சமூக சேவகர் அன்னா ஹசாரே சமீபத்தில் தனது வலைத்தளத்தில், தனது குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீதான தாக்குதலை மத்திய அரசில் உள்ள 4 பேர் கும்பல்தான் தூண்டி விட்டதாக எழுதியிருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரஷித் ஆல்வி கூறுகையில், `கும்பல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது ஆட்சேபத்துக்குரியது. அன்னா ஹசாரே மீது நாங்கள் மிகவும் மரியாதை வைத்துள்ளோம்.
மத்திய அமைச்சர்கள் பற்றி அவரிடம் இருந்து இத்தகைய வார்த்தைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment