Friday 30 December 2011

துருக்கியின் கோமாளித்தனம் 35 அப்பாவிகள் பலி

துருக்கி அரசு குர்டிஸ்தானிய மக்களுக்கு இழைத்துவரும் கொடுமை சொல்லி முடியாத சோகமாக உள்ளது.

நேற்று கிழக்கு துருக்கியில் உள்ள குர்டிஸ்தானிய மக்கள் வாழும் பகுதியில் துருக்கிய கட்டாக்காலி விமானங்கள் குண்டு வீசின. தம்மை நோக்கி எதிர்த்தாக்குதல் நடாத்தப்பட்ட காரணத்தால் இந்தத் தாக்குதலை நடாத்தியதாகவும், கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் துருக்கி ஓலமிட்டது. ஆனால் இன்று அதனுடைய செப்படி வித்தை சாயம் வெளுத்து உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது.

கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல பொது மக்களே என்ற உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. எப்போதுமே ஓர் இனத்திற்கு நயவஞ்சகமான கொடுமை இழைத்த நாடுகள் இப்படித்தான் தொழிற்படும். தாம் புரிந்த நயவஞ்சகத்திற்கு ஒரு காலமும் தமக்கு மன்னிப்பு கிடையாது என்ற உண்மை இந்த நாடுகளுடைய அடி மனதில் இருக்கும்.

ஆகவே எதிர்ப்பு இல்லாவிட்டாலும் போர் நடப்பது போன்ற நெருப்பை ஊதி எரித்தபடி இருக்கும். தமக்கு எதிரான உணர்வு மறை பொருளாக மூண்டு விடும் என்ற அச்சம் இவர்களுக்கு எப்போதுமே இருப்பதால் இவ்வாறு செய்வார்கள். ஈழத் தமிழர் விவகாரத்தில் யாவும் முடிந்து போனாலும் சிறீலங்காவும், இலங்கையும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக செயற்படுவதும் இது போன்ற விதியின் பாற்பட்டமே.

தன் நெஞ்சு தனக்கு தெரியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர்கள் செயற்படுகிறார்கள். ஈழத் தமிழர் நடந்ததை மறந்து உண்மையாக உறவு கொண்டாலும் இவர்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள். அது போலவே துருக்கியும் ஒரு போதும் குர்டிஸ்தானியரை நம்பப்போவதில்லை. இந்தக் குண்டு வீச்சு உணர்த்தும் உண்மை இதுவாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தால் நயவஞ்சகன் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய நிலை வரும் என்பதால் அவன் போர் முடிந்தாலும் நெருப்பை ஊதியபடி காலம் கடத்துவான் என்பது இயற்கை விதியாகும்.

ஜெவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தீர்மானம்

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னை அருகே வானரகத்திரல் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் மறைந்த அமைச்சர் கருப்பசாமி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

என்ன பேசுவதென்று தீர்மானிக்க பேச்சுவார்த்தை-சம்பந்தன் நிமால் சிறிபால டி சில்வா.


சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்தமாதம் நடத்தப்படவுள்ள பேச்சுக்களில் என்னென்ன விடயங்கள் குறித்துப் பேசுவதென்று இன்னமும் முடிவாகவில்லை என்று சிறிலங்கா அரசின் பேச்சுக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் பேச்சுக்களை நடத்தித் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அடுத்த சுற்றுப்பேச்சுக்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் 17ம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது ஆரம்பிக்கப்படும்.
அடுத்தமாத இறுதி வாரத்தில் மூன்று தடவைகள் பேச்சுக்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், அடுத்த சுற்றுப் பேச்சுக்களின் போது கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்துக் கலந்துரையாடி தீர்மானிப்பார்கள்.

எனினும், கடந்த மார்ச் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த விடயங்கள் குறித்தே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படும்“ என்றும் பேராசிரியர்

தானே புயலின் 135 கி. மீ. வேகம் (காணொளி இணைப்பு)

புதுச்சேரி - கடலூர் இடையே காலை 7 மணி அளவில் தானே புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும்போது 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி வரியாக நிலப்பரப்புக்குள் நுழைந்த புயல் திருவண்ணாமலை வழியாக சென்றது. திருவண்ணாமலை, தருமபுரியிலும் புயலால் இன்று முழுவதும் பலத்த மழை நீடித்தது. வேகம் குறையாத புயலால் பல இடங்களில் பலத்த காற்று வீசியது.

மெரினா கடற்கரை அருகே கப்பல் தரை தட்டியது

தானே புயல் காரணமாக, கரைப் பகுதிகளில் சேதம் ஏற்படக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக சரக்குக் கப்பல்கள் நடுக் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன. சென்னைத் துறைமுகப் பகுதிக்கு வந்த சரக்குக் கப்பல்கள் மீண்டும் கடல் பகுதிக்குள் திருப்பியனுப்பப் பட்டன.

இந்நிலையில், இன்று (30.12.2011) காலை புயல் காற்று பலமாக வீசியதில், நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்குக் கப்பல் அலையால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. மெரீனா கரைப்பகுதியில் நேப்பியர் பாலம் அருகிலுள்ள மதகுப் பகுதியில் அந்தக் கப்பல் தரை தட்டி நிற்கிறது. காற்று வேகமாக வீசுவதால் கப்பலை கடலுக்குள் இழுத்துச் செல்ல இயலவில்லை என்றும், கடல்சீற்றம் தணிந்தபிறகே கப்பலை மீட்டு கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடக்குமா நடராஜன் விழா?



வருடம்தோறும் பொங்கல் திருநாளில் தஞ்சாவூர் தமிழரசி மண்டபத்தில் தமிழ் திருநாள் நடத்துவது எம்.நடராஜனின் வழக்கம். இந்தமுறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததையடுத்து இந்த வருடத்தில் தமிழ் திருநாளை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தார் எம்.நடராஜன். இதற்கிடையில் சசிகலா, ஜெயலலிதா பிரிவு நிகழ எம்.என். விழா நடக்குமா? நடக்காதா? என்கிற பேச்சு அலையடிக்க ஆரம்பித்து விட்டது.

தற்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத அளவிற்க்கு தலைமறைவாகி இருக்கும் நடராஜன் பொங்கல் விழா குறித்து என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. 'அண்ணன் நிச்சயம் விழாவை வழக்கம் போல் நடத்துவார். கட்சியிலிருந்து கட்டம் கட்டிய ஜெயலலிதாவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்' என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் சசிகலாவின் உறவுக்காரர்கள். பதிலடி கொடுப்பாரா? இல்லை பதுங்கியே கிடப்பாரா? பார்க்கலாம். எம்.என்.. என்ன செய்ய போகிறார் என்று.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - சென்னை போலீஸ்


இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு
31.12.2011 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னை காவல் ஆணையாளர், சென்னை நகரில் உணவு விடுதி மற்றும் கேளிக்கை விடுதி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கீழ்க்காணும் நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள்:
* உணவு விடுதிகள் / கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
* புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் வளாகத்தினுள் அதற்காக அனுமதிக்கப்பட்ட அரங்கங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம், பொதுத் பணித் துறை மற்றும் தீயணைப்புத் துறையினரிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ மேடை அமைத்தல் கூடாது.
* நீச்சல் குளத்திற்கு செல்லும் வழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
* வாகனங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தும் இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளின் முடிவில், குடிபோதையில் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு நிர்வாகத்தினர் அனுமதிக்கக் கூடாது. உணவு / கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்களை சாலைகளில் நிறத்த நிர்வாகத்தினர் அனுமதித்தல் கூடாது. இவ்விதி மீறல் ஏதேனும் நிகழுமாயின், நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
* மது பானங்கள் அனுமதிக்கப்பட்ட குடிமையங்களைத் தவிர, இதர பகுதிகளில் பரிமாறுதல் கூடாது.
* உணவு மற்றும் மதுபான சேவை (உரிமத்துடன்) அதிகாலை 2 மணிக்குள் முடித்துக் கொள்ளப்பட வேண்டும். நேரக்கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.
* குடிபோதை மற்றும் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை உணவு விடுதி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.
* கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை இழிவாக கேலி செய்வதை தடுக்க, போதுமான ஊழியர்களை நியமித்தல் வேண்டும்.
* உணவு விடுதி வளாகத்தினுள் கண்டிப்பாக பட்டாசு வெடித்தல் கூடாது.
மேற்கூறிய விதிமுறைகளை மீறும் உணவு / கேளிக்கை விடுதி நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள்:
*பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது.
* இழிவான முறையில் கேலி மற்றும் கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பிறர்மீது வர்ணப் பொடிகள் / வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பொது மக்கள் தவிர்த்தல் வேண்டும்.
* குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
* இருசக்கர வாகனம் மற்றும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* பொதுமக்கள் கடலில் விளையாடுதல் மற்றும் படகுகளில் ஏறி கடலுக்குள் செல்ல முற்படுவதை தவிர்த்தல் வேண்டும்.
இவ்வாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தப்பி ஓடிய வீரனால் இராணுவீரன் சாவு.!!


வன்னி மாவட்டமான கிளிநொச்சி – சங்குபிட்டி – பூநகரி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொரு அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிகல் கப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

18வது கெமுனு படை முகாமைச் சேர்ந்த படை சிப்பாய் ஒருவர் முகாமில் இருந்து தப்பியோடியதாகவும் அவரை சக இராணுவ வீரர்கள் துரத்திச் சென்று பிடித்து வந்ததாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பிடித்து வந்து கொண்டிருந்த போது குறித்த சிப்பாய் சக இராணுவ வீரர் கைவசம் இருந்த துப்பாக்கியை எடுத்து சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டின்போது இராணுவ உப லெப்டினன் அதிகாரி ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததோடு, இராணுவ லெப்டினன் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிப்பாய் கைது செய்யப்பட்டு தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் கப்புஆராச்சி அத தெரண செய்திப் பிரிவிற்குத் தெரிவித்தார்.

உயிரையும் உள்ளத்தையும் உணர்வையும் ஒருங்கே ஒப்புவித்தவன் தான் வீரன் அவன் பணத்திற்க்காகவும் உயிர்பயத்திற்காகவும் துடிக்கும் ஒவ்வொரு வீரனும் வீரன் அல்ல அவர்கள் சக மனிதர்கள் என்ற நிலைக்குள் தான் வாழ முடியும்.

இலட்சிய முள்ள ஒவ்வெரு வீரனையும் போராட்டத்தில் திணிப்பதால் தோல்விகளும் பலகீனங்களும் தான் இலகுவாக விளையும் என்பதை அறிவுள்ள வீரன் அறிவான்.

எனவே..

வீரம் என்பது ஒவ்வொரு தனிமனித மானப்பிரச்சனை என்றால் மட்டும் இதை இலட்சியங்களாக ஏற்க முடியும். புரிந்தால் அவன் தான் மாவீரன்.!

Thursday 29 December 2011

மோட்டார் சைக்கிள் கொடுக்கமறுத்தவரை சுட்டுக் கொலை செய்த இராணுவம்!பூநகரியில் அராஜகம்


பூநகரி சங்குப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த இராணுவம் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்டு மோட்டார் சைக்கிள் சாரதியைப் படுகொலை செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வீதியில் நின்றிருந்த இராணுவம், வீதியில் பயணித்த குறித்த நபரை இடைமறித்து மோட்டார் சைக்கிளைத் தருமாறு கேட்டிருக்கின்றது. இந் நிலையில் அவர் அதற்கு உடன்பட மறுத்திருக்கின்றார். சம்பத்தினை அடுத்து குறித்த நபர் மீது இராணுவம் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அருகில் இருந்த இராணுவத்தினரால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், குறித்த சிப்பாயை சுட்டுக்கொல்லுமாறு குறித்த அதிகாரி ஏனைய சிப்பாய்களுக்கு அறிவித்த நிலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இராணுவச் சிப்பாயும் அருகில் இருந்த சிப்பாய்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக தற்போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் சிப்பாயும் கொல்லப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்திற்கு வேறு காரணங்களைச் சாட்டுவதற்கு படைத்தரப்பு முற்படலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஈபிடிபியின் ஏற்பாட்டில் யாழில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி!


யாழில் இடம்பெறவிருக்கும் இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறவிருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

இதன் ஏற்பாடுகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இந்தியத் உயர்ஸ்தானிகராலயமும் செய்து வருவதாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா

யாழில் இந்திய கலாச்சார மையம் அமைப்பதற்கான கட்டிட வரைபடம் யாழ். மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று யாழ்.

மாநகரசபை எல்லைக்குட்பட்ட நூலகத்தில் கட்டுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட 10ஆவது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் பரதிபலிக்கும் வகையில் இந்தியக் கலாச்சார மையம் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

இந்த இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2011- ன் சிறந்த மனிதர் வைகோ! - விகடன் விருது


2011 ஆண்டின் சிறந்த மனிதர்களை பட்டியல் போட்டு இருக்கிறது ஆனந்த விகடன் வார இதழ். அதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு இரண்டாவது இடம் கிடைத்து இருக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களின் வாக்களிப்பில் வைகோவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. வைகோவின் சமீபத்திய போராட்டங்களை வரிசைப்படுத்தி இருக்கும் விகடன், 'வைகோ ஒரு போராட்ட புயல்' என பாராட்டு பத்திரம் கொடுத்து இருக்கிறது.

உலகத் தமிழர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கும் விகடனின் பாராட்டு வார்த்தைகளை நீங்களும் படியுங்களேன்.



தமிழகத்தின் ஓயாத அலைகள்!

தேர்தல் அரசியலையே தூக்கி வீசிவிட்டு தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீறுகொண்டு முன் நின்ற வைகோ மீது மரியாதை பெருகி இருக்கிறது. தூத்துக்குடியின் தூய்மைக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இவர் பற்ற வைத்த விசாரணை நெருப்பு இன்னும் தணியவில்லை. பேரறிவாளன், முருகன், சாந்தன் மீதான தூக்குத் தண்டனையை எதிர்த்து நீதிமன்றங்களில் கரும்புலியாக உலவினார். விடுதலைப் புலிகள் மீதான தடையை தகர்க்கவும் இவரே வழக்கறிஞர் ஆனார். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் எல்லைகளை மறிக்கும் போராட்டத்தில் இவர் குதித்ததும் தான் கேரளா அரசு மிரண்டது. சட்டமன்றத்தில் கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை. ஆனாலும், அந்தக் கவலையே இல்லாமல் தமிழக நலனுக்காக முழக்கமிட்டு உழைக்கிறார். இலக்கியம், அரசியல், போராட்டம் என சோதனைகளுக்கு நடுவே இவரது இருப்பு மதிப்புக்கு உரியது. பதவிகளுக்கும் பேரங்களுக்கும் சமரசங்களுக்கும் இரையாகிக் கிடக்கும் தமிழக அரசியலில் வைகோ... ஒரு போராட்ட புயல்!

தன்மானத் தமிழராக விகடனின் விருதை பெற்றிருக்கும் வைகோவை நாமும் வாழ்த்துவோம்.

2011- ன் சிறந்த மனிதர் வைகோ! - விகடன் விருது


2011 ஆண்டின் சிறந்த மனிதர்களை பட்டியல் போட்டு இருக்கிறது ஆனந்த விகடன் வார இதழ். அதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு இரண்டாவது இடம் கிடைத்து இருக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களின் வாக்களிப்பில் வைகோவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. வைகோவின் சமீபத்திய போராட்டங்களை வரிசைப்படுத்தி இருக்கும் விகடன், 'வைகோ ஒரு போராட்ட புயல்' என பாராட்டு பத்திரம் கொடுத்து இருக்கிறது.

உலகத் தமிழர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கும் விகடனின் பாராட்டு வார்த்தைகளை நீங்களும் படியுங்களேன்.



தமிழகத்தின் ஓயாத அலைகள்!

தேர்தல் அரசியலையே தூக்கி வீசிவிட்டு தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீறுகொண்டு முன் நின்ற வைகோ மீது மரியாதை பெருகி இருக்கிறது. தூத்துக்குடியின் தூய்மைக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இவர் பற்ற வைத்த விசாரணை நெருப்பு இன்னும் தணியவில்லை. பேரறிவாளன், முருகன், சாந்தன் மீதான தூக்குத் தண்டனையை எதிர்த்து நீதிமன்றங்களில் கரும்புலியாக உலவினார். விடுதலைப் புலிகள் மீதான தடையை தகர்க்கவும் இவரே வழக்கறிஞர் ஆனார். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் எல்லைகளை மறிக்கும் போராட்டத்தில் இவர் குதித்ததும் தான் கேரளா அரசு மிரண்டது. சட்டமன்றத்தில் கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை. ஆனாலும், அந்தக் கவலையே இல்லாமல் தமிழக நலனுக்காக முழக்கமிட்டு உழைக்கிறார். இலக்கியம், அரசியல், போராட்டம் என சோதனைகளுக்கு நடுவே இவரது இருப்பு மதிப்புக்கு உரியது. பதவிகளுக்கும் பேரங்களுக்கும் சமரசங்களுக்கும் இரையாகிக் கிடக்கும் தமிழக அரசியலில் வைகோ... ஒரு போராட்ட புயல்!

தன்மானத் தமிழராக விகடனின் விருதை பெற்றிருக்கும் வைகோவை நாமும் வாழ்த்துவோம்.

எனக்கு ஆண் நட்பு அதிகம் !! செரீன்.


தோழிகளைவிட தனக்கு ஆண் நண்பர்கள்தான் அதிகம் என நடிகை செரீன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:..
தமிழில் ஏன் இடைவெளி என்கிறார்கள். ?
ஆஸ்திரேலியாவில் தனது சொந்த விடையம்கள் சம்பந்தமான படிப்பை தொடர்ந்தேன். பெங்களூரில் உள்ள வீட்டில் ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறேன். விரைவில் கண்காட்சி நடத்த உள்ளேன். படம் இயக்கும் ஆசை இருக்கிறது.

இதற்காக வெளிநாடு சென்று படிக்க திட்டமிட்டுள்ளேன்.
ஆனால் எனக்கு தோழிகளைவிட நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்.
அதற்காய் நான் ஒருவரையும் காதலிக்கவில்லை.
இதுவரை ஏனோ யாரை பார்த்தும் காதல் எண்ணம் வரவில்லை.

என்று கள்ளச்சிரில் முடித்தார் ஓவிய புன்னகையாக.!

பெண்கள் ஓரினச்செயற்கை படத்தின் நடிப்பதில் மன மகிழ்சி.!! -நந்திதாஸ்


பெண்கள் ஓரினச்செயற்கை நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவு என்றார் நந்திததாஸ்.

தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்தவர் உயர் தர சினிமா நடிகை நந்திதாதாஸ்.

இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
பெண்களுக்கிடையேயான நெருக்கமான உறவை மையப்படுத்தி உருவான படம் பயர். என்னுடைய முதல் படமான இதில் நான் பெண்கள் ஓரினச்செயற்கை நடித்தது துணிச்சலான முடிவு.
இதில் நடித்தது பற்றி சர்ச்சை எழுந்தது. அதுபற்றி கவலைப்படவில்லை.
உயர் தர சினிமாவைப்பொறுத்தவரை வர்த்தக ரீதியிலான படங்கள்தான் வருகின்றன. மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்து துணிச்சலான கதை அம்சங்களுடன் ஒரு சில படங்கள்தான் வருகிறது. அதனடிப்படையில் உருவான படம்தான் பயர். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை.

மக்களிடையே உள்ள பிரச்னைகளை எடுத்து சொல்லும் சில கதைகளை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடுகிறார்கள். அதுபோல் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். சினிமா என்பது வாழ்க்கையை பிரதிபலிப்பது.
மக்கள் பிரச்னைகளை மையமாக கொண்ட படங்களில் நான் நடித்துள்ளேன் என்ற திருப்தி இருக்கிறது. இப்போதும் அதுபோன்ற கதைகளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.
என்றார் நந்திதாஸ்.

எப்போதெல்லாம் அழைக்கிறேனோ, நீ வர வேண்டும். !


பெண்கள் இப்படி கூடவா செய்வார்கள் ..?
என்று அதிர வைக்கின்றன சில சம்பவங்கள். தற்போது நடந்திருப்பது நாகர்கோவில் பகுதியில்.
நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.

அந்த பெண் திருமணம் ஆனவர்.
கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
இதனால், எந்த பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக நடந்திருக்கிறது இந்த கள்ளக்காதல். எந்த சலனமில்லாது ஊர் சுற்றி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்தேறியது..

மிகவும் காதல் கை நிறைவாகச்சேர்ந்த பின் ஆகிவந்த நேரத்தில் வாலிபருக்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கண்ணா..
இன்னொரு லட்டு தின்ன ஆசையா ..?

என்ற வசனம் ஞாபகத்துக்கு வந்ததா தெரியவில்லை..
வாலிபர் திடீரென திருந்தி விட்டாராம். கள்ளக் காதலியிடம் இருந்து விலக ஆரம்பித்தார். அவளை சந்திப்பதை குறைத்தார்.
கணவன் இருந்தும் இத்தனை நாள் நான் காதலிக்கவில்லையா..?

உனக்கு திருமணம் என்றதும் விட்டு விட்டு ஓடப் பார்க்கிறாயா?
என்றாள் காதலி.
இருவரின் வருங்காலம், குழந்தை, குட்டிகள் என்று அவன் சொன்ன உபதேசங்கள் அவள் காதில் ஏறவில்லை.

எப்போதெல்லாம் அழைக்கிறேனோ, நீ வர வேண்டும். ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன். என்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பலாத்காரம் செய்ததாக காவல் துறையிடம் சொல்லி கம்பி எண்ண வைத்துவிடுவேன்� என்றாள்.
காதல் பார்வை மட்டுமே தெரிந்த கள்ளக் காதலி கண்ணில் கனல் தெறித்ததும் மிரண்டு போனார் வாலிபர்.
காதலிகிட்டேயிருந்து காப்பாத்துங்கய்யா என்று காவல்துறை புகார் கொடுத்தார். ஒரு பெண்ணா இப்படி மிரட்டியிருக்கிறாள் என்று காவல்துறைக்கே அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட பெண்ணை விசாரித்தனர். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கிறேன்.

அவன்தான் என் உலகம். அவன் சந்தோசத்துக்காகத்தான் வாழ்ந்து வருகிறேன். அவனை பிரிந்து என்னால் வாழ முடியாது என்பதால்தான் மிரட்டினேன் என்று அழுதாள் அந்த பெண். உனக்கும் கணவர் இருக்கிறார், குடும்பம் இருக்கிறது. அந்த நபரை நம்பி ஒரு பெண் வரப்போகிறாள்.
இனி, இருவரும் சந்திக்க கூடாது. போனில்கூட பேசக்கூடாது. எதிர்காலத்தை உணர்ந்து, குடும்ப நலனை அறிந்து செயல்படுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர் காவல்துறை. ஆசை அத்துமீறும் வயதில் சில தடுமாற்றங்கள் இருக்கும். அந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்ல ஆள் இருந்தால் யாரும் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள்.

காணாமல் போய்விடுவோம் யாழ்பாணம் போனால்..?


நாளுக்கு நாள் நாம் துடி துடிக்கும் கவலையும் கண்ணீரும் அங்கு எங்கள் சொந்தம் நலமா என்பதை அறிவது தான். ஆனால்..? அங்கு தினம் வரும் செய்திகளில் அடிக்கடி பார்க முடிந்தவை காணாமல் போய்விட்டனராம். அப்படி என்றால் இலங்கை என்பது காணாமல் போகும் நாடு தானா..?

கொழும்பில் இருந்து கடந்த 22.12.2011 ஆம் திகதி வாடகைக்கு அமர்தப்பட்ட வாகனம் ஒன்றில் யாழ்ப்பணம் நோக்கி வந்து கொண்டு இருந்த குடும்ப அங்கத்தவர்கள் 6 பேர் காணாமல் போயுள்ளதாக யாழ்.மனித ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகம் அறிவித்துள்ளது.

இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரிவியவருது,….



கொழும்பில் இருந்து 22 ஆம் திகதி இரவு புறப்பட்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில் சிங்கள பிரதேசமொன்றில் வாகனம் காற்றுப்போய் நின்றதாக யாழில் உள்ள உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வருவதாக இருந்தவர்கள் காணாமல் போயிருக்கலாம் என தாங்கள் அஞ்சுவதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கொடுத்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.இதன் பின்னர் 22 இரவு 11 மணியின் பின்னர் குடும்ப அங்கத்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள் வேலை செய்யவில்லை எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இச்சம்பவத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான பெயர் விபரங்களை வெளியிட யாழ்.மனித உரிமை ஆணைக்குழு மறுத்துள்ளது.

இவை தனிப்பட்ட முறையில் வந்த கண்ணீர்ச்செய்திகள் .

உறவுகளே..

உங்கள் உரிமைகள் இன்று புதைகின்றது இனி உங்கள் சிந்தனையும் செயலும் ஒரு நல்ல தீர்வுகள் தரும் என்பதில் ஐயம் இல்லை. எனினும் இந்த அனியாயங்களுக்கு என்னதான் முற்றுப்புள்ளி..?

மறுபடியும் ஆயுதங்களை தமிழீழ மக்கள் மத்தியில் திணிப்பதாகவே உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தால் எப்படி காணாமல் போக முடியும்..?

போனவர்கள் மீண்டு வருதன்றால் அங்கு ஆட்சியாளர்களின் நீதி முறை எவ்வகையானது…?

அட்டகத்தி - சென்னையின் புறநகர வாழ்க்கையை மையப்படுத்தி வரும் முதல் படம்!


தமிழ் சினிமாவில் தொன்னூறு சதவீதப் படங்கள் மதுரை அல்லது தூத்துக்குடி பின்னணியில்தான் வருகின்றன. அதை மீறி வரும் படங்களில் வட சென்னை- காசிமேடு - மீனவர் வாழ்க்கை என காட்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் முதல் முறையாக மதுரை, வட சென்னை பின்னணி இல்லாமல், சென்னையின் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்குகளை மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது. அந்தப் படத்துக்கு அட்டகத்தி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த புறநகர்ப் பகுதிகளில் வாழ்பவர்கள் பெரும்பாலும் வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து குடியிருப்பவர்கள்தான் என்பதால், கலவையான பேச்சு வழக்கு, தனித்த வாழ்க்கை முறை என இருப்பார்கள்.

இதைத்தான் அட்டகத்தியில் படம்பிடித்துள்ளாராம் இயக்குநர் பா இரஞ்சித். இவர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்தவர். அட்டகத்திதான் இவருக்கு முதல் படம்.

ஒரு அட்டகத்தி தன்னை வெட்டுக்கத்தியாக நினைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோ ரோலுக்கு ஆறு புதுமுகங்களை தேர்வு செய்து, அவர்களில் இறுதியாக தினேஷ் என்பவருக்கு வாய்ப்பு தந்துள்ளனர். புதுமுகம் ஸ்வேதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு தாய்மொழி கன்னடம். ஆனால் தமிழ் சரளமாகத் தெரியும் என்பதால் தேர்வு செய்தார்களாம்.

மானாட மயிலாட ஐஸ்வர்யா முக்கிய வேடத்தில் வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சென்னையின் புறநகர்களான பழந்தண்டலம், பூந்தண்டலம், கொளப்பாக்கம், மணப்பாக்கம், திருநீர்மலை, குன்றத்தூர் என சுற்றிச் சுற்றி படமாக்கியுள்ளார்களாம்.

தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் காஜல் காட்சிகளை பயன்படுத்த தடை!


பிரபல நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் காஜல் அகர்வாலின் வீடியோ காட்சிகளைப் பயன்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

நான் மகான் அல்ல, மகதீரா படங்களின் நாயகியான காஜல், பிரபல நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் விளம்பர படத்தில் நடித்திருந்தார். ஒப்பந்தம் முடிந்த பின்னும் அந்த நிறுவனம் காஜல் அகர்வால் நடித்த விளம்பரத்தை பயன்படுத்தியது.

இதை எதிர்த்து நடிகை காஜல்அகர்வால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால். அதில், "ஒப்பந்தம் முடிந்த பிறகும் நான் நடித்த விளம்பரத்தை அந்த தேங்காய் எண்ணெய் நிறுவனம் பயன்படுத்துகிறது. இதனால் நான் மற்ற நிறுவனங்களுடன் செய்து கொண்ட விளம்பர ஒப்பந்தங்கள் பாதிக்கப்படுகிறது.

அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே நான் நடித்த விளம்பரத்தை பயன்படுத்த அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதனால் எனக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு ரூ.2 .5 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வினோத் கே.சர்மா விசாரித்து நடிகை காஜல் அகர்வால் இடம் பெற்ற புகைப்படம் மற்றும் வீடியோவை விளம்பரத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் இல்லாத விளம்பரத்தை பயன்படுத்தலாம் என்றும் தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து நடிகை காஜல் அகர்வால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்தார்.

அப்பீல் மனுவை நீதிபதிகள் பானுமதி, மாலா ஆகியோர் விசாரித்து தேங்காய் எண்ணெய் நிறுவனத்திற்காக காஜல் அகர்வால் நடித்து கொடுத்த விளம்பர படத்தை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.

நடிகை பிரதியூசா கொலை வழக்கு: காதலருக்கான தண்டனை 2 ஆண்டாக குறைப்பு


ஹைதராபாத்: பிரபல நடிகை பிரதியூஷா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் தண்டனையை 2 ஆண்டாக ஆந்திர உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது. ஆனால், அபராத தொகையை மட்டும் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

மனுநீதி, தவசி, உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரதியூஷா. இவர், கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஷம் அருந்திய நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பிரதியூஷாவுடன் விஷம் அருந்தியதாக, அவருடைய காதலர் சித்தார்த்த ரெட்டியும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்தார்.

பிரதியூஷாவும், சித்தார்த்த ரெட்டியும் குழந்தை பருவத்தில் இருந்தே அறிமுகமானவர்கள். சித்தார்த்த ரெட்டி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சித்தார்த் ரெட்டியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சித்தார்த்த ரெட்டி கூறினார். அந்த திட்டத்தை செயல்படுத்தியபோது, பிரதியூஷா உயிரிழந்தார். சித்தார்த்த ரெட்டி பிழைத்துக்கொண்டார்.

5 ஆண்டு தண்டனை

முதலில், இதை மர்ம சாவு என்று வழக்கு பதிவு செய்த போலீசார், பின்னர் கொலை வழக்காக மாற்றினர். பிறகு, இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

நடிகை பிரதியூஷாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும் சித்தார்த்த ரெட்டி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஐதராபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தண்டனை குறைந்தது

இந்த தீர்ப்பை எதிர்த்து, சித்தார்த்த ரெட்டி, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரவிசங்கர், சித்தார்த்த ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயில் தண்டனையை 2 ஆண்டு தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார். அபராத தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்தும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பாங்காக் போகும் விஷால் - த்ரிஷா ஜோடி!


சமரன் படத்துக்காக பாங்காக் போகின்றனர் நடிகர் விஷாலும் ஹீரோயின் த்ரிஷாவும்.

சிம்புவின் அதிகப்பிரசங்கித்தனத்தால் பெரும் தோல்வியைத் தழுவிய ஒஸ்தி படத்துக்குப் பிறகு பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கும் புதிய படம் சமரன். விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்க, தீராத விளையாட்டுப் பிள்ளை படம் தந்த திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம். பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணிக் கலைஞர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதை இயல்பானது. ஒரு சராசாரி மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள், அதனால் அவன்படும் பாடுகள்தான் இந்தப் படத்தின் திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை பார்க்காத புதிய அனுபவத்தை இந்தப் படம் உங்களுக்குத் தரும் என்கிறார் இயக்குநர் திரு. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சாலக்குடியில் 15 நாட்கள் நடந்தது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ந்தேதி முதல் தாய்லாந்தில் 50 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும் ஐரோப்பாவின் சரித்திர பிரசித்தி இடங்களில் சண்டைக் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!


சுற்றி குடிசைகளாக இருக்கும்போது நாமும் குடிசைதான் கட்டணும் என்று தனக்கு சூப்பர் ஸ்டாரும் தனது மாமனாருமான ரஜினிகாந்த் கூறியதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

இந்தியா முழுக்க பிரபலமான முகமாகிவிட்டார் தனுஷ். அவரது இந்த பாப்புலாரிட்டியால் வெந்து வெதும்பிப் போயுள்ளனர் போட்டி நடிகர்கள். கொலவெறிக்குப் போட்டியாக ஒருபாட்டை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு என்னென்னமோ காமெடி செய்து வருகிறார்கள்.

ஆனால், 'கூல்' தனுஷுக்கோ கேட்காமலே தேடி வருகிறது கவுரவங்கள். ஜப்பான் பிரதமருக்கு தான் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் தனுஷையும் சேர்த்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், 'கொலவெறி பாடலுக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. படத்துக்கு தகுந்த பாடலாக இருக்கும் என்றும், மக்களுக்கு திருப்தி தரும் பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். இந்த அளவுக்கு பிரபலமானதற்கு கடவுளின் கருணையும், மக்கள் கொடுத்த வரவேற்பும்தான் காரணம்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

'உங்கள் மாமனார் (ரஜினிகாந்த்) சமீபத்தில் உங்களுக்கு சொன்ன அறிவுரை என்ன?' என்று அவரிடம் கேட்டதற்கு, "சமீபத்தில் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொல்லவில்லை. என் கல்யாணம் நடந்த சமயத்தில் சொல்லியிருக்கிறார். 'சுற்றி குடிசைகள் இருக்கும்போது, நாமும் குடிசைதான் கட்டணும்'' என்றார். அதற்கு அப்புறம் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொன்னதில்லை" என்று பதிலளித்துள்ளார் தனுஷ்.

உங்கள் மாமனாரும் நீங்களும் சேர்ந்து நடிக்கும் காலம் வருமா? என்ற கேள்விக்கு, "அதை சார் (ரஜினிகாந்த்)தான் சொல்லணும். இதை நான் மருமகனாக சொல்லவில்லை. அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில், நானும் ஒருவன். அவரை பிரமிப்பாக பார்க்கிற கூட்டத்தில், நானும் ஒருவனாக சொல்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.

Wednesday 28 December 2011

'மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் '3'! - தனுஷ்


மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் '3' என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

கொலவெறி பாடலுக்குப் பின் படுபாப்புலராகி, பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நடிகர் தனுஷ், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததற்கும், என் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்ததற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இயக்குநர் வேலையை சிலசமயங்களில் வீட்டுக்கும் எடுத்து வருவார். அதனால் நாங்க சண்டை போட்டுக்கொண்டதுண்டு. இது, எல்லா வீட்டிலும் நடக்கிற சண்டைதான்.

ஐஸ்வர்யா தொடர்ந்து இனி படங்கள் இயக்குவார். ஆனால், அவர் இயக்கத்தில் நான் நடித்த முதல் படமும், கடைசி படமும் இதுதான். வெளி கம்பெனிகளுக்கு ஐஸ்வர்யா தொடர்ந்து படங்கள் இயக்குவார்.

இதுவரை பல நடிகைகளுடன் நடித்துவிட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்கள்தான். உடல்வாகைப் பொருத்தவரை ஜெனிலியா எனக்கு பொருத்தமானவர். மற்றபடி, 'கெமிஸ்ட்ரி' என்று சொல்கிறார்களே, அதன்படி நயன்தாரா பொருத்தமானவர்.

எனக்கு கிடைக்கும் பெருமைகள், விருதுகள் போன்றவற்றுக்குக் காரணம், எதையும் எதிர்ப்பார்க்காமல் நான் என் வேலையைச் செய்வதுதான்.

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று சொல்வார்கள். அதன்படி, நான் என் வேலையை செய்கிறேன். எந்த வேலை செய்தாலும் சந்தோஷமாக செய்ய வேண்டும். என் வேலைகளை சந்தோஷமாக செய்கிறேன். கடவுளும், மக்களும் கொடுக்கும் வரவேற்பை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிகர்கள்!


ரஜினியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்.

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் இருந்தவர்களுக்கு இலவசமாக தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்து ஆதரவு தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். இது அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேள்வி எழுப்பினர் நிருபர்கள். அவரிடம், 'அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே... ரஜினியை ஆதரிக்கும் நீங்கள் இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

அதற்கு நேரடியாக பதிலளிக்காத ஈவிகேஎஸ் இளங்கோவன், மறைமுகமாக தாக்கும் விதத்தில், "கறுப்புப் பணத்தில் கட்டிய மண்டபத்தில்தான் (ராகவேந்திரா மண்டபம்) ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் நடக்கிறது. அப்படியும்கூட 10 பேர்தான் அங்கே வந்திருக்கிறார்கள். மண்டபத்தைக் கொடுத்தவருக்கு இது புரிந்தால் சரி", என்று கிண்டலடித்திருந்தார்.

இளங்கோவனின் இந்த பதிலைக் கண்டித்து வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்ட மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இறுதியில், அவரது உருவர் படங்களை எரித்தனர் ரசிகர்கள்.

“தலைவர் நல்ல விஷயம் என நம்பி இந்த மண்டபத்தைக் கொடுத்தார். அவருக்கு வேறு உள்நோக்கமில்லை. ஊழல் ஒழிய வேண்டும் என்பது மட்டும்தான் தலைவர் ரஜினியின் இலக்கு. ஹஸாரே என்றல்ல, யார் இந்த நல்ல காரியத்தில் இறங்கினாலும் அவர் ஆதரவு கிடைக்கும். அந்த கண்ணோட்டத்தில் பார்க்காமல், ரஜினி அவர்கள் கஷ்டப்பட்டு நேர்மையாக சம்பாதித்து கட்டிய ஒரு மண்டபத்தைப் பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் கேவலமாகப் பேசியதை ரசிகர்களான எங்களால் பொறுக்க முடியவில்லை.

இந்தியத் திரையுலகிலேயே நேர்மையாக அரசுக்கு வரி செலுத்துபவர்களில் முதலில் இருப்பவர் எங்கள் தலைவர் என்பதை இளங்கோவன் போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்,” என்றார், இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சோளிங்கர் என் ரவி.

கோலிவுட்டில் பிடித்தாட்டும் டைட்டில் பிரச்சனை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமீபத்தில், கோலிவுட் படங்களை எடுப்பதை விட அந்த படத்திற்கு ¬ட்டடில் வைப்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறதாம். முன்னதாக வேங்கை டைட்டிலுக்கு ஹ‌ரியும், அறிமுக இயக்குனர் ஒருவரும், வாதம் செய்து வந்தனர், இது போல் விஜயை வைத்து 'மதுர' படத்தை இயக்கிய மாதேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மிரட்டல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். வினய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் முதலில் 'தில்லு முல்லு' என வைத்தார் மாதேஷ். ஆனால் பெரிய பார்ட்டிகள் இந்த டைட்டிலை வைக்க ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் படத்தின் டைட்டிலை 'மிரட்டல்' என்று மாற்றி அமைத்தார் மாதேஷ்.


முதல் கெட்டப் போடுகிறார் விஜய்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை எந்த வித கெட்டப்பும் போடாத இளைய தளபதி விஜய், முதன் முறையாக 'துப்பாக்கி' படத்தில் வித்தியசமான கெட்டப் போடுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் 'துப்பாக்கி'. படத்தின் முதல் கட்டம் ஷூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் தனக்கு புதிய இமேஜை ஏற்படுத்தி தரும் என விஜய் தெரிவித்துள்ளாராம். அதுமட்டுமின்றி குறித்த நேரத்தில் படத்தை தர வேண்டும் என்று நினைத்த விஜய் அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம். காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.


மன்மோகன் சிங்குக்கும் பிடித்த 'கொலவெறி'... தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து!


ஊரே திட்டித் தீர்க்கிற அளவுக்கு விமர்சனங்களை கிளப்பியுள்ள தனுஷின் கொலவெறி பாட்டு, அவரை பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு 'உயர்த்தியுள்ளது'.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '3' படத்தில் 'ஒய் திஸ் கொலைவெறி டி..' என்ற தமிங்கிலீஷ் பாட்டை எழுதிப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடல் ஏக பிரபலம் ஆகிவிட்டது. யு ட்யூபின் கோல்ட் விருது இந்தப் பாடலுக்கு தரப்பட்டது. டைம் இதழில் தனுஷின் பெயர் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பாடலாசிரியர்கள், இசை விமர்சகர்கள் கடுமையாக இந்தப் பாட்டை விமர்சித்து வருகின்றனர். 'நேரடியான தமிழ்க் கொலை' இது என அவர்கள் சாடியுள்ளனர். ஏற்கெனவே தமிழ் சினிமா பாடல்களில் தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்துவிட்ட நிலையில், தனுஷின் இந்த 'தமிழ்க் கொலை' புதிய ட்ரெண்டை சினிமாவில் உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளும் 'நிதானத்தில்' தனுஷ் இல்லை. டெல்லி, மும்பை, ஹைதராபாத் என நகரம் நகரமாக மதுவிருந்துகளில் இந்தப் பாட்டை சக நடிகைகளுடன் பாடி ஆடி வருகிறார்.

இந்த நிலையில், தனுஷை தன்னோடு விருந்துண்ண அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை (டிசம்பர் 28) விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுஷுக்கு பிரதமர் அலவலகதத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.

ஏற்கெனவே கொலவெறி ஹிட்டால் மிதப்பிலிருந்த தனுஷ், இந்த புதிய கவுரவத்தால் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார். அர்த்தமில்லாத தனது பாட்டுக்கு புதுப்புது அர்த்தங்களைக் கற்பித்துக் கூறி வருகிறார்.

அவர் கூறுகையில், "கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் மிகுந்த அர்த்தம் உள்ளது. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவரையும் டச் பண்ணிவிட்டன. இந்த வரிகளில் உள்ள நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துக்கள் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்து விட்டன. அதுதான் எனக்கு இத்தனை பெரிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது," என்றார்.

ரஜினிகாந்த் கறுப்பு பணம் வைத்திருக்கிறார் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களே கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் -ஈவிகேஎஸ்.இளங்கோவன்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள்தான் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கின்றனர். அந்த வகையில்தான் ரஜினியும் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் வைத்துள்ளதால்தான் ஹசாரே குழுவினரின் போராட்டத்துக்கு தனது திருமண மண்டபத்தைக் கொடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

30-ம் தேதி சென்னையில் கூடுகிறது ! - அதிமுக பொதுக்குழு


அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வரும் 30ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது.

அவைத்தலைவர் மதுசூதனன் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். முதல்வரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 17 பேர் நீக்கப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் பொதுக்குழு கூடுகிறது.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 200 பேர் உள்பட 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

அவர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, தமிழகத்துக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்க கோருதல், கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை, ஜெயலலிதா பிறந்த நாள் விழா உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிகிறது.

தானே புயலால் சென்னை மெரினாவில் கடல் கொந்தளிப்பு !


தானே புயலால் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம் பகுதிகளில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும், சுமார் 100 அடி வரை கடல் நீர் ஊருக்குள் புகுந்ததாகவும், 2004 சுனாமிக்கு பின்னர் இப்போதுதான் கடல் இந்த அளவிற்கு கொந்தளிப்பாக உள்ளதை அறிவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலோரம் இருக்கவே மிகவும் அச்சமாக உள்ளதாக மீனவப்பெண்கள் தெரிவித்துள்ளனர். தானே புயல் உருவானதால் சுமார் 2000 மீனவர்கள் 4 நாட்களாக கடலுக்குள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு மிரட்டல்: தஞ்சை பெரிய கோவிலில் விடிய விடிய சோதனை


தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடி குண்டு வைத்திருப்பதாக சென்னை போலீசாருக்கு வந்த மிரட்டலை அடுத்து, தஞ்சை பெரிய கோவிலில் நேற்று நள்ளிரவு 11.30 தொடங்கி விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்ட தகவல்...
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சங்கர்(36). பார்வையற்றவரான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், சங்கர் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சங்கர், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தஞ்சை பெரிய கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்றும், இரவு குண்டு வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தத் தகவல், தஞ்சை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் உள்ளிட்டோர் தஞ்சைப் பெரிய கோயிலில் நள்ளிரவு 11.30 தொடங்கி விடிய விடிய சோதனை நடத்தினர். இடையி்ல் மிரட்டல் வந்த போனை கண்காணித்த போலீசார், சங்கரை அ‌திகாலை 2.30க்கு கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தத் தகவல்களைத் தெரிவித்த சங்கர், கோயிலில் குண்டு எதுவும் வைக்கவில்லை; இது வெற்று மிரட்டல்தான் என்று கூறினார். இதனை உறுதிப்படுத்திய பின்னர், போலீசார் கோயிலில் வெடிகுண்டு தேடும் பணியை கைவிட்டனர். இதனால் நேற்று நள்ளிரவு முதலே தஞ்சை நகரில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களே கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள்...


ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களே கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் -ஈவிகேஎஸ்.இளங்கோவன்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள்தான் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கின்றனர். அந்த வகையில்தான் ரஜினியும் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் வைத்துள்ளதால்தான் ஹசாரே குழுவினரின் போராட்டத்துக்கு தனது திருமண மண்டபத்தைக் கொடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

Tuesday 27 December 2011

இந்தாண்டின் தற்கொலைகள்-யாழ்பாணம்.!


வாழ்வும் வசந்தமும் வாழ்த எங்கள் யாழ்பாண மாவட்டத்தில் 2011 தை மாதம் மாதம் முதல் வாரத்திலிருந்து மார்கழி 20ஆம் திகதி வரையில் 36 தற்கொலை மரணங்கள் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மரண பதிவு மற்றும் மரணங்கள் தொடர்பான விசராணை அறிக்கையின் புள்ளிவிபரத் தரவுகள் குறிப்பிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்பாணத்தின் போதனா வைத்தியசாலையில் தற்கொலை மரணங்கள் தொடர்பான பதிவுகளின் படி 24 பெண்களும் 12 ஆண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்தப் புள்ளி விபரத் தரவு அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதில் குறிப்பிடும் அளவுக்கு வைத்திய சாலை வந்த தற்கொலைப்பதிவுகள் மட்டும் அடங்கும்.!

இதேவேளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்கொலை மரண அறிக்கையின் பிரகாரம் இளவயது குடும்பத்தினர் அதிகமாக இருப்பதாகவும்,
இவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை எதிர்நோக்கியதான அதாவது வாழ்வாதாரங்கள் மற்றும் குடும்பச்சண்டைகள் காதல்கள் என குடும்பப் பிணக்கு அல்லது மன அழுத்தம், தாங்க முடியாத அதிர்ச்சி, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற காரணங்களாக இவர்களின் தற்கொலை அமைந்திருக்க வேண்டும் என தற்கொலைக்குப் பின்னரான மரண விசாரணை அறிக்கை குறிப்பிடுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி போர்க்குற்றத்தின் பக்கத்தில் சேர்மதியில்லாத பதிவுகளே ஆகும்.!

பிரான்ஸில் தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்!

பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.

இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.

எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.




கிறிஸ்மஸ் தினத்தன்று ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு எமனான நத்தார் தாத்தா!

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான கிராப்வெய்னி நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு குடிமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நேற்று முன்தினம் (25) கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்தனர். இதற்காக வீடு முழுவதையும் அலங்கரித்து வைத்திருந்தனர்.

அப்போது அதிகாலையில், ´நத்தரார் தாத்தா´ வேடம்பூண்டு வந்த மர்ம மனிதன் வீட்டினுள் புகுந்து துப்பாக்கியால் அவர்களை நோக்கி சரமாரியாக சூடு நடத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேரும் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக பலியாகினர். நான்கு பெண்கள், மூன்று ஆண்கள் என மொத்தம் 7 எழு பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர்.

இது குறித்து டல்லாஸ் நகர பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டிற்குள் வந்த மர்ம மனிதன், பலியான 7 பேருக்கும் தெரிந்த நபராகத்தான் இருக்க வேண்டும். தகராறில் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனரா,அல்லது முன்விரோதமா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இறந்தவர்கள் 15,19,22,55,56,58 மற்றும் 59 வயதுடையவர்களாக உள்ளனர். சம்பவ இடத்தில் மேலும் இரு துப்பாக்கிகள் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைப் பெரியாறு – வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: சீமான் அறிக்கை!

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் தமிழர் விரோத போக்கைக்கண்டித்து போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணை காக்கப் போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுக: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்த அதிகாரமிக்க நிபுணர்கள் குழு அணைப் பகுதியில் ஆய்வு நடத்திவரும் நிலையில், கேரள அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் அணையை உடைக்கும் நோக்கோடு தம் மாநில அரசியல் சக்திகளை தூண்டின. முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களாகப் போய் வேலை செய்துவரும் தமிழர்கள் பலரும் தாக்கப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தமிழ்நாட்டு பெண்கள் சிலரின் மாராப்பு சேலைகளை பிடித்து இழுத்து மலையாளிகள் சிலர் அத்துமீறினர். தமிழ்நாட்டு வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள் தாக்கப்பட்டனர்.

இப்படி பல்வேறு முனைகளில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்தே தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எல்லைப் பகுதிகளில் இருந்த மலையாளிகளின் சில நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. ஆனால், ஒரு மலையாளி கூட போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களால் தாக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் கேரள எல்லையை நோக்கி பேரணி நடத்தி முல்லைப் பெரியாறு அணையைக்காப்போம் என்பதைத்தான் தமிழர்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் வெளிக்காட்டினார்களே தவிர, திட்டமிட்ட வன்முறையில் ஒருபோதும் ஈடுபடவில்லை. இந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி நூற்றுக்கணக்கான தமிழர்களை தமிழக காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குறிப்பாக தேனி மாவட்டத்தில் மட்டும் 40 பேர் கைது செய்யப்பட்ட சிறைபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபினபு கூறியுள்ளார். இது நியாயமான நடவடிக்கைதானா?

தமிழர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய, தமிழ்நாட்டு பெண்களின் மாராப்பு சேலையை இழுத்தி அத்துமீறிய, சபரிமலை சென்ற ஐயப்ப சுவாமி பக்தர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய, தமிழ்நாட்டின் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கிய மலையாளிகள் மீது அம்மாநில காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லையே? வன்முறையில் ஈடுபட்ட மலையாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லையே? தமிழக முதல்வரின் உருவபொம்மை ஆங்காங்கு கொளுத்தப்பட்டதே, ஆனால் அதற்காக ஒருவரும் அங்கு கைது செய்யப்படவில்லையே? தங்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது காவல் நிலையம் சென்று புகார் அளிக்கச் சென்ற ஐயப்ப பக்தர்களை 10 நேரம் காவல் நிலையத்திலேயே அமர வைத்து அவமதித்தது கேரள மாநில காவல் துறை. அதன் எதிரொலியாகத்தான் திருப்பூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்படி தங்கள் மாநிலத்தவரின் அராஜகசெயல்களையெல்லாம் நடத்தும் மலையாளிகள் மீது அம்மாநிலத்தில் வழக்கேதும் பதிவு செய்யப்படாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவதும், வழக்குப் பதிவு செய்யப்படுவதும் ஏன்?

சட்டம் ஒழுங்கு என்பது தமிழனுக்கு மட்டும்தானா? மலையாளிக்கு இல்லையா? இங்குள்ள தென் மண்டல காவல் தலைமை ஆய்வாளர் ஒருவர், போராட்டக்காரர்கள் எல்லைப் பக்கம் வந்தால் அவர்களின் கை, கால்களை ஒடித்துவிடு என்று ஒலிபெருக்கி மூலம் காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். ஆனால் அம்மாநில காவல் துறையினர் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லையே? தமிழர்கள் எல்லைத் தாண்டினால் கண்டதும் சுடு என்று அம்மாநில காவல் துறைத்தலைவர் உத்தரவு போடுகிறார். இங்கிருக்கும் காவல் அதிகாரிகளும் ஐ.பி.எஸ். தேரியவர்கள்தான், கேரளத்தில் இருக்கும் காவல் அதிகாரிகளும் ஐ.பி.எஸ்.தேரியவர்கள்தான். ஆனால் நடவடிக்கையில் மட்டும் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம்? போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கெட்ட, கெட்டவார்த்தைகளில் பேசியிருக்கிறார் தென் மண்டல ஐ.ஜி. இவருக்கு இப்படியெல்லாம் முறையின்றி நடந்துகொள்ளும் அதிகாரம் எங்கிருந்து வருகிறது? எல்லைப் பகுதியில் வாழும் தமிழர்கள் காவல்துறையினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் மிகவும் கொதித்துப்போய் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதே. சட்டம் ஒழுங்குத் தொடர்பான அணுகுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுமா என்ன?

எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையைக் காப்போம் என்று தமிழக மக்கள் ஒன்றிணைந்து காட்டி எழுச்சியால்தான் இன்றைக்கு நமது பலம் மத்திய அரசுக்கு புரிந்துள்ளது என்பதை உணர வேண்டும். மக்கள் சக்தி இல்லாமல் இப்பிரச்சனையில் தமிழ்நாடு வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

ரத்தம் சிந்தாத போராட்டம்: அன்னா ஹசாரேவுக்கு ரஜினிகாந்த் அனுப்பிய இ.மெயில்

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி மும்பையில் அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள மெயிலில், ‘’ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய். அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம். ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர்.

நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன். சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா.

இங்கு மட்டுமே இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் சாத்தியமானது. ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித் துள்ளார்.

சுனாமி பேரலையால் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து லண்டனில் நடைபெற்ற வணக்க நிகழ்வு (படங்கள், காணொளி இணைப்பு)

சுனாமிப் பேரலையின் தாக்கத்தால் கடந்த 2004 ஆம் ஆண்டு தாயகம் உட்பட தமிழகம் மற்றும் ஆசிய நாடுகளில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்களை நினைவு கூர்ந்து லண்டனில் நேற்று நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Northolt Village Community Centre மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் பல பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மாலை 7:00 மணி முதல் மாலை 8:30 மணி வரை நடைபெறவுள்ள இந் நிகழ்வில் தீபமும், மெழுகுவர்த்தியும் ஏற்றி வைக்கப்பட்டு மக்களின் மலர் வணக்கத்தோடும், நினைவு உரைகளோடும் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.



சிறிய அளவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வை அமைப்புக்கள் சாராது தேசியம் சார்ந்த செயற்பாடுகளில் முன்னின்று உழைக்கும் பல தொண்டர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் எவையும் நிகழ்வு ஏற்பாடு செய்யாமை வேதனை அளிப்பதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.





முல்லைத்தீவுக் கடல் 250 மீட்டார் வரை உட்புகுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது!

முல்லைத்தீவுக் கடற்கரைப்பகுதியில் நேற்றிரவு (26) ஒன்பது மணியளவில் திடீரெனக் கடல்பெருக்கெடுத்து ஊர்மனைகளுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இடம் பெயர்ந்து வருகின்றனர்.

அலம்பில், உடுப்புக்குளம், சிலாவத்தை, கள்ளப்பாடு, செம்மலை, முல்லைத்தீவு நகரம் என்பன் இந்தக் கடற்பெருக்கால் பாதிப்புற்றுள்ளன.திபு திபுவென நேற்று மாலை கரையை நோக்கி வந்த கடலைப் பார்த்து மக்கள் அச்சம் கொண்டனர். அதுவும் ஆழிப்பேரலை ஏற்பட்டு ஏழாம் ஆண்டு நிறைவுநாளில் இவ்வாறு கடல் பெருக்கெடுத்ததால் மீண்டும் சுனாமி ஏற்பட்டு விட்டதாகப் பயந்து கையில் அகப்பட பொருள்களுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து சென்றனர்.

இதனால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு உட்புகுந்த கடல்நீர் நீர் வற்றாமல் முழங்கால் அளவுக்கு இன்னமும் இருப்பதாகவும் கரையில் இருந்து சுமார் 250 மீற்றர் வரை உள்வந்து- நிற்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுணாமி போல பெரிய அலையாகத் திரண்டு வரமால் கடல் நீர் மட்டம் திடீரென உயர்வடைந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இவ்வாறு வந்தது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இது குறித்து மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

சசிகலா- நாயுடு உதவியை நாடினார்!

முதல்வர் ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா தரப்பு கடுமையாக முயல்வதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் தற்போது ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அணுகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில் சசிகலா குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு அதிமுகவை விட்டு வெளியேற்றினார். மேலும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசி குடும்பம் வெளியேற்றப்பட்டது. தற்போது அங்கு தங்கியிருப்பது சசிகலாவின் அண்ணி இளவரசி மட்டுமே.

வெளியேற்றப்பட்ட சசிகலா தரப்பு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறது. நீக்கம் தொடர்பாக இதுவரை சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாருமே கருத்து தெரிவிக்காமல் பலத்த அமைதி காத்து வருகின்றனர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இப்படி அத்தனை பேரும் மொத்தமாக மெளனம் காக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் சைலன்ட்டாக ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா குடும்பத்தினர் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ன.

ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதால் அவரிடம் நேரடியாக போய் சமரசம் பேச அச்சப்பட்ட சசிகலா தரப்பு ஜெயலலிதாவுக்கு நெருக்கமான வட்டத்தை அணுகி சமரசம் செய்யுமாறு கேட்டு வருவதாக தெரிகிறது.

இதற்காக அவர்களில் முதலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க முயன்றனராம். இதற்காக சிலரை மோடியிடம் அனுப்பி வைத்தனராம். ஆனால் அவர்களை திட்டி அனுப்பி விட்டாராம் மோடி. இதுதொடர்பாக இனிமேல் என்னிடம் யாரும் வராதீர்கள் என்றும் கூறி விட்டாராம்.

இதையடுத்து அடுத்து சந்திரபாபு நாயுடுவை அணுகியுள்ளதாம் சசிகலா தரப்பு. ஒரு ஆந்திர தொழிலதிபர் மூலமாக நாயுடுவை சசிகலா தரப்பு அணுகியுள்ளதாக கூறுகிறார்கள். அந்தத் தொழிலதிபரும் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்குமாறு நாயுடுவைக் கேட்டுக் கொண்டுள்ளாராம். மோடி போல நடந்து கொள்ளாமல் சசிகலா தரப்பு கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டுள்ளாராம் நாயுடு.

இதனால் சற்று நம்பிக்கையுடன் சசிகலா தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் ஜெயலலிதாவுடன் நாயுடு பேசி சமரசம் ஏற்படுத்த முயல்வார் என்று சசிகலா தரப்பு பெருத்த நம்பிக்கையி்ல் உள்ளது.

இந்த சமரச முயற்சிகள் காரணமாகத்தான் ஜெயலலிதாவின் நடவடிக்கை குறித்து எதுவும் பேசாமல் கப்சிப்பென சசிகலா தரப்பினர் இருப்பதாக கூறுகிறார்கள்.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம்

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னை, கோவையிலும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

மும்பையில் இன்று 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் அன்னா ஹசாரே. அவருக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுததவரை செனனை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் தொடங்கியது. சென்னையில் கோடம்பாக்கத்தி்ல உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இந்த உண்ணாவிரதம் தொடங்கியது. கிட்டத்தட்ட 50 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டம் குறித்து அதில் பங்கேற்ற ராதிகா என்பவர் கூறுகையில், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அடுத்து சிறை நிரப்பும் போராட்டத்தையும் அன்னா அறிவித்துள்ளார். அதிலும் பங்கேற்போம் என்றார்.

3 நாள் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்காக தனது கல்யாண மண்டபத்தை ரஜினிகாந்த் இலவசமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கோவை காந்திபுரத்திலும் பெரும் திரளானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர். உண்ணாவிரதத்தில் அவரும் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.சமீபத்தில் சென்னைக்கு அன்னா ஹசாரே வந்திருந்தபோது தொலைபேசி மூலம் அவரிடம் பேசி அவரது போராட்டத்துக்கு அன்னா வாழ்த்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.அன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்

தமிழரை ஏமாற்றும் சிறிலங்காவின் திட்டம் வெற்றியடையப் போவதில்லை!

இலங்கை என்கிற நாட்டில் இரு இனங்கள் தனித்தன்மையோடு வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இரு இனங்களின் நாடுகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியவுடனேயே சிலோன் என்கிற நாட்டின் பெயரில் ஐக்கியப்படுத்தப்பட்டன.

ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பெரும்பான்மை சிங்களவர்களின் கைகளில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். தமிழ்ப் பிரதேசத்தில் தமிழர்களே பெரும்பான்மை இனத்தவராக வாழ்கிறார்கள். சிங்களப் பிரதேசத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

சிறிய நாடான தமிழீழத்தைப் பெரிய நாடான சிங்களத்துடன் இணைத்ததன் பின்னர் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருப்பது சாத்தியமே. இதனை மையமாகக் கொண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம், தனக்கே கைவந்த கலையான பிரித்தாளும் தந்திரத்தை கைக்கொண்டது. இதன் விளைவே பல உலகநாடுகளில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனப் போராட்டங்கள்.

குட்டையைக் குழப்பி மீன்பிடிக்கும் தந்திரத்தையே இன்றுவரை பல ஏகாதிபத்திய அரசுகள் செய்து வருகிறார்கள். காலம் தாழ்த்தியாவது சிங்கள அரசின் ஏமாற்றுத் தந்திரப் புத்தியை பிரித்தானியா போன்ற நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன என்பது சற்று மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை டிசம்பர் 16-ஆம் நாளன்று பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டது. பதினெட்டு மாதங்கள் நடத்திய விசாரணையை ஆவலாக எதிர்பார்த்தார்கள் பல உலக நாடுகள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூன்று பேர் அடங்கிய குழு (தருஸ்மன் தலைமையிலான நிபுணர்குழு) பரிந்துரை செய்தவற்றை நிறைவேற்ற வேண்டியவைகள் பற்றி மகிந்தாவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செய்யுமென்று சிறிலங்கா அரசு அறிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட பல மேற்கத்தைய நாடுகள் மற்றும் ஐ.நா. சபை தொடர்ந்தும் குறித்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்று குரல் கொடுத்து வந்தார்கள். சிறிலங்கா அரசும் இதனை செய்துவிட்டது.

ஆணைக்குழுவின் விடயங்களும் பரிந்துரைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமா?

ஆணைக்குழுவின் 407 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையில் போர் தொடர்பான விடயங்களும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையும், பரிந்துரைகளையும் மேலோட்டமாக அலசுவோமாக, அவையாவன:

(1) வேதனைகளை மறந்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுப்போம்,

(2) பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை,

(3) ஆணொருவர் வரம்பு மீறியிருந்தால் விசாரணைக்குட்படுத்த வேண்டும்,

(4) காணொளிக் காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான சட்ட, மருத்துவ பிரச்சினைகள் நிலவுகின்றன,

(5) தவறிழைத்தமை நிரூபணமானால் சட்ட ரீதியாகத் தண்டனை வழங்கப்படும்,

(6) உசிதமான வேளைகளில் மரண அத்தாட்சிப்பத்திரம், நிவாரணங்கள்,

(7) சனத்தொகை நிலைமையை மாற்றியமைக்கும் கொள்கை உண்மைக்குப் புறம்பானது,

(8) அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் காணிகளின் அளவு குறைந்துள்ளது,

(9) வடக்கு கிழக்கு காணிகளைக் கையாள தேசிய காணி ஆணைக்குழு,

(10) நாடு முழுவதும் படையினர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர்,

(11) அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்குத் தடை,

(12) காணொளி காட்சிகள் தொடர்பில் சுயாதீனமான புலனாய்வு விசாரணை நடத்தவும்,

(13) சிறு இனக்குழுக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்றத் தெரிவுக்குழு,

(14) இனப்பிரச்சினைகளுக்கு இடையில் நட்புறவை மேம்படுத்துவதற்கு மும்மொழிக் கொள்கை.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை விடயங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனம் எதுவினையும் கொண்டுவரப் போவதில்லை.

புண் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் தகுந்த மருந்து கொடுக்க வேண்டும். அத்துடன், மற்றவர்களுக்கு குறித்த நோய்க் கிருமிகள் அப்புண்ணிலிருந்து தொற்றிவிடாமல் இருக்க, தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும். இது சாதாரண புண்ணுக்கே பொருந்துமென்றால், அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆறாத வடுக்களைச் சந்தித்திருக்கும் ஈழத் தமிழினத்தின் புண்ணைக் குணப்படுத்த பல வகையான மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கே தவிர குறித்த புண்ணை உருவாக்கிய சிங்கள ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது.

குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரை கூறும் செய்தி ஒன்று என்னவெனில், கடந்த கால நிகழ்வுகளை மறந்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்க தயாராக வேண்டுமென்பதே. போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழர்கள் இன்றுவரை எந்தவித அடிப்படை உரிமைகளையும் பெறவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெள்ளத்தில் மிதக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தினால் எவ்வித உதவிகளும் வழங்கப்படாத நிலை இன்றுள்ளது. எதிர்கால வளர்ச்சிகளையும், சவால்களையும் எவ்வாறு சந்திக்கலாம் என்று கூறுபவர்கள், துன்பப்படும் மக்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யாமல் இருட்டடிப்புச் செய்யும் நிலையே இன்று நிலவுகிறது. இத்தோரணையில் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க முடியும் என்பதே பலரிடத்திலும் எழும் வினா.

ஆணைக்குழுவின் அறிக்கையில் “சனல்-4” தொலைக்காட்சியின் நம்பகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் தொடர்பில் சந்தேகத்தை தோற்றுவிக்கும் தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. வேடிக்கை என்னவெனில், குறித்த ஒளி நாடாக்களை ஐக்கிய நாடுகள் சபையே பொறுப்பேற்று மரபணுச் சோதனை செய்து குறித்த ஒளி நாடாக்கள் உண்மையே என்று கூறியது. இதைவிட எந்தவகையில், புலன் விசாரணை தேவை என்று குறித்த குழு கேட்கிறதென தெரியவில்லை. ஒருவேளை, குறித்த ஒளி நாடாக்களை இந்தியாவிற்கு அனுப்பினால் தமக்கு சார்பாக சோதனையின் முடிவு வரும் என்று மனப்பால் குடிக்கிறார் மகிந்தா போலும்.

பொது மக்கள் வாழ்ந்த இடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது - யுத்த நடவடிக்கைகளை அமுல்படுத்துவது - குறித்த கொள்கைகளை வகுப்பதில் முக்கிய ஒரு காரணியாக அமைந்திருந்ததென்பதையும் பொதுமக்களின் இடங்களை வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்வது ஒரு போதும் அக்கொள்கையின் ஓரங்கமாக இருக்கவில்லை என்று கூறுகிறது குறித்த அறிக்கை.

அப்படியானால், மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், சிறார் மற்றும் வயோதிபர்கள் வாழ்ந்த இல்லங்கள், அநாதை மடங்கள் போன்ற இடங்களைக் குறிவைத்து சிங்கள அரச படையினர் மேற்கொண்ட தாக்குதல் எதுவுமே சிங்கள அரச படையினருக்கு தெரிந்திருக்கவில்லையா? இதனை சிங்கள அரசு மறைக்குமானால், சிங்கள அரசு மென்மேலும் தமிழ் மக்களின் வெறுப்பிற்கு ஆளாக வேண்டிவரும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் உட்பட பல உலக மற்றும் உள்நாட்டு மனித நேய அமைப்புக்கள் பல காலங்களாக குறித்த இடங்கள் குறித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டுமென குரல் கொடுத்தார்கள். அத்துடன், குறித்த இடங்களின் அமைவிடத்தைப் பற்றி சிறிலங்கா அரசிற்கும் மற்றும் படைத்தரப்பிற்கும் வழங்கப்பட்டது. இறுதி யுத்தக் காலப்பகுதியில், பாதுகாப்பு பிரதேசமாக சிங்கள அரசு மற்றும் விடுதலைப்புலிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடங்கள் மீது குண்டுகளை வீசி பல்லாயிரம் மக்களை கொன்றதை சிங்கள அரசும், குறித்த ஆணைக்குழுவும் மூடி மறைக்க முயல்கிறதா? ஆயிரம் நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.

உலக நாடுகள் என்னதான் செய்யப்போகின்றன?

சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது. உப்புச் சப்பு இல்லாத, உண்மைக்கு புறம்பான அறிக்கைக்காக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காத்திருந்தார்கள் சில மேற்கத்தைய நாடுகள். அளிக்கப்பட்ட கருமங்களுக்கு மாறாக, தமக்கு சம்பளத்தை வழங்கிய சிங்கள அரசிற்கு விசுவாசமாகவும், விடுதலைப்புலிகளையும் மற்றும் தமிழர் தரப்பினரையும் குற்றம் சாட்டியே குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. அடிப்படை விடயங்கள் குறித்து ஆழ விசாரித்து, தக்க நடவடிக்கைகளை எடுப்பதுவே புத்திசாலித்தனம். பிரித்தானியர்கள் சிறிலங்காவிலிருந்து வெளியேறிய காலத்திருந்தே, குறிப்பாக ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பு நடவடிக்கையினை காலத்திற்குக் காலம் ஆட்சிக்கட்டிலேறிய சிங்கள அரசாங்கங்கள் செய்தன. எனவே பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறிய காலத்திருந்தான ஆய்வினை சர்வதேசம் செய்யவேண்டும்.

சிங்கள ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் பற்றியும், அவைகளுக்கு இறுதியில் என்னவாயிற்று என்பதைப் பற்றியும் விசாரணை வேண்டும். தேவையற்ற ஒரு பயிரை அழிக்க வேண்டுமாயின், அதன் வேரையே பிடுங்க வேண்டும். அதைப் போலவேதான், ஒரு பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் குறித்த பிரச்சினையின் மூல காரணியை அறிந்து அவற்றை சரிசெய்தால் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் குறித்த அறிக்கையை ஆவலாக எதிர்பார்த்தார்கள். அறிக்கை வந்தவுடன், அதிர்ச்சிக்குள்ளான நாடுகளும் இவைகளே. குறித்த அறிக்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளைக் கொண்டிருக்கவில்லையென்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நல்லிணக்க அறிக்கையை அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாகவும், ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை மாத்திரம் அல்லாமல் அறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்துகிறது.

சிறிலங்காவிற்கான கனேடிய உயர் ஸ்தானிகர் புரூஸ் லெவி இவ்வாணைக்குழுவின் அறிக்கை குறித்து கருத்துக் கூறுகையில், “டிசெம்பர் 16-ஆம் திகதி வெளியிடப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையானது மிக அவசியமான அரசியல் நல்லிணக்கத்திற்கு முக்கிய பங்களிப்பாகும். அதேவேளை, அறிக்கை மீதான எமது ஆரம்ப, வாசிப்பின்படி, சிறிலங்காப் படையினரின் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாரதூரமான சர்வதேச பிழையான செயல்கள் தொடர்பாக போதியளவு கவனம் செலுத்தவில்லை என்ற பார்வைக்கு ஆதரவளிக்கின்றன. இந்த அறிக்கை தொடர்பான பதிலளிப்பை துரிதப்படுத்துமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம். முக்கியமான பொறுப்புடைமை விவகாரம் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை கனடா தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது" என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அவுஸ்திரேலியாவும் நல்லிணக்கக் குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளன. இதன் பின்னரே அது தொடர்பில் கருத்துக்கூற முடியுமென்றும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன. உலகின் பல நாடுகள் வாய் மூடி மௌனிகளாகவே இதுவரை இருக்கின்றன. சிறிலங்கா உள்விவகாரத்தில் சிறிது காலம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்த இந்திய நடுவண் அரசு, பின்னாளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாரிய பங்களிப்பை சிறிலங்கா அரசிற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இந்தியா செல்வதும், அவர்களுக்கு இந்தியா தேவையான உபசரிப்புக்களைச் செய்வதுமாக நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அத்துடன், இந்திய மற்றும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் இந்தியாவில் ஈழத்தமிழருக்கு எதிரான பல நாசகார காரியங்களைச் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இறுதி யுத்தத்தில் நடந்த பல சம்பவங்களுக்குச் சாட்சிகளாக இருக்கும் பல தமிழர்களை இலக்கு வைத்தே இப்போது காய் நகர்த்தல்களை இந்திய மற்றும் சிறிலங்காவின் உளவாளிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஈழத் தமிழரின் வாழ்வில் இந்தியாவிற்கு கரிசனை உண்டு என்று ஒருபுறத்தில் கூறிவிட்டு, மறுபுறத்தில் அவர்களுக்கு எதிரான பல நாசகார வேலைகளைச் சிங்கள அரசுடன் இணைந்து செய்வது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சிங்கள அரசுகள் தொடர்ந்தும் தமிழருக்கு நீதியைப் பெற்றுத் தரப்போவதில்லை என்பதை யாவரும் அறிவர். பல தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் தமிழின விரோதப் போக்கை சிங்கள அரசுகளும் விட்டதாக இல்லை. தமிழரின் அரசியல் அறவழிப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் எந்தவொரு நாடும் ஆதரவளிக்கவில்லை. 1983-ஆம் ஆண்டுக்கு பின்னரான சம்பவங்கள் இந்தியாவின் கவனத்தை ஈழத் தமிழர் சார்பாக திருப்பியது. முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின்னர் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்றால் மிகையாகாது.

சிங்கள அரசுகள் செய்யும் ஒவ்வொரு கண்துடைப்பு நாடகங்களையும் உலக நாடுகள் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்குப் பின்னராவது சிங்கள ஆட்சியாளர்களின் உண்மையான முகத்தை உலகநாடுகள் அறிய வழிவகுத்துள்ளது. இதற்குப் பின்னராவது, ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை வகுத்து தமிழரின் அரசியல் கோரிக்கையை பூர்த்தி செய்து, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமா உலக நாடுகள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா