இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேரடிப் பேச்சு நடத்துவதற்கு மகிந்தர் தயாராகி வருகிறார் என்று தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இல்லாமல் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முழுமையடையாது எனக் கருதும் மகிந்தர்,சம்பந்தனுடன் நேரடிப் பேச்சு நடத்தி இதனை விளக்கும் அதேசமயம் அதில் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முன்வருமாறு வலியுறுத்துவார் என்று மகிந்தாவுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக நேற்றுமுன்தினம் கருத்து தெரிவித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இரு தரப்புப் பேச்சுகளில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர்தான் தெரிவுக்குழு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும் எனத் தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை அரசின் மூத்த அமைச்சர்கள் மகிந்தரிடம் நேற்று விளக்கியுள்ளனர். இதனையடுத்தே இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் நேரடிப் பேச்சு நடத்த மகிந்தா தீர்மானித்துள்ளார்.
நாட்டின் தலைவர் என்பதற்கு அப்பால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற கோதாவில் இருந்து கொண்டு இந்தப் பேச்சை நடத்துவதற்கு மகிந்தர் உத்தேசித்துள்ளார் என்றும் வெகுவிரைவில் இந்தப் பேச்சு இடம்பெறும் என்றும் தெரியவருகின்றது.
எது எப்படியோ மகிந்தாவுக்கு அதிகம் சம்பந்தன் தேவாரம் அதிகம் பிடிக்கும்.
No comments:
Post a Comment