Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi.Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi
Wednesday 22 August 2012
ழ. நெடுமாறனின் விமர்சனத்திற்கு கருணாநிதி காட்டமான பதில்!
இது தொடர்பாக கருணாநிதியின் இன்றைய கேள்வி-பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் சிங்கள இராணுவத்துடன் போர் நடந்த போது, நான் வாய்மூடிக் கொண்டிருந்தேன் என்பதாகக் குற்றஞ்சாட்டி நக்கலும் நையாண்டியுமாக ஆரம்ப காலத்திலிருந்தே நெடுமாறன் கூறி வருகிறார்.
இலங்கையிலே தமிழர்கள் மீது ராஜபக்ச போர் தொடுத்து விட்டார் என்றதும் தன்னுடைய கப்பல் படையை கொழும்பு நோக்கி அனுப்பியதைப் போலவும், அந்தப் படை இலங்கைப் போய்ச் சேருவதற்குள் நான் தடுத்து நிறுத்தி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதைப் போலவும் பாவம், நெடுமாறன் கைபிசைந்து கொண்டு நம்மையும் தாறுமாறாகவும் தரக் குறைவாகவும் தாக்குகிறார்.
ஒரு நாட்டில் மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும்போது, ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்சினைகளில் தலையிட்டு தவிர்க்க முடியும் என்பதை, அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் உணர முடியும்.
ஏதோ எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எரிச்சலைக் கொட்டித் தீர்ப்பவர்களுக்கு அதையெல்லாம் சிந்திக்க நேரமோ, நினைப்போ கிடையாது.
அவர்களுடைய நேரமும் நினைப்பும் திமுகவையும் அதன் தலைவராகிய என்னையும், “பால காண்டம்” முதல் “யுத்த காண்டம்” வரை பழிப்பதும், இழித்துப் பேசுவதும் தவிர, வேறு எதையும் கற்றதுமில்லை, கடைப்பிடித்ததுமில்லை.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் மோதல் நடந்தபோது நெடுமாறன் கூற்றுப்படி நானாவது வாய் திறக்காமல் சும்மாயிருந்தேன் என்பது உண்மையாகவே இருக்கட்டும்.
ஆனால் தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீர்மானமே கொண்டு வந்து நிறைவேற்றினாரே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா! நெடுமாறனுக்கு அது நினைவிலே இருக்கிறதா?
அதுமாத்திரமல்ல, இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், போர் என்றால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று சொன்னாரே ஜெயலலிதா, அதாவது நெடுமாறனுக்கு ஞாபகம் இருக்கிறதா?
வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்பதைப் போல, மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்து, “டெசோ” மாநாட்டில் தனி ஈழம் பற்றிய தீர்மானம் கூடாது என்று சொன்னதைப் போலவும் அதை நான் ஏற்றுக் கொண்டதைப் போலவும் கலப்படமற்ற ஒரு பொய்யை நெடுமாறன் குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னைக்கு பெரும்பாலும் வரும் போதெல்லாம் என்னைச் சந்திக்கும் வழக்கமுடைய ப.சிதம்பரம், அப்படித்தான் அன்றைக்கும் என்னைச் சந்தித்தார். “டெசோ” மாநாடு பற்றியோ அதில் நிறைவேற்றும் தீர்மானங்கள் பற்றியோ அவர் என்னிடம் பேசவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் “டெசோ” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் - “அண்டை நாடான இலங்கையில் அமைதியும் சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும் உரிமையும் பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது.
பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகள் ஆகியனவற்றை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்து வரும் இந்திய அரசு அண்டை நாடான இலங்கையில் இந்த நிலைகளுக்கு எதிரிடையாக நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில் எழுந்துள்ளதை இம்மாநாடு இந்திய அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறது.
எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத் தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டெடுத்து சமத்துவமும் அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முனைந்து, முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானத்தில் வாழ்வாதாரம் பற்றி மாத்திரமல்ல, உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்பதை உள்ளமென ஒன்று இருப்போர் அறிவர். உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பள்ளம் இருப்போருக்கு அது தெரிவதற்கு நியாயமில்லை.
ஈழம் என்ற சொல்லையே மாநாட்டுத் தலைப்பிலே பயன்படுத்தக் கூடாது என்று மத்தியிலே ஒரு அதிகாரி ஆணை பிறப்பித்திருக்கிறார் என்று ஏடுகள் எல்லாம் பெரிதுபடுத்தி, உடனடியாக வன்மையாக அதனை நாம் கண்டித்து, ஈழம் என்பது இன்று நேற்று வந்த சொல் அல்ல; “ஈழத்து உணவும், காழகத் தாக்கமும்” என்று “பட்டினப்பாலை” யிலேயே இடம்பெற்ற சொல் அது என்பதை எடுத்து விளக்கி கடிந்து கொண்ட பிறகு, மத்திய அரசு அதிகாரிகள் ஏற்கனவே பிறப்பித்த ஆணையை திருத்தம் செய்து வெளியிடப்பட்டது என்பதை இந்த எத்தர்கள் உணர மாட்டார்கள்.
- இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி காட்டத்துடன் தமிழர் தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறனை விமர்சித்துள்ளார்.
பற்றி எரியுதடா -எங்கள் தமிழ்தேசத்தை சுற்றியுந் தீயே!
பற்றி எரியுதடா -எங்கள்
தமிழ்தேசத்தை சுற்றியுந் தீயே
குற்றம் எமதல்ல -இனப்
பெரும்பகை வளர்த்ததும் நாமல்ல
முற்றும் பகை தீர்ப்போம் -முழுச்
சுதந்திர தமிழீழம் வென்றெடுப்போம்
வெற்றிக் கொடி பிடித்து -ஈழத்
தெருவெங்கும் நாமெல்லாம் அணிவகுப்போம்''
நிஜத்தில் முன்னோக்கும் முன் நினைவுகளில் சற்றே
பின்னோக்குகிறேன்.விடுதலை இலக்கை நோக்கி
நான் வேகமாய் பறந்து செல்கையில்
எப்போதெல்லாம் பாதியில் எனது சிறகுகள்
முறிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம்
ஆதியை நோக்கி மனது மட்டும் மௌனமாய் பறக்கின்றது .
சுதந்திர இலங்கை எனச் சொல்லப்பட்ட இந்த தேசத்தில்
உண்மையிலேயே சுதந்திரத்திற்காகப் போராடிய ஆரம்ப கால
தமிழர்களின் ஆர்ப்பரிப்புகளை அசைபோடுகிறேன்....
ஒரேயொரு கேள்வி மட்டும் மனதின் ஓரத்தில் எழுகிறது. ''இவையெல்லாம் எதற்காகவென்று''?!....
பெயரளவில் மட்டும் குடிமக்களாய் வைக்கப்பட்டு
பெருமளவில் எம்மக்கள் அடிமைப்படுதப்பட்டப் பொழுது
உருவான கிளர்ச்சிகளின் உச்சபட்ச வளர்ச்சியாக
வட்டுக்கோட்டையில் தந்தை செல்வாவின் தலைமையில் வார்த்தெடுக்கப்பட்டதே ''தனித் தமிழீழத் தீர்மானம் ''
எண்ணிப் பார்க்கிறேன்.... இவையெல்லாம் எதற்காக ?
சிங்களவர்களின் அடக்குமுறையென்பது நாளடைவில்
வளர்ந்து தமிழின அழிப்புமுறையானது .
அதிலிருந்து மீண்டு வர போராடிய எம் மக்கள்
எதிரிகளின் தாக்குதலில் மாண்டு போனார்கள்.
இறக்கும்வரை அவர்கள் வாழ்வில்
சுதந்திரம் பிறக்கவேயில்லை!...
கேட்காமல் இருக்கமுடியவில்லை
இவையெல்லாம் எதற்காக?!....
வாடிய தமிழர்களெல்லாம் ஒன்றாய்க் கூடிய பொழுது
பலம் கொண்டஎம் மக்கள்
பகைவரை எதிர்த்து களம் கண்டனர் .
''நீங்கள் கொடுப்பதற்கும் நாங்கள் வாங்குவதற்கும்
சந்தைப் பொருளல்லவே விடுதலை.
அது எமக்கே எமக்கானது.
அது என்னோடே எப்போதும் இருப்பதுவென்று''
சிங்களக் கூட்டத்திற்கு ''சிம்ம சொர்ப்பனமாய்''....
மன்னிக்கவும் புலிச் சொர்ப்பனமாய் புறப்பட்டுவந்தனரே.
''தமிழர்களின் விழிகளாம் ......
அவர்தாம்''தமிழீழ விடுதலைப் புலிகள்''
அவர்களின் எழுச்சி...அவர்களின் தியாகம் ...
அவர்களின் போராட்டம் ....
பொறுக்க முடியாமல் கேட்கிறேன்
இவையெல்லாம் எதற்காக?....
புடம் போட்ட நமது விடுதலைப் போராட்டத்தை
சிங்களவர்கள் இன்று தடம் மாற்றப்பார்க்கிறார்களே!
அதற்காகவா?....
சொந்தங்களே புதிதாய் அவர்கள் நமக்கு போடும்
பாதைகளெல்லாம் பழைய அடிமைப் பள்ளத்தாக்குநோக்கியே
பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் .
எல்லாம் முடிந்துவிட்டது இனி ஈழம் என்று
எதுவுமில்லை.அதற்கு காலமொன்று எப்போதுமில்லையென்று
தமிழ்க் காதுகளில் சிங்கள வாய்கள் ஓதி
எமது மக்களின் சுதந்திர சிந்தனையைச்
சுத்தமாய்ச் சிதைக்கப் பார்க்கிறது.
லயித்தல்
இனி நமது வாழ்வென்பது உண்ணுதல்
உறங்குதல் லெளகீகங்களில் லயித்தல் மட்டுமேயென்று.......
நீ சுவாசிக்கும் சுத்தமான காற்றில் நஞ்சை
நயவஞ்சகமாய் கலக்கிறான் சிங்களவன்.
ஆடு மாடுகளைப்போல் நம்மை முகாமிற்குள் அடைக்கிறான்.
உடலளவில் அடைப்பதற்காக அல்ல .
உணர்வளவில் அடைப்பதற்காக. . . .
இன்று உணவுப் பசியில் நம்மை வாடவிடுவதெல்லாம்
நமது உணர்வுப் பசியை ஓடவிடுவதற்காக ......
இந்தத் தீவைப் பொறுத்தவரை தமிழனென்பவன்
ஒரு நாள் பிறக்கலாம் ஒரு நாள் இறக்கலாம்.
அதனைத் தாண்டி அவனுக்கென்று இங்கே எதுவுமில்லை. . . .
இந்தத் தீவின் எந்தத் திசைகளிலும்
இனி எந்தக் காலத்திலும்
சுதந்திரப் போராட்டத்தின் கிளைகள்
பரவாமலிருக்கஇநமது விடுதலை வேருக்கு
விஷம் வைக்கப்படுகிறது.
எண்ணிப் பாருங்கள். . . .
இதற்காகவா தந்தை செல்வா தமிழீழத் தீர்மானம் கொண்டுவந்தார்....?
இதற்காகவா போராளிகள் எல்லாம் போராடி மாண்டார்கள்?
இதற்காகவா எமது பெண்களின் மானம் பறிக்கப்பட்டது ?
இதற்காகவா எமது குழந்தைகளுக்குகூட மரணம் பறிக்கப்பட்டது ?
இதற்காகவா . . . .முள்ளிவாய்க்காலில் எம் குலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது ?. . .
''சொந்த தேசத்தை மீட்டெடுத்தலும் குறிப்பிட்டஓர்
இனம் சுதந்திரமாய் வாழ்ந்து வருவதும் இயற்கைக்கு புறம்பானதென்று '' ஆனால்
''அந்நிய தேசத்தை அபகரித்தலும் வேற்றின மக்களை வேரறுப்பதுவும்
முற்றிலும் இயற்கைக்கு முரணானது''.
தமிழீழ மண்ணில் சுமார் ஐம்பது அறுபது
ஆண்டுகளாகஇயற்கைக்கு முரணாக
அந்நிய சக்திகளின் திட்டமிட்ட ஒரு வல்லாதிக்க
மேலாண்மை நமது மண்ணையும் மக்களையும்
பலிகொண்டு வருகின்றது.
அதுவும் 2009 மே மாதத்திற்கு பிறகு
மண்ணில் மரங்களை நடுவதைப் போல
தமிழீழம் முழுவதும் ஆர்மிக்காரன்
என்னும் பெயரில் மனிதர்கள்
நடப்பட்டிருக்கிறார்கள்.
எமது மக்களோ அகதிகளாய் விடப்பட்டிருக்கிறார்கள் .
தோழர்களே . . . .
''குரலை இழந்த பிறகும் நாம் கர்ஜிக்கிறோம்
கால்கள் உடைந்த பிறகும் நாம் ஓடுகிறோம்
கண்களை மூடிய பிறகும் நாம் ஒளியைப் பார்க்கிறோம்
சிறகுகள் இழந்த பிறகும் நாம் சிரமமில்லாமல் பறந்து வருகிறோம்
தமிழர்களின் தாகமெல்லாம் தமிழீழத் தாயகமென்று''
தளராத மனம் கொள்வோம் . . .
பிறழாத உறுதி ஏற்போம் . . .
பலராலும் தியாகம் செய்த எம்மண்ணில்
திரளாக ஒன்று கூடுவோம் .
''விடுதலையை தமிழர்க்கும்
விடியலை தமிழீழத்திற்கும்
வென்றெடுப்போம்''
''எமது நாடு தமிழீழ நாடு
எமது மண் தமிழீழ மண் ''
சிறப்பு முகாம்களை மூடுங்கள்: வைகோ
சிறப்புமுகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி பூவிருந்தவல்லி முகாமில் இருக்கும் செந்தூரன் என்பவர் கடந்த 6-ந்தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் நேற்று முதல் தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தியிருக்கிறார்.
சிலவகைக் குற்றங்கள் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் வெளிநாட்டினர், வழக்கு நடைபெறும் காலத்தில் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். வழக்கு நடக்காவிட்டாலும் அவர்கள் குறித்த விசாரணை முடியும் வரை அவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள். சிறப்பு முகாம்களில் சிறையளவு கட்டுப்பாடுகள் உண்டு. அங்கிருப்பவர்கள் வெளியே சுதந்திரமாக சென்று வரமுடியாது, வெளியிலிருப்போர் அனுமதியில்லாமல் அவர்களைச் சென்று பார்த்துவரமுடியாது.
தாங்கள் குற்றமற்றவர்கள் எனவே தங்களை விடுதலை செய்யவேண்டும், சாதாரண முகாம்களில் வாழும் உறவினர்களுடன் தங்க அனுமதிக்கப்படவேண்டும் எனக்கோரி அடிக்கடி சிறப்பு முகாம்வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரேயடியாக சிறப்பு முகாம்கள் மூடப்படவேண்டும் எனக்கோரி மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. செந்தூரனின் உயிர்காப்பாற்றப்படவேண்டுமென இப்போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ வலியுறுத்தினார்.
இலங்கையில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அடிக்கடி கோரிக்கை விடுக்கின்றனர். அதே நேரம் தமிழகத்தில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை விடுவிப்பது குறித்து பல ஆண்டுகளாக எவ்வித முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோவும் அவரது கட்சியினரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஐநாவின் அமெரிக்க தூதுவர் சூசன் ரைஸ் இந்தியா அவசர பயணம்!
பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பிலான பல முக்கிய விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக இந்தியா வரும் சூசன் ரைஸ் புதுடில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மாத்தாய் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
முக்கியமானதாகக் கடந்த வருடம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்தபோது அதன் பின்னணியில் இருந்து காய்களை நகர்த்திய சூசன் ரைஸ், இப்போது பிராந்திய பாதுகாப்பு என்ற ரீதியில் அவசரமாக டில்லி வருவது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவருவதாக இந்தியா தொடர்ச்சியாகக் கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் சூசன் ரைஸின் இந்த பயணம் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
ஜெனிவா மனித உரிமைகள் சபையின் அடுத்த அமர்வு செப்டம்பரில் நடைபெறவுள்ள நிலையில் சூசன் ரைஸ் திடீரென இந்தியாவுக்கு வருகை தருவது இலங்கைக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மனித உரிமைகள் சபையில் கடந்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை அது சரியான வகையில் பயன்படுத்தியுள்ளதா என்பதை இந்த இந்திய வருகையின் போது சூசன் ரைஸ் கேட்டறிந்து கொள்வார் எனவும் ஊகிக்கப்படுகிறது.
வலிகாமம் புதிய பிரதேச சபை கட்டிடத்தின் மீது இனம் தெரியாத குழுவினர் கழிவு ஒயில் ஊற்றி தாக்குதல்
இன்று அதிகாலை 2.00 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று இச்செயலை அரங்கேற்றியுள்ளது. உந்துருளி, மற்றும் வெள்ளை ஊர்தியில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள், அங்கிருந்த காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு, கட்டிடத்தின் மீது கழிவு ஒயிலை ஊற்றியுள்ளனர். மேலும் காவலாளிகளை சுடுலகன் முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கி அவர்கள் தலையிலும் கழிவு உராய்வு நீக்கியை ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட கட்டடத்தை உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைக்குமாறு வட மாகாண ஆணையாளர் பணித்திருந்ததாகவும் இந்த நிலையில் கடந்த புதன் கிழமை கட்டடத்தை கையேற்பதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வந்தபோது, வலி தெற்கு பிரதேச சபைத்தலைவர் கட்டடம் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியதற்கமைய ஒப்பந்தகாரர்களால் செயலக கட்டிடம் அவரிடமே கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே வலி.தெற்கு பிரதேச சபை தலைவருக்கும் உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாகவும் அதன் போது உள்ளுராட்சி உதவி ஆணையாளர், 'தமக்கு ஆளுனர் படைகளின் பாதுகாப்பு வழங்கியுள்ளார். நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்' எனக்கூறி வலி.தெற்கு பிரதேசசபை தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச கட்சியின் உறுப்பினர்கள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பரில் இந்தியாவின் 100 வது விண்வெளி திட்டம் - இஸ்ரோ
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ நிறுவனர் ராதா கிருஷ்ணன், எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாவது வாரத்தில் இந்தியாவின் 100வது செய்மடி ஸ்ரிஹறிக் கோட்டாவில் ஏவப்படவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பிஎஸ்எல்வி சி 22 ரக ராக்கெட்டில் ஏவப்படும் இந்த செய்மதி பிரான்ஸ், ஜப்பான் நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப் பட்ட இரண்டு செயற்கைக் கோள்களை சுமந்தபடி விண்ணில் ஏவப்படவிருக்கிறது இஸ்ரோ நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைப் பெற்றுவருவதாகவும் தெரிகிறது.
நகை திருட்டு விசாரணை: லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லிண்ட்சே ஓட்டம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் விலை உயர்ந்த நகைகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்ததையடுத்து ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன் லாஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேறிவிட்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை வாங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்பான வழக்கில் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹனுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் நடந்த விருந்துக்கு சென்ற லிண்ட்சே தன்னுடன் தனது சகோதரர் காய், உதவியாளர் மற்றும் பெயர் தெரிவிக்கப்படாத 2 ஆடவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு அவர்கள் அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் விடுதியில் இருந்த விலை உயர்ந்த நகைகள், கைக்கடிகாரங்கள், கூலிங்கிளாஸை காணவில்லை என்று உரிமையாளர் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு தங்கியிருந்த லோஹனை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர் தான் திருடினார் என்று சந்தேகிக்காவிட்டாலும் அவர் அழைத்து வந்த அந்த பெயர் தெரிவிக்கப்படாத இருவர் மீது தான் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விசாரணையை முடித்த கையோடு லிண்ட்சே லாஸ் ஏஞ்சல்ஸை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
உற்சாகத்திற்கு காரணம் பழைய பாடல்கள்தான் : தொகுப்பாளர் ஸ்ரீதேவி
ஒரு நிகழ்ச்சியின் வெற்றிக்கு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் காரணமாக அமைந்துவிடுகின்றனர். ஜெயா டிவியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்ரீதேவியும் அப்படித்தான்.
புதிய பாடல்களைவிட பழைய பாடல்களுக்குத்தான் இப்பொழுது ரசிகர்கள் அதிகமாகிவருகின்றனர். இதனால் காலை நேரத்தில் சன், ஜெயா, மெகா, வசந்த், ராஜ் என பெரும்பாலான டிவிகளில் பழைய பாடல்களே ஒளிபரப்பாகின்றன. ஜெயா டிவியில் பழைய திரைப்படங்களின் பாடல்களை தொகுத்து வழங்கும் ஸ்ரீதேவிக்கு புதிய பாடல்களை விட பழைய பாடல்கள்தான் உற்சாகத்தை தருகின்றனவாம்.
மற்ற டி.வி.க்களில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஜெயா டி.வி.யின் "தேன் கிண்ணம்' நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்க கூடிய இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது பெருமையாக இருக்கிறது. தலைமுறை இடைவெளியில் சில சமயங்கள் இது மாறிவிட்டாலும், சில பாடல்கள் மட்டும் காலம் கடந்து நம் உதடுகளால் முணுமுணுக்கப்படுகிறது. ஏனென்றால் நாம் இன்னும் பழமையின் சாயல்கள்தான் என்கிறார் ஸ்ரீதேவி.
தேன் கிண்ணம் நிகழ்ச்சியை வழங்கியதிலிருந்து ஸ்ரீதேவியின் நண்பர்களும் இப்போது பழைய பாடல்களின் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டனராம். தேன் கிண்ணம் நிகழ்ச்சிக்கு முன்பு பொதிகை டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த "கதை கதையாம் காரணமாம்' என்ற நிகழ்ச்சியையும் ஸ்ரீதேவிதான் தொகுத்து வழங்கியுள்ளார். தேன் கிண்ணம்' பழைய பாடல்களில் தொகுப்பு என்றால், அந்த நிகழ்ச்சி பழைய சினிமா காட்சிகளின் தொகுப்பு.
ஸ்ரீதேவிக்கு பழைய பாடல்களைப் போல பரத நாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் பரத நாட்டியம்தான் பிராக்டீஸ் செய்கிறார். தீவிர சினிமா ரசிகையான ஸ்ரீதேவிக்கு சினிமா, சீரியல் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் நடிக்க ஆர்வம் இல்லையாம்.
ரூ.100 கோடி வசூல் சாதனை படங்கள்: பெருமை அடிக்கும் அசின்
மும்பை: ரூ.100 கோடி வசூல் செய்த படங்கள் என்ற கணக்கு, நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி படத்தில் இருந்து தான் துவங்கியது என்று அசின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அசின் கூறுகையில், நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி(2008) படத்தில் இருந்து தான் இந்த ரூ.100 கோடி வசூல் கிளப் துவங்கப்பட்டது. எனது முதல் இந்தி படமே ரூ.100 கோடி வசூல் செய்தது. ஹீரோயின்களைப் பொறுத்த வரையில் ரூ.100 கோடி வசூல் கிளப்பை துவக்கியவளே நான் தான் என்று உணர்கிறேன். ஆனால் அதை வைத்து நான் ஒரு போதும் விளம்பரம் தேடியதில்லை. நான் ஒரு சில இந்தி படங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்தும் வெற்றிப் படங்களாகும்.
எனக்கு தற்பெருமை அடிக்கப் பிடிக்காது. அது என் குணமே இல்லை. பணம் எவ்வளவு வருகிறது என்பதை பார்ப்பது எனது வேலையில்லை. அந்த விஷயத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் விட்டுவிட்டு நடிப்பைப் பற்றி மட்டுமே நடிகர், நடிகைகள் கவலைப்பட வேண்டும். ரெடி, போல் பச்சன், ஹவுஸ்புல் 2 ஆகிய காமெடி படங்கள் அடுத்தடுத்து கிடைத்தது தற்செயலானது. காமெடி தவிர பிற படங்களிலும் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.
அசினை தவிர்த்து ரூ.100 வசூல் செய்த படங்களில் நடித்த பிற பாலிவுட் நாயகிகள் கரீனா கபூர் (3 இடியட்ஸ், 2009), பிரியங்கா சோப்ரா (டான் 2, 2011), சோனாக்ஷி சின்ஹா (தபாங், 2010) மற்றும் கத்ரீனா கைப் (ஏக் தா டைகர்) ஆவர்.
சாக்கடை அடைப்பை எடுத்து விடுங்கப்பா.. சொல்கிறார் நயனதாரா
நயனதாராவுக்கு வர வர சமூக பார்வை அதிகமாகிக் கொண்டு போகிறது போலும். சாக்கடை அடைப்பையெல்லாம் எடுத்து விடுமாறு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்.
ஒரு காலத்தில் ஓஹோவென திரையுலகில் வலம் வந்தவர் நயனதாரா. அவருடன் ஜோடி போட ஒரே கூட்டமாக இருந்த காலம் அது. இடையில் இரண்டு முறை காதலில் விழுந்தார் நயனதாரா. இரண்டுமே பாதியிலேயே புட்டுக் கொண்டது. அந்த இரண்டு தோல்விக்கும் என்ன காரணம் என்பது இதுவரை சரியாக தெரிவிக்கப்படவில்லை, அது அவர்களது பெர்சனல் மேட்டர். நமக்கேன் வம்பு.
இப்போது மேட்டருக்கு வருவோம். சென்னை நகரம் குறித்த தனது கருத்துக்களைக் கூறியுள்ள நயனதாரா சென்னை நகரின் அலங்கோலங்களையும் கோடிடடுக் காட்டி அதையெல்லாம் சரி செய்யுமாறு கோரிக்கையும் வைத்துள்ளார். குறிப்பாக சாக்கடை அடைப்புதான் அவரை ரொம்பவே கடுப்பாக்குகிறதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மழைக்காலத்தில் சென்னையில் நடக்கவே முடியாது. சாலைகள் எல்லாம் ரொம்ப மோசம். அதை விட இந்த சாக்கடை கால்வாய் அடைப்புகள்தான் பெரும் சிரமப்படுத்தும். அதையெல்லாம் சரி செய்து, அடைப்புகளை எடுத்து விட்டால், ரோடுகளில் தண்ணீர் நிற்க வாய்ப்பே இல்லை. மழைக்காலத்தில் மக்களும் நிம்மதியாக செல்ல முடியும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
அட, நம்ம அரசியல்வாதிகளுக்குக் கூட இந்த அடைப்பெடுக்கும் யோசனை தோன்றாமல் போய் விட்டதேய்யா...!!
கிழக்குத் தேர்தலும் கூட்டமைப்பும்! – தசக்கிரீவன்
நாட்டு நடப்பின் முக்கிய கதாம்சமாக கிழக்குத் தேர்தல் இடம்பிடித்துக் கொள்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தெரிந்தெடுத்து ஆக்கபூர்வமான சில கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டுமென்பது தசக்கிரீவனுக்கொரு எண்ணம்.
* கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை. கிழித்த கோட்டைத் தாண்ட முடியாமல் பிரம்போடு நிற்கும் பெரியண்ணன் கூறும் வார்த்தைகளை சிரமேற்கொண்டு கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் பணியாற்றினார் என்பதற்கு பல உதாரணங்களில் இதுவுமொன்று.
அப்போதெல்லாம் விடுதலைப் புலிகளால் சொல்லப்பட்ட காரணம், வடகிழக்கு இணையாத பட்சத்தில் மாகாணசபைத் தேர்தல் ஒன்றுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முகம் கொடுக்க மாட்டாது. வடகிழக்கு இணைப்பின் பின்னர் தான் அதைப் பற்றிய முடிவு. இந்த நியாயமான கட்டளையை தமிழீழ மக்களும் ஏற்றுக்கொண்டார்கள் கூட்டமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை.
இதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சிக்கு தமிழ்மக்களின் வாக்குகள் குவிந்ததால் ஒரு குருட்டு அதிர்ஷ்டமும் அடித்தது. இதை விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்பு பின்புலமாக நின்றது. இப்பொழுது புதிரான விடயம் என்னவென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்குத் தேர்தலில் பங்குகொள்ள எடுத்த முடிவு.
புலிகள் நோக்கியிருந்த வடகிழக்கு இணைப்பு, இம்முறைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்குத் தேர்தல் களமிறங்கலோடு புஸ்வாணமாக போய்விட்டது. மீண்டும் தேர்தல் என்ற சிங்களத்தின் சாக்கடைக்குள் ஈழ விரும்பிகளின் உணர்வுகளை குழி தோண்டிப் புதைத்தாயிற்று. இதற்கு மாற்றுப் பரிகாரம் என்ன?
* கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டுவிட்டதென வைத்துக்கொள்வோம். இதனை வைத்து எப்படி தமிழ்மக்களின் கெளரவமான சுயநிர்ணய உரிமையை ஏற்படுத்தலாம் என சிந்திப்போம்.
1. கிழக்கு மாகாணசபை முதலமைச்சரை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும். (உதாரணமாக R. G. சேனநாயக்கா இரு தொகுதிகளில் நின்றவர்). தமிழ்த்தேசிய ஒற்றுமையத் தவிர பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்பதை மக்களுக்கு தெளிவூட்டவேண்டும்.
2. மேலுள்ளது செய்யப்படாவிடின் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி விலக கூட்டமைப்பு முன்மொழிய வேண்டும். அதேபோன்று எதிர்காலத்தில் வடக்கில் வரும் கூட்டமைப்பின் முதலமைச்சரும் பதவி விலகி வெற்றிடமாக்க வேண்டும்.
3. தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவேண்டிய விடயங்கள் இவைதான். இதன் அடிப்படையில் சாத்தியப்பட்டால் வடகிழக்கின் இணைப்பை சர்வதேசம் அடங்கலாக மக்களின் ஆணையாகக் காட்டமுடியும்.
தமிழ்த்தசியக் கூட்டமைப்பால் யதார்த்தமான நடைமுறைக்கு ஒவ்வக்கூடிய துணிகரமான திட்டங்களை எவர்க்கும் அடிமைத்தனமின்றி முன்வைக்க முடியும் என்ற செய்தியையும் பகிரங்கப்படுத்த ஒரு வாய்ப்பாக கருதமுடியும்.
தசக்கிரீவன்
அமைச்சர் மீது ஆசிரியை செக்ஸ் குற்றச்சாட்டு
இவரது ஜம்தரா தொகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை சோனியாதேவி, அமைச்சர் சத்யானந்த் தன்னை ரகசிய திருமணம் செய்ததாக கடந்த ஆண்டு பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதை அமைச்சர் மறுத்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சத்யானந்த் ஜா பட்டுல் என்னை 1996-ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
எங்கள் உறவுக்கு சாட்சியாக எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும், ’’எனக்கும் என் மகனுக்கும் சட்டரீ தியான உரிமையும், சமுதாய அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். என் மகனுக்கு மந்திரி பட்டுல் தான் தந்தை என்று நிரூபிக்கும் வகையில் அவரை மரபுபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மந்திரி சத்யானந்த் ஜா பட்டுல் கடுமையாக மறுத்துள்ளார். 1996-ல் என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறும் அந்த பெண், இத்தனை ஆண்டுகளாக ஏன் மவுனமாக இருந்தார்? நான் மந்திரியான பிறகு இந்த சர்ச்சையை எழுப்புவது ஏன்? சாதாரண பெண் அளிக்கும் புகாருக்காக நான் ஏன் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்? என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பூ பென் சவுத்ரி என்பவர் ஆசிரியை சோனியாதேவி என் மனைவி. அவரது மகனும் எனக்கு பிறந்தவன் தான் என்று கூறியுள்ளார்.
விஜயலட்சுமிக்கு சீரியலிலும் சோகம்தான்!
சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து நிகழ்ச்சித் தொகுப்பாளராக களம் இறங்கிய நடிகை விஜயலட்சுமி பின்னர் சீரியலில் முகம் காட்டினார். இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஒதுங்கிய விஜயலட்சுமி இப்பொழுது செல்லமே சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
சொந்த வாழ்க்கைதான் சோகமாகிப்போனது என்றால் அவருக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களும் சோகமயமானதாகவே, அமைந்திருக்கிறது. கேரளாவில் செட்டில் ஆனா விஜயலட்சுமி அங்கு வரும் செல்லம்மாவின் கணவர் வடமலையை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். இனி ராதிகாவுடன் மல்லுக்கு நிற்கும் பாத்திரமாம்.
இயக்குநர் சீமானுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பின்னர் மீடியாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தவர் இப்பொழுதுதான் அதிலிருந்து மீண்டு சீரியலில் நடிக்க வந்துள்ளார். ஆனால் கிடைத்துள்ள கதாபாத்திரமும் இப்படி அமைந்து விட்டதே என்று சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.
சபாஷ்... பேட்மிண்டன் போட்டிகளில் கலக்கிய 'கோலிவுட்டின் சாய்னா' ஷாலினி!
சென்னை: கோலிவுட்டின் சாய்னா என்று செல்லப் பெயர் பெற்ற நடிகை ஷாலினிக்கு நாகர்கோவிலில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.
நாகர்கோவிலில் சமீபத்தில் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி நடந்தது. இதில் ஷாலினியும் கலந்து கொண்டார். ஷாலினி ஒரு சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை. சமீப காலமாக அவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஆடி வருகிறார்.
நாகர்கோவிலில் நடந்த போட்டியில் அவர் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் கலந்து கொண்டார். இதில் இரண்டிலும் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
போட்டியின் இறுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில் அவர் பரிசினை பெற்றுக் கொண்டார். தனக்கான பரிசை தனது மகள் அனுஷ்கா மூலமாக பெற்றார் ஷாலினி.
விஜய், சூர்யாவுக்காக 'சிவாஜி 3டி' ரிலீஸை தள்ளிப் போடுகிறார் ரஜினி?
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சிவாஜி படத்தின் 3டி பதிப்பு ரெடியாகி விட்டாலும் கூட அதன் ரிலீஸ் தாமதமாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாமதத்திற்கு ரஜினிதான் காரணம் என்றும் கூறுகிறார்கள். அதாவது மிக விரைவில் விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் மாற்றான் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. அவர்களது படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் தனது 3டி சிவாஜியை சற்று தாமதித்து வெளியிடலாம் என்று ரஜினி முடிவு செய்துள்ளாராம்.
இதுதொடர்பாக ஏவிஎம் நிறுவனத்திடம் ரஜினியே பேசி, முதலில் சூர்யா, விஜய் படங்கள் வெளியாகட்டும். நாம் சற்று தள்ளி ரிலீஸ் செய்யலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம். அதற்கு ஏவிஎம் நிறுவனமும் சரி என்று கூறி விட்டதாக சொல்கிறார்கள்.
இளம் நடிகர்கள் மீது ரஜினிக்கு உள்ள அக்கறையை, அவரது பெருந்தன்மையை இது காட்டுவதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
விஜய், சூர்யா படங்கள் வெளியாகும் நேரத்தில் சிவாஜி 3டி வெளியானால், நிச்சயம், விஜய், சூர்யா படங்களின் வசூலை அது வெகுவாக பாதிக்கும் என்பதால்தான் ரஜினியே பெருந்தன்மையாக தனது படத்தை தள்ளிப் போட யோசனை தெரிவித்துள்ளாராம்.
ரஜினி தி கிரேட்...
இன்றும் நாளையும் இந்திய வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்
வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கிராமப் புறங்களில் இன்னும் அதிகக் கிளைகள் தொடங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு முழுவதும் வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொழில் நகரமான திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திருப்பூரில் மட்டும் ஒரு நாளைக்கு 600 கோடி ரூபாய் என்று இரண்டு நாளில் 1200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் வங்கிப்பணிகள் அடியோடு முடக்கப்பட்டிருப்பதால், பலதரப்பு மக்களும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வங்கிப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் மேலும் போராட்டங்கள் தீவிரப் படுத்தப் படும் என்றும் கூறியுள்ளனர்.
Tuesday 21 August 2012
எம்.எஸ்.வியுடன் இணைகிறார் யுவன் ஷங்கர் ராஜா
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைகிறார் இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசு யுவன் ஷங்கர் ராஜா.
இசைஞானியும், மெல்லிசை மன்னரும் இணைந்து கொடுத்த மெல்லத் திறந்தது கதவு இன்னும் கூட ரசிகர்களின் மனதிலிருந்து அகலவில்லை. அப்படி ஒரு மதுரமான இசையில் உருவானது அப்படம்.
இந்த நிலையில் எம்.எஸ்.வியுடன் இணைகிறார் இசைஞானியின் இசை வாரிசான யுவன் ஷங்கர் ராஜா. இருவரும் இணையப் போகும் படம் தில்லுமுல்லு ரீமேக்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவாகி பட்டையைக் கிளப்பிய படம் தில்லுமுல்லு. இப்படம் இப்போது சிவா நடிக்க ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தில்தான் எம்.எஸ்.வியுடன் இணைந்து இசையமைக்கவுள்ளார் யுவன்.
எம்.எஸ்.வியுடன் இணைந்து இசையமைக்கவுள்ளது குறித்து யுவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தில்லுமுல்லு ரீமேக்கில் சிவா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஈஷா தல்வார் நடிக்கவுள்ளார். இவர்கள் தவிர பிரகாஷ் ராஜ், சத்யன், மனோபாலா ஆகியோரும் நடிக்கவுள்ளார். தேங்காய் சீனிவாசன் காமெடியில் கலக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பார் என்று தெரிகிறது.
கமல்ஹாசன் நடித்த கடைசி சீன் காமெடிக் காட்சியில் அவரது வேடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.
பாக்சர் மேரி கோம் வாழ்க்கையை படமாக்கும் சஞ்சய் லீலா பன்சாலி
மும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மேரி கோமின் வாழ்க்கையை படமாக்கவிருக்கிறார். இதற்கான திரைக்கதையை ஆர்ட் டைரக்டர் ஓமங் குமார் தயாரித்து வருகிறார். மேரி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முன்பே அவரது வாழ்க்கையை படமாக்குவது குறித்த முயற்சிகளை துவங்கியதாக பன்சாலி தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண்டுக்கு முன்பே ஓமங் மேரியை சந்தித்து அவரது வாழ்க்கையை படமாக்க அனுமதி கோரியுள்ளார். மேரியும் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
இந்த படம் குறித்து பன்சாலி கூறுகையில்,
மேரி கோம் இரண்டு குழந்தைகளின் தாய். அவர் பல போராட்டங்களைத் தாண்டி சாதித்துள்ளார். அவர் தற்போதைய உலக சாம்பியன். இந்தியாவில் குத்துச்சண்டை வீராங்கனைகள் அரிது. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மேரி கோம் பற்றிய படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
மீண்டும் நகை திருட்டு சர்ச்சையில் சிக்கினார் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் விலை உயர்ந்த நகைகள் திருடு போனது தொடர்பாக நகை திருட்டு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஹாலிவுட் நடிகை லிண்ட்சேயிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை வாங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்பான வழக்கில் லிண்ட்சேவுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இப்பொழுது மீண்டும் நகை காணாமல் போன சம்பவத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார்.
ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டி முடிந்த பிறகு லிண்ட்சேயும் மற்றவர்களும் இரவு அங்கேயே தங்கியிருக்கின்றனர். ஆனால் காலையில் ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியின் உரிமையாளர் போலீசில் அலறியடித்துக் கொண்டு புகார் செய்தார். தமது விடுதியில் இருந்த விலை உயர்ந்த நகைகளைக் காணவில்லை என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் நகை திருட்டு பற்றி அனைவரிடமும் விசாரித்தனர். நகை திருடி ஜெயிலுக்குப் போன லிண்ட்சேயிடமும் :"தீவிர" விசாரணை நடத்திவிட்டுப் போயிருக்கின்றனர்.
அம்மணி இம்முறையும் ஆட்டையை போட்டிருப்பாரோ? என்றுதான் அமெரிக்க போலீஸ் சந்தேகிக்கிறதோ?
சூரியவணக்கமாய் மாறிய வணக்கம் தமிழகம்!
சன் தொலைக்காட்சியில் காலை நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த வணக்கம் தமிழகம் நிகழ்ச்சி புத்தம் புது பொலிவாய் சூரிய வணக்கமாய் மாறியிருக்கிறது. நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் புதிதாய் உற்சாகமாய் இருப்பது நிகழ்ச்சியின் மெருகினை கூட்டியிருக்கிறது.
அரங்கில் அமர்ந்து பேசிய சாலமன் பாப்பையா, அழகாய் அவுட்டோரில் அமர்ந்து செய்தி சொல்கிறார். ராஜாவும், பாரதி பாஸ்கரும் அற்புதமான தகவல்களை எளிமையாய் பரிமாறிக்கொள்கின்றனர். யோகா நிகழ்ச்சி கூட புதிய பொலிவாய் அனைவரும் பின்பற்றும் வகையில் அமைந்திருக்கிறது.
சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் ரம்ஜான் தினத்தன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி.ராஜேந்தர் தன்னுடைய கருத்துக்களை, இசை மீதான காதலை பகிர்ந்து கொண்டார். இசைப்பது இறைவன், வாயசைப்பது நான் என்று டி. ராஜேந்தர் தன்னடக்கத்தோடு தெரிவித்தார். இசை வந்து எங்கும் எப்படியும் நிறைந்திருக்கும். இசை என்பது அனைவருக்கும் அப்பாற்பட்டது என்று கூறிய ராஜேந்தர் கரும்பு தின்ன கூலியா என்பதைப் போல இசையைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு தன்னுடைய வாயினால் ஒரு இசை ராஜாங்கமே நடத்திவிட்டார் டி.ராஜேந்தர்.
சரத் பொன்சேகா- இந்திய தூதுவர் இரகசிய சந்திப்பு
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இலங்கையிலுள்ள இந்திய உயர் தூதுரகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குமிடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.இந்தச் சந்திப்பு கடந்த 17 ம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்திலேயே இடம்பெற்றுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படுவது அதற்குத் தேவையான நிதி உதவிகளை வழ்குதல் தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, இந்தச் சந்திப்பின் பின்னர் தென்பகுதியிலுள்ள தனது பிறப்பிடமான அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய சரத் பொன்சேகா, வலுவான எதிர்க்கட்சி ஒன்றினை உருவாக்கி அதன் ஊடாக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து மஹிந்த அரசினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
இப்போதைய பொம்மை வீர்ர்களிடமிருந்து இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, இதற்காகச் சிறை செல்லவும் தயார் எனவும் சூளுரைத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்: இ.ஜ.க. கோரிக்கை
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கடந்த 18–ந் தேதி வேதாரண்யத்தில் இருந்து கடலில் 5 பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 18 தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், அதற்கு இந்திய அரசு சம்பிராயமாக கண்டனம் தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்தும் வகையில் பிரதமர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய எல்லைப் பகுதிக்குள் பாதுகாப்பாக மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவிக்கு மெழுகுச் சிலை வைக்கும் மேடம் டுசாட்ஸ்?
மும்பை: மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகுச் சிலை வைக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது.
உலகப் புகழ் பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன், நடிகைகள் கரீனா கபூர், மாதுரி தீக்ஷித், ஐஸ்வர்யா ராய் ஆகியோருககு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டுகளை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை ஸ்ரீதேவிக்கு மேடம் டுசாட்சில் மெழுகுச் சிலை வைக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது.
ஸ்ரீதேவிக்கு மெழுகுச் சிலை வைப்பது குறித்த விஷயங்கள் ரகசியமாக நடக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஒரு பிரபலம் தனது பிளாக்கில் எழுதியுள்ளார். பல வருடங்கள் கழித்து ஸ்ரீதேவி நடித்துள்ள இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் ரிலீஸாகும் அன்று தேதி மெழுகுச் சிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அவர் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவிக்கு மெழுகுச் சிலை வைக்கப் போவது குறித்து போனி கபூர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
“நாமே மாற்று நாம் தமிழரே மாற்று” என்று முழக்கத்தோடு சீமான் உரை! (காணொளி இணைப்பு)
இப்படிக்கு தோழர் செங்கொடி அற்புதமான படைப்பு: சத்யராஜ்
மரண தண்டனைக்கு எதிரான 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் 19.08.2012 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆவணப்படத்தைப் பற்றி பேசுகையில், இயக்குநர். ம.செந்தமிழன், “ நான் இயக்கிய ‘பாலை’ திரைப்படம் குறுந்தகடு (டிவிடி) விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தைப் பற்றி பேசும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற பேராவலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இப்படத்தை பற்றி ஐந்து நிமிடங்கள் பேசுகிறார். அதனால் நாம் தமிழர் கூட்டங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ‘பாலை’ டிவிடிக்கள் விற்கப்பட்டுள்ளன. இப்போதும் விற்பனை ஆகி வருகின்றன.
அன்று தமிழீழ விடுதலைப் பாடல் பாடிய உன்னி கிருஸ்ணன் இன்று டக்ளஸிடம் நினைவுப் பரிசு
யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.
நிகழ்வினை ஈபிடிபியின் நிர்வாகத்திலுள்ள யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரை நிகழ்த்தும் போது,
தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலப் பகுதி இருண்ட காலமாக விளங்கியதாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் உரை நிகழ்த்தினார்.
அதன் பின்னர் பாடகர் உன்னி கிருஸ்ணனுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இதேபோன்று இந்தியத் துணைத் தூதரகம், யாழ்.மாநகர சபை ஏற்பாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கொள்வார் என்று நிகழ்வு ஒன்றிற்கான அறிவிப்பினை யாழ்.மாநகர சபை அறிவித்திருந்தது.
இருந்த போதிலும் தமிழக மக்களின் உணர்வினையும் ஈழத்தமிழ் மக்களின் உணர்வினையும் மதித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தார்.
நல்லூர் ஆலய நிகழ்வினைக் காரணம் காட்டி இந்தியத் துணைத் தூதரகமும் ஈபிடிபியும் இணைந்து பாடகர் உண்ணிகிருஸ்ணனை யாழ்ப்பாணம் அழைத்து அவருக்கு அமைச்சர் டக்ளஸ் மூலம் நினைவுப்பரிசில் வழங்கியமை யாழ்.மக்கள் மத்தியில் கவலையையும் ஆத்தரத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.
தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பலவற்றிற்கு பின்னணிக்குரல் வழங்கிய உன்னி கிருஸ்ணன் திட்டமிட்டே ஈபிடிபி நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருப்பதாக யாழ்.மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
எதியோப்பிய நாட்டு பிரதமர் திடீர் மரணம்
அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை காலை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த இரு மாதங்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாதிருந்தார் மெலேஸ் ஷெனவி. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும் நேற்று மீண்டும் திடீரென நோய்த்தொற்று ஒன்றுக்கு உள்ளாகி அவர் மரணமடைந்துள்ளார்.
அவரது வெற்றிடத்துக்கு தற்காலிக பிரதமராக துணை பிரதமர் ஹைல்மரியம் தெசலெகன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கிளர்ச்சிக்குழு போராளியான மெலேஸ் ஷெனவி 1991ம் ஆண்டு எதியோப்பியாவின் சர்வாதிகாரி ஹெயில் மரியமிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார்.
கடந்த வருடம் எதியோப்பிய படைகள் அமெரிக்க பின்புலத்தின் கீழ் இரண்டாவது முறையாக சோமாலியா மீது படையெடுத்தன. அல் கைதாவின் துணை அமைப்புக்களில் ஒன்றான ஷெஹாப் கிளர்ச்சிக்குழுவினருக்கு எதிராக எதியோப்பிய இராணுவத்தினர் போராடுவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் பின்புலத்தில் இருந்துவந்தன.
பூந்தமல்லி அகதிகள் முகாம் முற்றுகைப் போராட்டம்! - வைகோ கைது! தொண்டர் தீக்குளிக்க முயற்சி
இதைக் கண்டித்து மதிமுக தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள செந்தூரன் என்பவர் கடந்த 6ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி உள்பட அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரி அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரது உயிரை காப்பாற்றக் கோரியும், முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் மதிமுக சார்பில் இன்று காலை முற்றுகை போராட்டம் நடந்தது.
அப்போது பேசிய வைகோ, பூந்தமல்லி அகதி முகாமில் செந்தூரன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். அவரை கடந்த வருடம் ஜுன் மாதம் 18ம் தேதி உரிய ஆவணம் இல்லாமல் வந்ததாக செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு 2 மாதம் சிறையில் இருந்தார். அவர் மீது அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றதாக அங்கு வழக்கு போடப்பட்டது. ஆனால் அங்குள்ள நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
ஆனால் தமிழக பொலிஸார் செந்தூரனை கேரள பொலிஸார் உதவியுடன் கைது செய்து செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். அங்கு அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி சாகும் வரைஉண்ணாவிரதம் தொடங்கினார்.
அதிகாரிகளும், கியூ பிரிவு பொலிஸாரும் உத்தரவாதம் அளித்ததால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். ஆனால் சொன்னபடி அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை.
இதற்கிடையே செந்தூரன் உள்பட 5 பேரை பூந்தமல்லி முகாமுக்கு மாற்றி விட்டனர். இங்கு அவர் 6ம் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும், அகதி முகாம்களை மூட வேண்டும். இதற்காகவே இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார் வைகோ.
பின்னர் முற்றுகை போராட்டம் நடத்த பூந்தமல்லி முகாம் நோக்கி வைகோ தனது தொண்டர்களுடன் ஊர்வலமாகச் செல்ல முயன்றார்.
ஆனால், அவர் மேடையில் இருந்து இறங்கியதும் வைகோவை கைது செய்த பொலிஸார் உடனடியாக வானில் ஏற்றிச் சென்றனர்.
வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து தொண்டர்கள் பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருபுறமும் ஏராளமான வாகனங்கள் கிலோமீட்டர் கணக்கில் நின்றன. பொலிஸார் அவற்றை வேறு பாதையில் திருப்பி விட்டனர்.
அப்போது பூந்தமல்லி புதுச்சத்திரத்தைச் சேர்ந்த மதிமுக கிளைச் செயலாளர் செல்லக்கனி உடலில் பெற்றோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை பொலிஸார் உடனடியாகத் தடுத்து கைது செய்தனர்.
நாடாளுமன்றத்தில் அமளிதுமளி இரு அவைகளும் முடங்கின
முன்னதாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே, எதிர்கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று கூச்சலிட்டனர். நிலக்கரி சுரங்க கணக்கு வழக்குகளில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுவிட்டது என்கிற மத்திய அரசின் தணிக்கைக் குழு அறிக்கை நகலை கையில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகள், பிரதமரை பதவி விலகவேண்டும் என்று கூச்சலிட்டதால், நாடாளுமன்றத்தை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார் மக்களவை தலைவர் மீரா குமார்.
நண்பகல் 12 மணிக்குப் பின்னர் நாடாளுமன்றம் தொடங்கியபோதும், அதே போல பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று கூச்சலிட்டதால், இன்று நாள்முழுவதும் நாடளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டது. இதே போன்று மாநிலங்களைவையிலும் பிரதமர் பதவி விலகிகக்கோரி எதிர்கட்சிகள் கூச்சலிட்டு அவையில் அமளி நீடித்ததால், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப் பட்டது.
நிலக்கரி சுரங்க ஏலம் விடப்பட்டபோது, நிலக்கரி சுரங்க பொறுப்பு பிரதமர் தலைமையில் இருந்ததால், இந்த வருவாய் இழப்புக்கு பிரதமர் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கோரிக்கை என்பது குறிப்பிடத் தக்கது.
இராசயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்த கூடாது : ஒபாமா கடுமையான எச்சரிக்கை
சிரிய அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை ஊக்குவித்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுலைமான் அல் ஹலாபி மாவட்டத்தின் அலிப்போ எனும் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும், சிரிய இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அகப்பட்டுக்கொண்ட ஜப்பானிய நிருபர் கொல்லப்பட்டார். அவருடன் சென்றிருந்த மூன்று நிருபர்கள் காணாமல் போனார்கள்.
கொல்லப்பட்டவர் 45 வயதான மிகா யமமொடோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய படுகொலையை அடுத்து சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு வன்முறை தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை அலிப்பா தாக்குதல் பகுதியில் புனித ரமலான் தினத்தன்று நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை டமஸ்கஸில் நடந்த ஜெட் தாக்குதல்களில் பெண்கள் சிறுவர்கள் அடங்களாக 9 பேர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிரியாவில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சிரிய அரசு இராசயன ஆயுதங்களை பயன்படுத்த முனைப்பாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அது அமெரிக்காவின் சிவப்பு சமிக்ஞையை மீறும் செயலாக கருதப்பட்டு பாரிய பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டு துருப்புக்கள் உள்நாட்டிற்குள் நுழைந்தால் தாம் இராசயன ஆயுதங்களை பயன்படுத்த அஞ்சப்போவதில்லை என சிரிய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இராசயன ஆயுதங்கள், தவறான கரங்களில் இருப்பது மிக மிக ஆபத்தானது என இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
தேசிய கொடியை அவமதித்ததாக ஷாருக்கான் மீது வழக்கு
மும்பை: தேசியக் கொடியை அவமதித்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பிறகு நடந்த கொண்டாடட்டத்தின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தேசிய கொடியை அவமதித்ததாக சமூக சேவகர் ரவிந்திர பிரம்மே (40) என்பவர் சாட்டுஷ்ரிங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக தேசியக்கொடியை பிகினி போன்று அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த மாடல் கெஹ்னா வசிஷ்ட்டுக்கு எதிராக ரவிந்திரா டெக்கன் ஜிம்கானா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கெஹ்னாவை கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்தனர்.
இந்நிலையில் ரவிந்திரா கூறுகையில்,
தேசிய கொடியை அவமதிப்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது புகார் கொடுக்க ஒரு இயக்கத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். அண்மையில் நான் பிரவுஸ் செய்தபோது 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பிறகு நடந்த கொண்டாடட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்தேன். அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நம் தேசிய கொடியை அசைப்பது போன்ற படத்தை பார்த்தேன். அவர் தேசிய கொடியை தலைகீழாகப் பிடித்து அதை அவமதித்துவிட்டார்.
ஷாருக்கான் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல். அப்படிபட்டவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவர் தேசியக் கொடியை அவமதித்தது குறித்து நான் சாட்டுஷ்ரிங் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். எனது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வழக்கை ஷாருக்கான் வசிக்கும் மும்பை பந்த்ரா பகுதி காவல் நிலையத்திற்கு மாற்றினர் என்றார்.
ஒரே குண்டும் குழியுமா இருக்கு... அலுத்துக் கொள்ளும் நயனதாரா
à®à¯à®©à¯à®©à¯ நà®à®°à®®à¯ நனà¯à®±à®¾à® à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯, பரபரபà¯à®ªà®¾à® à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®©à®¾à®²à¯ à®°à¯à®à¯à®¤à®¾à®©à¯ à®à®°à®¿à®¯à®¿à®²à¯à®²à¯ à®à®©à¯à®±à¯ ஠லà¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯à®³à¯à®³à®¾à®°à¯ நயனதாரா.
à®à®à®¨à¯à®¤ à®à®´à¯ வரà¯à®à®®à®¾à® à®à¯à®©à¯à®©à¯à®¯à®¿à®²à¯ தà®à¯à®à®¿ வாழà¯à®¨à¯à®¤à¯ வரà¯à®®à¯ நயனதாரா, à®à®à¯à®¯à®¿à®²à¯ 2 à®à®¾à®¤à®²à¯à®à®³à®¿à®²à¯à®®à¯ à®à®¿à®à¯à®à®¿ à®®à¯à®£à¯à®à¯ விà®à¯à®à®¾à®°à¯. à®à®¤à¯à®¤à®©à¯ வரà¯à®à®à¯à®à®³à®¾à® à®à¯à®©à¯à®©à¯à®¯à®¿à®²à¯à®¯à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯à®®à¯ à®à¯à®¨à¯à®¤à®®à®¾à® வà¯à®à¯ வாà®à¯à®à®¿à®à¯ à®à¯à®³à¯à®³à®µà®¿à®²à¯à®²à¯ நயனதாரா. மாறாà®, நà¯à®à¯à®à®®à¯à®ªà®¾à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®³à¯à®³ நà®à¯à®à®¤à¯à®¤à®¿à®° ஹà¯à®à¯à®à®²à®¿à®²à¯à®¤à®¾à®©à¯ நிரநà¯à®¤à®°à®®à®¾à® தà®à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. ஹà¯à®à¯à®à®²à®¿à®²à¯ நலà¯à®² வà®à®¤à®¿ à®à®©à¯à®ªà®¤à®¾à®²à¯ à® à®à¯à®à¯à®¯à¯ à®à®¾à®à¯à®¯à¯ வà¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯.
஠தà¯à®à®®à®¯à®®à¯, ஹà¯à®¤à®°à®¾à®ªà®¾à®¤à¯, à®à¯à®°à®³à®¾, à®®à¯à®®à¯à®ªà¯ à®à®© à®à®à¯à®¯à®¿à®²à¯ பà®à®ªà¯à®ªà®¿à®à®¿à®ªà¯à®ªà¯à®à®³à¯à®à¯à®à®¾à® பà¯à®¯à¯à®ªà¯ பà¯à®¯à¯ வநà¯à®¤à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. à®à®¨à¯à®¤ நிலà¯à®¯à®¿à®²à¯ à®à®¤à¯à®¤à®©à¯ à®à®¾à®²à®®à¯ தனà®à¯à®à¯ à®à¯à®±à¯ பà¯à®à¯à®, à®à®°à®£à¯à®à¯ à®à®¾à®¤à®²à¯à®à®³à¯à®à¯à®à¯ à® à®à®¿à®à¯à®à®²à¯ நாà®à¯à®à®¿à®¯ à®à¯à®©à¯à®©à¯ நà®à®°à®®à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®®à¯à®¤à®²à¯ à®®à¯à®±à¯à®¯à®¾à® மனம௠திறநà¯à®¤à¯à®³à¯à®³à®¾à®°à¯ நயனதாரா.
஠வர௠à®à¯à®±à¯à®à¯à®¯à®¿à®²à¯, à®à¯à®©à¯à®©à¯à®¯à®¿à®²à¯ நான௠நிறà¯à®¯ நà¯à®°à®®à¯ à®à¯à®²à®µà®¿à®à¯à®à¯ à®à®³à¯à®³à¯à®©à¯. à®à®à¯à®à¯à®³à¯à®³ பரபரபà¯à®ªà¯ à®à®©à®à¯à®à¯ à®°à¯à®®à¯à®ª பிà®à®¿à®à¯à®à¯à®®à¯. à®à®©à®¾à®²à¯à®®à¯ à®à®¿à®² à®à¯à®±à¯à®à®³à¯à®®à¯ à®à®³à¯à®³à®©. à®à¯à®©à¯à®©à¯à®¯à®¿à®²à¯ à®à®³à¯à®³ à®à®¾à®²à¯à®à®³à¯ à®à®°à®¿à®¯à®¾à® à® à®®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à®µà®¿à®²à¯à®²à¯. பà¯à®¤à¯à®®à®à¯à®à®³à¯ நà®à®¨à¯à®¤à¯ à®à¯à®²à¯à®²à®µà¯à®®à¯, வணà¯à®à®¿à®à®³à¯ à®"à®à¯à®à®¿à®à¯ à®à¯à®²à¯à®²à®µà¯à®®à¯ à®à®·à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®©à®°à¯. à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¾à® மழà¯à®à¯à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ à®°à¯à®à¯à®à®³à¯ à®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à¯à®´à®¿à®¯à¯à®®à®¾à®à®¿ à®®à¯à®à®®à®¾à®à®¿ விà®à¯à®à®¿à®±à®¤à¯.
à®°à¯à®à¯à®à®³à¯ à®à¯à®°à®®à¯à®¤à¯à®¤à¯, à®à®¾à®à¯à®à®à¯ à®à®¾à®²à¯à®µà®¾à®¯à¯ à® à®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®à®°à®¿ à®à¯à®¯à¯à®¤à®¾à®²à¯ à®°à¯à®à¯à®à®³à®¿à®²à¯ தணà¯à®£à¯à®°à¯ நிறà¯à®à®¾à®¤à¯. à®à®¨à¯à®¤ à®à¯à®±à¯à®à®³à¯ தவிர à®à¯à®©à¯à®©à¯à®¯à¯ விரà¯à®®à¯à®ªà¯à®µà®¤à®±à¯à®à¯ நிறà¯à®¯ விஷயà®à¯à®à®³à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. வரà¯à®®à¯ à®à®£à¯à®à¯à®à®³à®¿à®²à¯ à®à¯à®©à¯à®©à¯à®¯à¯ à®à¯à®¤à¯à®¤à®®à®¾à®©, பà®à¯à®®à¯à®¯à®¾à®© நà®à®°à®®à®¾à® பாரà¯à®à¯à® நான௠à®à®à¯à®ªà¯à®ªà®à¯à®à®¿à®±à¯à®©à¯ à®à®©à¯à®±à¯ à®à¯à®±à®¿à®¯à¯à®³à¯à®³à®¾à®°à¯ நயனதாரா.
à®à®©à®µà¯ à®à¯à®©à¯à®©à¯ மாநà®à®°à®¾à®à¯à®à®¿ à®à®µà¯à®©à¯à®à®¿à®²à®°à¯à®à®³à¯, à®®à¯à®©à¯à®ªà¯ வி஠à®à®à¯à®®à¯à®¯à®¾à® à®à®´à¯à®¤à¯à®¤à¯ நயனதாராவà¯à®à¯à®à¯à®±à¯à®±à®¾à®°à¯ பà¯à®² à®à¯à®©à¯à®©à¯ மாநà®à®° à®à®¾à®²à¯à®à®³à¯ மாறà¯à®±à®¿à®¯à®®à¯à®à¯à® நà®à®µà®à®¿à®à¯à®à¯ à®à®à¯à®à¯à®à¯à®®à¯à®ªà®à®¿ தாழà¯à®®à¯à®¯à¯à®à®©à¯ à®à¯à®à¯à®à¯à®à¯ à®à¯à®³à¯à®à®¿à®±à¯à®®à¯...
600 வது எபிசோடில் நாதஸ்வரம்: ரவிராகுல் மாறியது ஏன்?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடர் 600 வது எபிசோடினை எட்டியுள்ளது. அண்ணன், தம்பி குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் கதைதான் என்றாலும் களம் புதிது. முகங்கள் புதிது அதனால் சுவாரஸ்யம் குறையாமல் செல்லும் நாதஸ்வரம் 600 வது எபிசோடை தொட்டுள்ளது.
அண்ணன் சொக்கலிங்கத்திற்கு துரோகம் செய்த தம்பி மயில் தற்போது திருந்தியுள்ளார். அவர் மீண்டும் வந்து அண்ணன் குடும்பத்துடன் இணைவாரா?. மதுரைக்கு தம்பியை தேடிச் செல்லும் சொக்கலிங்கம் அண்ணன் கைகளில் தட்டுப்படுவாரா? ராகினிக்கு பார்த்துள்ள மாப்பிள்ளையின் சுயரூபத்தை அறிந்து கொள்வார்களா?. மலரின் அப்பா வீட்டில் சொத்து விசயம் என்ன ஆகும். மகா மீது வன்மம் வைத்துள்ள மரக்கடைக்காரார் என்ன ஆவார்? மகாவிற்கு ஏதாவது ஆபத்து நேருமா?
இப்படி 'இயக்குநருக்கேத் தெரியாத' பல சஸ்பென்ஸ்களுடன் போய்க் கொண்டிருக்கும் நாதஸ்வரம் இந்த வாரம் 600 வது எபிசோடினை எட்டியுள்ளது.
இதுநாள் வரை மாப்பிள்ளை செல்வரங்கமாக 595 எபிசோட் வரை நடித்த நடிகர் ரவிராகுல் இப்போது ஆளைக் காணோம். வழக்கம் போல இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டுவிட்டார்கள். ஏற்கனவே நாதஸ்வரம் நாடகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் மாறிவிட்டார்கள். இப்போது செல்வரங்கமும் மாறிவிட்டார். அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் வேறு ஆளைப் போட்டுவிட்டதாக நாதஸ்வரம் டீமில் கிசுகிசுத்தார்கள். எது உண்மையோ தெரியவில்லை.
நல்லவேளை, இந்த சீரியலுக்குப் பதில் இந்த சீரியல் என்று ரெட் கார்டு போடாத அளவுக்கு நாதஸ்வரம் பட்டையைக் கிளப்புதே அது போதுமே...!
கண்கொள்ளாக் காட்சி... அநியாயத்துக்கு நிறைய உடை நீந்திய மடோனா!
பாரீஸ்: மடோனா என்றாலே வித்தியாசம்தான் போல. 50 வயதிலும் அரைகுறை ஆடை, அவ்வப்போது 'மார்பு பிளாஷ்' என கலக்கி வரும் மடோனா, அவருக்கே ஆச்சரியம் தரும் வகையில், முழு நீள உடையுடன் காட்சி தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார்.
மடோனா என்றால் அவரது டிரஸ்ஸிங் கலக்கல்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். 50 வயதிலும் கட்டழகோடு கலக்கல் டிரஸ்ஸோடு காட்சி தரும் மடோனா, சமீப காலமாக தனது பாடல் நிகழ்ச்சிகளின்போது மார்பகங்களை வெளிக்காட்டி பிரமிக்கவும் வைத்து வருகிறார்.
இந்த வயதிலும் காதலர்களை அவ்வப்போது மாற்றி கலங்கடித்தும் வருகிறார். லேட்டஸ்டாக அவரது காதலராக இருப்பவர் சின்னப் பையன் என்று செல்லமாக அழைக்கப்படும் பிராஹிம் ஜைபாத்.
இந்த நிலையில் தனது மகள் லூர்தஸ், காதலர் பிராஹிம் உள்ளிட்டோருடன் தெற்கு பிரான்ஸில் உள்ள கடற்கரைக்கு வந்த மடோனா, அங்கு அவர்களுடன் ஜாலியாக பொழுதைப் போக்கினார். மகள் லூர்தஸ் நீச்சல் உடையில் காட்சி தர, பாய்பிரண்ட் பிராஹிம் டிரவுசருடன் கலக்க, மடோனோ மட்டும் கழுத்து முதல் கால் வரை மூடிய வெள்ளை நிற உடையுடன் வித்தியாசமாக காட்சியளித்தார். இந்த உடையில் அவர் நீச்சலடித்தும் அசத்தினார்.
அவர் போட்டிருந்த உடைகளைப் பார்க்கும்போது, வருடம் பூராவும் போடும் உடைகளை விட அதிகம் போட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்து விரைவில் ஒரு இசை நிழ்ச்சியை அவர் பிரான்ஸில் நடத்தப் போகிறார். அந்த நிகழ்ச்சியின்போது வழக்கம் போல அவர் என்னத்தை செய்து பயமுறுத்தப் போகிறாரோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கேரளாவில் ஐஸ்வர்யாராயை காண ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை திறப்புவிழாவில் பங்கேற்க வந்திருந்த ஐஸ்வர்யா ராயை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
கொச்சி எம்.ஜி. சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் வெள்ளையும், சந்தனமும் கலந்த உடையில் ஐஸ்வர்யாராய் பங்கேற்று புதிய நகைக்கடை ஷோரூமை திறந்து வைத்தார். இதன் மற்றொரு விளம்பர தூதரும் மலையாள நடிகருமான திலீப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநில அமைச்சர்கள், மேயர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஐஸ்வர்யாராயை காண அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோஷாப் முறையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளவை என்று பரபரப்பு கிளம்பியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நேரிலேயே வந்து நகைக்கடை திறப்புவிழாவில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்: மமதி
எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் சிலர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்க்க அதிக ஆவலாய் இருக்கும். சிலரது குரலின் வசீகரம் அப்படி.
சன் தொலைக்காட்சியில் புதிய ரியாலிட்டி ஷோவான சூப்பர் குடும்பம் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ள மமதியின் குரலும் அப்படிப்பட்டதுதான். ஏற்கனவே விஜய் டிவியில் ஹலோ தமிழா, சன் டிவியில் ‘ராணி மகாராணி' நிகழ்ச்சிகளின் மூலம் நேயர்களை கவர்ந்த அவர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். சூட்டிங் பிஸியில் இருந்த அவரை செல்போனில் பிடித்தோம். தன்னுடைய சின்னத்திரை பயணம் குறித்த அனுபவங்களை அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
சின்னத்திரையில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் இருந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டு இருக்கிறேன். பிக் எஃப்.எம் வானொலியில் "பிக் வணக்கம்' என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கியிருக்கிறேன். இதை தவிர விஜய் டிவியில் "சில்லுன்னு ஒரு சேலஞ்ச்' என்ற நிகழ்ச்சியும், ஹலோ தமிழா நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கியுள்ளேன். சன் டிவியில் ராணி மகாராணி நிகழ்ச்சிக்கு நிறைய வரவேற்பு கிடைத்தது.
என் தமிழ் உச்சரிப்பைக் கேட்க பிடித்திருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். நிகழ்ச்சி ரொம்ப இயல்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். அதுதான் வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன். தமிழ் சின்னத்திரையைப் பொருத்தவரை என்னையும் என் தமிழையும் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது எனக்கு கடவுள் கொடுத்த வரம். பின்னணி குரலுக்கான வாய்ப்புகளும் நிறைய வருகின்றன. ஆனால் குரலால் நடிக்க எனக்கு விருப்பமில்லை.
சின்னத்திரையைத் தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டு இருக்கிறேன். அதற்கு முழு நேரமும் செலவிட வேண்டியிருப்பதால் அதிகப்படியான நிகழ்ச்சிகள் வழங்க நேரம் கிடைப்பது இல்லை. இப்பொழுது சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியை வழங்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சின்னத்திரை நட்சத்திரங்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சி. இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது. முதல்வாரத்திலேயே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
எனக்கு சினிமாவில் எனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை. நிகழ்ச்சி தொகுப்பாளராகவோ, அல்லது பங்கேற்பாளராகவோ இருக்கத்தான் விருப்பம். அதனால்தான் நடிப்பதற்கு வருகிற வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரோட படத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சின்னவயதில் இருந்தே அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சினிமாத்துறை மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி என்று எடுத்து கொண்டாலே அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி பேராடினால்தான் வெற்றி கிடைக்கும். அதே சமயத்தில் தன்னுடைய எல்லையைத் தாண்டாமல் உழைக்கும் வரை பிரச்னைகள் எது வந்தாலும் எதிர்கொள்ளலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் திறமையிருந்தால் வெற்றி பெறுவதற்கு ஆண், பெண் வேறுபாடு எல்லாம் கிடையாது என்று கூறிவிட்டு மாறாத புன்னகையோடு விடைபெற்றார் மமதி.
பார்க்கில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட எக்சர்ஸைஸ் செய்த நடிகை!
பà¯à®¤à¯à®®à®à¯à®à®³à¯ à®à¯à®à¯à®®à¯ à®'ர௠பாரà¯à®à¯à®à¯à®à¯à®à¯ வநà¯à®¤ à®à®à¯à®à®¿à®²à®¾à®¨à¯à®¤à¯ நà®à®¿à®à¯ à®à¯à®¤à¯à®¤à®°à®¿à®©à¯ à®à¯à®²à¯à®à¯à®¸à¯à®²à®¿, à®à®µà®°à¯à®à¯à®à®¿ à®°à®à®®à¯ à®à¯à®à¯à®à®à¯ à®à¯à®à¯à® à®à®à®±à¯à®ªà®¯à®¿à®±à¯à®à®¿ à®à¯à®¯à¯à®¤à¯ ஠னà¯à®µà®°à¯à®¯à¯à®®à¯ à®à®¿à®³à¯à®à®¿à®³à¯à®à¯à® வà¯à®¤à¯à®¤à¯ விà®à¯à®à®¾à®°à¯.
à®à®à¯à®à®¿à®²à®¾à®¨à¯à®¤à¯à®à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤ நà®à®¿à®à¯, மாà®à®²à¯ à® à®´à®à®¿à®¤à®¾à®©à¯ à®à¯à®¤à¯à®¤à®°à®¿à®©à¯. à®à®¾à®°à®©à¯à®·à®©à¯ ஸà¯à®à®¿à®°à¯à®à¯ நாà®à®à®¤à¯à®¤à®¿à®²à¯ தறà¯à®ªà¯à®¤à¯ நà®à®¿à®¤à¯à®¤à¯ வரà¯à®®à¯ பிரபலமà¯. à®à®®à¯à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ லணà¯à®à®©à®¿à®²à¯ à®à®³à¯à®³ à®'ர௠பாரà¯à®à¯à®à¯à®à¯à®à¯ வநà¯à®¤à®¾à®°à¯ à®à¯à®¤à¯à®¤à®°à®¿à®©à¯. à®®à¯à®©à¯à®©à®´à®à¯ à®à®¿à®à¯à®à®¤à¯à®¤à®à¯à® வà¯à®³à®¿à®¯à¯ தà¯à®°à®¿à®¯à¯à®®à¯ ஠ளவà¯à®à¯à®à¯ à®'ர௠à®à®à¯. ஠வரà¯à®à¯à®à¯ à®à®±à¯à®à®©à®µà¯ பà¯à®°à®¿à®¯ மாரà¯à®ªà®à®®à¯ வà¯à®±à¯. ஠த௠மà¯à®²à¯à®®à¯ பà¯à®°à®¿à®¤à®¾à® வà¯à®³à®¿à®à¯à®à®¾à®à¯à®à®¿à®¯à®ªà®à®¿ வநà¯à®¤ à®à¯à®¤à¯à®¤à®°à®¿à®©à¯, தனத௠பயிறà¯à®à®¿à®¯à®¾à®³à®°à¯à®à®©à¯ à®à®£à¯à®¨à¯à®¤à¯ பலà¯à®µà¯à®±à¯ à®à®à®±à¯à®ªà®¯à®¿à®±à¯à®à®¿à®à®³à¯à®à¯ à®à¯à®¯à¯à®¤à®¾à®°à¯.
நà¯à®³à®®à¯ தாணà¯à®à¯à®¤à®²à¯, பà¯à®·à¯ ஠பà¯, ஸà¯à®à®¿à®°à®à¯à®à®¿à®à¯, à®à®¿à®à¯à®à®¿à®à¯, பனà¯à®à¯à®à®¿à®à¯ à®à®© பாரà¯à®à¯à®à®¿à®²à¯ à®à¯à®²à®µà®¿à®à¯à®à®¾à®°à¯ à®à¯à®¤à¯à®¤à®°à®¿à®©à¯. ஠நà¯à®¤ à®à®à®±à¯à®ªà®¯à®¿à®±à¯à®à®¿ à®®à¯à®´à¯à®µà®¤à¯à®®à¯ à®à®µà®°à¯à®à¯à®à®¿ மழà¯à®¤à®¾à®©à¯. à®à®¤à¯ பà¯à®à¯à®ªà¯à®ªà®à®®à¯ à®à®à¯à®à¯à®à®µà¯à®®à¯ ஠னà¯à®®à®¤à®¿à®¤à¯à®¤à®¾à®°à¯ à®à¯à®¤à¯à®¤à®°à®¿à®©à¯. à®à®µà®°à¯à®à¯à®à®¿à®à®°à®®à®¾à®© பà¯à®¸à¯ வà¯à®±à¯ à®à¯à®à¯à®¤à¯à®¤à®¾à®°à¯.
வà¯à®à®¿à®à¯à®à¯ பாரà¯à®¤à¯à®¤à®µà®°à¯à®à®³à¯, à®®à¯à®à¯à®à¯ பà¯à®°à®¿à®¤à®¾à® à®à®´à¯à®¤à¯à®¤à¯ விà®à¯à®à®µà®¾à®±à¯ à®à®¿à®³à®®à¯à®ªà®¿à®à¯ à®à¯à®©à¯à®±à®©à®°à¯... வà¯à®±à¯à®©à¯à®© à®à¯à®¯à¯à®¯ à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯...!
'டாப் கன்' இயக்குனர் டோனி ஸ்காட் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட். அவர் தனது சகோதரர் ரிட்லி ஸ்காட்டுடன் சேர்ந்து படங்களைத் தயாரித்தும் வந்தார். டாப் கன், தி டேக்கிங் ஆப் பெல்ஹம் 123 போன்ற பிரபல படங்களை இயக்கியவர். இந்நிலையில் அவர் கடந்த 19ம் தேதி மதியம் 12.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பெட்ரோ மாவட்டத்தில் உள்ள வின்சென்ட் தாமஸ் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பிற்பகல் 3 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டது. பாலத்தில் நின்றிருந்த அவரது காரில் தனது குடும்பத்தாருக்காக கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தோனி டேவிட் ஸ்காட் கடந்த 1944ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆப் ஆர்டில் படித்த அவர் தனது சகோதரர் ரிட்லி ஸ்காட்டுக்காக ஆயிரக்கணக்கான டிவி சீரீயல்களை இயக்கியுள்ளார். அவரது முதல் ஹாலிவுட் படமான 'தி ஹங்கர்' எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதையடுத்து 3 ஆண்டுகள் கழித்து அவர் எடுத்த 'டாப் கன்' படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அவர் கிரிம்சன் டைட், எனிமி ஆப் தி ஸ்டேட் மற்றும் மேன் ஆப் பையர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
அவர் டாப் கன் இரண்டாம் பாகத்தை இயக்கவிருந்தார். மேலும் நார்கோ சப் என்ற படத்தை 2013ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் தான் அவர் திடீர் என்று தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே 2 முறை விவாகரத்தான அவருக்கு டான்னா வில்சன் ஸ்காட் என்ற மனைவியும், பிரான்க், மேக்ஸ் ஆகிய இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர்.
''தமிழகத்தில் தியேட்டர் உரிமையாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது''
சென்னை: தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களின் நிலையெல்லாம் கவலைக்கிடமாக இருப்பதாக கவலையுடன் கூறியுள்ளார் திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்.
திருத்தணி என்று ஒரு படம். பரத்-சுனைனா நடிப்பில் ரொம்ப காலமாக தயாரிப்பில் உள்ள படம். பேரரசுதான் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா கமலா தியேட்டரில் நடந்தது. இயக்குநர் கே.பாக்யராஜ் ஆடியவை வெளியிட, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பேசுகையில்,
சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. இது பற்றி திரை உலகின் அனைத்து பிரிவினரும் ஒன்று கூடி விவாதித்து ஒரு நல்ல தீர்வு காணவேண்டும்.
2012-ம் வருடத்தில் 150 படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதில் மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 2 படங்கள் சுமாராக ஓடியது. மீதி அத்தனை படங்களும் தோல்வி அடைந்தன. தியேட்டர் அதிபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் மிக விரைவில் திரையுலகினர் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றார் பன்னீர்செல்வம்.
பின்னர் பேசிய எஸ்.ஏ.சி. கூறுகையில், இங்கே பன்னீர் செல்வம் பேசும்போது தியேட்டர் அதிபர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறினார். தியேட்டர் அதிபர்களுக்காவது தியேட்டர்கள் உள்ளன. ஆனால் தயாரிப்பாளர்களுக்கோ ஒரு வீடு கூட இல்லை.
தியேட்டர்களில் கூட்டம் குறைந்து கொண்டே வருவது உண்மைதான். இதற்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய அனைத்து பிரிவினரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்க கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
150 படங்கள் இந்த வருடம் திரைக்கு வந்துள்ளன. அதில் 120 படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தயாரானவை. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அவைகளை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும்.
இந்த படம் வெளி வருவதற்கு நடிகர் பரத் உதவி செய்திருப்பதாக கேள்வி பட்டேன். சில நடிகர்கள் தயாரிப்பாளர்கள் எப்படியோ போகட்டும், அவர்கள் செத்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் என்றார்.
விழாவில் திரையுலகினர் நிறையப் பேர் கலந்து கொண்டனர்.
சிகரெட்டையும், சிப்ஸையும் 'சாப்பிட்டு' உயிர் வாழும் அமெரிக்க நடிகை!
லண்டன்: அமெரிக்க நடிகை கிரிஸ்டன் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக எப்போது பார்த்தாலும் தம்மடித்தபடி இருக்கிறாராம். சிப்ஸ் மட்டுமே சாப்பிடுகிறாராம்.
சமீபத்தில்தான் கிறிஸ்டனின் காதலரான ராபர்ட் பேட்டின்சன் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் மனம் நொந்து போய் விட்ட கிறிஸ்டன், சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக சிப்ஸை மட்டுமே கொறித்துக் கொண்டிருக்கிறாராம். அதேபோல எப்போது பார்த்தாலும் சிகரெட் புகைத்தபடி விரக்தியாக இருக்கிறாராம்.
அமெரிக்க நடிகைகளிலேயே அழகானவர் என்ற பெயருடையவர் கிறிஸ்டன். அவர் இப்போது இப்படி சோகமான நிலையில் இருப்பது அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
கிறிஸ்டன் எப்போது பார்த்தாலும் புகைத்தபடி இருக்கிறார். அவ்வப்போது ரெட் புல் எனர்ஜி பானத்தை அருந்துகிறார். கூடவே உருளைக்கிழங்கு சிப்ஸை கொறிக்கிறார். அவ்வளவுதான் இதுதான்அவரது சாப்பாடு என்று பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சலெஸிஸ் உள்ள ஒரு தயாரிப்பாளரின் வீட்டில்தான் தற்போது தங்கியிருக்கிறாராம் கிறிஸ்டன். வெளியே அவ்வளவாகத் தலை காட்டுவதில்லை. முகமெல்லாம் வெளுத்துப் போய் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறாராம் கிறிஸ்டன்.
யாராவது அவரை வற்புறுத்தி எதையாவது சாப்பிடக் கூறினாலும் அவரால் சாப்பிட முடியவில்லையாம். ஒரு கப் சூப் கூட குடிக்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு சோகம் அவரைத் தாக்கியுள்ளதாம்.
கிறிஸ்டனின் இந்த நிலை எங்கு போய் முடியுமோ என்று அவரது ரசிகர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
5 நாட்களில் 'ரூ.100 கோடி' வசூல்: ஏக் தா டைகர் புதிய இந்திய சாதனை
டெல்லி: சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை.
இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று ரிலீஸாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. ஏக் தா டைகரின் மூலம் தொடர்ந்து 4வது முறையாக சல்மானின் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.
நேற்றுடன் ரூ.110 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் ஆமீர் கானின் 3 இடியட்ஸின் வசூல் சாதனையான ரூ.385 கோடியை மிஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை உள்நாட்டில் மட்டும் ரூ.92.5 கோடி வசூலானது. இன்னும் 2 வாரத்திற்குள் ரூ.200 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏக் தா டைகரில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday 20 August 2012
லெப்.கேணல் பாவா, லெப்.கேணல் யோகா ஆகியோரின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று
20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியூடாக உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை வெல்லாவெளி சந்தியில் வைத்து சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடாத்திய கிளைமோர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில்,
1. மட்டு - அம்பாறை அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர்
லெப்.கேணல் தயாசீலன் (பாவா) (செல்வராசா ஜெகதீஸ்வரன் - திருக்கோவில், அம்பாறை)
2. தொண்டு நிறுவனங்களிற்கான மட்டு - அம்பாறை மாவட்ட இணைப்பாளர்
லெப்.கேணல் யோகா (நாகலிங்கம் ஜீவராசா - வெல்லாவெளி, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இம்மாவீரர்களினதும் இதே நாள் முல்லை மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியில் நீரில் மூழ்கி சாவடைந்த
துணைப்படை வீரர்
லெப்டினன்ட் திரிஸ்ராசா (திலிப்பையா திரிஸ்ராசா - கள்ளப்பாடு, முல்லைத்தீவு) என்ற மாவீரரினதும் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
ஜெயசிக்குறு சமரில் காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
உலங்குவானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் 20.08.1997 அன்று புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர்.
இதன்போது சிறிலங்கா படையினரின் இரு முதன்மை போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டதுடன் மேலும் இரு டாங்கிகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன. 73 மி.மீட்டர் பீரங்கி பொருத்தப்பட்ட கவச ஊர்தி ஒன்று உட்பட பெருமளவான ஆயுதங்கள் மற்றும் படைய கருவிகள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.
சிறிலங்கா படையினரின் வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 52 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இம் மாவீரர்களினதும், இதே நாளில்
ஜெயசிக்குறு படையினருடன் மதியாமடுப் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிய,
கப்டன் சங்கரதாஸ் (தெய்வநாயகம் பிரபாகரன் - மட்டக்களப்பு)
ஜெசிக்குறு படையினரின் எறிகணைத் தாக்குதலில் மாங்குளத்தில் வீரச்சாவைத் தழுவிய,
2ம் லெப்டினன்ட் ராஜன் (சுப்பிரமணியம் சந்திரன் - கண்டி)
திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவைத் தழுவிய,
கப்டன் வசந்தன் (றம்போ) (நடராஜா மனோராஜன் - யாழ்ப்பாணம்) ஆகியோரினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
புளியங்குளச் சமரில் காவியமான மாவீரர்களின் விபரம் வருமாறு
1. மேஜர் காவிரிநாடன் (றொசான்) (இராஜகுலேந்திரன் வாசகன் - யாழ்ப்பாணம்)
2. மேஜர் சௌதினி (துரைராஜா றோகினி - யாழ்ப்பாணம்)
3. கப்டன் சந்திரமதி (ரட்ணசாமி ஜெயலட்சுமி - வவுனியா)
4. கப்டன் தயாவதி (கணேசமூர்த்தி லலிதாதேவி - யாழ்ப்பாணம்)
5. கப்டன் வைதேகி (பொன்னழகன் இராசலட்சுமி - கிளிநொச்சி)
6. கப்டன் வேந்தினி (பூபதிராஜா கஸ்தூரி - முல்லைத்தீவு)
7. கப்டன் செந்தணல் (விநாசித்தம்பி அன்பரசி - யாழ்ப்பாணம்)
8. கப்டன் கௌரவன் (இராயகோபால் இராஜசேகர் - வவுனியா)
9. கப்டன் சந்தியா (கனகரட்ணம் செல்வகுமாரி - வவுனியா)
10. கப்டன் பாமகள் (கிருஸ்ணா ஜெனார்த்தனி - கிளிநொச்சி)
11. லெப்டினன்ட் சுபாங்கனி (மகேந்திரராசா கிருபாலினி - முல்லைத்தீவு)
12. லெப்டினன்ட் தாரணி (சுஜித்தா) (கண்ணையா விஜயகுமாரி - அவிசாவளை)
13. லெப்டினன்ட் அமுதநிலா (அமவாசி வக்சலாதேவி - கண்டி)
14. லெப்டினன்ட் அருச்சுனன் (துரைசிங்கம் ஜசிந்தராஜ் - யாழ்ப்பாணம்)
15. லெப்டினன்ட் வண்ணமலர் (வேலாயுதம் டெய்சினி - வவுனியா)
16. லெப்டினன்ட் ஈழநாயகி (யேசுதாசன் சசிகலா - வவுனியா)
17. லெப்டினன்ட் இளந்திரையன் (கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணதாசன் - கிளிநொச்சி)
18. லெப்டினன்ட் சந்திரவதனா (வல்லிபுரம் சந்திரகலா - யாழ்ப்பாணம்)
19. 2ம் லெப்டினன்ட் வேட்பாளன் (கணேசன் நடேசன் - மட்டக்களப்பு)
20. 2ம் லெப்டினன்ட் சூரியலதா (செல்லத்துரை அருட்செல்வி - யாழ்ப்பாணம்)
21. 2ம் லெப்டினன்ட் முல்லை (பிரியா) (சுப்பிரமணியம் புவனேஸ்வரி - யாழ்ப்பாணம்)
22. 2ம் லெப்டினன்ட் மன்னவன் (கிருஸ்ணபிள்ளை சாமுவேல் - அம்பாறை)
23. 2ம் லெப்டினன்ட் பிருந்தா (வல்லிபுரம் சாரதா - யாழ்ப்பாணம்)
24. 2ம் லெப்டினன்ட் பாமினி (பாணுகா) (வேலுப்பிள்ளை கமலாதேவி - யாழ்ப்பாணம்)
25. 2ம் லெப்டினன்ட் வசந்தி (பஞ்சலிங்கம் குகந்தினி - யாழ்ப்பாணம்)
26. 2ம் லெப்டினன்ட் சின்னமணி (கந்தையா இராசலிங்கம் - வவுனியா)
27. 2ம் லெப்டினன்ட் எழிற்கொடி (சுப்பிரமணியம் அமிர்தரஞ்சினி - வவுனியா)
28. 2ம் லெப்டினன்ட் ஜோதி (அருமைத்துரை தர்மினி - யாழ்ப்பாணம்)
29. 2ம் லெப்டினன்ட் ஆடலரசன் (ஆறுமுகம் சுதர்சன் - யாழ்ப்பாணம்)
30. 2ம் லெப்டினன்ட் குலேந்திரன் (செல்வநாயகம் விஜயராசா - யாழ்ப்பாணம்)
31. 2ம் லெப்டினன்ட் கடலரசன் (கதிரவேலு சிவகுமார் - யாழ்ப்பாணம்)
32. 2ம் லெப்டினன்ட் அமுதவீரன் (மலர்விழியன்) (பத்மநாதன் சுயதீபன் - யாழ்ப்பாணம்)
33. வீரவேங்கை இராஜேஸ்வரன் (ராஜா ஜெயச்சந்திரன் - மட்டக்களப்பு)
34. வீரவேங்கை உமையாள் (குணமணி சுகந்தா - யாழ்ப்பாணம்)
35. வீரவேங்கை சிந்துஜா (கந்தசாமி ராஜி - யாழ்ப்பாணம்)
36. வீரவேங்கை நளினி (சரவணமுத்து செல்வமலர் - யாழ்ப்பாணம்)
37. வீரவேங்கை தமிழ்ச்செல்வி (அன்புமங்கை) (முனியாண்டி தமயந்தி - கண்டி)
38. வீரவேங்கை செந்தூரா (தங்கராசா சரஸ்வதி - திருகோணமலை)
39. வீரவேங்கை குறிஞ்சி (உலகநிலா) (வேலுப்பிள்ளை உமாரூபி - வவுனியா)
40. வீரவேங்கை அருணந்தி (கணேஸ் யோகமலர் - முல்லைத்தீவு)
41. வீரவேங்கை தமிழ்மொழி (தம்பிராசா சுபாஜினி - யாழ்ப்பாணம்)
42. வீரவேங்கை மாங்கனி (வெள்ளைச்சாமி மாரியம்மா - கொழும்பு)
43. வீரவேங்கை விடிவுமகள் (முருகுப்பிள்ளை பர்மிலா - யாழ்ப்பாணம்)
44. வீரவேங்கை அன்புவிழி (இராமச்சந்திரன் ஜெயதீஸ் - யாழ்ப்பாணம்)
45. வீரவேங்கை பாமதி (இராசலிங்கம நிர்மலாதேவி - மட்டக்களப்பு)
46. வீரவேங்கை சேந்தன் (வேந்தன்) (சந்திரசேகரம்பிள்ளை இராசேந்திரம் - யாழ்ப்பாணம்)
47. வீரவேங்கை ஈகைச்செலவன் (பரமசிவம் உதயசீலன் - கிளிநொச்சி)
48. வீரவேங்கை சிவப்பிரியா (சீவரட்ணம் ஜெயந்தி - யாழ்ப்பாணம்)
49. வீரவேங்கை சுடர்நிலா (தமிழினி) (சக்திவேல் சுவர்ணாதேவி - யாழ்ப்பாணம்)
50. வீரவேங்கை நல்லவள் (சின்னராசா சுகிர்தினி - முல்லைத்தீவு)
51. வீரவேங்கை அல்லி (கிருஸ்ணபிள்ளை சுமித்திரா - யாழ்ப்பாணம்)
52. வீரவேங்கை கயலழகி (உதயகுமாரி) (வடிவேல் தேவி - வவுனியா)
Labels
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா