Saturday 3 December 2011

ஆண்டன் பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயன்ற விடுதலைப் புலிகள்: விக்கிலீக்ஸ்

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை சமாதான நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டவே விடுதலைப்புலிகள் முயற்சி செய்கின்றனர் என்று இலங்கை அமைச்சர் மிலிந்தா மொரகொடா தெரிவித்ததாக கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய அமெரிக்க தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் ஆண்டன் பாலசிங்கம். அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகளின் ஆலோசகராகவும், பிரபாகரனின் வலதுகரமாகவும் விளங்கினார்.

இலங்கை இனப் பிரச்சனையில் நடந்த முக்கியமான பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் புலிகளின்சார்பில் பங்கேற்றவர் ஆண்டன். 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த முதல் பேச்சுவார்த்தையில் தொடங்கி கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் ஜெனீவாவில் நடந்த அமைதிப்பேச்சவார்த்தை வரை அனைத்திலும் பாலசிங்கம் கலந்து கொண்டார். 22-12-2006 அன்று புற்றுநோயால் பாலசிங்கம் லண்டனில் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்த ஆஸ்லிவில்ஸ் கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளின் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அந்த தகவலில் அவர் கூறியிருப்பதாக விக்கலீக்ஸ் தெரிவித்துள்ளதாவது,

சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாக ஆண்டன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதுகின்றனர். கிழக்கில் கடும் போக்குடைய கருணா, கரிகாலன் ஆகியோருக்கும் வடக்கில் இருந்த புலிகளுக்கும் இடையேயான உறவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்தத் தகவலை புலிகளின் தொடர்பாடலை ஊடறுத்துக் கேட்ட போது தெரியவந்துள்ளதாக மிலிந்தா மொரகொடா தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவலின் உறுதித் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

சமாதான நடவடிக்கைகள் புலிகளின் ராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் பானு உட்பட பலர் கருதினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார். எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய புலிகள் சமாதான நடவடிக்கைகளில் இருந்து பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணம்

88 வயதான பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணமடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்டின் காதல் மன்னன், எவர்கிரீன் ரொமான்டிக் சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் தேவ் ஆனந்த். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தேவ் ஆனந்த்தை மருத்துவப் பரிசோதனைக்காக லண்டன் அழைத்து வந்திருந்தனர். அங்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் உயிர் பிரிந்தபோது மகன் சுனில் உடன் இருந்தார்.

1946ம் ஆண்டு ஹம் ஏக் ஹெய்ன் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தேவ் ஆனந்த். பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு வெளியான ஸித்தி படம் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட்டாகின.

பேயிங் கெஸ்ட், பாஸி, ஜூவல் தீப், சிஐடி, ஜானி மேரா நாம், அமீர் காரிப், வாரன்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேஸ் பர்தேஸ் ஆகியவை தேவ் ஆனந்த் நடிப்பில் வெளியான சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகும்.

2001ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2002ம் ஆண்டு தாதா சாஹேப் பால்கே விருதும் அளித்துக் கெளரவிக்கப்பட்டார் தேவ் ஆனந்த்.

1949ம் ஆண்டு நவ்கேதன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி 35க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார் தேவ் ஆனந்த். 2 முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார் தேவ் ஆனந்த். 

தேவ் ஆனந்த்துடன் பிறந்த இரு சகோதரர்களான சேத்தன் ஆனந்த், விஜய் ஆனந்த் ஆகியோரும் கூட திரைத் துறையில் பிரபலமானவர்கள்தான். இவரது சகோதரி ஷீல் காந்தா கபூரின் மகன்தான் பிரபல இயக்குநர் சேகர் கபூர் ஆவார்.

ரஜினி, அமிதாப், நீங்க ஓய்வு பெறலாமே! - நிருபர் கேள்வியும் கமலின் அதிரடி பதிலும்

Kamal Hassanஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு அது. நடிகர் கமல்ஹாசன்தான் இதன் தலைவர் என்பதால், அவர் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், இணையதளங்கள் திரைப்படத்துறைக்கு எந்த அளவு உறுதுணையாக உள்ளன என்பதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உடனே பதிலளித்த கமல், எல்லா மேடைகளிலும் இணையதளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவரும் என்னிடம் எதற்கு இந்த கேள்வி. நானே விரைவில் இணையதளப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். நான் உங்கள் கட்சி, என்றார்.

அடுத்து ஒரு நிருபர், ரஜினி, நீங்க, பாலிவுட்ல அமிதாப் பச்சன் போன்றவர்கள் எல்லாம் ஓய்வு பெறலாமே, என்றார்.

சற்றும் தயங்காமல் கமல் அளித்த பதில்:

ஏன்...நீங்கள் எதற்காக வருகிறீர்கள்.. வயதாகிவிட்டதே என்று நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே!, என்று பதிலளிக்க அத்தோடு நிருபர் அமைதியாகிவிட்டார்!

கோழிப் பண்ணை மீது வைத்துள்ள நம்பிக்கையை சினிமா மீது வையுங்கள்! - கமல்

கோழிப் பண்ணை மீது வைத்து உள்ள நம்பிக்கையை சினிமா மீது வையுங்கள் என வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்ஹாஸன்.

மேலும் பழைய திரைப்படங்களை 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் திரைப்படங்கள் சார்ந்த ஊடகம் மற்றும் தொழில்துறை 2 நாள் மாநாடு நடந்தது. Kamal hassan

இதில் சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன், முதன்மை அதிகாரி பங்கஜா தாக்கூர், நடிகர் கமலஹாசன், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் முடிவில் கமலஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியா முழுவதும் திரைப்படத் தொழிலில் 'டிஜிட்டல்' முறை உருவாகி வருகிறது. இதனால் பழைய 'ரீல்' முறையை மாற்றி, நவீன யுக்திகளுடன் சினிமா எடுக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் 3,500 பழைய படங்களை அரசாங்க உதவிகள் இல்லாமல் 'டிஜிட்டல்' முறையில் பாதுகாத்துள்ளோம். இதேபோல், இந்தியா முழுவதும் உள்ள பழைய படங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

பழைய படங்களை 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும்.

`டிஜிட்டல்' மாற்றத்திற்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட சந்தேகங்களைக் களைய இந்த மாநாட்டின் மூலம் விளக்கம் தரப்பட்டது.

இந்த மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் சென்சார் போர்டு அதிகாரிகள் வந்து தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். தயாரிப்பாளர்களின் சந்தேகங்களுக்கு அவர்கள் இன்முகத்துடன் பதில் அளித்தனர். இந்த மாநாட்டின் மூலம் தயாரிப்பாளர்கள், சென்சார் போர்டு அதிகாரிகள் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டது.

திரைப்படங்களில் சென்சார் போர்டு புதிய செயல்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல்பாடுகள் பற்றி தயாரிப்பாளர்கள், திரைப்படத்துறையினருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கி கடன் வேண்டும்

திரைப்பட தொழிலுக்கு வங்கிகளில் கடனுதவி வழங்குவது தொடர்பாக பேசி வருகிறோம். கோழிப் பண்ணை மீது வைத்து உள்ள நம்பிக்கையை சினிமா தொழில் மீது வங்கிகள் வைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். வங்கிகள் மூலம் கடனுதவி பெறும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். திரைப்படங்கள் பட்ஜெட்டை பொறுத்து வசூல் ஆகும்.

இந்த 2 நாள் மாநாட்டில் திரைப்படத்துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மாற்றத்தை கொண்டு வந்த இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புக்கு (`பிக்கி') நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

சிறிலங்கா அரசுக்கு நெருக்கடி தரும் டிசம்பர் விடுமுறைக் காலம்.


ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் பொதுவாக விடுமுறை காலமாக அமைகின்றபோதும் சிறிலங்கா அரசுக்கு அவ்வாறு இருக்காது என்றும், கடுமையாக உழைக்க வேண்டிய நிலையில் அது இருப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் பொதுவாக விடுமுறை காலமாக கழிக்கப்படுகின்ற போதும் சிறிலங்கா அரசு அடுத்து வரும் வாரங்களில் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக தற்காப்பு மூலோபாயங்களை வகுக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசு உள்ளது.

அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவின் மனிதஉரிமை விவகாரம் குறித்து கலந்துரையாடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், டிசம்பர் விடுமுறைக் காலங்களிலும் கடினமாக உழைக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசு இருப்பதாகவும் கொழும்பு வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்க்கு தமது தூதுவர் பற்றீசியா புற்றெனிசை அனுமதிக்குமாறு சிறிலங்கா அரசிடம் அமெரிக்கா கோரியுள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு


ஜேர்மனிய நகரான கோப்லென்ஸில், இரண்டாம் உலக யுத்தகால குண்டொன்று அந்நகரைச் சேர்ந்த 45,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

1.8 தொன் எடையுள்ள இந்த குண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும். ரைன் நதியில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் கடந்தவாரம் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மழைவீழ்ச்சியின்மையால் அந்நதியின் நீர்மட்டம் குறைவடைந்தத்தை தொடர்ந்து இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் குண்டு 2 கிலோமீற்றர் சுற்றுளவிற்குள் வசிக்கும் மக்களை அனைவரையும் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.

இரு வைத்தியசாலைகள், 7 மருத்துவ சிகிச்சை நிலையங்கள், ஒரு சிறைச்சாலை ஆகியவற்றிலுள்ளவர்களும் வெளியேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிராங்பர்ட் நகரிலிருந்து வடமேற்கே 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இந்நகரில் ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்துகளும் நிறுத்தப்படவுள்ளன.

யாழ்பாணத்தில தான் இப்படியும் நடக்குது..

நேற்று முன்தினம் இரவு யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் 7 வர்த்தக நிலையங்களில் தொடர் திருட்டு இடம்பெற்றிருந்தது.

இத் திருட்டுச் சம்பவத்துடன் அதிர்ந்துபோன அப் பகுதி வர்த்தகர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

ஏனெனில் இப்படியானதொரு துணிகரமானதும், தொடரான திருட்டுக்களும் இப் பகுதிகளில் மட்டுமன்றி யாழ்ப்பாணப் பகுதிகளிலேயே நடந்தது இல்லை என்கின்றனர் வர்த்தகர்கள்.

இதனால் தங்களது வர்த்தக நடவடிக்கைகள், தங்களின் வாழ்வாதாரம் என்பன கேள்விக் குறியாகி விட்டதுடன், எதிர்கால வர்த்தக நடவடிக்கைகளும் பாழாகி விட்டதென்ற ஏக்கம் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றது.

இந் நிலையில்தான் இன்றைய தினம் அப் பகுதியில் உள்ள வர்த்தகர்களுடனான சந்திப்பை இராணுவமும், காவல்துறையினரும் நடத்தினர்.

இச் சந்திப்பில், வர்த்தகர்களின் எதிர்கால பாதுகாப்புத் தொடர்பில் அதீத கவனம் செலுத்துவது போல் பாசாங்கு செய்தது இராணுவமும்,காவல்துறையனருமே.

ஆடு நனைகின்றது என ஓநாய் அழுத கதைபோல் இருந்தது இவர்களின் செயற்பாடு என இச் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

அதாவது உங்களின் வர்த்தக நிலையங்களைப் பாதுகாக்கத் தாங்கள் தயாராகவுள்ளோம் எனவும், ஆதலால் இப் பகுதியில் ஒரு இராணுவக் காவலரண் ஒன்றை நிறுவி உங்களின் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றோம் எனவும் இச் சந்திப்பில் இராணுவத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் இச் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தகர்கள், தங்களின் வர்த்தக நிலையங்களுக்கு தங்கள் செலவில் காவலாளிகளை நியமிப்பது எனவும் எங்கள் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்கின்றோம் என்றும், அவ்வாறு உறுதிப்படுத்த முடியாதுபோகும் பட்சத்தில் உங்களின் உதவியை நாடுகின்றோம் என்றும் பதிலளிக்கப்பட்டது.

மேற்படி பதிலை எதிர்பாராத இராணுவமும் காவல்துறையிரும் இலவுகாத்த கிளிபோல் ஏமார்ந்து போய் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படியும் வர்த்தகர்களால் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து, நடைபெற்ற இத் திருட்டும், நடாத்தப்பட்ட இச் சந்திப்பிலும் ஒரு உள்நோக்கம் இருக்கின்றது என்பது நன்றாகவே புலப்படுகின்றது.

அத்துடன்; திருடப்பட்ட வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நாளாந்தம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த காவல்துறையினரும், இராணுவமும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற நாளன்று ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உள்நோக்கங்கள் கொண்ட செயற்பாடுகளால் தமிழ் மக்கள் பாரியளவில் பாதிப்படைவதுடன், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது என்ற பெயரில் காவலரண்களை அமைத்துப் போர்ச் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றது இராணுவம்.

இந்த இராணுவ முகாம்களை அமைப்பதற்காக வர்த்தகர்களையும் அவர்களின் வர்த்தக நிலையங்களையும் கொள்ளை என்ற பெயரில் பயன்படுத்தி வருகின்றது இராணுவம் என்பது இதிலிருந்து புலப்படுகின்றது என இச் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தகர் தெரிவித்தார்.

உலகத்தில் பலவித நோய்கள் இலங்கையில் இப்படி ஒரு மன நோயாளி


பல மனைவிகளை வைத்திருப்பதே அரசர்களுக்குப் பெருமை. அதுவே அவர்களுக்கு கௌரவம். எனக்கும் பல மனைவியர் இருக்கின்றனர். எனது திறமையை நான் நிரூபித்துள்ளேன். என்னைப்போலவே தயாசிறி எம்.பி யும் நிரூபித்துள்ளார் என்பதுடன் சேவலின் வேலை கொத்துவதாகவும் அது எங்கு கொத்தினாலும் கொத்தியதுதான் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "அரசர்களுக்கு பல மனைவிமார் இருப்பதே அவர்களுக்குப் பெருமை. எனினும் நான் இரத்தினபுரிக்கு அடிக்கொரு தடவை சென்றுவருவதாக இங்கு தெரிவிக்கின்றனர். எனது உறவினர் வீட்டில் இடம்பெற்ற வைபவத்துக்கே நான் சென்றிருந்தேன். அதில் தவறில்லை. நான் மனிதர்களை சம்பாதித்துள்ளேன். அவர்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டும். விஜயன், எல்லாளன், குவேனி வரலாற்றுக் கதைகளில் கூறப்படுவதைப் போல் இவர்கள் தாம் செல்கின்ற வேளையில் தமக்குப் பின்னால் ஒரு பட்டாளத்துடனேயே செல்வர். அன்று தயாசிறி எம்.பி இருந்திருந்தால் விஜயன், எல்லாளன், குவேனி போன்றோரை தனியாகச் செல்லுமாறே ஆலோசனை வழங்கியிருப்பார். அது புதுமையான ஆலோசனை. எனினும் இவர் பலருடன் சென்றிருப்பார். அரசர்களுக்கு ஐந்தாறு மனைவியரும் அந்தப்புரமும் இருக்குமாயின் எனக்கு ஏன் ஐந்தாறு மனைவியர் இருக்கக் கூடாது? அதற்கான தகுதி எனக்கிருக்கிறது. எனது திறமையை நான் காண்பித்திருக்கிறேன். எதிர்காலத்திலும் காண்பிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். என்னைப்போலவே தயாசிறி எம்.பியும் தனது திறமையை வீட்டுக்குள்ளும் கிராமத்திலும் மாகாணத்திலும் ஏன் நாடளாவிய ரீதியிலும் காண்பித்திருக்கிறார்.

கெகலியவின் கேவலமான எண்ணம்.!

விடுதலைப் புலிகள் தொடர்பாக எந்த வடிவத்திலேனும் விளம்பரப்படுத்துவதற்கும், கொண்டாட்டங்களை அல்லது நிகழ்வுகளை நடத்துவதற்கும் இலங்கையில் தான் தடைவிதித்துள்ளது.

இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேபோன்று புலிகளின் நிகழ்வுகளைத் தடைசெய்வதைப் பின்பற்றுமாறு ஏனைய நாடுகளையும் இலங்கை அரசாங்கம் இராசதந்திர வழிமுறைகளின் மூலம் கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்தவாரம் அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் நேரகாலத்துடன் நடவடிக்கை எடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கக் கைதிகள் மாவீரர் நாளை நினைவு கொள்வதை தடுத்திருக்காது போனால், பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும்.

ஏனென்றால் சிங்களக் கைதிகள் அவர்களை தாக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று நமபிக்கையான தகவல் கிடைத்துள்ளது.

அனுராதபுர சிறையில் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் 53 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களே மாவீரர் நாளை நினைவு கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். திடீர் சோதனையின் மூலம் அது தடுக்கப்பட்டது.

சோதனையின்போது, பிரபாகரனின் படங்கள், புலிச்சின்னம், மூன்றாவது தலைமுறை தொலைபேசிகள் மூன்று, 19 கைத்தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டன“ என்றும் கெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

இது தான் சிங்களவன் என்பது அடி முட்டாள் என்பது.!


இணையத்தளத்தாலும் சிறைப்பிடிக்க முடியுமாம்.!.


மகிந்தாவுக்கு எதிராக போர்க்குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் மூன்று ஈழத் தமிழர்கள் தாக்கல் செய்த வழக்கில், தமிழ் இணையத்தளத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அழைப்பாணை வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் (District Court of The District of Columbia) மதிப்புக்குரிய காசிப்பிள்ளை மனோகரன் உட்பட மூன்று வழக்காளிகள் தை மாதம் 2011ல் தாக்கல் செய்த வழக்கில் நீதிக்குப் புறம்பான விதத்தில் தமது உறவுகளை அரச படைகள் கொலை செய்த குற்றத்திற்கு மகிந்தா தண்டிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

திருகோணமலை கடற்கரையில் வைத்து காசிப்பிள்ளை மனோகரனின் மகன் ராஜீகர் மனோகரனும் இன்னும் ஜந்து இளவயது மாணவர்களும் சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டமை. அதேபோல் பட்டினிக்கு எதிரான நடவடிக்கை (Action Against Hunger) என்ற தொண்டு அமைப்பு ஊழியர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்தப் படுகொலைகளுக்கு சனாதிபதியும் அரசியல் சாசனத்தின் மூலம் முப்படைத் தளபதியான மகிந்தா கட்டளைப் பொறுப்பு (Command Responsibility) ஏற்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

காசிப்பிள்ளை மனோகரன், மேற்கூறிய தொண்டு நிறுவன ஊழியர் பிறேமதாஸ் ஆனந்தராஜா மனைவி கலைச்செல்வி லவான், கொல்லப்பட்ட தேவராஜா குடும்ப நால்வரின் உறவினர் ஜெயக்குமார் ஐயாத்துரை ஆகிய மூவரும் வழக்காளிகளாவர்.

மகிந்தாவுக்கு நீதிமன்ற அழைப்பாணையை ஏற்க மறுத்ததாலும் அவருக்கு அழைப்பாணை வழங்குவது கடினமான காரணத்தாலும் ஆவணி மாதம் 13, 2011ம் நாள் நீதிபதி கொலார் – கொடெலி (Ms Kollar Kotelly) தமிழ்நெற் இணையத்தின் மூலம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் கார்த்திகை 22 2011ம் நாள் வழக்காளிகளின் முதன்மைச் சட்டத்தரணி மேலதிக தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்கினார். கொழும்பு ஊடகங்களில் அழைப்பாணையின் பிரதியைப் பிரசுரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று அவர் எழுத்து மூலம் சமர்ப்பித்தார்.

அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அரசியல் பழிவாங்கல் படுகொலைகள், காணாமற் போதல்கள் நடப்பதற்கான ஆதாரச் சத்தியக் கடதாசிகளையும் பிற ஆவணங்களையும் அவர் நீதி மன்றத்திற்கு வழங்கினார்.

உள்ளுர்ப் பிரசுரம் எதிரியின் ஊடகச் சுதந்திரத்தின் மீதான பாரதூரமான தாக்குதல்களால் தடைபட்டதால் இதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் உள்ளுர் பிரசுர உத்தரவை நீக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் மகிந்தாவுக்கு அஞ்சல் முகவரி மூலமாகவும் அவருடைய முகப்புத்தகம் (Facebook) மற்றும் ருவிற்ரர் (Twitter) தளங்கள் மூலமாகவும், நீதிபதி விரும்பினால் அவ்வாறு அழைப்பாணை அனுப்ப அனுமதி அளிக்குமாறும் அதே வழக்கறிஞர் மனுச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா துண்டு துண்டாக உடையும்! வைகோ எச்சரிக்கை!! (காணொளி இணைப்பு)

'தந்தையும் தம்பியும்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் 02.12.2011 அன்று மாலை நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நூலை வெளியிட, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

முதல்வர் ஜெயலலிதா ஹிட்லர் போல ஆட்சி நடத்திக்கிட்டு இருக்காங்க: குஷ்பு கடும் பேச்சு...

பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகர் பஸ் நிலையம் அருகே 01.12.2011 அன்று நடந்தது. பகுதி செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் உதயசூரியன், மாரி, கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசியதாவது:

ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடத்த வேண்டும். அது உங்களுக்கு தெரியாதா? அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிட்லர் போல ஆட்சி நடத்திக்கிட்டு இருக்காங்க. மக்களுக்கு நல்லது செய்யனும் என்பது கிடையாது. நான் சொல்வது தான் சட்டம் என்று இருக்காங்க.

வந்த உடனேயே சமச்சீர் கல்வி மேலே கை வைச்சாங்க. 3 மாசமா பள்ளிக்கூடம் போய் படிக்காம வந்தாங்க பசங்க.

திமுக ஆட்சியில் கஜானா காலி என்ற பிரச்சாரம் செய்சாங்க. சமச்சீர் கல்வி விஷயத்தில் பசங்க படிப்ப 3 மாசம் கெடுத்தீர்கள். ஏற்கனவே இருக்கிற பக்கங்கள் மீது வேற பேப்பரை ஒட்டி, அத மறுபடியும் கிழிச்சி, உச்சநீதிமன்றத்திலிருந்து உத்தரவு வந்த பின்னர் மறுபடியும் இன்னொரு பேப்பரை ஒட்டி, நீங்க 200 கோடி ரூபாய்க்கு மேலே செலவு பண்ணிருக்கீங்க. வீண் செலவு. அந்த செலவை மிச்சம் பிடிச்சிருந்தால், இன்றைக்கு பால் விலையை ஏற்றிருக்க வேண்டாம்.

அதற்குப் அப்புறம் மக்களுடைய வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலகம். தலைவர் அவர்கள் கட்டியிருக்கிறார். தலைவருக்கு பெருமை போய்விடக்கூடாது என்பதற்காக, நீங்க காலை எடுத்து வைக்கமாட்டேன் என்று சொல்லி, கோட்டைக்கு திரும்பி போய்டீங்க. புதிய தலைமைச் செயலகத்தில் சட்டமன்றத்தை நடத்த முடியாதா உங்களாள. முடியும். ஏன் போறதில்ல. வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறீங்க. படிச்ச காலத்தில வாஸ்து சாஸ்திரம் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. மூடநம்பிக்கை இல்லாமல் வாழனும். அப்பத்தான் முன்னேற முடியும் என்று நாம சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனால் இந்த அம்மா மூட நம்பிபிக்கையை வளர்ப்பதிலேயே இருக்காங்க.

அரசாங்கம் வருஷத்துக்கு ஒரு தடவைத்தான் பட்ஜெட் போடும். ஆனால் குடும்ப தலைவிகள் மாசத்துக்கு பட்ஜெட் போட்டுத்தான் குடும்பத்தை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. 1000 ரூபாய்க்கு வாங்கிய பால், இன்னைக்கு 1500 ரூபாய். பஸ் கட்டணம் 1300 ரூபாய் இருந்தது. இன்னைக்கு 1800 ரூபாய்.

5, 10, 50, 100 என பக்கத்து வீட்டில் கேட்கலாம். அடுத்த மாசம் கொடுத்திடலாம். 200 தேவைப்பட்டால் சொந்தக்காரங்க, நண்பர்களிடம் கேட்கலாம். ஆனால் இப்போது ஒரு மாசம் பட்ஜெட்டில் எங்க இடிக்கிறது. 2000 ரூபாய். 3000 ரூபாய். 5 ஆயிரம், 6 ஆயிரம் சம்பளம் வாங்கிறவர்கள் எங்கே போவார்கள்.

குழந்தைகளுக்கு ஒரு வேலை சோறு கொடுக்க முடியவில்லை என்றாலும், ஒரு டம்ளர் பால் கொடுத்து தூங்க வைச்சிரலாம் என்று தாய்மார்கள் நினைக்கிறாங்க. அப்பதான் சத்து கிடைக்கும். கால்சியம் கிடைக்கும் என்று நினைக்கிறாங்க. ஆனால் இன்றைக்கு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் தாய்மார்கள் கண்ணீர் விடுறாங்க. ரத்த கண்ணீர் விடுறாங்க. வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வரக் கணவன் ஒரு டம்ளர் காப்பி கொடு என கேட்க பயப்புடுறாங்க. அதற்கு காரணம் யார்? அம்மையார் ஜெயலலிதா அவர்கள்.

இவங்க ஏசி வண்டில உட்கார்ந்துகிட்டு, ஏசி வண்டில சுத்திக்கிட்டு கொடநாடு போய் ஜாலியா இருப்பாங்க. அவங்க ஆட்சியில கஷ்டப்படுவது தமிழ்நாட்டு மக்கள் தான். இவ்வாறு பேசினார்.



நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்: குஷ்பு

இளம்பெண் கற்பழித்து கொலை? முட்புதரில் பிணம் வீச்சு (படம் இணைப்பு)

ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி பெரிய குளத்தின் அருகே புதருக்குள் இன்று காலை பெண் பிணம் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ஆரல் வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லெட்சுமி, டி.எஸ்.பி. பாஸ் கரன், இன்ஸ்பெக்டர் வேலு மணி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு முட்புதருக்குள் அலங்கோலமான நிலையில் பெண் பிணம் கவிழ்ந்த நிலையில் கிடந்தது. போலீசார் உடலை திருப்பி பார்த்த போது முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்தன. சுமார் 32 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உதடு, காது, தலை உள்பட பல இடங்களில் ரத்தக் காயங்கள் காணப்பட்டன.

பிணத்தின் அருகே துண்டு ஒன்றும், 2 பைகளும் கிடந்தது. ஒரு பையில் கிழங்கு, காய்கறி, பூ, மெழுகுவர்த்தி, மீன் போன்றவை இருந்தது. இன்னொரு பையில் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் மற்றும் மேக்கப் சாதனங்கள், சோப்பு ஆகியவை இருந்தது.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது பீமநேரி ரோட்டில் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. பிணமாக கிடந்த பெண் யார்? என தெரியவில்லை. ஏதேனும் மர்மகும்பல் பெண்ணை கடத்தி வந்து தாக்கியும், துண்டால் கழுத்தை நெரித்தும் கொலை செய்து முட் புதருக்குள் உடலை வீசிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேரோட்டில் நடந்து சென்ற அரசு ஊழியரை வழி மறித்து தாக்கிய மர்மகும்பல் அவரிடமிருந்து நகை, பணத்தை பறித்து சென்றனர். இந்தநிலையில் அதே ரோட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வளர்ந்து வரும் சர்வாதிகாரப் போக்கையே இலங்கையில் காண்கிறோம் கனடா

இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உள்ளது. எனினும் இலங்கையில் வளர்ந்துவரும் சர்வாதிகாரப் போக்கையே நாங்கள் காண்கிறோம் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் விமர்சித்திருந்தார். இதனையடுத்தே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயட் இதனைத் தெரிவித்தார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில நாடுகள் 10 வருடங்களை எடுத் துள்ளன. சில நாடுகள் நல்லி ணக்கத்தை ஏற்படுத்தவே யில்லை. ஆனால் இது மிக முக் கியமானது என ஜோன் பயட் தெரிவித்துள்ளார்.

படையினர் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கை அரசு, இதுதொடர்பான விசாரணையை நடத்துவது குறித்தும் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஐ.நா.வின் அண்மைய அறிக்கையை ஜோன் பயட் பாராட்டியுள்ளார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, யுத்தக் குற்றச்செயல்கள் குறித்து விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கைக்கு மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களானபோதிலும் தமிழ்ச் சமூகத்தவருடனான அர்த்தமுள்ள நல்லிணக்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை காணவில்லை என்றும் அமைச்சர் ஜோன் பயட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் வளர்ந்து வரும் சர்வாதிகாரப் போக்கையே நாங்கள் கண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க:

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேரடிப் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருகிறார் என்று தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இல்லாமல் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முழுமையடையாது எனக் கருதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் சம்பந்தனுடன் நேரடிப் பேச்சு நடத்தி இதனை விளக்கும் அதேசமயம் அதில் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முன்வருமாறு வலியுறுத்துவார் என்று ஜனாதிபதியுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக நேற்றுமுன்தினம் கருத்து தெரிவித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இரு தரப்புப் பேச்சுகளில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர்தான் தெரிவுக்குழு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும் எனத் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை அரசின் மூத்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் நேற்று விளக்கியுள்ளனர். இதனையடுத்தே இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் நேரடிப் பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

நாட்டின் தலைவர் என்பதற்கு அப்பால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற கோதாவில் இருந்து கொண்டு இந்தப் பேச்சை நடத்துவதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் என்றும் வெகுவிரைவில் இந்தப் பேச்சு இடம்பெறும் என்றும் தெரியவருகின்றது.

முறிவடைந்தது கூட்டமைப்பு – அரசு பேச்சுவார்த்தை

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது.

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றபோது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களை முன்வைக்குமாறு அரசதரப்பில் வலியுறுத்தப்பட்டதையடுத்தே பேச்சுவார்த்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இடம்பெற்ற 14 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இவ்விவகாரம் ஆராயப்பட்டு இணக்கப்பாடு ஒன்று காணப்பட்டது.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களின் போது காணப்படும் இணக்கப்பாட்டை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சமர்ப்பிப்பதெனவும் அச்சந்தர்ப்பத்தில் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் தமது உறுப்பினர்களின் பெயர்களை உடன் வெளியிடுமாறு கூட்டமைப்பினரை அரச தரப்பு கோரியதையடுத்தே பேச்சுக்களில் முறுகல் நிலை ஏற்பட்டது.

கூட்டமைப்பினர் அவ்வாறு தமது உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியி டவில்லை எனில் தம்மால் பேச்சுக்களைத் தொடரமுடியாது என அரச தரப்பினர் கூற, இணக்கப்பாடு எட்டப்பட்டு அதனைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்வைப்பதற்கு முன்னதாக தம்மால் பெயர் விபரங்களைத் தர முடியாது என கூட்டடைப்பு உறுதியாகக் கூற பேச்சுக்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பிலான அறிக்கை ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் 1, 06, 14, 15ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதலாம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு தெரிவுக்குழு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை திரும்பினார் கனிமொழி கருணாநிதி வரவேற்பு

7 மாத இடைவெளிக்குப் பிறகு டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார் கனிமொழி எம்.பி. அவரை திமுக தலைவர் கருணாநிதி விமான நிலையத்துக்கு நேரில் போய் வரவேற்றார்.

2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் 194 நாட்கள் இருந்த அவர் கடந்த மாதம் 28-ந்தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேர் ஜாமீன் பெற்றனர்.

29-ம் இரவு 7 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே தங்கி இருந்தார்.

இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் 200 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பினார். காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.

கருணாநிதி

பிற்பகல் 12 மணி அளவில் கனிமொழி சென்னை வந்து சேர்ந்தும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையம் சென்று வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கனி மொழியை வரவேற்க விமான நிலையம் சென்றனர்.

கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

தி.மு.க. கொடிகளும் பேனருடன் இடம் பெற்றிருந்தன. ‘மானமிகு கனிமொழி கருணாநிதி அவர்களே வருக, இயக்கத்தின் தியாகமே, ஏழைகளின் இதயமே வருக… வருக.., எறும்புக்கும் தீங்கு இழைக்காத உனக்கு இத்தனை துயரங்கள் எதற்கு?’ என்பன போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

ஒஸ்திக்கு சிக்கலா? - தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்


ஒஸ்தி படத்துக்கு சிக்கல் என்றும், தியேட்டர் தர மறுப்பதாகவும் வந்த செய்திகளில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

தரணி இயக்கத்தில் சிம்பு - ரிச்சா நடிப்பில் உருவாகியுள்ள ஒஸ்தி படம், வரும் 8-ம் தேதி வெளியாகப்போவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் படத்தை சன் டிவிக்கு விற்றிருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர் தர மறுப்பதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் சங்கம், சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து விடுத்துள்ள ஒரு அறிக்கையில், "ஒஸ்தி படத்துக்கு மேற்கண்ட அமைப்புகளில் உள்ள எவரும் எந்த வித தடையையும் விதிக்கவில்லை. எனவே அந்தப் படம் வெளியாவதில் சிக்கல் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன், செயலாளர் பி எல் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

வில்லன் நடிகர் ரவிமரியா படுகாயம்


சண்டை காட்சியில் நடித்தபோது, வில்லன் நடிகர் ரவிமரியா கழுத்தில் அடிபட்டதால் படுகாயமடைந்தார்.

குருராஜன் தயாரிக்க, நந்தா பெரியசாமி டைரக்டு செய்து வரும் படம், 'அழகன் அழகி.' இந்த படத்தில் புதுமுகங்கள் ஜாக்-ஆருஷி கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். வில்லனாக ரவிமரியா நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையை அடுத்த பொழிச்சலூர் காட்டில் நடந்தது.

கதாநாயகனும், கதாநாயகியும் தப்பி ஓடுவது போலவும், அவர்களை ரவிமரியா விரட்டி வருவது போலவும் ஒரு காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

100 கிலோ எடையுள்ள ஒரு மரக்கட்டையால் கதாநாயகன் ஜாக், வில்லன் ரவிமரியாவை அடிப்பது போல் ஒரு காட்சியை படமாக்கியபோது, அது தவறி ரவிமரியாவின் கழுத்தில் விழுந்தது. அடி பலமாக இருந்ததால், ரவிமரியா சுருண்டு விழுந்தார். அடிபட்ட இடத்தில், பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் உறைந்தது.

இதனால், படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ரவிமரியாவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்தனர்.

முல்லைத்தீவுப் பாடசாலையில் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழ தேசியக் கொடி


முல்லைத்தீவு கல்லாறு பாடசாலையில் மைதானத்தில் கடந்த மாவீரர் தினத்தன்று தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்ததாக, அங்குள்ள பொதுமக்கள் ஈழம் டெய்லியின் வன்னிச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

26ஆம் நாள் இரவு ஏற்றப்பட்ட தமிழீழ தேசியக்கொடி மறுநாள்வரை மைதானத்தில் பட்டொளி வீசி பறந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு கோபத்துடன் விரைந்த சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினர் தமிழீழ தேசியக் கொடியை இறக்கி தம்முடன் எடுத்து சென்றதுடன், விசாரணைக்கென 50 இற்கும் மேற்பட்ட இளையோர்களை அழைத்து சென்று கடும் விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

அதிகாலையில் பாடசாலை மைதானத்தில் பறந்த தமிழீழ தேசியக் கொடியை மக்கள் அமைதியாக தரிசித்து சென்றதாகவும், 2009ஆம் ஆண்டின் பின்னர் தமிழீழ தேசியக் கொடி வன்னிக் காற்றில் அசைந்தாடக் கண்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாகவும் நேரில் பார்த்வர்கள் கூறினர்.

இதேநேரம், கிளிநொச்சி மேற்கு வலைப்பாட்டில் 26ஆம் நாள் இரவு மாவீரர் நினைவு மண்டபம் ஒன்று சிவப்பு மஞ்சள் தேசிய நிற கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும், அதிகாலை அப்பகுதிக்கு வந்த படையினர் மக்களை தாக்கி அவற்றை அப்புறப்படுத்தி எடுத்து சென்றதாகவும் மேலும் அறிய முடிகின்றது.

இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள போராளி ஒருவர் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்காவுக்கு மீண்டும் கடினமான காலம் ஆரம்பமாகின்றது என்பதற்கு இவை சான்றாகவும், சமிக்கையாகவும் காணப்படுகின்றது எனக் கூறினார்.

போர் மரபுகளை மீறி இன அழிப்பு மூலம் தமிழ் மக்களின் உரிமைப்போரை பலவீனப்படுத்தியுள்ள சிறீலங்கா, அந்த வெற்றிக்கழிப்பில் நீண்டகாலம் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முடியாது என்பது இம்முறை மாவீரர் வாரத்தில் மக்களால் தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது எனவும் அந்தப் போராளி ஈழம் டெய்லியின் செய்தியாளிடம் சுட்டிக்காட்டினார்.

தாயகத்தில் உள்ள மக்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் துணிவாக முன்வைத்துவரும் இந்தக் காலப்பகுதியில், புலம்பெயர்ந்த மக்களின் செயற்பாடுகள் இனவழிப்பு, மற்றும் போர்க் குற்ற அரசாங்கத்தை நீதியின் முன்னிறுத்தவும், தாயக மக்களின் மீள்கட்டுமானத்திற்கு உதவியாகவும் அமைய வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த மக்கள் இவற்றிலேயே தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் அந்தப் போராளி மேலும் சுட்டிக்காட்டினார்.

மகிந்தாவுக்கு சம்மந்தரின் நட்புத்தான் அதிகம் பிடிக்குமாம்..!

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேரடிப் பேச்சு நடத்துவதற்கு மகிந்தர் தயாராகி வருகிறார் என்று தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இல்லாமல் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முழுமையடையாது எனக் கருதும் மகிந்தர்,சம்பந்தனுடன் நேரடிப் பேச்சு நடத்தி இதனை விளக்கும் அதேசமயம் அதில் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முன்வருமாறு வலியுறுத்துவார் என்று மகிந்தாவுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக நேற்றுமுன்தினம் கருத்து தெரிவித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இரு தரப்புப் பேச்சுகளில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர்தான் தெரிவுக்குழு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும் எனத் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை அரசின் மூத்த அமைச்சர்கள் மகிந்தரிடம் நேற்று விளக்கியுள்ளனர். இதனையடுத்தே இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் நேரடிப் பேச்சு நடத்த மகிந்தா தீர்மானித்துள்ளார்.

நாட்டின் தலைவர் என்பதற்கு அப்பால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற கோதாவில் இருந்து கொண்டு இந்தப் பேச்சை நடத்துவதற்கு மகிந்தர் உத்தேசித்துள்ளார் என்றும் வெகுவிரைவில் இந்தப் பேச்சு இடம்பெறும் என்றும் தெரியவருகின்றது.

எது எப்படியோ மகிந்தாவுக்கு அதிகம் சம்பந்தன் தேவாரம் அதிகம் பிடிக்கும்.

Thursday 1 December 2011

முதியவர்களை கொலைசெய்த இந்தியப் படை - அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம் 9)

விடுதலைப் புலிகளுடன் சண்டைகள் மூளும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும் அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்தனர்.

ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவு இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த பரசூட் தரையிறக்கத் தாக்குதல் நடவடிக்கை மட்டும் இந்தியப் படையினர் நினைத்தபடி வெற்றிகரமாக நடைபெற்றிருந்தால், அவர்களது எண்ணம் நிச்சயம் ஈடேறியிருக்கும். ஆனால் புலிகளின் எதிர்த்தாக்குதலும் அதில் புலிகள் அடைந்திருந்த வெற்றியும் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தமது யாழ் முற்றுகையின் இரண்டாம் கட்டத்திற்கு செல்வதற்கு முற்பட்ட போதிலும், அதுவும் அவர்களுக்கு ஈடேறவில்லை. யாழ் கோட்டையில் இருந்து நகர்வினை மேற்கொண்டு யாழ் நகரைக் கைப்பற்றுவதும் அவர்களுக்கு முடியாது போயிருந்தது. யாழ் கோட்டை வாயில்களை அடுத்து புலிகள் அமைத்திருந்த பலமான கட்அவுட் நிலைகள் இந்தியப் படையினரின் எந்தவொரு நகர்வினைவும் சாத்தியமற்றதாக்கியிருந்தது.

யாழ் கோடைக்குள்ளிருந்த இந்தியப் படையினர் வெளியே நகரமுடியாது தவித்ததானது அவர்கள் ஒரு முற்றுகைக்குள் உள்ளானது போன்ற ஒரு பீதியை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. யாழ் கோட்டைக்குள் அடைபட்ட நிலையில் இருந்த இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் இதுபோன்ற ஒரு அனுபவம் அவர்களுகளுக்கு முன்னெப்போதுமே ஏற்பட்டதில்லை.

முகாமொன்று பூரண முற்றுகைக்கு உள்ளாகி, அந்த முகாமிற்குள் அடைபட்டிருந்த அனுபவம் இந்தியப் படையினருக்கு முன்னெப்போதும் ஏற்பட்டதேயில்லை. அதுவும் வேற்று நாடொன்றில் இவ்வாறு அநாதரவாக விடப்பட்டது போன்றதொரு நிலை அவர்களைக் கதிகலங்க வைத்தது.

போதாததற்கு கோட்டையில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் புலிகள் பற்றியும் தமிழ் மக்கள் பற்றியும் இந்தியப் படையினரின் பயத்தை அதிகரிப்பது போன்ற கதைகளை அவிழ்த்துவிட்டிருந்தார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் இருந்து ஒரு காரியத்தை மட்டும் ஒழுங்காகச் செய்தார்கள். யாழ் நகரிலுள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சகட்டுமேனிக்கு செல் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அங்கிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் அதற்கு உற்சாகம் வழங்கினார்கள்.

விளைவு- பல தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. தமிழ் மக்கள் மறுபடியும் ஒரு அகதி வாழ்க்கையை நோக்கிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

படுகொலைகளின் அத்தியாயங்கள்:

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கும், யாழ் கோட்டையினுள் அடைபட்ட நிலையில் புலிகளின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த இந்தியப் படையினரை மீட்பதற்கும், புலிகளை ஒழிப்பதற்கும் என்று இந்தியப் படையினர் பலாலியில் இருந்து பல முனைகளிலும் நகர்வுகளை ஆரம்பித்திருந்தார்கள்.

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினுடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும் ஜே.எஸ்.டிலானும் அந்தப் படைப்பிரிவை தலைமை தாங்கி வழி நடாத்திக் கொண்டிருந்தார்கள். இந்தப் படைப்பிரிவு உரும்பிராய் பிரதேசத்தை வந்தடைந்தபோது மற்றொரு அனர்த்தம் நிகழ்ந்தது.

பாதையூடாக நகர்வினை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் படுகொலைகளின் அத்தியாயமொன்று தமிழ் மக்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டது.

கண்ணிவெடிச் சம்பவத்தை அடுத்து இந்திய இராணுவத்தினர் கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றார்கள். பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பலவும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. அச்சத்தின் காரணமாக வீடுகளைப் பூட்டிவிட்டு வீட்டினுள்ளேயே மறைந்திருந்தவர்களை கதவுகளை உடைத்துக்கொண்டு உட்சென்ற இந்தியப்படையினர் சுட்டுக்கொன்றார்கள்.

உரும்பிராய் பிரதேசத்தில் 93 வயது மூதாட்டி உட்பட நான்கு பெண்கள் தங்கியிருந்த ஒரு வீட்டினுள் புகுந்த இந்தியப் படையினர் அங்கிருந்த நான்கு பெண்களையும் கொடூரமாகச் சுட்டுக் கொன்றார்கள். நோய் காரணமாக படுக்கையில் இருந்த மூதாட்டி கட்டிலில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். மற்றயை இளம் பெண்களின் சடலங்கள் வீட்டின் பின்பகுதியில் இருந்து பின்னர் கண்டெடுக்கப்பட்டன.

உரும்பிராய் சந்திக்கு வடக்கே ஐம்பது யார் தொலைவில் இலங்கை திருச்சபைக்கு எதிரே இருந்த பொன்னம்பலம் என்பவருக்குச் சொந்தமான வீடொன்றினுள் அயலில் வசித்த சிலர் அடைக்கலம் தேடிச் சென்றிருந்தார்கள். ஆசிரியரான பஞ்சாட்சரம் என்பவருடைய குடும்பம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான பிரேமா, அவரது தாயான திருமதி சின்னத்துரை போன்றவர்களும் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்திருந்தார்கள்.

பொன்னம்பலத்தின் குடும்பத்தினர். மற்றும் அடைக்கலம் தேடி வந்தவர்கள் என்று மொத்தம் 11 பேர் அங்கு தங்கியிருந்தார்கள். அந்த வீட்டை சூழ்ந்துகொண்ட இந்தியப் படையினர், வீட்டில் தங்கியிருந்த அனைவரும் உடனடியாக வெளியே வரவேண்டும் என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உத்தரவு பிறப்பித்தார்கள். வெளியே வராவிட்டால் வீட்டையே குண்டுவீசித் தகர்த்துவிடப் போவதாகவும் எச்சரித்தார்கள்.

வேஷ்டி ஒன்றைக் கிழித்து வெள்ளைக் கொடி தயார் செய்த பொன்னம்பலம், அந்தக் கொடியை கையில் ஏந்தியபடி வீட்டை விட்டு வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து வீட்டிலிருந்த மற்றவர்களும் வெளியே வந்தார்கள்.

“பையா“| என்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. திருமதி சின்னத்துரை, பொன்னம்பலம் தவிர மற்றவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.

திருமதி சின்னத்துரையின் கணவர் தனது மனைவியையும், மகள் பிரேமாவையும் பாதுகாப்பாக பொன்னம்பலத்தின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு உரும்பிராய் சந்தியிலிருந்த தனது வீட்டியேயே தங்கியிருந்தார். “கவலைப்படாதேயும் அவையள் சண்டை பிடிக்கவந்த இராணுவத்தினர் இல்லை. அவையள் அமைதிகாக்கும் இராணுவத்தினர். நான் அவர்களுக்கு விளங்கப்படுத்துவேன்“ என்று மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலேயே தங்கிவிட்டார். அவரும் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

வயது முதிந்தவர்களும், பெண்களும், குழந்தைகளுமே இப்பிரதேசத்தில் அனேமாகக் கொல்லப்பட்டிருந்தார்கள். இளைஞர்கள் ஏற்கனவே அப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இருந்ததால் இளைஞர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் குறைவு என்றே கூறவேண்டும்.

தொடர்ந்த கொலைகள்:

அப்பிரதேசத்தில் இருந்த வீடொன்றில், யாழ் பல்கலைக்கழக மாணவியான அம்பிகா என்ற பெண்ணின் தாயாரும், பாட்டியும் மலையகத்தைச் சேர்ந்த வயதான வேலைக்காரர் ஒருவரும், மற்றொரு முதியவரும் வசித்து வந்தார்கள். அப்பிரதேசத்தில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, வீட்டைப் பூட்டிவிட்டு கட்டில்களின் கீழேயும் மேசைகளின் கீழேயும் மறைந்திருந்த அந்த முதியவர்கள் தங்களது வீட்டைக் கடந்து யுத்த தாங்கியும் இந்தியப் படையினரும் செல்வதை இரைச்சலின் மூலமும் பேச்சொலிகள் மூலமும் அறிந்துகொண்டார்கள். இந்த அரவங்கள் ஓய்ந்து சிறிது நேரத்தின் பின்னர், அந்த வீட்டில் இருந்த முதியவர் மெதுவாக எழுந்து வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று நிலமையை அவதானிப்பதற்கு எத்தனித்தார்.

அங்கிருந்த எவருமே இந்தியப் படையினருக்கு கொஞ்சமும் பயப்படவில்லை. சண்டைகளின் இடைநடுவில் சிக்குண்டுவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருந்ததே தவிர, ஸ்ரீலங்கா இராணுவம் போன்று இந்தியப் படையினர் அப்பாவி மக்களை கொலைசெய்துவிடுவார்கள் என்ற அச்சம் அங்கிருந்த முதியவர்களுக்குச் சிறிதும் கிடையாது.

வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் எட்டிப் பார்த்த முதியவரை நோக்கி ஒரு துப்பாக்கிச் சன்னம் சீறிக்கொண்டு புறப்பட்டது. இந்திய யுத்த தாங்கியின் பின்னால் மறைந்தபடி வந்திருந்த படை வீரர்களில் சிலர் அப்பிரதேசத்தில் ஏற்கனவே பதுங்கி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒருவனே முதியவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தான். எந்தவித சத்தமும் இடாது அந்த முதியவர் சரிந்து கீழே வீழ்ந்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் சில இந்தியப் படை வீரர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த அம்பிகாவின் தாயாரையும், பாட்டியையும் சுட்டுக்கொன்றார்கள். முதலாவது வெடிச் சத்தம் கேட்டதுமே நிலமையைப் புரிந்துகொண்டு மறைவிடம் ஒன்றினுள் பதுங்கிக்கொண்ட அந்த மலையக வேலையாள் மட்டும் உயிர் தப்பியிருந்தார்.

இந்தியக் கொலைகாரர்கள்:

இந்தியப் படையினர் அப்பிரதேசத்தில் அந்த இரண்டு நாட்களிலும் மேற்கொண்ட கொலைகள் எண்ணில் அடங்காதவை. பல படுகொலைச் சம்பவங்கள் அங்கு இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அனேகமான சம்பவங்கள் பற்றிய செய்தியை வெளியே தெரிவிப்பதற்குக் கூட எவருமே மிஞ்சாத வகையில் பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அங்கு இடம்பெற்றிருந்தன. அப்பிரதேச மக்கள் என்றுமே கண்டும், கேட்டும் அறிந்திராத அவலங்களை அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது.

அப்பிரதேசத்தில் வசித்து வந்த சிவப்பிரகாசம் என்ற நபர் முறிந்த பனை என்ற நூலின் ஆசிரியர்களிடம் கூறும்போது “எனது வீடு அமைந்திருந்த அரை மைல் சுற்று வட்டாரத்திற்குள் மாத்திரம் 18 பொதுமக்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டார்கள். இவர்களில் ஏழு பேர் மட்டுமே ஆண்கள், அவர்களும் 60 வயதைக் கடந்திருந்தவர்கள்” என்று தெரிவித்திருந்தார்.

நாற்பத்தேழு வயது வர்த்தகரான இலகுப்பிள்ளை ஏகாம்பரம், முப்பது வயதான அவரது மனைவி டொரத்தி, மூன்று வயது மகள் ஷெரின் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்து விழுந்து வெடித்த ஷெல்களால் அதிர்ச்சியுற்ற அவர்கள் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான கட்டிடம் ஒன்றில் தங்குவது நல்லது என்று நினைத்து வீட்டை விட்டு பின் வாசல் வழியாக வெளியே வந்தார்கள். அங்கு பதுங்கியிருந்த இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஏகாம்பரத்தின் வீட்டுக்கு அடுத்ததாக டொரத்தியின் மைத்துனி திருமதி சீனித்தம்பியின் வீடு இருந்தது. திருமதி சீனித்தம்பி, அவரது தாயார், அவரது சகோதரன், ஏழு வயதுக் குழந்தை ஒன்று என்று பலர் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்களது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த இந்தியப்படையினர் வீட்டில் இருந்த அனைவரையும் சுட்டுக்கொன்றார்கள். அவர்களது உடல்களையும் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்த ஏகாம்பரம் தம்பதிகளின் உடல்களையும் அருகில் காணப்பட்ட குழி ஒன்றினுள் போட்டு கிரவல் கற்களினால் மூடியிருந்தார்கள்.

சிறிது காலத்தின் பின்னர் அந்த குழியைத் தோண்டிய போது, ஏகாம்பரம் தனது குழந்தையை அணைத்தபடி எலும்புக்கூடாக காட்சியளித்ததாக ஊர்மக்கள் தெரிவித்தார்கள்.

இதேபோன்று அப்பிரதேசத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சோகச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. தங்களது இளம் பிள்ளைகளை பாதுகாப்பாக ஏற்கனவே வெளியே அனுப்பிவிட்டு வீடுகளில் தங்கியிருந்த வயது முதிந்தவர்களே அனேகமாக கொல்லப்பட்டிருந்தார்கள். வீடுகளுக்குள் நுழைந்த இந்தியப்படை வீரர்கள் அங்கு தங்கியிருந்த முதியவர்களை இரக்கம் இன்றிச் சுட்டுக் கொன்றிருந்தார்கள்.

அப்பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ற்கும் அதிகம் என்று உத்தியோகப்பற்றற்ற கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்காப் படைகளும் களத்தில்?

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இந்தியப் படையினாரின் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினரும் துணைபோயிருந்தது பற்றிய பல செய்திகள் அந்த காலகட்டத்தில் வெளியாகி இருந்தன.

இந்தியப் படையினர் யாழ்நகரை நோக்கி ஸ்ரீலங்காப் படையினரின் உதவிகளையும் பெற்றிருந்த விடயம் அப்பொழுது மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. தமிழ் நாட்டில் எதிர்ப்புக்கள் உருவாகிவிடும் என்பதால் இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் உதவிய விடயங்கள் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

ஆனாலும், இந்தியப் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஸ்ரீலங்காப் படையினர் பல சந்தர்ப்பங்களில் தம்மை மறந்த நிலையில் சிங்களத்தில் பேசிய தம்மை வெளிக்காண்பித்திருந்தார்கள்.

இந்தியப் படையினருக்கு வழி காண்பித்து அவர்களை அழைத்துச் சென்ற ஸ்ரீலங்காப் படையினருக்கு ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியாது, தமிழும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது சிங்களம் மட்டுமே.

மற்றய ஸ்ரீலங்காப்படை வீரர்களுடன் அவர்கள் சிங்களத்தில் பேசியதை வீடுகளில் மறைந்திருந்த பல தமிழ் மக்கள் கேட்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியப்படையினர் மேற்கொண்டிருந்த படுகொலை நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களின் ஜென்ம விரோதிகளான சிங்களப் படையினரையும் துணைக்கழைத்துச் சென்றதானது ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய துரோகங்களுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.


தொடரும்...

nirajdavid@bluewin.ch

பெல்ஜியத்தில் மிக உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் 2011 (படங்கள்)

பெல்ஜியத்தில் 30-11-2011 அன்றுதேசிய நினைவெழுச்சி நாள் வெகுசிறப்பாக நடைபெற்றது.பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் தேசியக்கொடியேற்றல் பின் மாவீரர் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சுடரேற்றல்இ அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தி கண்ணீர் மல்க மாவீரர் குடும்பங்கள் தமது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தினர்.

பின் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பன இடம்பெற்றன. மண்ணின் விடிவிற்காய் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி மண்டபம்நிறைந்த தமிழ் உறவுகள் இம்மாவீரர் நிகழ்விலே கலந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி மன நிறைவுடன் அமைதியாக நிகழ்வுகளில் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து மாவீரர் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பெல்ஜியத்தின் இடதுசாரி கட்சியின் முக்கிய உறுப்பினர் உணர்வுகரமாக பெல்ஜியம் நாட்டு மொழியில் உரையாற்ற தமிழ் மக்கள் அனைவரும் பெறும் மகிழ்ச்சி அடைந்தனர்.பெல்ஜியம் நாட்டு இளையோர் அமைப்பு அரங்கேற்றிய முள்ளியவாய்க்கள் முடிவா இல்லை தமிழ் ஈழம் தான் முடிவு என்னும் நாடகம் தமிழ் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பையும் பெற்றதோடு தமிழ் உணர்வை துண்டியதொடு நீங்காத இடமும் பிடித்தது.

அந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து யேர்மனி நாட்டு இசைக்குழுவுடன் சேர்ந்து பெல்ஜியம் நாட்டு இசைக்குழுவும் இணைந்து எழுச்சி கானங்கள் இசைக்கப்பட்டது.தமிழ் ஈழ கணவை அடையும் வரை நங்கள் தொடர்ந்து போரடுவம் என்ற உறுதி மொழியுடன் இசைக்குழு நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும் என்னும் உணர்வு மிக்க பாடலை பாடி தனது நிகழ்வை நிறைவு செய்யப்பட்டது.






லண்டனில் அடையாளம் தெரியாக நபர்களின் கத்திக்குத்தில் ஈழத்து இளைஞன் பலி

லண்டன் விவர்பூல் பகுதியில் ஈழத்தமிழரின் கடையில் பணியாற்றிவந்த இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாமல் வந்த இளைஞர்களின் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்தபகுதியில் ஈழத்தமிழரின் கடையில் பணியாற்றிய 30 அகவையுடைய ஈழத்தமிழ் இளைஞன் நேற்று முன்னாள் வழமைபோல் பணியாற்றிக்கொண்டிருக்கையில் முகத்திற்கு கறுத்த துண்டு கட்டிவந்த இளைஞர்கள் குறித்த இளைஞனின் களுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்கள். இவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துசென்ற போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோயின்கள் இடையே சண்டை மூட்டாதீர்கள் : அஞ்சலி கோபம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜோடியாக நடித்த ஜெய்க்கும் அஞ்சலிக்கும் காதல் என்று வதந்தி பரவியது. இல்லவே இல்லை என்று அஞ்சலி மறுத்தார். இந்நிலையில் 3 ஹீரோயின்கள் படத்தில் அஞ்சலி நடிப்பதால் அதில் அவர் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார் என்று கிசுகிசு கிளம்பி உள்ளது. இதுபற்றி அஞ்சலி கூறியதாவது: நடிகருடன் காதல் என்று வதந்தி பரப்பி அதற்கு இப்போதுதான் மறுப்பு சொன்னேன். இதற்கிடையில் ஹீரோயின்களுக்குள் சண்டை மூட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலிடம் யாருக்கு என்கிறார்கள். முதல், இரண்டாவது என்று ஏன் பிரிக்கிறார்களோ தெரியவில்லை. 3 ஹீரோயின்களுக்கும் சமமான ரோல் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். சோழ வரலாற்று பின்னணியில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறேன். குதிரை ஏற்றம், சண்டை காட்சிகளில் நடிக்க பயிற்சி பெற்று வருகிறேன். இம்மாதம் 10ம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது. விக்ரமுடன் நடிக்கும் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக உள்ளன. இவ்வாறு அஞ்சலி கூறினார்.


தாண்டவம் ஆக்சன் பின்னணி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய் இயக்கும் தாண்டவத்தில் எமி ஜாக்சனுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபுவும் நடிக்கிறார். ஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு அதிக ஆதரவு இருப்பதால் ஒரு தெலுங்கு நடிகரையும் படத்தில் இழுத்துப் போடடுவதால் வியாபார உத்தரவாதம் இரட்டிப்பாகிறது. தெய்வத்திருமகளுக்கு மாறாக தாண்டவம் ஆக்சன் பின்னணியில் தயாராகிறது. ‌ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வெளிநாட்டில் கணிசமான காட்சிகள் எடுக்க இருக்கிறார்கள்.



"ஒஸ்தி" படத்தை பாராட்டிய ரஜினி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சூப்பர்ஸ்டார் ரஜினினாந்த்திடம் 'ஒஸ்தி' பட டிரெய்லரை பார்க்க சொன்னாராம். உடனே நம்ம சூப்பர் ஸ்டார் 'ஒஸ்தி' பட டிரெய்லரை பார்த்து விட்டு ஒஸ்தி படக்குழுக்கு பாராட்டுகளை தெரிவித்தாராம்-. இயக்குனர் தரணியின் முந்தைய படங்களான தில், தூள், கில்லி படங்கள் தனக்கு மிகவும் பிடித்த படங்கள் எனக் கூறிய ரஜினி, ஒஸ்தி படத்தை மாஸ் எ‌ண்டர்டெய்னர் என்ற பாராட்டியுள்ளார்.


மணிரத்னம் அடுத்த பட தகவல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மணிரத்னம் அடுத்து என்ன படம் எடுக்கிறார் என்று அவர் தரப்பிலிருந்து இதுவரை செய்தியில்லை. படம் எடுக்கிறாரா என்றுகூட கேள்விகள் வருகின்றன. இந்நிலையில் வைரமுத்து வாய்ஸ் தந்திருக்கிறார். மணிரத்னத்தின் புதிய படத்துக்கு வைரமுத்து முதல் பாடலை எழுதியிருக்கிறார். பாடலுக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.




‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இந்நிலையில், ஐஸ் குழந்தையின் போட்டோவை யார் முதலில் வெளியிடுவது என்ற போட்டி மும்பை பத்திரிகை, மீடியாக்கள் மத்தியில் நிலவுகிறது. ஐஸ்வர்யா உலகப்புகழ் பெற்றவர் என்பதால், வெளி நாட்டு மீடியாக்களும் குதித்திருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி, குழந்தையின் போட்டோவை வெளியிட அவை பேரம் பேசி வருகின்றன. இதுவரை அமிதாப் மசியவில்லை. அதிக பணம் தரும் பெரிய மீடியா நிறுவனங்களுக்கு பேத்தி படத்தை அமிதாப் தர வாய்ப்பு இருப்பதாக பாலிவுட்டில் தகவல் பரவுகிறது.


ரஜினியுடன் ஹட்‌ரிக் அடிக்கும் பீட்டர் ஹெய்ன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிவாஜி, எந்திரன் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஹட்ரிக் அடிக்கப் போகிறார். ரஜினியின் அடுத்த படம் 'கோச்சடையன்'. 3டி-யில் தயாராகும் வரலாற்றுப் படமான இதில் ர‌ஜினி நடிக்கிறார் என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது. ஹீரோயின் யார் என்பதுகூட முடிவாகாத நிலையில் பீட்டர் ஹெயினை ஸ்டண்ட் மாஸ்டராக அறிவித்திருக்கிறார்கள். ர‌ஜினி படத்தைப் பொறுத்தவரை மாஸ்டருக்கு இது ஹாட்‌ரிக்.



டேம் 999: தமிழக அரசின் தடையை எதிர்த்து இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு


திருவனந்தபுரம்: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதை எதிர்த்து அப்படத்தின் இயக்குனர் சோஹன் ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்றும், அதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவது போன்றும் எடுக்கப்பட்டுள்ள படம் டேம் 999. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. இதையடுத்து அந்த படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.

தமிழகம் தவிர இந்தியா முழுவதும் டேம் 999 ரிலீஸானது. தற்போது தமிழக அரசின் தடையை எதிர்த்து படத்தின் இயக்குனர் சோஹன் ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

பிரேசில், சீனா போன்ற நாடுகளில் அணைகள் உடைந்ததால் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் டேம் 999 படத்தை எடுத்தேன். அதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது நியாயமற்றது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த சோஹன் ராய், தமிழகத்தில் டேம் 999 படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு மற்றும் தமிழக அரசின் தடையால் அந்த படத்திற்கு நாடு முழுவதும் நல்ல விளம்பரம் கிடைத்ததாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான் ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் - சௌந்தர்யா!


சிவாஜி, எந்திரனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான கோச்சடையானுக்கும் ஸ்டன்ட் இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார் பீட்டர் ஹெயின்.

இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் சௌந்தர்யா அஸ்வின் நேற்று வெளியிட்டுள்ளார்.

இத்துடன் தொடர்ந்து ரஜினியின் மூன்று படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பினை பீட்டர் ஹெயின் பெற்றுள்ளார்.

முன்பெல்லாம் ரஜினி வருடத்துக்கு மூன்று நான்கு படங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது இது பெரிய விஷயமில்லை. அப்போதெல்லாம் ஜூடோ ரத்தினம் ரஜினியின் நிரந்தர ஸ்டன்ட் மாஸ்டர்.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்று மாறிய பிறகு, ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கப்படுவதால், பீட்டர் ஹெயின் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளார்.

நாயகி அனுஷ்கா?

கோச்சடையான் நாயகி யார் என்பதை இன்னும் ரஜினி தரப்பில் அறிவிக்கவில்லை. இயக்குநர் மேற்பார்வை பொறுப்பை ஏற்றுள்ள கே எஸ் ரவிக்குமார், "அனுஷ்காவிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் முடிவாகவில்லை," என்று கூறியிருந்தார்.

மேலும் இரு நாயகிகளிடமும் கோச்சடையான் குழு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

சிரஞ்சீவி மகன் ராம் சரணுக்கு இன்று நிச்சயதார்த்தம்!


ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபாஸனாவுக்கும் இன்று மாலை நிச்சயதார்த்தம் நடக்கிறது.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரபல நடிகரப் சிரஞ்சீவி யின் மகன் ராம்சரண். தெலுங்கில் பிரபல நடிகர். சில வாரங்களுக்கு முன் ராம்சரணுக்கு திருமணம் முடிவானது. மணமகள் உபாஸனா. இவர் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி.

ராம்சரண்-உபாஸனா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் இன்று மாலை நடக்கிறது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிச்சயதார்த்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோரையும் அழைத்துள்ளதாக சிரஞ்சீவி குடும்பத்தினர் தெரிவித்தனர். அரசியல் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவையொட்டி பண்ணை இல்லம் அமைந்துள்ள பகுதியி்ல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கமல் தலைமையில் ஃபிக்கி மாநாடு... கவர்னர் ரோசய்யா தொடங்கி வைத்தார்!


சென்னை: இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் திரைப்படங்கள் சார்ந்த ஊடகம் மற்றும் தொழில்துறை மாநாடு சென்னையில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.

நடிகர் கமல் ஹாஸன் தலைமையில் 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் நடிகை திரிஷா குத்து விளக்கேற்றினார். பிக்கி அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜீவ்குமார் வரவேற்று பேசினார்.

தமிழக ஆளுநர் ரோசய்யா விழாவில் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.

"இந்திய திரையுலகில் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச சினிமாவுக்கு நிகராக இந்திய திரையுலகம் வளர்ச்சியடைந்து வருகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களையும் மக்களுக்கு கருத்துக்கள் சொல்லும் படங்களையும் தயாரிக்க வேண்டும்," என்றார்.

தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் நடிகர் கமலஹாசன் மாநாட்டில் பங்கேற்று பேசுகையில், "டிஜிட்டல் சினிமா வளர்ந்தால் அரசுக்கு வருமானம் பெருகும். திரையுலகம் டிஜிட்டல் சினிமா மாற்றத்துக்குள் வந்தே தீரும்," என்றார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், டைரக்டர் பாலச்சந்தர், யு.டி.வி. சேர்மன் ரோனிஸ் க்ரூவாலா, சேம்பர் தலைவர் கல்யாண், பிக்கி அமைப்பின் தமிழக தலைவர் ரபீக் அகமது ஆகியோர் பேசினர்.

Wednesday 30 November 2011

நடிகர் ஜெய்க்கு வந்த சிக்கல்... அறிக்கைக்கு புதிய விளக்கம்!


ஒரு நடிகையை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று நடிகர் ஜெய் அறிவித்தது அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

நடிகை என்றால் அவ்வளவு கேவலமா என்று திரையுலகில் கண்டனக் குரல் ஒலித்ததால் தனது அறிக்கைக்கு புதிய விளக்கம் தந்துள்ளார்.

அஞ்சலிக்கும் ஜெய்க்கும் காதல் என்ற செய்தி பரவியதால், இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் என அஞ்சலியும், அஞ்சலியை நான் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணவும் மாட்டேன் என்று ஜெய்யும் மாறி மாறி அறிக்கை விட்டனர். ஜெய் ஒரு படி மேலே போய், வாழ்க்கையில் ஒரு நடிகையை திருமணம் செய்வதாக இல்லை என்று கூறிவிட்டார். இது சக நடிகைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நடிகைகளை திருமணம் செய்ய மாட்டேன் என்றால் என்ன அர்த்தம் நடிகைகள் பற்றி அவதூறாக பேசுவதா? என்றெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது. ஜெய்யுடன் நேரில் பேசியும் கண்டித்தனர்.

இதையடுத்து தனது அறிக்கைக்கு ஜெய் அளித்துள்ள விளக்கம்:

நடிகை பற்றி நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டுள்ளனர். நான் சொல்ல வந்த அர்த்தம் வேறு.

நான் நடிகன் என்பதால் உள்ளூர்-வெளியூர் என்று படப்பிடிப்பில் இருப்பேன். என் மனைவியும் பிசியான நடிகையாக இருந்தால் சந்தோஷமாக இருக்குமா? என்ற அர்த்தத்தில்தான் நடிகையை திருமணம் செய்ய கொள்ள மாட்டேன் என்றேன். மற்றபடி நடத்தை பற்றியோ ஒழுக்கம் பற்றியோ நான் எதுவும் பேசவில்லை," என விளக்கம் அளித்துள்ளார்.

யேர்மன் Monchengla​dbach தேசிய மாவீரர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)

யேர்மனியில் முன்சன்கிளட்பாக்(mönchengladbach) நகரில் தேசிய மாவீரர் எழுச்சி நாள் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. மண்டபம் நிறைந்த மக்களுடன் மதியம் 1 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

தமிழீழ தேசியக்கொடியினை மாவீரன் லெப்டினட்கேணல் இம்றான் அவர்களின் சகோதரர் திரு. வல்லவசீலன் அவர்கள் ஏற்றிவைத்தார். யேர்மன் தேசியக்கொடியினை தமிழகத்திலிருந்து வருகைதந்த உணர்வாளர் அருட்தந்தை அரிமாவளவன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக அறிக்கை தமிழரின் தேசிய வானொலியான புலிகளின் குரல் வானொலி ஊடாக நேரடியாக ஒலிபரப்பாகியது.

அடுத்து அகவணக்கத்துடன் துயிலுமில்ல பாடல் இசைக்க மாவீரன் கரும்புலி மேயர் மிதுபாலன் அவர்களின் சகோதரி திருமதி கலாயோதி இராயேந்திரன் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினர் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக மாவீரத் தெய்வங்களுக்கு மலர்தூவி தீபமேற்றினர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை உறுதிதளராமல் விடுதலையின் பக்கம் செயற்பட்டுவருபவருமான வானதி நர்த்தனாலய ஆசிரியை கலாநிதி திருமதி வானதி தேசிங்குராஜா அவர்களின் நெறியாள்கையில் வானதி நர்த்தனாலய மாணவிகள் விடுதலைப்பாடல்களுக்கு நடனமாடினர்.

தொடர்ந்து தமிழீழத்தில் உருவாகி புலம்பெயர் தேசத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழீழம் இசைக்குழுவினரின் விடுதலை கானங்கள் இசைக்கப்பட்டது. அடுத்து தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த அருட்தந்தை அரிமாவளவன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.

அவர் தனது உரையில் மாவீரர்களின் கனவுகளை நனவாக்க பிரிவினைகளை மறந்து எல்லோரும் ஒன்றுபட்டு கடமைகளையும் பொறுப்புக்களையும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தமிழீழ வெளியீட்டுப் பிரிவினரால் இலட்சியம் வெல்வோம் என்னும் இறுவட்டு வெளியிடப்பட்டது. அதனை அருட்தந்தை அரிமாவளவன் அவர்கள் வெளியிட்டுவைத்தார்.

தொடர் நிகழ்வாக நாடுகடந்த தமிழீழ அரசின் துணை நிதிஅமைச்சர் திரு. இராயேந்திரா அவர்களின் உரையும் இடம்பெற்றது. தமிழகத்திலிருந்து தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் தோழர் மு.களஞசியம் அவர்களின் ஆக்கத்தில்” நிட்சயம் உருவாகும் பிரபாகர பிரபஞ்சம்” என்னும் கவிதை நிகழ்வு இடம்பெற்றது.

எழுச்சி நடனம் எழுச்சி கானங்கள் இடம்பெற்றது. இறுதியாக தமிழீழத் தேசியக் கொடியும் யேர்மனியத் தேசியக் கொடியும் இறக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழம் இசைக்குழவினர் மக்களுடன் இணைந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்க நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.




Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா