விஜய் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு இயக்குனர் விஜய் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் எடுக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சீயான் விக்ரம். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள். விஜய்யுடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ள அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் தான் அந்த நாயகிகள்.
அனுஷ்கா விஜய்யின் தெய்வத் திருமகளிலும், எமி ஜாக்சன் மதரசாபட்டினத்திலும் நடித்துள்ளனர். எமி ஜாக்சனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் விஜய்தான்.
இந்த படம் ஹாலிவுட் படமான 'பார்ன் ஐடென்டிட்டி'யைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. தெய்வத் திருமகளும் 'ஐயாம் சாம்' படத்தின் தழுவல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பெரும்பாலான பகுதி வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. எனவே லொகேஷன் பார்ப்பதற்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார்.
கமலுடன் விஸ்வரூபம் படத்தில் எமி நடிக்கப்போவதாக கூறப்படும் நிலையில், விக்ரம் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு இயக்குனர் விஜய் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் எடுக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சீயான் விக்ரம். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள். விஜய்யுடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ள அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் தான் அந்த நாயகிகள்.
அனுஷ்கா விஜய்யின் தெய்வத் திருமகளிலும், எமி ஜாக்சன் மதரசாபட்டினத்திலும் நடித்துள்ளனர். எமி ஜாக்சனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் விஜய்தான்.
இந்த படம் ஹாலிவுட் படமான 'பார்ன் ஐடென்டிட்டி'யைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. தெய்வத் திருமகளும் 'ஐயாம் சாம்' படத்தின் தழுவல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பெரும்பாலான பகுதி வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. எனவே லொகேஷன் பார்ப்பதற்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார்.
கமலுடன் விஸ்வரூபம் படத்தில் எமி நடிக்கப்போவதாக கூறப்படும் நிலையில், விக்ரம் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment