ஹோமோசெக்ஸுக்கு ஆதரவாக சமீபத்தில் குரல் கொடுத்த வீணா மாலிக் தற்போது அதை வலியுறுத்தி போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார்.
ஓரினச் சேர்க்கைக்கு உலகம் முழுவதும் இப்போது ஆதரவு பெருகி வருகிறது. இருப்பினும் இந்தியா போன்ற நாடுகளில் இன்றும் கூட அது சற்றே விலக்கி வைக்கப்பட்டிருக்கிற விஷயமாகவே இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஹோமோசெக்ஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். தற்போது அதற்காக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஹோமோசெக்ஸ் என்பது இந்தியா போன்ற நாடுகளில் வெளிப்படையாக பேச முடியாத விஷயமாகவே இருக்கிறது. இருப்பினும் இதை பாசிட்டிவாக பார்ப்பதில் தவறில்லை.
ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ உரிமை உள்ளது. தாங்கள் நினைத்தபடி வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது. இது ஒரு உரிமையாகு்ம் என்றார்.
ஹோமோசெக்ஸுக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளதை நிலை நாட்டுவதற்காக இந்த போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார் வீணா. இதன் மூலம் ஹோமோசெக்ஸ் குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பரவும் என்பது அவரது நம்பிக்கை.
No comments:
Post a Comment