Saturday 16 June 2012

ராம் சரண் திருமணத்தில் ஆட காசு வாங்கினேனா...? - சீறும் தமன்னா

I Wasn T Danced Money Ram Charan Marriage Tamanna   

சமீபத்தில் நடந்த ராம்சரண் தேஜா - உபாசனா திருமணத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம், தமன்னாவின் சூப்பர் ஆட்டம்!

ராம் சரண் - உபாசனாவுக்கு திருமணத்துக்கு முன் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில்தான் அவர் அசத்தல் ஆட்டம் போட்டார்.

அவருடன் சேர்ந்து ஸ்ரேயாவும் ஆடினார்.

இப்படி நடனமாட அவர்களுக்கு பெரிய தொகை விலையாகத் தரப்பட்டது என ஆந்திரத் திரையுலகில் செய்தி பரவ கொதித்துப் போயுள்ளார் தமன்னா.

"திருமண நிகழ்ச்சிகளில் காசு வாங்கிக் கொண்டு ஆடினேன் என்பது எத்தனை கேவலமான பிரச்சாரம்... நான் அந்த மாதிரி பொண்ணா? எங்க வீட்டில் இப்படி ஒரு விசேஷம் நடந்தா எப்படி சந்தோஷமா ஆடிப் பாடுவோமோ அப்படித்தான் ராம் சரண் திருமணத்திலும் ஆடினோம். இப்படியெல்லாம் அதை கொச்சைப்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை," என்றார்.

அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. தமிழில்?

"கடவுள் அருள் இருந்தால் அது நடக்கும்?" என்றார்.

என்னடா இது... கடவுள் அருள் தமன்னாவுக்கு கிடைப்பதில் பெரிய சிக்கலா இருக்கும் போலிருக்கே!

26 வருஷமா யானைத் தந்தம் வச்சிருக்கேன்.. பதுக்கி வைக்கவில்லை! - மோகன்லால்

Mohan Lal Denies Illegal Possession Of Tusks

என் வீட்டில் 26 ஆண்டுகளாக யானை தந்தங்களை வைத்திருக்கிறேன். அவற்றை நான் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கவில்லை. அவை எனக்கு சொந்தமானவை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன, என்றார் மோகன்லால்.

மலையாள நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்து யானை தந்தங்களை வருமான வரி அதிகாரிகள் சமீபத்தில் கைப்பற்றினர். கொச்சி தேவரையில் உள்ள மோகன்லால் வீட்டின் பூஜை அறையில் இருந்து இந்த தந்தங்கள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து மோகன்லால் மீது சட்டவிரோதமாக யானை தந்தங்களை பதுக்கி வைத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்துவதற்கு தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்குள்ள போலீஸ் கமிஷனர் பிஜுஅலெக்சாண்டர் கூறுகையில், "'நடிகர் மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தம் உண்மையானதாக இருந்தால் அதை யாரிடம் இருந்து வாங்கினார், கடத்தப்பட்டு அந்த தந்தம் மோகன்லாலுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்றெல்லாம் அவரிடம் விசாரிக்கப்படும்", என்றார்.

இதுகுறித்து மோகன்லாலிடம் கேட்டபோது, "வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்த யானை தந்தம் என்னிடம் 26 வருடங்களாக இருக்கிறது. அது எனக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆவணங்களை வைத்து இருக்கிறேன். ஆனால் அவற்றை நான் பதுக்கி வைத்து இருந்ததாக அவதூறு செய்திகள் பரப்புகின்றனர்.

யானை தந்தத்தை சட்டவிரோதமாகவோ நேர்மையற்ற முறையிலோ நான் பதுக்கி வைக்கவில்லை. யானையை கொன்று அந்த தந்தங்களை நான் எடுத்து வந்ததாகவா நினைக்கிறீர்கள்.... உண்மையை கண்டறியாமல் என் மீது அவதூறு செய்திகள் பரப்பலாமா?", என்றார்.

காமெடி நடிகர் சங்கர் - மோனிகா நந்தினி திருமணம் - வடிவேலு, விவேக் வாழ்த்து!

Young Comedian Sankar Marriage

வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடியன்களுடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் இளம் கலைஞர் சங்கர் - மோனிகா நந்தினி திருமணம் மதுரை திருமங்கலத்தில் நடந்தது.

ஜூன் 10-ம் தேதி நடந்த இந்த திருமணத்துக்கு வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு, பெரிய கருப்புத் தேவர், சிங்கமுத்து, போன்டா மணி, இயக்குநர் ராசு மதுரவன் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் நேரில் வந்து பரிசு கொடுத்து வாழ்த்தினர்.

மதுரையைச் சேர்ந்தவர் சங்கர். கருப்பசாமி குத்தகைதாரர், அம்பாசமுத்திரம் அம்பானி, முரட்டுக்காளை உள்பட 35 படங்களில் நடித்துள்ளார். இப்போது பரிமளா திரையரங்கம், கள்ளச் சிரிப்பழகா, மைக் செட் பாண்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சம்பள பாக்கி கேட்டதால் கேவலமாகப் பேசினார் - தயாரிப்பாளர் மீது நடிகை ரேஷ்மி புகார்!

Reshmi Complaints On Kannada Producer

சம்பள பாக்கியைக் கேட்ட போது, கேவலமாகப் பேசியதாக தயாரிப்பாளர் மீது புகார் கூறியுள்ளார் நடிகை ரேஷ்மி.

தமிழில் தேனீர் விடுதி படத்தில் நடித்துள்ளார் ரேஷ்மி. கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஸ்வராஞ்சலி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பள பாக்கி வைத்துவிட்டாராம். இதைக் கேட்டதற்கு தாறுமாறாக பேசிவிட்டாராம் ஸ்ரீனிவாஸ்.

இதுகுறித்து ரேஷ்மி கூறுகையில், "கன்னடத்தில் ஸ்வராஞ்சலி படத்தில் நடிக்க தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் என்னை அணுகினார். ரூ.4 லட்சம் சம்பளம் தருவதாக கூறினார். படப்பிடிப்பு முடிந்து விட்டது. எனக்கு பேசிய சம்பளத்தை முழுவதும் தரவில்லை. பாக்கி வைத்துவிட்டார்.

அந்த பணத்தை கேட்டபோது என்னை ரொம்ப கேவலமாக பேசிவிட்டார். பணத்தையும் தர மறுக்கிறார். அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்," என்றார்.

காதல் ஆரம்பித்த இடத்துக்கே ஹனிமூன் கொண்டாடப் போயிருக்கும் சினேகா - பிரசன்னா ஜோடி!

Sneha Prasanna Fly Off Us

சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல் ஆரம்பமானது, இருவரும் ஜோடி சேர்ந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலிருந்துதான்.

இந்தப் படத்தில் நடிக்க ஒத்திகை பார்க்க, இருவரும் அமெரிக்காவில் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். கணவன் - மனைவியாக நடிக்க ஒத்திகை பார்த்தனர்.

அப்போதுதான் இருவருக்கும் காதல் பூத்தது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் காதலித்து, கடந்த மாதம் தம்பதிகளாகினர்.

திருமணமாகிவிட்டாலும் அவர்களால் ஹனிமூனை உடனடியாகக் கொண்டாட முடியவில்லை.

தான் நடிக்க வேண்டிய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சினேகா. ஒருவழியாக இரவு பகல் பார்க்காமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, இப்போதுதான் இல்லற வேலைகளை ஆரம்பித்துள்ளனர் புதுமணத் தம்பதிகள்.

தேனிலவுக்காக எங்கே போகலாம் என்ற குழப்பமே இருவருக்கும் இல்லையாம். காரணம், தங்கள் காதல் ஆரம்பித்த அமெரிக்காவுக்கே செல்ல முடிவெடுத்திருந்தார்களாம்.

தங்கள் முடிவை இரு தினங்களுக்கு முன் அமைதியாக செயல்படுத்தினர் சினேகாவும் பிரசன்னாவும்.

இருவரும் நேற்று முன்தினம் ஹனிமூனுக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்!

தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியின் மூலவர் பிரணாப் முகர்ஜி: சீமான்

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு, தமிழகத்திலுள்ள தமிழின உணர்வாளர்களிடையே சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தில் தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க கூடாது எனவும் தமிழ் நாட்டை சேர்ந்த ஒவ்வொரு நாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவரை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது சீற்றத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத்தில், போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கனரக ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பொழிந்து ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். போரை நிறுத்த வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் வலிமையாக ஒலித்தது.

அப்போது பிரதமரின் சிறப்புத் தூதராக சிறிலங்கா சென்றார் பிரணாப் முகர்ஜி. சிறிலங்கா பயணிப்பதற்கு முன்பாக சென்னை வந்து, அப்போது இராமசந்திரா மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசிவிட்டு கொழும்பு சென்றார்.

கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றதால் போரை நிறுத்துமாறு இந்தியாவின் சார்பாக பிரணாப் முகர்ஜி வலியுறுத்துவார் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்தனர். கொழும்புவில் சிறிலங்கா ஜனாதிபதியையும், அவருடைய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு டெல்லி திரும்பிய பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தமிழர்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதுபோல் இருந்தது.

போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டதாக தனது அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் போரினால் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழி பிறந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தது இந்திய அரசு சிறிலங்கா நடத்தும் போருக்கு ஆதரவாக நிற்கிறது என்பதை புலப்படுத்தியது. அதுவரை போரின் மூலம் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது என்று கூறிவந்த இந்திய மத்திய அரசு, போரினால் தீர்விற்கான வழி பிறந்திருக்கிறது என்று கூறியது.

இதுமட்டுமல்ல, சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போரினால் அப்பாவி மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பேசியபோது, போர் நடக்கும் பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் என்று எண்ணிக்கையை குறைத்துப் பேசியவர் பிரணாப் முகர்ஜி.

உண்மையில் போர் நடந்த பகுதியில் அப்போது இருந்த மக்களின் எண்ணிக்கை 4 இலட்சம் பேர் ஆகும். பிரணாப் எண்ணிக்கையை குறைத்துக் கூறியதை அனைத்து உறுப்பினர்களும் கடுமையாக கண்டித்தனர். அப்போது பதிலளித்த பிரணாப், சிறிலங்கா அரசு கொடுத்த புள்ளி விவரத்தையே தான் சொன்னதாக திமிருடன் பதில் கூறினார்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், சிறிலங்கா அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு பின்னால் நின்று செயல்பட்ட முக்கிய சூத்ரதாரிகளில் ஒருவரான பிரணாப் முகர்ஜியை இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

இவருக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பாராளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தால் அது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழித்தலுக்கு ஆளான நம் சொந்தங்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வெளியேற்றி கதவை பூட்டி இருக்கிறார்கள்! கலைஞர் கண்டனம்!

திமுக தலைவர் கலைஞர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

34 இடங்களில் மோனோ ரயில் நிலையங்கள் என்று ஒரு நாளேட்டிலும், 20 இடங்களில் என்று மற்றொரு நாளேட்டிலும் செய்தி வெளிவந்திருக்கிறது. மோனோ ரயில் திட்டத்தைவிட மெட்ரோ ரயில் திட்டம்தான் சிறந்தது என்று ஆதாரங்களோடு மத்திய அதிகாரி ஸ்ரீதரன் போன்றவர்கள் அறிக்கை விடுத்தும் கூட, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ஏற்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் வழக்கமான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு திடீரென கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அதில் அனுமதி மறுக்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்ட பிறகும்கூட, நூலக அதிகாரிகள் அரங்கத்திற்குள் வந்திருந்தவர்களை வெளியேற்றி கதவை பூட்டி இருக்கிறார்கள்.

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவு அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. வெப்பம் தாங்காமல் தாவரங்கள் மாண்டு மடியும் சித்திரைத்திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். மலேசியத் தமிழ் இலக்கிய கழகம் இந்த உண்மையை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழரை மிரட்டுகிறது இராணுவம்

தமிழரை மிரட்டுகிறது இராணுவம்; இலங்கை வந்த இந்தியக் குழு பரபரப்புப் பேட்டி

வன்னி முகாம்களில் தமிழர்களை நாங்கள் சந்தித்துப் பேசினோம். தமிழர்களின் நிலை இன்னும் மிக மோசமாகத்தான் உள்ளது. இலங்கையில் நடக்கும் கொடுமைகளைச் சொல்லத் தமிழர்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இலங்கை இராணுவம் அவர்களை மிரட்டி வைத்துள்ளது என இலங்கை வந்து திரும்பிய இந்தியக் குழு சென்னையில் தெரிவித்துள்ளது.

போவோர்ட் பிளாக் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் முகர்ஜி தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன், போவோர்ட் பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் ஆகியோர் வன்னிப் பிரதேசத்துக்குப் பயண்ம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர். அங்கிருந்து நேற்றுக் காலை விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

அவர்கள் நேற்றுக் கூட்டாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதன்போது அவர்கள் தெரிவித்ததாவது:

இலங்கையில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையைக் கண்டறிய இலங்கை சென்றோம். அங்கு 3 நாள் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டோம்.

அங்குள்ள முகாம்களில் தமிழர்களைச் சந்தித்து பேசினோம். தமிழர்களின் நிலை இன்னும் மிக மோசமாகதான் உள்ளது. இலங்கையில் நடக்கும் கொடுமைகளைச் சொல்ல தமிழர்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இலங்கை இராணுவம் அவர்களை மிரட்டி வைத்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் புனர்வாழ்வுக்கு இந்திய அரசு ஆயிரம் கோடி ரூபா கொடுத்துள்ளது. அந்தப் பணத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளதைத் தவிர, மற்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. தமிழர்கள் வீடு கட்ட தலா 3 லட்சம் ரூபா கொடுக்கின்றனர். அது போதுமானதாக இல்லை.

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 89 ஆயிரம் பெண்கள் தங்களது கணவர் இறந்து விட்டாரா, அவர்கள் கதி என்னவென்று தெரியாமல் தவிக்கின்றனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினோம்.

புத்தமத வழிபாட்டுக்கு மட்டும் முக்கியம் அளிக்கின்றனர். தமிழர்கள் அவதிப்படும் கொடுமைகளைப் பற்றி புகைப்படம், வீடியோ எடுத்துள்ளோம். நாங்கள் சேகரித்த ஆவணங்களை வைத்து போவோர்ட் பிளாக் செயற்குழுவில் விவாதித்து அறிக்கை தயாரிக்கப்படும். அந்த அறிக்கையை இந்திய அரசிடம் வழங்குவோம். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்புவோம்.என்றனர்.

கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினி!

Rajini Calls On Karunanidhi

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (16.06.2012) காலை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளின்போது நான் பெங்களூரில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். இன்று காலை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு," என்றார்.

கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி பெங்களூரிலிருந்து தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரம் எப்படி இருக்கும் தெரியுமா? - கமல் பேட்டி

If Rajini Me Coming Together A Film Kamal

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், அந்தப் படத்தின் வியாபாரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் விரைவில் வெளிவர உள்ளது. படத்தின் வெள்ளோட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த மகிழ்ச்சியில் கமல் அளித்துள்ள பேட்டி:

"நான் ஒவ்வொரு படத்தில் பணியாற்றும் போதும் அதை கடைசி படமாகத்தான் பார்ப்பேன். அடுத்த படத்தை செய்வோம் என்று யாருக்கு தெரியும். சினிமாவில் எதுவும் நடக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு ஒவ்வொரு படமும் கடைசி படமாக இல்லை. நடிகர்களுக்கு மட்டுமே கடைசி படம் என்ற நிலை உள்ளது.

நான் ஒவ்வொரு படத்தையும் நல்ல படமாக கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகவே உழைக்கிறேன். 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்கு கூட அதே அளவு பிரச்சினைகள் சுற்றி இருக்கின்றன.

ஐம்பது வயதை தாண்டியும் நான் அழகாக இருப்பதாக கூறுகின்றனர். அதற்காக என் தந்தைக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அழகாக இருப்பதற்கு நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை. அப்படி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் என் தோற்றத்திற்காக அதையும் செய்யத் தயங்க மாட்டேன்!

விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியை படமாக்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அபபடியொரு சிந்தனை பரிசீலனையில் உள்ளது உண்மைதான்.

நான் படங்களை குறைத்து கொண்டதற்கு நல்ல தயாரிப்பாளர்கள் இல்லாததே காரணம். பணமும் மரியாதையும் ஒருவரை தகுதியான தயாரிப்பாளராக ஆக்கி விடாது. தயாரிப்பு என்பது கூட ஒரு டெக்னிக்தான். நடிப்பை போல படங்களை தயாரிக்கவும் திறமை வேண்டும்.

200 படங்களில் நான் நடித்து இருக்கிறேன் என்றால் அதில் 100 தயாரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள். சில தயாரிப்பாளர்கள் படத்தையே கெடுத்து உள்ளனர். மோசமான தயாரிப்பாளர்களைச் சந்திக்கும்போது நல்ல தயாரிப்பாளர்களையும் பார்க்கிறேன்.

ரஜினியும் நானும்...

ரஜினியும், நானும் இணைந்து நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நாங்கள் சேர்ந்து நடித்தால் வியாபாரத்தில் அந்த படத்துக்கு வானமே எல்லையாக இருக்கும். ஆனால் எங்கள் இருவருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சம்பளம் போக படத்தை எடுப்பவர்களுக்கு என்ன மிச்சம் இருக்கும்?!"

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு ஆலேசானை தரும் கலைஞர் செய்திகள்

A One Stop Solution The Woes Aspiring Ias Students

ஐ.ஏ.எஸ் ஆவது என்பது இன்றைக்கு பெரும்பாலோனோரின் கனவாக, லட்சியமாக இருக்கிறது. இந்த லட்சிய வழியை அடைவதற்கான பாதை தெரியாமல் இருப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்காக `கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியில், நாள்தோறும் மாலை 4.30 மணிக்கு "ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி?'' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

கணேஷ் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் கணேச சுப்பிரமணியன் இந்த நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று ஐ.ஏ.எஸ். ஆவதற்கான வழிமுறைகள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். நேயர்களின் சந்தேகங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் பதில் அளிக்கிறார்.

யு.பி.எஸ்.சி., தேர்வு முறைகள், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் விதம், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பாடங்கள், தயார்படுத்திக் கொள்ள வேண்டிய முறைகள், வெற்றிக்கான அடிப்படைகள் போன்றவை குறித்த தகவல்களை இந்நிகழ்ச்சியில் கணேச சுப்பிரமணியன் வழங்குகிறார்.

தற்போது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் பேர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தகுதி, திறமை வாய்ந்த, லட்சக்கணக்கானோர் சரியான வழி தெரியாமல் மத்திய அரசுத் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில்லை. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதாக கணேஷ் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் - கன்னடத்தில் 'சந்திரா'... ஸ்ரேயாவுக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராம்!

Shriya Ganesh Venkatram Chandra

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரேயா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா. தமிழில் இவர் கடைசியாக ஜீவா உடன் 'ரௌத்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

சீயான் விக்ரமின் 'ராஜபாட்டை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்தார். அதன் பிறகு தமிழில் இவருக்குப் படங்கள் இல்லை. மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது மீண்டும் தமிழில் களமிறங்குகிறார் ஸ்ரேயா. அந்தப் படம் சந்திரா. கன்னடத்திலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகிறது.

இப்படத்தில் ஸ்ரேயாவிற்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். இவர் 'அபியும் நானும்' படத்தில் திரிஷாவின் காதலனாக நடித்தவர். கமலின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். 'பனித்துளி' படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் இவர் மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். கன்னட நடிகர் பிரேம் இப்படத்தின் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். ஒரு அரசபரம்பரையின் கடைசி இளவரசியாக ஸ்ரேயா இப்படத்தில் நடிக்கிறார்.

வேணாம் வேணாம்... எனக்கு கோயில் வேணாம்! - ஹன்ஸிகா

Hansika Denies Permission Build Her Temple   

குஷ்புவுக்கும் நமீதாவுக்கும் கோயில் கட்டி பாப்புலர் ஆன தமிழ் ரசிகமகாஜனங்கள், சின்ன குஷ்பு என்ற அடைமொழியுடன் வலம் வரும் ஹன்ஸிகாவுக்கும் கோயில் கட்டத் தயாராக நிற்கிறார்கள்.

இடமெல்லாம் பார்த்து, செங்கல், கருங்கல்லுக்குக் கூட ஆர்டர் கொடுத்துவிட்டதாக செய்தி வந்த நிலையில், 'வேணாம்... வேணாம் எனக்கு கோயில் கட்ட வேணாம்' என தெரிவித்துள்ளார் அம்மணி!

ஹன்சிகாவுக்கு மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள். இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கட்டுமானத்துக்கான செங்கல், ஜல்லி வாங்குவதற்காக அப்பகுதியில் ரசிகர்கள் நன்கொடை வசூலித்து வருகிறார்கள்.

செப்டம்பரில் கோவில் கட்டிட வேலைகள் துவங்கும் என்றும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் ஹன்சிகா கோவில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்கின்றனர். பூஜை செய்ய பூசாரியும் நியமிக்கப்பட உள்ளார்.

இது குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை அணுகி கோவில் கட்ட அனுமதி கேட்டனர். எனக்கு கோவில் கட்டப்போவதாக அவர்கள் சொன்னதும் என் மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொண்டேன்.

ஆனால் மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்பிடுவது தவறானது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு ரசிகர்கள் கோவில் கட்டக்கூடாது. அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன்," என்றார்.

புலிகளுக்கு எதிரான போர் இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது!

உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2009 ஏப்ரல் 19ம் நாள் இரட்டைவாய்க்கால் பகுதியை இலங்கைப் படையினர் கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது என இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஏப்ரல் 19ம் நாளே முடிந்து விட்டதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தெரிவித்தார்.

“போர்முறை பற்றி எதுவும் தெரியாதவர்கள் தான் போரைப் பற்றி முட்டாள்தனமாக பேசினார்கள். உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2009 ஏப்ரல் 19ம் நாள் இரட்டைவாய்க்கால் பகுதியைக் சிறிலங்கா படையினர் கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது.

அதற்குப் பின்னர் மே 19ம் நாள் வரை கேணல்கள் மற்றும் லெப். கேணல்கள் தலைமையில் நடந்தது தேடுதல் நடவடிக்கைகள் தான். போரின் இறுதி வாரத்தில் சீனாவுக்கு நான் மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தை தவறு என்று கூறுவோருக்கு, விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அதற்கு முன்னரே தோற்கடிக்கப்பட்டு விட்டது என்பது தெரியாது.

நான் நாட்டை விட்டுச் செல்ல முன்னர், விடுதலைப் புலிகளின் போராளிகள் தப்பி ஓடிக் கொண்டிருந்தனர். இறுதிக்கட்டம் கேணல்கள் மற்றும் லெப்.கேணல்களின் கையில் தான் இருந்தது. போர் நடந்து கொண்டிருந்ததால், சீனாவுக்கான பயணத்தை நான் ஐந்து முறை பிற்போட்டிருந்தேன்.

எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னர் தான் நான் சீனாவுக்குப் பயணமானேன். 2009 மே 11 தொடக்கம் 17வரை நான் சீனாவில் இருந்தபோது கூட, கொழும்பிலுள்ள எனது அதிகாரிகளுடன ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் தொடர்பு கொண்டு முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொண்டிருந்தேன்.

அந்தக் கட்டத்தில், போர் வலயத்தில் சிக்கியிருந்த 85 ஆயிரம் மக்களை எப்படிப் பாதுகாப்பாக வெளியேற்றலாம் என்பதே எனது கரிசனையாக இருந்தது. முப்பதாண்டுகளாக இழுபட்டு வந்த ஆயுதமோதலை நான் இரண்டு ஆண்டுகள் 9 மாதங்களில் முடித்து வைத்தேன்.

பெரும்பாலான மக்கள், பிரபாகரனும் அவரது 100 வரையிலான போராளிகளும் ஓடிய இறுதிநாட்களையே உறுதியான வெற்றியாக பேசுகின்றனர். நந்திக்கடல் பகுதியில் இறுதிச்சமர் மே 17ம் நாள் பிற்பகல் 2 மணியுடன் முடிந்து விட்டது. அன்று காலை 10 மணியளவில் 30 விடுதலைப் புலிகள் வரை கொல்லப்பட்டனர்.

19ம் நாள் அவர்களின் உடல்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலுடன் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டன“ என்று சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

புலிகளுக்கு எதிரான போர் இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது!

உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2009 ஏப்ரல் 19ம் நாள் இரட்டைவாய்க்கால் பகுதியை இலங்கைப் படையினர் கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது என இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஏப்ரல் 19ம் நாளே முடிந்து விட்டதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தெரிவித்தார்.

“போர்முறை பற்றி எதுவும் தெரியாதவர்கள் தான் போரைப் பற்றி முட்டாள்தனமாக பேசினார்கள். உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2009 ஏப்ரல் 19ம் நாள் இரட்டைவாய்க்கால் பகுதியைக் சிறிலங்கா படையினர் கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது.

அதற்குப் பின்னர் மே 19ம் நாள் வரை கேணல்கள் மற்றும் லெப். கேணல்கள் தலைமையில் நடந்தது தேடுதல் நடவடிக்கைகள் தான். போரின் இறுதி வாரத்தில் சீனாவுக்கு நான் மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தை தவறு என்று கூறுவோருக்கு, விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அதற்கு முன்னரே தோற்கடிக்கப்பட்டு விட்டது என்பது தெரியாது.

நான் நாட்டை விட்டுச் செல்ல முன்னர், விடுதலைப் புலிகளின் போராளிகள் தப்பி ஓடிக் கொண்டிருந்தனர். இறுதிக்கட்டம் கேணல்கள் மற்றும் லெப்.கேணல்களின் கையில் தான் இருந்தது. போர் நடந்து கொண்டிருந்ததால், சீனாவுக்கான பயணத்தை நான் ஐந்து முறை பிற்போட்டிருந்தேன்.

எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னர் தான் நான் சீனாவுக்குப் பயணமானேன். 2009 மே 11 தொடக்கம் 17வரை நான் சீனாவில் இருந்தபோது கூட, கொழும்பிலுள்ள எனது அதிகாரிகளுடன ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் தொடர்பு கொண்டு முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொண்டிருந்தேன்.

அந்தக் கட்டத்தில், போர் வலயத்தில் சிக்கியிருந்த 85 ஆயிரம் மக்களை எப்படிப் பாதுகாப்பாக வெளியேற்றலாம் என்பதே எனது கரிசனையாக இருந்தது. முப்பதாண்டுகளாக இழுபட்டு வந்த ஆயுதமோதலை நான் இரண்டு ஆண்டுகள் 9 மாதங்களில் முடித்து வைத்தேன்.

பெரும்பாலான மக்கள், பிரபாகரனும் அவரது 100 வரையிலான போராளிகளும் ஓடிய இறுதிநாட்களையே உறுதியான வெற்றியாக பேசுகின்றனர். நந்திக்கடல் பகுதியில் இறுதிச்சமர் மே 17ம் நாள் பிற்பகல் 2 மணியுடன் முடிந்து விட்டது. அன்று காலை 10 மணியளவில் 30 விடுதலைப் புலிகள் வரை கொல்லப்பட்டனர்.

19ம் நாள் அவர்களின் உடல்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலுடன் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டன“ என்று சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

ஆர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த நயன்தாரா!

Nayan Be Paired With Arya   

'நயனும் ஆர்யாவும் நிஜ வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப நெருக்கம்' என்று கோடம்பாக்கமே கண்சிமிட்டிக் கொண்டிருக்கையில், அதை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் திரையில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மவுசு குறையாமல் இருப்பவர் நயன்தாராதான்.

இப்போதும் அவர்தான் நம்பர் ஒன். கையில் மெகா பட்ஜெட் படங்கள். தெலுங்கில், ராணா, கோபிசந்த் உள்ளிட்டோருடன் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் ஏற்கெனவே அஜீத்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் அவர் நடிக்கும் இரண்டாவது படம்தான் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. இவை தவிர, மேலும் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறதாம்.

நயன்தாராவும் ஆர்யாவும் ஏற்கெனவே பாஸ் என்கிற பாஸ்கரனில் நடித்தனர். அந்தப் படம் பட்டையைக் கிளப்பியது வசூலில். நிஜ வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இப்போது நட்பு என்ற நிலையைத் தாண்டி, அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டதாக மீடியா கிசுகிசுக்கிறது. இந்தப் புதுப்பட அறிவிப்பு அந்த கிசுகிசு நெருப்புக்கு பெட்ரோல் ஊற்றியுள்ளது!!

விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி பொறிமுறைகளைப் பார்த்து வியந்த கண்ணிவெடியகற்றும் பிரிவினர்.


முகமாலை முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடியகற்றலுக்கு மட்டும் 2வருடங்கள் தேவை எனத் தெரிவித்துள்ள மனிதநேய கண்ணிவெடியகற்றும் நிறுவனமொன்று, அதியுச்ச யுத்தம் நடைபெற்ற பகுதியென்பதால், இந்தப் பகுதியில் கண்ணிவெடியகற்றல் மிகவும் கடினமாக இருப்பதாகவும் முழுமையாக கண்ணிவெடியகற்ற 7வருடங்கள் தேவை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

குறித்த நிறுவனமே நாகர்கோவில் பகுதியில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளை முடித்துள்ள நிலையில் அடுத்தபடியாக முகமாலை முன்னரங்கப் பகுதியில் தனது பணியினை ஆரம்பித்திருக்கின்றது. இதேவேளை ஏற்கனவே இராணுவத்தினரின் நிலைகளில் கண்ணிவெடியகற்றல் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது விடுதலபை;புலிகளின் நிலைகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையிலேயே கண்ணிவெடியகற்றல் மிகவும் கடினமானதாக இருப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் மிகவும் நுண்ணியமாகவும், அபாகரமான முறையிலும் கண்ணிவெடி பொறிகளை அமைத்திருக்கின்றனர். குறிப்பாக கவச எதிர்ப்பு கண்ணிவெடிகளை அதிகம் பொருத்தியுள்ளதுடன், பொறிவெடிகளை பரவலாகவும் பொருத்தியுள்ளனர். எனவே இது கண்ணிவெடியகற்றலுக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்தக் காரணத்தினாலேயே யுத்தம் நடைபெற்ற ஏனைய பகுதிகளைவிடவும், குறுகிய நில அளவுள்ள முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றலுக்கு மிக நீண்டகாலம் தேவைப்படும் எனஅவர்கள் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி பொறிமுறைகளைப் பார்த்து வியந்த கண்ணிவெடியகற்றும் பிரிவினர்.


முகமாலை முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடியகற்றலுக்கு மட்டும் 2வருடங்கள் தேவை எனத் தெரிவித்துள்ள மனிதநேய கண்ணிவெடியகற்றும் நிறுவனமொன்று, அதியுச்ச யுத்தம் நடைபெற்ற பகுதியென்பதால், இந்தப் பகுதியில் கண்ணிவெடியகற்றல் மிகவும் கடினமாக இருப்பதாகவும் முழுமையாக கண்ணிவெடியகற்ற 7வருடங்கள் தேவை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

குறித்த நிறுவனமே நாகர்கோவில் பகுதியில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளை முடித்துள்ள நிலையில் அடுத்தபடியாக முகமாலை முன்னரங்கப் பகுதியில் தனது பணியினை ஆரம்பித்திருக்கின்றது. இதேவேளை ஏற்கனவே இராணுவத்தினரின் நிலைகளில் கண்ணிவெடியகற்றல் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது விடுதலபை;புலிகளின் நிலைகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையிலேயே கண்ணிவெடியகற்றல் மிகவும் கடினமானதாக இருப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் மிகவும் நுண்ணியமாகவும், அபாகரமான முறையிலும் கண்ணிவெடி பொறிகளை அமைத்திருக்கின்றனர். குறிப்பாக கவச எதிர்ப்பு கண்ணிவெடிகளை அதிகம் பொருத்தியுள்ளதுடன், பொறிவெடிகளை பரவலாகவும் பொருத்தியுள்ளனர். எனவே இது கண்ணிவெடியகற்றலுக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்தக் காரணத்தினாலேயே யுத்தம் நடைபெற்ற ஏனைய பகுதிகளைவிடவும், குறுகிய நில அளவுள்ள முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றலுக்கு மிக நீண்டகாலம் தேவைப்படும் எனஅவர்கள் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.

Friday 15 June 2012

பாலிவுட் நடிகைகளைவிட தென்னிந்திய நடிகைகளுக்கு மது-சிகரெட் பழக்கம் அதிகம்' - சனாக்கான்

Sana Khan Takes Dig On South Actresses   

"பாலிவுட் நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகளுக்கு மது-சிகரெட் பழக்கம் அதிகமாக இருக்கிறது'' என்கிறார் நடிகை சனா.

'சிலம்பாட்டம்', 'தம்பிக்கு எந்த ஊரு', 'ஆயிரம் விளக்கு', 'பயணம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சனாக்கான்.

ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அவர் நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "நான் மும்பை பெண்ணாக இருந்தாலும், எனக்கு ஒரு பாய் பிரண்ட் கூட கிடையாது. தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறேன். வருடத்தில் 30 நாட்கள் விரதம் இருக்கிறேன். எனக்கு சிகரெட் பழக்கம் கிடையாது. குடிபழக்கமும் இல்லை.

பொதுவாகவே இந்தி நடிகைகளிடம்தான் சிகரெட்-மது பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். இந்தி நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகளுக்கு சிகரெட், மது பழக்கம் அதிகமாக இருக்கிறது. குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே போவதை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் வெளியில் தெரிவதில்லை. மறைத்துவிடுகிறார்கள்.

மும்பைப் பெண், சென்னைப் பெண் என்றெல்லாம் எதுவும் கிடையாது. எல்லாம் நாம் வளரும் விதம், சூழ்நிலைக்கு பலியாகாமல் இருப்பதைப் பொருத்தே அமைகிறது," என்றார்.

அலட்டல் இல்லாத ஆட்டோ ராணி கல்யாணி!

Beautiful Character Actress Becomes Auto Driver

"தென்​றல்' தொட​ரில் ஆட்டோ டிரைவர் கல்யாணியாக வந்து ரசி​கர்​கள் மன​தில் இடம் பிடித்தவர் சுசை​னி. மைனாவில் வில்லியாக நடித்து அதிரவைத்தார். சீரியலிலும் சினிமாவிலும் நடிக்கும் ஆசை எப்படி வந்தது என்பது பற்றி அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.

நான் வளர்ந்​தது,​​ படித்​த​தெல்​லாம் பெங்​க​ளு​ரில்.​ நான் நடிப்​ப​தற்கு எங்கள் வீட்டினரை சம்​ம​திக்க வைத்​தது ரொம்ப பெரிய கதை.​ ​டிப்ளமோ சாப்ட்​வேர் படிச்​சேன்.​ இறுதி ஆண்டு படிக்​கும் போது​தான் சென்​னைக்கு வந்​தேன்.​ ​நான் சென்​னைக்கு படிக்க வந்த போது ஜெயா​டி​வி​யில் இருந்து எங்க கல்​லூ​ரி​யில் நிகழ்ச்சி தொகுப்​பா​ளினி தேர்வு செய்​தார்​கள்.​ அதில் தேர்வு ஆனேன்.​

அம்மா, ​​ அண்​ணன்,​​ நான் மட்​டும்​தான்.​ அப்பா இறந்​து​விட்​டார்.​ அம்மா கல்​லூரி பேரா​சி​ரி​யை​யாக இருந்​த​வங்க.​ இப்போ வேலையை விட்​டு​விட்டு வீட்​டில்​தான் இருக்​கி​றார்​.​ அண்​ணன் ஸ்கி​ரிப்ட் ரைட்​டர்.​

படிப்​பில் சாதிக்க வேண்​டும் என்று நினைக்​கிற குடும்​பம்.​ அத​னால அம்மா கண்​டிப்​பாக டி.வியில தோன்ற ஒத்​துக்க மாட்​டாங்க,​​ என்ன செய்​வது என்று யோசித்​தேன்.​ ஆனால் என்​னோட தோழி​கள் எல்​லாம் கிடைத்த வாய்ப்பை நழு​வ​விட வேண்​டாம் என்று சொன்​னார்​கள்.​ அதனால​ அம்மா​வுக்​குத் தெரி​யாம ஜெயாடி.வி.யில காலைல வரும் "தக​வல்.காம்' என்ற நிகழ்ச்​சி​யைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.​

ஒரு​நாள் அம்மா டி.வியில் என்​னைப் பார்த்​து​விட்டு ரொம்ப சத்​தம் போட்​டார்​கள்.​ பிறகு அம்​மா​வி​டம் பேசி ஒரு வழியா சம்​ம​தம் வாங்​கி​விட்​டேன்.​ அம்மா எப்​ப​வுமே ரொம்ப பிராக்​டிக்​கலா யோசிப்​ப​வங்க.​

எப்​ப​வுமே ரொம்ப என்​கரேஜ் செய்​வாங்க.​ அத​னால என்​னோட ஆசையைப் புரிந்து கொண்டு சரின்னு சொல்​லிட்​டாங்க.​ ஆனா தோற்றுப் போய் மட்​டும் வரக் கூடாது என்று.

பிரம்மா சார் முல​மா​கத்​தான் முதன் முத​லில் தொலைக்​காட்​சிக்கு வந்​தேன்.​ விஜய் டிவி​யில் வி.ஜே.வாக நிகழ்ச்​சி​கள் தொகுத்து வழங்கி கொண்​டி​ருந்​தேன்.​ அப்போ "தென்​றல்' தொட​ரில் என் கேரக்​ட​ருக்கு நடிக்க ஒப்​பந்​த​மாகி இருந்​த​வங்க வரா​த​தால்,​​ நான் அந்த கேரக்​ட​ருக்கு பொருத்தமாக இருப்​ப​தாக என்​னைக் கேட்​டாங்க.​ ​

முத​லில் தயக்​க​மா​கத்​தான் இருந்​தது.​ என்​னால அந்த கேரக்​டர் செய்ய முடி​யுமா என்று நினைத்​தேன்.​ இதற்காக நிஜ​மா​கவே ஆட்டோ ஓட்ட கற்​றுக் கொண்​டேன்.​ ஆட்டோ ஓட்டு​வது அவ்​வ​ளவு ஈசி​யான விஷ​ய​மல்ல.​ ​அவங்க பாடி லாங்​வேஜ்,​​ அந்​தக் குரல் எல்​லாம் ரொம்ப கஷ்டப்​பட்டு ஹோம் ஒர்க் செய்ய வேண்​டி​யி​ருந்​தது.​ இருந்தாலும் ஆட்டோ ஓட்​டு​வது ரொம்ப பிடிச்​சி​ருக்கு.​ தொடர் இல்​லைன்னா கூட கைவ​சம் ஒரு தொழில் இருக்​குங்க ​(சிரிக்​கி​றார்)​.​

மைனா திரைப்படத்தில் வில்​லத்​த​ன​மான கேரக்​டர்​கூட யோசிக்​கா​மல் செய்​து​விட்​டேன்.​ ஆனால் ஆட்​டோ​கா​ரி​யாக மேக்​கப்பே இல்​லாம நடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.​​ வெளி​யில் எங்​கா​வது சென்​றால் ரசி​கர் தெரிந்து கொண்டு ஆட்டோ வருமா என்று கேட்​கி​றார்​கள்.​ அதுவே எனக்கு கிடைத்த வெற்​றி​யாக நினைக்​கி​றேன்.​ ​

தென்றலின் வெற்றியைத் தொடர்ந்து வேட்டை, தியாகம், மூன்று முகம், உயிரின் நிறம் ஊதா, போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

பெரிய திரையில் "மைனா", படத்தில் வில்லி கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதுபோன்ற பேசப்படும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி சிரிக்கிறார் ஆட்டோ ராணி கல்யாணி.

அதிகம் சம்பாதிக்கும் நெடுந்தொடர் அப்பாக்கள்?

Tv Dads Real Life Salaries Nearly 200 Dollar

தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் அப்பா நடிகர்கள் அதிக அளவில் சம்பாதிப்பதாக சேலரி டாட் காம் என்ற இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் நடித்து அவர்கள் பிரபலமடைந்துள்ளதால் ரியல் எஸ்டேட் அதிபராகவும், மருத்துவராகவும், வக்கீலாகவும் தங்களில் சொந்த தொழில்களில் அதிக அளவில் பணம் சம்பாதிக்க முடிவதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

அப்பா கதாபாத்திரம் என்றாலே சினிமாக்களில் சாதாரணமாக ஒரு சீனுக்கு வந்து போவார்கள். ஆனால் நெடுந்தொடர்களில் வரும் அப்பாக்கள் அப்படி இல்லை. இரண்டு திருமணம் செய்திருப்பார்கள். ஊருக்கு நாட்டாமையாக இருப்பார்கள். இல்லை என்றால் நடுத்தர குடும்பத்தில் மகளை படிக்க வைக்க கஷ்டப்படும் அப்பாவியாக இருப்பார்கள். இதுதான் சீரியல் அப்பாக்களின் நிலை.

அப்பா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கூறாமல் எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக இதுபோன்ற கதாபாத்திரங்களை நெடுந்தொடர்களில் உருவாக்கின்றனவோ என்னவே?

அதுவும் இரண்டு மனைவிகளை திருமணம் செய்து கொண்டுள்ள அப்பாக்கள் படும் பாடு இருக்க்கிறதே அப்பப்பா ! அதுவும் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகளிடமும், இரண்டாம் மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளிடமும் சிக்கிக்கொண்டு அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தங்கம் தொடரில் விஜயகுமார் பரவாயில்லை அந்த கதாபாத்திரம் அப்படியே அவரின் நிஜ கதையை பிரதிபலிப்பது போல இருப்பதால் எப்படியோ சமாளித்து வருகிறார்.

ஆனால் முந்தானை முடிச்சு, தென்றல் தொடர்களில் வரும் அப்பாக்கள்தான் பாவம். அவர்களின் அந்தோ பரிதாப நிலை அப்படியே அவர்களின் முகத்தில் எதிரொலிக்கிறது. இதை எல்லாம் விட இரண்டு மனைவிகளிடமும் சிக்கிக்கொண்டு தவிக்கும் அப்பாக்கள்தான் அந்தோ பரிதாபம். வளர்ந்த குழந்தைகளை வீட்டிற்குள் வைத்துக்கொண்டு இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டிற்குள் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துகிறாராம் ஒருவர். அதை நாமும் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து பார்க்க வேண்டுமாம்.

அப்பா என்றாலே அம்மாவின் அடிமை என்று சினிமாக்களின் சித்தரித்தனர். கடைசி ஒரு சீனில் அப்பாவிற்கு வீரம் வந்து அம்மாவை ஓங்கி அறைவார். அதற்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள். ஆனால் சீரியலில் அப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது இரண்டு மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் அப்பாக்கள்தான் அதிகம் உள்ளனர்.

ஒரு சில அப்பாக்கள்தான் பரம்பரை நடிகர்கள் பிற அப்பாக்கள் நடிகர்களாக மட்டுமல்லாது வக்கீலாகவோ, டாக்டராகவோ, ரியல் எஸ்டேட் அதிபராகவோ இருப்பார்கள். தொலைக்காட்சித் தொடர்களில் கிடைக்கும் புகழைவைத்து ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், மட்டுமல்லாது தங்களில் சொந்த துறையிலும் அதிகம் சம்பாதிக்கின்றனர் என்று சேலரி டாட் காம் இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தந்தையர்களை போற்றும் இந்த தந்தையர் தினத்திலாவது தந்தையரை மதிக்கும் வகையிலான தொடர்களை எடுக்கா விட்டாலும் தந்தையர்களை அவமானப்படுத்தும் விதமான தொடர்களை எடுக்க வேண்டாத் தந்தை நடிகர்கள் கதறுவது இயக்குநர்களின் காதில் கேட்குமா?

உலகளாவிய ரீதியில் தமிழீழ அரசாங்கத்தின் சர்வமத வழிபாட்டு ஒன்றுகூடல்கள் ஆரம்பம்!

தமிழீழத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்க முனைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, சர்வமத வழிபாட்டு விழிப்புணர்வுப் போராட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து நாளை, நாளை மறுதினம், அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, தென்னாபிரிக்கா, தமிழகம், அவுஸ்திரேலியா என தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இந்நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும் வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்கள பௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும் அத்துமீறல்களையும் கவனத்தில் கொண்டு பிரார்த்தனையுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வாக இது அமைந்துள்ளது.

இந்த சர்வமதப் பிரார்த்தனையில் எம்மவர்கள் எல்லோரும் பங்கு கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர்களின் ஒருவரான கலாநிதி ராம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசுக்கு பாராட்டு: இந்து மக்கள் முன்னணி

மயிலாடுதுறையில் இந்து மக்கள் முன்னணி தலைவர் பண்ணை சொக்கலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரை ஆதீனத்தின் 293வது பட்டமாக நித்யானந்தாவை நியமிக்க கூடாது. அதனை திரும்ப பெற வேண்டும் என்று 13 ஆதீனங்கள் தீர்மானம் போட்டு அனுப்பிய போது ஆதீனங்களை நித்யானந்தா அவதூறாக பேசி வந்தார்.

ஆதீனமாக இருக்க தகுதியற்ற, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியவர் என்ற வகையிலும், செய்தியாளர்களை தாக்கிய வகையிலும் கர்நாடக அரசு நித்யானந்தாவை கைது செய்தது.

மேலும் அவரது ஆசிரமத்தை கைப்பற்றுவதற்காக தொடர்ந்து சோதனை செய்தும் அங்கிருந்த பொருட்களை கைப்பற்றியும் வருகிறது. நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் நுழையக் கூடாது என்று நீதி மன்றமும் தற்போது உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசை இந்து மக்கள் முன்னணி பாராட்டுகிறது. நித்யானந்தா கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது இளைய மடாதிபதி பட்டத்தை ரத்து செய்து மதுரை மடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இளைய ஆதீனம் தவறு செய்தார் அவரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு முன் உதாரணம் உண்டு. ஏற்கனவே திருவாவடுதுறையில் இளைய ஆதீனமாக இருந்த காசி விஸ்வநாத பண்டார் சன்னதி எனப்படும் குமரேசன் ஆதீனத்தை கொல்ல முயன்ற வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆகவே எல்லோராலும் வெறுக்கப்படும், குற்றப்பிண்ணனி உள்ளவரும் ஓழுக்கக்கேடு நிறைந்தவருமான நித்யானந்தாவை உடனடியாக இளைய மடாதிபதி பதவியிலிருந்து நீக்க வேண்டும். இனிமேலும் மதுரை ஆதீனம் மவுனமாக இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

சரியான சாட்டையடி! ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடி! விஜயகாந்த் பெருமிதம்!

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைத்துள்ளது என்றும் பணத்தைக் கொடுத்து ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்ற ஊழல் போக்கிற்கு வாக்காளர்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் சூளுரைத்து களம் இறங்கினர். இந்த சுனாமியை எதிர்த்து நமது இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் தங்களது உழைப்பின் மூலம் 30,500 (21.3%) வாக்குகள் பெற்று ஆளும் கட்சியினர்க்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

எந்த எதிர்க்கட்சியும் டெபாசிட் வாங்கக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூக்குரல் எழுப்பினார். ஆனால் புதுக்கோட்டை வாக்காள பெருமக்கள் தே.மு.தி.கவிற்கு டெபாசிட் தந்ததோடு மட்டுமல்ல, அதற்கு மேலாக ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடிதான் இந்த தேர்தல்.

பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை உயர்த்தி விட்டு, பணத்தை அள்ளிக் கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்ற ஊழல் போக்கிற்கு 30,500 (21.3%) வாக்காளர் பெருமக்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர்.

எனது தலைமையிலான ஆட்சி என்றும், ஓராண்டு சாதனை என்றும் மக்கள் வரிப் பணத்தில் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் தேடிக்கொண்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதை கண்டு வெறுப்புக்கும், வேதனைக்கும் ஆளாகிய புதுக்கோட்டை வாக்காளர் பெருமக்கள் இந்த தேர்தலில் இந்த விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் தன்னைத் தவிர வேறு அரசியல் தலைவரோ, தனது கட்சியை தவிர வேறு அரசியல் கட்சியோ இருக்கக் கூடாது என்ற சர்வதிகாரப் போக்கிற்கு புதுக்கோட்டை வாக்காளர் பெருமக்கள் சாவு மணி அடித்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளனர் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி! ஐ.மு.கூ. கூட்டத்தில் முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று அக்கூட்டணியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்திராகாந்தி அமைச்சரவை முதல் மன்மோகன் சிங் அமைச்சரவை பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளில் பொறுப்பு வகித்துள்ளார்

பொது வாழ்வில் நீண்ட அனுபவம் கொண்டவர் பிரணாப் முகர்ஜி. அவரை ஆதரிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரணாப் முகர்ஜிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகச் சிறந்த வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தகுதியானவர் என்றார்.

பிரணாப் முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு, பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜுடன், பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார். பிரணாப் முகர்ஜி பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

விடுதலை உறுதிமொழியினை காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு அதிகாரிகள்! உறுதியான உண்ணாநிலையில் முகாம் வாசிகள்!!

வரும் யூன் 15க்குள் 15 பேரை செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பிறகு ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 5 பேர் சிறப்பு முகாமிலிருந்து விடுதலையாவார்கள் என்று கொடுக்கப்பட்ட உறுதிமொழியை தமிழக அரசு அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதியோடு 13 நாட்களாக உண்ணாநிலையை மேற்கொண்ட 15 பேர் தங்களது உண்ணாநிலையை கைவிட்டு காத்திருந்தனர்.

ஆனால், யூன் 14ம் தேதி வரை விடுதலைக்கான உறுதி மொழியை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், யூன் 15 காலை 9 மணி முதல், கொடுத்த உறுதி மொழியினை செயல்படுத்தும் வரை, செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளில் 6 பேர் நீர் மட்டும் அருந்திய நிலையில் உண்ணாநிலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

இதற்காக முறையாக மனுவை உயர் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.

உண்ணாநிலை மேற்கொள்ள தீர்மானித்துள்ள முகாம் வாசிகளின் பெயர்கள் வருமாறு:

1. செந்தூரன் (வயது : 31)
2. மதன் (வயது : 34)
3. ஜெயதாசன் (வயது : 34)
4. சதீஷ் குமார் (வயது : 28)
5. பாராபரன் (வயது : 39)
6. செல்வராஜ் (வயது : 42)

உண்ணாநிலை இருக்கவுள்ளவர்களில் மூன்று பேர் ஏற்கனவே நோயாளிகளாக உள்ளனர். இவர்கள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

உண்ணாநிலை மேற்கொள்ள தீர்மானித்துள்ள ஆறு முகாம் வாசிகளும், தங்களுக்கு உணவுக்காக அரசு வழங்கி வரும் சம்பளப் படியையும் வாங்குவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள வெளிநாட்டவர்களிடம் உரிய ஆவணம் இல்லையென்றாலும் அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புள்ளவராக கருதப்பட்டாலும், அவ்வாறானவர்களை, நீதி மன்றம் அல்லது பிணையில் விட்டாலும் தமிழக அரசின் சிறப்பு உளவுப்பிரிவான கியூ பிரிவு காவல் துறை அதிகாரிகள், தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்று சிறப்பு முகாமினுள் அடைக்கப்படுவார்கள். சிறப்பு முகாம்கள் தமிழகத்தில், இரண்டு இடங்களில் உள்ளன.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மொத்தம் 32 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் 2009-ல் இலங்கையின் இனப்படுகொலைக்கு பயந்து தாய் தமிழகத்திற்கு உயிரை காத்துக் கொள்ள தங்களது தாய் மண்ணை விட்டு புலம்பெயர்ந்து வந்தவர்கள். மீதமுள்ள மூன்று பேர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்களில் 29 முகாம் வாசிகளில், 8 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு தற்போது வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாதவர்கள். மீதமுள்ள 21 பேருக்கு வழக்கிருந்த போதும், குற்றப் பத்திரிகை வழங்காமலும் அல்லது நீதி மன்ற விசாரணைக்கோ கொண்டும் செல்லப்படுவதில்லை.

இந்நிலையில் சென்ற முறை அரசு அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை உடனடியாக நிறைவேற்றித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு உண்ணாநிலையை மேற்கொள்ள உள்ளனர்.

உலகத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள ஊடகங்கள், தமிழீழ ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை அமைப்பினர் என எல்லோரது ஆதரவையும் நாடு அதே வேளை, இம்முறை தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உறுதியாக உண்ணாநிலையை நிறுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

மாவீரர்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்திருப்பதற்கு தடை இல்லையாம்!


இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி பிரிகேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினர் சில மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தனர் அந்த வீடுகளுக்கு குடியேறிய மக்கள் முதன் முதலில் ஆணிகளை அடித்து சில படங்களை கொழுவினார்கள்.

அந்தப் படங்கள் யாருடையவை தெரியுமா அரச படைகளுக்கு எதிராக யுத்தம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரிச்சீருடை அணிந்த மாவீரர்களின் படங்கள்.

அவர்கள் எங்களுக்கு எதிராக யுத்தம் செய்த பொழுதும் அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள் என்பதை எப்படி மறுப்பது என்று குறிப்பிட்ட பிரிகேடியர் ரேணுகா ரொவல் அதனை எந்த இராணுவ உறுப்பினரும் தடுக்க கூடாது என்று தான் உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்

துப்பாக்கியை இந்தியிலும் ரிலீஸ் செய்யும் ஏ ஆர் முருகதாஸ்!

Ar Murugadass Remake Thuppakki Bollywood   

படமே ரிலீசாகவில்லை... அதற்குள் விஜய்யின் துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக் உரிமைக்கு ஏக போட்டி.

காரணம், படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்தான்.

இவர் ஏற்கெனவே தமிழில் ஹிட்டடித்த தன் கஜினி படத்தை இந்திக்கு கொண்டு சென்றார். அமீர்கானை வைத்து, அதே தலைப்பில் இயக்கி பெரிய வெற்றிப் படமாக்கினார்.

இப்போது விஜய்யை வைத்து எடுக்கும் துப்பாக்கி, கஜினியை விட பலவகையிலும் மேம்பட்ட படைப்பாக வரும் என்று முருகதாஸ் கூறி வருகிறார்.

எனவே இந்தப் படத்தை இந்தியில் அப்படியே ரீமேக் செய்து கொடுத்துவிடுங்கள் என முருகதாஸை நிரப்பந்திக்க ஆரம்பித்துவிட்டார்களாம் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் - தயாரிப்பாளர்கள்.

இதைத் தொடர்ந்து துப்பாக்கி ரீமேக் வேலைகளையும் ஆரம்பித்துள்ளார் முருகதாஸ் என்கிறார்கள்.

விஜய் வேடத்தில் இந்தியில் நடிக்கவிருப்பவர் அக்ஷய் குமார்!

டர்ட்டி பிக்சரில் நடிக்கிறேன்.. ஆனா நான் டர்ட்டி பொண்ணு இல்ல! - சனா கான் பளிச் பேட்டி!

I M Acting Dirty Picture But I Am Not

நடிகை சனா கான்... போன மாதம் ஒரு நாள் திடீரென்று மீடியாவில் பரபரத்த பெயர். பெங்களூர் விபச்சார ரெய்டில் பிரபல சிலம்பாட்டம் பட புகழ் நடிகை சனா கான் கைது என்று செய்தி வெளியாக (ஒன்இந்தியா அல்ல), சினிமா உலகம் பதறியடித்துக் கொண்டு விசாரித்தது.

ஆனால் சிக்கியது இந்த சனா கான் அல்ல, அவர் மும்பையைச் சேர்ந்த துணை நடிகை என்பது தெளிவானது. இந்த விஷயத்தை அடுத்த நாளே பெங்களூர் சிந்தாபுரி சப் இன்ஸ்பெக்டர் ரவிஷங்கர் புகைப்பட ஆதாரத்தோடு வெளியிட்டார்.

தன் படத்தைப் போட்டு இந்த செய்தியை வெளியிட்ட மீடியாக்களுக்கெல்லாம் சனாகான் வக்கீல் நோட்டீசும் விட்டார்.

ஆனாலும் தன்னைப் பற்றிய தப்பான எண்ணம் இன்னும் இருக்குமோ என்ற சந்தேகத்தில், சென்னையில் வந்து நிருபர்களைச் சந்தித்து இன்று விளக்கமும் அளித்தார்.

அவர் கூறுகையில், "சனா கான் விபச்சார வழக்கில் கைது என்ற செய்தி வெளியான போது, நான் மும்பையில் எனது வீட்டை வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்று கூட எனக்குத் தெரியாது. கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்த போன்கால்கள். என் தோழிகள், மேனேஜர் எல்லாம் விஷயத்தைச் சொன்னார்கள்.

அன்று நான் பட்ட வலி, அவமானம் கொஞ்சமல்ல. செய்யாத தவறுக்கு தண்டனையா என மனதில் அழுதேன். அடுத்த நாளே, பெங்களூர் போலீசார் கைதான பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டாலும், மீடியா அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த செய்தி வெளியான அடுத்த நாளே நான் தெலுங்குப் படப்பிடிப்பில் பங்கேற்றேன். அன்றைக்கு அங்கிருந்தவர்கள் என்னைப் பார்த்த பார்வை... 'இவள் அப்படித்தான் இருப்பாளோ.. பணம் இருப்பதால் தப்பி வந்துவிட்டாளோ' என்பதைப் போலிருந்தது.

இந்த சோதனையான கட்டத்திலிருந்து வெளியில் வந்துவிட்டேன்," என்றார்.

சனா கான் இப்போது மலையாளத்தில் தயாராகும் தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வந்த படத்தின் தழுவல் அல்ல... மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய ஆன்டனி ஈஸ்ட்மேன் எடுக்கும் ஒரிஜினல் கதையாம். சில்க் பற்றி தனக்குத் தெரிந்த உண்மைகளை இதில் காட்சிப்படுத்துகிறாராம் ஆன்டனி.

இந்தப் படத்தில் சில்க் வேடத்தில் நடிக்கிறார் சனா கான். இதுகுறித்து அவர் அடித்த கமெண்ட்: நான் டர்ட்டி பிக்சரில் நடிக்கிறேன்... ஆனா நிஜத்தில் ட்ர்ட்டி பொண்ணு இல்லே... ரொம்ப க்ளீன்!

அப்புறம்... சனா கான் நல்லா தமிழ் பேசறார்னு நிறைய கதைகளை மீடியாவில் அடித்துவிட்டிருந்தார்கள். அந்தப் பொண்ணுக்கோ தமிழில் பேச சுட்டுப்போட்டாலும் வரவில்லை!

நடிகர் கிருஷ்ணாவை மணந்தார் சாயா சிங்!

Actress Chaya Singh Married Artist Krishna

பிரபல நடிகை சாயா சிங்குக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் திருமணம் நடந்தது.

தமிழில் திருடா திருடி படம் மூலம் பிரபலமானவர் சாயா சிங். தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி உள்பட 6 மொழிகளில் 25க்கும் அதிகமான படங்களில் நடித்தார். டிவி தொடர்களிலும் நடித்தார்.

அனந்தபுரத்து வீடு படத்தில் நடித்த போது சாயா சிங்குக்கும், அந்தப் படத்தில் நடித்த கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்தது. ஈரம், இதயத் திருடன் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் கிருஷ்ணா.

இந்த காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமண உறவாக மலந்துள்ளது.

சாயா சிங் - கிருஷ்ணா திருமணம் இருவரது பெற்றோர் சம்மதத்துடனும் சென்னையில் நடந்தது.

ரசிகர்களுக்கு திருமண விருந்தளித்த சிரஞ்சீவி, ராம்சரண்!

Chiranjeevi Ram Charan Give Mega   

ராம்சரண் - உபாசனா திருமணத்தையொட்டி, தெலுங்கு ரசிகர்களுக்கு பெரும் விருந்து தரப்பட்டது.

சிரஞ்சீவியும், அவர் மகன் ராம்சரணும் இந்த விருந்துக்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரணுக்கும் அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி பேத்தி உபாசனாவுக்கும் ஹைதராபாத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

மாலையில் அங்குள்ள நோவா நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நடந்தது.

திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் மிக விமரிசையாக நடந்தன. தெலுங்கு சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவு செலவழிக்கப்பட்டது.

50 வகை அறுசுவை உணவுகள், பல ஏக்கரில் அமைக்கப்பட்ட மணமேடை, சினிமா ஆர்ட் கலைஞர்களை வைத்து போடப்பட்ட திருமண பந்தல், மணமகன் மணமகளின் ராஜகம்பீர உடைகள் என ஒரு அரச கல்யாணமாக ஜொலித்தது.

திருமணத்துக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வருத்தமடைய கூடாது என்பதற்காக இன்று பிரத்யேக விருந்து நிகழ்ச்சிக்கு சிரஞ்சீவியும், ராம்சரணும் ஏற்பாடு செய்தனர்.

ராம்சரண் - உபாசனா திருமணம் நடந்த மொய்னாபாத் பண்ணை வீட்டில் இந்த விருந்து நடந்தது. இதில் ரசிகர்கள் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். வெளியூர்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் பஸ், வேன்களில் வந்திருந்தனர். திருமண பந்தல் அலங்காரங்கள் கலைக்கப்படாமல் இருந்ததால், ரசிகர்கள் அவற்றைப் பார்த்து ரசித்தனர்.

கடலுக்கு வருவாரா நயன்தாரா? - காத்திருக்கிறார் மணிரத்னம்!

Mani S Offer Nayan Is Big Dilemma   

கடல் படத்திலிருந்து சமந்தா விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, புதிய ஹீரோயினாக நடிகை ராதாவின் இளம் மகள் துளசி அறிமுகமாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமந்தா இல்லாத குறையைப் போக்க முன்னணி நடிகை ஒருவரை முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்து, அந்த வேடத்துக்கு நயன்தாராவை அழைத்துள்ளார்.

அநேகமாக அர்ஜுனுக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

மணிரத்னம் படத்தில் நடிக்க வந்துள்ள அழைப்பு நயன்தாராவுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், இந்தப் படத்தால் தனக்கு நன்மையா.... அல்லது கேரக்டர் ஆர்டிஸ்ட் என்ற இமேஜுக்குள் தள்ளிவிடுவார்களா என்ற யோசனையில் மூழ்கியுள்ளாராம் நயன்தாரா.

நயன்தாரா இப்போது அஜீத் ஜோடியாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கிறார். மேலும் ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கும் பேச்சு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுக்கே லாயக்கில்லாதவர் பிராச்சி தேசாய் - மகிழ்திருமேனி தாக்கு

Magizh Thirumeni Blasted Prachi

நடிகை பிராச்சி தேசாய் விவகாரம் மீண்டும் பெரிதாகிறது. தடையறத் தாக்க படத்தில் முதலில் ஒப்பந்தமாகி, பின், அட்வான்ஸைக் கூட திருப்பித் தராமல் ஓடிப்போன பிராச்சி, சினிமாவுக்கே லாயக்கில்லை என்று படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி. இப்படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். அவர் திடீரென நடிக்க மறுத்து படப்பிடிப்பில் இருந்து ஓடியதால் மம்தா மோகன்தாஸ் நாயகியானார்.

பிராச்சி தேசாய் ஓடியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக இயக்குனர் மகிழ்திருமேனி கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தடையற தாக்க படத்தில் கதாநாயகியாக நடிக்க பிராச்சி தேசாயை தேர்வு செய்ததும் அவர் வீட்டுக்கு போய் முழு கதையையும் சொன்னேன். அவருக்கு பிடித்தது.

'முந்தைய படங்கள் வயதுக்கு மீறிய கதைகளாக இருந்தன. இந்த படம் என் வயதுக்கு ஏற்ற கதை. நிச்சயம் நடிப்பேன்' என்றார். அட்வான்சும் வாங்கினார்.

சென்னையில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்தன. பிராச்சி தேசாயும் அதில் நடிக்க மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வந்தார். இங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைத்தோம். மறுநாள் காலை படப்பிடிப்பை திடீரென ரத்து செய்து விட்டு மும்பை போய்விட்டார். இதனால் அவரது காட்சிகளை படமாக்க முடியவில்லை.

அதன்பிறகு பலமுறை தொடர்பு கொண்டும் நடிக்க வரவில்லை. ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்தார். பிராச்சி தேசாய் சினிமாவுக்கு லாயக்கு இல்லாத நடிகை.

அவர் நடிக்காவிட்டால் என்ன... 'தடையற தாக்க' படம் நன்றாக ஓடுகிறது," என்றார்.

ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ செப்டம்பரில் ரிலீஸ் ?

Sridevi S Comeback Film English Vin

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீ தேவி நடித்துள்ள ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரோமோவிற்காக இங்கிலீசை தப்பும் தவறுமாக பேசி நடித்துள்ளாராம் ஸ்ரீதேவி.

போனிகபூருடன் திருமணம், குழந்தைகள் என சினிமாவிற்கு குட்பை சொன்ன நடிகை ஸ்ரீ தேவி 14 வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்'. இயக்குநர் பால்கி தயாரிக்கும் இந்த திரைப்படத்தினை அவரது மனைவி கவுரி ஷிண்டே இயக்குகிறார் இந்த திரைப்படத்தில் கதைப்படி ஸ்ரீதேவி நடுத்தர குடும்பத் தலைவியாக வருகிறார்.

அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர் போல் முதலில் நடிக்க வேண்டும். பின்னர் சந்தர்ப்ப சூழல் காரணமாக அமெரிக்கா சென்று அங்கு மொழிப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார். அவருக்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் அங்குள்ளவர்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள்.

இதையே சவாலாக ஏற்றுக்கொண்டு நாளடைவில் ஆங்கிலத்தை முறைப்படி கற்றுக்கொள்கிறார். பின்னர் ஆங்கிலம் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

இதற்காக பயிற்சியாளர் ஒருவரிடம் அமெரிக்க ஆங்கிலத்தை முறைப்படியாக கற்றாராம் ஸ்ரீதேவி.

இந்த திரைப்படம் செப்டம்பரில் ரீலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் விளம்பர காட்சிக்காக அரைகுறையாக ஆங்கிலத்தில் பேசி நடித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாராம் ஸ்ரீ தேவி.

தெலுங்குப் படத்துக்கு பின்னணி இசை அமைத்த லேகா ரத்னகுமார்!

Lekha Rathnakumar Composes Telugu Flick

விளம்பரப் படங்கள் இயக்குவதில் தனி முத்திரைப் பதித்த லேகா ரத்னகுமார், பின்னணி இசையமைப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இதுவரை தமிழ்ப் படங்களுக்கும், ஒரு ஆங்கிலப் படத்துக்கும் பின்னணி இசை அமைத்து வந்த லேகா ரத்னகுமார், தற்போது '6' என்ற தெலுங்குப் படத்துக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

'கிரியேட்டிவ் மைன்ட் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீகாந்த் லிங்கட் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். ஆர்.ஜே.சதாட்சரன், இப்படத்திற்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.

ஜெகபதிபாபுவின் 100வது படம் இது. ஹீரோயினாக காயத்ரி அய்யர் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகும் இப்படத்தில் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படத்திற்கு பின்னணி இசை தேவைப்பட்டதாகவும், அதனை தனது ஸ்டுடியோவில் வைத்து முடித்துக் கொடுத்ததாகவும் லேகா ரத்னகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "பக்கா த்ரில்லர் படம் இது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொண்ட படம் என்பது சில காட்சிகளிலேயே புரிந்தது. அதனால் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இந்தப் படத்திற்கு இசை தந்திருக்கிறேன். பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

உடனிருந்த படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் லிங்கட் கூறுகையில், "லேகா ரதனகுமாரின் பின்னணி இசை நிச்சயம் ஆடியன்ஸை மிரட்டும். நான் எடுத்தபோது பார்த்ததைவிட, பின்னணி இசையுடன் படத்தைப் பார்த்த போது ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த உணர்வு இருந்தது," என்றார்.

ஸ்ரீகாந்த் லிங்கட் இயக்கும் அடுத்த தெலுங்குப் படத்துக்கும் லேகா ரத்னகுமார்தான் இசை தருகிறார் என்பது கூடுதல் செய்தி!

யானை தந்தம் விவகாரம்: நடிகர் மோகன்லால் விரைவில் கைது?

Mohanlal Get Arrested

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானைத் தந்தங்கள் கைப்பற்றியது தொடர்பாக அவர் மீது கேரள வனத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

பிரபல மலையாள நடிகரான மோகன்லாலின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், சென்னை வீடுகளில் கடந்தாணடு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மோகன்லால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் சிக்கன. மேலும் எர்ணாகுளத்தில் உள்ள அவருடைய வீட்டில் இரண்டு யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்கள் ஆன பிறகும் மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்ட தந்தங்கள் குறித்தோ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்தோ எந்த விசாரணையும் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் மோகன்லால் வீட்டில் கைப்பற்றிய தந்தங்கள் உண்மையான தந்தங்கள் தானா என கேட்டு தகவல் உரி்மை ஆணையத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் விண்ணபித்தார். இதற்கு பதில் அளித்த கேரள வனத்துறை மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்டது உண்மையான தந்தங்கள் தான் என்றும், அதை வைத்திருக்க அவர் லைசென்ஸ் எதுவும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மோகன்லாலிடம் விசாரணை நடத்தும்படி கேரள டிஜிபி ஜேக்கப் புன்னுவிடம் அனில்குமார் புகார் அளித்தார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கொச்சி திருக்காகரை உதவி போலீஸ் கமிஷனர் பிஜோ அலெக்சாண்டருக்கு டிஜிபி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இதையடு்த்து மோகன்லாலிடம் விசாரணை நடத்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். கடந்த இரண்டு தினங்களாக மோகன்லால் வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு அவர் வீட்டில் இல்லை என்றதால் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதற்கிடையே முறையான அனுமதி இல்லாமல் யானை தந்தங்கள் வைத்திருந்ததாக மோகன்லால் மீது கோடநாடு வனச்சரக அதிகாரி நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து மோகன்லால் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

லண்டன் ஓட்டலில் தகராறு செய்தேனா... ? - லட்சுமி ராய் விளக்கம்

I Never Miffed With Hotel Staffs

கடந்த வாரம் முழுவதும் லட்சுமி ராய் பற்றிய ஒரு செய்தி மீடியாவில் பிரதானமாக இடம்பிடித்தது.

அது, 'தாண்டவம் படப்பிடிப்புக்காக லண்டன் போன லட்சுமிராய், நட்சத்திர ஓட்டலில் ரூம் வசதியாக இல்லை என்று கூறி தகராறு செய்தார்' என்பதுதான்.

இந்த செய்தி உண்மைதானா என்ற குறைந்தபட்ச உறுதிப்படுத்தல் கூட செய்யாமல் அவசர அவசரமாக பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுவிட்டன. இதில் லட்சுமி ராய்க்கு கொஞ்சமல்ல... ரொம்பவே வருத்தம்.

உண்மையில் நடந்தது என்ன?

லட்சுமி ராயே சொல்கிறார்...

"நான் எந்த ஹோட்டலிலும் தகராறு செய்யவில்லை. அப்படிப்பட்ட பெண்ணுமல்ல நான். ஒரு பிரபலமாக இருந்து கொண்டு, பொது இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியுமா..

உண்மையில் அன்று நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்று, எனக்கு ஒதுக்கப்பட்ட அறையைக் கேட்டேன். அதில் வேறு யாரோ தங்கியிருந்தனர். எனது அறையை எப்படி மற்றவர்களுக்கு ஒதுக்கினார்கள் என்று தெரியவில்லை. எனவே எனக்கான அறையைத் தருமாறு அவர்களிடம் கூறிவிட்டு, வரவேற்பரையில் காத்திருந்தேன்.

அப்படியும் கூட அந்த அறை கிடைக்கவில்லை. வேறு ஹோட்டலில் வேறு அறையைத்தான் தந்தார்கள். நான் மறுப்பேதும் சொல்லாமல் அதில்தான் தங்கினேன்.

ஆனால் அதற்குள் யார் என்ன சொன்னார்களோ... விஷயம் வேறு மாதிரி பரவி, என்னமோ நான் சண்டைக்காரி என்பதுபோல சித்தரித்து செய்தி வந்துவிட்டது.

இப்படித்தான் நான் ஏதோ தனி விமானத்தில் சென்னை வந்ததாக சில தினங்களுக்கு முன் சொன்னார்கள். அப்புறம் உண்மையைச் சொன்ன பின் அமைதியானார்கள்," என்றார்.

மனோபாலாவின் காதல் கதை: 'நேயர் விருப்பம்'!

777 Manobala S Neyarviruppam

காதல் கதைகளை எத்தனை முறை படித்தாலும் சலிக்காது அதுபோலத்தான் காதலை மையமாக கொண்ட சினிமாவோ, சீரியலோ எத்தனை முறை பார்த்தாலும் புதிது போலவே இருக்கும்.

இதுபோல ஒரு காதல் கதைதான் பாலிமர் டிவியில் '777' தொடரில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. எப்.எம் ரேடியோவில் ஜாக்கியாக பணியாற்றும் செந்தில் ஒரு பெண் நேயரின் விருப்பத்தை நிறைவேற்ற போடும் பாடலே அவரின் காதலுக்கு அடித்தளமாகிறது.

இந்த தொடர் செயற்கைத்தனமில்லாத அக்மார்க் காதல் கதை என்பதை நிச்சயமாக சொல்லலாம். காதலியுடன் தொலைபேசியில் பேசுவதாகட்டும், காதலை சொல்ல தனக்கு பிடித்தமான கண்ணதாசன் பாடலை ஒளிபரப்புவதாகட்டும் எதிலுமே ஒரு செயற்கைத்தனமில்லை. நாமே அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போவதுபோல கதை நகர்கிறது.

இந்த தொடரில் எம்.எம் ஜாக்கியாக ரேடியோ மிர்ச்சி செந்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் ஒன்றும் புதிதாக மெனக்கெடத் தேவையில்லை. தினசரி அவருடைய நிகழ்ச்சிகளையே படம்பிடித்துக்கொள்ளலாம். செம ஹாட் மச்சி என செந்தில் கூறுவதே தனி ஸ்டைல்தான். அவரின் காதலியாக ஸ்ரீவித்யா நடித்துள்ளார். ஆதித்யா சேனலின் காமெடி தொகுப்பாளர் ஆதவனும் இதில் நடித்துள்ளார்.

ஸ்ரீவித்யாவில் உதடு பேசுவதை விட கண்கள் அதிகமாக பேசும். இது காதல் கதை என்பதால் உதடுகள் பேசும் வசனங்களை விட கண்கள் பேசும் வசனங்கள்தான் அதிகம் இருக்கின்றன. அடுத்தவர் நிகழ்ச்சிக்குள் புகுந்து காதலிக்கு பிடித்தமான பாடலை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டும் செந்திலுக்கு சிஇஓ விடம் டோஸ் கிடைத்ததா? இல்லை தப்பித்தாரா என்ற சஸ்பென்ஸ்சோடு நிற்கிறது கதை. காதலை கவிதையாய் சொல்லும் மனோபாலா இன்னமும் தான் சிறந்த இயக்குநர்தான் என்பதை நிரூபித்துள்ளார்.

Thursday 14 June 2012

கலக்கல் யூகிசேது: 'யூகியுடன் யூகியுங்கள்'!

Yugisethu Yugiyudan Yugiyungal

சின்னத்திரையில் ஏதாவது ஒரு சேனலில் நையாண்டித்தனமாகவோ, அறிவுப்பூர்வமாகவோ நிகழ்ச்சிகளை வழங்குவது யூகிசேதுவின் ஸ்பெசல். விஜய் டிவியில் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி யூகிசேதுவிற்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்தது.

இப்பொழுது ஜெயா டிவியில் யூகியுடன் யூகியுங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறப்பான தோற்றத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார். புகழ்பெற்ற விஐபிக்கள் மட்டும்தான் சின்னத்திரையில் பேட்டி கொடுக்கவேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்களை இனம் காட்டுகிறார் யூகிசேது. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடத்திலிட்ட விளக்காய் இருந்தவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருகிறார்கள்.

கைகளை இழந்த சிறுவன் இன்று கணினி `வரைகலை' கலைஞனாக திகழ்கிறான். இரண்டு வயது குழந்தை 200 நாட்டு கொடிகளை இரண்டே நிமிடத்தில் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது. பெற்ற தாயால் கைவிடப்பட்ட வாய்பேச முடியாத பெண் குழந்தை வளர்ந்து நன்றாக பேசியதோடு மட்டுமல்லாமல் 10 மணி நேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது, அதுபோல பாட்டிலில் படம் வரையும் டிரம்மர் ஸ்ரீதர் உள்ளிட்ட சாதனையாளர்கள் இவரது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இவை தவிர, உலகம் முழுவதும் அகமும் புறமும் பற்றி வந்து சேரும் பலதரப்பட்ட விசித்திரமான செய்திகளை தனக்கே உரிய நையாண்டி பாணியில் விமர்சிக்கும் யூகிசேதுவின் முன்னுரையும் இதில் அடங்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு யூகியுடன் யூகியுங்கள் நிகழ்ச்சியை உங்கள் ஜெயாடிவியில் கண்டு ரசிக்கலாம். வரும் வாரங்களில் மேலும் சில விசேஷ அத்தியாயங்களும், புகழ்பெற்ற மனிதர்களும் பங்கேற்க உள்ளனர்.

எக்கச்சக்க 'கட்'.. பில்லா 2 படத்துக்கு 'ஏ' - அதிருப்தியில் தயாரிப்பாளர் - ஜுன் 21-ல் ரிலீஸ் ஆகுமா?

Billa Gets A Producer Not Happy With The Cuts    | அஜீத்  

அஜீத் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் பில்லா 2 படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 21-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டாலும், இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அஜீத், பார்வதி ஓமணக் குட்டன், புருனா அப்துல்லா நடித்துள்ள படம் பில்லா 2. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார்.

இன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் வெளியிடுகிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இந்தப் படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டாலும், படத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதில் உறுதியான அறிவிப்பு இன்னும் வந்தபாடில்லை.

படம் சென்சாரான பிறகுதான் 'ரிலீஸ் தேதி அறிவிப்பு' என தயாரிப்பாளர் சொன்னாலும், பில்லா 2-வெளியாகும் அரங்குகளில் ஜூன் 21-ம் தேதிக்கு முன்பதிவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன.

இந்த நிலையில் பில்லா 2 படம் நேற்று சென்சாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தில் வன்முறை, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இருப்பதால், ஏராளமான இடங்களில் கட் கொடுத்துவிட்டார்களாம் சென்சார் உறுப்பினர்கள். மேலும் படத்தை வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற வகையில் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனால் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கு தாறு மாறாக கட் கொடுத்துள்ளனர் தணிக்கைக் குழுவினர். இன்றுதான் சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகுதான் மேற்கொண்டு என்ன செய்வது என்று அறிவிக்கவிருக்கிறோம். படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் வெட்டப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை," என்றார்.

இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற உறுதியான தகவல் தெரியாமல் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

'அடடா இந்தப் படத்தை விட்டுவிட்டோமே என விஜய் வருந்தும் காலம் வரும்!' - சீமான்

Seeman Blasts Vijay Withdrawing From Pagalavan

பகலவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய், காரணம் சொல்லாமலேயே பின் வாங்கிவிட்டார். ஆனால் பின்னாளில் இந்தப் படத்தில் ஏன் நடிக்காமல் போனோம் என வருத்தப்படுவார், என்று இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறினார்.

விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பது குறித்து கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உறுதியாக பேசப்பட்டது.

பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என்றார் சீமான். வேலூர் சிறையிலிருந்தபடி இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தார்.

கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு விஜய் இந்தப் படம் குறித்து பேசுவைதையே தவிர்த்தார். தொடர்ந்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.

இந்த நிலையில், சீமானும் வேறு நாயகர்களைத் தேட ஆரம்பித்தார். இப்போது ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.

பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், "தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.

நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்," என்றார்.

ஏற்கெனவே சீமான் இயக்கி பெரும் வெற்றி பெற்ற தம்பி படத்தில் விக்ரம்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பின் வாங்கியதால், அதில் மாதவன் நடித்து தனி மரியாதையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி?

How Veteran Actor Radhakrishnan Got Title Kaka

மறைந்த நடிகர் ராதாகிருஷ்ணன் பெயருடன் 'காகா' என் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பது குறித்து ஒரு சுவையான ப்ளாஷ்பேக்.

இந்த ப்ளாஷ்பேக்கை சொன்னவரும் ராதாகிருஷ்ணன்தான். இறப்பதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு பேட்டியின்போது அவரிடம், உங்கள் பெயருடன் காகா என்ற பெயர் வந்தது எப்படி? என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு அவர் அளித்த பதிலில், "மங்கையர்க்கரசி' படத்தில் ஒரு டயலாக் வரும்.

மதுரம்மா (டிஏ மதுரம்) என்கிட்ட 'நீ அரசாங்கத்துல போய் எப்படியாவது, காக்கா பிடிச்சாவது வேலைல சேர்ந்துடு'ன்னு சொல்லுவாங்க. உடனே நான் அம்மா சொல்லிட்டாங்களேன்னு, ஒரு காக்காவப் புடிச்சுகிட்டுப் போய் வேலை கேட்பேன். வேலை கிடைக்காது. திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லுவேன். நீ சொன்ன மாதிரியே காக்காவப் புடிச்சுக்கிட்டு போய் வேலை கேட்டேன், அப்பவும் கிடைக்கலம்மா. இங்க பாரு காக்கா'ன்னு சொல்லுவேன். அந்த காமெடி அப்போ ரொம்ப பேசப்பட்டது. அதிலிருந்துதான் காக்கா ராதாகிருஷ்ணன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க..." என்றார்.

காகா ராதாகிருஷ்ணன் தன் இறுதிக்காலத்திலும் கூட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்கு முக்கிய காரணம், கமல்ஹாஸன். அவர்தான் தனது தேவர்மகன் படத்தில், சிவாஜியின் தம்பி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை காகா ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி, அவரது அடுத்த ரவுண்டைத் தொடங்கி வைத்தார்.

நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார். சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

இன்று உடல் தகனம்

காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


கலக்கல் யூகிசேது: 'யூகியுடன் யூகியுங்கள்'!

Yugisethu Yugiyudan Yugiyungal

சின்னத்திரையில் ஏதாவது ஒரு சேனலில் நையாண்டித்தனமாகவோ, அறிவுப்பூர்வமாகவோ நிகழ்ச்சிகளை வழங்குவது யூகிசேதுவின் ஸ்பெசல். விஜய் டிவியில் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி யூகிசேதுவிற்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்தது.

இப்பொழுது ஜெயா டிவியில் யூகியுடன் யூகியுங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறப்பான தோற்றத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார். புகழ்பெற்ற விஐபிக்கள் மட்டும்தான் சின்னத்திரையில் பேட்டி கொடுக்கவேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்களை இனம் காட்டுகிறார் யூகிசேது. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடத்திலிட்ட விளக்காய் இருந்தவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருகிறார்கள்.

கைகளை இழந்த சிறுவன் இன்று கணினி `வரைகலை' கலைஞனாக திகழ்கிறான். இரண்டு வயது குழந்தை 200 நாட்டு கொடிகளை இரண்டே நிமிடத்தில் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது. பெற்ற தாயால் கைவிடப்பட்ட வாய்பேச முடியாத பெண் குழந்தை வளர்ந்து நன்றாக பேசியதோடு மட்டுமல்லாமல் 10 மணி நேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது, அதுபோல பாட்டிலில் படம் வரையும் டிரம்மர் ஸ்ரீதர் உள்ளிட்ட சாதனையாளர்கள் இவரது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இவை தவிர, உலகம் முழுவதும் அகமும் புறமும் பற்றி வந்து சேரும் பலதரப்பட்ட விசித்திரமான செய்திகளை தனக்கே உரிய நையாண்டி பாணியில் விமர்சிக்கும் யூகிசேதுவின் முன்னுரையும் இதில் அடங்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு யூகியுடன் யூகியுங்கள் நிகழ்ச்சியை உங்கள் ஜெயாடிவியில் கண்டு ரசிக்கலாம். வரும் வாரங்களில் மேலும் சில விசேஷ அத்தியாயங்களும், புகழ்பெற்ற மனிதர்களும் பங்கேற்க உள்ளனர்.

எக்கச்சக்க 'கட்'.. பில்லா 2 படத்துக்கு 'ஏ' - அதிருப்தியில் தயாரிப்பாளர் - ஜுன் 21-ல் ரிலீஸ் ஆகுமா?

Billa Gets A Producer Not Happy With The Cuts    | அஜீத்  

அஜீத் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் பில்லா 2 படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 21-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டாலும், இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அஜீத், பார்வதி ஓமணக் குட்டன், புருனா அப்துல்லா நடித்துள்ள படம் பில்லா 2. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார்.

இன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் வெளியிடுகிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இந்தப் படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டாலும், படத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதில் உறுதியான அறிவிப்பு இன்னும் வந்தபாடில்லை.

படம் சென்சாரான பிறகுதான் 'ரிலீஸ் தேதி அறிவிப்பு' என தயாரிப்பாளர் சொன்னாலும், பில்லா 2-வெளியாகும் அரங்குகளில் ஜூன் 21-ம் தேதிக்கு முன்பதிவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன.

இந்த நிலையில் பில்லா 2 படம் நேற்று சென்சாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தில் வன்முறை, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இருப்பதால், ஏராளமான இடங்களில் கட் கொடுத்துவிட்டார்களாம் சென்சார் உறுப்பினர்கள். மேலும் படத்தை வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற வகையில் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனால் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கு தாறு மாறாக கட் கொடுத்துள்ளனர் தணிக்கைக் குழுவினர். இன்றுதான் சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகுதான் மேற்கொண்டு என்ன செய்வது என்று அறிவிக்கவிருக்கிறோம். படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் வெட்டப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை," என்றார்.

இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற உறுதியான தகவல் தெரியாமல் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

Kaka Radhakrishnan Passes Away

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார்.

காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார்.

மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார்.

இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை.

அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வளர்ந்தார்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன் பேத்திகள் உள்ளனர்.

இன்று உடல் தகனம்

காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் தகனம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: ராஜவேலு-. 92822 44040.

'அடடா இந்தப் படத்தை விட்டுவிட்டோமே என விஜய் வருந்தும் காலம் வரும்!' - சீமான்

Seeman Blasts Vijay Withdrawing From Pagalavan

பகலவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய், காரணம் சொல்லாமலேயே பின் வாங்கிவிட்டார். ஆனால் பின்னாளில் இந்தப் படத்தில் ஏன் நடிக்காமல் போனோம் என வருத்தப்படுவார், என்று இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறினார்.

விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பது குறித்து கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உறுதியாக பேசப்பட்டது.

பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என்றார் சீமான். வேலூர் சிறையிலிருந்தபடி இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தார்.

கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு விஜய் இந்தப் படம் குறித்து பேசுவைதையே தவிர்த்தார். தொடர்ந்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.

இந்த நிலையில், சீமானும் வேறு நாயகர்களைத் தேட ஆரம்பித்தார். இப்போது ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.

பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், "தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.

நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்," என்றார்.

ஏற்கெனவே சீமான் இயக்கி பெரும் வெற்றி பெற்ற தம்பி படத்தில் விக்ரம்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பின் வாங்கியதால், அதில் மாதவன் நடித்து தனி மரியாதையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிசில் அகதித்தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலை என்ன ? சுவிசில் கருத்தாடல் நிகழ்வு


அனைத்துலக அகதிகள் நாளினை மையப்படுத்தி, சுவிசில் சமீபத்திய காலங்களில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலைகுறித்தான, கருத்தாடல் நிகழ்வொன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் அரசாங்கத்தின் அகதிகள் விவகாரத்திணைக்கள உயர்அதிகாரியான Ursula Heizt கலந்து கொண்டு, அகதி தஞ்சம் கோரும், ஈழத்தமிழ் அகதிகள் குறித்த, சுவிஸ் அரசின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.



வெளிநாட்டவர்கள் விவாகரங்களுக்கான அமைப்பின் பிரதிநிதி Emine Sariaslanம் கலந்து கொண்டு, அகதிகள் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரத்துறை அமைச்சர் முத்துக்குமாரசாமி ரட்ணா மற்றும் நா.த.அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான
அனைத்துலக சட்டவாளர் டேவிட் மத்தாஸ் ஆகியோரும் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.

சுவிசில் அகதித் தஞ்சம் கோரி, பல்வேறு நிலைகளில் உள்ள அனைத்து தமிழர்களையும் இக்கருத்தாடலில் பங்கெடுத்து பயன்பெறுமானறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜெனீவாச் செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 16-062012 அன்று, மாலை 17மணிக்கு Johannes Kirchgemeinde, Wylerstrasse 5, 3014 Bern எனும் இடத்தில், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, இதுபற்றிய மேலதிக தகவல்களை 076 541 63 26 - 076 348 97 35 ஆகிய தொடர்பிலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, பெற்றுக்கொள்ளலாம் எனவும்செயலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

தமிழக அரசு அலுவலகங்களில் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் பயன்படுத்த தடை? அதிகாரிகள் ஆலோசனை!

ஒடிசா மாநில அரசை போன்று தமிழக அரசும், அரசு அலுவலகங்களில் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்த தடைவிதிப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்களை பொறுத்தவரையில் அலுவலக நேரங்களில் ஊழியர்கள் கம்ப்யூட்டரிலுள்ள இணையதளங்கள் மூலம் பொழுது போக்குவது உட்பட பல்வேறு செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வந்தனர். இதனால் அரசு வேலை தாமதப்படுவதுடன், அரசின் செலவினமும் அதிகரித்து வந்தது.

ஓடிசா மாநில தலைமைச்செயலகத்தில் உள்ள துறை ரீதியான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட கம்ப்யூட்டரில் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்தி வந்தனர். இந்த வகை இணையதளங்களை பார்வையிடவும், பயன்படுத்தவும் அம்மாநில அரசு தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் பார்வைக்கும் ஓடிசா மாநில அரசின் தடை உத்தரவு தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அரசு அலுவலகங்களிலும் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்தவும் தடைவிதிப்பது குறித்தும் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா