தமிழர் கூட்டமைப்பு என்ன சொல்கிறது..

வடக்கில் முழுமையான இராணுவ ஆட்சிதான் நடைபெறுகிறது என்று கூட்டமைப்பு நேற்று முழுவதும் கதறியுள்ளது. அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இராணுவம் அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது. அளவெட்டியில் புகுந்த இராணுவம் கூட்டமைப்பிற்கு கொட்டன் அடி போட்டு கோபம் தணிந்துள்ளது. இந்த மோதல் கூட்டமைப்பின் மெய் பாதுகாவலருக்கும் இராணுவத்துக்கும் நடந்த மோதல் என்று மகிந்த சிந்தனை கூறியுள்ளது. சிங்கள இராணுவத்தை படலைக்கு படலை நிறுத்தவா முப்பது வருடங்கள் போராடினோம் என்ற கேள்வியே இப்போது கூட்டமைப்பின் கண்ணீராக நிற்கிறது. கூட்டமைப்பிடம் கண்ணீரை விட வேறு என்ன இருக்கிறது.?

பொது மக்கள் என்ன சொல்கிறார்கள்..?

வாழ அச்சத்தில் வாழ்வதாகக் கூறுகிறார்கள். அந்தக் காலத்தில் பரியலம் என்ற தலையில்லாத பேய்கள் ஊர் முழுதும் இரவில் நடமாடும் என்று பாட்டி கதை கூறுவாள். காலனித்துவ கால அன்னியப் படைகளையே பரியலங்கள் என்று பாட்டி கதை அடையாளப்படுத்தும். இப்போதும் அங்கு பரியலங்கள் நடமாடுகின்றன. அது மட்டுமல்ல உரிமை கேட்க முடியாதபடி அன்றாட வாழ்க்கைச் செலவு அவர்களை அழுத்துகிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா இல்லாமல் வாழ முடியவில்லை என்கிறார்கள். முள்ளிவாய்க்காலுக்கு முந்தித்தன்னும் எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள்.

முடிவுதான் என்ன..?

அனைத்து அரசியல் சக்திகளும் தங்களுடைய இருத்தலைத் தக்க வைப்பதற்காக ஏதோ ஒரு நியாயத்தை கூறிக்கொண்டிருக்கிறன.

இல்லாமல் போனவர்களின் இலட்சியங்கள் பற்றி யாரும் அக்கறைப்படவில்லை.. வீதியில் சிதறிக்கிடக்கும் உடலத்தை பார்க்க மனமின்றி அதைக் கடந்து போகும் மனிதர்களைப்போல பொறுப்புள்ள உலகத் தலைவர்கள் கடந்து போகிறார்கள்.

தூ..

தூ
என்ற ஓர் எழுத்துக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்..

அலைகள் வாராந்தப் பார்வை

துரோகம் செய்தவர்கள் தப்பிக்க பார்க்கிறார்கள்: இராசேந்திரன்

2006 இறுதிப்பகுதியில் மாவிலாற்றில் தொடங்கி 2009மே மாதம்வரையும் தமிழீழ விடுதலையை அழித்தொழிக்க சிறீலங்கா நடாத்திய தாக்குதல்கள் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்க, மற்றபக்கத்தில் மலேசியாவிலும், தாய்லாந்திலும் சதிக்கான திரைமறைவு வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன.

இந்தச்சதிக்குள் விடுதலைப்போராட்டத்தின் நிர்வாக கட்டமைப்புகளைப்பற்றிய மேலதிக கல்விக்காக இயக்கத்தால் அனுப்பப்பட்டிருந்த சிலரும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். புலம்பெயர்நாடுகளில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு விலத்தப்பட்டபலரும் இந்த சதியின் கூட்டாளிகளாக மாற்றப்படுகிறார்கள். இன்னும் சிலருக்கு தேசியத் தலைமை அழிக்கப்பட்ட பின்னர் இன்ன இன்ன பதவிகள் உங்களுக்கே என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் சேர்க்கப்பட்டனர்.

இப்படியானவர்கள் எமது தாயக விடுதலைப் போராட்டம் மோசமாக சிதறடிக்கப்பட்டு எம் மக்கள் கொல்லப்பட்டபோதும் பதவிகளை எதிர்பார்த்து இனஅழிப்புக்கு துணைபோனார்கள். அதன்பின்னரும் இவர்கள் தமது உண்மை முகத்தை வெளியில் காட்டவில்லை. கே.பி யை புதிய தலைவராக்கி தமிழினத்தை மொத்தமாக விற்றுவிட முயன்றார்கள். அது தக்க தருணத்தில் புலம்பெயர் மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டபோது இவர்கள் மீண்டும் தங்களின் முகத்தின்மீது தேசியம் என்ற போர்வையை போர்த்தியபடி எமது மக்களுக்குள் கால்ஊன்ற முயன்றார்கள்.

விடுதலைப்புலிகள் மீதான தமிழ் மக்களின் மாறாத பேரன்பை கணித்துக்கொண்டு தங்களையும் புலிகளாக காட்டியபடி புலித்தோல் போhத்துவரும் இந்த நரிகளை இப்போது ஈழமுரசு கிழிக்கத்தொடங்கி இருக்கிறது. ஒவ்வொருவரைப்பற்றியும் தக்க சான்றுகளுடன் தரவுகளுடன் ஆதாரத்துடன் அம்மணமாக்குகிறது. இவர்களின் முகத்தில் கிடந்த தேசிய முகமூடி கிழித்து எறிந்து இவர்கள் சிங்கள எஜமானர்களின் ஏவல் நாய்கள் என்ற உண்மை வடிவம் இப்போது தமிழ் மக்களுக்கு முழுதாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

ஈழமுரசில் வெளியான குற்றச்சாட்டுகளுக்கும், இவர்களால் செய்யப்பட்டதாக ஆதாரத்துடன் சொல்லப்பட்ட செய்திகளுக்கும் மறுப்போ, திருத்தமோ செய்வதற்கு வக்கற்ற சிங்கள உளவாளி கே.பி ன் கும்பல் இப்போது மின்னஞ்சல் திருடப்பட்டதால்தான் தங்களின் விசயங்கள் வெளியே தெரியவந்ததாக அலறஆரம்பித்து இருக்கின்றன.

அதுவும்கூட, ஏதோ ஒரு சிங்கள நாளேடு எழுதி இருக்கிறதாம். அதிர்ச்சியுடன் எழுதி இருக்கிறதாம். எது அந்த சிங்களநாளேடு.? எந்த திகதியில் வந்தது.? யார் அதன் ஆசிரியர்.? கே.பியா? கோத்தபாயாவா? பசீல்ராஜபக்சவா? அல்லது வழுதியா?

ஈழமுரசுலீக்ஸ் தொடர்ந்து இரண்டரை மாதங்களாக ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி வந்துகொண்டிருக்கிறது. முதலாவது தொடரிலேயே பா.நடேசனுக்கு கனிமொழி எழுதிய மின்னஞ்சலை வெளியிட்டு கலைஞர் குடும்பம் என்னவிதமாக இந்த இனத்துரோகத்தில் பங்குகொண்டிருந்தார்கள் என்று காட்டியிருந்தார்கள். அப்போது யாருமே மின்னஞ்சல் தீருடப்பட்டதாக எழுதவில்லை. ஏன்.? துரோகிகள் தாமாகவே தமது துரோகத்தை எங்கேயாவது ஒப்புக்கொண்டு இருக்கிறார்களா.? அவர்களின் துரோகத்தை ஆதாரத்துடன் சொல்வதற்கு சான்றுகளாக மின்னஞ்சல்களும், கடிதங்களும், உரையாடல்களும், வங்கிக் கணக்குகளும் காட்டப்படுவது உலக வழக்கம்.

இப்போது இறுதி நேரத்தில் உணவுக்கப்பல் விடுவதாக உலகத்தையும் உலகத் தமிழினத்தையும் ஏமாற்றிய கதை கப்பல் ஏறிக்கொண்டு இருப்பதால் அவசரப்பட்டு மின்னஞ்சல் எடுக்கப்பட்டவிதம் பற்றி செய்தி விடுகிறார்கள். இறுதிநேரத்தில் இந்தியவல்லாதிக்கத்தின் ஏஜென்டுகளாக நடந்தவர்களுக்கும், பசீல்ராஜபக்சவின் தோழர்களாக புலத்தில் வலம் வந்தவர்களுக்கும் தமது பெயர்களும் இனிவரப்போகும் அத்தியாயங்களில் வெளிவரப்போகின்றது என்ற பயம் சுடத்தொடங்கி இருக்கிறது.

மின்னஞ்சல் எப்படி திறக்கப்பட்டது என்பது இப்போ முக்கியம் அல்ல. மின்னஞ்சலில் இருந்ததாக குறிக்கப்பட்டு ஈழமுரசில் வெளியாகும் செய்திகளுக்கு என்ன சொல்ல போகிறீர்கள். மறுப்பதற்கு முடியுமா..? அதைப் பொய் என்று சொல்லிவிட உங்களால் முடியுமா..?

சிங்கள நாளேடு சொன்னது என்ற திரைக்கு பின்னாலே நின்று முகங்களை மறைக்காதீர்கள். முடிந்தால் ஈழமுரசில் வருவது பொய் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். உண்மை வெளிவருவதை எவராலும் தடுத்துவிடமுடியாது. உண்மை சிலவேளைகளில் தாமதமாகும் ஆனால் நிச்சயம் வெளிவரும்.

எமது மக்களுக்கு எமது போராட்டம் யாரால் காட்டிக்கொடுக்கப்பட்டது என்ற உண்மையை தெரிவிப்பதற்காக ஈழமுரசு எடுக்கும் முயற்சிகள் தொடரவேண்டும். மக்கள் எப்போதும் உங்களுடன் நிற்பார்கள். துரோகிகளை துணிந்து இனங்காட்டுங்கள்.

நில ஆக்கிரமிப்பினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது தமிழர்தேசம்?

சிந்தனைக் கூடம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தினால் மாஞ்சோலை மாதாந்த ஒன்று கூடலொன்று, சென்ற வாரம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தேறியது. இந்திய உதவியும், அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு பயன்தருமா? என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆய்வில், அபிவிருத்தி என்கிற போர்வையில், குடாநாட்டு வளங்கள் சுரண்டப்படுவது குறித்து உரையாடப்பட்டுள்ளது. இராணுவக் கெடுபிடிகளின் மத்தியிலும், இவ்வாறான ஆய்வரங்குகள் நிகழ்த்தப்படுவது ஆச்சரியமாகவிருக்கிறது. சூழலியல் பற்றியதான விழிப்புணர்வுகள், மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதோடு, நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான தெளிவூடல்களும் முன்வைக்கப்பட வேண்டும். தமிழர் தாயகத்திலுள்ள அரச காணிகள் சுவீகரிக்கப்பட்டு, உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. விவசாய நிலங்கள், நிரந்தர உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்படுகின்றன.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்போடு தீர்வு குறித்துப் பேசியவாறே, நில அபகரிப்பில் சிங்களம் தீவிரமாக ஈடுபடுகிறது. போரிற்குப் பின்னான அபிவிருத்திக்காக இந்தியா முன்வைத்த 50,000 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாமல் மகிந்த அரசு தடுக்கிறது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியைவிட மக்களின் இயல்புவாழ்வு மீளக்கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதை தமிழர் தரப்பு வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசைப் பொறுத்தவரை, சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றுவதிலும், அரச காணிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதிலுமே அக்கறை செலுத்துகிறது.

இதைத்தவிர, கூட்டமைப்போடு பேசுவது, அதற்கு முட்டுக்கட்டை போடுவது போன்று, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்று கூறுவது என்பதெல்லாம் காலத்தை இழுத்தடித்து சர்வதேசத்தை ஏமாற்ற சிங்களம் மேற்கொள்ளும் தந்திரங்களே. ஆயினும் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் சிங்களத்தின் கனவிலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கள் அதனை சுட்டிக்காட்டுகிறது. போர் முனையில் நடந்த சமர் இப்போது அனைத்துலக இராஜதந்திரக் களத்திற்கு இடம்மாறியுள்ளதாகக் கூறிய பீரிஸ், அரசியல் உள்நோக்கம் கொண்ட அரசிற் கெதிரான பரப்புரைகள் யாவும் தோல்வியடையுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்தோடு உலகுடன் மோதுவதற்கு தாம் பயப்படவில்லையென வீரவசனம் பேசும் அவர், சீனா, ரஷ்யா போன்ற பலமான நாடுகள் பின்புல ஆதரவு தமக்கு உண்டென அறுதியிட்டுக் கூறுகின்றார். ஆனாலும், தமது நேச சக்திக் கூட்டுக்குள் இந்தியாவைச் சேர்க்காமல் தவிர்த்த விடயம் கவனிக்கத்தக்கது. நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்காமல் இழுத்தடிப்பது போன்று அமெரிக்க நீதிமன்றமொன்று மகிந்தருக்கு அனுப்பிய அழைப்பாணைக்கும் பதில் கிடைக்காதென பீரிஸ் பிதற்றுவது ஆச்சரியமான விடயமல்ல.

ஜுன் 10 திகதி இரண்டுநாள் பயணம் மேற்கொண்டு இலங்கை சென்ற இந்திய மூவர் குழு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை வைத்து வெருட்டியதாக அறியவருகிறது. அதேவேளை மே 17 அன்று பீரிசும், எஸ்.எம்.கிருஷ்ணாவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஏதிலிகளின் மீள்குடியேற்றம், அவசரகாலச் சட்ட நீக்கம், மனித உரிமை மீறல் குறித்த விசாரணை போன்ற அரசிற்கு ஒவ்வாத விடயங்கள் சில இணைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கெதிராக அரசோடு இணைந்துள்ள பௌத்த சிங்கள பேரினவாதக் கடும் போக்காளர்களும், ஜே.வி.பியும் போர்க்கொடி தூக்கின. 1987 இல் ஜே.ஆர் - ராஜீவ் இனால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலுள்ள 13 சரத்தினால் வட-கிழக்கு மாநிலங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. 2007 இல் ஜே.வி.பி யின் முயற்சியால் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக அவை பிரிக்கப்பட்டன. இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையானது வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இணைக்க வழியமைத்துவிடுமாவென்று பேரினவாத சக்திகள் அச்சமடைகின்றன.

அரசோடு பேசும் கூட்டமைப்பும், வட-கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், சுயாட்சி ஒன்று நிறுவப்படுவதோடு நிரந்தர தீர்வாக அமையுமென்று மக்களுக்குக் கூறுகிறது. சகல மக்களும் இத்தகைய தீர்வினை ஏற்றுக் கொள்வார்களா என்பது குறித்து ஆராயவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையில் ஒற்றையாட்சிக்குரிய அரசியல் வடிவத்தை வலியுறுத்துவதாலேயே சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை சிங்களம் எதிர்பார்க்கிறது.

அதாவது, தாயக மண்ணில் சுயாட்சியையும், அத்தோடு தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென்பதையும் அரசு ஏற்றுக் கொண்டால், தென்னிலங்கையில் பேரினவாத அடிப்படையிலான அரசியலை இவர்களால் நடாத்த முடியாது. ஆகவே விடுதலைப் புலிகள் கேட்டதை எவருக்கும் கொடுக்க முடியாதென சிங்களம் கூறுவதை எமது தமிழ் தலைமைகள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போல் தெரிகிறது. இவை தவிர, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் சிங்கள தேசம், வருடாந்த கடன் தவணைப்பணத்தை கட்ட முடியாமல் திணறுகிறது. கிரேக்க நாடு போன்று வங்குரோத்து நிலையை நோக்கி நகராமல் இருப்பதற்கு சீனாவின் உதவியையே சிங்களம் பெரிதும் நம்பியிருக்கிறது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி மையத்தை நோக்கி வருமென்று காத்திருக்கும் சிங்களம், தென்னிந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் மேற்குலகின் முதலீடுகளால் அதிர்ச்சியுற்றுள்ளது.

2000 - 2009 வரையான காலப்பகுதியில் நேரடி முதலீடாக 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தமிழ் நாட்டில் குவிந்துள்ளன. அதில் 31 விழுக்காடு மொறீசியசும், 21 விழுக்காடு சிங்கப்பூரும், 12 விழுக்காடு அமெரிக்காவும் கொண்டுள்ளன. இலங்கையின் உட்கட்டுமானத்திற்கென மேலதிகமாக 1.8 பில்லியன் டொலர்களை வழங்க சீனா உடன்பட்டிருப்பதால், சற்று ஆறுதலடைந்துள்ளது மகிந்த அரசு. ஆனாலும், சீனக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டியானது, அனைத்துலக நாணய சபையைவிட அதிகமானது. முதல்கட்ட துறைமுக அபிவிருத்திப் பணிக்கு சீனாவிடம் வாங்கிய கடனிற்கான இவ்வருட தவணைப்பணத்தை கொடுக்க முடியாமல் தவிக்கிறது அரசு.

அரச பிணையங்களையும், முறிகளையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, எத்தனை காலத்திற்கு காலத்தை ஓட்ட முடியும் இலங்கை அரசால் என்பதை ஆய்வு செய்ய இலங்கையில் எவரும் இருப்பது போல் தெரியவில்லை. காணிகளை விற்றுக் கொண்டிருக்கும் சிங்களம், கடல் வளங்களையும் விற்க ஆரம்பித்துள்ளது. மன்னார் குடாக்கடலை எட்டுத் துண்டுகளாகப் பிரித்து அதன் இரண்டு பகுதிகளை இந்தியாவிற்கும், சீனாவிற்கும் எண்ணெய் அகழ்விற்கு விற்றுவிட்டது இராசபக்ச இராசதானி. வருகிற ஓகஸ்ட் மாதமளவில் இந்தியாவின் (CARIN) நிறுவனம், எண்ணெய் உறுஞ்சும் வேலையை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமான காஸ்புரொம் மூன்றாவது மன்னார் படுகையை வாங்கப்போகிறது. அதற்கான உடன்பாடு எட்டப்பட்டாலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. ஆகவே, இலங்கையைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தங்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள சீனாவிலும், ரஷ்யாவிலுமே பெரிதும் தங்கியிருப்பதைக் காணலாம்.

செப்படம்பரில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 18 வது கூட்டத்தொடரிற்கு முன்பாக சீனா, ரஷ்யாவுடன் இறுக்கமான பொருளாதார உடன்பாடுகளை ஏற்படுத்த சிங்களம் முயற்சி செய்யும். தமிழர் தாயகத்தின் கடல் பரப்பும், நிலப்பரப்புமே பேரம்பேசும் பொருளாக மாறப்போகிறது.

ஈழமுரசு

யார் கமலுக்கு ஜோடி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

யார் கமலுக்கு ஜோடி?

7/2/2011 11:20:28 AM

விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி சோனாக்‌‌சி சின்கா இல்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. சோனாக்‌‌சியிடம் வாங்கிய கால்ஷீட்டை முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதால் அடுத்தப் படத்துக்குப் போய்விட்டார். அப்படியானால் விஸ்வரூபத்தில் யார் கமலுக்கு ஜோடி? சோனாக்‌சி சின்கா மாதி‌ரி இந்திய அளவில் குறைந்தபட்சம் இந்தி அளவில் பிரபலமான ஒருவரையே கமல் தேடி வருகிறார். தீபிகா படுகோனும் அவரது லிஸ்டில் இருப்பதாக கூறுகிறார்கள்.

இன்று பெங்களூரில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் கருத்தரங்கு

இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான கருத்தரங்கொன்று பெங்களூரில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங்கெடுக்கின்றன.

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு சார்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பெங்களூர் பல்கலைக்கழக பேராசிரியர் பால்நியூமேன் (டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றியவர்), மனித உரிமை ஆர்வலர் நக்ரகரே ரமேஷ், எழுத்தாளர் ஜி.ராமகிருஷ்ணா, மனித உரிமை ஆர்வலர் ஹரகோபால், எழுத்தாளர் குமார் புருடைகுட்டி, தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாடவுள்ளனர்.

இந்த கருந்தரங்கு இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒஸ்தியில் விடிவி கணேஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒஸ்தியில் விடிவி கணேஷ்

7/2/2011 10:54:59 AM

கணேஷை விடிவி கணேஷ் என்று சொன்னால்தான் ரசிகர்களுக்கே தெ‌ரிகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு காதல் காவலனாக இருக்கும் அந்த‌க் கரகரக குரல் தான் கணேஷ். அவர்தான் அப்படத்தின் தயா‌ரிப்பாளர். வானம் படத்திலும் கணேஷின் காட்சிகள் இடம் பெற்றன. யாரு… ரேடியோவை ச‌ரியா டியூன் பண்ணாத மாதி‌ரி பேசுவானே… என்று கணேஷை சந்தானம் அறிமுகப்படுத்தும் விதம் திரையரங்கில் சி‌ரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த கணேஷ் சிம்புவின் ஒஸ்தியிலும் வருகிறார். சிம்புவின் மாமாவாக. அதாவது ஹீரோயின் ‌ரிச்சாவின் குடிகார தந்தை.

ஜூலை 18 முதல் மங்காத்தா இசை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜூலை 18 முதல் மங்காத்தா இசை!

7/2/2011 10:50:40 AM

அ‌ஜீத்தின் மங்காத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ஆம் தேதி நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மங்காத்தா அ‌‌‌ஜீத்தின் 50வது படம். வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் த்‌ரிஷா, அர்ஜுன், பிரேம்‌ஜி, லட்சுமிராய் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். நடிகர்களைப் போலவே பாடல்களும். மொத்தம் ஒன்பது பாடல்கள் கம்போஸ் செய்திருக்கிறார் யுவன். இதில் ராம்‌ஜியின் மச்சி பாட்டிலை திற என்ற பார்ட்டி பாடலும் அடக்கம். வரும் 18ஆம் தேதி இசை வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே படத்தின் விளம்பரத்துக்காக விளையாடு மங்காத்தா பாடலை மட்டும் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

கரையைக் கடந்த "ரௌத்திரம்"!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கரையைக் கடந்த 'ரௌத்திரம்'!

7/2/2011 10:48:46 AM

ஜீவா, ஸ்ரேயா நடித்த 'ரௌத்திரம்' விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 'கோ' படம் வெற்றி பிறகு ஜீவாவின் மார்கெட் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் அவர் நடித்த 'ரௌத்திரம்' படம் மட்டும் அதிகம் அடிப்பட்டது. படம் வருமா வராதா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. கடைசியாக 'ரௌத்திரம்' கரையைக் கடந்திருக்கிறது. ஆம், படத்தின் கடைசி இருநாள் படப்பிடிப்பை புது‌ச்சே‌ரியில் நடத்தியிருக்கிறார்கள். ஆக்சன் படமான இதில் சமூதாய கோபத்துடன் இயங்கும் கோபக்கார இளைஞன் வேடமாம் ‌ஜீவாவுக்கு. அறிமுக இயக்குனர் கோகுல் படத்தை இயக்கியுள்ளார். ஆர்.பி.சௌத்‌ரி தயா‌ரித்திருக்கும் இந்தப் படம் ‌ஜீவாவின் வந்தான் வென்றானுக்கு முன்பாக திரைக்கு வருகிறது.




3 பருவங்களில் படமான தாண்டவக்கோனே

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

3 பருவங்களில் படமான தாண்டவக்கோனே

7/2/2011 10:24:59 AM

அம்பீயன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபாகர் சீனிவாசகம் தயாரிக்கும் படம், 'தாண்டவக்கோனே'. சஞ்சய், நந்தகி, சம்பத், கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பானு முருகன். இசை, இளையராஜா. பாடல்கள்: வாலி, முத்துலிங்கம், நா.முத்துக்குமார், சினேகன். சீமான் உதவியாளர் சுப்பு சுஜாதா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: விதி சார்ந்த கதையான இதில், சராசரி மனிதனுடைய வாழ்வை, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கிளைமாக்ஸ் மூலம் சொல்லியிருக்கிறேன். படத்தை முழுமையாக பார்த்த பிறகு பாடல்களை உருவாக்கினார் இளையராஜா.

மனிதனுடைய வாழ்வில் அம்மாவின் மரணம் எந்தளவு பாதிப்பு ஏற்படுத்தும், பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை சொல்லும், 'நீரால் உடல் கழுவி நித்த நித மூவேளை சோறால் குடல் கழுவும்' என்ற பாடலை இளையராஜா சிறப்பாக எழுதியுள்ளார். இதை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். மேலும், இளையராஜா பாடிய 'காட்டுவழி துன்பம் இல்லை. கல்லும்முள்ளும் தொல்லை இல்லை' பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும். குரங்கனி மலைப்பகுதிகளில், இயற்கை வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கினோம். கதைக்கு முக்கியம் என்பதால் பனிக்காலம், வெயில் காலம், மழைக்காலம் ஆகிய மாறுபட்ட காலங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.

தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.நீதிபதி


இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.

வன்னியில் சிங்களப்படைகள் முன்னெடுத்த இராணுவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழீழ நடைமுறை அரசினை சிறப்புடன் முன்னெடுத்த விதமும் காவல்துறை நீதித்துறையினை கையாண்ட திறணும் வியக்க வைப்பதாக தெரிவித்த அவர் தற்போதைய யாழ்பாணத்தை எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை எனும் போதுதான் வன்னியில் போர் சூழல் இறுக்கமாக நிலவிவந்த காலகட்டங்களில் எல்லாம் காவல் மற்றும் நீதித் துறைகளை சிறப்பாக கையாண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அரசாண்டவிதம் பிரமிப்பூட்டுவதாக இருப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய கலாச்சார சீர்கேடுகள் சமூகச்சிதைவுகள் கொலைக் கலாச்சாரங்கள் என்பன மிக வேகமாக யாழ்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதியில் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை தற்போது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களாலோ சிறிலங்கா அரச நிர்வாகத்தினாலோ தடுத்துநிறுத்த முடியாது எனவும் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வந்தால்தான் சீர்படுத்த முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து கொண்டு தமிழீழ நடைமுறை அரசை முன்னெடுத்து வந்திருந்தாலும் யாழ்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகள் அனைத்திலும் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய ஆளுகையின் வீச்சு இருந்தது. ஆனால் முன்னர் அது யாராலும் இனம்காணப்படாது இருந்துவந்தது. தற்போதுதான் தெரிகிறது தலைவர் பிரபாகரன் அவர்களது ஆற்றலின் வலிமை.

இவ்வாறு நீதியினை வழங்கும் உயர்பீடத்தில் இருப்பவர்கள் முதல் சாதாரண குடிசைவாசிகள் வரை தலைவர் பிரபாகரன் அவர்களது வரவினை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அடிபட்டு நொந்துபோய் எல்லாவற்றையும் இழந்த பின்பும் தேசத்தின் இன்றைய இழிநிலை கண்டு மனம்பொறுக்காத மாணம் உணர்வுள்ளவர்களது புலம்பல் இதுவாகத்தான் இருக்கின்றது...

"...என்னதான் இருந்தாலும் பெடியள்(புலிகள்) இருக்கேக்கை உந்தச் சேட்டையள் எல்லாம் இல்லாமல் தான் இருந்தது... செல்லடிச்சாலும் கிபிரடிச்சாலும் எங்கட மண்ணிலை சுதந்திரமா நாங்கள் இருந்த வாழ்க்கை சொர்க்கம் தான்.. திரும்பவும் பெடியள்(புலிகள்) வந்தால்தான் எல்லாத்திற்கும் ஒரு முடிவுகிடைக்கும்.. இந்த அக்கரமங்களை எல்லாம் போக்கி தமிழனை தலைநிமிர வைக்க தலைவர் ஒருவராலதான் முடியும்."

சினிமாவில் ஜெயிக்க நேரம்தான் முக்கியம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினிமாவில் ஜெயிக்க நேரம்தான் முக்கியம்

7/2/2011 10:15:49 AM

வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பில் எஸ்.முருகானந்தம் தயாரித்துள்ள படம், 'வாகை சூட வா'. விமல், இனியா, பாக்யராஜ், தம்பி ராமய்யா, பொன்வண்ணன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஓம்பிரகாஷ். இசை, எம்.ஜிப்ரான். பாடல்கள்: வைரமுத்து, அறிவுமதி, கார்த்திக் நேத்தா, வே.ராமசாமி. ஏ.சற்குணம் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் பாக்யராஜ் பேசியதாவது:

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பு முக்கியம் என்று நினைத்திருந்தேன். சில சம்பவங்களுக்கு பிறகு நேரம்தான் முக்கியம் என்று உணர்ந்து கொண்டேன். 'களவாணி' படத்தில், முதலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சாந்தனுவுக்குதான் வந்தது. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, விமல் ஹீரோ என்றார்கள். சற்குணம் வேறொருவர் மூலம், 'பாக்யராஜை கோபித்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்' என்று, சொல்லி அனுப்பினார்.

இதற்குமுன் 'சுப்ரமணியபுரம்' படத்திலும் சாந்தனு ஹீரோவாக நடித்திருக்க வேண்டியது. கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாமல் போனது. இப்படி, சில நல்ல வாய்ப்புகள் சாந்தனுவுக்கு அமையவில்லை. எல்லாம் நேரம்தான் காரணம் என்று நினைத்தேன். இப்போது சற்குணம் 'வாகை சூட வா' படத்தில் என்னை நடிக்க கேட்டபோது, அந்த வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்று ஒப்புக்கொண்டேன். இதற்கும் நேரம்தான் காரணம். சினிமாவில் ஜெயிக்க நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம். இவ்வாறு பாக்யராஜ் பேசினார். பாரதிராஜா, வைரமுத்து, அமீர், பாண்டிராஜ், சிம்புதேவன், பிரபு சாலமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தயாரிப்பாளர் முருகானந்தம் வரவேற்றார். சற்குணம் நன்றி கூறினார்.




லாரன்ஸ் இயக்கத்தில் சரத்குமார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

லாரன்ஸ் இயக்கத்தில் சரத்குமார்

7/2/2011 10:10:04 AM

என்.ராதா வழங்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், ராகவேந்திரா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் படம், 'காஞ்சனா'. இது, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' படத்தின் 2ம் பாகம். இதில் சரத்குமார் புதுமையான வேடத்தில் நடிக்கிறார். லட்சுமிராய் ஹீரோயின். ஒளிப்பதிவு, வெற்றி-கிருஷ்ணசாமி. இசை, தமன். பாடல்கள்: விவேகா, வேல்முருகன். ஹீரோவாக நடிக்கும் ராகவா லாரன்ஸ், இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல், நடனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

திகில் காட்சிகளுடன் காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை பார்த்த இந்தி நடிகர் சல்மான்கான், இதை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். சரத்குமாருக்கு இதுவரை எந்த படத்திலும் கிடைக்காத வேடம். இதற்காக தனது கெட்டப்பை மாற்றி நடித்தார். பிரமாண்டமான சாமி சிலை முன் ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்கள் மற்றும் துணை நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் ஆவேசத்துடன் நான் ஆடி நடித்த கிளைமாக்ஸ் பாடல் காட்சி பரவசமாக இருக்கும். முக்கிய கேரக்டரில் திருநங்கை பிரியா நடிக்கிறார்.  இம்மாதம் ரிலீசாகிறது.

யார் காரணம் தமிழ் மக்களின் இந்நிலைக்கு?


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் எங்கேயும் பிச்சைக்காரர்களைக் காணமுடியவில்லை என்று ஆச்சரியத்தோடு சொன்னார்கள் அங்கு சென்றுவந்த வெளிநாட்டவர்கள் பலர்.

போர் நடைபெறும் பகுதியில் இவ்வாறு இருப்பது அரிதிலும் அரிது என விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை அவர்கள் வியந்தும், புகழ்ந்தும் இருந்தார்கள். தமிழ் மக்களை அடிபணியவைப்பதற்கு சிறீலங்கா பொருளாதாரத் தடைகளை பிரயோகித்த காலத்தில்கூட, அந்த மக்களை வறுமை நிலைக்கு செல்லவிடாது, எத்தனையோ கட்டமைப்புக்களை உருவாக்கி சுயமான முன்னேற்றத்திற்கு வழிகாட்டி அந்த மக்களுக்கு பேருதவியாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள்.

2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சிக்குண்டு சிறீலங்கா அரசு உட்பட தென்னாசிய அரசுகளே ஆடிப்போயிருந்த நிலையில், தமது கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களுக்குள் ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களை ஒருசில நாட்களுக்குள் மீட்டெடுத்தவர்கள் விடுதலைப் புலிகள். இவ்வாறு மக்களை பொருளாதார நெருக்கடிகளில் இருந்தும் இயற்கையின் பேரழிவுகளில் இருந்தும் மீட்டெடுத்து அவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே செல்லவிடாது பாதுகாத்தவர்கள் விடுதலைப் புலிகள்.


இவற்றைவிட, வட பகுதி மக்கள் பொருளாதாரத்தில் எப்போதும் முன்னின்றே வந்திருக்கின்றார்கள். கடினமான உழைப்பின் மூலம் தமிழ் மக்கள் எவரிடமும் கையேந்தாத சொந்த வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். ஆனால், இன்று ‘வடபகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்துகொண்டிருப்பதாக’ ஜக்கிய நாடுகள் சபையின் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கின்றது. ‘வன்னியில் மீள்குடியமர்ந்தவர்களில் பெருமளவான மக்கள் வறுமை கோட்டின் கீழ்வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் 57 விழுக்காடானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அதிலும் 12 விழுக்காடானவர்கள் மிகமோசமான வறுமையில் வாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் வாழ் இடங்களில் வாழ்க்கை செலவு அதிகமாக உள்ளதால் அங்குள்ள மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதே கடினமாக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட 77 விழுக்காடான மக்கள் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள போதும் தற்காலிக கொட்டில்களிலே வாழ்ந்து வருகின்றார்கள். மக்களுக்கான சுகாதார வசதிகள் இன்மையினை எதிர்கொண்டுள்ள மக்கள், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுமிகள் கர்ப்பம் போன்றவற்றிற்கும் முகம்கொடுத்து வருவதாக’ ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை ஏற்படுவதற்கு காரணமானவர்கள் யார்? சிறீலங்காவும், அதன் போருக்கு உதவியாக நின்றவர்களும் மட்டுமே காரணமாக முடியும்.


பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென உலக நாடுகள் எத்தனையோ மில்லியன் டொலர்களை அள்ளிக்கொடுத்துள்ளது. ஆனால் அந்த நிதியெல்லாம் எங்கே போனது. குரங்கின் கையில் அப்பத்தை பங்கிடக்கொடுத்த பூனைகளின் கதையாக, சிங்களத்தின் கையில் இனஅழிப்பில் தப்பிய மக்களுக்கான நிதியைப் பங்கிட்டுக்கொடுக்குமாறு கொடுத்த உலக நாடுகள்தான் இதற்கான பதிலையும் சொல்லவேண்டும். உலக நாடுகள் கொடுத்த நிதியுதவியில் ஒரு சதவீதம் அந்த மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருந்தால்கூட இந்த நிலைமையை அந்த மக்கள் இன்று எதிர்கொண்டிருக்கமாட்டார்கள்.


இவற்றைவிட பாதிக்கப்பட்ட மக்களின் எஞ்சியிருக்கும் பொருளாதாரங்களை சுரண்டிக்கொண்டிருக்கின்றது சிங்களம். வடபகுதியில் மேற்கொள்ளப்படும் வேலை வாய்ப்புக்கள் அனைத்தையும் சிங்களவர்களுக்கே வழங்கியுள்ள நிலையில், தமிழர்களிடம் எஞ்சியுள்ள கால்நடைகளையும் கடத்திச்சென்று வியாபாரம் செய்து அவர்களது பொருளாதாரத்தை மேலும் பாதிப்படைய வைக்கின்றனர்.


பாதிக்கப்பட்ட அந்த மக்கள் மீண்டெழுவதற்கு சிறீலங்கா எந்தவொரு உதவியையும் வழங்கப்போவதில்லை என்பது மட்டுமல்ல, உலகின் எந்தக் கட்டமைப்பின் ஊடாகச் செல்கின்ற உதவிகளையும் அது அனுமதிக்கவும் போவதில்லை. இந்த நிலையில் அந்த மக்களை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர்ந்த மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எந்தவொரு கட்டமைப்பின் ஊடாகவும் அல்லாமல் நேரடியாக அந்த மக்களுக்கு உதவிகள் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்வதன் ஊடாகவே அந்த மக்களை மீண்டெழவைக்கமுடியும். அதுவே இன்றுள்ள ஒரேயரு வழியும்கூட.

நன்றி - ஈழமுரசு

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )


தமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சென்னையில் மனிதம் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களான ரகுநாதன், தேவதர்சினி தம்பதிகளின் 3 வயதுடைய இரண்டாவது குழந்தை மீது நேற்று முன்தினம் இரவு முதலியார் குப்பத்தை சேர்ந்த 23 வயதான சுகுமாரன் என்ற மீனவர் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஈழத்தமிழ் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் வீட்டில் இல்லாதவேளையில் அவர்களின் குடிசைக்குள் நுழைந்து குழந்தையை பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அலறல் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஓடி வருகையில், சந்தேகநபர் குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான்.

அயலவர்களும் துரத்தவே குழந்தையை கீழே எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளான். இதனால் காயமடைந்த குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை பெரிது படுத்தக்கூடாது என காவல்துறையினர் ஈழத்தமிழ் அகதிகளை அச்சுறுத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி,முல்லைதீவு மாவட்டங்களில் அதிகரிக்கும் திருட்டு சம்பவம்.


கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்..

குறிப்பாக கிளிநொச்சி நகரபகுதியில் அண்மையகாலங்களில் திருட்டுசம்பவங்கள்அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.படையினர் அதிகளவு நடமாட்டம் மிக்கபகுதிகளில் ஆலயங்களில்கூட திருடடுசம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதுதொடர்பாக மக்கள் சிறீலங்கா காவல்துறையினருக்குமுறையிட்டும் காவல்துறையினர் இதுதொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கவலைவெளியிட்டுள்ளார்கள்

அதேவேளை கிளிநொச்சிச பகுதியில் சட்டவிரோத செயல்கள் அதிகரித்து செல்வதால் அவர்களிடம் இருந்து கையூட்டுப்பெற்றுக்கொள்ளும் நடவடிகக்கையில்தான் காவல்துறையினர் முனைப்புடன் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Friday 1 July 2011

ஈழதமிழ் மாணவர்களின் துன்ப கதை கேட்டு மனம் உடைந்து விழி கலங்கிய சிவகுமார் சூர்யா!


இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு அகரம் அறக்கட்டளை உதவி புரிந்து வருகின்றது.குறித்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஈழ மாணவர்கள் தமது கஷ்டங்களை சொல்லும் போது அகரம் அறக்கட்டளை உரிமையாளர்களான சூரியா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

கிழக்கில் அரசியல்கட்சிகளின் பின்னணியில் ஆயுதக்குழுக்கள் – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா படைத்தளபதி

கிழக்கு மாகாணத்தில் அரசியல்கட்சிகளின் பின்புலத்தில் சில ஆயுதக்குழுக்கள் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத்தின் கிழக்குப் படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே சிறிலங்கா இராணுவத்தின் கிழக்குப் படைத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்று திமிலைத்தீவு மக்கள் வங்கிக் கிளையில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்தை அடுத்து வங்கி முகாமையாளர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்திலேயே மட்டக்களப்பில் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொலைகள் , கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதக்குழுக்கள் தம்மிடம் உள்ள ஆயுதங்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் ஆயுதங்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆயுதப் படையினருக்கு மட்டுமே ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதி உள்ளது வேறெவரும் அதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எட்டு வயது மகளை கதறக் கதற கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தாய்


பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (29). நடன கலைஞராகவும், கட்டிட மேஸ்திரியாகவும், வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதா (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தீபக்காந்த் (10) என்ற 5-வது படிக்கும் மகனும், நிவேதா (8) என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர்கள் நல்லாகவுண்டம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.

அய்யப்பனுக்கும், ராதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அய்யப்பன் ராதா மீதும், ராதா அய்யப்பன் மீதும் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மோதிக் கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை நிவேதா பள்ளிக்கூடம் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ராதா வீட்டிற்குள் நிவேதாவை அழைத்து சென்றார்.

பின்னர் திடீரென அரிவாளை எடுத்து வந்து ஆட்டை அறுப்பது போல பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கதற கதற அறுத்தார். இதில் அலறி துடித்த சிறுமி ரத்த வெள்ளத்தில் பிணமானாள். பின்னர் கொலை வெறி தீராத ராதா மகன் தீபக்காந்த்தையும் பிடித்தார். அரிவாளில் ரத்தம் சொட்ட...சொட்ட...

ராதா கொலை வெறியில் இருந்ததை பார்த்த அவன் அலறினான். அப்போது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், மற்றும் வீட்டின் மற்றொரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்த அய்யப்பன் ஆகியோர் ஓடிவந்தனர். அப்போது நிவேதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதையும், தீபக்காந்த்தை கொலை செய்ய ராதா அரிவாளுடன் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டனர்.

இதையடுத்து அய்யப்பன், ராதாவிடம் இருந்த மகன் தீபக்காந்த்தை உயிருடன் மீட்டார். மகள் நிவேதாவின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். ஆனால் ராதா பித்து பிடித்தது போல் வெறியுடன் காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராதாவையும், அய்யப்பனனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெற்ற மகளையே கொடூரமாக கொலை செய்த ராதாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என் கணவர் அய்யப்பனும், நானும் கட்டிட வேலை செய்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். ஆரம்பத்தில் சந்தோசமாகத்தான் இருந்தோம்.திடீரென எங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

என் கணவர் அய்யப்பனுக்கும், நாங்கள் குடியிருக்கும் பகுதியை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. பின்னர் அவர்கள் இருவரும் ஒரு நாள் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். அவர் எனது மனைவியை அய்யப்பன் கடத்தி சென்று விட்டார் என்று கூறியிருந்தார்.

இதையறிந்த என் கணவர் அய்யப்பன் அந்த பெண்ணை மீண்டும் அவளது கணவரிடமே ஒப்படைத்தார்.பின்னர் என் கணவருக்கும் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண் தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்துவேன், நீ உன் வீட்டிற்கு சென்று விடு என்றார்.

இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் என் கணவர் அய்யப்பனுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை ஏமாற்றியதால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

நான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகி விடுவார்களே என்று கருதி குழந்தைகளை கொலை செய்து விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து பள்ளி விட்டு திரும்பிய எனது மகள் நிவேதாவை அரிவாளால் கழுத்தை அறுத்து கொன்றேன்.

எனது மகனை கொலை செய்ய முயன்ற போது அவன் அலறியதால் அனைவரும் ஓடிவந்து அவனை என்னிடம் இருந்து காப்பாற்றினர் என்று கூறினார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராதாவை ஜெயிலில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே ராதாவின் கணவர் அய்யப்பனிடம் போலீசார் விசாரித்த போது, எனது மனைவி ராதாவுக்கும், எங்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், கள்ளத்தொடர்பு இருந்தது. இதுப்பற்றி நான் கேட்டதால் அவள் வெறிப்பிடித்து எனது மகளை கொன்று விட்டாள் என்று கூறினார். அய்யப்பனை போலீசார் விசாரணைக்கு பின்னர் அனுப்பி விட்டனர்.கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் மாறி, மாறி கள்ளக்காதல் இருப்பதாக புகார் கூறியதால் குடும்பமே சீரழிந்து விட்டது.

வெள்ளகோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மாணங்கள்.

1. ஐ. நா சபை அறிக்கையின்படி இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு எனவும், இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கக் கோரியும், தமிழர்களுக்கு சம உரிமையுடன் நிம்மதியாக வாழ, தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் செயலலிதா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.இந்த ஆட்சி அமைய வாக்களித்த தாய்தமிழ் உறவுகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

2.திருப்பூர் சாயத்தொழில் கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை உடனடியாக எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்

3.இலங்கையில் தயாரான பொருட்களை தமிழ் நாட்டில் விற்க தமிழக அரசுதடை விதிக்க வேண்டுகிறோம். இலங்கையில் பொருட்களை தயாரித்து தமிழ்நாட்டில் விற்பனை செய்யும் `தம்ரோ’ (Damro Furniture) போன்ற நிறுவனங்களை தமிழர்கள் புறக்கணிக்கும்மாறு கேட்டுகொள்கிறோம். அதேபோல்இலங்கையின் பொருளாதார உயர்வுக்கு உதவும் வகையில் இனவாத சிங்கள பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள தன்மானமுள்ள பனியன் நிறுவன அதிபர்கள் உடனடியாக அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டுகிறோம் .

4. சென்ற வருடம் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை 145 அமெரிக்க டாலராக இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.50.60 ஆகவும், டீஸல் ஒரு லிட்டரின் விலை 35.86 ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை 91 அமெரிக்க டாலராக இருக்கிறபோது ,ஏன் பெட்ரோல் விலை ரூ 69 ஆகவும் டீஸல் விலை 43.80 ஆகவும் உள்ளது? தற்போதும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எப்படி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்ப்படுகிறது? பெட்ரோல் விலை பற்றிய உண்மையான வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிடவேண்டும்

5.வெளிநாட்டில் இருக்கும் நமது கருப்பு பணம் அனைத்தையும் கைப்பற்றி அதனை நாட்டுடைமை ஆக்கி மக்கள் நலப்பணிகளுக்கு உபயோகப் படுத்தவேண்டும் வேண்டும். அதற்க்கு தடையாய் நிற்கும் காங்கிரசுக் கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும். தன்னுடைய அதிகாரத்தை வைத்துக் கொண்டு மிகப் பெரிய அளவில் ஊழல் செய்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவர்களை மத்திய அரசில் இருந்து பதவி நீக்கம் வேண்டும்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது (படங்கள்)

அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வெள்ளகோவில் அமைப்பாளர் கோபால கிருட்டிணன் தலைமை வகிக்க, திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்கள் செல்வம், சமரன் பாலா, பரமசிவம் மற்றும் கௌரி சங்கர் முன்னில்லை வகித்தனர். இந்தக்கூட்டத்தில் குமுதவல்லி, அழகப்பன், தமிழன் வடிவேல், கல்யாண சுந்தரம்,திலீபன் ஆகியோர் பேசினார்கள்.

இந்த கூட்டத்தை சிறந்த களப்பணி செய்து வெற்றிகரமாக ஒருங்கிணைத்த வெள்ளகோவில் கோபால கிருட்டிணன் அவர்களை திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி வெகுவாக பாராட்டுகிறது.

உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி

உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

* தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், அதிகரித்து விட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?

இக்குற்றச்சாட்டை எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார். தி.மு.க., 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழக அரசின் மொத்தக் கடன் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாய். அதுதான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 22.29 சதவீதம் கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க., ஆட்சியில், 19.58 சதவீதம்தான் கடன் இருந்தது. இது போன்ற நிதிப் பிரச்னைகளில் குற்றம் சாட்டும்போது, நிதித்துறை செயலர் போன்ற அதிகாரிகளை கலந்து, உண்மையான புள்ளி விவரங்களை அறிந்து குற்றம் சாட்டுவது, முதல்வர் பதவிக்கு அழகாகும்.

* தி.மு.க., ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக இருந்ததால், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் காவல் துறையினருக்கு பாதுகாப்பு தரப்படும், என ஜெயலலிதா செய்த அறிவிப்பு குறித்து?

ஜெயலலிதா டில்லி சென்றபோது, அவரது கட்சியினர் இரவு கொடி கட்டிவிட்டு, ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். நள்ளிரவு என்பதால், அவ்வழியே வந்த போலீஸ் துணை கமிஷனர், ஓட்டலை மூடும்படி கூறியுள்ளார். அ.தி.மு.க.,வினர் அவரை மிரட்டியுள்ளனர். அவர் மிரட்டியவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றுள் ளார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகியோர் போலீஸ் நிலையம் சென்று, அவர்களை அழைத்து சென்றுள்ளனர். அந்த அதிகாரி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அ.தி.மு.க., தோழமை கட்சியான தே.மு.தி.க., – எம்.எல்.ஏ., ஓமலூர் போலீஸ் நிலையம் சென்று மிரட்டியுள்ளார். இவை ஒரு மாத கால ஆட்சியின் சாதனைகள். இது தான் அ.தி.மு.க., அரசு, காவல் துறைக்கு தரும் பாதுகாப்பின் லட்சணம் என மக்கள் பேசத் துவங்கி உள்ளனர்.

* ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இழுத்துக் கொண்டே போகிறதே?

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதி.

* “லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக் கூடாது’ என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

நான் பிரதமரை, அந்த வரம்பிற்குள் சேர்க்க வேண்டும் என்று சொன்னது, நாம் அதற்காக பயப்படவில்லை, தெளிவாக இருக்கிறோம், என்று உலகத்தின் முன்பு தெளிவாக்க பயன்படும் என்பதால்தான். எனது கருத்து எந்த அடிப்படையில் சொல்லப்பட்டதோ, அதே அடிப்படையில் நேற்று பிரதமரே, லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பதில், ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார். “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற தி.மு.க.,வின் நீண்ட நாள் முழக்கத்தை நினைவு படுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா