Saturday 29 October 2011

மூவரின் தண்டனை தொடர்பில் கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும்!: வைகோ

மூவரின் தூக்குத் தண்டனை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போலவே, இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டார், என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்களே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூவர் தூக்கு தண்டனை ரத்து கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் ஆஜரான வைகோ, பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ள மனுவைத் தள்ளுபடி செய்யும்படி தமிழக அரசு கூறியுள்ளது; இதற்கு, மூவரையும் தூக்கில் போடுங்கள் என்பதுதானே பொருள்.

தூக்கு தண்டனையை எதிர்க்கும் பொதுமக்களின் கருத்து பற்றி எதுவும் சொல்வதற்கில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.

அப்படியானால் ஆகஸ்ட் 30-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசைக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத்தை ஏமாற்றத்தானே?

இந்தப் பிரச்னையில் தமிழக மக்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏமாற்றுவதைப் போலவே முதல்வர் ஜெயலலிதாவும் ஏமாற்றுகிறார்' என்றார் வைகோ.

மூவரின் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு

பேரறிவாளன் உள்பட மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் உள்பட மூவரால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரது கருணை மனுவை ஜனாதிபதி ஏற்கெனவே நிராகரித்து விட்டதால், இவர்களின் தூக்கு தண்டணையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தப் பின்பு அதில் தலையிடும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

மூவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த முறை வழக்கு விசாரணை அமைதியாக நடந்தது. ஆனால், நீதிமன்றத்தில் கொந்தளிப்பும், பதற்றமும் இருந்ததாக கூறி ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கக் கூடாது என நினைக்கும் மத்திய அரசு பின்னணியில், இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி, மூவரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். ஆனால், 2000-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி ஆட்சியில் இருந்த திமுக தான் நளினிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க கேட்டும், 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கோரியும் ஆளுனருக்கு பரிந்துரை செய்தது.

தமிழக அமைச்சரவை மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ஐ பயன்படுத்தி ஆளுனரின் பரிந்துரை செய்வதன் மூலம் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்.

மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை சட்டபூர்வமானது அல்ல. அதை மீறி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. இந்த மூவரின் கருணை மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்," என்றார் வைகோ.

Friday 28 October 2011

ரஜினியுடன் '6லிருந்து 60 வரை' படத்தில் நடித்த எல்ஐசி நரசிம்மன் மரணம்!


சென்னை: பிரபல நடிகர் எல்ஐசி நரசிம்மன் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 71.

200- படங்களுக்கும் அதிகமாக நடித்தவர் நரசிம்மன். ரஜினியின் 6 லிருந்து 60 வரை படத்தில், அவருக்குத் தம்பியாக நடித்ததன் மூலம் கவனிக்கத் தக்க நடிகரானார்.

பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகள் ரொம்பப் பிரபலம். குறிப்பாக வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ளும் காட்சி. 'நின்னுக்கோரி வரணும...' என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லிக் கொடுப்பார்.

இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு!


தீபாவளிக்கு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா கூட்டணி படமான ஏழாம் அறிவு படத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு சென்னையில் டிக்கெட் இல்லை. இந்தப் படத்துக்கான புக்கிங் ஓபன் ஆனவுடனேயே அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமே என்றாலும், இன்னொரு பக்கம் தங்களது 'தலைவரின்' படத்துக்கான டிக்கெட்டுகள் இவ்வளவு வேகத்தில் விற்றுவிட்டதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியுள்ள இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. ஒரு சிலர் ஆகா.. ஓஹோ என்கின்றனர். மற்றவர்கள், ரொம்ப எதிர்பார்த்துப் போனேன்.. அந்த அளவுக்கு ஒன்னுமில்லை என்கின்றனர்.

சீக்கிரமா திரும்பி வந்து விமர்சனத்தை எழுதுப்பா (தீபாவளி லீவுன போன) ஷங்கர்!.

நமது விமர்சனம் வெளியாகும் வரை.. படம் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்...

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! - மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!!


ஏழாம் அறிவு படத்தில் சிறப்பாக நடித்ததாக மகள் ஸ்ருதியை கமல் ஹாஸனும், கவுதமியும் பாராட்டியுள்ளனர்.

லக் என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஸ்ருதி ஹாஸன். பின்னர் தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இப்போது அவர் தமிழில் சூர்யா ஜோடியாக 7 ஆம் அறிவு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்ருதி நடித்த முதல் தமிழ் படம் என்பதால் தந்தை கமல் ஆர்வமாக ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் போய் அப்படத்தைப் பார்த்தார். ஸ்ருதி நடித்த ஒவ்வொரு காட்சியையும் ரசித்தார். ஸ்ருதி நடிப்பு அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது.

படம் பார்த்து முடிந்ததும் ஸ்ருதியிடம் சிறப்பாக நடித்து இருப்பதாக வெகுவாக பாராட்டித் தள்ளினாராம் கமல். நடிகை கவுதமியும் இந்தப் படத்தைப் பார்த்த பின், ஸ்ருதியை பாராட்டினார்.

முதல் நாளில் மிஸ் ஆனாலும் 2ம் நாளில் ரூ.25 கோடியை அள்ளிய ரா ஒன்!


ஷாரூக் கானின் ரா ஒன் திரைப்படம் முதல் நாளில் ரூ 18.25 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இது சல்மான் கானின் பாடி கார்ட் படம் வசூலித்த ரூ 21 கோடியை விட குறைவுதான்.

இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ரா ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துவிட்டதாக தகவல் வந்தது. ஆனால், முதல் நாளில் ரூ 18.25 கோடியை மட்டுமே அந்ப் படம் ஈட்டியது தெரியவந்துள்ளது.

ஆனால், இரண்டாம் நாளில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.25 கோடியை குவித்துள்ளது ரா ஒன். இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை என்று இதனை பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தம் ரூ.140 கோடியில் தயாரான சயின்ஸ் பிக்ஷன் படம் ரா ஒன். ஷாரூக்கான், கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை அனுபவ் சின்ஹா இயக்கியிருந்தார்.

ரஜினிகாந்த் ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வந்து கைத்தட்டல்களை அள்ளினார்.

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் இந்தியால் ரூ.15 கோடியாகவும், வெளிநாடுகளில் ரூ.3.25 கோடியாகவும் இருந்தது. முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்து, பாடிகார்ட் படத்தின் ரூ.21 கோடி சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நடக்காமல் போனது.

ஆனால் இரண்டாவது நாள் இந்தப் படம் வட்டியும் முதலுமாக சேர்த்து ரூ.25 கோடியை வசூலித்து ஷாரூக் கானுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

'ரா ஒன்னை தீபாவளி அன்றே வெளியிட்டது தவறாகப் போய்விட்டது. காரணம், மக்கள் அனைவரும் தீபாவளியன்று திரையரங்கில் இருக்க விரும்ப மாட்டார்கள். அந்த நல்ல நாளில் வீட்டில் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். அதனால்தான் வசூல் குறைந்தது. இல்லாவிட்டால் முதல் நாளில் ரூ.25 கோடியை எட்டியிருக்கும்,' என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நிபுணரான கோமல் நஹாதா.

எந்த இந்திப் படத்துக்கும் இல்லாத அளவு பெரிய ஓபனிங் தமிழகத்தில் கிடைத்துள்ளது ரா ஒன்னுக்கு. முதல் நாளிலேயே ரூ. 2 கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளது சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படம். காரணம்... சொல்லித் தெரிய வேண்டியதில்லை... ஒன் அன்ட் ஒன்லி ரஜினி தான்!

பல நகரங்களில் ரஜினி ரசிகர்கள் பெரிய பெரிய கட் அவுட் வைத்து, முதல் நாள் முதல் காட்சியை மேள தாளத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

ஷாரூக்கானின் பிஸினஸ் உத்திக்கு கிடைத்த அபார வெற்றி இது!

மார்க்கெட் இருந்தா ஒரு கோடி... இல்லேன்னா கடைகோடி! - இலியானா தத்துவம்


பிரபல நடிகைகளுக்கு ஒரு படம் நன்றாக ஓடினால் போதும், சம்பளம் கோடிகளில் உயர்த்தப்பட்டுவிடும்.

பல நேரங்களில் தயாரிப்பாளரே விரும்பி தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் சமாச்சாரம் இது.

சில நேரங்களில் நடிகைகள் எப்படா நேரம் வரும் என்று காத்திருந்து உயர்த்திவிடுவார்கள்.

நடிகை இலியானா இந்த இரண்டு வகையிலுமே சேர்த்திதான்!

தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உள்ள அவர், இப்போது தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் பெரிய ஹிட் எதுவும் கொடுக்காத இலியானாவுக்கு இவ்வளவு சம்பளமா என்றும் பேசப்பட்டது.

இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது, "தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிக்கிறேன். நான் ரூ.1 கோடி சம்பளம் கேட்பதாகக் கூறுகிறார்கள். நானாகப் போய் எனக்கு சம்பளம் உயர்த்த வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை.

எனது மார்க்கெட் நிலவரம் பார்த்து சம்பளத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள். என் படங்கள் நன்றாக ஓடும்போது அதற்கேற்றவாறு சம்பளம் வாங்குவதில் தவறு இல்லை.

தெலுங்கில் படங்கள் நன்றாக ஓடினால் நிறைய சம்பளம் கேட்கிறேன் என்கிறார்கள். சம்பளத்தை குறைத்தால், படங்கள் தோற்றதால் குறைத்து விட்டார் என்கிறார்கள்.

சினிமாவில் யாரும் சம்பளத்தை சும்மா தருவதில்லை. மார்க்கெட் இருந்தால் இங்கே சம்பளம் கோடிகளில் இருக்கும். ஓடாவிட்டால் கடைகோடியில் நிறுத்துவார்கள் என்பது எனக்குத் தெரியும்!", என்றார்.

கார் விபத்து வழக்கு: இப்படி போய் இப்படி வந்த டிவி நடிகர்


இந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ரோனித் ராய் தாறுமாறாக கார் ஓட்டி இன்னொரு காரை இடித்தது தள்ளிவிட்டு தப்பியோடிவிட்ட வழக்கில் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை செலுத்துமாறு கூறி அவருக்கு பந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தி சீரியல்களில் நடிப்பவர் ரோனித் ராய். கியூன்கி சாஸ் பி கபி பஹு தி, பந்தினி மற்றும் அதாலத் போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மும்பையின் அம்போலி பகுதியில் தனது மெர்சிடீஸ் காரில் வேகமாக சென்று இன்னொரு காரை இடித்து தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் 56 வயது பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் ரோனித் ராயை கைது செய்தனர். அவரை மும்பையில் உள்ள பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பந்த்ரா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது அதுவும் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை கட்டுமாறு உத்தரவிட்டுள்ளது.

அதிகாலையில் விபத்து ஏற்படுத்தி காலையில் கைதாகி சிறிது நேரத்தில் இப்படி போய் இப்படி வெளியே வந்துவிட்டார்.

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்


-எஸ்.ஷங்கர்

நடிப்பு: சூர்யா, ஸ்ருதி ஹாஸன், ஜானி ட்ரை நூயென்
ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து - இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்
பிஆர்ஓ: ஜான்சன்

இந்தியாவையே கலக்கிய சூப்பர் ஹிட் படமான கஜினி டீம் உருவாக்கிய படைப்பு என்பதால் '7 ஆம் அறிவு'க்கு ஏக எதிர்ப்பார்ப்பு. இப்படியொரு எதிர்ப்பார்ப்பு கொண்ட படம் அதை நிறைவேற்றத் தவறினால் என்ன நிகழுமோ அது 7-ஆம் அறிவுக்கும் நேர்ந்திருக்கிறது!

5-ம் நூற்றாண்டு...

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவனான பல்லவ மன்னர் குல இளவரசன் போதி தர்மனை அவனது ராஜமாதா சீனாவுக்குப் போகும்படி கட்டளையிடுகிறார். மூன்றாண்டு தரைவழிப் பயணமாக இமயத்தைக் கடந்து சீன கிராமம் ஒன்றில் கால் பதிக்கும் போதி தர்மனை, சீனர்கள் ஒரு ஆபத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஆபத்து கொள்ளை நோய் உருவில் அந்த கிராமத்தைத் தாக்க, நோய் பாதிக்கப்பட்ட முதல் குழந்தையை உயிரோடு துணியில் சுருட்டி காட்டில் தூக்கிப் போட, அந்த குழந்தையை போதி தர்மன் தன் மருத்துவத் திறமையாமல் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறார். அப்போதுதான் போதி தர்மனின் மகத்துவம் அவர்களுக்குப் புரிகிறது. அந்தக் கிராமம் முழுவதுமே அப்போது நோயில் வீழ, போதி தர்மன் அந்த மக்களை நோயிலிருந்து மீட்கிறார். சீனாவின் பிற பகுதி மக்களுக்கும் அந்த நோய் சிகிச்சை முறைகளை கற்பிக்கிறார். கொள்ளை நோயே இல்லாமல் போகிறது.

அடுத்த சில நாட்களில் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்த கிராமத்தைத் தாக்க, அதிலிருந்து அந்த மக்களை தனது அரிய தற்காப்புக் கலை மூலம் காப்பாற்றுகிறார் போதி தர்மன். அந்த கலையை தங்களுக்கும் கற்பித்துத் தரச் சொல்லி சீனர்கள் கேட்க, அவர்கள் அனைவருக்கும் களறிப் பயட்டு, நோக்கு வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தருகிறார்.

சீனர்களுக்கு செய்த சேவையில் திருப்தியுற்ற போதி தர்மன் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்கிறார். ஆனால் அந்த சீனர்களோ, போதி இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்பாகவும் அச்சமின்றியும் இருக்கும் என நம்புகிறார்கள். எனவே போதிக்கு விஷம் கலந்த உணவைக் கொடுக்க, அது விஷ உணவு எனத் தெரிந்தும், அவர்களுக்காக உண்டு இறந்து சீனாவுக்கு உரமாகிறார் போதி தர்மன்.

இருங்க... இருங்க... இது முதல் 20 நிமிடக் கதைதான். மீதி? 21-ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது.

சென்னையில் மரபணு ஆராய்ச்சி மூலம் மீண்டும் போதி தர்மனை உருவாக்கும் முயற்சியில் சுபா (ஸ்ருதி) என்ற பெண் இறங்க, அது சீனாவுக்கு தெரிந்து விடுகிறது. இந்தியா மீது 'பயோ வார்' எனும் விஷக் கிருமி பரப்பும் போரை சீனா தொடங்கத் திட்டமிடுகிறது. போதி தர்மனால் விரட்டியடிக்கப்பட்ட கொள்ளை நோய்க் கிருமியை இதற்காக மீண்டும் உருவாக்குகிறது சீனா. அந்த பயோ வாரின் முடிவில் இந்தியாவே நோய் கிடங்காக மாறிவிடும். அதற்கான மருந்து சீனாவில் மட்டுமே (போதி தர்மன் கண்டுபிடித்த மருந்து) கிடைக்கும். எனவே சீனாவிடம் பொருளாதார ரீதியாக இந்தியா மண்டியிட வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு சுபாவின் ஆராய்ச்சி தடையாக இருக்கும் என்பதால் அவளைக் கொல்ல டாங் லீ என்ற ஜெகஜ்ஜால வில்லனை இந்தியாவுக்கு அனுப்புகிறது சீனா. இவன் போதி தர்மன் கற்பித்த தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் மிக்கவன். பார்வையாலே ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவன்.

இங்கே, போதி தர்மனின் சந்ததியைத் தேடும் சுபா, அவர்களில் ஒருவனான சர்க்கஸ் கலைஞன் அரவிந்தை (சூர்யா) கண்டுபிடிக்கிறார். அவனைக் காதலிப்பது போல நடித்து தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார். போதி தர்மனின் மரபணுவில் 80 சதவீதம் அரவிந்துக்குப் பொருந்துவதை அறிகிறார்.

ஒரு கட்டத்தில் சுபா தன்னைக் காதலிக்கவில்லை, 'பரிசோதனைக் கூட குரங்காகத்தான்' பயன்படுத்துகிறார் என்பது தெரிந்து உடைந்து போகும் அரவிந்துக்கு, போதி தர்மனின் மகத்துவம், இந்தியாவுக்கு வரும் ஆபத்து பற்றி சொல்லி புரிய வைக்கிறார். அதற்குள் சுபாவை தேடி சென்னைக்கு வரும் வில்லன் டாங் லீ, அவளைக் கொல்ல துரத்துகிறார். உடனடியாக போதிதர்மனாக மாற சம்மதிக்கிறான் அரவிந்த்.

டாங் லீ முயற்சி வென்றதா? சுபாவின் ஆராய்ச்சி ஜெயித்ததா? அரவிந்த் போதி தர்மனாக மாறினானா? என்பது க்ளைமேக்ஸ்.

-கேட்பதற்கு கதை நன்றாக இருக்கிறதல்லவா... உண்மைதான். ஆனால் முதலில் நாம் குறிப்பிட்டுள்ள 5-ம் நூற்றாண்டு போதி தர்மன் கதையை மட்டும் அழகாக எடுத்த இயக்குநர் முருகதாஸ், தன்னைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு மீதி இரண்டரை மணி நேரமும் பெரும் சோதனையைத் தந்துவிட்டார் என்பதுதான் உண்மை.

முதல் 20 நிமிடக் காட்சிகளுக்கு மட்டும் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அந்த அளவு உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்!

பல்லவ காஞ்சியைச் சித்தரித்துள்ள விதம், சீனப் பயணத்தில் சூர்யா கடந்து போகும் இமயமலைப் பகுதிகள், இரவிலும் ஸ்படிகமாய் மின்னும் ஆறுகள், அந்த சீனக் கிராமம்... என அப்படியே நம்மை இழுத்துக் கொள்கிறது படம். நோய் பாதித்த குழந்தையை காப்பாற்றி தன் போர்வைக்குள் மறைத்து வைத்து, அந்தக் குழந்தையின் தாய் கண்ணெதிரே போதி தர்மன் காட்டும்போது, அந்த சீனப் பெண் உணர்ச்சிக் குவியலாய் கதறியபடி தரையில் விழுந்து வணங்குமிடம்... நெஞ்சைத் தொட்டுவிடுகிறது.

ஆனால் அதன் பிறகு ஒரு காட்சி கூட அந்த அளவு உணர்ச்சிமிக்கதாக, துடிப்பானதாக இல்லை என்பதே உண்மை. போதி தர்மன் கதையை மட்டும் 2.30 மணி நேரம் வர்ணித்திருந்தால் கூட ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும், தமிழ் ரசிகர்களுக்கு.

ஒரு சர்க்கஸ் கலைஞனான சூர்யா - மரபணு ஆராய்ச்சி மாணவி ஸ்ருதி காதலில் எந்த ஈர்ப்பும் இல்லை. அப்படி ஈர்ப்பே இல்லாத காதலில் வரும் டூயட்டுகள் மட்டும் எப்படி ரசிக்கும்படி இருக்கும்?.

ஸ்ருதி ஹாஸன் சில காட்சிகளில் பரவாயில்லை. பல காட்சிகளில் ஐயகோ. அதுவும் அவரது உடைந்த தமிழ் கொடுமை. டிஎன்ஏ ஆராய்ச்சி பற்றிய செமினாரில் தமிழ் பற்றி எழும் சர்ச்சை பொருத்தமற்ற காட்சியாக, பார்ப்பவர் உணர்வைத் தூண்டும் மலிவான உத்தியாக அமைந்துள்ளது. இன்னும்கூட அதை நம்பகத் தன்மையுடன், அழுத்தமாக பொருத்தமான காரணங்களுடன் அமைத்திருக்கலாம்.

சர்வ பலம் பொருந்திய வில்லன் டாங் லீ (Johnny Tri Nguyen) நோக்கு வர்மம் என்ற பெயரில் சும்மா சும்மா 'நோக்கிக் கொண்டே' இருப்பதில் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டுகிறது.

படத்தின் பின் பகுதியில் வரும் நிறைய காட்சிகளை தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பல ஆங்கிலப் படங்களில் பார்த்துவிட்டதால், 'யு டூ முருகதாஸ்' என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

படத்தின் நாயகன் சூர்யா, அந்த ஆரம்ப காட்சிகளுக்காகவும், க்ளைமாக்ஸ் காட்சிக்காகவும் அபாரமாக உழைத்திருப்பது தெரிகிறது. இடையில் வரும் காட்சிகளில் அவரது கெட்டப்பை இன்னும் கூட நன்றாகக் காட்டியிருக்கலாம். அதேபோல நாயகி ஸ்ருதியுடன் ஒட்டுதலின்றியே அவர் நிற்பது போலிருப்பதால், அந்த காதல் சோகப்பாட்டு பெரிய ஸ்பீட் பிரேக்கர் மாதிரியாகிவிடுகிறது.

படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் ஹாரிஸ் ஜெயராஜ் இசை. 'முன் அந்தி...' உள்ளிட்ட பாடல்களில் குறையில்லை.. ஆனால், பேக்கிரவுண்ட் மியூசிக்கில் சறுக்குகிறார். பின்னணி இசையில் டாங் லீ வரும் போது சீன சப்தம் ஒன்றை அலற விட்டு கடுப்பேற்றுகிறார்.

பீட்டர் ஹெயின் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இன்னொரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.

தமிழன் பெருமை என்னவென்று உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்ற முருகதாஸின் ஆவலைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படம் மூலம் போதி தர்மனைத் தெரியாத தமிழனே இருக்க முடியாது என்ற நிலை இப்போது உருவாக்கியிருப்பதும் மகிழ்ச்சிதான். ஆனால் நிறைய இடங்களில் தமிழர் பெருமை பற்றி உணர்த்த அவர் வசனங்களை மட்டுமே நம்பிவிட்டதுதான், பிரச்சார நெடியைக் கிளப்பிவிட்டது. அதற்கு தோதான அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் முருகதாஸ் நோக்கம் நிறைவேறியிருக்கும்.

படத்தில் நிறைய குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அது நமது நோக்கமல்ல. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸ், அதில் பாதிக் கிணறு தாண்டி விழுந்ததில் நஷ்டம் அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான்!.

ஒரு தமிழ்ப் படைப்பாளி என்ற முறையில் அவரை கடுமையாக விமர்சிக்கவும் முடியாத, அதே நேரம் திறமையுள்ள இந்த இளைஞரை விட்டுக் கொடுக்கவும் மனமில்லாத தர்மசங்கடத்தை முதல்முறையாக ஏ ஆர் முருகதாஸ் ஏற்படுத்திவிட்டார் என்பதே உண்மை!.

விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற தமிழ் மந்திரம், மீண்டும் ரமணாக்கள், கஜினிகள் படைக்கும் உத்வேகத்தை முருகதாஸுக்கு தரட்டும்!

என்ன, 7 ஆம் அறிவுக்கு இலங்கையில் தடையா?


நடிகர் சூர்யா, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள 7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஸ்ருதி நடித்துள்ள 7 ஆம் அறிவு தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் சூர்யா புத்த துறவியாக நடித்துள்ளார். ஒரு நாட்டை 9 நாடுகள் சேர்ந்து அடிப்பது வீரமல்ல, துரோகம் என்று சூர்யா பேசியிருக்கிறார்.

அந்த வசனத்தையும், தமிழரான போதிதர்மரை புத்தருக்கு இணையாக பேசப்படும் காட்சிகளையும் பார்த்து சிங்களவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனராம். தமிழரான போதிதர்மருக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிடுவது எல்லாம் இந்த படத்தைப் பார்த்த பிறகு தான் பலருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அந்தக் இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கள அமைப்புகள் குரல் எழுப்பி வருவதால் அந்தப் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களுக்குப் பிடிக்காத காட்சிகளை நீக்கிய பின் திரையிட அனுமதிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 7 ஆம் அறிவு யாழ்ப்பாணத்தில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் விற்றதை தட்டி கேட்ட வாலிபர் கொலை


கோவை: திரையரங்கில் சினிமா டிக்கெட் அதிக விலைக்கு விற்றதை தட்டிக் கேட்ட வாலிபரை ஒரு கும்பல் அடித்து உதைத்தது. இதில் அந்த வாலிபர் படுகாயமடைந்து பலியானார்.

கோவை வேலாண்டிபாளையம் அடுத்த இடையார்பாளையத்தில் உள்ள கிருத்திகா திரையரங்கில், தீபாவளிக்கு வெளியான 'ஏழாம் அறிவு' படம் திரையிடப்பட்டது. புது படத்தை பார்க்க வேலாண்டிபாளையத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரான ரமேஷ்(24) தனது நண்பர்கள் பவுல்ராஜ், லோகேஷ், சரவணன், கார்த்திக் ஆகியோருடன் சென்றிருந்தார்.

அப்போது அதிக விலையில் டிக்கெட் விற்கப்பட்டதாக தெரிகிறது. இதில் அதிருப்தியடைந்த ரமேஷ் நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட்டை கிழித்தெறித்து திரையரங்கை விட்டு வெளியேறினார்.

வழியில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்த ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கினர். இதில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ், கோவை அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ரமேஷ்-க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பவுல்ராஜ், லோகேஷ், சரவணன் ஆகியோர் தனியார் மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, திரையரங்கு உரிமையாளரின் உறவினர் பரணிக்குமார்(27), கிஷோர்(26), ரமேஷ்(26), சுரேஷ்(27), டொமினிக்(26) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்


என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ் என்று நடிகர் தனுஷ் பெருமைப்படுகிறார்.

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை வைத்து '3' படம் எடுத்து வருகிறார். இதில் தனது கணவருக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார். மயக்கம் என்ன படத்தில் நடித்த தனுஷ் அந்த படவேலைகள் முடிந்ததை அடுத்து தற்போது 3 படத்தில் மும்முரம் காட்டுகிறார்.

ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியின் இயக்கத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது,

என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ். அவர் அருமையாக படவேலைகளை செய்கிறார். அவர் இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தனுஷ் தனது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். 3 படத்தை முடித்தும் சிம்புத் தேவனின் மாரீசன் என்ற படத்தில் நடிக்கிறார். அதையடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் உள்பட 2 படங்களில் நடிக்கிறார்.

அண்ணன் இயக்கத்தில் நடித்த தனுஷ் தற்போது மனைவி இயக்கத்தில் நடிக்கிறார்.

Thursday 27 October 2011

கார் விபத்து வழக்கு: இப்படி போய் இப்படி வந்த டிவி நடிகர்


இந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ரோனித் ராய் தாறுமாறாக கார் ஓட்டி இன்னொரு காரை இடித்தது தள்ளிவிட்டு தப்பியோடிவிட்ட வழக்கில் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை செலுத்துமாறு கூறி அவருக்கு பந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தி சீரியல்களில் நடிப்பவர் ரோனித் ராய். கியூன்கி சாஸ் பி கபி பஹு தி, பந்தினி மற்றும் அதாலத் போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மும்பையின் அம்போலி பகுதியில் தனது மெர்சிடீஸ் காரில் வேகமாக சென்று இன்னொரு காரை இடித்து தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் 56 வயது பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் ரோனித் ராயை கைது செய்தனர். அவரை மும்பையில் உள்ள பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பந்த்ரா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது அதுவும் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை கட்டுமாறு உத்தரவிட்டுள்ளது.

அதிகாலையில் விபத்து ஏற்படுத்தி காலையில் கைதாகி சிறிது நேரத்தில் இப்படி போய் இப்படி வெளியே வந்துவிட்டார்.

ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்


என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ் என்று நடிகர் தனுஷ் பெருமைப்படுகிறார்.

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை வைத்து '3' படம் எடுத்து வருகிறார். இதில் தனது கணவருக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார். மயக்கம் என்ன படத்தில் நடித்த தனுஷ் அந்த படவேலைகள் முடிந்ததை அடுத்து தற்போது 3 படத்தில் மும்முரம் காட்டுகிறார்.

ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியின் இயக்கத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது,

என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ். அவர் அருமையாக படவேலைகளை செய்கிறார். அவர் இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தனுஷ் தனது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். 3 படத்தை முடித்தும் சிம்புத் தேவனின் மாரீசன் என்ற படத்தில் நடிக்கிறார். அதையடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் உள்பட 2 படங்களில் நடிக்கிறார்.

அண்ணன் இயக்கத்தில் நடித்த தனுஷ் தற்போது மனைவி இயக்கத்தில் நடிக்கிறார்.

அனுஷ்காவை அடுத்து சமந்தாவுக்கு அடிபோடும் கோலிவுட்


நடிகை சமந்தா நடித்துள்ள தெலுங்குப் படமான தூக்குடு ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் குவிகிறதாம்.

இயக்குனர் கௌதம் மேனன் அறிமுகப்படுத்திய நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் குட்டி ரோலில் நடித்தாலும் யார் இந்த பொண்ணு என்று கேட்க வைத்தவர். அடுத்ததாக அவர் முரளி மகன் அதர்வாவுடன் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்தார். தற்போது கௌதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த சமந்தாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதையடு்தது அவர் தெலுங்கு பக்கம் போய் பார்க்கலாம் என்று ஹைதராபாத் கிளம்பினார். அவர் அங்கு போன நேரம் அவர் நடித்த படங்கள் ஹிட்டானது. அதிலும் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்த தூக்குடு சமந்தாவை தூக்கிவி்ட்டுள்ளது. இந்த படம் ஹிட்டானதால் தனது சம்பளத்தை கோடியாக உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தாவை கண்டும், காணாததுமாய் இருந்த கோலிவுட் தற்போது தூக்குடு ஹிட்டானவுடன் அவருக்கு குறிவைத்துள்ளது. இதுவரை சமந்தாவை சீண்டாத பெரிய ஹீரோக்கள் எல்லாம் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.

நம்ம உயர்ந்த நடிகை அனுஷ்காவும் இப்படித்தான் ரெண்டு படத்தில் அறிமுகமானார். வாய்ப்பு கிடைக்காததால் டோலிவுட் போய் பெரிய நடிகை ஆனார். தற்போது அவருடன் நடிக்க கோலிவுட் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு!


தீபாவளிக்கு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா கூட்டணி படமான ஏழாம் அறிவு படத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு சென்னையில் டிக்கெட் இல்லை. இந்தப் படத்துக்கான புக்கிங் ஓபன் ஆனவுடனேயே அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமே என்றாலும், இன்னொரு பக்கம் தங்களது 'தலைவரின்' படத்துக்கான டிக்கெட்டுகள் இவ்வளவு வேகத்தில் விற்றுவிட்டதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியுள்ள இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. ஒரு சிலர் ஆகா.. ஓஹோ என்கின்றனர். மற்றவர்கள், ரொம்ப எதிர்பார்த்துப் போனேன்.. அந்த அளவுக்கு ஒன்னுமில்லை என்கின்றனர்.

சீக்கிரமா திரும்பி வந்து விமர்சனத்தை எழுதுப்பா (தீபாவளி லீவுன போன) ஷங்கர்!.

நமது விமர்சனம் வெளியாகும் வரை.. படம் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்...

ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு!


தீபாவளிக்கு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா கூட்டணி படமான ஏழாம் அறிவு படத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு சென்னையில் டிக்கெட் இல்லை. இந்தப் படத்துக்கான புக்கிங் ஓபன் ஆனவுடனேயே அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமே என்றாலும், இன்னொரு பக்கம் தங்களது 'தலைவரின்' படத்துக்கான டிக்கெட்டுகள் இவ்வளவு வேகத்தில் விற்றுவிட்டதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியுள்ள இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. ஒரு சிலர் ஆகா.. ஓஹோ என்கின்றனர். மற்றவர்கள், ரொம்ப எதிர்பார்த்துப் போனேன்.. அந்த அளவுக்கு ஒன்னுமில்லை என்கின்றனர்.

சீக்கிரமா திரும்பி வந்து விமர்சனத்தை எழுதுப்பா (தீபாவளி லீவுன போன) ஷங்கர்!.

நமது விமர்சனம் வெளியாகும் வரை.. படம் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்...

ரா.ஒன் முதல் நாள் வசூல் ரூ. 22 கோடி..ரெக்கார்ட் பிரேக்!


இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஷாருக் கானின் ரா.ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது.

படத்தின் இந்திப் பதிப்பு ரூ. 20 கோடியை ஈட்ட, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகள் தலா ரூ. 1 கோடியை ஈட்டியுள்ளன.

ரூ. 145 கோடியில் ஷாருக் தயாரித்துள்ள இந்தப் படம் நாட்டின் பெரும்பான்மையான மல்டி பிளக்ஸ்களில் 20 சதவீதம் அதிகமான டிக்கெட் விலையுடன் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானின் பாடிகார்ட் நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது. இது தான் இதுவரை இந்திப் படத்தின் ரெக்கார்ட் பிரேக்காக இருந்தது. இதை முறியடித்துள்ளது ரா.ஒன் என்கிறார்கள்.

பாடிகார்ட் ரிலீசான முதல் 5 நாட்களில் ரூ. 80 கோடியை ஈட்டியது. ரா.ஒன் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.

ரா.ஒன் முதல் நாள் வசூல் ரூ. 22 கோடி..ரெக்கார்ட் பிரேக்!


இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஷாருக் கானின் ரா.ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது.

படத்தின் இந்திப் பதிப்பு ரூ. 20 கோடியை ஈட்ட, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகள் தலா ரூ. 1 கோடியை ஈட்டியுள்ளன.

ரூ. 145 கோடியில் ஷாருக் தயாரித்துள்ள இந்தப் படம் நாட்டின் பெரும்பான்மையான மல்டி பிளக்ஸ்களில் 20 சதவீதம் அதிகமான டிக்கெட் விலையுடன் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானின் பாடிகார்ட் நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது. இது தான் இதுவரை இந்திப் படத்தின் ரெக்கார்ட் பிரேக்காக இருந்தது. இதை முறியடித்துள்ளது ரா.ஒன் என்கிறார்கள்.

பாடிகார்ட் ரிலீசான முதல் 5 நாட்களில் ரூ. 80 கோடியை ஈட்டியது. ரா.ஒன் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.

Wednesday 26 October 2011

ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சிட்னி தடுப்புமுகாமில் தற்கொலை (காணொளி இணைப்பு)

ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சிட்னி தடுப்புமுகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிட்னி குடிவரவு வதிவிட வீடமைப்புத் தொகுதியில், நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் மரணமாகியுள்ளார்.

இவரது மரணம் இடம்பெற்ற சூழல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வில்லாவூட் தடுப்பு முகாமில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து நிகழ்ந்த நான்கு தற்கொலைகளை அடுத்து கூரை மீதேறி போராட்டம் நடத்தியவர்களில், இன்று மரணமான இளைஞரும் ஒருவராவார்.

சூட்டி என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட இவர் அனைவருடனும் நட்புடன் பழகக் கூடியவர் என்றும் அனைவருக்கும் உதவும் மனப்பாங்குடையவர் என்றும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் இயன் றின்ரோல் தெரிவித்துள்ளார்.

பொங்கு தமிழே! விடியல் கிட்டும் வரை பொங்கு தமிழே!: நோர்வே ஈழத்தமிழர் அவை

ரொறன்ரோவில் நடக்கவிருக்கும் பொங்குதமிழ் நிகழ்வு சிறப்பாக நடந்தேறிட நோர்வே ஈழத்தமிழர் அவையும் நோர்வே வாழ் தமிழர்களும் கனடா நாட்டை நோக்கி எண்ண அலைகளை சிதறடிக்கவிட்டு வருகிற 29.10.11 ஆம் நாளிர்க்காய் காத்து நிற்கிறோம்.

தாயகம்! தேசியம்! தன்னாட்சி! என்ற முழக்கம் உலகமெங்கும் கேட்க வேண்டும். இவ்வுலகில் பிற இனம் போலத்தான் நாங்களும் என்று உணர மறுக்கும் கயவர் கூட்டம் தமிழரின் முழக்கத்தில் நாணி நிற்க வேண்டும். எம் இனம் யாருக்கும் எதிராய் நின்றதில்லை. யாரையும் அழித்ததில்லை. இன்றும் கூட யாருக்கும் எதிராய் நின்றதில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்!" என்ற எம்மை அழிக்க எத்தனை எத்தனை கரங்கள் ஒன்று சேர்ந்தன.

தமிழர்களே நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். "அழித்தவனே, எம்மை அழித்தால் நாங்கள் வீழ்ந்துவிட மாட்டோம். மீண்டும் மீண்டும் உயிர் பெறுவோம். எம் சந்ததிக்கு நிலையான வாழ்வு கிட்டும் வரை உயிர் பெறுவோம். எம் நிலம் தன்னாட்சி பெறும் வரை உயிர் பெறுவோம். எம் மக்கள் சுதந்திரமாய் வாழும் வரை எம் மொழி எம் நிலத்தில் ஆட்சியில் நிற்கும் வரை உயிர் பெறுவோம்.

வீழ்ந்து வீழ்ந்து விதையாய் வீழ்ந்து உயர்ந்து உயர்ந்து மரமாய் உயர்ந்து விடியல் நோக்கி களம் காண்போம்" என்று ரொறன்ரோ பொங்கு தமிழ் பெரு நிகழ்வில் முழக்கமிடுவோம். விண்ணதிர மண்ணதிர முழக்கமிடுவோம்.

எமது உரிமைக்காய் நாம் முழங்காமல் யார் முழங்குவது? "நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை விலங்கினைத் தவிர" என்றானே மார்ட்டின் லூதர் கிங் அதுபோல முள்ளிவாய்க்கால் பெரும் சோகத்தையே சந்தித்தாகிவிட்டது, இனி இழப்பதற்கு வேறென்ன இருக்கிறது. ஆனால் பெறுவதற்கு நாடுண்டு. எம் இனம் வாழ வழியுண்டு. எம் மொழி நிலைக்க வழியுண்டு. ஒன்று சேருங்கள் ஒன்றாய் முழக்கமிடுங்கள். எமது என்ன வேண்டும் என்பதை நாம்தான் சொல்லவேண்டும் அதையும் உரக்க சொல்லவேண்டும். இவ்வுலகம் செவி மறுக்கும் வரை சொல்ல வேண்டும்.

எமது ஒற்றை முழக்கம், "தாயகம்! தேசியம்! தன்னாட்சி!"

பொங்குதமிழே! பொங்குதமிழே!
எம் இனத்தின் விடியலுக்காய் பொங்குதமிழே!
அழிந்த இனம் மீண்டு வாழ்ந்திட பொங்குதமிழே!
அழியா இனமிது என்றுரைத்திட பொங்குதமிழே!
பகைவர் நடுங்கிட பொங்குதமிழே!
தமிழை ஆராதிக்க பொங்குதமிழே!
தமிழரை வாழ வைக்க பொங்குதமிழே!
தமிழீழம் மலர்ந்திட பொங்குதமிழே!

ரொறன்ரோவில் நடக்கவிருக்கும் பொங்கு தமிழ் நிகழ்வு எமது இனத்தின் இருப்பை இவ்வுலகிற்கு தெரிவிக்கவிருக்கும் வரலாற்று முக்கியத்துவ நிகழ்வென கருதி தமிழர்களே ஆயிரமாயிரமாய் அணித்திரள்வீர்!

நோர்வே ஈழத்தமிழர் அவை, நோர்வே

கடாபியை நானே கொன்றேன்: இளைஞன் வாக்குமூலம் (காணொளி இணைப்பு)

லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபியை தானே சுட்டுக் கொன்றதாக லிபிய புரட்சிப் படையைச் சேர்ந்த போராளியொருவர் கூறும் வீடியோவொன்று வெளியாகியுள்ளது.

கடாபி உயிருடன் இருப்பதை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதால் தான் அவரை கொன்றதாக மேற்படி இளைஞர்கூறியுள்ளார். மேற்படி இளைஞனின் பெயர் விபரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நேட்டோ ஆதரவுகொண்ட புரட்சிப் படையினரால் கைது செய்யப்பட்ட கேணல் கடாபி கொல்லப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என லிபிய இடைக்கால அரசாங்கம் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த வீடியோ வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"நாம் அவரைப் பிடித்தோம் . நான் அவரின் முகத்தில் தாக்கினேன். போராளிகள் சிலர் அவரை அப்பால் கொண்டு செல்ல முயன்றனர். அப்போதுதான் நான் அவரை சுட்டேன். இரு தடவை தலையிலும் நெஞ்சிலும் சுட்டேன்'" என அந்த இளைஞர் வீடியோவில் கூறியுள்ளார்.

தனது கூற்றை நிரூபிப்பதற்காக இரத்தம் தோய்ந்த கடாபியின் ஆடை எனக்கூறப்படும் ஆடையொன்றையும் கடாபியினுடையது எனக்கூறப்படும் தங்க மோதிரமொன்றையும் அவர் வீடியோவில் காண்பித்துள்ளார்.

கடாபியின் சொந்த ஊரான சேர்ட்டே நகரில் கடந்த வியாழனன்று கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட கேணல் கடாபி பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட கேணல் கடாபி தாக்கப்படும் காட்சிகளும் அந்த வீடியோவில் அடங்கியுள்ளன.

ஏன் பொங்குதமிழ் - தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்

என்றும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தீர்கதரிசனமாக முன் கூட்டியே கூறியவர் ஈழத்தமிழர்களின் தேசிய தலைவர். ஈழதமிழர்களின் விடுதலை போராட்டத்தை முன்னகர்த்தி செல்லும்படி எமது தேசிய தலைவர் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு மாவீரர் தினவுரையில் கூறியிருந்தார்.

முள்ளிவாய்காலில் சிறிலங்கா அரசு எல்லாம் முடிந்து விட்டது என்று கூறி வெற்றிவிழா கொண்டாடிய நேரத்தில், முள்ளிவாய்காலில் தமிழ் இன அழிப்பின் உச்சகட்டம், சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், படுகொலைகளுக்கு இதுவரைகாலமும் கண்மூடி பார்த்து கொண்டிருந்த உலக நாடுகள், ஊடகங்கள், சில மனிதநேய அமைப்புகள் இன்று முள்ளிவாய்காலில் உலகத்தின் கண்களை மூடுவதாக நினைத்து வன்னி போர்நிலத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபைகளின் நிறுவனங்கள், மனித நேய அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஊடகங்கள் எல்லோரையும் வெளியேற்றி விட்டு செய்த தமிழினப் படுகொலைகள், இன்று அதே ஊடகங்கள், அதே மனித நேய அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளால் சிறி லங்கா அரசு சர்வதேச விசாரணைக்குள் உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை உருவாக்கி இருக்கிறது.

இன்று சிறிலங்கா சிங்கள அரசுகள் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், இன சுத்திகரிப்பு, படுகொலைகளுக்கு எல்லாம் சேர்த்து வைத்தது போல் முள்ளிவாய்காலில் செய்த போர் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றத்திற்கு பதில் சொல்ல முடியாமல், இந்திய, சீனா, ரஷ்யா மற்றும் பல அணிசேரா நாடுகளின் தயவில் தப்பிக்கொண்டிருகிறது.

அதே நேரத்தில் தமிழனின் பலவீனம் அறிந்த சிங்கள அரசுகள் அன்றிலிருந்து இன்றுவரை பல அரச தந்திரங்கள், கீழ்த்தரமான தந்திரங்களை பயன்படுத்தி எவ்வாறு தமிழர்களை பிரித்ததோ அதே போல் இன்றும் தமிழர்களை கொண்டே சில கட்டமைப்புகளை உருவாக்கி, சில தமிழர்களை மக்களிடையே ஊடறுத்து, பல ஊடகங்களை பணம் வீசி தன்னுடமையாக்கி தமிழ் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி தன்னை உலக அரசிகளிடமிருந்து காப்பாற்றும் செயற்பாட்டில் இறங்கி நிற்பதை கண்டு கொண்டு நாம் பேசாமல் இருந்தால், முள்ளிவாய்காலில் இத்தனை தியாகங்கள் செய்து தம் இன்னுயிர்களை, தமிழ் நிலம் பாதுகாக்க தம் இரத்தத்தை இரைத்த தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.

தமிழ் இளைஞ்சர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வன்னி மண்ணையும், கிழக்கு ஈழத்திலும் ஒரு நடை முறை அரசை நடாத்தி கொண்டிருந்த நேரத்தில், ராணுவத்தின் பிடியில் இருந்த யாழ்ப்பான பிரதேசத்தில், யாழ்ப்பான பல்கலைகழக மாணவர்கள் பொங்கி எழு தமிழா என்று பாரதிதாசன் எழுதியது போல் "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு" என்ற கூற்றுக்கு அமைய தமிழர்களை பொங்கி எழ வைத்தார்கள்.

இன்று உலக நாடுகள் பல சிறி லங்கா அரசு, சர்வதேச விசாரணைக்குள் உட்படுத்தப்பட வேண்டும் என்று வெறும் பேச்சளவில் கூறிக்கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் நாடு என்றளவில் அந்த நாட்டை பாதுகாக்க இந்திய, சீனா, ரசியா மற்றும் சில அணிசேரா நாடுகள் சிறிலங்காவை பாதுகாத்து கொண்டிருகிறது. நாட்டை பாதுகாக்கும் இந்த நாடுகள் குற்றமிழைத்த அரசு என்று தெரிந்து கொண்டும் தமிழர்களின் (மக்களின்) பாதுகாப்பை அதே அரசின் கையிலேய கொடுத்திருக்கிறது, அந்த அரசோ இன்றும் தொடர்ந்து தமிழர் நில பறிப்பு, சிங்கள மயப்படுத்தல், புத்தமயப்படுதல், தமிழன அழிப்பு என்று தாம் தொடங்கிய திட்டத்தை தொடர்ந்து கொண்டிருகிறது.
இந்த நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்!

எவ்வாறு அன்று சிங்கள பிடியில் இருந்த தமிழ் மக்கள் "தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு" என்று எழுந்தார்களோ, அதே போல் அவர்களின் குரலாக நாம் இன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள், உலக தமிழர்களாக, சர்வதேசத்திடம் பேசிக்கொண்டிருந்தது போதும், அங்கே ஒரு இனம் அழிந்து கொடுத்திருக்கிறது என்பதையும், அமெரிக்க சுற்று பயணம் புறப்பட்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டப்பைபினரிடமும், சிறிலங்கா அரசு செய்த தமிழ் இனப்படுகொலைக்கு, தமிழர்க்கு நீதி கிடைக்கும் நேரமிது, இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும் என்ற செய்தியையும், தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்பதை வலியுறுத்த உலக தமிழர்கள் பொங்கி எழும் நேரமிது, ஐரோப்பாவில் ஜெனிவாவில் ஆரம்பித்த இந்த போராட்டம் உலகெங்கும் பரவவேண்டும்.

"தென்றிசையைப் பார்கின்றேன் என் சொல்வேன் என்றன் சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்கு தடா
அன்றலர்ந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன்.........
விழ்ச்சியுரும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும், விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்,
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறமை தன்னை தொகையாக எதிர் நிறுத்தி தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும், கடல் போல் செந்தமிழை பெருக்கவேண்டும்"

என்ற பாரதிதாசனின் கூற்றுக்கு அமைய கனடா வாழ் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக தமிழ் இனத்திற்கு தீமை இளைத்தவர்களை கூண்டில் ஏற்ற தமிழர்கள் விடுதலை அடைய பொங்கியெழு தமிழா! தமிழ் இனத்திற்கு கின்னல் விளைவித்ததால் சங்கே முழங்கு என்று பொங்கி எழட தமிழா!

இது தமிழனின் காலம், இந்த நேரத்தை நாம் சரியாக சிந்தித்து பயன்படுத்தவேண்டும், இன்று தமிழர்களின் உரிமை போராட்டத்தை சிதைக்க சிறி லங்கா அரசும், இந்திய அரசின் சில பகுதியினரும் பலரை எம்மிடையே விட்டு அன்று போல் இன்று எம்மை மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு இட்டு செல்ல முயற்ச்சிகள் செய்கிறார்கள், அதை புரிந்து கொண்டு கனடிய தமிழர்கள், அமெரிக்க தமிழர்கள் துணிச்சலுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டியநேரமிது.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
மின்னஞ்சல்: mte.france@gmail.com

போர் மரபை மீறிய அரசொன்று கடாபி கொலைக்கு விளக்கம் கேட்டிருக்கிறது..


கேணல் கடாபி 42 வருட சர்வாதிகார ஆட்சியின் வடிவம்..

உலகத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெரும் பணக்கார சர்வாதிகாரி..

உலகத் தலைவர்கள் எல்லாம் மண்டியிட்டு அவருடைய வாசலில் நின்றதை கண்ணாரக் கண்டு மமதை கொண்ட மனித வடிவம்..

பிறந்தநாள் பரிசாக பலர்ஸ்கோனியிடமிருந்து ஐ.சி ரயில்வண்டியையே பரிசாகப் பெற்ற உலகின் ஒரே சர்வாதிகாரி..

இப்படியெல்லாம் இருந்தாலும் அவரின் மறுபக்கமோ கொடுங்கோன்மை நிறைந்தது..

அவர் செய்த அநீதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.. ஆனால் இப்படி ஒரு தண்டனை வழங்கப்படலாமா..?

அவர் பிறந்த நகரான சிற்றாவில் அவர் மரணிக்க வைக்கப்பட்ட முறை கடாபியின் தவறுகளை மூடி மறைத்துவிட்டது. உலகத்தில் இருந்து காட்டுமிராண்டிகள் இன்னமும் மறைந்துவிடவில்லை என்ற எண்ணத்தை நாகரிக உலகத்தில் உருவாக்கியுள்ளது.

போரில் ஈடுபட்டு தோல்வியடையும் ஒருவன் எத்தனை மோசமானவனாக இருந்தாலும், அவன் சரணாகதி அடைந்ததும் வெற்றி பெற்றவர்கள் நடக்க ஒரு மரபு இருக்கிறது.

அந்தப் போர் மரபை மீறிய அரசொன்று இப்போதும் சிறீலங்காவில் இருக்கிறது.. அந்த அரசும் இப்போது கடாபி கொலைக்கு விளக்கம் கேட்டிருக்கிறது..

கடாபி கொலைக்கு விளக்கம் வேண்டுமென்று எவனும் கேட்கலாம் ஆனால் சிறீலங்கா கேட்கலாமா..?

கேட்டிருக்கிறது.. எப்படி..?

இசைப்பிரியாக்களின் உடலத்தை வகிறி எடுத்த வாயால் கேட்டிருக்கிறது..

ஏன் கேட்டது.. இந்தக் கேள்வியால் தானும் தூயவனாக மாறிவிடலாமா என்ற நப்பாசையால் கேட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலை முன்னுதாரணமாக வைத்துத்தான் முகம்மர் கடாபி கொல்லப்பட்டுள்ளார் என்று உலகம் உதாரணம் காட்ட முன்னர் தானே ஓடிவந்து ஒரு முந்திரிக் கொட்டைக் கேள்வியைக் கேட்டுள்ளது.

அது மட்டுமா..?

அவர் மரணமடைய வைக்கப்பட்ட முறையை மூடி மறைக்கும் நாடகங்கள் சிறீலங்கா போலவே லிபியாவிலும் திரை மறைவில் ஆரம்பித்துவிட்டன.. சற்று முன் முடிந்துள்ள கடாபியின் பிரேத பரிசோதனை அறிக்கை அவருடைய மூளைக்குள் ஒரு துப்பாக்கிக்குண்டு கிடந்ததாகத் தெரிவிக்கிறது.

ஒரு குண்டா கிடந்தது.. மற்றய குண்டுகள் எங்கே…?

பிரேத பரிசோதனை அறிக்கை கடாபியை கொன்ற முறைமைக்கு எதிரான போர்க்குரலாக ஏன் வெளிவரவில்லை.

முள்ளிவாய்க்காலில் மண்ணள்ளிப்போட்டு உண்மைகள் மறைக்கப்பட்டது போல கடாபியின் மரணத்தில் உள்ள போர்க்குற்றமும் மண்ணள்ளி மூடி மறைக்கப்படலாம் என்பதை இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை காட்டுகிறது.

ஒருவர் இறந்த பின்னர் அவருடைய உடலம் பூமிக்கும் ஆகாயத்திற்கும் பொதுவானதாகிறது. அதை அவமதிக்கும் உரிமை மனித குலத்திற்குக் கிடையாது. ஆனால் அவருடைய சடலத்தின் முடியைப் பிடித்து உலுக்கியபடி போராளிக் குழுவினர் கிலீரிட்டு அலறியபடி நிற்பது மனிதர்களாகப் பிறந்தவர்களை வெட்கித் தலை குனிய வைக்கிறது.

இப்படியொரு காட்டுமிராண்டிக் கூட்டத்தை ஆட்சியில் அமர்த்தவா நேட்டோ இத்தனையாயிரம் குண்டுகளை வீசியது என்ற கேள்வியை அந்தக் காட்சி ஏற்படுத்துகிறது.

கடாபி மோசமான கொடிய மனிதர்தான்… இருந்தாலும்…

கடாபிக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாட்டை நேட்டோ காட்டப்போகிறது..? இதுதான் நம்முன் எழும் அவலமான கேள்வி.

இப்போது அதே போராளிகள் குழு இஸ்லாமிய ஸாரியார் சட்டங்களின்படி நாட்டை நிர்வாகிக்கப் போவதாகக் கூறுகிறது. தன்னுடைய மத ஒழுக்கத்தைவிட மற்றைய மத ஒழுக்கங்களை அனுமதிக்க மறுக்கும் ஸாரியார் விதிகள் எப்படி பல்வேறு குழுக்கள் கொண்ட ஒரு நாட்டில் ஜனநாயகத்தை மலர்விக்கப்போகிறது..?

இதே ஸாரியார் சட்டங்களால் ஈரானில் நடக்கும் மத சர்வாதிகார ஆட்சியைவிட, துருக்கியில் நடக்கும் போலி ஜனநாயக சர்வாதிகார ஆட்சியைவிட வேறென்ன புதுமையைத் தரப்போகிறது லிபியாவின் புதிய ஆட்சி என்பது அடுத்த கேள்வியாகும்..?

நேட்டோ தனது குண்டுவீச்சுக்களைப்போல இந்த விவகாரத்தையும் இத்துடன் முடித்துக்கொள்ள முடியாது…

கடாபி கொல்லப்பட்ட போது கொலை முடிவுகளை எடுத்த கட்டளைத் தளபதிகள், அங்கு நின்ற படைவீரர்கள் அத்தனைபேரையும் சர்வதேச போர்க்குற்ற நீதி மன்றில் நிறுத்த வேண்டும்.

இல்லாவிட்டால்…

இரண்டு பேரவலங்கள் நடக்கும்..

ஒன்று..

லிபியாவில் வெற்றி பெற்ற போராட்டம் மிக விரைவில் வீழ்ச்சியடைய நேரிடும்.

இரண்டு..

நேட்டோ போட்ட குண்டுகளின் கதை யானை தன் தலையில் மண்ணள்ளிப் போட்டதைப்போல தனக்குத்தானே வீசிய குண்டுகளாக மாறும்.

மறுபுறம்…

கடாபிக்காக நீதி கேட்டுள்ள சிறீலங்கா அரசை அன்று தண்டிக்க மறுத்த காரணத்தால்தான் இன்று லிபியால் இந்தச் சீத்துவக்கேடு நடந்திருக்கிறது என்பதை ஐ.நா செயலர் உணர வேண்டும்..

மானிடம் இன்னொரு குட்டிபோட ஓராயிரம் வருடம் செல்லும்… ஆனால் காட்டுமிராண்டித்தனமோ பார்த்திருக்க பன்றிபோல பதினாறு, பதினாறாய் குட்டிகள் போடும்… சிறீலங்காவில் நடந்த காட்டுமிராண்டித்தனம் எவ்வளவு வேகமாக உலகம் முழுதும் குட்டிகளை வீசுகிறது என்பதை ஐ.நா அவதானிக்க வேண்டும்.

சிறீலங்காவின் வெள்ளைக்கொடி விவகாரமும், கடாபி கொலையும் ஒரேவிதமான குற்றச்செயலே என்று அமெரிக்க மனித உரிமைக்கழகம் கூறியிருப்பதை ஐ.நா கவனிக்க வேண்டும்.

ஐ.நாவுக்கும் அதன் அதிகாரங்களுக்கும் மேல் உலகிற்கு ஒரு நீதி இருக்கிறது.

மனிதனை தாங்கி நிற்கும் புவியின் மேற்பரப்பில் நடக்கக் கூடிய அநீதிகளுக்கும், அக்கிரமங்களுக்கும் ஓர் எல்லை இருக்கிறது.. அதை மீறிய இரண்டு நாடுகளும் தண்டிக்கப்பட வேண்டும்.. இல்லை மூன்றாவது நாட்டிலும் இதுதான் நடக்கும்…

யுத்தக்குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை…!

புதிய உலகம் அதை யாதொரு சமரசத்திற்கும் இடமின்றி நிறைவேற்ற வேண்டும்..!

உலகம் வெப்பமாவதால் பேரழிவுகள் வருமென்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்..!!

ஆனால்

உலகத்தை மாபெரும் நெருப்பாக எரிய வைத்திருக்கிறது சிறீலங்கா வன்னியிலும், லிபியாவின் சிற்றாவிலும் நடந்த நிகழ்வுகள்.

முள்ளி வாய்க்காலில் நடந்ததும், மும்மர் கடாபிக்கு நடந்ததும் ஒன்றுதான்..!

போர்க்குற்றவாளி சிறீலங்கா கேட்டது போல உலக நாடுகள் எல்லாம் தான் செய்த தவறை மறந்து கேள்வி கேட்டால் உலகத்தின் மானிட வரலாற்றின் கெதி என்னவாகும்..?

உலகம் போர்க்குற்றத்திற்கு தப்பாது தண்டனை வழங்க வேண்டும்…!! தவறினால் இயற்கை அதை வழங்கும்..!!

இயற்கையின் தண்டனை மனிதனின் தண்டனையைவிட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும்..

அது..

குற்றவாளிகளை மட்டுமல்ல.. அதிகாரம் இருந்தும் தண்டனையை வழங்க மறுக்கும் உலக வல்லரசுகளின் ஆணி வேரையும் பிடுங்கி வீசிவிடும்..

ஆலைகள் மட்டும் உலகத்தை வெப்பமாக்கவில்லை.. காட்டுமிராண்டி மனிதர்கள் செய்யும் வேலைகளும் உலகத்தை வெப்பமாக்குகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

மனிதர்களை அல்ல மிருகங்களைக்கூட கடாபியைக் கொன்றது போல கொல்லக்கூடாது.

மனித நாகரிகம் வெட்கத்தால் தலை குனிகிறது…

அலைகள்

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா?


கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் என்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார்.

அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது. சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.

இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான். அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் கான்சரை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள்.

அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்கவைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். அபிக்குமரனால் தமிழ் இனத்துக்கே பெருமை என்றால் அது மிகையாகாது.

கருணாவின் பிரிவின்போது மூன்றாம் தரப்பொன்றிடம் ஆயுதங்கள் கைமாறின


கருணாவின் பிரிவின்போது மூன்றாம் தரப்பொன்றிடம் ஆயுதங்கள் கைமாறியிருப்பதாக கோத்தாபய தெரிவிக்கின்றார்.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்த ஆயுதங்களில் ஒரு தொகுதி வேறு நபர்களின் கையில் சிக்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கருணாவினால் இரண்டாகப் பிரிவடையச் செய்யப்பட்ட போது புலிகளிடமிருந்த பெருந்தொகையான ஆயுதங்களை வேறொரு அணியினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையின் கீழ் இன்று நாடு முழுவதும் சட்ட விரோதமான முறையில் காணப்படும் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது நேர்காணலின்போது மேலும் தெரிவித்துள்ளார்.

"கூட்டாளி" திரைப்பட முன்னோட்டம்

இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இந்த திரைப்படம்!

இந்த கதையின் சாராம்சம்.

" ஒரு சந்நியாசின் இலக்கு
இறைவனை கண்டடைவது.

ஒடும் நதியின் இலக்கு
சமுத்திரத்தை சென்றடைவது.

ஒரு போராளியின் இலக்கு
பூர்வீகத்தை வென்றெடுப்பதே "

வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும்.

சர்வாதிகாரத்தின் ஆயுள்?
அற்ப ஆயுள் என்பதே அது.

போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது.

இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள்.

அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்து அடக்குமுறையை அப்புறப்படுத்தி மக்களாட்சி மலர்ந்திட செய்திருக்கிறார்கள்.

அதில் சிலர் யுத்தகளத்தில் வீரமரணத்தையும் சந்தித்திருகின்றார்கள். ஆனால் அந்தமாசற்ற தலைவர்கள் இட்டு சென்றபாதையில் பல்லாயிரம் வீரர்கள் தொடர்ந்து போராட்டத்தை கையிலெடுத்து அறவழியோ? ஆயுதவழியோ? விடுதலைபோரை சிறந்தமுறையில் கையாண்டு அதில் ஈடு இணையில்லா வெற்றியை மக்களுக்கு பெற்றுத்தந்திருக்கின்றார்கள். இது உலகறிந்த உண்மை. இக்கதையில் வரும் நாயகனும் மேற்கோள் காட்டிய பல்லாயிரம் வீரர்களுள் ஒருவன்.

இத்திரைப்படத்தில் மிகச்சிறப்பான தித்திப்பான செய்தி ஈழத்து சுதந்திர பாடல் 5.34 நிமிடம் இடம் பெற்றுள்ளது தான்.

இப்படத்தின் கதை, வசனம், பாடலை வினுபாரதி எழுதியுள்ளார். இசை -- நித்யன்கார்த்திக், ஒளிப்பதிவு -- அகர்செங்குட்டுவன், எடிட்டிங் -- மோகன், படத்தொகுப்பு -- மோகன், சண்டைபயிற்சி -- கஜினி குபேந்தர் மற்றும் எண்ணற்ற நடிகர், நடிகைகள் பங்கு பெற்றுள்ளனர்.

இத்திரைப்படத்தில் அன்பு, பாசம், ஏக்கம், துரோகம், கோபம், வீரம், முடிவு என அனைத்தையும் எதார்த்தமான உண்மைகளை அப்பட்டமாக கொண்டு அமைந்துள்ளது. இதன் தயாரிப்பு -- திரைக்கதை -- இயக்கம் சி.நிரோஜன் D.F.Tech. இது இவரின் மூன்றாவது படைப்பு. இவர் ஈழத்து இளம் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது.

திரைப்படம் விரைவில்....



கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 10)

நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக,

விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத்தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும்.

அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், ‘சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்சினைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு சான்றுகளின்படி, குற்றமுறு சதியின் உறுப்பினர் ஹரிபாபுவும் (பத்திரிகைப் புகைப்படக்காரர்) அங்கு கூடவே இருந்துள்ளார்.

அவருக்கும் நன்றாகத் தமிழ் பேசத் தெரியும். ‘காங்கிரஸ் பிரதேசப் பொறுப்பாளர் லதா கண்ணன் மற்றும் அவர் மகள் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்தில் நட்பாக இருந்தனர். (இதற்கு ஹரிபாபு எடுத்த புகைப்படமும் ஆதாரமாக உள்ளது).

ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க நின்ற கூட்டத்துக்குள் சிவராசன், தாணுவை நிறுத்த அவர்கள் முயற்சி செய்தார்கள். அதே நேரம் நளினியும் சுபாவும் கூட்ட இடத்துக்குப் போன பின் அங்கு இருந்த பெண்கள் பகுதியில் போய் அமர்ந்துகொண்டனர்.

ராஜீவ் காந்தி வந்து இறங்கியவுடன் நளினியை சுபா அவசரகதியில் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டார். அப்போதுதான் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது!’ என்று அரசுத் தரப்பு ஆவணங்களிலேயே எழுதப்பட்டு உள்ளது.

சிவராசனுக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே உதவக்கூடிய நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? ராஜீவ் காந்தியை தாணு நெருங்க சிவராசனே முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

தாணு மாலை அணிவிக்க அனுமதி வாங்கியதும், ராஜீவ் காந்தி அருகில் அவர் நெருங்க மறைப்புக் கொடுத்ததும் சிவராசன்தான். ராஜீவ் காந்தி வந்து இறங்கிய உடனேயே நளினி அந்த இடத்தில் இருந்து சுபாவினால் வேகமாகக் கூட்டி வரப்பட்டார்.

இத்தனை விடயங்களையும் அடித்துச் சொல்லும் அரசுத் தரப்பு, எந்த விதத்தில் ராஜீவ் கொலையில் நளினிக்கும் பங்களிப்பு இருப்பதாகச் சொல்கிறது? நளினிக்கே கொலைச் சதி தெரிந்திருக்கவில்லை என்கிறபோது, எனக்கு எப்படி இதுபற்றித் தெரிந்திருக்கும்? நான் எந்த விதத்தில் அவரைக் கட்டாயப்படுத்தி இருக்க முடியும்?

7.5.91 அன்று சிவராசன், சுபா, தாணு ஆகியோருடன் நானும் நளினியும் சென்னையில் நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பொதுக் கூட்டத்துக்குப் போனோம் என்றும், அங்கே கொலைச் சதிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும் சித்திரிக்கிறது அதிகாரிகள் தரப்பு. அந்த கூட்டத்துக்குப் போனோம் என்பதற்கு எங்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும்தான் அதிகாரிகள் ஆதாரமாக வைக்கிறார்கள்

ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய அந்தக் கூட்டத்தில் ஒத்திகை நடந்ததாகச் சொல்வது கொஞ்சமாவது பொருந்தக்கூடியதா? சரி, சிவராசன் அதனை ஒத்திகைத் தளமாகவே பாவித்து இருந்தாலும், அதை உறுதியாகச் சொல்ல அரசுத் தரப்பில் என்ன சாட்சி இருக்கிறது? ஆனால், என்னையும் நளினியையும் திட்டமிட்டு ஏமாற்றவே வி.பி.சிங் கூட்டத்துக்கு சிவராசன் அழைத்துக்கொண்டு போனார் என்பதற்கு நிறையச் சான்றுகள் இருக்கின்றன.

கொடூரப் படுகொலையை நிகழ்த்த, தான் வரவில்லை என்பதையும், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் தனது எண்ணம் என்பதையும் சிவராசன் எங்களிடம் ஏற்படுத்த முயன்று இருக்கிறார். அதில், வெற்றியும் பெற்றார். ‘வி.பி.சிங் கூட்டத்துக்குப் போனது மாதிரிதான் ராஜீவ் காந்தி கூட்டத்துக்கும் போக இருக்கிறோம்’ என்பதையும் சிவராசன் நம்பவைத்தார்.

சிவராசன் மேலிடத்துக்கு அனுப்பிய வயர்லெஸ் செய்தியைச் சுட்டிக்காட்டும் அரசுத் தரப்பு, ‘எதிர் காலத்தில் இயக்கத்துக்கான ஆதரவை வளர்க்க மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கிறோம் என்று தான் சொல்லி இருக்கிறோம்.

எம் மூவரைத் தவிர (சிவராசன், தாணு, சுபா) வேறு யாருக்கும் விஷயம் தெரியாது’ என 7.5.91 அன்று வி.பி.சிங் பொதுக் கூட்டத்துக்குப் போய் வந்த பிறகு தகவல் அனுப்பியதாக சொல்லப்பட்டு இருக்கிறது. கொலைச் சதி குறித்தோ, அதற்கான ஏற்பாடு கள் குறித்தோ சிவராசன் எங்களிடம் ஏதும் சொல்லவில்லை என்பதற்கு, இந்த வார்த்தைகள் போதாதா?

போலிப் புகைப்படக்காரர் அடையாள அட்டை, ஹரிபாபுவினால் எனக்குத் தயார் செய்து தரப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்கிறது. எதற்காக அந்த அடையாள அட்டை எனக்கு? அதை எங்கு, எப்போது, யார் தயார் செய்து கொடுத்தது? அதில் உள்ள எனது புகைப்படம் எங்கு எடுக்கப் பட்டது? யாரால் எடுக்கப்பட்டது? அதில் உள்ள கையப்பம் யாருடையது? எனது கைரேகை ஏதும் இருந்ததா? இப்படி எத்தனை எத்தனைக் கேள்விகள்… இது குறித்த விசாரணைகளை அதிகாரிகள் ஏன் மேற்கொள்ளவில்லை? சரி, அதெல்லாம் கிடக்கட்டும்.

ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் அந்த அடையாள அட்டையை எந்த விதத்தில் நான் பயன்படுத்தினேன்? இந்தியாவின் மிக உயரிய தலைவர் கொலை யான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவனின் போலியான அடையாள அட்டை கிடைத்தால், அது சம்பந்தமான அனைத்து ரிஷிமூலங்களையும் அதிகாரிகள் தோண்டித் துருவி இருக்க மாட்டார்களா?

எங்களைக் குற்றவாளியாக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, விசாரணை அதிகாரிகள் விரித்த வலைகளில் ஒன்றுதான் அந்த அடையாள அட்டையும். இதை எல்லாம் சொல்வதால், என் மீதான தவறுகளை நான் சரிக்கட்ட நினைப்பதாகவோ, சிவராசன் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்வதாகவோ தயவுசெய்து யாரும் நினைக்க வேண்டாம்.

இனி தப்பித்து நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? காலையில் அலுவலகத்துக்கு வந்து மாலை 6 மணிக்குள் இல்லம் திரும்பத் தாமதமானால் உங்கள் மனம் எப்படி எல்லாம் தவித்துவிடுகிறது… ‘அப்பா கிளம்பிட்டேன்டா செல்லம்… 10 நிமிஷத்தில் வந்துடுவேன்’ எனக் குழந்தைகளை சமாதானப் படுத்துவதும், ‘கோவிச்சுக்காதம்மா, இந்தா வந்துட்டேன்’ என மனைவியிடம் உருகுவதும் ஒவ்வொரு குடும்பத் தலைவனும் நடத்தும் பாசப் பகிர்வுதானே? 21 வருடங்களாக என் குடும்பத்தைப் பிரிந்து கிடக்கிற நான் எத்தகைய வார்த்தைகளால் அவர்களை சமாதானப்படுத்த முடியும்? ‘அப்பா…’ எனத் தெளிவான உச்சரிப்பில் அழைக்கும் குரலைக் கேட்பதற்கு முன்னரே மகளைப் பிரிந்து தவித்தோமே… இரண்டு வயதில் எங்களிடம் இருந்து ஆரித்ரா பிரித்து அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வை ஒரு தகப்பனாக தயைகூர்ந்து நினைத்துப் பாருங்கள்.

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அவள் இருக்கிறாள் என்பதைத் தவிர்த்து, எங்களுக்கு என்ன ஆறுதல்? ஒருவன் கொலையே செய்திருந்தாலும், அதற்கான தண்டனையைக் காட்டிலும், அதிகமான தண்டனையை நாங்கள் அனுபவித்துவிட்டோம். இளமை தொலைத்து – இல்லம் இழந்து – உலகம் பாராது – உணர்வுகள் மழுங்கிய உயிராக வாழும் வாழ்வெல்லாம் ஒரு வாழ்வா? அடைபட்டு வாழ்தல்தான் அதிகபட்சத் துயரம். உலகத்தின் மிகச் சிறிய கூண்டுக்குள் முடங்கி எதையுமே பாராது வாழும் வாழ்க்கை எவருக்குமே அமையக் கூடாது.

நல்லவர்கள்’ எனச் சொல்லி இனி தப்பிப்பதால் மட்டும் நாங்கள் இழந்த எல்லாமும் எங்களுக்குக் கிடைத்துவிடப்போகிறதா? விசாரணை அதிகாரிகளிடம் எவ்வளவோ விளக்கிச் சொல்லியும், கடிதமாக மனுவாகக் கதறித் தீர்த்தும் நீங்காத எங்களின் சோதனை இப்போது விளக்கமாக எழுதுவதால் நீங்கப்போகிறதா? தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எங்களின் நியாயங்களை நாங்கள் எழுதவில்லை. மரணமே நிகழ்ந்தாலும், என்றைக்காவது எங்களின் விளக்கம் ஏற்கப்படும் என்கிற நிறைவுக்காகவே இதைச் சொல்கிறேன்.

நாங்கள் அணு அணுவாக மரணத்தை அனுபவித்தாயிற்று… ‘இன்று, நாளை’ என ஏங்கி ஏங்கியே எல்லாத் துயரங்களையும் கடந்தாயிற்று… வெளியே வந்தாலும் ‘உயிர் மட்டும் மிச்சம்’ என்கிற எண்ணத்தைத் தவிர, எங்களிடத்தில் வேறு என்ன உணர்வு ஏற்பட்டுவிடப் போகிறது? ஆனாலும், இந்த உலகத்தின் வெளிப்பரப்பில் நீந்த முடியாதா என்கிற ஏக்கம் அடிமனதில் இப்போதும் கிடக்கிறது. அதற்குக் காரணம், எங்களின் அன்பு மகள் ஆரித்ரா.

”அப்பா உங்களை எப்போ நான் பார்ப்பேன்? உங்களின் தூக்குக்கு நாள் குறிக்கப்பட்டது தெரிந்து நான் எப்படி எல்லாம் அழுதேன் என்பது தெரியுமா அப்பா? பாட்டிம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை… யாருமே இங்கு சாப்பிடவில்லை தூங்கவில்லை. நமக்கு ஏன் அப்பா இப்படி ஒரு வாழ்க்கை? இரவு முழுக்கத் தூக்கம் இல்லாததால், உங்களின் கடிதங்களையும் ஓவியங்களையும் மட்டுமே தடவிப் பார்க்கிறேன். கற்பனைக் கதைகளில்கூட இப்படி ஒரு துயர வாழ்க்கை இருக்குமா என்பது தெரியவில்லை அப்பா. அம்மா ஓர் இடத்தில்… அப்பா ஓர் இடத்தில்… மகள் ஓர் இடத்தில் என எதற்காக இந்த வாழ்க்கையை வாழ்கிறோம்?

நீங்கள் ஒரு தந்தையாக எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் உறவுகளே எனக்குச் செய்கிறார்கள். ஆனால், அப்பா எனக் கட்டிப் பிடித்து உங்கள் மடியில் புரளும் நாளுக்காக ஏங்கும் என் பாசத்தைக் குடும்பத்தினரால் கொடுக்க முடியுமா? உலகத்திலேயே இப்படி ஒரு பாவப்பட்ட ஜென்மம் என்று என்னைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்கள் அப்பா. உங்களைப் பார்க்காத ஒவ்வொரு நாளுமே எனக்கு நரகம்தான். சாப்பாடு, படிப்பு, தூக்கம் என எதையுமே செய்ய முடியாமல் தவிக்கும் என் நிலைமை என்றைக்குத்தான் சரியாகுமோ?” – இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்கிறாள் ஆரித்ரா.

வரிக்கு வரி அப்பா என்கிற வார்த்தையை அவள் சேர்த்து எழுதி இருக்கும் பக்குவத்தில் அவளுடைய அபரிமிதமான பாசத்தை உணர்கிறேன். மகளின் கையெழுத்தை மடியில்வைத்துத் தடவிப் பார்க்கிறேன். அதில் உள்ள ஒவ்வோர் எழுத்திலும் வழிகிற துயரத்துக்கு பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறேன்.

அப்பா…’ என அழைக்கிற மறு கணத்திலேயே அவள் முன்னால் போய் நிற்க முடியாதா என தடுமாறித் தவிக்கிறது மனது. மகளே… நீ இருக்கும் திசை நோக்கி மண்டியிட்டு அழுகிறேன். உன் ஒவ்வொரு நாள் வளர்ச்சியிலும் உச்சி முகர்ந்து சிலிர்த்திருக்க வேண்டியவன், உன்னைக் காணாது கம்பிகளுக்குள் கதறிக்கிடக்கிறேன்.

‘எங்க அப்பாவைக் காப்பாத்துங்க’ என மீடியாக்களிடம் நீ கதறியதாகக் கேள்விப்பட்டேன். அம்மாவின் வயிற்றில் இரு மாதக் கருவாக இருந்தபோது குண்டு வெடிப்பு சத்தத்தில் உனக்கு என்ன ஆனதோ எனப் பயந்தேன். அம்மாவின் கருப்பைச் சுவரைக் கெட்டியாகப் பிடித்தபடி, உம்மைக் காத்துக்கொண்ட எம் மகளே… இரு மாதக் கருவிலேயே கற்றுக்கொண்ட அந்தப் பக்குவம்தான் இப்போதும் உன்னைக் காப்பாற்றுகிறதோ என்னவோ… எங்கள் வயிற்றில் பிறந்த பாவத்தாலே இத்தனை சுமைகளுக்கு ஆளாகித் தவிக்கிறாயே… உன்னை நோக்கி அழ மட்டுமே இந்த அப்பனால் முடிகிறது.

காயங்கள் ஆறாது...

ஜூனியர் விகடன்

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 10)

நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக,

விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத்தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும்.

அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், ‘சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்சினைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு சான்றுகளின்படி, குற்றமுறு சதியின் உறுப்பினர் ஹரிபாபுவும் (பத்திரிகைப் புகைப்படக்காரர்) அங்கு கூடவே இருந்துள்ளார்.

அவருக்கும் நன்றாகத் தமிழ் பேசத் தெரியும். ‘காங்கிரஸ் பிரதேசப் பொறுப்பாளர் லதா கண்ணன் மற்றும் அவர் மகள் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்தில் நட்பாக இருந்தனர். (இதற்கு ஹரிபாபு எடுத்த புகைப்படமும் ஆதாரமாக உள்ளது).

ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க நின்ற கூட்டத்துக்குள் சிவராசன், தாணுவை நிறுத்த அவர்கள் முயற்சி செய்தார்கள். அதே நேரம் நளினியும் சுபாவும் கூட்ட இடத்துக்குப் போன பின் அங்கு இருந்த பெண்கள் பகுதியில் போய் அமர்ந்துகொண்டனர்.

ராஜீவ் காந்தி வந்து இறங்கியவுடன் நளினியை சுபா அவசரகதியில் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டார். அப்போதுதான் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது!’ என்று அரசுத் தரப்பு ஆவணங்களிலேயே எழுதப்பட்டு உள்ளது.

சிவராசனுக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே உதவக்கூடிய நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? ராஜீவ் காந்தியை தாணு நெருங்க சிவராசனே முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

தாணு மாலை அணிவிக்க அனுமதி வாங்கியதும், ராஜீவ் காந்தி அருகில் அவர் நெருங்க மறைப்புக் கொடுத்ததும் சிவராசன்தான். ராஜீவ் காந்தி வந்து இறங்கிய உடனேயே நளினி அந்த இடத்தில் இருந்து சுபாவினால் வேகமாகக் கூட்டி வரப்பட்டார்.

இத்தனை விடயங்களையும் அடித்துச் சொல்லும் அரசுத் தரப்பு, எந்த விதத்தில் ராஜீவ் கொலையில் நளினிக்கும் பங்களிப்பு இருப்பதாகச் சொல்கிறது? நளினிக்கே கொலைச் சதி தெரிந்திருக்கவில்லை என்கிறபோது, எனக்கு எப்படி இதுபற்றித் தெரிந்திருக்கும்? நான் எந்த விதத்தில் அவரைக் கட்டாயப்படுத்தி இருக்க முடியும்?

7.5.91 அன்று சிவராசன், சுபா, தாணு ஆகியோருடன் நானும் நளினியும் சென்னையில் நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பொதுக் கூட்டத்துக்குப் போனோம் என்றும், அங்கே கொலைச் சதிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும் சித்திரிக்கிறது அதிகாரிகள் தரப்பு. அந்த கூட்டத்துக்குப் போனோம் என்பதற்கு எங்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும்தான் அதிகாரிகள் ஆதாரமாக வைக்கிறார்கள்

ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய அந்தக் கூட்டத்தில் ஒத்திகை நடந்ததாகச் சொல்வது கொஞ்சமாவது பொருந்தக்கூடியதா? சரி, சிவராசன் அதனை ஒத்திகைத் தளமாகவே பாவித்து இருந்தாலும், அதை உறுதியாகச் சொல்ல அரசுத் தரப்பில் என்ன சாட்சி இருக்கிறது? ஆனால், என்னையும் நளினியையும் திட்டமிட்டு ஏமாற்றவே வி.பி.சிங் கூட்டத்துக்கு சிவராசன் அழைத்துக்கொண்டு போனார் என்பதற்கு நிறையச் சான்றுகள் இருக்கின்றன.

கொடூரப் படுகொலையை நிகழ்த்த, தான் வரவில்லை என்பதையும், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் தனது எண்ணம் என்பதையும் சிவராசன் எங்களிடம் ஏற்படுத்த முயன்று இருக்கிறார். அதில், வெற்றியும் பெற்றார். ‘வி.பி.சிங் கூட்டத்துக்குப் போனது மாதிரிதான் ராஜீவ் காந்தி கூட்டத்துக்கும் போக இருக்கிறோம்’ என்பதையும் சிவராசன் நம்பவைத்தார்.

சிவராசன் மேலிடத்துக்கு அனுப்பிய வயர்லெஸ் செய்தியைச் சுட்டிக்காட்டும் அரசுத் தரப்பு, ‘எதிர் காலத்தில் இயக்கத்துக்கான ஆதரவை வளர்க்க மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கிறோம் என்று தான் சொல்லி இருக்கிறோம்.

எம் மூவரைத் தவிர (சிவராசன், தாணு, சுபா) வேறு யாருக்கும் விஷயம் தெரியாது’ என 7.5.91 அன்று வி.பி.சிங் பொதுக் கூட்டத்துக்குப் போய் வந்த பிறகு தகவல் அனுப்பியதாக சொல்லப்பட்டு இருக்கிறது. கொலைச் சதி குறித்தோ, அதற்கான ஏற்பாடு கள் குறித்தோ சிவராசன் எங்களிடம் ஏதும் சொல்லவில்லை என்பதற்கு, இந்த வார்த்தைகள் போதாதா?

போலிப் புகைப்படக்காரர் அடையாள அட்டை, ஹரிபாபுவினால் எனக்குத் தயார் செய்து தரப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்கிறது. எதற்காக அந்த அடையாள அட்டை எனக்கு? அதை எங்கு, எப்போது, யார் தயார் செய்து கொடுத்தது? அதில் உள்ள எனது புகைப்படம் எங்கு எடுக்கப் பட்டது? யாரால் எடுக்கப்பட்டது? அதில் உள்ள கையப்பம் யாருடையது? எனது கைரேகை ஏதும் இருந்ததா? இப்படி எத்தனை எத்தனைக் கேள்விகள்… இது குறித்த விசாரணைகளை அதிகாரிகள் ஏன் மேற்கொள்ளவில்லை? சரி, அதெல்லாம் கிடக்கட்டும்.

ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் அந்த அடையாள அட்டையை எந்த விதத்தில் நான் பயன்படுத்தினேன்? இந்தியாவின் மிக உயரிய தலைவர் கொலை யான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவனின் போலியான அடையாள அட்டை கிடைத்தால், அது சம்பந்தமான அனைத்து ரிஷிமூலங்களையும் அதிகாரிகள் தோண்டித் துருவி இருக்க மாட்டார்களா?

எங்களைக் குற்றவாளியாக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, விசாரணை அதிகாரிகள் விரித்த வலைகளில் ஒன்றுதான் அந்த அடையாள அட்டையும். இதை எல்லாம் சொல்வதால், என் மீதான தவறுகளை நான் சரிக்கட்ட நினைப்பதாகவோ, சிவராசன் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்வதாகவோ தயவுசெய்து யாரும் நினைக்க வேண்டாம்.

இனி தப்பித்து நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? காலையில் அலுவலகத்துக்கு வந்து மாலை 6 மணிக்குள் இல்லம் திரும்பத் தாமதமானால் உங்கள் மனம் எப்படி எல்லாம் தவித்துவிடுகிறது… ‘அப்பா கிளம்பிட்டேன்டா செல்லம்… 10 நிமிஷத்தில் வந்துடுவேன்’ எனக் குழந்தைகளை சமாதானப் படுத்துவதும், ‘கோவிச்சுக்காதம்மா, இந்தா வந்துட்டேன்’ என மனைவியிடம் உருகுவதும் ஒவ்வொரு குடும்பத் தலைவனும் நடத்தும் பாசப் பகிர்வுதானே? 21 வருடங்களாக என் குடும்பத்தைப் பிரிந்து கிடக்கிற நான் எத்தகைய வார்த்தைகளால் அவர்களை சமாதானப்படுத்த முடியும்? ‘அப்பா…’ எனத் தெளிவான உச்சரிப்பில் அழைக்கும் குரலைக் கேட்பதற்கு முன்னரே மகளைப் பிரிந்து தவித்தோமே… இரண்டு வயதில் எங்களிடம் இருந்து ஆரித்ரா பிரித்து அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வை ஒரு தகப்பனாக தயைகூர்ந்து நினைத்துப் பாருங்கள்.

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அவள் இருக்கிறாள் என்பதைத் தவிர்த்து, எங்களுக்கு என்ன ஆறுதல்? ஒருவன் கொலையே செய்திருந்தாலும், அதற்கான தண்டனையைக் காட்டிலும், அதிகமான தண்டனையை நாங்கள் அனுபவித்துவிட்டோம். இளமை தொலைத்து – இல்லம் இழந்து – உலகம் பாராது – உணர்வுகள் மழுங்கிய உயிராக வாழும் வாழ்வெல்லாம் ஒரு வாழ்வா? அடைபட்டு வாழ்தல்தான் அதிகபட்சத் துயரம். உலகத்தின் மிகச் சிறிய கூண்டுக்குள் முடங்கி எதையுமே பாராது வாழும் வாழ்க்கை எவருக்குமே அமையக் கூடாது.

நல்லவர்கள்’ எனச் சொல்லி இனி தப்பிப்பதால் மட்டும் நாங்கள் இழந்த எல்லாமும் எங்களுக்குக் கிடைத்துவிடப்போகிறதா? விசாரணை அதிகாரிகளிடம் எவ்வளவோ விளக்கிச் சொல்லியும், கடிதமாக மனுவாகக் கதறித் தீர்த்தும் நீங்காத எங்களின் சோதனை இப்போது விளக்கமாக எழுதுவதால் நீங்கப்போகிறதா? தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எங்களின் நியாயங்களை நாங்கள் எழுதவில்லை. மரணமே நிகழ்ந்தாலும், என்றைக்காவது எங்களின் விளக்கம் ஏற்கப்படும் என்கிற நிறைவுக்காகவே இதைச் சொல்கிறேன்.

நாங்கள் அணு அணுவாக மரணத்தை அனுபவித்தாயிற்று… ‘இன்று, நாளை’ என ஏங்கி ஏங்கியே எல்லாத் துயரங்களையும் கடந்தாயிற்று… வெளியே வந்தாலும் ‘உயிர் மட்டும் மிச்சம்’ என்கிற எண்ணத்தைத் தவிர, எங்களிடத்தில் வேறு என்ன உணர்வு ஏற்பட்டுவிடப் போகிறது? ஆனாலும், இந்த உலகத்தின் வெளிப்பரப்பில் நீந்த முடியாதா என்கிற ஏக்கம் அடிமனதில் இப்போதும் கிடக்கிறது. அதற்குக் காரணம், எங்களின் அன்பு மகள் ஆரித்ரா.

”அப்பா உங்களை எப்போ நான் பார்ப்பேன்? உங்களின் தூக்குக்கு நாள் குறிக்கப்பட்டது தெரிந்து நான் எப்படி எல்லாம் அழுதேன் என்பது தெரியுமா அப்பா? பாட்டிம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை… யாருமே இங்கு சாப்பிடவில்லை தூங்கவில்லை. நமக்கு ஏன் அப்பா இப்படி ஒரு வாழ்க்கை? இரவு முழுக்கத் தூக்கம் இல்லாததால், உங்களின் கடிதங்களையும் ஓவியங்களையும் மட்டுமே தடவிப் பார்க்கிறேன். கற்பனைக் கதைகளில்கூட இப்படி ஒரு துயர வாழ்க்கை இருக்குமா என்பது தெரியவில்லை அப்பா. அம்மா ஓர் இடத்தில்… அப்பா ஓர் இடத்தில்… மகள் ஓர் இடத்தில் என எதற்காக இந்த வாழ்க்கையை வாழ்கிறோம்?

நீங்கள் ஒரு தந்தையாக எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் உறவுகளே எனக்குச் செய்கிறார்கள். ஆனால், அப்பா எனக் கட்டிப் பிடித்து உங்கள் மடியில் புரளும் நாளுக்காக ஏங்கும் என் பாசத்தைக் குடும்பத்தினரால் கொடுக்க முடியுமா? உலகத்திலேயே இப்படி ஒரு பாவப்பட்ட ஜென்மம் என்று என்னைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்கள் அப்பா. உங்களைப் பார்க்காத ஒவ்வொரு நாளுமே எனக்கு நரகம்தான். சாப்பாடு, படிப்பு, தூக்கம் என எதையுமே செய்ய முடியாமல் தவிக்கும் என் நிலைமை என்றைக்குத்தான் சரியாகுமோ?” – இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்கிறாள் ஆரித்ரா.

வரிக்கு வரி அப்பா என்கிற வார்த்தையை அவள் சேர்த்து எழுதி இருக்கும் பக்குவத்தில் அவளுடைய அபரிமிதமான பாசத்தை உணர்கிறேன். மகளின் கையெழுத்தை மடியில்வைத்துத் தடவிப் பார்க்கிறேன். அதில் உள்ள ஒவ்வோர் எழுத்திலும் வழிகிற துயரத்துக்கு பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறேன்.

அப்பா…’ என அழைக்கிற மறு கணத்திலேயே அவள் முன்னால் போய் நிற்க முடியாதா என தடுமாறித் தவிக்கிறது மனது. மகளே… நீ இருக்கும் திசை நோக்கி மண்டியிட்டு அழுகிறேன். உன் ஒவ்வொரு நாள் வளர்ச்சியிலும் உச்சி முகர்ந்து சிலிர்த்திருக்க வேண்டியவன், உன்னைக் காணாது கம்பிகளுக்குள் கதறிக்கிடக்கிறேன்.

‘எங்க அப்பாவைக் காப்பாத்துங்க’ என மீடியாக்களிடம் நீ கதறியதாகக் கேள்விப்பட்டேன். அம்மாவின் வயிற்றில் இரு மாதக் கருவாக இருந்தபோது குண்டு வெடிப்பு சத்தத்தில் உனக்கு என்ன ஆனதோ எனப் பயந்தேன். அம்மாவின் கருப்பைச் சுவரைக் கெட்டியாகப் பிடித்தபடி, உம்மைக் காத்துக்கொண்ட எம் மகளே… இரு மாதக் கருவிலேயே கற்றுக்கொண்ட அந்தப் பக்குவம்தான் இப்போதும் உன்னைக் காப்பாற்றுகிறதோ என்னவோ… எங்கள் வயிற்றில் பிறந்த பாவத்தாலே இத்தனை சுமைகளுக்கு ஆளாகித் தவிக்கிறாயே… உன்னை நோக்கி அழ மட்டுமே இந்த அப்பனால் முடிகிறது.

காயங்கள் ஆறாது...

ஜூனியர் விகடன்

லிபியர்கள் தன்னை விரும்பியதாக கடைசி வரை நம்பினார் கடாபி: பாதுகாவலர்

லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார்.

தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் மம்மர் கடாபி என்றார் அவர்.

லிபியாவை விட்டு கடாபி தப்பிச் செல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகளும் வழிகளும் இருந்தன. இருந்தபோதும், தன் முன்னோர்கள் மரித்த அதே மண்ணில் தானும் மரிக்கவே கடாபி விரும்பினார் என்று கூறிய தாவ், அவர் இப்படி நினைத்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் இங்குள்ள சூழ்நிலையை தவறாகவே கணித்துவிட்டார். அவர் மட்டும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால், சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும் என்றார் தாவ் வருத்தத்துடன்!

கடாபி, அவரது மகன் முஸ்ஸாடிம், அவரது பாதுகாப்பு அமைச்சர் அபு பக்கர் யூனிஸ் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை லிபிய பாலைவனத்தில் அடையாளம் தெரியாத இடத்தில் புதைக்கப்பட்டனர். இருப்பினும், கடாபியின் உறவினர்கள், அவருடைய ஆதரவாளர்கள் சிலர் என ஒருசிலரை இஸ்லாமிய முறைப்படியான கடைசிக் கட்ட சடங்குகளைச் செய்ய அனுமதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சரியான இடத்தை மட்டும் காட்டிக்கொடுக்கவில்லை, அது தெரிந்தால் அந்த இடத்தை பின்னாளில் புனிதத் தலம்போல் மாற்றிவிடக்கூடும் என்ற அஞ்சியதால் அவ்வாறு செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

லிபியர்கள் தன்னை விரும்பியதாக கடைசி வரை நம்பினார் கடாபி: பாதுகாவலர்

லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார்.

தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் மம்மர் கடாபி என்றார் அவர்.

லிபியாவை விட்டு கடாபி தப்பிச் செல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகளும் வழிகளும் இருந்தன. இருந்தபோதும், தன் முன்னோர்கள் மரித்த அதே மண்ணில் தானும் மரிக்கவே கடாபி விரும்பினார் என்று கூறிய தாவ், அவர் இப்படி நினைத்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் இங்குள்ள சூழ்நிலையை தவறாகவே கணித்துவிட்டார். அவர் மட்டும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால், சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும் என்றார் தாவ் வருத்தத்துடன்!

கடாபி, அவரது மகன் முஸ்ஸாடிம், அவரது பாதுகாப்பு அமைச்சர் அபு பக்கர் யூனிஸ் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை லிபிய பாலைவனத்தில் அடையாளம் தெரியாத இடத்தில் புதைக்கப்பட்டனர். இருப்பினும், கடாபியின் உறவினர்கள், அவருடைய ஆதரவாளர்கள் சிலர் என ஒருசிலரை இஸ்லாமிய முறைப்படியான கடைசிக் கட்ட சடங்குகளைச் செய்ய அனுமதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சரியான இடத்தை மட்டும் காட்டிக்கொடுக்கவில்லை, அது தெரிந்தால் அந்த இடத்தை பின்னாளில் புனிதத் தலம்போல் மாற்றிவிடக்கூடும் என்ற அஞ்சியதால் அவ்வாறு செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

தமிழீழ அரசாங்க அரசவைக்கு உறுப்பினர்கள் அமர்த்தம் செய்யப்படுதல் குறித்த அறிவித்தல்!

குறைந்த அளவு ஈழத் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதில் சிரமங்கள் உள்ள நாடுகளிலும் தேர்தல்கள் இன்றி உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பான நடைமுறையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட இத்தகைய நடைமுறையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு ஏற்று உறுதி செய்திருந்தது. இத் தெரிவுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின் பின்வரும் பிரிவுகளின் அடிப்படையில் இடம்பெறும்.

1.4 அரசவை

அரசவை என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் அமர்த்தம் செய்யப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும்.

1.4.1 அரசவையின் இயைபு

அரசவையானது தெரிவு செய்யப்பட்ட 115 உறுப்பினர்களையும் அமர்த்தம் செய்யப்பட்ட 20 உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும். இவர்கள் அனைவருக்கும் வாக்குரிமையும் மற்றெல்லாச் சிறப்புரிமைகளும் உண்டு.

1.4.3 அரசவை உறுப்பினருக்கான தகுதிகள்

அரசவை உறுப்பினராவதற்குப் பின்வரும் தகுதிகள் தேவைப்படும்:

அ) 2010 மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழீழக் குடிமகனாக, குடிமகளாக இருத்தல் வேண்டும். அல்லது ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றினூடாக இணைவு கொண்டிருத்தல் வேண்டும்.

ஆ) 17 வயது நிறைவடைந்தவராய் இருத்தல் வேண்டும்.

இ) எந்த நீதிமன்றத்தாலும் சுயலாப அல்லது சுயநோக்க செயல்பாடுகளுக்கான குற்றத்திற்காக தண்டிக்கப்படாதவராய் இருத்தல் வேண்டும். அல்லது அவரது வழக்கில் குற்றத் தண்டனை குற்றத் தீர்ப்புகளின் பதிவில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும்.

ஈ) தமிழீழ மக்களின் நலனுக்குக் கேடான பிற நாடுகளிலிருந்து சேவை, தகுநிலை அல்லது பொருளியல் நன்மை அடையாதவராய் இருத்தல் வேண்டும்.

உ) அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு நா.க.த. அரசாங்கத்தின் நோக்கங்களை ஏற்றுக் கொள்கின்றவராய் இருத்தல் வேண்டும்.

மதியுரைக்குழு அறிக்கையின்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவைக்காக தேர்தல்கள் இன்றி அமர்த்தம் செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இடங்களும் பின்வருமாறு அமைகின்றன.

இந்தியா 5

சிங்கப்பூர் 2

மலேசியா 3

மத்திய கிழக்கு 2

மொரிசியஸ் 1

தென் ஆபிரிக்கா 2

ஆபிரிக்காவின் ஏனைய பகுதிகள் 1

ஆசியாவின் ஏனைய பகுதிகள் 1

ஐரோப்பாவின் ஏனைய பகுதிகள் 1

ஓஸியானியா 1

கரிபியன், தென்அமெரிக்கா 1

உறுப்பினர்களை அமர்த்தம் செய்வதற்காகப் பின்வரும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக வருபவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

2. அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்கள் தெரிவில் இடம் பெற விரும்புவர்கள் தாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவைக்கு உறுப்பினர்களாக அமர்த்தம் செய்யப்படின் தாம் ஆற்றக் கூடிய பணிகள் குறித்து தங்கள் கருத்துக்களை தங்கள் சுயவிபரக் கோவையுடன் அனுப்பி வைத்து தங்கள் விண்ணப்பத்தினை நேரடியாக மேற்கொள்ளலாம்.

3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக எவராவது தெரிவு செய்யப்படல் பயனுள்ளது எனக் கருதும் சமூக ஆர்வலர்கள் தாம் பரிந்துரைக்க விரும்புவரின் எழுத்து மூலமான சம்மதத்துடன் நாம் மேல் குறிப்பிட்ட (2 இல்) விபரங்களை அனுப்பி வைப்பதன் மூலமும் பேராளர்கள் தெரிவுக்கான விண்ணப்பத்தைக் கையளிக்கலாம்.

4. அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களை பிரதமர் உதவிப் பிரதமர்கள் உள்ளடங்கிய குழு மதிப்பீடு செய்யும்.

5. இக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் உறுப்பினர்கள் பிரதமரால் அமர்த்தம் செய்யப்பட்டு அரசவையால் உறுதி செய்யப்படுவார்கள்

அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவதற்கான விண்ணப்பங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

pmo@tgte.org

விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டிய இறுதித் திகதி: 10. 11. 2011

பிரதமர் அலுவலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
http://www.tgte.org/
26.10.2011

தமிழீழ அரசாங்க அரசவைக்கு உறுப்பினர்கள் அமர்த்தம் செய்யப்படுதல் குறித்த அறிவித்தல்!

குறைந்த அளவு ஈழத் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதில் சிரமங்கள் உள்ள நாடுகளிலும் தேர்தல்கள் இன்றி உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பான நடைமுறையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட இத்தகைய நடைமுறையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு ஏற்று உறுதி செய்திருந்தது. இத் தெரிவுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின் பின்வரும் பிரிவுகளின் அடிப்படையில் இடம்பெறும்.

1.4 அரசவை

அரசவை என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் அமர்த்தம் செய்யப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும்.

1.4.1 அரசவையின் இயைபு

அரசவையானது தெரிவு செய்யப்பட்ட 115 உறுப்பினர்களையும் அமர்த்தம் செய்யப்பட்ட 20 உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும். இவர்கள் அனைவருக்கும் வாக்குரிமையும் மற்றெல்லாச் சிறப்புரிமைகளும் உண்டு.

1.4.3 அரசவை உறுப்பினருக்கான தகுதிகள்

அரசவை உறுப்பினராவதற்குப் பின்வரும் தகுதிகள் தேவைப்படும்:

அ) 2010 மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழீழக் குடிமகனாக, குடிமகளாக இருத்தல் வேண்டும். அல்லது ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றினூடாக இணைவு கொண்டிருத்தல் வேண்டும்.

ஆ) 17 வயது நிறைவடைந்தவராய் இருத்தல் வேண்டும்.

இ) எந்த நீதிமன்றத்தாலும் சுயலாப அல்லது சுயநோக்க செயல்பாடுகளுக்கான குற்றத்திற்காக தண்டிக்கப்படாதவராய் இருத்தல் வேண்டும். அல்லது அவரது வழக்கில் குற்றத் தண்டனை குற்றத் தீர்ப்புகளின் பதிவில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும்.

ஈ) தமிழீழ மக்களின் நலனுக்குக் கேடான பிற நாடுகளிலிருந்து சேவை, தகுநிலை அல்லது பொருளியல் நன்மை அடையாதவராய் இருத்தல் வேண்டும்.

உ) அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு நா.க.த. அரசாங்கத்தின் நோக்கங்களை ஏற்றுக் கொள்கின்றவராய் இருத்தல் வேண்டும்.

மதியுரைக்குழு அறிக்கையின்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவைக்காக தேர்தல்கள் இன்றி அமர்த்தம் செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இடங்களும் பின்வருமாறு அமைகின்றன.

இந்தியா 5

சிங்கப்பூர் 2

மலேசியா 3

மத்திய கிழக்கு 2

மொரிசியஸ் 1

தென் ஆபிரிக்கா 2

ஆபிரிக்காவின் ஏனைய பகுதிகள் 1

ஆசியாவின் ஏனைய பகுதிகள் 1

ஐரோப்பாவின் ஏனைய பகுதிகள் 1

ஓஸியானியா 1

கரிபியன், தென்அமெரிக்கா 1

உறுப்பினர்களை அமர்த்தம் செய்வதற்காகப் பின்வரும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக வருபவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

2. அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்கள் தெரிவில் இடம் பெற விரும்புவர்கள் தாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவைக்கு உறுப்பினர்களாக அமர்த்தம் செய்யப்படின் தாம் ஆற்றக் கூடிய பணிகள் குறித்து தங்கள் கருத்துக்களை தங்கள் சுயவிபரக் கோவையுடன் அனுப்பி வைத்து தங்கள் விண்ணப்பத்தினை நேரடியாக மேற்கொள்ளலாம்.

3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக எவராவது தெரிவு செய்யப்படல் பயனுள்ளது எனக் கருதும் சமூக ஆர்வலர்கள் தாம் பரிந்துரைக்க விரும்புவரின் எழுத்து மூலமான சம்மதத்துடன் நாம் மேல் குறிப்பிட்ட (2 இல்) விபரங்களை அனுப்பி வைப்பதன் மூலமும் பேராளர்கள் தெரிவுக்கான விண்ணப்பத்தைக் கையளிக்கலாம்.

4. அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களை பிரதமர் உதவிப் பிரதமர்கள் உள்ளடங்கிய குழு மதிப்பீடு செய்யும்.

5. இக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் உறுப்பினர்கள் பிரதமரால் அமர்த்தம் செய்யப்பட்டு அரசவையால் உறுதி செய்யப்படுவார்கள்

அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவதற்கான விண்ணப்பங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

pmo@tgte.org

விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டிய இறுதித் திகதி: 10. 11. 2011

பிரதமர் அலுவலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
http://www.tgte.org/
26.10.2011

லிபியா நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்: சரத்

லிபியாவில் இடம்பெற்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊழல் அரசியல்வாதிகளுக்கும், வாகனத் தொடரணிகளுக்கும் மக்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.

அநீதிக்கு எதிரான போராட்டத்தின் போது கட்சி பேதங்களைக் களைந்து அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லிபியா நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்: சரத்

லிபியாவில் இடம்பெற்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊழல் அரசியல்வாதிகளுக்கும், வாகனத் தொடரணிகளுக்கும் மக்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.

அநீதிக்கு எதிரான போராட்டத்தின் போது கட்சி பேதங்களைக் களைந்து அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய கருணாநிதி வலியுறுத்து

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கொலை வழக்கின் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி திகார் சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியைப் பார்க்கும் நோக்கில் அண்மையில் டெல்லி சென்றிருந்தார். அதன்போது காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடனான சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார். அதன் பின் திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியையும் சந்தித்திருந்தார்.

நேற்று நண்பகல்; தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லி விஜயத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அதன் பின்னர் மாலையில் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த கலைஞர் கருணாநிதி, இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் அங்குள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை என்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன், அத்துடன் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதையும் ஆதாரங்களோடு பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன்.

இவற்றோடு தூக்கு தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக்கொண்டிருப்பதால் இதுவரையில் அனுபவித்து வந்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய கருணாநிதி வலியுறுத்து

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கொலை வழக்கின் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி திகார் சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியைப் பார்க்கும் நோக்கில் அண்மையில் டெல்லி சென்றிருந்தார். அதன்போது காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடனான சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார். அதன் பின் திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியையும் சந்தித்திருந்தார்.

நேற்று நண்பகல்; தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லி விஜயத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அதன் பின்னர் மாலையில் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த கலைஞர் கருணாநிதி, இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் அங்குள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை என்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன், அத்துடன் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதையும் ஆதாரங்களோடு பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன்.

இவற்றோடு தூக்கு தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக்கொண்டிருப்பதால் இதுவரையில் அனுபவித்து வந்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

தீபாவளி ரிலீஸ் படங்கள்


தமிழகத்தில் பொதுமக்களுக்கு தொன்றுதொட்டு வரும் பல பழக்கவழக்கங்களில் ஒன்று, தீபாவளியன்று ஒரு சினிமாவை பார்த்து மகிழ வேண்டும் என்பது. தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள வேலாயுதம் 

மற்றும் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு ஆகிய இரு படங்கள் வெளியாகின்றன. 7 ஆம் அறிவு 340-க் கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் 40 அரங்குகள் 

இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளன. வேலாயுதம் சுமார் 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இவ்விரு படங்களும் தமிழகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி 

ஷாருக்கானின் ரா ஒன் படம் மட்டும் விஜய், சூர்யா படங்களுடன் தீபாவளிக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு 20 தியேட்டர்கள் சென்னையிலும் புறநகர்களிலும் கிடைத்துள்ளன. ரா.ஒன் படத்தில் சூப்பர் 

ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால் ரா ஒன் படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு உண்டு. இது இந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. 
பெரும்பாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

தீபாவளிக்கு 5 ஷோ

தீபாவளி பண்டிகை முதல் 7 நாட்களுக்கு (26-ந் தேதி முதல் 1-11-2011 வரை) அனைத்து திரையரங்குகளிலும் கூடுதல் காலை காட்சி நடத்த அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.தீபாவளி பண்டிகையையொட்டி 

திரையரங்குகள் 5 காட்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வருகிற 27, 28, 31 மற்றும் 1-11-2011 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக்கொள்ள அரசு 

அனுமதி வழங்கியிருக்கிறது. 26, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறையானதால், அந்த நாட்களிலும் அதிகப்படியாக ஒரு காட்சி, அதாவது 5 காட்சிகள் நடத்திக்கொள்ளலாம்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா