பேய், பிசாசு, காத்து கருப்பு என கிராமத்து நம்பிக்கைகள் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது, இதற்கு தீர்வுதான் என்ன? என்ற கருத்தை மையமாக வைத்து புதிய இயக்குநர் பாலு மலர்வண்ணன் இயக்கும் படம் ஒத்தவீடு.
இந்தப் படத்தின் நாயகனாக திலீப்குமார் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி என பரிச்சயமான நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.
படம்குறித்து பாலு மலர்வண்ணன் கூறுகையில், "பேய் பிசாசு என அமானுஷ்ய சக்திகள் பற்றி எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு. அந்த பயமே மிகக் கொடிய மனநோயாகிவிடுகிறது.
பொதுவாக இம்மாதிரி கதைகளை பார்ப்பவர்களை பயமுறுத்தத்தான் பயன்படுத்துவார்கள். அதற்கான தீர்வைச் சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்தப் படத்தில் இந்த பயத்தைப் போக்க ஒரு தீர்வை முன்வைத்துள்ளேன். படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெறுகிறது. ஒரு பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் எழுதுகிறார். வி தஷி இசையமைக்கிறார்'' என்றார்.
பாலு மலர்வண்ணன் இயக்குநராகத்தான் புதுமுகமே தவிர, சினிமாவில் அவரை அறியாதவர்கள் குறைவு. பத்திரிகையாளராக, மக்கள் தொடர்பாளராக பலரிடமும் பணியாற்றியவர் இவர்.
இந்தப் படத்தின் நாயகனாக திலீப்குமார் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி என பரிச்சயமான நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.
படம்குறித்து பாலு மலர்வண்ணன் கூறுகையில், "பேய் பிசாசு என அமானுஷ்ய சக்திகள் பற்றி எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு. அந்த பயமே மிகக் கொடிய மனநோயாகிவிடுகிறது.
பொதுவாக இம்மாதிரி கதைகளை பார்ப்பவர்களை பயமுறுத்தத்தான் பயன்படுத்துவார்கள். அதற்கான தீர்வைச் சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்தப் படத்தில் இந்த பயத்தைப் போக்க ஒரு தீர்வை முன்வைத்துள்ளேன். படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெறுகிறது. ஒரு பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் எழுதுகிறார். வி தஷி இசையமைக்கிறார்'' என்றார்.
பாலு மலர்வண்ணன் இயக்குநராகத்தான் புதுமுகமே தவிர, சினிமாவில் அவரை அறியாதவர்கள் குறைவு. பத்திரிகையாளராக, மக்கள் தொடர்பாளராக பலரிடமும் பணியாற்றியவர் இவர்.
No comments:
Post a Comment