திரிப்போலி பிரதான வைத்தியசாலைக்கு சில நூறு மீட்டர் தொலைவில் பெண்களை பரிசோதிக்கும் அறை உள்ளது. இந்த அறையில் நடப்பதை படுக்கை அறையில் இருந்து கடாபி பார்ப்பார். இது பல்கலைக்கழக ஆய்விடமா அல்லது வைத்தியசாலையா என்ற குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இது கடாபியின் இரகசியமான பச்சை நிற அறை என்றே கூறப்படுகிறது.
கொலன்டில் இருந்து இறக்கப்பட்டுள்ள இந்த கட்டில் கடாபியின் பாலியல் சித்திரவதை கூடம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுமார் 400 முதல் 500 வரையான மருத்துவ கற்கை மாணவிகள் வரும் இடமாகவும் இது இருந்துள்ளது. லிபிய குடும்பங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலை ஓர் ஆட்சித் தலைவர் செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
கடாபியின் படுக்கை அறை இரண்டு கட்டில்களுடன், பக்கத்தில் ஒரு குளியலறை, அதற்கு மறுபக்கம் பெண்களை பரிசோதிக்கும் அறை என்ற முக்கோண இணைவு அவருடைய பாலியல் வக்கிரத்தின் அடையாளமே என்றும் அங்குள்ள வைத்தியர் ஒருவர் கூறுகிறார்.
புதிதாக திருமணமான பெண்கள் பரிசோதிக்கப்படும் இந்த இடத்தில் நடந்த விவகாரங்களை வெளிப்படையாகக் கூறும் நாடல்ல லிபியா என்றும் அவர் தெரிவித்தார். அங்கு வரும் பெண்களில் தேர்வு செய்யப்பட்டவரை பாலியல் பலாத்காரம் செய்யும் கடாபிக்கு எதிராக குரல் கொடுக்க வல்லமை அற்றவர்களாகவே மக்கள் இருந்துள்ளார்கள். இப்பெண்களிடம் பேசும்போது அரசனின் மனைவி என்று அடைமொழி கூறி அழைத்துள்ளார் கடாபி. இதுபோல கடாபிக்கு எதிராக பேசிய பெண் ஒருவர் திரிப்போலியில் வைத்து அவருடைய படைகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்ததே.
கடாபியின் அசிங்கங்கள் மேலும் அம்பலத்திற்கு வரும். அவர் சரணடைந்தால் இதற்கெல்லாம் விளக்கம் கூறவேண்டி வரும். ஆகவே கடாபி சரணடையும் சாத்தியம் குறைந்தே வருகிறது. மிக வக்கிரமான குணமுடைய அதேவேளை கோமாளித்தனமான சர்வாதிகாரியாக இவர் இருந்துள்ளமையை இந்தச் செயல் காட்டுகிறது.
No comments:
Post a Comment