Saturday 22 October 2011

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம்! _


  சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களுடன் தங்கியுள்ள குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 பேர்ச்சஸ் காணியும் அரை நிரந்தர வீடு ஒன்றும் ஆரம்பத்தில் வழங்கப்படும் என்று திருகோணமலை மாவட்ட செயலகம் 'சம்பூர் பிரதேசத்திலிருந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான அன்பான வேண்டுகோள்" என்ற தலைப்பிலான அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அரசினாலும் பிரதேச செயலாளரினாலும் உங்களை மீளக்குடியமர்த்துவதற்காக சீதனவெளி, வேம்படித் தோட்டம், இளக்கந்தை, வீரமாநகர் வடக்கு, தங்கபுரம் குறவன்வெட்டுவான் ஆகிய பகுதிகளே தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசங்களிலேயே காணி வழங்கப்படவுள்ளது. இக்கிராமங்களில் குடியிருக்க விருப்பம் தெரிவிப்பவர்கள் வரிசைக் கிரமப்படி தெரிவு செய்யப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

29.01.2008 ஆம் திகதியிலான அதிவிஷேட வர்த்தமானி மூலம் விஷேட அபிவிருத்தி வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

25.10.2011 ஆம் திகதிக்குள் மீளக்குடியமர விருப்பம் தெரிவிப்போர் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களில் ஒன்று இரண்டு மூன்று என்னும் அடிப்படையில் குறிப்பிட வேண்டும். விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்டச் செயலகம் வெளியிட்டுள்ள பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
 _

பூநகரி வாடியடி வில்லடிக்குளத்தில் சிப்பாயின் சடலம் மீட்பு:



பூநகரி வாடியடி வில்லடிக்குளம் என்ற பகுதியிலிருந்து இராணுச் சிப்பாயொருவருடையது என நம்பப்படும் சடலமொன்றை விவசாயியொருவர் கொடுத்த தகவலினையடுத்து கடந்த வியாழன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
 
குறித்த விவசாயி 1991ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதே தன்னுடைய நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள செய்ய முயற்சித்துள்ளார். இதற்காக பண்படு;த்தியபோது இதனுள் மண் அணையொன்று காண்பட்டுள்ளது
 
பூநகரி வாடியடி வில்லடிக்குளத்தில் சிப்பாயின் சடலம் மீட்பு:-அதனை துப்புரவு செய்தபோது, இராணுவத்தினர் பயன்படுத்தும் தலைக்கவசத்துடன் சடல எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இது தொடர்பில் குறித்த விவசாயி கிராமசேவகருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார்.
 
இதனையடுத்து குறித்த பகுதிக்கு நேற்றுக் காலை சென்ற சட்டவைத்திய அதிகாரி மற்றும், மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார், உள்ளிட்டோர் மேலதிக ஆய்வுகளுக்காக சடல எச்சங்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
 
எனினும் இது பூநகரிப் பிரதேசம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களின்போது கொல்லப்பட்ட படை சிப்பாயினுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடாபியின் சர்வதேச சொத்து விபரங்கள்


அண்மையில் லிபிய புரட்சி படையினரால் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு சர்வதேச ரீதியாக சுமார் 200 பில்லியன் டொலர்கள் அளவிற்கு வங்கி கணக்கு, ரியல் எஸ்டேட், முதலீடு உள்ளிட்டவைகள் இருந்தமை தெரிய வந்துள்ளது.
 
மேற்கத்திய நாடுகளில் அதிகளவிலான பணம், தங்கம், முதலீடுகள் ஆகியவற்றை கடாபி பதுக்கி வைத்திருந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் என்ற அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதனால் மேற்கத்திய நாடுகள் கடாபியின் சொத்துக்கள் மட்டுமின்றி லிபியாவில் உள்ள முதலீடுகளை கைப்பற்றவும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவிலும் கடாபிக்கு 37 பில்லியன் டொலர்கள் மதிப்பில் முதலீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
அதேவேளை, பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் 30 பில்லியன் டொலர்களுக்கு அதிகமாக கடாபியின் சொத்துக்களை அந்த நாட்டு அரசுகள் கைப்பற்றி உள்ளதாகவும் அந்த நாளிதல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'கடாபியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்'


கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று லிபியாவில் தற்போது நிர்வாகம் செய்யும் இடைக்கால குழு தெரிவித்துள்ளது.
கடாபியின் உடல் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல் சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக் கிழமையோ உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
கடாபியின் உடலைப் பார்க்க அலைமோதும் கூட்டம்அதே நேரம் வியாழக்கிழமை கடாபி கொல்லப்பட்டதற்கு தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக லிபிய இடைக்கால அரசின் இராணுவக் கமாண்டர் ஒமரன் இல் ஒவேப் பிபிசியிடம் தெரிவித்தார்.
மிஸ்ரட்டா நகரிலுள்ள இறைச்சி சேமித்து வைக்கப்படும் இடமொன்றில், கிடத்தி வைக்கப்பட்டுள்ள கடாபியின் சடலம் உருக்குலையத் தொடங்கியுள்ளது.
சடலத்தைப் பார்க்க அலை மோதுகின்ற மக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கைப் பொத்தியபடி, சென்றுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
கடாபியின் சடலத்துக்கு என்ன நடக்கவேண்டும் என்பது பற்றி வெவ்வேறு தரப்பினரிடையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவியதாக பிபிசி செய்தியாளர் கூறினார்.

விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல! நெதர்லாந்து நீதிமன்றம் அதிரடி முடிவு


இன்று, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றில், நெதர்லாந்தின்,ஹேக் நகரிலுள்ள மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகளை சர்வதேசப் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்த முடியாது என்று கூறியது.

விடுதலைப் புலிகளுக்கு பணம் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நெதர்லாந்து வாசிகளான ஐந்து தமிழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளான இன்று, ”நெதர்லாந்து(டச்சு) சட்டப்படி விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தப்பட முடியாது” எனினும் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையானது இவர்கள் மேல் செல்லுபடியாகும் என்பதனால், விடுதலைப் புலிகளுக்காக இவர்கள் பணம் சேர்த்தமை சட்ட விரோதமாகிறது என்று எழுத்து மூலம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்தும், அச்சுறுத்திப் பணம் பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்தும் ”நிரபராதிகள்” என்று இவர்கள் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், விடுதலைப்புலிகளுக்குப் பணப் பங்களிப்பு செய்யாவிடில் ஊருக்குச் செல்ல முடியாது என்று வன்முறையற்ற வழியில் பலவந்தப்படுத்தி விடுதலைப் புலிகளுக்காகப் பணம் வசூலித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்களுக்கு 2 மற்றும் 6 வருட சிறைத் தண்டனையை வழங்கினர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல அது ஒரு விடுதலை இயக்கம் என்று வாதிட்ட இரண்டு பிரதி வாதிகளின் வழக்குரைஞரான விக்டர் கோப், லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியை பதவியிலிருந்து கவிழ்ப்பதற்காகப் போரிட்ட விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்களே தமிழீழ விடுதலைப் புலிகள் என்று வாதிட்டார்.

வழங்கப்பட்ட தீர்ப்புப் பற்றிக் கருத்துரைத்த அவர், “தமிழீழ விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கக் கூடாத இயக்கம் என்பதே தீர்ப்பின் அடிப்படையாகும்,” என்றார்.

இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதலால், நேற்று வரை பல தமிழர் விரோத சக்திகள் இவர்களுக்குக் குறைந்த பட்சம் 21 வருட தண்டனை தீர்க்கப்படும் என்று வதந்திகளைப் பரப்பியிருந்தன.

வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்தில் குழுமியிருந்த நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமற்றது என்று கூறியதுடன் தாம் எதுவித பலவந்தமும் இன்றி மனமுவந்தே இவர்களிடம் பணம் கொடுத்தனர் என்று செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழுக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், விரைவில் அத்தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கான முதற்படியாக, இன்று ஹேக் மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகள் பற்றி வங்கிய தீர்ப்பு பார்க்கப்படும் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளை உருவாக்கியது நாங்களல்ல, நீங்களே

போர் முடிவுக்கு வந்துள்ள போதும், வடக்கு,கிழக்கு பகுதியில் மக்கள் சொந்தக்காணியில் குடியமர முடியாமல் இருக்கின்றனர். காணி சுவீகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் உண்மையான நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படமாட்டாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“போர் முடிந்து விட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது, தமிழ் மக்கள் இனி நிம்மதியாக தமது சொந்த இடங்களில் வாழலாம் என்று சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது எல்லாம் எதிர்மாறாகவே நடைபெறுகிறது.

தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு விடை காண வேண்டும்.

விடுதலைப் புலிகள் பற்றி கூறுகிறார்கள், விடுதலைப் புலிகளின் தவறுகளுக்காக தமிழ்மக்களைத் தண்டிக்கக் கூடாது.

விடுதலைப் புலிகளை உருவாக்கியவர்கள் நீங்கள் தான்.

மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தான் விடுதலைப் புலிகளை உருவாக்கினவே தவிர நாங்கள் அல்ல.

பண்டா - செல்வா உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தமிழ்மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதப்போராட்டத்தில் இறங்குவதைத் தவிர்த்திருக்கலாம்.

அந்த உடன்பாடு தமிழ்மக்களின் பண்பாடு மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருந்தது.

இரு சிங்களக் கட்சிகளுக்கும் இடையிலான போட்டியினால் அந்த உடன்பாடு கிழித்தெறியப்பட்டது.

ட்டலி - செல்வா உடன்பாடு கூட நாட்டில் இரத்தக் களரி ஏற்படுவதைத் தடுத்திருக்கும். ஆனால் அதற்கும் இடமளிக்கவில்லை. இதன் விளைவாகத் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றது.

இன்று இராணுவ வெற்றியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மக்கள் மீண்டும் ஒரு வன்முறையில் இறங்குவதை வரவேற்கவில்லை. ஏனைய இனத்தவருடன் சமத்துவமாக, சமஉரிமைகளுடன் வாழவே விரும்புகின்றனர்.

சம்பூரில் 1128 ஏக்கர் நெற்காணிகள் உட்பட 2795 ஏக்கர் காணியில் மக்கள் மீளக்குடியேற முடியாமல் உள்ளனர்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணில் வாழமுடியாத நிலையில் மக்கள் திண்டாடுகின்றனர்.

இதுபற்றி இந்திய அரசுடன் பேசினேன், இந்தியப் பிரதமருடனும் பேசினேன். இந்தியா இந்த மக்களைத் துரத்தி விட விரும்பவில்லை.

இந்தநிலையில், சம்பூரில் மீளக்குடியேற முடியாமல்- இடம்பெயர்ந்துள்ள மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அவ்வாறு போக மறுத்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் நிறுத்தப்படும் என்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தி தேவை தான், அனல் மின்நிலையம் தேவை தான். அவை கூடாது என்று நான் கூறவில்லை.

மின் உற்பத்திக்காக நிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

ஆனால் உங்கள் மின்நிலையத்துக்குக் காணி எடுக்கும் வரை அந்த மக்கள் அங்கேயே இருக்கட்டும்.

எவ்வளவு காணி எடுக்கப்படுகிறதோ, எடுத்து விட்டு எஞ்சிய பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும்.

சம்பூரில் மீளக்குடியேறத் தடைவிதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் புனிதமான இந்துக் கோவில் ஒன்று உள்ளது.

அந்த பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு நான் சிறுவனாக இருந்த போது சென்றிருக்கிறேன்.

அது ஒரு சக்திவாய்ந்த கடவுள்- அதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.“ என்றும் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை சமர்ப்பித்து ஆற்றிய உரையில் இரா.சம்பந்தன், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் 11 பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

காமெடி நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை!


ஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த நடிகர் லூஸ் மோகன் பரிதாப நிலையில் உள்ளார். அவர், தனது மகன் மீது போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன். ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்து மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். தற்போது லூஸ் மோகனுக்கு 84 வயது ஆகிறது. சென்னை மயிலாப்பூர் சாலை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். தேவையான அளவு பணம் இருந்தும் தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதுதான் லூஸ் மோகனின் குறை.

இதற்காகத்தான் அவர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தன்னை தனியாக தவிக்க விட்டுச் சென்ற தன் மகன் மீதும், மருமகள் மீதும் குற்றம்சாட்டி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறியுள்ளார். மனுவை கொடுத்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த லூஸ் மோகன், தனக்கே உரிய கலகலப்புடன் கவலைகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், மக்களை சிரிக்க வைத்த எனது நிலை, இன்று பலரும் சிரிக்கும்படி ஆகிவிட்டது. எனக்கு தேவையான அளவு பணம் இருக்கிறது. ஆனால் உதவிக்கு ஆள் இல்லை. எனது மனைவி பச்சையம்மாள் இறந்தபிறகுதான் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது. தாய்க்குப்பின் தாரம் என்பார்கள். எனது மனைவியால்தான் இந்த சொந்தவீட்டில் வாழும் அளவுக்கு நான் வசதியாக உள்ளேன். எனக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைத்துவிட்டேன். மகன் கார்த்திக் என்னை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று நினைத்தேன். அவனுக்கு கம்ப்யூட்டர் சென்டர் வைத்து கொடுத்தேன். அதை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. அதன்பிறகு தமிழ் பத்திரிகை ஒன்றில் வேலை வாங்கி கொடுத்தேன். இப்போது அங்குதான் வேலைபார்க்கிறான்.

கமல் ஹாஸனை இயக்குகிறார் வெங்கட் பிரபு?


மங்காத்தாவில் ஜாக்பாட் அடித்தாலும் சோனா விவகாரத்தில் மங்கிப் போயிருந்த வெங்கட் பிரபுவின் கேரியரில் இப்போது மீண்டும் பளிச் வெளிச்சம்.

காரணம்... சமீபத்தில் இவர் கமல்ஹாஸனை சந்தித்துப் பேசியுள்ளதுதான். ஒரு வயிறு குலுங்க வைக்கும் காமெடிப் படத்துக்காக இருவரும் இணைகிறார்கள் என்பதுதான் இப்போதைய 'ஹாட் டாக்'!

இளம் தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது கமலின் ஆசை. இளம் தலைமுறை ப்ளஸ் விறுவிறு காமெடி... இதற்கு வெங்கட் பிரபு - பிரேம்ஜி டீம் பக்காவாக பொருந்தும் என்பதால், வெங்கட்டை அழைத்துப் பேசினார் கமல் என்கிறார்கள்.

சூர்யா வைத்து தன் அடுத்த படத்தை இயக்கும் வெங்கட், அந்தப் படம் முடிந்ததும் கமல் படத்தை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.

தீபாவளி ஸ்பெஷல்: ஒரு வாரத்துக்கு தமிழக திரையரங்குகளில் தினசரி 5 காட்சி


சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒரு வார காலத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தீபாவளி பண்டிகை முதல் 26.10.11-ல் இருந்து 1.11.2001 வரை 7 நாட்களுக்கு தியேட்டர்களில் காலை காட்சி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வரும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அந்த பண்டிகை நாளில் சினிமா பார்த்து மகிழ வேண்டும் என்பது அவர்கள் விருப்பமாக உள்ளது. அவர்கள் எளிதாக படம் பார்க்க வசதியாக கூடுதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படடு இருந்தது.

அதை ஏற்று முதல்வர் அனுமதி வழங்கியமைக்கு நன்றி.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. தீபாவளியையொட்டி 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

அஜீத் படம் கிடைச்சா சந்தோஷப்படுவேன் - ஜெயம் ராஜா


அஜீத்தை ஒரு படத்தில் இயக்க ஆசை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன் என்றார் இயக்குநர் ஜெயம் எம் ராஜா.

விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்தை இயக்கியுள்ளார் ராஜா. தமிழில் முதல் முறையாக தன் தம்பி ஜெயம் ரவி இல்லாமல் அவர் இயக்கியுள்ள படம் வேலாயுதம்.

இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில். விநியோகஸ்தர்கள் மத்தியிலும் நல்ல பேச்சு நிலவுவதால் நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ராஜா.

வேலாயுதம் பட அனுபவம் குறித்து நேற்று நிருபர்களிடம் ராஜா கூறுகையில், "வேலாயுதம் எனக்கு 7வது படம். ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக அமைஞ்சிருக்கு. 6 படங்களை ரீமேக் செய்தேன். ஆனால் வேலாயுதம் படத்தை ஆசாத் என்ற படத்தின் மூலக்கதையை வச்சி என் சொந்த திரைக்கதையில் படமாக்கி இருக்கேன்.

என் தம்பி ஜெயம் ரவியை வைத்து மட்டும் 5 படங்களை எடுத்தேன். இப்போது பெரிய ஹீரோவான விஜய்யுடன் சேர்ந்து பண்ணி இருக்கேன். வேலாயுதம் என் திரையுலக வாழ்வில் முக்கிய படமா இருக்கும். இது எனது ஒன்றரை வருட கனவு படம் என்றாலும் மிகையல்ல.

விஜய் என்னை அழைத்து படம் பண்ணலாம் என்றதும் இந்த கதையை உருவாக்கினேன். கமர்சியல் படங்களுக்கான வீரியத்தோடு புது பரிமாணத்தில் இப்படம் இருக்கும்.

இதுவரை நான் எடுத்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து இருக்கின்றன. அதில் எனக்கு சந்தோஷம். எங்க வீட்டு பிள்ளை, பாட்ஷா, அந்நியன் போன்றவை நான் ரசித்த படங்கள். தனித்தனி பார்முலாக்களை அதில் பார்க்கலாம்.

இப்போது வேலாயுதம் படத்தில் வேறொரு பார்முலாவைப் பார்க்கலாம். விஜய் பிரமாதமாக நடித்துள்ளார். டான்ஸ், வசனம் எல்லாவற்றிலும் அசத்தி உள்ளார். நல்ல கதை இருந்தால் படம் வெற்றி பெறும். அந்த கதைக்காகத்தான் மெனக்கெடுகிறேன். வேலாயுதம், நல்ல கதை, அருமையான பொழுதுபோக்கு நிறைந்த படம்.

தேசிய விருது வாங்க வேண்டும் என்பது என் கனவு. அதற்காக இன்னும் உழைப்பேன். விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகச்சிறந்த படமாக வேலாயுதம் இருக்கும். அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசை. வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்," என்றார்.

Friday 21 October 2011

ஊடகங்களின் பொய் அம்பலம்: கடாபியின் இறுதிநேர காணொளி! (படங்கள், காணொளி)

கிளர்ச்சிப் படையினர் கடாபி தங்கியிருந்த அவரது சொந்த ஊரான சேர்ட்டேவை நேற்றைய தினம் முற்றுகையிட்டனர். இதனிடையே நேட்டோப் படையினர் தமது வேவு பார்த்தலை அதிகரித்து கடாபி அந் நகரில் இருப்பதை உறுதிசெய்துகொண்டனர்.

கிளர்ச்சிப்படையினர் தாக்குதலை தொடுத்தவேளை அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரது வாகனத் தொடரணி மீது நேட்டோப் படையின் ஆளில்லா விமானங்களும் ஜெட் விமானங்களும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக 5 வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக நேட்டொப் படைப்பிரிவுக்கு செய்தி கிட்டியபோதிலும் அந்த வாகனத் தொடரணியில் எந்த வாகனத்தில் கடாபி இருக்கிறார் என்பதும் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களை துல்லியமாகத் தாக்கியழித்துள்ளது நேட்டோப் படை. இதனால் அவர் வாகனம் மட்டும் பலத்த சேதமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பாளரும் சாரதியும் வாகனத்தை திருப்பி மறைவான ஒரு இடத்தில் நிறுத்தியுள்ளனர். அதனையும் வேவுபார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கடாபி வீதி ஓரமாக இருக்கும் ஒரு சுரங்கக் குழிக்குள் இருக்கிறார் என்ற தகவலை தலைமைக்கு பரிமாற அவ்விடம் நோக்கி கிளர்ச்சிப்படையினர் நகர்ந்துள்ளனர்.

காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பதுங்கியிருந்த அவரை வெளியே இழுத்து சேட்டைக் களற்றி நிர்வாணமாக்கி அவரைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் அடித்து முதலில் மானபந்தப் படுத்தியுள்ளனர் கிளர்சியாளர்கள். பின்னர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுட்டுள்ளனர்.

ஆனால் கடாபி தன்னைச் சுடவேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார். நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடாபியின் மகன்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காலில் சிறு காயங்களோடு பிடிபட்டார் என முதலில் அறிவித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அதேபோல மற்றைய மகனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே அவர் உடலை ஒரு அம்பூலன்ஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால் மேற்குலக தொலைக்காட்சிகள் கடாபி காயங்களுடன் பிடிபட்டதாகவும் அவருக்கு அவசர முதலுதவி வழங்கப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்தப் பெருக்கு காரணமாக அவர் உயிரிழந்தார் எனவும் கதைகளைக் கட்டியது. ஏதோ மனிதநேயம் மிக்க ஒரு நடவடிக்கையை தமது நேட்டோப் படைப்பிரிவு செய்ததாக இவர்கள் நினைப்பது அடி முட்டாள் தனமாகும்.

அமெரிக்காவின் திட்டப்படி கடாபியை தனிமைப்படுத்தி அவருக்கு மரணபயத்தைக் காட்டி யாரும் இல்லாத நிலையில் வீதியில் ஓடவிட்டு பின்னர் ஒரு மறைவிடத்தை அவர் தேடிய பின்னர் சினிமாப்பட பாணியில் அவரைக் கொண்றுள்ளனர் கிளர்சிப் படையினர். கடாபிக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் என்ன வித்தியாசம்?

இதில் வேதனையான விடையம் என்னவென்றால் சரணடைந்த கடாபியின் வாகன ஓட்டுனரை முதலில் கைகளைக் கட்டி வாகனத்தில் ஏற்றிவிட்டு(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் அவர் இறந்துவிட்டார் எனவும் கிளர்ச்சிப் படையினரும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. இது இலங்கை இராணுவத்தின் அட்டூளியங்களுக்கு ஒப்பான ஒரு செயலாக நோக்கப்படவேண்டி உள்ளது.

கடாபி பல குற்றங்களை இழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரை கண்ட இடத்தில் சுட்டுக் கொலைசெய்ய கிளர்ச்சியாளர்களுக்கு என்ன அருகதை உள்ளது ? அவரை இலகுவாகப் பிடித்து நீதிமன்றின் முன் நிறுத்தியிருக்கலாம். அப்படி அவர்கள் நிறுத்தியிருந்தால் கிளர்ச்சிக்காரர்கள் மரியாதை சற்று உயர்ந்திருக்கும். ஆனால் அவர்கள் அவசரப் போக்கு மிக ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக பென்காசி என்னும் நகரில் உள்ளவர்கள் தாமே முதலில் புரட்சியை ஆரம்பித்ததால் நாட்டை ஆளும் பொறுப்பு தம்மிடமே உள்ளது என்றும் மிஸ்ராட்டா நகரவாசிகள் தாமே முழுப் பொறுப்பையும் எடுப்போம் என்று குழுக் குழுவாகப் பிரிந்து விவாதம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். பல முஸ்லீம் இனங்கள் வாழும் லிபியாவில் இனி ஆரம்பமாக இருக்கும் அரசியல் எப்பாதை நோகிச் செல்லும் எத்ததைய சவால்களைத் தோற்றுவிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.








கடாபியிடம் எண்ணெய் வாங்கிய நாடுகளெல்லாம் இப்போது தண்ணீரை தலையில் ஊற்றி அவரை தலை முழுகிவிட்டன (படங்கள் இணைப்பு)


கேணல் கடாபியின் முடிவுக்கு உலகத் தலைவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். அவருடைய மரணத்தை கண்டித்து உலகில் இருந்து ஒரு குரல்கூட இதுவரை கிளம்பவில்லை.

ஒரு காலத்தில் அவரை சந்திப்பதில் மகிழ்ச்சிகண்ட தலைவர்கள் எல்லோரும் அந்தர் பல்டி அடித்துவிட்டார்கள். இப்போது எல்லோருமே லிபியாவில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். விழுந்த பக்கம் அடிக்கும் உலகத்தின் போக்கை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. ரஸ்ய பிரதமர் புற்றின்கூட கடாபியின் மரணத்தை வரவேற்றுள்ளார்.

கடாபியிடம் எண்ணெய் வாங்கிய நாடுகளெல்லாம் இப்போது தண்ணீரை தலையில் ஊற்றி அவரை தலை முழுகிவிட்டன. ஒவ்வொரு சர்வாதிகாரியும் எண்ணிப் பார்க்க வேண்டிய அவலம் இதுவாகும். கடாபியுடன் நின்ற தலைவர்களின் புகைப்பட ஆல்பத்தை பாருங்கள்.

அன்று சிரித்தவர்கள் இன்றும் சிரிக்கிறார்கள்.. இவை சிரிப்போ இல்லை நடிப்போ...?










கடாபியின் கதை சுருக்கமாக...

லிபியாவை கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கர்னல் முவம்மர் கடாபி தாங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக லிபியாவின் இடைக்கால அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடாபியின் பிறந்த ஊரான சிர்த்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக இந்த படைகள் அறிவித்த சில மணிகளில் கடாபியை தாங்கள் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கின்றனர். முன்னதாக அங்கே பல வார காலம் நீடித்த கடும் மோதல்கள் இடம்பிடித்தன.

நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் லிபியாவை ஆண்ட அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யக்கோரிவருகிறது.

கடாபியை தாம் கண்டுபிடித்ததாக தெரிவித்த ராணுவ வீரர் ஒருவர், அவர் பிடிபடுவதற்கு முன் “என்னை சுடாதே” என்று கூறியதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

முவம்மர் கடாபி, 1969 ஆம் ஆண்டு ரத்தமில்லா ராணுவ கிளர்ச்சி மூலம் ஆட்சியைப் பிடித்தபோது அவர் லிபியாவின் மீட்பராக பார்க்கப்பட்டார். 27 வயதான இளம் ராணுவ தளபதியான கடாபி, சக ராணுவத்தினரால் சகோதரத் தலைவர் என்று செல்லமாக கூப்பிடப்பட்டார். அந்த அளவுக்கு அவருக்கு நல்லபெயர் இருந்தது. அவரும் ஆட்சிக்கு வந்தபுதிதில் தன்னை மக்கள் தலைவனாகவே காட்டிக்கொண்டார்.

1942 ஆம் ஆண்டு பிறந்த கடாபியின் சரியான பிறந்த நாள் எது என்பது முறையாக பதிவு செய்யப்படவில்லை. ஆங்க்ர்ன்ண்ய் பழங்குடி இன பெற்றோருக்கு பிறந்த கடாபி, தனது பழங்குடியின பின்னணியை விளம்பரப்படுத்துவதில் பெருமைப்பட்டார். உதாரணமாக தனது விருந்தாளிகளை நாடோடி கொட்டகையில் வரவேற்பது முதல், தனது வெளிநாட்டு பயணங்களில் இந்த கொட்டகையை கொண்டு சென்று அதை காட்சிப்பொருளாக வைப்பதுவரை தனது சாமானிய பின்புலத்தை அவர் மறக்காமல் காட்சிப்பொருளாக்குவார்.

ஆனால் அவரது ஆட்சியில் நாட்டில் அரசியல் கட்சிகள் எதையும் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சகிப்புத்தன்மையற்ற அவரது தலைமையிலான ஆட்சியில் எதிர்ப்புக்கே இடமில்லை. எதிர்த்தவர்கள் ஒன்று சிறை சென்றார்கள். இல்லாவிட்டால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள்.

ஆரம்பம் முதலே அவர் சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தார். மத்திய கிழக்கு பிரதேசத்திலும், உலக அரங்கிலும் அவருக்கு ஆதரவிருந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது.

அவருக்கும் மேற்குலகுக்குமான மோதல் எண்பதுகளில் உச்சகட்டத்தை அடைந்தது. வெளிநாடுகளில் செயற்பட்டுவந்த ஆயுத குழுக்கள் பலவற்றை அவர் ஆதரித்தார். பாலத்தீன விடுதலை குழுக்களிலிருந்து, அயர்லாந்து ஆயுத குழுக்கள் வரை இவரது ஆதரவு பட்டியலில் இடம்பிடித்தன. இதனால் பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று மேற்குலக நாடுகள் அவரை பல தசாப்தங்களாக திட்டிவந்திருக்கின்றன.

லண்டனில் இருக்கும் லிபிய தூதரகத்திற்கு வெளியே பிரிட்டன் காவல்துறை அதிகாரி யுவன்னா பிளட்சர் சுடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, லிபியாவுடனான தனது உறவை பிரிட்டன் முறித்துக்கொண்டது.

நான்காண்டுகள் கழித்து, ஸ்காட்லாந்தின் லாக்கர்பீ நகரத்தின் மேல் வான்பரப்பில் அமெரிக்க ஜம்போ விமானம் ஒன்று வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டது. இதில் 270 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு லிபியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சர்வதேச அரங்கில் கர்னல் கடாபி தீண்டத்தகாதவராக மாறினார்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லிபியா இழப்பீடு வழங்கியத்தைத் தொடர்ந்தும், பேரழிவை உருவாக்கும் ஆயுதங்களை கைவிடுவதாக அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தும் அவர் சர்வதேச நாடுகளால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக அங்கீகரிக்கப்பட்டார். மேற்குலக நாடுகளுடனான உறவிலும் மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் இத்தகைய சாதகமான மாற்றங்களை அவர் தனது உள்நாட்டு அரசியலில் முன்னெடுக்கவில்லை. விளைவு, வட ஆப்ரிக்க பிராந்தியத்திலும், அரபுலக நாடுகளிலும் வலுப்பெற்ற சீர்திருத்த கோரிக்கைகளின் தாக்கம் லிபியாவில் வலுவடைந்தபோது கடாபியால் அதை எதிர்கொள்ள இயலவில்லை. தனது ஆட்சிக்கு எதிரான ஆர்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்ற கடாபி, கடைசியில் ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த ஊரான சித்ரில் சென்று தஞ்சம் புகுந்தார். இறுதியில் அங்கேயே கொல்லப்பட்டார்.

நேட்டோவின் விமானத் தாக்குதல்கள் முடிவடைகிறது

கேணல் கடாபி போராளிகளால் அடித்து கொல்லப்பட்ட பின்னர், நேட்டோவின் கடமைகள் முடிவடைந்துள்ளதாக பிரான்சின் வெளிநாட்டு அமைச்சர் அலையன் யூப்ப சற்று முன்னர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் முதன்மைப் பாத்திரம் வகித்தது பிரான்சிய விமானப் படைகளே என்பது குறிப்பிடத்தக்கது.

லிபியா மீதான முதலாவது குண்டை வீசியது பிரான்சிய விமானங்களே, அதை முடித்து வைத்ததும் பிரான்சிய குண்டு வீச்சு விமானங்களே. அனைத்து நாடுகளின் தாக்குதல்களையும் தலைமைக் கட்டுப்பாட்டில் நெறிப்படுத்தியதும் பிரான்சே என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லிபியாவின் மேலதிக அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரம் பூரணமாக வந்துள்ளதால் போர் ஓய்வடைந்துள்ளது.

ஆகவே விமானத் தாக்குதல்களுக்கான தேவைகள் முடிவடைந்துள்ளன. மேலும் விமானத் தாக்குதல்களை நேட்டோ பெரும் செலவிலேயே நடாத்திய காரணத்தால் தொடர்ந்தும் செலவை நீட்டிக்க விரும்பாது என்பதும் தெரிந்ததே. டென்மார்க்கிற்கு மட்டும் 400 மில்லியன் குறோணர்கள் இந்தத் தாக்குதலில் செலவு ஏற்பட்டுள்ளது. இந்தச் செலவுகளை எப்படி மீளப்பெறுவது என்பது கேள்விக்குறியாகும். ஆனால் லிபியாவில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் நேற்றே தெரிவித்துவிட்டார். அதேபோல டென்மார்க் விமானங்களும் நாடு திரும்பவுள்ளன.

தொடர்ந்தும் கடாபியின் எஞ்சிய படைகள் தாக்குதல்களை நடாத்துகிறதா என்பதை அவதானிக்க சிறியளவில் நேட்டோலின் விமானங்கள் தரித்திருக்கலாம் என்று ஐரோப்பிய பாராளுமன்ற நிருபர் தெரிவிக்கிறார்.

முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகிற்கு சவாலாக எடுத்துக் காட்டியவர்களுள் கடாபியும் ஒருவர்

உலக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி இஸ்லாமியர்களின் பலத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான ஓர் எடுத்துக்காட்டாகவே கேர்ணல் கடாபியின் படுகொலை அமைந்துள்ளது. என மேல் மாகாண ஆளுநர் எஸ்.அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.

லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலை குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்தி ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் மேற்கொண்ட உத்திகள் பலவிதம். முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகுக்கு சவாலாக எடுத்துக்காட்டிய தலைவர்களுள் மறைந்த கேணல் கடாபியும் குறிப்பிடத்தக்கவர்.

அவரது பலத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உலகை பலவீனப்படுத்துவதே மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கமாகும்.

முஸ்லிம்களின் நாடுகளின் தலைவர்களை விரட்டும் சத்தித் திட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ் வேளையில் முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இச் சதித் திட்டத்தை முறியடிக்க ஒன்று பட வேண்டும்.

ஆகவே நாம் பேதங்களை மறந்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து எமது பலத்தை மேம்படுத்தி மேற்குலக சதிகாரர்களின் சதித்திட்டத்தை முறியடித்து இஸ்லாமிய உலகையும் முஸ்லிம்களையும் பாதுகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடாபியின் பெண் பாதுகாவலர்களை தேடும் பணி தீவிரம்

நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கர்னல் கடாபி தனது பாதுகாவலர்களாக பெண் பாடிகார்டுகளை நியமித்திருந்தார்.

இவர்களை வெற்றியின் அடையாளமாக அவர் குறிப்பிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எப்போதுமே பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள் இல்லை. காரணம் உடல் அமைப்பும் தன்மையும் வேறு என்று குறிப்பிட்டு வந்த கடாபி, இந்த பெண் பாடிகார்டுகள் விஷயத்தில் மட்டும் மிகவும் தாராளம் காட்டி வந்தார்.

அவரது அரசில் பணியாற்றியவர்களில் இந்தப் பெண்களே உயர்ந்தபட்ச பதவி வகித்தவர்களாக கருத்தப்பட்டனர். அதற்கு அவர் பெண்களைத்தான் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீல நிற சீருடை, நகச்சாயம், ஹை ஹீல்ஸ் செருப்பு, மெஷின் கன் சகிதம் இவர்கள் கடாபிக்கு பாதுகாவலர்களாக இருந்தனர். கடாபி கொல்லப்பட்டுவிட்ட நிலையில் இவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

எந்தவொரு சர்வாதிகாரியும் சந்திக்கக்கூடாத அவல மரணம் (காணொளி இணைப்பு)

கேணல் கடாபி போராளிப் படைகளால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு, கடைசியில் சுட்டுக் கொல்லப்படும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. எந்தவொரு சர்வாதிகாரியும் மரணமடையக்கூடாத அவலமான மரணத்தை அவர் சந்தித்துள்ளதை அந்தப்படங்கள் காட்டுகின்றன.

ஆங்கிலப்படங்களில் காட்டு மிராண்டிகளிடம் சிக்குப்பட்ட ஒருவர் பலியெடுக்கப்படுவதைப்போல மோசமாக அவர் பலியெடுக்கப்படுகிறார். 42 வருடங்களாக தன்னிடம் அகப்பட்டவர்களை எப்படி மிருகத்தனமாக சித்திரவதை செய்தாரோ அதே வடிவத்தில் இப்போது தானே சித்திரவதையைச் சந்தித்துள்ளார்.

தனது தலையில் வழியும் இரத்தத்தை அவர் தடவிப் பார்த்து அதிர்ச்சியடையும் காட்சியும் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு சர்வாதிகாரிக்கும் காலம் கொடுக்கும் சிறந்த பரிசு இதுவாகும். மேலும் இவருடைய மரணம் குறித்து குழப்பமான செய்திகள் எதையும் வெளியிட முடியாதவாறு இந்த ஒளிப்படம் தெளிவான பதிலை தருகிறது.

அரசியல் அதிகாரத்தின் உச்சக்கட்ட பரிசை ஒரு சர்வாதிகாரி பெற்று விழும் கடைசிக் காட்சி இதுவாகும். இக்காட்சி இப்போது உலகில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் இதுவே கதி என்பதைக் காட்டுகிறது. அதுபோல புதிய சர்வாதிகாரிகள் உருவாகாமல் தடுப்பதற்கு உதவக்கூடிய காணொளியாகவும் இருக்கிறது.



செ‌ன்னை உ‌ள்பட 10 மாநகரா‌‌ட்‌சி‌யிலு‌ம் அ.‌தி.மு.க மு‌ன்‌னிலை

செ‌ன்னை உ‌ள்பட 10 மாநகரா‌ட்‌சி‌யி‌ல் அ.தி.மு.க மேய‌ர் வே‌ட்பாள‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

செ‌ன்னை மாநகரா‌ட்‌சி அ‌.தி.மு.க மேய‌ர் வே‌ட்பாள‌ர் சைதை துரைசா‌மி 1,78,521 வா‌க்குக‌ள் பெ‌ற்று தொட‌ர்‌ந்து முத‌லிட‌த்த‌ி‌ல் உ‌ள்ளா‌ர்.

அவரை எ‌தி‌‌ர்‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ன் 1,04,600 வ‌ா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இட‌த்த‌ி‌ல் உ‌ள்ளா‌ர்.

கோவை மாநகரா‌ட்‌சி‌ அ.‌தி.மு.க மேய‌ர் வே‌ட்பாள‌ர் செ.ம.வேலு‌ச்சா‌மி 51,752 வா‌க்குக‌ள் பெ‌ற்று மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌கிறா‌ர்.

‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் 31,703 வா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இட‌த்த‌ி‌ல் இரு‌க்‌கிறா‌ர்.

மதுரை மாநகரா‌ட்‌சி அ‌திமுக மேய‌ர் வே‌ட்பாள‌ர் ராஜ‌ன் செ‌ல்ல‌ப்பா 99,056 வா‌க்குக‌ள் பெ‌ற்று முத‌லிட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறா‌ர்.

அவரை எ‌தி‌ர்‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் பா‌க்‌கியநாத‌ன் 49,524 வா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இட‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ர்.

‌திரு‌ச்‌சி மாநகரா‌ட்‌சி அ‌திமுக மேய‌ர் வே‌ட்பாள‌ர் சவு‌ண்ட‌ப்ப‌ன் 54,458 வா‌க்குக‌ள் பெ‌ற்று தொட‌ர்‌ந்து மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌கிறா‌ர்.

‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் 27,290 வா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இட‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ர்.

‌திரு‌ப்பூ‌ர் மாநகரா‌ட்‌சி அ‌திமுக மேய‌ர் வே‌‌ட்பாள‌ர் 40,076 வா‌க்குக‌ள் பெ‌ற்று மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌கிறா‌ர்.

அவரை எ‌தி‌‌ர்‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் 16,444 வா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இட‌த்த‌ி‌ல் உ‌ள்ளா‌ர்.

ஈரோடு மாநகரா‌ட்‌சி ‌அ‌திமுக வே‌ட்பாள‌ர் 28,429 வா‌க்குக‌ள் பெ‌ற்று முத‌லிட‌த்‌திலு‌ம், ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் 13,904 வா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இட‌த்த‌ி‌ல் இரு‌க்‌கிறா‌ர்.

சேல‌ம் மாநகராட‌்‌சி அ‌திமுக மேய‌ர் வே‌ட்பாள‌ர் 27,555 வா‌க்குகளு‌ம், ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் 15,219 வா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இட‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை மாநகரா‌ட்‌‌சி அ‌திமுக மேய‌ர் வே‌ட்பாள‌ர் ‌வி‌ஜிலா 18,952 வா‌க்குகளு‌ம், ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் அமுதா 12,716 வா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இ‌ட‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ர்.

வேலூ‌ர் மாநகரா‌ட்‌சி அ‌திமுக மேய‌ர் வே‌‌ட்பாள‌ர் 31,924 வா‌க்குக‌ள் பெ‌ற்று முத‌லிட‌த்‌திலு‌ம், ‌தி.மு.க. வே‌‌ட்பாள‌ர் 27,415 வா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இட‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ர்.

தூ‌‌த்து‌க்குடி மாநகரா‌ட்‌சி அ‌திமுக மேய‌ர் வே‌ட்பாள‌ர் ‌ச‌சிகலா 59,479 வா‌க்குக‌ள் பெ‌ற்று ‌மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

அவரை எ‌தி‌ர்‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் 38,614 வா‌க்குக‌ள் பெ‌ற்று 2வது இட‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ர்.

3 மாநகராட்சிகளில் மதிமுகவுக்கு அதிக ஓட்டு

மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கோவையில் 11,000க்கும் மேலாகன வாக்குகளையும், திருச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளையும், அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தது. கடைசி நேரத்தில் அது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதுதவிர பல இடங்களில் மதிமுகவுக்கு அவர்களுக்கென்றே இருக்கும் 4000, 5000 வாக்குகள் அப்படியே கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் மதிமுகதான் தனது வாக்கு நிலை கரையாமல் நிலையாக உள்ளதை நிரூபித்துள்ள ஒரே கட்சி என்று சொல்ல முடியும் அளவுக்கு அதற்கான வாக்குகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

நிச்சயம் இந்த தேர்தல் மதிமுகவுக்கு நிச்சயம் மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ள தேர்தல் என்று கூறலாம். நிச்சயம், லோக்சபா தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா முன்வருவார் என்பதில் சந்தேகமில்லை.

தொண்டையை இறுக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு - கோர்ட்டில் நிஜமாக நடந்தது என்ன?

தமிழ் நாடு மாநில முதல்வர். அதுவும் மக்கள் அமோக ஆதரவோடு வெற்றிபெற்ற முதல்வர் செல்வி ஜெயலலிதா. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கித் தவிக்கிறார். கருணாநிதியால் போடப்பட்ட இவ்வழக்கு தற்போது அவர் தொண்டையை இறுக்கிவருகிறது. எந்தப் பெரிய அரசியல்வாதி என்றாலும் கிரிமினல் வழக்குக்காக கோட் வாசல்படி ஏறுவது என்றால் கஷ்டமாகத் தான் இருக்கும் அதேபோல முகத்தை இறுகப் படித்தவாறு நீதிமன்றில் நுளைந்தார் செல்வி ஜெயலலிதா.

நேற்று செல்வி ஜெயலலிதா ஆஜராகும்போது, கோர்ட் நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை பல மீடியாக்கள் இஷ்டத்துக்கு ஊகித்து வெளியிட்டிருந்தன. ஆனால், கோர்ட் நேற்று எப்படி இயங்கப் போகின்றது என்பதில் எந்த ரகசியமும் இருக்கவில்லை.

ஜெயலலிதா கோர்ட்டுக்கு வருவதற்கு முன்னரே, நடக்கப்போவது என்ன என்பதை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. புரொசிகியூட்டிங் லாயர் சந்தேஷ் சௌத்தா, தன்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு நிதானமாகவே கோர்ட் நடைமுறைகளை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார் அங்கே.

நேற்று கோர்ட்டில் நடைபெறவுள்ளது வழக்கின் இறுதிக் கட்ட நடைமுறை. குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்பது பற்றிய விசாரணை அல்ல. கோர்ட்டைப் பொறுத்தவரை குற்றவாளியின் குற்றம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான முடிவுகளுக்கு குற்றம் சாட்டும் தரப்பு எப்படி வந்தது என்பதை குற்றவாளிக்கு அறிவிக்க வேண்டிய நடைமுறைதான் நேற்று நடைபெற்றுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் (ஜெயலலிதா) குற்றவாளிதான் என்று கோர்ட் ஏற்றுக் கொள்ளும் ஆதாரங்கள் தொடர்பாக குற்றவாளி என்ன சொல்கிறார் என்பதை ஜெயலலிதா பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளது. கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதன்மூலம் தனது நிலைப்பாட்டை அவர் பதிவு செய்து கொள்ளலாம்.

பின்னர் தீர்ப்பு வழங்கப்படும்போது, இந்தக் குற்றங்கள் பற்றியோ, ஆதாரங்கள் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது என்று குற்றவாளி (ஜெயலலிதா) சொல்ல முடியாதபடி, புரொசிகியூஷன் தரப்பு கேள்விகள் அமைந்திருக்கும் என்று முன்கூட்டியே விளக்கம் கொடுத்திருந்தார் அவர். கோர்ட்டுக்குள் ஜெயலலிதா பிரவேசித்தபோது, அவர் அமர்ந்து பதில் சொல்லும் விதத்தில் சேர் போடப்பட்டுள்ளது என்ற விபரத்தை, அவரது வக்கீல் அவரிடம் தெரிவித்தார்.

ஜெயலலிதா அதற்கு பதில் ஏதும் கூறாமல் தலையை மாத்திரம் அசைத்து ஏற்றுக் கொண்டார். நீதிபதி மல்லிகார்ஜூனய் அமரவுள்ள ஆசனத்துக்கு முன்னால் சிறிது இடைவெளிவிட்டு, இடப்புறமாக ஜெயலலிதாவுக்கான ஆசனம் போடப்பட்டிருந்தது. "இந்த ஆசனத்தில் அமர்ந்து பதில் கூறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?" என்ற கேள்வி சம்பிரதாயமாக ஜெயலலிதாவிடம் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டது.

அதற்கு "ஆம்" என்று பதில் கொடுத்தார் செல்வி ஜெயலலிதா:

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோருக்கு கோர்ட் அறையில் ஒரு ஓரமாக ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. பரீட்சை வினாத்தாள் போல மொத்தம் எத்தனை கேள்விகளை அரசு வக்கீல் ஆச்சார்யா தயாரித்து வைத்திருந்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன.

நிஜத்தில் அப்படியல்ல.. புரொசிகியூஷன் தரப்பின் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளிக்க முட்பட்டால், அது தொடர்பாக வேறு கேள்விகளும் அந்த இடத்திலேயே கேட்கப்பட்டன. ஜெயலலிதாவிடமிருந்து "தெரியாது" என்ற பதில் வந்தால் மாத்திரம், அடுத்த கேள்விக்கு சென்றார்கள். சில கேள்விகளுக்கு ஜெயலலிதாவின் வக்கீல் கொடுக்கும் பதிலும் பதிவு செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதிய உணவுக்காக கோர்ட் கலைந்தபோது வெளியே வந்த ஜெயலலிதா, அவருக்காக சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட வேனுக்குள் அமர்ந்து தனது மதிய உணவை முடித்துக் கொண்டார்.

மீண்டும் கோர்ட் தொடங்கியபோது, கேள்விகள் இன்று மாலையுடன் முடிவடைந்துவிடுமா? என்று ஜெயலலிதாவின் வக்கீல் கேட்டார். அது நீங்கள் கூறும் பதில்களைப் பொறுத்தது என்ற பதிலே அவருக்கு கிடைத்தது.

மாலை 4 மணி வரை விசாரணை தொடர்ந்தது. மீதிக் கேள்விகளுக்கு பதில்கூற ஜெயலலிதா இன்றும் (வெள்ளிக்கிழமை) கோர்ட்டுக்கு வரவேண்டியிருக்கும் என்று அப்போது அவருக்கு கூறப்பட்டது. அதற்கு ஜெயலலிதா பதில் ஏதும் கூறவில்லை. அவரது வக்கீல் மாத்திரம் "யெஸ்" என்று ஒரு சொல்லில் பதில் அளித்தார்.

கோர்ட் வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் எனக்கு தெரியாது என்று ஜெயலலிதா பதில் அளித்திருந்தால், நாளை வரவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால், வழக்கின் தீர்ப்பு வெளியாகும்போது ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றார்கள். இது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடிய கேள்விகளுக்கு, பதில்களைக் கூறி, கோர்ட் பதிவுகளில் இடம்பெறச் செய்துள்ளார்கள்.

சாதகமற்ற கேள்விகளுக்கு தெரியாது என்ற பதிலைக் கொடுத்தனர். தெரியாது என்ற பதில்கள் கேஸில் இருந்து தப்ப வைக்காது, அப்பீலுக்கு மாத்திரமே உபயோகமாகும் என்றார்.

அதிர்வு

கவர்ச்சி வேலைக்காரியாக ஸ்வேதா மேனன்!


சினிமாவில் மறுபிரவேசம் செய்த கையோடு ரதி நிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர் படங்களில் கவர்ச்சி விருந்து படைத்த சர்ச்சை நாயகி ஸ்வேதா மேனன், மீண்டும் ஒரு படத்தில் படு செக்ஸியாக நடிக்கிறார்.

இதுவும் மலையாளப்படம்தான். பெயர் 'பருதீசா'.

கிறிஸ்தவ மன்னர்களின் ஆட்சிக்காலப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஸ்வேதா மேனன் ஏற்றுள்ள வேடம் கவர்ச்சி வேலைக்காரி.

பொதுவாக சரித்திரக் கதைகளில் இதுபோன்ற வேலைக்காரிகள், மன்னனையே கைக்குள் வைத்திருப்பதாக காட்சிகள் வரும். அப்படிப்பட்ட காட்சிகளுக்கு வெறும் ஐட்டம் டான்ஸரை மட்டும் போட முடியாதல்லவா... அதனால் நடிக்கவும் தெரிந்த ஸ்வேதா மேனனுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

தமிழிலும் பெரிய பிரேக் கிடைக்கும் என்று நம்புகிறார் ஸ்வேதா. இப்போது வசந்தபாலனின் அரவான் படத்தில் தாசி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியானால், தமிழில் கவர்ச்சி கலந்த கேரக்டர் ரோல்கள் குவியும் என்கிறார் ஸ்வேதா.

விக்ரம் படம்.... மூன்று கோடியில் ஒரு க்ளைமாக்ஸ்!


விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை படத்துக்காக மூன்றுகோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட செட் போட்டுள்ளனர்.

விக்ரம் - தீக்ஷா சேத் நடிப்பில், உருவாகும் படம் ராஜபாட்டை. பிவிபி சினிமா தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.

இயக்குநர் கே விஸ்வநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நில அபகரிப்பு விவகாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஜிம்பாயாக நடிக்கிறார் விக்ரம். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக ரூ 3 கோடி செலவில் பின்னி மில்லில் ஒரு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டது. இந்தக் காட்சியில் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்ட 50 ஜிம் பாய்கள் நடித்தனர். ராஜீவன் இந்த செட்டை அமைத்திருந்தார்.

படத்தின் முக்கிய பாடல் காட்சி ஜப்பானில் படமாக்கப்பட உள்ளது.

விமரிசையாக நடந்தது சீமந்தம் : ஐஸ்வர்யா ராய்க்கு பாலிவுட் பட்டாளம் வாழ்த்து!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மும்பை புறநகரில் உள்ள வீட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நேற்று சீமந்தம் விமரிசையாக நடந்தது.  தற்போது ஐஸ்வர்யா ராய் 9 மாத கர்ப்பிணி. அவருக்கு சீமந்தம் நடத்த அமிதாப்பச்சன் குடும்பம் முடிவு செய்தது. இதையடுத்து சீமந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யா ராய் ஆரஞ்சு நிறத்தில் பாரம்பரிய உடை மற்றும் பாரம்பரிய நகைகள் அணிந்து ஜொலித்தார்.

அவரை பாலிவுட் நடிகைகள் ஆஷா பரேக், சோனாலி பிந்த்ரே, டிவிங்கிள் கன்னா, டிம்பிள் கபாடியா, ஊர்மிளா, சாய்னா, பிபாஷா பாசு, சாய்ரா பானு ஆகியோர் வாழ்த்தினர். விழாவுக்கு வந்தவர்களை ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயா பச்சன் வரவேற்றார். பாட்டும், குதூகமுமாக விழா இருந்ததாக நடிகைகள் கூறினர். விழாவில் கலந்து கொண்டு, ஐஸ்வர்யாவை வாழ்த்தியவர்களுக்கு டிவிட்டரில் அபிஷேக் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.


காதல் பற்றி கூற சாரா மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் சாரா ஜானே டயஸ். இப்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். தெலுங்கில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக 'பாஞ்சா' படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் தெலுங்கில் என்னை நிலை நிறுத்தும் என நினைக்கிறேன். இந்தியில் அபிஷேக் பச்சனுடன் நடித்த 'கேம்' படத்துக்குப் பிறகு ஏக்தா கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். சினிமா துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது நடிகைகள் வந்துகொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான். ஒரு சிலர் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்குப் போரடித்துவிடும். அதனால் இதை போட்டியாகப் பார்க்கவில்லை. இங்கு யாரும் யாருக்குப் போட்டியல்ல. நான் சினிமா பின்னணி இல்லாமல்தான் இத்துறைக்கு வந்தேன். என்னையும் அரவணைத்து ஏற்றுக்கொண்ட சினிமாதுறை நல்ல வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தொடர்ந்து நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு சாரா கூறினார். அவரிடம், கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை காதலிக்கிறீர்களாமே என்று கேட்டதும் இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றார். பின்னர், 'நான் தனியாகத்தான் இருக்கிறேன். இதையே பெரிதும் விரும்புகிறேன்' என்று சொன்னார்.


ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே பெண்ணுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவது அறுவறுப்பான ஜர்னலிசம் என்று நாகார்ஜுனா கூறினார். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று ஆந்திராவில் செய்திகள் வெளியாயின. அதற்கு முன் அனுஷ்காவை நாகர்ஜுனா காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில பத்திரிகையின் நிருபரை, நாகார்ஜுனா அவதூறாகப் பேசினார் என்று கூறப்பட்டது. இதுபற்றி நாகார்ஜுனா கூறியிருப்பதாவது:

சினிமா துறையில் வெள்ளிவிழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு வருகிறது. முதலில் தபு, அனுஷ்கா, சார்மி, இப்போது பூனம் கவுர். பத்திரிகைகளில் இந்த செய்திகளைப் படித்துவிட்டு சிரிப்பதை தவிர வேறும் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள். அனுஷ்கா நடிகை என்பதை தாண்டி என் குடும்பத்தில் ஒருவர். என்னை விட என் மனைவி அமலாவிடம்தான் அதிகம் பேசுவார். சார்மியுடன் 'மாஸ்' படத்தில் நடித்தேன். அவர் சிறந்த நடிகை. ஏதாவது விஷயங்களில் என்னிடம் கருத்துக் கேட்பார். இந்த இடத்தில் அபார்ட்மென்ட் வாங்க போகிறேன். என்ன நினைக்கிறீர்கள் என்றால், வாங்கு என்பேன். உடனே, நாகார்ஜுனா அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்தார் என்று எழுதிவிடுகிறார்கள்.

இதே போல பூனர் கவுருடன் 'பயணம்' படத்தில் நடித்தேன். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல ஒரு ஷாட் கூட கிடையாது. ஆனால் எப்படித்தான் அவருடன் இணைத்து பேசுகிறார்களோ தெரியவில்லை. இப்படி எழுதுவதற்காக, நான் என் நட்பை நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லையே. நான் இப்போதும் அவர்களுடன் நட்பாகத்தான் இருக்கிறேன். இதையெல்லாம் கூட என்னால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், அனுஷ்காவுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இது அறுவறுப்பான ஜர்னலிஷம். இதுதான் என்னை ரொம்ப அப்செட் பண்ணியது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் இதுபற்றி கருத்து சொல்லவில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் நான் ஏன் கருத்துச் சொல்லவேண்டும். அது என் தகுதிக்கு குறைவானது. இவ்வாறு நாகார்ஜுனா கூறினார்.


3 கோடி செலவில் ராஜபாட்டை கிளைமாக்ஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம், தீக்ஷா சேத் நடிக்கும் படம் 'ராஜபாட்டை'. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி ஸி3 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு நாட்கள் எடுக்கப்பட்ட இக்காட்சியில் விக்ரம் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி பட யூனிட் கூறும்போது, ''இதில் ஜிம் மாஸ்டராக விக்ரம் நடிக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் பிரமாண்டமாக இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் நினைத்தார். அதன்படி செயற்கை மழையில் ஷூட்டிங் நடந்தது. இக்காட்சி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். இதோடு படம் முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி. இதற்காக அடுத்த மாதம் ஐரோப்பா செல்ல இருக்கிறோம்'' என்றனர்.


வல்லினம் படத்துக்கு தொடர்ந்து 72 மணிநேரம் ஷூட்டிங்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஈரம்' படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கும் படம் 'வல்லினம்'. நகுல், பிந்து மாதவி, அதுல் குல்கர்னி உட்பட பலர் நடிக்கின்றனர். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இடைவிடாமல் 72 மணிநேரம் செங்கல்பட்டு அருகே நடந்துள்ளது. இதுபற்றி இயக்குனர் அறிவழகனிடம் கேட்டபோது கூறியதாவது: இது பேஸ்கட் பாலை மையப்படுத்திய ஆக்ஷன் கதை. தமிழில் அதிகமாக ஸ்போர்ட்ஸ் படங்கள் வரவில்லை என்றாலும் இது முற்றிலும் அது தொடர்பான கதை கிடையாது. கமர்சியல் அம்சங்கள் நிறைந்த கதை. படத்தில் ரயில் தொடர்பான காட்சி முக்கியமானதாக வருகிறது. இதனால் சிறப்பு அனுமதி பெற்று, செங்கல்பட்டில் ஷூட்டிங் நடத்தினோம். இந்தி நடிகர் அதுல் குல்கர்னி வேறு படத்துக்கு செல்ல வேண்டி இருந்ததால் தொடர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். 72 மணிநேரம் ஷூட்டிங் தொடர்ந்து நடந்தது. நகுல், நான் உட்பட எல்லோருமே சோர்வடைந்து விட்டோம். இதுவரை இப்படி யாரும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்களா தெரியவில்லை. தமன் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். இவ்வாறு அறிவழகன் கூறினார்.


இரண்டு ஹீரோயின்களுடன் நடிப்பதில் தவறில்லை : டாப்ஸி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பது நல்ல அனுபவம்தான் என்றார் டாப்ஸி. தற்போது தெலுங்கு படங்களில் நடித்துவரும் டாப்ஸி, கூறியதாவது: ஒவ்வொரு படத்தின் இயக்குனர்தான் ஹீரோயின்களை தேர்வு செய்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் கேரக்டருக்கு யார் பொருந்துவார் என்பதை அவர்தான் முடிவு செய்கிறார். அதனால் இப்படி நடித்திருக்கலாமே, அதை செய்திருக்கலாமே என்று கூறுவது நான் பொருட்படுத்தமாட்டேன். தெலுங்கு படங்களில் இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. கேரக்டரை மட்டும்தான் பார்க்கிறேனே தவிர, உடன் நடிப்பது எத்தனை ஹீரோயின், எத்தனை ஹீரோ என்று பார்ப்பதில்லை. சிலர், 'படத்தில் இவர்கள் முதல் ஜோடி. அவர்கள் இரண்டாவது ஜோடி' என்று சொல்வதை கேட்டு வெறுப்புதான் வருகிறது. இதை நான் விரும்பவில்லை. ஒரு படம் என்றால் அனைவருமே முக்கியமானவர்கள்தான். இதில் சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்க முடியாது. தமிழ், தெலுங்கை அடுத்து இந்தியில் டேவிட் தாவன் படத்தில் நடிக்கிறேன். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.


திருமலை ஏழுமலையான் கோயிலில் ரஜினிகாந்த் தரிசனம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
''ஏழுமலையான் அருளால் பூரண குணம் அடைந்துள்ளேன்'' என நடிகர் ரஜினி காந்த் கூறினார். சிகிச்சைக்குப் பின்னர் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய நேற்று மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7.30 மணி அளவில் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். ரஜினி காந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் அவர் மட்டும் மகாதுவாரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருடைய குடும்பத்தினர் வைகுண்டம் வழியாக சென்று தரிசனம் செய்தனர்.

பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்துக்கு வந்த அவர்களுக்கு தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் கோயில் சார்பில் பிரசாதம் வழங்கினர். வேண்டுதலுக்காக, துலாபாரத்தில் தனது எடைக்கு எடையாக 85 கிலோ கற்கண்டை காணிக்கையாக ரஜினி காந்த் வழங்கினார். பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்தை பக்தர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

அப்போது ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், ''தற்போது நான் நன்றாக உள்ளேன். ஏழுமலையான் அருளால் பூரண குணம் அடைந்துள்ளேன். சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஷ்வின், நடிகர் மோகன்பாபு மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர்.


இ.பி.கோ ஆனது கடமை கண்ணியம் கட்டுப்பாடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'புலி வேசம்' ரிலீசுக்குப் பிறகு ஆர்.கே ஹீரோவாக நடிக்கும் படம், 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு'. ஆப்பிள் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் விவேக், மீனாட்சி தீக்ஷித் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சஞ்சீவ் சங்கர். இசை, ஸ்ரீகாந்த் தேவா. திரைக்கதை, வசனம்: வி.பிரபாகர். இயக்கம், ஷாஜி கைலாஷ். முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் 30 நாட்கள் நடந்தது. இந்நிலையில், படத்தின் பெயர் 'இ.பி.கோ' என்று மாற்றப்பட்டுள்ளதாக, பட வட்டாரம் தெரிவித்தது. அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.


Thursday 20 October 2011

முன்னாள் போராளிகளுக்கு தீபாவளிப் பரிசு


புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 370 பேர் எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ். சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடத்தப்படவுள்ள தீபாவளி தின நிகழ்ச்சியின்போது, பிரதமர் டி.எம். ஜயரத்ன முன்னிலையில் இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட 10 ஆயிரத்து 243 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடாபி அவரது சொந்த ஊரான சிர்ற்றில் கொல்லப்பட்டுள்ளார் படங்கள் இணைப்பு


லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபி அவரது சொந்த ஊரான சிர்ற்றில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

லிபியாவின் தற்காலிக அரசின் தகவல்துறை அமைச்சர் முகமட் சம்ம்மான், தமது படையினர் கடாபியின் சடலத்தைக் கண்டதாக அறிவித்திருப்பதாக கூறியுள்ளார்.

லிபிய அரசின் மற்றொரு அதிகாரியும் கடாபி இறந்து விட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக கேணல் கடாபி உயிருடன் பிடிபட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அவரது இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், நோயாளர் காவு வண்டியில் அவரை ஏற்றிச் செல்வதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அதேவேளை கடாபி தனது சொந்த ஊரில் இருந்து தப்பியோட முனைந்த போது நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த நிலையிலேயே புரட்சிப் படைகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

முகத்திலும், கழுத்திலும் இரத்தம் வழிந்த நிலையில் கேணல் கடாபி தூக்கிச் செல்லப்படும், காட்சி கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் முதலில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

அதேவேளை, கேணல் கடாபி தொடர்பாக குழப்பமான தகவல்களும் வெளியாகின்றன.


அவர் கொல்லப்பட்டுள்ள போதும் உயிருடன் சிக்கியே மரணமானாரா? கொல்லப்பட்ட பின்னர் அவரது சடலம் சிக்கியதா? எவ்வாறு அவர் மரணமானார் என்பன போன்ற கேள்விகளுக்கு இன்னமும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை.

கடாபி வீதி ஒன்றின் மதகினுள் ஒளிந்திருந்தபோதே, பிடிபட்டதாகவும், அவரைப் பிடித்த போது தன்னைச் சுட வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் புரட்சிப்படையைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

கேணல் கடாபியிடம் இருந்து கைப்பற்றிய தங்கத்தில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றையும் அவர் காண்பித்துள்ளார்.

கொல்லப்பட்ட கடாபியின் உடலைச் சுற்றி புரட்சிப் படையினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் காணொலிக் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.


இராணுவப் புரட்சி மூலம் லிபியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கேணல் கடாபி 42 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் புரட்சியாளர்களிடம் ஆட்சியை இழந்த கேணல் கடாபிக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா