தலைக்கவசம் (ஹெல்மட்) அணிந்து வந்த இருவர் சுமார் 1.7 மில்லியன் ரூபாவை அபகரித்து சென்ற சம்பவம் நேற்று புத்தளம் நகரில் இடம்பெற்றது.
குருநாகல் வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளரான முஹம்மது நிஜாம் என்பவர் புத்தளம், இலங்கை வங்கியில் வைப்பீடு செய்வதற்காக இப் பணத்தை கொண்டுவரும் போது வங்கிக்கு அருகில் வைத்து முழு முகத்தையும் மறைக்கும் ஹெல்மட் அணிந்த இருவர் மின்னல் வேகத்தில் முஹம்மது நிஜாமை தாக்கிவிட்டு பணத்தை அபகரித்து சென்றனர்.
இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. புத்தளம் பொலிஸார் புலன்விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment