Saturday 17 September 2011

சிங்கள அரசின் போர்குற்றத்தை எதிர்த்து நிற்கும் சர்வதேசத்திற்கு பலம் சேர்ப்போம்!சுவிஸ் இளையோர் அமைப்பு


இது நாம் அமைதியாக இருக்கும் நேரம் இல்லை. சுவிஸ் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டதொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு பலம் சேர்க்கும் முகமாக ஒன்று படுவோம்.நாம் எம் இனம் பட்ட துன்பங்களை மறந்துவிட்டோமா? குழந்தைகள், இளையோர்கள், கர்ப்பிணி பெண்கள் என கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டீர்களா? இன்னமும் சித்திரவதையை அனுபவித்து கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டீர்களா? அன்றே சொன்னோம் சர்வதேசம் கேட்க்கவில்லை, இன்று அவர்கள் கேட்க்கும் தருனத்தில் நாம் அமைதி காப்பது சரியா?

நாம் எமது மண்ணிற்காகவும், உறவுகளுக்காகவும் செய்யவேண்டிய கடமைகள் உள்ளன. எமது காலத்தின் கடமை உணர்த்து பொங்குதமிழராய் வாரீர்...19.09.2011 அன்று முருகதாசன் திடலில் (ஐ. நா. முன்றலில்) இலங்கை அரசாங்கம் நடத்திய போற்குற்றதிற்கு எதிர் ஓலி பறைத்திட வாரீர்.

புலம்பெயர் தமிழீழ மக்களே...
இன்று மட்டுமல்ல என்றென்றும்
பொங்கட்டும் உங்கள்
உணர்வுகள் எங்களுக்காக...

பொங்கட்டும் உங்கள் கோபம்
சிங்களத்திற்கெதிராய் பொங்கட்டும்...
தமிழீழத்தமிழரின் வாழ்வுக்காய்
பொங்குதமிழாய் பொங்கட்டும்...

தன் மானத் தமிழினமே
மண் மானம் காப்பதுவே
மகத்தான கடமையன்றோ...

பொறுமையின் எல்லை போதுமே
பொங்கி எழுவோம் தர்மமே
எதிரியவன் சிதறி ஓடிட
தமிழா நீ உறுமிப் பாய்ந்திடு...

சுவிஸ் இளையோர் அமைப்பு

இலங்கை அகதி தூத்துக்குடியில் தற்கொலை


தூத்துக்குடியில் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார். இலங்கையைச் சேர்ந்தவர் பெரில் அந்தோணி நோனிஸ்(45). 2004ல், அகதியாக சென்னை வந்த இவர், போதைபொருள் கடத்தலில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்தாண்டு ஏப்ரலில் விடுதலையான இவர் சிறை நண்பர் ஜேசுமரியான் உதவியுடன் தூத்துக்குடி வந்தார். வாசனை திரவியம் விற்பனை செய்த இவர், காதர் மீரான் நகரில் ரெபேக்காள் என்ற பெண்ணுடன் ஒரு வீட்டில் குடும்பம் நடத்தினார்.

பெரில், அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்ததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, ரெபேக்காள் சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டுவெளியேறினார்.

இதனால், மனமுடைந்த பெரில், நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தெர்யால்நகர் போலீசார் விசாரித்தனர்.

மர்ம மனிதன் எனக் கூறி இளைஞனைப் பிடித்து காவற்றுறையில் ஒப்படைத்த இராணுவத்தினர்


யாழ். சாவகச்சேரியில் மர்ம மனிதன் எனக் கூறி சிறிலங்கா இராணுவத்தினரால் இளைஞன் ஒருவர் பிடிகடகப்பட்டு
சாவகச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆயினும் இச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் நாடகமாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பலாலி படைத்தலைமையக ஊடகப்பிரிவினர் இன்று குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்க்கு அழைத்துச் சென்று விளக்கமளித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் இராணுவத்தினர் தெரிவித்ததாவது.

சாவகச்சேரி பருத்துறை வீதியில் கனகம்புளியடிச் சந்திக்கு சுமார் 500மீற்றர் தொலைவிலுள்ள 11வது படையணி முகாமிற்க்கு அருகில் பற்றைக் காடு நிறைந்த பகுதி ஒன்றில் இன்று காலை 8 மணியளவில் இளைஞன் ஒருவன் உடையில்லாமல் நின்று கொண்டிருந்ததாகவும் அவரைப் பிடிப்பதற்கு படையினர் முயற்சித்த வேளை அவர் அருகிலிருந்த இராணுவ முகாமை நோக்கி ஓடியுள்ளார். பின்னர் இளைஞன் பற்றைக் காட்டுப் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாகவச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். சிறிலங்காப் படையினர் இன்று ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனைப் பிடித்து இராணுவத்தினர் விசாரித்த போது ,அவ் இளைஞன் சங்கத்தானையைச் சேர்ந்தவர் எனவும் அப் பகுதியால் செல்லும் பெண்களை மடக்குவதற்காகவே அங்கு பதுங்கியிருந்நதாகவும் ,தான் தனது பாதுகாப்பிற்காக இராணுவ முகாம் நோக்கி ஓடியதாகவும் தெரிவித்ததாகப் படையினர் கூறினர்.

இராணுவத்தினர் சாவகச்சேரி காவற்றுறையினரிடம் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றனர். குறித்த இளைஞனை இராணுவத்தினர் மடக்கிப்பிடித்து ஒப்படைத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தவுள்ளதாகவும் காவற்றுறையினர் தெரிவித்தனர்.

மர்மமனிதன் விடயத்தில் இராணுவதினர் மீது மக்கள் வீண் பழி சுமத்துகின்றனர். மர்ம மனிதர் என்று ஒருவர் இல்லை என மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டனர். தொடர்ந்தும் இராணுவத்தினர் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்த சம்பவம் குறித்து இளைஞனின் உறவினரும் ஊர்க்காரரும் "குறித்த இளைஞன் சல்லி வாங்குவதற்கு அப்பகுதிக்குச் சென்றதாகவும் சாலையில் நின்று கொண்டிருந்த பேகாது அங்கு வந்த இராணுவத்தினர் அவரைத் தாக்கியதாகவும் அதன் பின்னர் மர்மமனிதன் எனக் கூறி சாகவச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இச் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் இராணுவத்தினர் ஊடகவியலாளர்களுக்குக் காட்டினர். பருத்தித்துறை வீதியில் கனகம்புளியடிச் சந்தியிலிருந்து சாவகச்சேரி வரும் வழியில் 500 மீற்றர் தொலைவில் சிறிலங்காப் படையினரின் 11வது படையணி முகாம் ஒன்று உள்ளது. அதனைச் சுற்றி பற்றைக் காட்டுப் பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாகப் படையினர் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் உடைகள் எதுவும் அணியாது பதுங்கியிருந்ததாக படையினர் காட்டிய இடம் பருத்தித்துறை சாலையின் கரையில் இருந்தது. பற்றைகள் மூடிய ஆனால் சாலையில் செல்பவர்கள் பார்க்கக் கூடிய வகையிலேயே இருந்தது. அவர் ஓடியதாக கூறப்படும் பகுதி இராணுவ முகாமைச் சுற்றிய பகுதி.

இராணுவத்தினர் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.ஆனால் நடந்த சம்பவம் குறித்து இளைஞனின் உறவினரும் ஊர்க்காரரும் "குறித்த இளைஞன் சல்லி வாங்குவதற்கு அப்பகுதிக்குச் சென்றதாகவும் சாலையில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த இராணுவத்தினர் அவரைத் தாக்கியதாகவும் அதன் பின்னர் மர்ம மனிதன் எனக் கூறி சாகவச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைத்ததாகவும் இராணுவத்தினர் நாடகமாடுவதாகவும் தெரிவித்தனர். இதே போன்று சம்பவம் இடம்பெற்ற கனகம்புளியடியைச் சேர்ந்த மக்களும் இராணுவத்தினரின் அடாவடி எனவும் இது ஒரு கட்டுக்கதை எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் குறித்த இளைஞனை மருத்துவப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சாவகச்சேரி காவற்றுறையினர் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகங்கள் வீண்போவதில்லை லிபிய போராளிகளுக்கு ஐ.நாவில் உறுப்புரிமை.அடுத்தது ஈழத் தமிழருக்கே


இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய அரங்கில் ஆதரவான காற்று மெல்ல மெல்ல வீச ஆரம்பித்துள்ளது.

உயிர் கொடுத்த போராளிகளின் தியாகங்கள் வீண்போவதில்லை என்ற வரலாறு கண் முன் நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது. சிறீலங்காவின் நண்பனான கேணல் கடாபிக்கு எதிராக விடுதலைப் புலிகளைப் போல போராடிய போராளிகளுக்கு ஐ.நாவில் உறுப்புரிமை கிடைத்துள்ளது. மொத்தம் 114 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன, வெறும் 17 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளன. இதில் அதிகமானவை சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளாகும். சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்கவில்லை.

ஐ.நாவின் லிபியாவுக்கான ஆசனத்தில் போராளிகள் தரப்பில் இருந்து புதிய பிரதிநிதிகளாக அப்துல்ரகுமான் சல்காம் அமரவுள்ளார். போராட்டக்குழுவான ரீ.என்.ஏயின் பிரதிநிதி ஐ.நாவில் அமர்வது போராட்டத்தை நடாத்திய ஈழத் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். லிபிய போராளிகளான ரீ.என்.ஏ போலவே விடுதலைப் புலிகளும் ஐ.நாவால் அங்கீகரிக்கப்படும் போராட்டக்குழுவாக வரும் நாள் மெல்ல உருவாகிறது. இதன் ஓரங்கம் போல வரும் 23 ம் திகதி பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் நிரந்தர அங்கத்துவம் வழங்கும் பிரேரணை வருகிறது. பாலஸ்தீனத்திற்கு உறுப்புரிமை கிடைத்தால் அதற்கு அடுத்த உறுப்புரிமை ஈழத் தமிழருக்கே என்பதில் மறுபேச்சுக்கும் இடமுண்டோ..?

இது இவ்விதமிருக்க கேணல் கடாபி தொடர்ந்து போரை நடாத்துவார், நீண்ட போர் ஒன்றுக்கு தமது படையணிகள் தயாராவதாக கடாபியின் இராணுவப்பிரிவை சேர்ந்த மூஸா இப்ரகீம் தெரிவித்தார். நேற்று கடாபியின் சொந்த நகரான பானி வலீட்டில் நடைபெற்ற கடும் போரில் வெல்ல முடியாது போராளிகள் பின்வாங்கிய பின்னர் மேற்கண்ட தெனாவட்டு கருத்து வெளியாகியுள்ளது.

Friday 16 September 2011

கைமாறிய விக்ரமின் ராஜபாட்டை!


விக்ரம் நடிக்க சுசீந்திரன் இயக்கும் ராஜபாட்டை படத்தை பிரபல வர்த்தகர் பிரசாத் வி பொட்லூரி வாங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் இந்த ராஜபாட்டை. தெலுங்கில் பிரபலமான தீக்ஷா சேத் நாயகியாக அறிமுகமாகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம் ரமேஷ் பாபுவின் கனகதாரா பேனரில் தயாராகி வந்தது.

இந்த நிலையில், ரமேஷ் பாபு பண நெருக்கடி மற்றும் சில சட்ட சிக்கல்களில் மாட்டிக் கொண்டதால், அவரிடமிருந்து பிரசாத் வி பொட்லூரியின் பிவிபி சினிமாஸ் பேனருக்கு மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 39 கோடியில் தயாராகும் படம் இந்த ராஜபாட்டை. விக்ரமின் அதிகபட்ச பட்ஜெட் படம் இதுதான் என்கிறார்கள். அப்ப கந்தசாமி... 'சும்மா' சாமியா?

இந்தியில் காஞ்சனா... உறுதி செய்தார் சல்மான்கான்!


ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தமிழில் பெரும் வெற்றி பெற்ற திகில் காமெடி படமான காஞ்சனாவை இந்தியில் ரீமேக் செய்கிறார் சல்மான்கான். இதற்கான அதிகாரப்பூர்வமனா அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சல்மான்கான் சகோதரர் சோஹைல் கான் கூறுகையில், "சல்மான் அடுத்து நடிக்க இருந்த ஷெர்கான் படத்தை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளோம்.

அடுத்து தமிழ்ப் படமான காஞ்சனா ரீமேக்தான். இந்தப் படத்தை நான் இயக்குகிறேன். ராகவா லாரன்ஸ் கதை - திரைக்கதை எழுதுகிறார்," என்றார்.

இந்தப் படம் 3 டியில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சல்மான் இப்போது நடித்துவரும் ஏக்தா டைகர் படப்பிடிப்பு முடிந்ததும் காஞ்சனா துவங்கும். 2012 ரம்ஜானுக்கு இந்தப் படம் வெளியாகிறது.

சமீப காலமாக தமிழ்ப் படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் சல்மான். வான்டட் (போக்கிரி), பாடிகார்ட் (காவலன்) போன்ற படங்கள்தான் அவருக்கு பெரிய வெற்றியைத் தந்துள்ளன என்பது நினைவிருக்கலாம்.

லண்டன் மியூசியத்தில் கரீனாவுக்கு மெழுகு சிலை!


லண்டனின் புகழ்பெற்ற மேடம் டுஸாட் மியூசியத்தில் நடிகை கரீனா கபூருக்கு மெழுகுச்சிலை நிறுவப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை அந்த மியூசியம் இன்று வெளியிட்டுள்ளது.

லண்டனில் பிளாக்பூல் பகுதியில் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியமான மேடம் டுஸாட் உள்ளது. இங்கு உலக தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகைகளின் முழு உருவ மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.

பாலிவுட்டின் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரேஷன், ஐஸ்வர்யா ராய் போன்றோரின் மெழுகு சிலைகள் இந்த மியூசியத்தில் உள்ளது.

தற்போது இந்தி நடிகை கரீனாகபூரின் மெழுகு சிலையும் இங்கு நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் இந்த சிலை திறந்து வைக்கப்படுகிறது.

இதுபற்றி கரீனா கபூர் கூறும் போது லண்டன் மியூசியத்தில் எனக்கு மெழுகு சிலை வைப்பது பெருமை அளிப்பதாக உள்ளது என்றார்.

இந்த சிலை மியூசியத்தில் நிறுவப்படுவதற்கு முன் ஹாங் காங், லண்டன், பாங்காக் உள்ளிட்ட 6 சர்வதேச நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைப்பவரும் கரீனாதான்.

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து இந்த மியூசியத்தில் இடம்பெறும் சிலை கரீனாவுடையதுதான்.

செல்வராகவன் குடும்பத்தைக் கெடுக்க முயற்சிக்கவில்லை - ஆன்ட்ரியா


செல்வராகவன் குடும்பத்தை நான் கெடுக்க முயற்சித்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை ஆன்ட்ரியா கூறினார்.

செல்வராகவனுக்கும் அவரது முதல் மனைவி நடிகை சோனியா அகர்வாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விவாரத்து வரை போக காரணமானவர் நடிகை ஆன்ட்ரியாதான் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து ஏராளமான செய்திகள் ஊடகங்களில் வந்தன. இதை உறுதிப் படுத்தும் வகையில் ஆன்ட்ரியா, செல்வராகவனின் அனைத்துப் படங்களிலும் ஆஸ்தான நாயகியாக இருந்தார்.

ஆனால் செல்வராகவன் கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அடுத்து, செல்வராகவனின் படங்களிலிருந்து ஆன்ட்ரியா நீக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார்.

"இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் யார் குடும்பத்தையும் கெடுக்கும் எண்ணம் கொண்டவள் அல்ல. திருமணமாகி மனைவியுடன் வாழும் ஒருவரை நான் கெடுக்க முயற்சித்ததாக கூறப்படுவது அநியாயம். செல்வராகவன் அவரது வாழ்க்கையை சந்தோஷமாக வாழட்டும்," என்றார்.

புத்தத் துறவி 'தாமோ'வாக சூர்யா!


ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்துக்கு ரூ 10 கோடி செலவில் கிராபிக்ஸ் அமைத்துள்ளார்களாம்.

காட்சியின் முக்கியத்துவம் கருதி இந்த காட்சிகளுக்கு மிகுந்த தாராளம் காட்டியுள்ளார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

ரஜினியின் எந்திரனுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை அசத்தலாக அமைத்து பிரமிக்க வைத்த அமெரிக்காவில் உள்ள ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோவில்தான் இந்தப் பணிகள் நடக்கிறதாம்.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பாக, மொத்தம் 10 நிமிடங்களுக்கு புத்தத் துறவியாக வருகிறாராம் சூர்யா. இந்தப் பாத்திரத்துக்கு 'தாமோ' என்று பெயர். தமிழ்நாட்டில் பிறந்த ஒரு துறவிக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிடுவதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கதையின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளாராம் முருகதாஸ்.

விசித்ராவின் தந்தையைக் கொன்றது ஏன்?- கொள்ளையர்கள் வாக்குமூலம்


ஸ்ரீபெரும்புதூர்: உல்லாசமாக வாழத் தான் நடிகை விசித்ராவின் தந்தையைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்ததாக கைதான 2 வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை விசித்ராவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டறை ஆகும். இங்கு அவரது தந்தையின் பூர்வீக நிலங்கள், வீடு ஆகியவை உள்ளன.

இந்த வீட்டில் விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி வசந்தா ஆகியோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை 3 மணியளவில்
முகமூடி அணிந்த இருவர் ஜன்னலை உடைத்துக் கொண்டு வீட்டில் புகுந்தனர். அவர்கள் வில்லியம்சை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். விசித்ராவின் தாயையும் தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் மயங்கி விழுந்தார்.

உடனே கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் விசித்ரா வீட்டில் இருந்த 2 செல்போன்களையும் திருடிச் சென்று பயன்படுத்தினர். செல்போன் டவரை வைத்து கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

நேற்று சுங்குவார்சத்திரத்தை அடுத்த சோகண்டி கூட்டு சாலையில் சென்ற 2 வாலிபர்களைப் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் விசித்ராவின் தந்தையைக் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.

அவர்கள் இருவரும் செல்லம்பட்டிடையை அடுத்த ஏலபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (29), வேலு (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த வாக்குமூலம் வருமாறு,

நாங்கள் கிராமத்தில் எலி, அணில், பாம்பு ஆகியவைகளை வேட்டையாடி வந்தோம். கிராம மக்கள் கொடுக்கும் வேலைகளை செய்து வந்தோம். அப்போது வில்லியம்ஸ் அவரது மனைவி மேரி வசந்தா பண்ணை வீட்டில் அடிக்கடி வந்து தனிமையில் தங்கி வந்ததை நோட்டமிட்டோம். மேரி வசந்தா நிறைய நகைகளை அணிந்து இருப்பார். எங்களுக்கும் மற்றவர்களை போல் உல்லாசமாக வாழ ஆசையாக இருந்தது.

கடந்த 2.6.11 அன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கும்போது அதை தடுத்த வாலிபர் மூர்த்தியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டோம்.

இதையடுத்து வில்லியம்ஸ் வீட்டிலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினோம். சம்பவத்தன்று நள்ளிரவு வில்லியம்ஸ் வீட்டில் புகுந்து அவரை கத்தியால் குத்தினோம். அவர் அங்கேயே இறந்தார்.

அவரது மனைவி மேரி வசந்தாவிடம் நகைகளை பறித்துக் கொண்டு அவரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடினோம் என்று கூறியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளிகளைப் பிடித்த தனிப்படையை ஐ.ஜி. சைலேந்திர பாபு பாராட்டி, பரிசு வழங்கி கௌரவித்தார்.

சினேகா, த்ரிஷா, ஸ்ரேயாவுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!


15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தி உறுப்பினராகாவிட்டால், தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாது என நடிகைகள் சினேகா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோருக்கு தெலுங்கு நடிகர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று கடந்த வாரம் சென்னையில் கூடிய நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 30-ந்தேதிக்குள் உறுப்பினராக கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இது போல் தெலுங்கு நடிகர் சங்கமும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பளம் அதிகம் என்பதால் இந்தி, தமிழ், மலையாள நடிகைகள் பலர் தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இதுவரை உறுப்பினராகவில்லை இதையடுத்து உறுப்பினராகாத நடிகைகள் பட்டியலை தெலுங்கு நடிகர் சங்கம் தயார் செய்தது.

அவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் உறுப்பினராக வேண்டும் என்று கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகள் த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா, நித்யாமேனன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இவர்கள் தமிழ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி விட்டனர். ஆனால் தெலுங்கில் இன்னும் உறுப்பினர் ஆகவில்லையாம். 15 நாட்களுக்குள் உறுப்பினராகாவிட்டால் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உறவுக்காரப் பெண் சரண்யாவை மணந்தார் இயக்குனர் சற்குணம்


தஞ்சை: களவாணி புகழ் இயக்குனர் சற்குணம் தனது உறவுக்காரப் பெண்ணான சரண்யாவை மணந்தார்.

களவாணி படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சற்குணம். அவருக்கும், அவரது உறவுக்காரப் பெண்ணான சரண்யாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் திருமணம் நிச்சயி்த்தபடி நேற்று (15-ம் தேதி) தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தேத்தாடிக் கொல்லை, ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் நடந்தது.

வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்ல சற்குணம் மணமகள் சரண்யா கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டினார். அவர்களை பெரியோர்கள் அட்சதைத் தூவி வாழ்த்தினார்கள்.

இந்த திருமணத்திற்கு நடிகர் விமல் தனது மனைவியுடன் வந்திருந்தார். மேலும் நடிகர்-இயக்குனர் பாக்கியராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், நடிகை சரண்யா பொன்வண்ணன், அவரது கணவர் பொன்வண்ணன் உள்பட பலர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமகள் சரண்யா எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். சற்குணத்தின் அடுத்த படம் வாகை சூடவா வரும் 23-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சோனா பப்ளிசிட்டி தேடுகிறார்! - சரண்


சென்னை: விளம்பரத்திற்காக தன் மீது நடிகை சோனா வீண் பழி சுமத்துவதாக தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.

பிரபல கவர்ச்சி நடிகை சோனா, மங்கத்தா படத்திற்காக இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தனக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக குற்றஞ்சாட்டினார். பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, பகிரங்கமாக தன்னிடம் சரண் மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி.சரண் சோனா புகாருக்கு மறுப்பு கூறியுள்ளார்.

சோனா தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''விருந்து நிகழ்ச்சியில் நான் எதுவும் முறை தவறி நடக்கவில்லை. சோனாதான் பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறார். படம் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசினேன்,' என்றார்.

இதனிடையே விருந்து நிகழ்ச்சியில் இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று இயக்குனர் வெங்கட்பிரபுவும் மறுத்துள்ளார்.

வெங்கட் பிரபுவும் சரணும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் லிபிய விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளை, கடாபிக்கு எதிரான லிபிய போராளிகளுக்கு ஒப்பிட்டு, நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றதில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து இலங்கையர்களுக்கு எதிரான வழக்கு நேற்றைய தினம் ஹேக் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பிரதிவாதிகள் தரப்பில் வாதிட்ட பிரபல சட்டத்தரணி, தமது தரப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே நிதி திரட்டியதாக சுட்டிக்காட்டினார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும், அவர்கள் கடாபிக்கு எதிரான போராட்டக் குழுவுக்கு ஒப்பான விடுதலைப் போராளிகள் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கின் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி விக்டர் கொப்பே, விடுதலைப் புலிகள் லிபிய விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்களா என்ற வாதம் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

எதிர்வரும் மூன்று வாரங்களில் விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளா அல்லது பயங்கரவாதிகளா என்ற விவாதம் ஹேக் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே, நிதி வழங்கல் தொடர்பில் கைதான குறித்த ஐவரினதும், ஏனைய நெதர்லாந்து தமிழர்களின் நிதிவழங்கல் வழக்குகளும் தங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையை மூவர் கொண்ட ஹேக் நீதிமன்றம் நீக்கினால், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்குவது சட்ட ரீதியானதாக்கப்படும் என கொப்பே சுட்டிக்காட்டியுள்ளார். உலக அரங்கில் இந்த வழக்கு ஒரு முக்கியமான வழக்காகப் பார்க்கப்படுவதோடு, இலங்கை அரசும் இதனை உண்ணிப்பாகக் கவனித்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்!

நமது உறவுகளை துடிக்கத் துடிக்க கொன்று குவித்த இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அமெரிக்கா வருகின்றார். அவர் வருகின்ற தேசத்தில் அவருக்கு செங்கம்பளம் விரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இல்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் கம்புகளில் பறக்கும் நமது கொடிகளைத் தாங்கியபடி அவருக்கு “தண்டனையை வழங்குங்கள்” என்று கோசமிடுவதற்கு தயாராக வேண்டும்.

ஆமாம் நமது உறவுகளே!

நமது உறவுகளுக்கு “பயங்கரவாதிகள்” என்ற நாமத்தை சூட்டி கொடிய ஆயுதங்களால் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்குகொண்டு உரையாற்றுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வருகின்றார் என்ற செய்தி நமக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இல்லையா?

அவருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்புக்குழுவின் அறிவிப்பையும் அசட்டை செய்து விட்டு அமெரிக்கா வருகின்ற அவருக்கு நாம் எவ்வாறு எதிர்ப்பை காட்டலாம் என்பதோடு மட்டுமல்லாது, அவர் உரையாற்றப் போகும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அதிகபட்ச நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் மகிந்த'வின் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

இந்த வாரம் இலங்கைக்கு வெளியே உள்ள நாடுகளில் மகிந்த'விற்கு எதிரான பல விடயங்கள் அரங்கேறியுள்ளன.

குறிப்பாக அவரது போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளோ அல்லது கவனிப்புக்களோ முற்றாகவே நகராமல் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதை பல பேச்சாளர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

உதாரணமாக கனடாவைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ஜெனிவா பிராந்திய அலுவலகத்தில் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார்.

மேற்படி இரண்டு தடவைகளிலும் இலங்கை அரசினதும் மகிந்த ராஜபக்ச'வினதும் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அங்கு வாழும் தமிழ் மக்கள் மேற்படி விடயங்கள் தொடர்பான சிறிய அளிவிலான கருத்தரங்குகளை நடத்தி அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மகிந்த'வின் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை வலியுறுத்தியுள்ளனர்.

மறுபக்கத்தில் அமெரிக்காவில் பல உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கு மகிந்த'வின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிப்படங்களும் காண்பிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மகிந்தாவின் அமெரி;க்க வருகையை முன்னிட்டு ஆர்;ப்பாட்டங்களை நடத்த புலம் பெயர் தமிழ்மக்கள் தயாராகிவிட்டனர்.

இவ்வாறு பார்க்கும் போது இனிவரும் நாட்களும் வாரங்களும் மாதங்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஒருமித்த நோக்கமுள்ள நாட்களாகவே அமையவேண்டும்.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச'விற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களின் இந்த ஒரே நோக்காகவேண்டும். இதையே கனடா உதயன் வலியுறுத்துகின்றான்.

கனடா உதயன் கதிரோட்டம்

தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது: திருமாவளவன்

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், வன்னி அரசு, வெற்றிச் செல்வன், சுப வீரபாண்டியன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்,

’’அப்பாவி தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது திட்டமிட்டு நடத்திய தாக்குதலாகும்.

தமிழக அரசு அறிவித்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடத்துவது நம்பிக்கை கிடையாது. இதனால் உண்மை வெளிவராது. அதனால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றால் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அரசு விழாவாக நடத்த வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்டஈடு போதுமானதாக இல்லை. கூடுதலாக வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

மூவரையும் தூக்கில் ஏற்றியே தீருவேன்: காங்கிரஸ் வெங்கட் சபதம்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது தண்டனை அனுபவித்துவரும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரைக் காப்பாற்ற பலர் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அதிலும் செங்கொடி என்னும் பெண் தன்னையே எரித்து இந்த தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஆனால் காங்கிரஸ் காரர்கள் இதனை விட்டபாடாக இல்லை. இந்த மூவரையும் தூக்குமேடைக்கு அனுப்பாமல் ஓயமாட்டோம் என்று இரவு பகலாக என்ன செய்யலாம் எனத் திட்டம் போடுகிறார்கள். இவர்கள் கொலைவெறிக்கு ஒரு அளவே இல்லையா ? இவர்களும் மனிதப் பிறப்புக்காளா என வெட்கி நாணும் அளவுக்கு இவர்கள் செயல் அமைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு தலைவராக முன்னர் இருந்த மூப்பனார் பெயரைச் சொல்லி "மூப்பனார் பேரவை" என்னும் இயக்கம் ஒன்றை எல்.கே. வெங்கட் என்பவர் நடத்திவருகிறார். அவர் தூக்குதண்டனைக் கைதிகளின் மனுவை சென்னையில் விசாரிக்கக்கூடாது எனவும் அதனை வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும் எனவும் இந்திய உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளார் என்றால் பாருங்களே. கொலைவெறி ஒரு காரணமாகவும் தனது பெயர் அகில இந்திய அளவில் பேசப்படவேண்டும் என்பதற்காகவும் இந்த வெங்கட் இப்படி ஒரு ஈனத்தனமான காரியதைச் செய்திருப்பதோடு எலும்புத் துண்டைப் போடும் சோனியாவுக்கும் வாலாட்டி நிற்கிறார்.

தமிழ் நாட்டில் உள்ள நீதிமன்றில் நீதி கிடைக்காதாம் என்பது இவரது வாதம். அதாவது 3 பேரின் வழக்கை விசாரித்து தமிழ் நாடு நீதிமன்றம் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்துவிட்டால் அவர்கள் மூவரும் தப்பிவிடுவார்கள் என வெங்கட் சொல்கிறார். அதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு அல்லது டெல்லிக்கு மாற்றவேண்டுமாம். இதற்காக இவர் கூறும் காரணம் என்ன தெரியுமா ? வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தால் விசாரணையை சுதந்திரமான சூழ்நிலையில் நடத்த முடியாது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி நீதிமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்துவார்கள் கடந்த முறை வழக்கு நடக்கும்போது சுமார் 5000 பேர் வரையில் நீதிமன்றைச் சூழ்ந்து நின்றனர் என்று காரணம் காட்டுகிறார் இந்த வெங்கட்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கும் கலைஞருக்கும் தமிழ் நாட்டு மக்கள் நல்ல பாடத்தை புகட்டினார்கள். 90% சதவீத ஆதரவை தமிழ் நாட்டில் இழந்து நிற்கும் காங்கிரஸ் இதுபோன்ற ஈனத்தனமான செயல்களைச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ஆதரவையும் இழக்கப் போகிறது என்பதனை இது எமக்கு உணர்த்தி நிற்கிறது. காங்கிரஸ் என்னும் கட்சியை தமிழ் நாட்டில் குழிதோண்டிப் புதைக்கவேண்டும் என அண்ணன் சீமான் ஏன் முழக்கமிட்டார் என்று இப்போது புரிந்திருக்கும் என நாம் நினைக்கிறோம். தன்னைச் சுட்ட கோட்ஸேயை தண்டிக்கவேண்டாம் என்றார் அண்ணல் காந்தி. ஆனால் அவர் வழிவந்த காங்கிரஸ் கொலைவெறியர்களாக மாறியுள்ளனர்.

ரா ஒன்னில் ஷாரூக்கானைக் 'காப்பாற்றும்' ரஜினி!


ரா ஒன் படத்தில் ஷாருக்கானைக் காப்பாற்றும் சூப்பர் பவர் பாத்திரமாக நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.

உடல் நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இயல்பு நிலைக்கு அவர் திரும்பியதும் முதல் முறையாக கேமரா முன் தோன்றும் படம் ரா ஒன்தான் என்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக வந்துள்ளது.

ஷாரூக்கின் இந்த ரா-ஒன் படம் ரஜினியின் எந்திரன் படத்தின் அப்பட்டமான காப்பி என்றெல்லாம் செய்திகள் உலா வந்த நிலையில், எந்திரன் வேறு, ரா ஒன் வேறு. நாங்கள் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளோம்.அவரை கவுரவிக்கும் விதத்தில் காட்சியும் வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் ஷாருக்கான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரா-ஒன் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் தோன்றப் போவதாக மும்பை பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன. இதுபற்றி கூறப்படுவதாவது:

ரா ஒன்னில் ஷாரூக்கானை பெரும் ஆபத்திலிருந்து காக்கும் ஒரு சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.

இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி நடக்கிறது. ஷாருக்கான் வில்லன்களிடம் சண்டை போடும் போது ஒரு கட்டத்தில் நிராயுதபாணியாக நிற்பார். அவர் உயிரை வில்லன்கள் பறிக்க ஆயத்தமாகும் தருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சூப்பர் காரில் தனக்கே உரிய ஸ்டைலில் சர்ரென்று வந்து நிற்பார்.

அவரது கார் வில்லன்களின் ஆயுதங்களை தன்னுடன் ஈர்த்து ஷாருக்கானை காப்பாற்றும். அப்போது ஷாரூக்கின் உடனிருக்கும் கதாநாயகி கரீனா கபூர் யார் இவர் என்று ரஜினியை பார்த்து கேட்பார். உடனே ரஜினி தனக்கே உரிய பஞ்ச் வசனம் பேசியடி காரிலிருந்து இறங்குவாராம். அவரை ஷாரூக்கான் மிகுந்த மரியாதையுடன் அறிமுகப்படுத்துவது போன்று இக்காட்சி எடுக்கப்படுகிறதாம்.

ஆரம்பத்தில் இந்தக் காட்சியில் ரஜினிபோல வேறு ஒருவருக்கு மேக்கப் போட்டு எடுத்துவிட திட்டமிட்டார்களாம்.

ஆனால் படம் தமிழில், தெலுங்கிலும் வெளியாவதால் ரஜினியே தோன்றினால் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதால் அவரே நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ரஜினியைத் தொடர்பு கொண்டாராம் ஷாரூக். ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு ரா-ஒன் படம் ரிலீசாகிறது இது தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது.

Thursday 15 September 2011

ரஜினியின் இரண்டாவது நாயகியாக இலியானா!


ராணா படத்தில் ரஜினியின் இரண்டாவது நாயகி இலியானாதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் ராணா படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். வில்லனாக சோனு சூட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதைத் தவிர வேறு நடிகர்கள் பற்றி எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் ரஜினியுடன் 6 நாயகிகள் இந்தப் படத்தில் உண்டு என்று முன்பு கேஎஸ் ரவிக்குமார் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் இன்னொரு ஜோடி யார் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கின் டாப் ஹீரோயின் இலியானாதான் அந்த இன்னொரு ஜோடி என்கிறார்கள். இப்போது நண்பன் படப்பிடிப்பில் உள்ள இலியான அந்தப் படம் முடிந்ததும், மொத்தமாக ராணாவுக்கு கால்ஷீட் தந்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஏற்கெனவே ரஜினியின் சுல்தானில் ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி, பின் சில காரணங்களால் விலகியவர்தான் இலியானா என்பது நினைவிருக்கலாம்.

கேரளாவில் எந்திரனுக்குப் பின் மங்காத்தா சாதனை!


கேரளாவில் ரஜினியின் எந்திரன் செய்த வசூல் சாதனையை இதுவரை ஒரு ஒரிஜினல் மலையாளப்படம் கூட செய்ததில்லை.

நேரடி தமிழ்ப் படமாக கேரளத்தில் வெளியான எந்திரன் 9 வாரங்களில் 9 கோடியை குவித்தது. மாநிலத்தின் பல இடங்களில் நூறாவது நாளைக் கொண்டாடிய எந்திரன், மொத்தமாக ரூ 14 கோடி வரை வசூலித்தது. இந்தப் படத்தை செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் (குசேலன் தயாரிப்பாளர்) வெளியிட்டு அசாதாரண லாபம் கண்டார்.

அதன் பிறகு வேறு எந்தத் தமிழ்ப் படமும் எந்திரனில் 10 சதவீதத்தைக் கூட கேரளாவில் எட்டிப்பிடிக்கவில்லை, வெற்றிப்படம் என அறிவிக்கப்பட்ட கோ உள்பட!

ஆனால் கேரளாவில் பெரிதாக ரசிகர்கள் இல்லாதவர் எனப்பட்ட அஜீத்தின் மங்காத்தா வசூலில் கலக்க ஆரம்பித்துள்ளது.

கேரளாவில் திரையிட்ட முதல் ஒரு வாரத்தில் இந்தப் படம் 1 கோடி வசூலைத் தொட்டுவிட்டதாக கேரள விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

எந்திரனுக்குப் பிறகு, கேரளத்தில் ஒரு படத்தின் வசூல் கோடியைத் தொட்டிருப்பது இதுவே முதல்முறையாம்.

ஆந்திராவிலும் மங்காத்தா நல்ல வசூலைக்குவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் முதலிடம் பிடித்துள்ளது. எந்திரனுக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்று வெளிமாநிலங்களில் இந்த அளவு ஓடுகிறதென்றால் அது மங்காத்தாதான் என்கிறார்கள்.

ஏழாம் அறிவில் சூர்யாவின் இன்னொரு ஜோடி அபிநயா!


நாடோடிகள், ஈசன் படங்களில் நடிப்பில் கவர்ந்த அபிநயா, சூர்யாவின் ஜோடியாகியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்தில்.

முதலில் இந்த விஷயத்தையே வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். படம் வெளியானதும் ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று முருகதாஸ் கூறியிருந்தாராம். ஆனால் இப்போது விஷயம் வெளியாகிவிட்டது.

ஏழாம் அறிவில் சூர்யாவுக்கு மெயின் ஜோடி ஸ்ருதிதான் என்றாலும், ப்ளாஷ் பேக்கில் சரித்திரப் பின்னணியில் வரும் சூர்யாவுக்கு அபிநயாதான் ஜோடியாம்.

படத்தில் மிக முக்கிய அம்சமே இந்த ப்ளாஷ்பேக் சூர்யாதான் என்பதால், அபிநயா கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிறார்கள்.

நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய கன்னட தயாரிப்பாளர் சங்கம்!


ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்தது தவறான முடிவு. மிக அவசரப்பட்டு நாங்கள் அறிவித்த இந்த முடிவுக்காக நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம். இதற்கான மன்னிப்புக் கடிதத்தை நிகிதாவுக்கு அனுப்பியுள்ளோம், என்று கன்னட திரைப்பட சங்கத் தலைவர் முனி ரத்னா அறிவித்தார்.

இன்று பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "நிகிதா இனி எந்த கன்னடப் படத்திலும் நடிக்கலாம். தடை ஏதுமில்லை.

அவர் மீது நாங்கள் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துவிட்டோம். ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டில் எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் அது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இதற்காக நடிகை நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களது மன்னிப்பை எழுத்துப்பூர்வமாக நிகிதாவுக்கு தெரிவித்துள்ளோம்.

அதேநேரம், இப்போது சிறையில் இருக்கும் தர்ஷனுக்கு தடை விதிக்கும் திட்டம் ஏதுமில்லை," என்றார்.

அனைவருக்கும் நன்றி - நிகிதா

தயாரிப்பாளர் சங்கத்தின் தடை நீக்க உத்தரவு வெளியானதும் அதுகுறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்த நிகிதா, தனக்காக இந்த விஷயத்தில் தலையிட்டு நீதி பெற்றுத் தந்த பர்வதம்மா ராஜ்குமாருக்கு நன்றி தெரிவித்தார்.

பர்வதம்மாவுக்கு மிக நெருக்கமானவர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி. இருந்தும், 'இந்த விவகாரத்தில் நிகிதா மீது எந்தத் தவறும் இல்லை. தர்ஷன் - விஜயலட்சுமி விவகாரத்தில் நிகிதாவை இழுத்தது அநாகரீகம்' என பர்வதம்மா கூறியிருந்தார்.

இதுகுறித்து நிகிதா கூறுகையில், "பர்வதம்மாவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நியாயம் என்ன என்பதை நன்கு உணர்ந்தவர் அவர். அதனால்தான் என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

இந்த நெருக்கடியை காட்டி அனுதாபம் மூலம் பப்ளிசிட்டி தேட நான் விரும்பவில்லை. நான் ஏற்கெனவே தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் துன்பத்தை அனுபவித்துவிட்டேன்.

எனவே இப்போதைக்கு எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை. எனக்காக ஆதரவுக் குரல் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி," என்றார்.

பாண்டிராஜின் மெரினா... ஓவியா ஹீரோயின்!


பசங்க, வம்சம் படங்களுக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் புதிதாக இயக்கும் படம் 'மெரினா'.

மெரினா கடற்கரையை மட்டும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் விளிம்பு நிலை சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறாராம் பாண்டிராஜ்.

சிவ கார்த்திகேயன் என்பவர் ஹீரோவாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். களவாணி படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக ஜொலித்து, கமலின் 'மன்மத அம்பால்' படுகாயமடைந்து காணாமல் போன ஓவியாவை இந்தப் படத்தின் நாயகியாக்கியுள்ளார் பாண்டிராஜ்.

பாண்டிராஜின் ராசியான நடிகர்கள் எனப்படும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் இதிலும் உண்டு.

பசங்க, வம்சம் படங்களின் ஸ்டில் கேமராமேனாகப் பணியாற்றிய விஜய், இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளராக கிருஷை அறிமுகப்படுத்துகிறார் பாண்டிராஜ்.

விரைவில் மெரினா படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொஞ்ச நாளாக மெரினாவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை. இந்தப் படத்துக்கு அனுமதி கிடைக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி!

100 சதவீத வரி உயர்வு... பெரும் நெருக்கடியில் தமிழ் சினிமா!


சென்னை: தமிழக அரசு கேளிக்கை வரியை 100 சதவீதம் உயர்த்திவிட்டதால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது தமிழ் திரையுலகம்.

இதற்கு முன் 100 சதவீத வரி விலக்கை அனுபவித்து வந்தது தமிழ் சினிமா. அதிமுக அரசு வந்த பிறகு கேளிக்கை வரி 15 சதவீதம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ 100 டிக்கெட் என்றால் அதில் 15 சதவீதம் அரசுக்கு வரியாக செலுத்தப்படும் நிலை உருவானது.

இப்போது இந்த 15 சதவீத வரி, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இது 120 சதவீத உயர்வாகும். இதன் மூலம் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பாக்ஸ் ஆபீஸில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகள், 22 நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் இனி 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும். பஞ்சாயத்துகளில் உள்ள திரையரங்குகளில் இது 20 சதவீதமாக இருக்கும்.

அதேநேரம், இந்த கேளிக்கை வரி உயர்வைக் காரணம் காட்டி, டிக்கெட் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்ற எச்சரிக்கையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, முதல்வரைச் சந்தித்து முறையிட தமிழ் திரையுலகினர் தயாராகிவருகின்றனர்.

ஏற்கெனவே தொழிலாளர் பிரச்சினை, தயாரிப்பாளர்களுக்குள் மோதல் என பல்வேறு சிக்கல்களில் உள்ள சினிமா உலகம், இந்த கேளிக்கை வரி உயர்வால் அதிர்ந்து போயுள்ளது என்றால் மிகையல்ல!

கேணல் ராமை சமீபத்தில் சுட்டுக்கொன்றதா இலங்கை இராணுவம்?

இலங்கை அரசானது விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெற்றிகொண்ட பின்னர் அவ்வியக்கத்தின் பல முக்கிய தளபதிகள் முள்ளிவாய்க்காலில் இருந்தும் வேறுபகுதிகளில் இருந்தும் தப்பிச் சென்றதாக பல செய்திகள் தெரிவித்தன. அவற்றினுள் தளபதி ராமும் அடங்குவார். பெயர் குறிப்பிட முடியாத காட்டுப்பகுதி ஒன்றினுள் அவர் இருப்பதாகவும் சிதறிக்கிடக்கும் விடுதலைப் புலிகளை ஒன்றுசேர்த்து அவர் புதிதாகப்போராட இருப்பதாக இலங்கை அரசு வேண்டும் என்றே கதைகளைக் கட்டிவிட்டது.

2010ம் ஆண்டு மாவீரர் தின உரையை தாமே நிகழ்த்தவிருப்பதாகவும் அதனை ஊடகங்களில் வெளிக்கொண்டுவரவேண்டும் எனவும் கூறி அவர் பல ஊடகங்களுடன் நேரடியாகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் தொடர்புகொள்ள பாவிக்கப்பட்ட மோபைல் இலக்கங்கள் அனைத்தும் தற்போது செயலிழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

அவற்றில் ஒரு மோபைல் இலக்கம் முஸ்லீம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமாகவும் மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது தளபதி ராம் தற்போது உயிருடன் இல்லை என இராணுவத்தின் புலனாய்வுத் துறைக்கு நெருக்கமானவர்கள் தற்போது தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. திரும்பவும் போராட இருப்பதாக ஒரு பொய்யான செய்தியை இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விட்டதும் போதாது என்று, தமிழ் நாட்டில் இருந்து ஊடகவியலாளர் பாண்டியனை அழைத்து அவர் நேரே பார்த்ததுபோல ஒரு செய்தியையும் இலங்கை அரசு திட்டமிட்டு போடச்செய்தது. இலங்கையில் உள்ள இருண்ட மலை என்னும் பிரதேசத்தில் கேணல் ராம் படு பயங்கர ஆயுதங்களோடு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுப்பதாக பாண்டியன் கதைகளைக் கட்டவிழ்த்தார். சிங்களம் போட்ட எலும்புத்துண்டுக்கு பாண்டியன் வாலாட்டினார்.

இக் கதைகள் பக்கம் பக்கமாக இணையங்களிலும் ஊடகங்களிலும் வெளியாக பல மக்கள் ராமுக்கு நிதியுதவி செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது ராம் நேரடியாகவே தொலைபேசி மூலம் பல நபர்களைத் தொடர்புகொண்டு பணம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை நம்பி பலர் அனுப்பியுள்ளதையும் எவரும் மறுக்க முடியாது. இவ்வாறு அனுப்பப்பட்ட பணத்தில் சுமார் 200,000 பவுன்ஸ்சுகள் பிரித்தானியாவில் இருந்து மட்டும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து எவ்வளவு பணம் சென்றது என்ற கணக்கு இன்னும் தெரியவில்லை. இந் நிலையில் பணம் முழுவதையும் இலங்கை அரசு கைப்பற்றிக் கொண்டு இறுதியில் அவரைக் கொலைசெய்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

சிங்கள காட்டுப் பகுதியில் முகாம் ஒன்றை அமைத்து அங்கே புதிதாகச் சேரும் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுப்பதுபோல பாசாங்கு செய்யச் சொல்லியது இலங்கை அரசு. அதனைச் சென்று பார்க்க சில ஊடகங்களுக்கு மறைமுகமாக அனுமதியையும் வழங்கியதும் சாட் சாத் இலங்கை அரசே. அதனை விடுதலைப் புலிகளின் இரகசிய பயிற்சி முகாம் என்ற போர்வையில் நடத்தியும் வந்தது. ஆனால் அங்கே பயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் தற்செயலாகச் சுட்டபோது கேணல் ராம் உயிரிழந்துவிட்டதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. இச் செய்தியை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை என்பதனையும் இங்கே அறியத்தருகிறோம். இல்லை இதுவும் இலங்கை அரசு வேண்டும் என்றே கட்டவிழத்த கதையாகவும் இருக்கலாம். எது எவ்வாறு இருந்தாலும் கேணல் ராம் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என சிலர் அடித்துச் சொல்கிறார்கள்.

அதிர்வு

GTV இன் வெளிச்சம் நிகழ்சியில் தெரிந்த ஒளிவட்டம்!

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் GTV யில் நடந்த வெளிச்சம் என்னும் நிகழ்ச்சியில் பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை தாமே நடத்துவோம் என விடாப்பிடியாக உள்ள 2 மனிதர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாம் மக்களை தெளிவுபடுத்துவதாகக் கூறி மேலும் குழப்பிவிட்டுச் சென்றுள்ளனர்.

பிரித்தானியாவில் சுமார் 1990ம் ஆண்டு முதலே மாவீரர் தினம் சிறிய அளவில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் மக்கள் வரவு அதிகரிக்க அது ஒரு மாபெரும் நிகழ்வாக உருவெடுத்துள்ளது. அதனை ஆண்டாண்டு காலமாக நடத்திவரும் செயல்பாட்டாளர்களைப் புறந்தள்ளிவிட்டு புதிய கோஷ்டி ஒன்று உருவாக்கப்பட்டு தற்போது தாமே மாவீரர் தினத்தை நடத்துவோம் என அவர்கள் போட்டி போட்டுக் கிளம்பியுள்ளனர்.

உடனடியாகவே அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது ஜி.ரிவி. இத் தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சியில் தோன்றிய இத் திடீர் குழுவினர் தாம் மாவீரர் தினத்துக்காக அடித்து வைத்திருருக்கும் 20, 50, மற்றும் 100 பவுன்சுகளுக்கான டிக்கெட்டுக்களையும் காட்டி மக்களை பணம் தந்து உதவுமாறும் அழைப்புவிடுக்கின்றனர்.

முன்னதாக BTF இல் பணியாற்றி பின்னர் அங்கிருந்து GTFக்கு தாவி அதன் பின்னர் தாம் எங்கே நிற்கிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாத சுகந்தன் என்பர் தொலைக்காட்சியில் தோன்றி தாமே மாவீரர் தினத்தை நடத்துவதாகச் சொல்கிறார். அதாவது மாவீரர் தினத்தை நடத்தினால் மக்கள் மத்தியில் பிரபல்யமாகலாம் என்பது இக் குழுவின் நினைப்பு. அதுமட்டுமல்லாது மாவீரர் தினத்தை பொருளாதார நோக்குடன் நடாத்தவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சரி விடையத்துக்கு வருவோம்! தொலைக்காட்சியில் முதல் பாதி நிகழ்ச்சி முடிந்து பின்னர் கேள்விநேரம் ஆரம்பமானது. அப்போது ஜேர்மனியில் இருந்து தொலைபேசியூடாக இணைந்த தமிழர் ஒருவர் மாவீரர் தினத்துக்கான அர்த்தம் என்ன? தேசிய தலைவரால் அதற்கு கொடுக்கப்பட்ட வரை முறை என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூற முடியாது சுகந்தன் திண்டாட ஒருவகையாக நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் திரு.தினேஷ் அவர்கள் அதனைச் சமாளித்துச் சென்றார். பின்னர் அதிர்வின் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சுகந்தன் பதில் கூறுகையில் இது நல்லதொரு கேள்வி என ஆரம்பித்து, பின்னர் போகப் போக ஊடகவியலாளரைத் திட்டித் தீர்த்தார். இப்படியான "கீழ் தரமான" கேள்விகளைக் கேட்கக்கூடாது என்று அநாகரீகமான முறையில் அவர் பதில் வழங்கியது ஒட்டுமொத்த தமிழ் ஊடகவியலாளர்களையும் அவமதிக்கு செயலாக அமைந்துள்ளது.

மக்கள் ஆனாலும் சரி ஒரு ஊடகவியலாளர் ஆனாலும் சரி கேள்வி கேட்டால் அதற்கு பதில் வழங்கித் தானே ஆகவேண்டும். அதற்குச் சம்மதித்துத் தானே நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றினீர்கள்? மக்களுக்கு சேவை செய்கிறேன் காசு கொடுத்தேன் என்று எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பிதற்றலாம் ஆனால் மக்கள் கேள்விகேட்டால் மட்டும் பிடிக்காது என்றால் இது எந்த ஊர் ஞாயம்? சரி நிகழ்ச்சிக்கு வந்தவர் தான் இப்படிப் பேசுகிறார் என்றால் இதனைக் வழிநடத்தும் அறிவிப்பாளர் கூட இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது பெரும் வருத்தத்துக்குரிய விடையமாகும். இங்கே படத்தில் இருப்பவர் தான் சுகந்தன். தன்னிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைப்பவர். கேட்டால் அது கீழ் தரமான கேள்வியாக மாறிவிடுமாம்.

வெளிச்சம் நிகழ்ச்சியில் வந்ததால் தன் தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரிவதாக இவர் நினைக்கிறார் போலும். இதற்கு காலம் பதில் செல்லும் ! தமிழ் மக்கள் பதில் சொல்வார்கள்!


அதிர்வு

கடாபியின் பாலியல் பலாத்கார அறை கண்டு பிடிக்கப்பட்டது! (படம் இணைப்பு)

லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி கடந்த 42 வருட ஆட்சியில் நடாத்திய பாலியல் பலாத்காரங்கள் மெல்ல மெல்ல அம்பலத்திற்கு வர ஆரம்பித்துள்ளன. அவருடைய படுக்கை அறைக்கு பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இருட்டு அறையும், அங்கு காணப்பட்ட பிளாஸ்டிக் படுக்கையும் அவருடைய வக்கிரமான பாலியல் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

திரிப்போலி பிரதான வைத்தியசாலைக்கு சில நூறு மீட்டர் தொலைவில் பெண்களை பரிசோதிக்கும் அறை உள்ளது. இந்த அறையில் நடப்பதை படுக்கை அறையில் இருந்து கடாபி பார்ப்பார். இது பல்கலைக்கழக ஆய்விடமா அல்லது வைத்தியசாலையா என்ற குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இது கடாபியின் இரகசியமான பச்சை நிற அறை என்றே கூறப்படுகிறது.

கொலன்டில் இருந்து இறக்கப்பட்டுள்ள இந்த கட்டில் கடாபியின் பாலியல் சித்திரவதை கூடம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுமார் 400 முதல் 500 வரையான மருத்துவ கற்கை மாணவிகள் வரும் இடமாகவும் இது இருந்துள்ளது. லிபிய குடும்பங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலை ஓர் ஆட்சித் தலைவர் செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

கடாபியின் படுக்கை அறை இரண்டு கட்டில்களுடன், பக்கத்தில் ஒரு குளியலறை, அதற்கு மறுபக்கம் பெண்களை பரிசோதிக்கும் அறை என்ற முக்கோண இணைவு அவருடைய பாலியல் வக்கிரத்தின் அடையாளமே என்றும் அங்குள்ள வைத்தியர் ஒருவர் கூறுகிறார்.

புதிதாக திருமணமான பெண்கள் பரிசோதிக்கப்படும் இந்த இடத்தில் நடந்த விவகாரங்களை வெளிப்படையாகக் கூறும் நாடல்ல லிபியா என்றும் அவர் தெரிவித்தார். அங்கு வரும் பெண்களில் தேர்வு செய்யப்பட்டவரை பாலியல் பலாத்காரம் செய்யும் கடாபிக்கு எதிராக குரல் கொடுக்க வல்லமை அற்றவர்களாகவே மக்கள் இருந்துள்ளார்கள். இப்பெண்களிடம் பேசும்போது அரசனின் மனைவி என்று அடைமொழி கூறி அழைத்துள்ளார் கடாபி. இதுபோல கடாபிக்கு எதிராக பேசிய பெண் ஒருவர் திரிப்போலியில் வைத்து அவருடைய படைகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்ததே.

கடாபியின் அசிங்கங்கள் மேலும் அம்பலத்திற்கு வரும். அவர் சரணடைந்தால் இதற்கெல்லாம் விளக்கம் கூறவேண்டி வரும். ஆகவே கடாபி சரணடையும் சாத்தியம் குறைந்தே வருகிறது. மிக வக்கிரமான குணமுடைய அதேவேளை கோமாளித்தனமான சர்வாதிகாரியாக இவர் இருந்துள்ளமையை இந்தச் செயல் காட்டுகிறது.

தேச விடுதலையை விரைவுபடுத்துவோம்! - தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை - பிரித்தானியா

ஆண்டுதோறும் உலக நாடுகள் தோறும் வெகு சிறப்பாக இடம்பெறும் மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை குழப்புவதற்கான நாசகார சதி நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் தனது ஒட்டுக்குழுவான கே.பி-ருத்ரா குழுவினரை சிங்கள அரசு களமிறக்கியுள்ளது என தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஒருங்கிணைப்புக் குழு,
தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை,
பிரித்தானியா

15.09.2011
அன்பார்ந்த தமிழீழ மக்களே,

ஆண்டுதோறும் உலக நாடுகள் தோறும் வெகு சிறப்பாக இடம்பெறும் மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை குழப்புவதற்கான நாசகார சதி நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் தனது ஒட்டுக்குழுவான கே.பி-ருத்ரா குழுவினரை சிங்கள அரசு களமிறக்கியுள்ளது.

இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவில் வழமை போன்று இடம்பெறும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கு மாற்றீடாக பிறிதொரு நிகழ்வை நவம்பர் 27ஆம் நாளன்று கே.பி-ருத்ரா ஒட்டுக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

பிரித்தானியாவில் 1990ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு மண்டபங்களில் நடைபெற்று வந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள், 1999ஆம் ஆண்டு முதற்தடவையாக ‘லண்டன் அரீனா’ எனும் மிகப் பிரமாண்டமான மண்டபத்திற்கு மாற்றப்பட்டமை தமிழீழ தேசியப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு நினைவில் இருக்கும்.

இந்த வகையில் 1999ஆம், 2000ஆம், 2001ஆம், 2002ஆம் ஆண்டுகளில் ‘லண்டன் அரீனா’வில் இடம்பெற்று வந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் அம்மண்டபம் மூடப்பட்டதை அடுத்து 2003ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ‘எக்செல்’ மண்டபத்திற்கு மாற்றப்பட்டிருந்தன.

எனினும் 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக ‘எக்செல்’ மண்டபத்திலிருந்து ‘வெம்பிளி அரீனா’, ‘அலக்ஸாண்ட்ரா பலஸ்’ ஆகிய மண்டபங்களுக்கு மாற்றப்பட்டு, பின்னர் 2006ஆம் ஆண்டு ‘ஹரோ லெசர் சென்ரர்’ உட்பட ஐந்து இடங்களில் உள்ள மண்டபங்களில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மீண்டும் ‘எக்செல்’ மண்டபத்தில் இடம்பெற்று வந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இம்முறை தவிர்க்க முடியாத காரணங்களால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

நவம்பர் 24ஆம் நாள் முதல் நவம்பர் 27ஆம் நாள் வரையான நான்கு நாட்களுக்கு ‘எக்செல்’ மண்டபத்தின் முழுப்பரப்பளவையும் ‘ரொப்கியர்’ (TopGear) எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறுவனம் வாடகை எடுத்ததன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதற்கு மாற்றீடாக இலண்டனில் உள்ள பிறிதொரு பிரமாண்டமான மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளில் வழமையான செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் இதனைக் குழப்பும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இலண்டனில் களமிறங்கியிருக்கும் சிங்கள அரசின் கைக்கூலிகளான கே.பி-ருத்ரா ஒட்டுக்குழுவினர், மக்களிடையே பல்வேறு குழப்பகரமான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். கடன் அட்டை மோசடி, குழு மோதல், கொள்ளை, தகாத பாலியல் உறவு எனப் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் சமுக விரோதிகளைப் பயன்படுத்தியும், சிங்கள அரசுக்கு சோரம் போயுள்ள தேச விரோதிகளைக் கையாண்டும் இக்கைங்கரியத்தில் இவ் ஒட்டுக்குழு ஈடுபட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்டு, வன்னிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து, பின்னர் சிங்களப் புலனாய்வாளர்களால் இந்தியா ஊடாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தயாபரன் (சங்கீதன்) என்ற தேச விரோதியே இச் சதி நடவடிக்கைகளை நெறிப்படுத்தி வருகின்றார்.

இச்சிங்கள ஒட்டுக்குழு உளவாளியின் தலைமையில் இயங்கும் சமூக விரோதிகளும், தேச விரோதிகளும் மாவீரர் நாள் நிகழ்வை வழமையாக ஏற்பாடு செய்யும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்திற்கு சொந்தமான இணையத்தள முகவரியை தற்பொழுது ஆக்கிரமித்திருப்பதோடு, வணங்கா மண் கப்பலுக்கு திரட்டப்பட்ட நிதியில் கையாடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடம் ஒன்றையும் தமது அலுவலக முகவரியாகப் பதிவு செய்துள்ளனர்.

‘எக்செல்’ மண்டபம் முழுவதையும் நவம்பர் 27ஆம் நாளன்று ‘ரொப்கியர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ள நிலையில், ‘எக்செல்;’ நிறுவனத்திற்கு சொந்தமான அரை மைல் தொலைவில் உள்ள வெறும் இரண்டாயிரம் பேரை மட்டும் உள்ளடக்கக்கூடிய கப்பல் திருத்தும் மண்டபம் ஒன்றை இவ் ஒட்டுக்குழு தற்பொழுது வாடகைக்கு எடுத்துள்ளது. எனினும் இவ்வுண்மையை மக்களிடம் மூடிமறைத்திருக்கும் இக்கும்பல், ‘எக்செல்’ மண்டபத்தை பத்து ஆண்டுகளுக்கு தாம் வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், இம்முறையும் ‘எக்செல்’ மண்டபத்திலேயே தேசிய நினைவெழுச்சி நாள் இடம்பெறும் என்றும் பொய்ப்பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றது.

இத்தகவல் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துவதற்கு ‘எக்செல்’ நிறுவனத்தின் பின்வரும் முகவரியை அழுத்திப் பார்வையிடுமாறு எமது உறவுகளிடம் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்: http://www.excel-london.co.uk/whatson/2011/11/

இதேநேரத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வை பல்லாயிரக்கணக்கான மக்களை உள்ளடக்கக்கூடிய பிறிதொரு பிரமாண்டமான மண்டபத்தில் நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளை வழமையான செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் இப் பிரமாண்டமான மண்டபத்திற்கு மக்கள் செல்வதைத் திசைதிருப்பி, எக்செல் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டாயிரம் பேரை மட்டும் உள்ளடக்கக்கூடிய கப்பல் திருத்தும் மண்டபத்திற்கு மக்களை வரவழைத்து, பின்னர் அங்கு இடமில்லை என்று கூறி அவர்களைத் திருப்பியனுப்புவதற்கு சிங்கள ஒட்டுக்குழு திட்டமிட்டுள்ளது.

மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஈகச்சுடரேந்தி எமது உறவுகள் தொழுகை செய்யும் செய்யும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வைக் குழப்புவதே இச்சிங்கள ஒட்டுக்குழுவின் நோக்கமாகும்.

சிங்கள ஒட்டுக்குழுவின் இவ் நாசகாரச் சதித் திட்டத்தை இனம்கண்டு கப்பல் திருத்தும் மண்டபத்திற்கு செல்வதையும், இவர்களுக்கு நன்கொடையளிப்பதையும் தவிர்த்து, இவர்களைப் புறந்தள்ளுமாறு எமது உறவுகளுக்கு இளைய தலைமுறையினராகிய நாம் அறைகூவல் விடுக்கின்றோம். அதேநேரத்தில் வழமையான செயற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்படும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கி, அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் பிரமாண்டமான மண்டபத்திற்கு வருகை தந்து எமது காவற்தெய்வங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றுமாறு எமது உறவுகளிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

சிறீலங்கா பூசா போல, லிபியாவில் நபூசா புதைகுழிக்குள் 34 சடலங்கள்

லிபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள நபஸா மலைப்பகுதியில் 34 சடலங்கள் ஒரு புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிறீலங்காவின் பூசா முகாம் போல இந்த நபூசா பகுதி இருந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கைகள் இரண்டும் பின்புறமாக முடியப்பட்டு சுடப்பட்டுள்ளனர்.

சனல் 4 தொலைக்காட்சியில் சிறீலங்கா படைகள் கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு போராளிகளை சுட்டதுபோல இவர்களும் சுடப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் கொன்றது கொடிய சர்வாதிகாரி கடாபியின் படைகளே என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள். அவர்களுடன் அவர்களின் பிள்ளைகளும் சேர்த்து குடும்பமாக கொன்றொழிக்கப்பட்டுள்ளது. இது மோசமான மனித உரிமை மீறல் என்று மனித உரிமைக்கழகத்தை சேர்ந்த பீற்றர்புக்காரற் தெரிவித்தார்.

இது ஒரு புறம் நடைபெற லிபியாவின் கூட்டாளி நாடான சீனா தனது நாட்டின் சிங்ஜாங் பகுதியில் போராட்டங்களை நடாத்திய நால்வரை பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டி தூக்குத் தண்டனை விதித்துள்ளது. சீனாவின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே இவ்விதம் தண்டனை பெற்றுள்ளார்கள்.

கம்யூனிசம் பேசினாலும் தனது மக்களிலேயே சிறுபான்மையினரை ஒடுக்கும் தீய பழக்கமுள்ள சீனா இலங்கையிலும் பெரும்பான்மை சிங்களவருக்கு ஆதரவளித்தது வியப்பிற்குரிய செயல் அல்ல. இந்த நால்வரோடு மேலும் இருவருக்கு 19 வருடங்கள் கொடுஞ்சிறை விதித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் இந்த நாட்டின் இரும்பு சட்டங்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

எம்ஜிஆர் பாடலை பாடிய ஜெயலலிதா

முதல் அமைச்சர் ஜெயலலிதா 15.9.2011 அன்று திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் சிறப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசுகையில்,

உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 103 வது பிறந்த நாள்.

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர்
என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

என்று, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை அனுதினமும் கடைபிடித்து, நல்லாட்சி நடத்தி, ஏழை, எளிய மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில், ஏழை, எளிய மக்களின் வளமான வாழ்விற்காக, நித்தம் நித்தம் புத்தம் புது திட்டங்களைத் தீட்டும் உங்கள் அன்புச் சகோதரி ஆகிய நான் பல்வேறு புதிய திட்டங்களை இன்று இந்த விழாவில் தொடங்கி வைப்பதில் உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக மக்களுக்கு ஏற்றத்தைத் தரும் வகையில், சீரிய முறையில் திட்டங்களைத் தீட்டி, சிறப்பான முறையில் செயல்படுத்துவது தான், உண்மையான, மக்கள் நலன் நாடும் அரசின் கடமை ஆகும்.

இந்த அடிப்படையில் தான், நான் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றே, மக்கள் நலன் பயக்கும் மகத்தான ஏழு திட்டங்களுக்கான கோப்புகளில்

கையெழுத்திட்டேன். மேலும், ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட உங்கள் அன்புச் சகோதரி ஆகிய நான் உறுதி பூண்டுள்ளேன்.

என் அன்பிற்கினிய தமிழக மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம், தினம் ஒரு திட்டத்தைத் தீட்டி செயல்படுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், உங்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்; மாணவ, மாணவியர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் மடிக் கணினி வழங்கும் திட்டம்; மாணவ, மாணவியர்களின் வளமான எதிர் காலத்திற்காக கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்; கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வில் பொருளாதார மறுமலர்ச்சியை உருவாக்கும் வகையில் ஆடுகள் வழங்கும் திட்டம்; வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில், பால் உற்பத்தியைப் பெருக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகிய முன்னோடித் திட்டங்களை இன்று இந்த இனிய விழாவில் தொடங்கி வைக்க உள்ளேன்.

இன்று, மக்களுக்குப் பயன்படும் வகையில் இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை, ‘இலவசம்’ என்று ஒரு சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். வாக்களித்த மக்களுக்கு, இவ்வாறு வழங்கப்படுகின்றது என்றும்; இவை இலவசங்கள் என்றும்; எனவே, இவ்வாறு வழங்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும்; உச்ச நீதிமன்றத்திற்கே சென்று கூட வழக்கு தொடுத்துள்ளனர்.

ஏழை, எளிய மக்கள் வாழ்வில் வளம் பெறவும்; எல்லோரும் எல்லாமும் பெற வேண்டியும்; மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று, தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்பதற்கு வழி வகை செய்யும் இந்தத் திட்டங்களை எல்லாம் இலவசத் திட்டங்கள் என்று கொச்சைப்படுத்துவதை பொருளாதாரம் தெரிந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இன்று துவக்கி வைக்கப்படும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம், மக்கள் வாழ்வில் ஏற்றம் அளிக்கும் ஒரு உன்னதத் திட்டம் ஆகும். இது குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு 12,000 ஏழைப் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் 60,000 பயனாளிகளுக்கு கறவைப் பசுக்கள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படுவதால், அதிக பால் உற்பத்தித் திறன் ஏற்பட இது வழி வகை செய்கிறது. இவ்வாறாக, மாநிலத்தில் பால் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்குவதால், இந்தத் திட்டம் வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் ஒரு உன்னதத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் 30 சதவீத பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள இந்தத் திட்டம் வழி வகை காண்கிறது.

‘சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்து உன்னைக் காப்பது என் பாடு’

என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடியபடி, பயனாளிகள், இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் கறவைப் பசுக்களை பாதுகாத்து, அதன் மூலம் தங்கள் வாழ்வில் வளம் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதே போன்று தான், ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்கும் மற்றொரு திட்டம் ஆடுகள் வழங்கும் திட்டம் ஆகும். ஏழ்மையிலும் ஏழ்மையாக உள்ளவர்களே இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தத் திட்டத்திலும் 30 சதவீத பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பர். ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகள் தங்கள் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டு, பொருளாதார சுதந்திரம் அடைந்திட இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள், ஒன்று, இரண்டு ஆண்டுகளிலேயே, தமது சொந்தக் கால்களில் நிற்கும் பொருளாதார வலிமையை இந்தத் திட்டம் பெற்றுத் தந்திடும்.

ஒரு மாநிலம் நிறைந்த பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அங்கு மனித வள மேம்பாட்டிற்கு, குறிப்பாக அறிவுசார் மனித வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அறிவுசார் மனித வள மேம்பாட்டில் முக்கிய அங்கம் வகிப்பது கல்வி அறிவு தான். எனவே, மாணவ, மாணவியர் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையிலும்; மேல்நிலைப் பள்ளிகளில் இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டும்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாயும்; மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாயும்; மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு 2,000 ரூபாயும், ஊக்கத் தொகையாக வழங்கும் திட்டத்தையும் இன்று தொடங்கி வைக்கிறேன். இதனால், பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதுடன், கல்லூரிப் படிப்பைத் தொடரவும், இந்தத் திட்டம் மிகவும் பயன் தருவதாக அமையும்.

இதே போன்று தான், அறிவுசார் மாணவ சமுதாயத்தை உருவாக்கும் ஒரு புரட்சிகரமான, இந்தியாவிற்கே வழி காட்டும் முன்னோடித் திட்டம், மடிக் கணினி வழங்கும் திட்டம் ஆகும். மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக் கணினி அவர்களை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் தலை வாசலாக அமையும். தமிழ்நாட்டு மாணவ, மாணவியர் மற்ற எந்த மாநில மாணாக்கர்களையும் விட, கல்வியில் தேர்ந்து, அறிவில் சிறந்து விளங்கிட இந்தத் திட்டம் பயன் அளிக்கும்.

இல்லத்தரசிகளின் இன்னல் தீர்க்கும் இன்னொரு முத்தான திட்டம் தான், மகளிருக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தையும் இன்று நான் தொடங்கி வைக்கிறேன். இன்று நான் வழங்கும் மிக்ஸி மற்றும் கிரைண்டர், சமையல் அறையில் நாளும் உழன்று கொண்டிருக்கும் இல்லத்தரசிகளின் வேலைப் பளுவையும், நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும். இந்த அரிய நேரத்தை, ஆக்கபூர்வமான வழிகளில், அதாவது, குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலோ; அல்லது தம் உள்ளத்தை செழுமைப்படுத்தும் நடவடிக்கைகளிலோ; அல்லது சமுதாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலோ இல்லத்தரசிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். அது போலவே, வசதி பெற்றவர்கள் குளிர்சாதன வசதியை ஏற்படுத்திக் கொள்ளும் போது, அந்த வசதியைப் பெற இயலாத சாமானிய மக்கள் மின் விசிறி வசதியைப் பெறுவது நியாயமானதே ஆகும்.

உங்கள் அன்புச் சகோதரி ஆகிய எனது தலைமையிலான அரசு, பொருளாதார வளர்ச்சிக்கும், மனிதவள மேம்பாட்டிற்கும், தனி மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுக்கும் என பலப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீங்கள் அனைவரும் இந்தத் திட்டங்களின் பயன்களைப் பெற்று, உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும்.

தீர்வு இல்லையேல் மீண்டும் போராட்டம் வெடிக்கும்!: பிளேக்

யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப அரசியல் தீர்வை அரசு முன்வைக்கத் தவறினால் 10 வருடங்களுக்குள் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்துள்ளது. இந்த ஆபத்து இலங்கையில் மாத்திரமன்றி யுத்தம் இடம்பெற்ற எல்லா நாடுகளிலும் உள்ளது.இவ்வாறு இலங்கை வந்திருந்த றொபர்ட் ஓ பிளேக் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இவ்வாறு இலங்கை வந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

கடந்த இரண்டு நாட்களாக நான் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல சந்திப்புகளை மேற்கொண்டேன். கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன்.

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் நான் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதை விடவும் இந்நாடு மிகவும் மாறுபட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் அநேகர் மெனிக்பாமில் இருந்து வெளியேறியுள்ளனர். ஏனையோர் மிதிவெடி அகற்றல் பூர்த்தியடைந்தவுடன் அங்கிருந்து புறப்படுவர்.

வடக்கில் முக்கியமான உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 8 ஆயிரத்திற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மிதிவெடிகளை அகற்றுவது தொடர்பிலும் கணிசமான பணிகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் உதவிக்குட்பட்டவர்கள்வடக்கு மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கும் வழமை நிலைமைக்குக் கொண்டுவருவதற்கும் துணைபுரியும் வகையில் அமெரிக்கா அதன் உதவித்திட்டங்களை முன்னுரிமைப்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கில் 20ஆயிரம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தனியார் துறையினருடன் இணைந்து 202 கோடி இலங்கை ரூபாவை நாம் முதலீடு செய்கின்றோம்.

இடம்பெயர்ந்தவர்களும் ஏனையோரும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்வதற்கு வசதியாக மிதிவெடிகள் அகற்றும் பணிகளுக்குத் தொடர்ச்சியாக நாம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். வடக்கில் இடைத்தங்கல் வீடுகளைஅமைப்பதற்காக கடந்தவருடத்தில் 15.4 கோடி இலங்கை ரூபாவை நாம் வழங்கியுள்ளோம்.

இருந்தபோதிலும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய இலங்கையை உறுதிசெய்துகொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்கும் இன்னமும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.

அதிகாரப்பகிர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான முக்கியமான பேச்சுகளை மீளவும் ஆரம்பிக்க ஆர்வத்துடன் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருப்பதையிட்டு அறிந்து நான் மிகுந்து மகிழ்ச்சியடைகின்றேன்.

நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கவனம் செலுத்தும் என நாம் நம்புகின்றோம்.

மனித உரிமைகள் தொடர்பில் நான் கரிசனை கொண்டுள்ளேன். நல்லிணக்க செயற்பாடுகளிலும், வடக்கில் மீளத் திரும்பிச் செல்கின்ற மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதிலும், மனித உரிமைகள் விடயத்திலும் முன்னேற்றம் காணப்படவேண்டியது மிகவும் முக்கியமானதொரு பாகமாக விளங்குகின்றது.

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்ப அரசியல் தீர்வை முன்வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இன்னும் 10வருடங்களில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு 60வீத சாத்தியம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது யுத்தம் இடம்பெற்ற எல்லா நாடுகளிலும் உள்ள நிலைமையாகும்.

அந்த வகையில் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்காக அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுகள் 13ஆம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன.

அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நான் மேற்கொண்ட சந்திப்பின்போது இதை என்னால் உணர முடிந்தது. நல்லதோர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவதையே நாம் விரும்புகிறோம்.

அத்தோடு அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிகாரப்பகிர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மீண்டும் பேச்சுகளைத் தொடங்கவுள்ளன என்று இருதரப்புகளும் என்னிடம் கூறின. இதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அந்த அறிக்கை இப்போது அங்கு ஆராயப்படுகின்றது. இந்த ஆராய்வு இலங்கைக்குச் சாதகமாகவே அமையும் என்று நாம் நம்புகிறோம்.

இதேவேளை, தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பூர்த்தியாக்கப்படாததால் அது தொடர்பில் எமக்கு எதுவித கருத்தையும் கூறமுடியாது.ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பதில் சொல்லும் என்று நாம் நம்புகிறோம் என்றார் பிளேக்.

அடையாள உண்ணா நிலைப் போராட்டமும், தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வும் இடமாற்றம்

அடையாள உண்ணா நிலைப் போராட்டமும், தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வும் தவிர்க்கமுடியாத காரணத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. லண்டன் முத்துமாரி அம்மன் ஆலய சிவயோக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் நிகழ்வே இடமாற்றப்பட்டுள்ளது.

துரதிஸ்ட வசமாக சட்டரீதியான சிக்கலை எதிர்னோக்கியுள்ள சிவயோகம் அறக்கட்டளஇயினரால் அப்பகுதியில் தொடர்ந்தும் அவ் ஆலயத்தை வைத்திருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இவ் இடமாற்றத்திற்குக் காரணம். கடந்த பல வருடங்களாக தாயகத்திற்கு நேரடியாக உதவிகள் பல செய்துவந்த இவ் அறக்கட்டளையினரால் ஆலய மண்டபத்தினூள்ளேயே மாவீரர்கள் நினைவாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்த்அக்கது.

இதனடிப்படையில் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள 366A - Stage Lane, Kingsbury, London, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள 'RNB Venue' மண்டபத்தில் எதிர்வரும் 26-09-2011 திங்கள் கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி பல மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்துவரும் இவ்வேளையில் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அதற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், தாயகத்து உறவுகளின் இன்றைய அவல வாழ்வை நீக்கும் பொருட்டு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதமும் நடாத்தப்படவுள்ளது.

1. போரின் பின்னரும் தமது வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப் பட்டுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த ஆவன செய்யவேண்டும்.

2. நீண்ட காலமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் விடுதலை செய்து அவர்களின் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும்.

3. இலங்கையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் தமிழினப் படுகொலையை தடுத்து தமிழர்கள் தமது வரலாற்றுத் தாயக மண்ணில் சுய கெளரவத்தோடு வாழும் நிலையை உருவாக்க வேண்டும்.

இவ் மூன்று அம்சக் கோரிக்கைகளையும் முன்வைத்து அடையாள உண்ணா நிலைப் போராட்டம் நடாத்தப்படும் இந்த நிகழ்வில், பாடசாலைப் பிள்ளைகளின் ஆக்கங்களான கவிதைகள், பேச்சுக்கள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் போன்றனவும் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் சிறார்கள் மற்றும் ஆர்வமுள்ளோர் 19-09-2011 செவ்வாய்க் கிழமைக்கு முன்பதாக britishtamilsunion@gmail.com எனும் மின்னஞ்சலூடாக அல்லது 02087338268 / 07877204123 / 07400219654 எனும் கைத்தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு எமக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வருடம் அடையாள உண்ணா நிலைப் போராட்டமும் இணைக்கப்பட்டு தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வும், மற்றும் மாவீரர்களான கேணல் சங்கர், கேணல் ராயூ உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நிகழ்வாக அமைவதால் பிரித்தானியாவில் ஒருங்கிணைந்த வகையில் ஒரே இடத்தில் முழுநாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது.

முழுநாள் நிகழ்வு என்பதால் பிரித்தானியாவில் எப்பகுதியில் இருப்பவர்களாக இருந்தாலும் தமது நேரத்திற்குத் தகுந்தவாறு தியாகி தீபம் திலீபன் அவர்கட்கும், இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தினை செலுத்திக்கொள்ளும் அதே வேளை அன்றைய தினம் நடைபெறும் உண்ணானிலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து ஒன்றுபட்ட தமிழராய் எம்மினத்தின் விடுதலைக்கு வழிசமைப்போம்.

ஐ.நாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழீழ அரசாங்கத்தின் முன்நகர்வு!

ஜெனீவாவில் உள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத் தொடரில் நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருக்கும் சமவேளை, நியூயோர்க்கில் உள்ள ஐ நாவின் பீடத்தின் வருடாந்த கூட்டத்தில் பங்கெடுக்க வரும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்தும், மாபெரும் ஒன்றுகூடலொன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஒன்றுகூடல் நியூ யோர்க் ஐ நா உயர்பீடத்துக்கு முன்னால் செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர், அமைச்சரவைச் செயலர் சுகிந்தன் மற்றும் நா.த.அரசின் மதியுரைஞர் குழுவில் பங்காற்றிய பேராசிரியர் கரன் பார்கர் அம்மையார் ஆகியோர், ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரின் தொடக்கநாள் முதல் பங்கெடுத்து வருகின்றனர்.

இராஜதந்திரிகள், ஐ நா அதிகாரிகள், மனித உரிமை அமைப்பாளர்கள் என பலமட்டத்திலான சந்திப்புக்களை நடாத்தி வரும் நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள், கூட்டத் தொடரின் நிறைவில் முழுமையான ஊடக அறிக்கையொன்றினையும் வெளியிடவுள்ளனர்.

இதேவேளை, உலகத் தலைவர்கள் பங்கெடுக்கும் ஐ.நா சபையின் வருடாந்த கூட்டத்தில் பங்கெடுக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை உலகின் முன் அம்பலப்படுத்துவோம்.

சிறிலங்கா அரசினால் தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட போர்குற்றங்கள் - இனப்படுகொலை - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல்- இராணுவ தலைவர்கள் மீது சர்வதேச விசாரணைய நடத்த உலகத் தலைவர்களை கோருவோம்.

ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி இந்த நியூ யோர்க் ஐ நா முன்னலான ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

கனடிய தமிழர் அமைப்புக்களின் உறுதுணையுடன் இந்த ஒன்றுகூடல் எதிர்வரும் செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

ஒன்றுகூடலில் கனடிய தமிழ் உறவுகள் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கும் பயண ஒழுங்குகளுக்கும் 647 - 822 -8062 / 416 -291 -7474 / 647 -209 -4100 இந்த தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் சனநாயக வடிவமாக திகழ்கின்ற நாடுகடந்த தமழீழ அரசாங்கம், சமகாலத்தில் முன்னெடுத்துவருகின்ற காத்திரமான இருவேறு நகர்வுகளுகாக இது கருதப்படுகின்றது.

நாதம் ஊடகசேவை

இனி செல்போனில் பாடல்களை திருட்டுத் தனமாக பதிவு பண்ண முடியாது!


திரைப்பட இசைக் கலைஞர்கள் கஷ்டப்பட்டு பெரும் செலவில் உருவாக்கும் பாடல்களை யார் யாரோ இலவசமாக செல்போனில் பதிவு செய்து கொள்கிற அவலத்தை தடுக்கும் வகையில் புதிய சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

சவுத் இண்டியா டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மென்ட் பி.லிட் நிறுவனம், சவுத் இண்டியா மியூசிக் கம்பெனி அசோசியேஷனுடன் இணைந்து இந்த இசைத் திருட்டுக்கு முடிவு கட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.

இந்த நிறுவனம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், பக்தி பாடல்கள், கிராமிய பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்களை 50 முதல் 60 சதவீதம் வரை தயாரித்து வழங்கக்கூடியவர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது. 30 வருடங்களுக்கு மேலான சூப்பர் ஹிட் பாடல்களின் உரிமம் பெற்றுள்ள இந்நிறுவனம், 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி பாடல் இசையை பதிவு செய்ய உரிமம் பெறுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

இதற்காக செல் மியூசிக் (CELL MUZIK) என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க மற்றும் அறிமுக விழா சென்னையில் நடந்தது. தொடக்க விழாவில் இசையமைப்பாளர் தினா, பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன், பத்மஸ்ரீ சுதா ரகுநாதன், பாடலாசிரியர் விவேகா, முன்னாள் காவல் துறை அதிகாரி மாதவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுபோல திருட்டுத்தனமாக பாடல்களை பதிவு செய்து விற்கும் செல்போன் கடைகள் இனி மாதந்தோறும் 1250 செலுத்தி சந்தாதாரராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யாமல் திருட்டுத்தனமாக விற்றால் 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி குற்றம்.

உரிமம் பெறாமல் பாடல்களை மொபைல் சிப்பில் பதிவு செய்பவர்களை கண்காணித்து தண்டிக்க முன்னாள் காவல் துறை அதிகாரி தலைமையில் ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது இந்த அமைப்பு.

தீவிர எதிர்ப்பு... அம்பரீஷ் தலையீடு... நிகிதாவுக்கு தடை விலகுகிறது!


பெங்களூர்: கன்னடப் படங்களில் நடிக்க நிகிதாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு தடையை இன்று விலக்குவதாக அறிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

ராஜ்குமார் மனைவி பர்வதம்மா தலையிட்டு அறிவுறுத்தியதால் இந்தத் தடையை விலக்கிக் கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முனிரத்னா இன்று அறிவித்தார்.

கன்னட நடிகர் தர்ஷன் அவரது மனைவி விஜயலட்சுமியை கொல்ல முயன்றதாக சமீபத்தில் போலீசில் புகார் செய்யப்பட்டார். இதில் அவரை போலீஸ் கைது செய்ததது. தனக்கும் தன் கணவனுக்கும் இந்த அளவு தகராறு ஏற்பட நடிகை நிகிதாதான் காரணம் என்று விஜயலட்சுமி கூறியதால், நிகிதா மீது நடவடிக்கை எடுத்தது கன்னட தயாரிப்பாளர் சங்கம்.

நிகிதா 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்கக் கூடாது என தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை நிகிதா கடுமையாக எதிர்த்தார். நிரபராதியான தன் மீது வீண் புகார் சுமத்தி, தடை விதித்துவிட்டதாகவும், இதனால் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முறையிட்டார் நிகிதா.

அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் பெரும் ஆதரவளித்தனர். கன்னட இயக்குநர்கள், நடிகர்கள், தெலுங்கு தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் தடை உத்தரவை எதிர்த்தனர். இந்தத் தடையை மீறி அவரை வைத்து படங்கள் எடுப்போம் என்றும் கூறினர்.

தமிழில் குஷ்பு உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நிகிதாவுக்கு ஆதரவு அளித்தனர்.

கன்னட நடிகர் சங்கம் நடிகை நிகிதாவை முழுமையாக ஆதரிப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இந்த தடை உத்தரவை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளது கன்னட தயாரிப்பாளர் சங்கம்.

ஆனால் அதைச் செய்யும் முன் தான் நிரபராதி, தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என நிகிதா ஒரு கடிதம் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஆனால் அப்படி எதுவும் கொடுக்கக் கூடாது என நடிகர் சங்கம் கூறிவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் அம்பரீஷ் இந்த விவகாரத்தில் தலையிட்டார்.

பர்வதம்மா கண்டனம்

இந்த நிலையில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவியும் கன்னட சினிமாவில் மிகுந்த சக்தி மிக்கவராகக் கருதப்படுபவருமான பர்வதம்மா இந்த விவகாரத்தில் தலையிட்டு தடையை விலக்குமாறு அறிவுறுத்தினார்.

நிகிதா மீது தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் காட்டிய அவசரத்தைக் கண்டித்த பர்வதம்மா, தன் தரப்பு நியாயத்தை சொல்ல நிகிதாவுக்கு விளக்கம் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

"யாரோ இரண்டு மூன்று பேர் சங்கத்தில் உட்கார்ந்து கொண்டு சினிமா உலகை தீர்மானித்து விட முடியாது. இவர்களால் கன்னட திரையுலகுக்கே அவமானம்," என்றும் பர்வதம்மா எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தடை ரத்து முடிவை அறிவித்தார் சங்கத் தலைவர் முனிரத்னா.

கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு நடிகர்கள் கால்ஷீட் தர வேண்டாம்! - கேயார்


சென்னை: பெரிய நடிகர் நடிகைகள் கார்ப்பொரேச் நிறுவனங்களுக்கு உடனே கால்ஷீட் தந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. தயவு செய்து இனி யாரும் இந்த நிறுவனங்களுக்கு கால்ஷீட் தர வேண்டாம். அப்படி தருபவர்கள் நன்றி கெட்டவர்கள், என்றார் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறியதாவது:

இன்றைக்கு பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். வெகு சிலர்தான் பல ஆண்டுகள் இந்தத் தொழிலில் நிலைத்திருக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு சினிமாதான் எல்லாமே. வேறு தொழில் தெரியாது.

ஆனால் இன்றைக்கு பல்வேறு துறைகளில் உள்ள கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா பிரிவைத் தொடங்கி படமெடுக்க வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பற்றியோ, கலை பற்றிய ஒன்றும் தெரியாது, அதுகுறித்த அக்கறையும் அவர்களுக்கில்லை.

இவர்களால்தான் சினிமா இன்று பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இவர்களும் காரணம்.

கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமாவை விநியோகம் செய்யட்டும். அத்தோடு அவர்கள் வேலையை நிறுத்திக் கொள்ளட்டும். தனி நபர்கள் சினிமா தயாரிக்கட்டும். அதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.

தயவு செய்து கார்ப்பொரேட் நிறுவனங்கள் கேட்டதும் கால்ஷீட்டை தாராளமாகத் தரும் போக்கை நடிகர் நடிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனி யாரும் இந்த நிறுவனங்களுக்கு கால்ஷீட் தராதீர்கள். அப்படி மீறித் தந்தால், அதை விட நன்றிகெட்டதனம் எதுவும் இல்லை," என்றார் கேயார்.

சில்க் ஸ்மிதா பற்றிய படத்தில் ரஜினிக்கு அவமதிப்பா? - கொதிப்பில் ரசிகர்கள்


சில்க் ஸ்மிதாவின் உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்திப் படமான தி டர்ட்டி பிக்சரில், சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி காட்சிகள் உள்ளதாகவும், அவை ரஜினியை அவமதிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியதையடுத்து ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.

உடனடியாக அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏக்தா கபூர் தயாரிப்பில், வித்யா பாலன் - நஸ்ருதீன் ஷா நடிக்கும் படம் தி டர்ட்டி பிக்சர். இந்தப் படம் மறைந்த தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளது. இப்போது எழுந்துள்ள சர்ச்சை, படத்தில் ரஜினியை அவமானப்படுத்தியுள்ளனர் என்பது.

இந்தப் படத்தில் வயதான முன்னணி நடிகராக தோன்றுகிறார் நஸ்ருதீன் ஷா. அவரும் சில்க்கும் இணைந்து வருகிற காட்சிகளும் வசனங்களும் ரஜினியை அவமானப்படுத்துவது போல உள்ளனவாம்.

எனவே இந்தக் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினியின் பெரும்பாலான படங்களில் சில்க் ஸ்மிதா முக்கிய இடம்பெற்றிருப்பார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் விளக்கம் வேறு மாதிரி உள்ளது. அவர் கூறுகையில், "தி டர்ட்டி பிக்சரில் நஸ்ருதீன் ஷா சீனியர் நடிகராக வருவார். ஆனால் சில்க் ஸ்மிதா காலத்தில் ரஜினி இளமையான சூப்பர் ஸ்டார். இந்த வித்தியாசத்தை ரசிகர்கள் புரிந்து கொண்டால் கோபப்பட மாட்டார்கள். ரஜினியை நாங்கள் அவமானப்படுத்தவில்லை. அவர் மட்டுமல்ல, யாரையுமே இந்தப் படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை," என்றார்.

ரசிகர்கள் புரிந்து கொள்வார்களா?

Wednesday 14 September 2011

'என் மீது தவறில்லை...'- கமிஷனிரிடம் ராம நாராயணன் பதில் மனு


சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ 1.80 ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் என் பெயரை இழுக்கிறார்கள் என முன்னாள் தலைவர் இயக்குநர் ராம நாராயணன் போலீஸ் கமிஷனரிடம் பதில் மனு அளித்துள்ளார்.

கேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியதில் தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் ஊழல் நடந்துள்ளதாக போலீஸ் கமிஷனரிடம் 60 தயாரிப்பாளர்கள் நேற்று மனு கொடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராமநாராயணன் போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக கேபிள் தொலைக்காட்சிகளுக்கு திரைப்படப் பாடல்கள் மற்றும் காட்சிகள் விநியோக உரிமை கொடுப்பது குறித்து ஒரு புகார் மனு தங்களிடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் சில தயாரிப்பாளர்கள் அளித்ததாக தொலைக்காட்சி செய்தி வாயிலாக தெரிந்து கொண்டேன்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக கடந்த 2007 முதல் 2011 மே மாதம் வரை பொறுப்பிலிருந்தேன். அந்த சமயத்தில் எந்தவித முறைகேடும் எனக்கு தெரிந்த வரையில் நடைபெறவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 11.09.2011 அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அண்ணா சாலை, பிலிம் சேம்பர் கட்டிடத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்த விவரம் குறித்து (கேபிள் டி.வி. விநியோக உரிமம்) உறுப்பினர்கள் விவாதித்தனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய எஸ்.ஏ. சந்திரசேகரன் என்னை குறிப்பிட்டு சொல்லும் போது இராம.நாராயணன் எந்தவித முறைகேடும் செய்யவில்லை. அவர் நல்லவர் என்று விளக்கம் அளித்துள்ளார். அது பதிவாகி உள்ளது. மேலும் நான் தலைவர் பொறுப்பில் இருந்த போது அவர் துணைத் தலைவராக இருந்தார்.

ஆகவே நான் எந்த முறைகேடும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது வேண்டுமென்றே பொய்ப் புகார்கள் தெரிவிப்பவர்கள் மீது நான் தகுந்த சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொண்டு என்னை சட்டத்தின் துணைக் கொண்டு தற்காத்துக் கொள்வேன் என்பதனை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். நான் குற்றமற்றவன் என்பதனை தாங்கள் தீர விசாரித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

-இவ்வாறு ராம நாராயணன் கூறியுள்ளார்.

விஜய் படத்தில் அனுஷ்கா, எமி ஜாக்சன்!


விஜய் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு இயக்குனர் விஜய் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் எடுக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சீயான் விக்ரம். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள். விஜய்யுடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ள அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் தான் அந்த நாயகிகள்.

அனுஷ்கா விஜய்யின் தெய்வத் திருமகளிலும், எமி ஜாக்சன் மதரசாபட்டினத்திலும் நடித்துள்ளனர். எமி ஜாக்சனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் விஜய்தான்.

இந்த படம் ஹாலிவுட் படமான 'பார்ன் ஐடென்டிட்டி'யைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. தெய்வத் திருமகளும் 'ஐயாம் சாம்' படத்தின் தழுவல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பெரும்பாலான பகுதி வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. எனவே லொகேஷன் பார்ப்பதற்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார்.

கமலுடன் விஸ்வரூபம் படத்தில் எமி நடிக்கப்போவதாக கூறப்படும் நிலையில், விக்ரம் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'என்ஜாய் யுவர் லைப்' படத்துக்காக ஆடையிழக்க வித்யா பாலன் முடிவு?


ஏக்தா கபூரின் தி டர்டி பிக்சரி்ல் படுகவர்ச்சியாக நடிக்கும் வித்யா பாலன் தனது அடுத்த படத்தில் நிர்வாணமாக நடிக்கிறார் என்று சூடான தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள வித்யா பாலன் தற்போது சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தி டர்டி பிக்சர் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் படுகவர்ச்சியாக தோன்றுகிறார். அவரது தூக்கலான கவர்ச்சிப் படங்கள் வெளியாகி பெரும் ரவுண்டு அடித்துக் கொண்டுள்ளன.

துஷார் கபூருடன் நெருக்கமான காட்சிகள், முத்தக் காட்சி என பல சூடேற்றும் விஷயங்கள் படத்தில் நிரம்பியுள்ளனவாம். இந்நிலையில் வித்யா தனது அடுத்து படமான என்ஜாய் யுவர் லைபில் முற்றும் துறந்து நிர்வாணமாக வரப் போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் போடுகிறாராம். இந்த படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

தி டர்டி பிக்சர் டிரெய்லரைப் பார்த்து அவருக்கு தென்னிந்தியாவில் இருந்து வாய்ப்புகள் குவிகிறதாம்.

வித்யா காட்டில் இப்போது 'கவர்ச்சிப் பேய் மழை'யாக காணப்படுவதால், மற்ற ஹீரோயின்கள் எல்லாம் சற்றே பீதியுடன் உள்ளனராம், எங்கே வித்யாவின் கவர்ச்சிக் காற்றில் தாங்கள் துரத்தப்பட்டு விடுவோமோ என்று...!

ஐ.நா முன்றலில் ஒன்றுபட்ட உலகத் தமிழராய் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்!

ஐ.நா வில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கலந்துகொள்ளும் இவ்வேளை ஈழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து உலக அரங்கின் மனச்சாட்சிகளை உலுக்கும் வகையில் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்.

எதிர்வரும் 19-09-2011 திங்கள் அன்று சுவிஸில் நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வோம்.

தாயகத்தில் தமிழர்களின் குரல் நசுக்கப்பட்ட காலத்தில் முளைவிட்ட விதையே பொங்குதமிழ். இன்று விருட்சமாகி வளர்ந்துவிட்ட போதும் தாயகத்தில் நிலவும் அடக்குமுறைக்குள் எமது உறவுகள் தமது நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளையே வெளியே சொல்ல முடியாமல் அடக்கப்படுகின்றார்கள்.

இந்நிலையில் எமது விடுதலைப் பயணத்திற்கு இக்காலப்பகுதியில் அவசியமான ஏழு அம்சக் கோரிக்கையை முன்வைத்து உலகளாவிய வகையில் ஐ.நா முன்றலில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெறுகின்றது.

ஐ.நா வில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கலந்துகொள்ளும் இவ்வேளை ஈழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து உலக அரங்கின் மனச்சாட்சிகளை உலுக்கும் வகையில் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்.

எனவே பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளும் உலகத் தமிழ் உறவுகளும் ஒன்றுபட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் 'ஈகைப் பேரொளி முருகதாஸ் திடலில்' நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வின் ஊடாக எமது நியாயத்தினை வெளிப்படுத்தி நீதி கேட்போம், ஒன்று திரண்டு உலகத் தமிழினமாக உரிமைக் குரல் கொடுப்போம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

நன்றி

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

ஐ.நா முன்றலில் ஒன்றுபட்ட உலகத் தமிழராய் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்!

ஐ.நா வில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கலந்துகொள்ளும் இவ்வேளை ஈழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து உலக அரங்கின் மனச்சாட்சிகளை உலுக்கும் வகையில் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்.

எதிர்வரும் 19-09-2011 திங்கள் அன்று சுவிஸில் நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வோம்.

தாயகத்தில் தமிழர்களின் குரல் நசுக்கப்பட்ட காலத்தில் முளைவிட்ட விதையே பொங்குதமிழ். இன்று விருட்சமாகி வளர்ந்துவிட்ட போதும் தாயகத்தில் நிலவும் அடக்குமுறைக்குள் எமது உறவுகள் தமது நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளையே வெளியே சொல்ல முடியாமல் அடக்கப்படுகின்றார்கள்.

இந்நிலையில் எமது விடுதலைப் பயணத்திற்கு இக்காலப்பகுதியில் அவசியமான ஏழு அம்சக் கோரிக்கையை முன்வைத்து உலகளாவிய வகையில் ஐ.நா முன்றலில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெறுகின்றது.

ஐ.நா வில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கலந்துகொள்ளும் இவ்வேளை ஈழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து உலக அரங்கின் மனச்சாட்சிகளை உலுக்கும் வகையில் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்.

எனவே பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளும் உலகத் தமிழ் உறவுகளும் ஒன்றுபட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் 'ஈகைப் பேரொளி முருகதாஸ் திடலில்' நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வின் ஊடாக எமது நியாயத்தினை வெளிப்படுத்தி நீதி கேட்போம், ஒன்று திரண்டு உலகத் தமிழினமாக உரிமைக் குரல் கொடுப்போம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

நன்றி

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

நவம்பர் 27 இல் வெளிவருகிறது "தேன் கூடு"

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஈழ மக்களின் வாழ்க்கை, துயரம், போராட்டம் பற்றிய முழு நீள தமிழ்த் திரைப்படம் "தேன் கூடு" நவம்பர் 27 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் கதை நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான "1999" நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் கதை நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் இயக்குநர் இகோர். இப்படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் உணர்வுடன் வழங்குகிறார்.

யாழ்ப்பாணத்தில் டக்ளஸை சந்திக்க மறுத்த றொபேர்ட் ஓ பிளேக்!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க உதவி செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கை சந்திப்பதற்கு ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி எடுத்தார் என்றும் அமெரிக்க தூதரகம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்ததாகவும் கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா இராஜாங்க உதவிச்செயலாளர் பிளேக் தமிழ் தேசியக்கூட்டமைப்பை சந்தித்தையடுத்து தாமும் சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தருமாறு டக்ளஸ் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கோரிய போது டக்ளஸை சந்திப்பதற்கு பிளேக் விரும்பவில்லை என தூதரக மட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் கோபம் அடைந்த டக்ளஸ் நேற்று பிளேக் யாழ்ப்பாணம் வந்த போது ஒரு சில மக்களை தமது அலுவலகத்திற்கு நிவாரணம் தருவதாக அழைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தை அரசு ஆதரவுக்கட்சியான ஈ.பி.டி.பி நடத்த உள்ளதை தான் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும் இதனை தான் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்றும் றொபேர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார். றொபேர்ட் ஓ பிளேக்கிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் அரசு ஆதரவுடன் ஈ.பி.டி.பி நடத்திய ஆர்ப்பாட்டம், யாழ். கச்சேரியில் அவருக்கு வரவேற்பு எதனையும் வழங்காது அவமதித்தது போன்ற சம்பவங்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் பாதகமான சூழலையே ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா