
புளியங்குளம் மணியமேடு பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியிலுள்ள சின்னப்பரந்தன் ஆற்றிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட குண்டொன்றை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் அது வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment