இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,
லிபிய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அம்மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் போராட்டத்தை ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்றியவர் கடாபி.
ஆனால் காலப் போக்கில் மக்களை அடக்கி ஒடுக்கி குடும்ப ஆட்சியாக சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்தார்.
இதனால் நசுக்கப்பட்ட மக்கள் நாட்டுத் தலைமைத்துவத்தின் மீது அதிருப்தியும் ஆத்திரமும் வெறுப்பும் அடைந்தனர்.
மக்களின் எதிர்ப்பை சம்பாதித்ததால் கிளர்ச்சி வெடித்தது. இறுதியில் உயிரிழந்தார். இது சண்டையின் போது நடந்ததா அல்லது கைது செய்யப்பட்டதன் பின்னர் நடந்ததா என்பது பற்றித் தெரியாது.
ஆனால் இது தொடர்பில் கண்ணீர் விட முடியாது. அதேவேளை, கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அது மனித உரிமை மீறலாகும்.
எனவே, சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு இது சிறந்த பாடமாகும் என்றார்.


No comments:
Post a Comment