
பூநகரி சங்குப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த இராணுவம் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்டு மோட்டார் சைக்கிள் சாரதியைப் படுகொலை செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வீதியில் நின்றிருந்த இராணுவம், வீதியில் பயணித்த குறித்த நபரை இடைமறித்து மோட்டார் சைக்கிளைத் தருமாறு கேட்டிருக்கின்றது. இந் நிலையில் அவர் அதற்கு உடன்பட மறுத்திருக்கின்றார். சம்பத்தினை அடுத்து குறித்த நபர் மீது இராணுவம் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அருகில் இருந்த இராணுவத்தினரால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், குறித்த சிப்பாயை சுட்டுக்கொல்லுமாறு குறித்த அதிகாரி ஏனைய சிப்பாய்களுக்கு அறிவித்த நிலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இராணுவச் சிப்பாயும் அருகில் இருந்த சிப்பாய்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக தற்போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் சிப்பாயும் கொல்லப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்திற்கு வேறு காரணங்களைச் சாட்டுவதற்கு படைத்தரப்பு முற்படலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.


No comments:
Post a Comment