பட்டாசு வெடிப்பதை அறவே வெறுக்கிறாராம் ஷில்பா ஷெட்டி. கடந்த பல ஆண்டுகளாகவே இவர் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லையாம்.
சரி சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த அக்கறை உள்ளவர் போல என்று நினைத்தால் அதுதான் இல்லை. மாறாக, பட்டாசுக்காக பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை என்பதால் பட்டாசு வெடிப்பதில்லையாம் ஷில்பா.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு வயதில் நானும் மற்றவர்களைப் போல பட்டாசு வெடிக்கத்தான் செய்தேன். ஆனால் வளர்ந்த பிறகு அதை விட்டு விட்டேன். பல ஏழைக் குழந்தைகள் பட்டாசு வெடிக்க முடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கு வேதனை தந்தது. இதனால் நான் பட்டாசு வெடிப்பது என்பது ஆடம்பரச் செயல் என்று உணர்ந்தேன். காசு இருப்பதற்காக பட்டாசு வெடிப்பது என்பது தவறு என்று புரிந்து அதை விட்டு விட்டேன்.
எனது தந்தையும் கூட பட்டாசைக் கொளுத்துவது என்பது பணத்தைக் கொளுத்துவது போல என்பார். எனவே நான் பட்டாசு வெடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். இதனால் எனக்குக் கிடைக்கும் பட்டாசுகளை வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்து விடுவேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்.
இப்போது ஏழைக் குழந்தைகளுக்கு இனிப்பு, நல்ல சாப்பாடு போன்றவற்றைத் தருகிறேன். நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் நல்ல உடையுடன் சந்தோஷமாக இருக்கும்போது ஏழைக் குழந்தைகள் மட்டும் ஏக்கத்துடன் பார்ப்பது மிக மிக கவலை தருகிறது எனக்கு.
அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பரப்பும் நாளாக தீபாவளி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார் ஷில்பா.
சரி சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த அக்கறை உள்ளவர் போல என்று நினைத்தால் அதுதான் இல்லை. மாறாக, பட்டாசுக்காக பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை என்பதால் பட்டாசு வெடிப்பதில்லையாம் ஷில்பா.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு வயதில் நானும் மற்றவர்களைப் போல பட்டாசு வெடிக்கத்தான் செய்தேன். ஆனால் வளர்ந்த பிறகு அதை விட்டு விட்டேன். பல ஏழைக் குழந்தைகள் பட்டாசு வெடிக்க முடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கு வேதனை தந்தது. இதனால் நான் பட்டாசு வெடிப்பது என்பது ஆடம்பரச் செயல் என்று உணர்ந்தேன். காசு இருப்பதற்காக பட்டாசு வெடிப்பது என்பது தவறு என்று புரிந்து அதை விட்டு விட்டேன்.
எனது தந்தையும் கூட பட்டாசைக் கொளுத்துவது என்பது பணத்தைக் கொளுத்துவது போல என்பார். எனவே நான் பட்டாசு வெடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். இதனால் எனக்குக் கிடைக்கும் பட்டாசுகளை வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்து விடுவேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்.
இப்போது ஏழைக் குழந்தைகளுக்கு இனிப்பு, நல்ல சாப்பாடு போன்றவற்றைத் தருகிறேன். நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் நல்ல உடையுடன் சந்தோஷமாக இருக்கும்போது ஏழைக் குழந்தைகள் மட்டும் ஏக்கத்துடன் பார்ப்பது மிக மிக கவலை தருகிறது எனக்கு.
அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பரப்பும் நாளாக தீபாவளி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார் ஷில்பா.
No comments:
Post a Comment