தீபாவளிக்கு வெளியாகும் படங்களைத் திரையிடும் தியேட்டர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து தியேட்டர்கள் மீது அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கையில் குதித்துள்ளனர்.
தமிழ் சினிமா நலிவடைந்து விட்டது, மக்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவதில்லை, திருட்டு விசிடி, டிவிடி தொல்லை அதிகரித்து விட்டது என்று தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து புலம்பல்கள் இருந்தவண்ணம் உள்ளது. ஆனால் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் அநியாய கட்டணத்தால் வெகுண்டுதான் மக்கள் தியேட்டர்களுக்குப் போவதையே கைவிட்டு விட்டனர் என்ற உண்மை அவர்களுக்குப் புரியவில்லை.
தியேட்டர்கள் புதுப் படங்கள் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது வெளியாகும் படங்களுக்கு தாறுமாறாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் தியேட்டருக்குப் போய் படம் பார்க்கலாம் என்ற எண்ணம் வருகிறவர்களும் கூட போகாமல் இருந்து விடுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தீபாவளியையொட்டி ஒரு வாரத்திற்கு தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகளைக் காட்டிக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் இந்த 7 நாட்களிலும் மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளிவிட தியேட்டர்காரர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. படம் எத்தனை நாள் ஓடுமோ என்னவோ என்ற பயத்தில் உள்ள தியேட்டர்காரர்கள், பெருமளவில் கட்டணத்தை வசூலிக்கும் திட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அமைச்சர் செந்தமிழன் அறிவித்துள்ளார்.
தற்போது தீபாவளி படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருப்பூர் பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து நேற்று ஒரே நேரத்தில் 11 தியேட்டர்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த ஒரு தியேட்டரின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல தமிழகம் முழுவதும் ஒரு தியேட்டர் விடாமல் அரசு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பாவி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் சினிமா நலிவடைந்து விட்டது, மக்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவதில்லை, திருட்டு விசிடி, டிவிடி தொல்லை அதிகரித்து விட்டது என்று தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து புலம்பல்கள் இருந்தவண்ணம் உள்ளது. ஆனால் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் அநியாய கட்டணத்தால் வெகுண்டுதான் மக்கள் தியேட்டர்களுக்குப் போவதையே கைவிட்டு விட்டனர் என்ற உண்மை அவர்களுக்குப் புரியவில்லை.
தியேட்டர்கள் புதுப் படங்கள் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது வெளியாகும் படங்களுக்கு தாறுமாறாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் தியேட்டருக்குப் போய் படம் பார்க்கலாம் என்ற எண்ணம் வருகிறவர்களும் கூட போகாமல் இருந்து விடுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தீபாவளியையொட்டி ஒரு வாரத்திற்கு தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகளைக் காட்டிக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் இந்த 7 நாட்களிலும் மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளிவிட தியேட்டர்காரர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. படம் எத்தனை நாள் ஓடுமோ என்னவோ என்ற பயத்தில் உள்ள தியேட்டர்காரர்கள், பெருமளவில் கட்டணத்தை வசூலிக்கும் திட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அமைச்சர் செந்தமிழன் அறிவித்துள்ளார்.
தற்போது தீபாவளி படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருப்பூர் பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து நேற்று ஒரே நேரத்தில் 11 தியேட்டர்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த ஒரு தியேட்டரின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல தமிழகம் முழுவதும் ஒரு தியேட்டர் விடாமல் அரசு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பாவி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment