Friday 9 September 2011

கிளிநொச்சி கந்தசாமி ஆலய பகுதில் தொடர்ந்து நிலைகொள்ளும் இராணுவம்


கிளிநொச்சி நகர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கண்ணன் ஆலயப்பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவம் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இம்முகாமைக் கைவிட்டு இராணுவம் வெளியேறியுள்ள போதும் பொதுமக்களின் காணிகள் வீடுகளை உத்தியோக பூர்வமான முறையில் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதுடன் காணி உரிமையாளர்கள் காணிக்குரிய உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்து தமது காணியை உறுதிப்படுத்தி அதன்பின் தமது அனுமதியுடன் காணிகளைப் பொறுப்பேற்குமாறு இராணுவ சிவில் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஏற்கனவே பிரசித்திபெற்ற கண்ணன் ஆலயத்திலும் இச் சுற்றாடலிலுள்ள கட்டடத் திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களம் கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி அலுவலக வளாகம், தனியார் வீடுகள் முதலானவற்றில் தங்கியிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எடுத்த நடவடிக்கையையடுத்து அவ் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி நகர் கிராம அலுவலர் பிரிவில் பரவிப்பாஞ்சானிலும் தற்போது யுத்தத்திற்குப் பின்னர் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் கிளிநொச்சி அருள்மிகு கந்தசாமி ஆலயவளாக மடாலயப் பகுதியிலும் அதனை அண்டிய கடைகள் வீடுகளிலும் இராணுவத் தரப்பு நிலை கொண்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யாழ்.ஏழாலையில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது


அரசுக்கு எதிரான பிரசாரங்களை விநியோகித்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஏழாலை இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ். பொலிஸாரால் ஏழாலை மேற்கைச் சேர்ந்த செல்வராஜா செல்வகிரீஷன் (வயது 31) என்ற இளைஞர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.இரவு 9.30 மணியளவில் வீட்டில் வைத்துக் கைது செய்யப் பட்ட செல்வகிரீஷன் நேற்று யாழ். நீதிமன்றத்தில் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தவிட்டுள்ளார் என இளைஞர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தவபாலன் தெரிவித்தார்.இந்த இளைஞர் விநியோகித்ததார் எனப் பொலிஸாரால் கூறப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் தமிழ் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் வருமாறு:
சிங்களப் பயங்கரவாத அரசு மீண்டும் எமது தமிழ் மக்கள் மீது இன அழிப்பை அரங்கேற்றியுள்ளது. கிறீஸ் பூதம் என்ற போர்வையில் தமிழர் பிரதேசமான வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்\ர் கோத்தபாய தலைமையின் கீழ் இயங்கும் சிறீலங்காப் புலனாய்வுப் படையினர் தமிழ் மக்கள் மீது வன்முறை மூலம் இன அழிப்பை நடத்தி வருகிறனர்.

இவர்களுடன் தமிழ்தேச விரோதக் கும்பலான ஈ.பி.டி.பி பக்கதுணையாக இயங்குகிறது. எனவே தமிழீழ மக்களாகிய நீங்கள் விழிப்புடனும் மிகுந்த பாதுகாப்புடனும் இருக்குமாறு வேண்டிக் கொள்கிறோம் என்றுள்ளது.

அதன் கீழ் கிறீஸ் பூதத்துக்கோர் எச்சரிக்கை என்ற தலைப்பில்,
எமது மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் தொடருமாயின் அதற்கெதிராக நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்று எமக்குத் தெரியும். இத்தோடு உங்கள் தாக்குதல்களை நிறுத்தி ஒதுங்கிக் கொள்ளுங்கள். இல்லையேல் ஒதுக்கி வைப்போம் எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.பிரசுரத்தின் இறுதியில் தமிழ் தேச பற்றுள்ள தேசிய இயக்கம். தமிழீழம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த இளைஞர் ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலைய நிர்வாகக் குழுவின் செயலாளராவார். தினமும் காலையில் சனசமூக நிலையத்தைத் திறந்து நாளிதழ்களை அங்குள்ள மேசையில் இவர் வைத்து வந்தவர். சில தினங்களுக்கு முன்னர் சனசமூக நிலையத்தைக் காலைவேளை திறந்தபோது குறித்த துண்டு பிரசுரம் உள்ளே கிடந்ததாகவும், அதனை அவர் எடுத்துப் பார்த்தாரே தவிர அதனை அவர் தயாரிக்கவோ பிரசுரிக்கவோ இல்லை என்றும் இளைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.யாழ். பொலிஸார் இந்த இளைஞர் பிரசாரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது ஏழாலைப்பகுதியில் வைத்துக் கைது செய்ததாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

சக்தி சிதம்பரம் ரூ 1.60 கோடி ஏமாற்றினார்! - தொழிலதிபர் பதில் புகார்


சென்னை: தயாரிப்பாளரும் இயக்குநருமான சக்தி சிதம்பரம் தனக்கு ரூ 1.60 கோடி தரவேண்டும் என்றும் அதை வசூலித்துத் தருமாறும் போலீசில் புகார் செய்துள்ளார் தொழிலதிபர் வி.எஸ்.ஜே.தினகரன்.

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சக்திசிதம்பரம் சமீபத்தில் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மீதும், அவரது அண்ணன் மகன் தினகரன் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். 'எந்திரன்' படம் விநியோகத்தில் தினகரன் தன்னுடன் பங்குதாரராக செயல்பட்டதாகவும், ஆனால் அந்த படத்தின் கணக்குவழக்குகளை ஒப்படைக்காமல் மோசடி செய்துவிட்டார் என்றும், திருவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கிவிட்டு பணம் தராமல் அபகரித்துவிட்டார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பதில் புகார்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொழில் அதிபர் வி.எஸ்.ஜே.தினகரன் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், 'எந்திரன்' படம் வெளியிட்டதில் படஅதிபர் சக்திசிதம்பரம்தான், எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் தரவேண்டும் என்றும், அதற்காக 'காவலன்' படம் விநியோக உரிமையை தருவதாக கூறினார் என்றும், பின்னர் `காவலன்' படம் விநியோக உரிமையை தரவில்லை என்றும், சக்திசிதம்பரத்திடமிருந்து ரூ.1 கோடியே 60 லட்சத்தை வசூலித்து தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருவள்ளூரில் நிலம் வாங்கியதில் எனக்கு சம்பந்தமும் இல்லை என்றும், எனது புகழை கெடுக்க பொய்யான புகார் கொடுத்துள்ளார் என்றும் மனுவில் தினகரன் தெரிவித்துள்ளார்.

ராணா கதையில் மாற்றமில்லை... மேலும் மெருகேற்றப்பட்ட திரைக்கதை... புதிய தகவல்கள்!


ரஜினியின் ராணா கதையிலோ காட்சி அமைப்பிலோ எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட திரைக்கதையை மேலும் மெருகேற்றியுள்ளோம் என்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள ரஜினி, நீண்ட ஓய்வுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

வரும் அக்டோபரில் ராணா படப்பிடிப்பு நடக்கும் என்றும் இதில் ரஜினி பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக தீபிகா படுகோனே, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர்.

இரு நாயகிகளில் தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை சீக்கிரம் முடித்து விட்டு ராணா படத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் அதை ஏற்று படங்களை வேகமாக முடித்து விட்டு ராணா படப்பிடிப்புக்கு வர உள்ளனர்.

இப்படம் சரித்திர கதை என்பதால் அதற்கேற்ப பொருத்தமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ராணாவில் காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், ரஜினிக்கான சண்டைக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளை பலமாக மறுத்துள்ளது இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தரப்பு.

இந்தப் படத்தின் கதையில் எந்த மாறுதலும் இருக்கக் கூடாது என ரஜினி கூறிவிட்டதாகவும், சண்டைக் காட்சிகள் தொழில்நுட்ப உதவியுடன் சிறப்பாக எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் ஆலோசனையின் பேரில் திரைக்கதை மேலும் மெருகேற்றப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

வந்தான் வென்றானுக்கு 'யு'!


ஜீவாவின் அடுத்த படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. படத்தின் பெயர் வந்தான் வென்றான்.

ஆடுகளம் டாப்ஸிதான் இதில் ஜீவாவுக்கு ஜோடி. கேஎஸ் சீனிவாசன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தமன் இசையமைத்துள்ளார்.

கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான ஜீவாவின் படங்களில் கோ வெற்றிகரமாக ஓடியது. ஆனால் ரௌத்ரம் கவிழ்த்துவிட்டது.

எனவே வந்தான் வென்றான் வெற்றி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் நேற்று சென்சாருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் எந்த கட்டும் கொடுக்காமல், யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

வந்தான் வென்றான் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் சிறப்பாக வந்திருப்பதால், அடுத்த படத்துக்கும் கண்ணனுக்கு அவர் கால்ஷீட் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஜினிக்கு கிடைக்கவேண்டிய தேசிய விருது தனுஷுக்கு கிடைத்துள்ளது - கே பாலச்சந்தர்


டெல்லி: ரஜினிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது தனுஷுக்குக் கிடைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன், என்றார் இயக்குநர் கே பாலச்சந்தர்.

இந்தியத் திரையுலகின் உயரிய விருதான பால்கே விருது பெறும் இயக்குநர் கே.பாலசந்தர் மற்றும் தேசிய விருது பெறும் திரைக் கலைஞர்கள் ஆகியோருக்கு தினமணி நாளிதழும் டெல்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து தலைநகரில் வியாழக்கிழமை பாராட்டு விழா எடுத்தன.

இந்த நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் பேசுகையில், "தமிழர்கள் பொதுவாக புத்திசாலிகள்; டெல்லித் தமிழர்கள் அதிபுத்திசாலிகள். அரசு எங்களுக்கு விருதும் பாராட்டும் வழங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே எங்களைக் கௌரவித்துப் பாராட்டு விழா நடத்துவதுதான் அதற்குச் சாட்சி.

இங்கு பேசியவர்கள் அனைவரும் என்னைப் பாராட்டியே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமா விருது வாங்கியிருக்கிறேன். பல இளம் கலைஞர்களும் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் இந்த முறை தமிழ்க் கலைஞர்களுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்திருப்பது, தமிழ் சினிமாவின் வீச்சு அதிகரித்திருப்பதைக் காட்டியுள்ளது.

நல்ல படைப்புகளுக்காக இளம் கலைஞர்கள் விருது பெறும்போது அவர்கள் மீது எனக்கு உண்மையிலேயே பொறாமை ஏற்படுகிறது. இதைச் சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. ஏனென்றால் அவர்களைப் போல நல்ல படைப்பை நாமும் தரவேண்டுமே என்ற நல்ல எண்ணம்தான் காரணம். இளம் திரைக்கலைஞர்களின் சாதனை என்னை மேலும் மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என்பதுதான் உண்மை.

தனுஷுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அது சாதாரண விஷயமல்ல.

'உனக்கு தேசிய விருது வாங்கும் எண்ணமே இல்லையா' என நான், ரஜினியிடம் அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் 'ஜனங்களின் விருது போதும்' எனக் கூறிவிட்டார். ரஜினிக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது தனுஷுக்குக் கிடைத்ததாகவே நான் கருதுகிறேன்.

இங்கு எல்லோருக்கும் நடைபெற்ற இந்த சிறப்பான பாராட்டு விழாவில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். என்னை விட்டுவிடுங்கள்... இளைய தலைமுறையினரின் திறமையை அங்கீகரித்து அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் உயர்ந்தால் தமிழ் சினிமா உயரும்," என்றார்.

வைரமுத்து

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, "கே.பி. க்கு கிடைத்த தாதா சாகேப் பால்கே விருது தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த விருது ஆகும். அவர் இந்திப் படத்தை விட்டது, தமிழர்களைப் பட்டினி போடக்கூடாது என்பதற்காகத்தான்," என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி ராஜா பங்கேற்று விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசினார்.

நடிகர் தனுஷ் (சிறந்த நடிகர்), நடிகை சரண்யா பொன்வண்ணன் (சிறந்த நடிகை), இயக்குநர் வெற்றிமாறன் (சிறந்த இயக்குநர்-ஆடுகளம்), தயாரிப்பாளர் ஷிபு ஐசக் (சிறந்த தயாரிப்பாளர்-தென் மேற்கு பருவக்காற்று), சீனு ராமசாமி (சிறந்த மாநில மொழித் திரைப்படத்துக்கான விருது-தென் மேற்கு பருவக் காற்று), நடிகர் ஜே.தம்பி ராமையா (சிறந்த துணை நடிகர்- மைனா), டி.இ.கிஷோர் (சிறந்த படத் தொகுப்பு-ஆடுகளம்), தினேஷ் குமார் (சிறந்த நடன இயக்கம்- ஆடுகளம்), சீனிவாஸ் எம்.மோகன் (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்-எந்திரன்), வில்லன் நடிகர் வ.ஐ.செ.ஜெயபாலன் (சிறப்புப் பரிசு-சான்றிதழ்) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

கை நிறைய வேறு மொழிப் படங்கள்-தமிழுக்கு லக்ஷ்மி ராய் 'குட்டி' பிரேக்!


நடிகை லஷ்மி ராய் தமிழ் படங்களுக்கு சிறிது காலம் பிரேக் விட முடிவு செய்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா என்று அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ஹிட்டாகியுள்ளன. இதனால் லக்ஷ்மி ராய் குஷியாகியுள்ளார். அதிலும் குறிப்பாக மங்காத்தாவில் கவர்ச்சி மற்றும் வில்லித்தனமான கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.

இதைப் பார்த்த இயக்குனர்கள் அட லக்ஷ்மி ராயா இது, அருமையா நடித்திருக்கிறாரே, நம்ம படத்துக்கு ஒப்பந்தம் செய்வோம் என்று அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் லக்ஷ்மி ராயோ ஸரி, ஏற்கனவே கை நிறைய மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்கள் உள்ளது. அதனால் இப்போதைக்கு தமிழ் படங்களில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

இந்த இடைவேளை ரசிகர்களை தன்னைத் தேட வைக்கும் என்றும் அவர் நம்புகிறார். என்னடா லக்ஷ்மி ராயை காணோமே என்று ரசிகர்கள் ஏங்குவார்கள் என்று நினைக்கிறார்.

'குட்டி' பிரேக்காக இருக்கட்டும், இல்லையெனில் ரசிகர்கள் மறந்துவிடப்போகிறார்கள்....!

கோடம்பாக்கத்தில் ஓணம்!


தமிழ் சினிமா என்பது பெயருக்குத்தானே தவிர, கோடம்பாக்கத்தில் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் பெரும்பான்மை கலைஞர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்களே.

முன்னணி ஹீரோக்களே கூட பாதி மலையாளிகளாகவே உள்ளனர்.

நடிகைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். 90 சதவீதம் கேரளத்து வரவுகள்தான் தமிழ் சினிமாவில் நிறைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று ஓணம் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர். சிலர் வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு கேரளா சென்றுவிட்டனர். குறிப்பாக முன்னணி நடிகர்-நடிகைகள் அனைவரும் இன்று கேரளாவில் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்.

இன்னும் சிலர் கோடம்பாக்கத்திலேயே ஓணம் கொண்டாடி வருகின்றனர்.

தனது ஓணம் கொண்டாட்டம் பற்றி அசின் கூறுகையில், "ஓணத்தை ஓணம் பண்டிகையை கொண்டாட ஜெய்ப்பூரில் நடந்த போல்பச்சன் படப்பிடிப்பில் இருந்து இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தேன். இந்த பண்டிகையை பெற்றோருடன் சேர்ந்து கொண்டாடுவதுதான் எனக்கு இஷ்டம். உறவினர்கள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்துள்ளேன். ஓணத்துக்காக பட்டு பாவாடை, சட்டை வாங்கி அணிந்தேன்.

வண்ணமயமான பூக்கோலங்கள் வாசலில் இடுவது இப்பண்டிகையின் ஸ்பெஷல். என் அம்மா ஓணம் பண்டிகையையொட்டி செய்யும் பாயாசம் ரொம்பவும் ருசியாக இருக்கும். வாழை இலையில் விதவிதமான உணவுகள், மற்றும் பாயாசம் வைத்து கடவுளுக்கு படையலிட்டு விட்டு சாப்பிடும் இந்த நாள் மறக்க முடியாதது," என்றார்.

அமலா பால்:

ஓணம் பண்டிகையின் போது புதுவிதமான பூக்கோலம் போடுவது எனக்கு பிடித்த விஷயம். சிறுவயதில் இருந்தே இதை செய்கிறேன். கல்லூரியில் படித்த போது ஓணத்துக்கு பூக்கோலம் போடுவதில் தோழிகளுக்குள் போட்டியே நடக்கும். அது மறக்க முடியாத நினைவுகள். பெற்றோருடன் ஓணத்தை கொண்டாடுகிறேன் என்றார்.

பாவனா கூறும்போது, கன்னட படப்பிடிப்புக்காக கொழும்பில் இருப்பதால் ஊருக்கு போக முடியவில்லை. ஆனாலும் இங்கு படக்குழுவினருடன் அப்பண்டிகையை கொண்டாடினேன்," என்றார்.

நடிகை ஓவியா:

ஓணம் கொண்டாட்டம் இல்லாமல் எந்த ஆண்டும் பூர்த்தியாகாது. நான் பெற்றோருடன் இந்த ஆண்டு ஓணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில் உள்ள இனிமையே தனி.

அஜீத் - ஷாலினி

பிரபல நடிகர் அஜீத் தன் மனைவி ஷாலினி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் இன்று ஓணம் கொண்டாடினார்.

நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ் ஆகியோரும் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள்.

நடிகை காந்திமதி மரணம்


உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகை காந்திமதி மரணமடைந்துள்ளார். சென்னையில் உள்ள வடபழனி வீட்டில் மரணமடைந்த நடிகை காந்திமதி 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்நிலையில் நடிகை காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறும் என்று அவரது மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.

'ஜெய் வைக்கும் கோழிக் குழம்பு நல்லா இருக்கும்...!' - ருசி பார்த்த அஞ்சலி


இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் - பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து முதல்முறையாகத் தயாரிக்கும் எங்கேயும் எப்போதும் படத்தின் குழுவினருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், வியாழக்கிழமை.

இதுவரை இப்படியொரு அடக்கமான, நன்கு திட்டமிடப்பட்ட, சுவாரஸ்யமான பிரஸ்மீட் நடந்திருக்குமா என்று கேட்கும் அளவுக்கு கச்சிதமாக அமைந்துவிட்டது நிகழ்ச்சி.

படத்தின் மூன்று பாடல்களைத் திரையிட்டார்கள். மூன்றுமே முத்துக்கள் எனும் அளவு இசை, காட்சியமைப்பில் அசத்தியிருந்தார்கள் புதிய இசையமைப்பாளர் சத்யாவும் இயக்குநர் சரவணனும்.

இந்தப் படம் குறித்த தனது அறிமுக உரையில் இப்படிச் சொன்னார் ஏ ஆர் முருகதாஸ்:

"வாழ்க்கையில் சில நொடி நேர எச்சரிக்கையின்மை ஒரு குடும்பத்தில் எத்தனை பெரிய தீராத துயரத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதைச் சொல்லும் படம் இந்த எங்கேயும் எப்போதும். என் நண்பன் இயக்குநர் திருப்பதிசாமி, மிக இளம் வயதில் ஒரு கார் விபத்தில் பலியாகிப் போனான். அந்த சம்பவம் என்னை அதிகமாகப் பாதித்துவிட்டது. அந்த பாதிப்புதான் இந்தப் படத்தின் திரைக்கதை என்றுகூட சொல்லலாம். ஆனால் இந்தப் படம் வெறும் மெசேஜ் அல்ல... சுவாரஸ்யமான ஒரு சினிமாவாக உருவாகியிருக்கிறது" என்றார்.

பின்னர் கேள்வி பதில் பகுதி ஆரம்பமானது.

ஒவ்வொரு கேள்விக்கும் அநாவசியமாக ஒரு வார்த்தையைக் கூட விரயம் செய்யாமல் நச்சென்று பதிலளித்தனர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர்.

படத்தின் ஒரு ஜோடியான ஜெய்-அஞ்சலியிடம்தான் அதிக கேள்விகளைக் கேட்டனர் நிருபர்கள். எப்படியாவது இருவரின் வாயையும் பிடுங்கி, அவர்களைப் பற்றிய நீண்ட நாள் கிசுகிசுவை உறுதிப்படுத்த முயன்றும், இருவரும் நழுவும் மீன்களாக சாமர்த்தியம் காட்டியது சுவாரஸ்யம்.

அஞ்சலிக்கும் உங்களுக்கும் காதல் என்று செய்தி வருகிறதே என்று ஜெய்யிடம் கேட்டனர். அதற்கு அவர், "இந்த கேள்வி பிடித்து இருக்கிறது. ஆனால், எனக்கு காதல் வரவில்லை. அஞ்சலியுடன் காதல் காட்சியில் நடித்து இருக்கிறேன். அதுதான் உண்மை. அவருடன் எனக்கு காதல் இல்லை..." என்றவரிடம், "சரி அஞ்சலியிடம் உங்களுக்குப் பிடிச்சது என்ன என்றாவது சொல்லுங்கள்" என்றார் ஒரு நிருபர்.

"அஞ்சலியிடம் எனக்கு பிடித்தது, அவருடைய நடிப்புதான்,'' என்று எஸ்கேப்பானார் ஜெய்.

அடுத்து அஞ்சலியிடம் இதே கேள்வியைக் கேட்டபோது, "ஜெய் நன்றாக நடிப்பார். அதேபோல் நன்றாக சமைப்பார். அவர் சமைக்கிற கோழிக் குழம்பு ருசியாக இருக்கும். அவ்வளவுதான். எங்கள் இடையே இருப்பது நட்புதான். காதல் அல்ல.

எனக்கு ரொம்ப சின்ன வயதுதான். இப்போதுதான் வளர ஆரம்பித்து இருக்கிறேன். காதல், திருமணம் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை,'' என்றார்.

செப்டம்பர் 16-ம் தேதி திரைக்கு வருகிறது எங்கேயும் எப்போதும்!

மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாக பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது


பெங்களூர்: மனைவியைக் கத்தியால் குத்திப் படுகாயமடையச் செய்த பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பிரபல நடிகர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்ட செயல் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தில் பிரபலமான இளம் நடிகர் தர்ஷன். இவர் பழம்பெரும் நடிகர் தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகன் ஆவார். பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு வினீஷ் என்ற 3 வயது மகன் உள்ளான்.

குடும்பச் சண்டை காரணமாக கணவனும், மனைவியும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். தர்ஷன் தனியாகவும், அவரது மனைவி தனது குழந்தையுடனும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் விஜயலட்சுமி தங்கியிருந்த அவரது நண்பரின் வீட்டுக்கு தர்ஷன் ஆவேசமாகப் போயுள்ளார். அங்கு விஜயலட்சுமியுடன் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி குத்தியுள்ளார். பின்னர் தனது ரிவால்வரை எடுத்து மனைவியையும், மகனையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.

தாக்குதலில் விஜயலட்சுமி படுகாயமடைந்து வீழ்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்து தர்ஷன் போய் விட்டார். உடனடியாக விஜயலட்சுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். படுகாயமைடந்துள்ள அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த விஜயநகர் போலீஸார் தர்ஷனைக் கைது செய்தனர்.

நீண்ட காலமாக சினிமாவில் நடித்து வரும் தர்ஷன் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்துள்ள ஒரு கலைஞர் ஆவார். எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காதவர். இந்த நிலையில் அவர் இப்படி நடந்து கொண்டது அவரது ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் அதிர்சி அளித்துள்ளது.

நண்பன் ஷூட்டிங்கில் இலியானா கால் முறிந்தது!!


ஷங்கர் இயக்கும் நண்பன் படப்பிடிப்பின் போது நடந்த நடன ஒத்திகையில் கால் தடுமாறி விழுந்ததில் கதாநாயகி இலியானாவின் கால் முறிந்தது.

பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். நண்பன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.

இதில் இலியானா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது. பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் பராஹான் இப் பயிற்சியை அளித்தார். அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்தச அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.

கால் சரியாக மூன்றுவாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். இலியானா தவிர்த்த காட்சிகள் மற்றும் பேட்ச் ஒர்க்கை மட்டும் இப்போது ஷங்கர் மேற்கொண்டுள்ளார்.

100 படங்களுக்குப் பிறகுதான் இளையராஜா ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார்!- பஞ்சு அருணாச்சலம்


தமிழ் சினிமா வளர்ச்சியடைந்துள்ளதாக சில சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இது போலித்தனமானது. சினிமாவுக்கு நல்லதல்ல, என்றார் தமிழ் சினிமா ஜாம்பவான்களில் ஒருவரான பஞ்சு அருணாச்சலம்.

சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் 'நந்தா நந்திதா' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் நடந்தது. முதல் இசைத் தட்டை பஞ்சு அருணாசலம் வெளியிட, தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பெற்றுக்கொண்டார்.

விழாவில், பஞ்சு அருணாசலம் பேச்சு, திரையுலகினருக்கே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

அவர் பேசுகையில், "முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் அல்லது சில லட்ச ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும்.

ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80-ல் இருந்து 200 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன. இந்த போலித்தனமான வெற்றியும் வளர்ச்சியும் சினிமாவுக்கு உதவுமா?

இளையராஜா சம்பளம்

'அன்னக்கிளி' படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அதுவரை ரூ 25 ஆயிரம் பெற்றுக் கொண்டார். சம்பளத்தை விட சாதனையைத்தான் அவர் பெரிதாக நினைத்தார்.

ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். இசையமைப்பாளர்கள் கோடிகளில் சம்பளம் பேசுகிறார்கள்.

யார் திறமைசாலி என்பதில் போட்டி இல்லை. யார் அதிக சம்பளம் வாங்குவது? என்பதில்தான் இப்போது போட்டி இருக்கிறது. இது நல்லதா... சினிமா எப்படி வளரும்?," என்றார்.

தயாரிப்பாளர்களை கரை சேர்ப்பேன்

படத்தின் இயக்குநர் ராம் ஷிவா பேசுகையில், "நான் சினிமாவில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். கதை, திறமை எல்லாம் இருந்தும் அதைக் காட்ட வழியின்றி தவித்தபோது, என் நண்பர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் படம் தயாரிக்க முன்வந்தார்கள்.

அவர்கள் என்னிடம் இரண்டு வாய்ப்புகளை முன் வைத்தனர். ரூ 25 லட்சம் தருகிறோம். மனைவி மக்களோடு ஊருக்குப்போ. பணத்தை திருப்பிக் கூட தர வேண்டாம். அல்லது ரூ 40 லட்சம் தருகிறோம், படம் பண்ணு என்றனர். அவர்களிடம், இன்னும் கொஞ்சம் மேலே பணம் போட்டு, நீங்களே தயாரிப்பாளராக இருங்கள். நான் ஒரு படம் செய்கிறேன். நிச்சயம் ஜெயித்துக் காட்டுகிறேன், என்றேன். நம்பி வந்தனர். நான் நேராக கேயாரிடம் அழைத்துப் போய் வழிகாட்டச் சொன்னேன். அவரது வழிகாட்டுதலில் படம் நல்லபடியாக முடிந்துவிட்டது.

என்னை நம்பி வந்த அந்த மூன்று தயாரிப்பாளர்களையும் நஷ்டமில்லாமல் கரை சேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது," என்றார்.

நடிகர் நாசர், கேயார், இயக்குநர் ஜனநாதன், இசையமைப்பாளர் எமில், ஒளிப்பதிவாளர் சீனிவாசரெட்டி, படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

பட அதிபர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் வரவேற்றார்கள்.

நடிகை இலியானா கால் முறிந்தது


நடிகை இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இலியானா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது. டான்ஸ் மாஸ்டர் பராஹான் இப்பயிற்சியை அளித்தார். அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்தார். டாக்டர்களை வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் எனவே சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

Thursday 8 September 2011

சுற்றுலாவா இல்லை சுத்தமாக அழிக்கவா? நீங்களே முடிவெடுங்கள்! (படங்கள் இணைப்பு)

வவுனியா தடுப்பு முகாமில் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட 500 போராளிகளை ஏற்றிகொண்டு ரயில் ஒன்று இன்று கொழும்பு சென்றடைந்துள்ளது. இரயில் பயணம் தொடங்கியது முதல் முடியும்வரை இலங்கைக் கொடிகளை அசைத்தவாறு அவர்கள் சென்றதைச் சொல்வதா ? இல்லை பெண்கள் சிங்கள இராணுவம் என்று கூடப்பாராமல் கைகுலுக்கிய காட்சிகளைச் சொல்வதா ? சுற்றுலா என்ற போர்வையில் கொழும்பையும் அதன் புறநர்பகுதிகளில் இருக்கும் களியாட்ட இடங்களுக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனரே அதைனைச் சொல்வதா ? தமிழ் மக்களின் மனதிலும் போராளிகளின் மனதிலும் சிங்களம் விசம் கலப்பதைச் சொல்வதா ? இல்லை எமது சமூகம் இனி நாகரீகம் என்ற போர்வையில் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறதே அதனைச் சொல்வதா ?

புகைப்படங்களைப் பார்த்து நீங்களே முடிவுசெய்யுங்கள்: உங்கள் கைகளில் விட்டுவிடுகிறோம்.




அதிர்வு

கம்மியூனிஸ்டுகளை இலங்கை வலையில் விழுத்த திட்டமா?

இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர இந்திய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இவர் தனது விஜயத்தின்போது இந்தியாவில் உள்ள கம்மியூனிஸ்ட் தலைவர்களான டி.ராஜா அவர்களைச் சந்தித்து நீண்டநேரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

சமீபகாலமாக தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில் இந்திய கம்மியூனிஸ்டுகளும் தமது ஆதரவை அதிகரித்துள்ளனர். ஏற்கனவே ஜெயலலிதாவை இலங்கை அழைத்து தனது வலைக்குள் சிக்கவைக்க இலங்கை எண்ணியது தோல்வியில் முடிந்தது யாவரும் அறிந்ததே. இதனை ஈடு செய்ய தற்போது இந்திய கம்மியூனிஸ்டுகளை இலங்கை குறிவைத்துள்ளதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது.

தற்போது உள்ள சூழ் நிலையில் இந்திய கம்மியூனிஸ்டுகள் இச் சந்திப்புத் தொடர்பாக விழிப்பாக இருக்கவேண்டும் என தமிழ் புத்திஜீவிகளும் ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இதுவரைகாலமும் மேற்கொள்ளாத பல ராஜதந்திர நடவடிக்கைகளை முடிக்கிவிட்டுள்ளது என்றும் அதற்காக பல அரசியல்வாதிகளையும் புத்திஜீவிகளையும் அது பயன்படுத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் மாறிவரும் கள நிலை இலங்கைக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளதாக அறியப்படுகிறது.

அதிர்வு

காஜல் டாப்லெஸ்ஸாக தான் போஸ் கொடுத்தார்: எப்ஹெச்எம்


நான் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்கவேயில்லை என்று காஜல் கூப்பாடுபோட, இன்னொரு டாப்லெஸ் போட்டோவை போட்டு நாங்கள் ஒன்றும் மார்பிங் செய்யவில்லை என்று எப்ஹெச்எம் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

எப்ஹெச்எம் என்ற பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் காஜல் அகர்வாலின் டாப்லெஸ் போட்டோ வெளியானது. இதைப் பார்த்து அனைவரும் காஜலா இப்படி என்று முகம் சுளிக்க அவரோ அய்யா அது நானே இல்லை மார்பிங் செய்திருக்கிறார்கள் என்றார். நான் டிரஸ் போட்டு தான் போஸ் கொடுத்தேன், ஆனால் பத்திரிக்கையில் இப்படி டாப்லெஸ்ஸா போட்டிருக்காங்க. அவர்களை சும்மாவிடப்போவதில்லை என்றெல்லாம் கூப்பாடுபோட்டார்.

இத்தனையும் பார்த்த அந்த பத்திரிக்கை தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் காஜல் டாப்லெஸ்ஸாகத் தான் போஸ் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளது. தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூற காஜலின் இன்னொரு டாப்லெஸ் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த பத்திரிக்கை ஆசிரியர் கூறியதாவது,

எந்த ஒரு பிரபலத்தின் போட்டோவையும் நாங்கள் இதுவரை மார்பிங் செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை. நாங்கள் கடந்த மாதம் 18-ம் தேதி மும்பையில் வைத்து தான் காஜல் அகர்வாலை படம் எடுத்தோம். அப்போது உதவியாளர்கள், ஸ்டைலிஸ்ட்கள், மேக்அப் ஆர்டிஸ்ட்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பலர் அங்கு இருந்தனர். அவர்கள் தான் காஜல் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்ததற்கு சாட்சி. நாங்கள் மார்பிங் செய்யவில்லை என்பதை நிரூபிக்க விரைவில் இணையதளத்தில் அவரது போட்டோவை வெளியிடவிருக்கிறோம்.

இது தவிர போட்டோவை வெளியிட காஜல் கையெழுத்திட்ட ஆவணம் எங்களிடம் உள்ளது. மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது எங்கள் பத்திரிக்கையையும், அவரது ரசிகர்களையும் அவமதிப்பதாகும் என்றார்.

இரண்டு தரப்புமே தாங்கள் சொல்வது தான் உண்மை என்றாலும் காஜலுக்கு என்னவோ பப்ளிசிட்டி தான்.

விஷாலுக்கு சமீரா கொடுத்த 30 'இச்'!


வெடி படத்தின் பாத்ரூம் காட்சி ஒன்றில் விஷாலுக்கு 30 முறை முத்தம் கொடுத்து நடித்தாராம் சமீரா ரெட்டி.

ஒரு படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்னரும், அந்தப் படத்தைப் பற்றிய ஏகப்பட்ட செய்திகள் புற்றீசல் போல கிளம்பி வரும். படத்தை விட இத்தகைய செய்திகள்தான் படு சுவாரஸ்யமாக இருக்கும்.

கடலில் போனபோது கவிழ்ந்து விட்டோம் என்பார்கள், புயல் வந்து எங்களை அழிக்கப் பார்த்தது என்பார்கள். முத்தக் காட்சியின்போது ஹீரோயின் உதட்டை ஹீரோ கடித்து விட்டார் என்பார்கள். இப்படி ஏகப்பட்ட செய்திகள் வரும். அப்படி ஒரு செய்தி இப்போது வந்திருக்கிறது.

அது பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள வெடி படம் தொடர்பானது. இந்தப் படத்தில் விஷாலும், சமீரா ரெட்டியும் ஒரு பாத்ரூம் காட்சியி்ல படு நெருக்கமாக நடித்துள்ளனராம். அந்தக் காட்சியின்போது விஷாலுக்கு சமீ்ரா ரெட்டி 30 முறை முத்தம் கொடுத்தாராம்.

ஆனால் பதிலுக்கு விஷால், சமீராவுக்கு 10 வாட்டிதான் முத்தம் கொடுத்தாராம்.

இந்தக் காட்சிகள் குறித்து விஷால் கூறுகையில், பொதுவாக மும்பைப் பெண்களுக்கு மொழிப் பிரச்சினை வருவது சகஜம். சமீராவுக்கும் கூட அது வந்தது. ஒரு காட்சியில் நகைச்சுவையாக பேசி விட்டு என்னை முத்தமிட வேண்டும். ஆனால் வசனத்தை மறந்து விட்டு முத்தம் மட்டும் கொடுத்தார் சமீரா.

இதையடுத்து ரீடேக் போனது. ஆனால் கிட்டத்தட்ட 30 முறை செய்த பின்னர்தான் அவரால் வசனத்தைப் பேச முடிந்தது (அட.. அப்புறம்!). ஒரு முறை முத்தம் சரியாக வந்திருக்கும், இன்னொரு முறை வசனம் சரியாக வந்திருக்காது. இப்படியாக 30 முறை டேக் வாங்கி விட்டார் சமீரா.

ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் பத்து முறைதான் ரீடேக் வாங்கினேன். இந்தக் காட்சி ஆபாசமாக இருக்காது. திணிக்கப்பட்ட காட்சியும் அல்ல. கதைக்குத் தேவையானதுதான். எனவேதான் இதை இயக்குநர் வைத்தார் என்றார் விஷால்.

ஒரு முத்தம், ஓரிரு வார்த்தைகளுக்கு 40 டேக்கா, ஓ.கே., ஓ.கே....!!

இந்தியாவின் மிக உயரமான ஜோக் நீர்வீழ்ச்சியில் 'கும்கி'!


லொக்கேஷன்களுக்காக மெனக்கெடுவதில் இயக்குநர் பிரபு சாலமன் தனி ரகம். இதுவரை சினிமாக்காரர்களின் கால் படாத பகுதிகளைத் தேடிப் பிடித்துப் படமாக்குவதில் வித்தகர்.

வாகனங்களே செல்ல முடியாத அடர்ந்த காடுகளில் வைத்து மைனாவை எடுத்த பிரபு சாலமன், தனது அடுத்த படமான கும்கியை, இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி என்ற பெருமைக்குரிய ஜோக் நீர்வீழ்ச்சியில் வைத்துப் படமாக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ளது இந்த ஜோக் நீர்வீழ்ச்சி. இங்கு சில கன்னடப் படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் உச்சிப் பகுதிக்குப் போய் படமாக்கும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை.

ஆனால் பிரபு சாலமன், கிட்டத்தட்ட 10 கிமீ பயணித்து நீர்வீழ்ச்சியின் உச்சிப் பகுதியை அடைந்து, வாட்டர்புரூப் லென்ஸ் பயன்படுத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் கும்கியில், நடிகர் பிரபுவின் மன் விக்ரமும், கேரள வரவு லட்சுமி மேனனும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தேனியில் நடக்கிறது.

பொய்களைப் பொடிப்பொடியாக்கி நிஜத்தைப்போல நிமிர்ந்து வந்த ரஜினி! - வைரமுத்து


சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினியை விஞர் வைரமுத்து சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

ரஜினியின் உறவினர் தவிர்த்து, வெளிநபர்களில் ரஜினியை நேரில் சந்தித்துப் பேசிய இரண்டாமவர் வைரமுத்து. இவருக்கு முன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார்.

ரஜினியுடனான தனது சந்திப்பு குறித்து வைரமுத்து குமுதம் பத்திரிகைக்கு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் சில பகுதிகள்:

120 நாட்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கப் போகிறேன். பரவசம் போலொரு துயரம்; துயரம் போலொரு பரவசம் நெஞ்சில் பரவி நிற்கிறது.
வாழ்வின் விளிம்புவரை சென்று மீண்ட புகழ்மிக்கதொரு பெருங்கலைஞனை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருக்கிறேன்.

எத்தனை வதந்திகள்! எத்தனை தொலைபேசி அழைப்புகள்!

‘வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை பலமுறை சாகிறான்’ என்ற பழமொழி உண்டு. அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மூன்றாம் வரி ஒன்றுண்டு: ‘புகழ்மிக்கவன் அடிக்கடி கொல்லப்படுகிறான்.’

பொய்களில் பிறந்த கற்பனைகளையெல்லாம் பொடிப் பொடியாக்கிவிட்டு நிஜத்தைப் போல நிமிர்ந்து வெளிவந்துவிட்டார் ரஜினி.

மருத்துவத்தின் அறிவும் மனிதர்களின் அன்பும் அவரை இன்று மீட்டெடுத்துக் கொண்டு வந்து காட்டிவிட்டன கண்களில்.

நோயின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டாலும் அது பிடித்த பிடியின் தடம் ஆங்காங்கே பதிந்திருக்கிறது உடம்பில். ஆனால், மேகம் விலகிய இடுக்கில் சூரியன் சுடர்வி டுவது மாதிரி ஜொலிக்கின்றன அவர் கண்கள்.

அவர் புன்னகையை மறைக்காத இளந்தாடி முளைத்திருக்கிறது முகத்தில். பிள்ளை பெற்ற பெண்ணை அடிவயிற்றுச் சுருக்கங்கள் அடையாளம் காட்டுவதுபோல் சின் னதாய்ச் சாட்சி சொல்கிறது வடிந்தும் வடியாத வீக்கம்.

வெள்ளைப் பட்டையிட்ட கறுப்பு நீளக்கால்சட்டையும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தார்.

பழைய ரஜினியில் தொண்ணூறு விழுக்காடு பார்த்தேன். ஆனால் சொல்லில் அதே அழுத்தம். அசைவுகளில் அதே வேகம். உரையாடலில் அதே உற்சாகம். சிரிப்பில் அதே தெறிப்பு.

‘‘ராணா படத்தின் கதை விவாதத்தில் இந்த வாரம் கலந்து கொண்டீர்களாமே? ரவிகுமார் சொன்னார்.’’

‘‘ஆமா: சில மாறுதல்களோடு படப்பிடிப்பைத் தொடங்கவேண்டியிருக்கிறது.’’

‘‘சில மாதங்கள் கழிந்தாலும் பரவாயில்லை. முழு பலம் பெற்று உங்கள் உடலே உங்களுக்குக் கட்டளையிடும்போது களத்துக்கு வாருங்கள். நீங்கள் தொடாத உயரமில்லை; அடையாத வெற்றியில்லை; சேர்க்காத செல்வமில்லை. இனி உடல்நலம்தான் முக்கியம்.’’

வாய்விட்டுச் சிரித்தார் ரஜினி. பழைய சிரிப்பு; பளிச்சென்ற சிரிப்பு; தங்கச் சில்லறை அள்ளிப் பளிங்குத் தரையில் எறிவது மாதிரி கலகலவென்ற சிரிப்பு.

‘‘அது எப்படி பாலசந்தர் சாரும் சோ சாரும் நீங்களும் கூடிப் பேசியதைப் போல் ஒரே கருத்தைச் சொல்கிறீர்கள்?’’

‘‘அன்புக்கு வாய்கள்தான் வேறு வேறு; வார்த்தைகள் ஒன்று.’’

‘‘ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை நேரும்; இந்த நோயினால் நீங்கள் அடைந்த நன்மையென்ன?’’

‘‘மனைவி மக்களின் அன்பை அனுபவித்தேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் பேரன்பின் பெருக்கத்தை அறிந்துகொண்டேன். இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்வை மறுபரிசீலனை செய்கிறேன்.’’

மது - புகை இரண்டிலிருந்தும் அவர் முற்றிலுமாக விடுபட்டுவிட்டார். ரசிகக் கண்மணிகளே! மதுவையும் புகையையும் தொடாதவர்கள் தொடாதீர்கள்; தொட்டவர்கள் விட் டுவிடுங்கள்.

அரசியல் நோக்கித் திரும்பியது பேச்சு.

இந்நாள் முதலமைச்சர், அவரிடம் பாசத்தோடு பேசிய பரிவைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடல் பத்திரிகையில் மறுநாள் பதிவான பிறகு முன்னாள் முதலமைச்சரோடு ரஜினி பேசியிருக்கிறார். பத்திரிகையில் வந்த உரையாடலைக் கண்டுகொள்ளாமல் கண்ணியம் காத்து அன்பு காட்டிய கலைஞரின் நாகரிகத்தைப் புகழ்ந்து சொன்னார்.

90 நிமிடங்களுக்கு மேல் பேசியிருப்போம். விடைகொண்ட போது படியிறங்கி என்னோடு பயணித்து கார்க் கதவு வரை வந்து கைகூப்பினார்.
மீண்டும் அவர் முகம் பார்த்தேன்.

‘‘இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது’’

- என்ற வரிகள் என் நெஞ்சில் வந்து போயின. நிமிர்ந்து நின்ற ரஜினியிடம் பழைய கம்பீரம் பார்த்தேன்.

‘‘விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி’’

ரஜினி அறிவாளி!"

-இவ்வாறு அந்தக் கட்டுரையில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சீமான் - விஜய் 3 மணிநேரம் பேச்சு!


இயக்குநர் சீமானை சமீபத்தில் சந்தித்த நடிகர் விஜய் 3 மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க 'பகலவன்' என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்கும் மேல் இது வெறும் பத்திரிகைச் செய்தியாகவே இருந்தது. விஜய் தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.

இடையில் ஜெயம் ராஜா, ஷங்கர், முருகதாஸ், கவுதம் மேனன், ஏ எல் விஜய் என முன்னணி இயக்குநர்கள் அனைவருக்குமே கால்ஷீட் கொடுத்துவிட்டார் விஜய்.

எனவே சீமானின் பகலவன் அவ்வளவுதானா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாலை விஜய்யிடம் இருந்து சீமானுக்கு திடீர் அழைப்பு வந்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் தூக்கு தண்டனையை நிறுத்தும் போராட்டங்களில் மும்முரமாக இருந்த சீமான், உடனடியாக விஜய்யைச் சந்தித்தார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் உடன் இருக்க, மூன்று மணி நேரம் சந்திப்பு நீண்டது.

விஜய்க்குப் பிடித்த மாதிரி பகலவனின் கிளைமாக்ஸ் காட்சியை சீமான் மாற்றி எழுதியதால், அந்தக் கதையை உடனடியாகப் படமாக்குவதில் ஆர்வம் காட்டுகிறாராம் விஜய். தயாரிப்பாளர் தாணுவும் இதில் உறுதியாக இருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேசவே சீமானும் விஜய்யும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சார வேலைகளை முடித்த உடனேயே 'பகலவன்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் " என்கிறார்கள் தாணு தரப்பில்.

22-ம் தேதி ஏழாம் அறிவு பாடல் வெளியீட்டு விழா: உதயநிதி ஸ்டாலின்


சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ஏழாம் அறிவு படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 22-ம் தேதி நடக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ், சூர்யா கூட்டணி சேர்ந்தாலே வெற்றி தான். தற்போது இந்த கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தான் ஏழாம் அறிவு. படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் கமல் மகள் ஸ்ருதி ஹாசன். படத்தை தயாரித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 22-ம் தேதி மாலை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. பாடல்களுக்கு புதுவிதமாக இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஏற்கனவே சூர்யா, முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த கஜினி திரையுலகை ஒரு கலக்கு கலக்கியது. இந்தியிலும் ஆமிர் கான் நடிப்பில் சக்கை போடு போட்டது. தற்போது இந்த வெற்றிக் கூட்டணியின் ஏழாம் அறிவு படமும் சூப்பர் ஹிட்டாகுமா என்பதை தெரிந்து கொள்ள தீபாவளி வரை பொருத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் ஏழாம் அறிவு வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி அதாங்க தீபாவளி அன்று வெளியாகிறது.

'பன்னாட்டு நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்ட பிரமாண்ட சினிமா'!- ஹஸாரே போராட்டம் பற்றி எஸ்பி ஜனநாதன்


அரசியல், சினிமா இரண்டிலுமே தெளிவான பார்வை கொண்ட மிகச் சில இயக்குநர்களில் ஜனநாதனும் ஒருவர். யாரையும் பொய்யாகப் புகழ்வதும், வீணாகத் திட்டுவதும் இல்லாத படைப்பாளி.

இன்றைக்கு திரைப்படங்களில் பொது உடைமைச் சித்தாந்தத்தை மிக எளிமையாக சொல்ல இவரைவிட்டால் ஆளில்லை.

அவரிடம் அன்னா ஹஸாரேவின் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பியிருந்தது விகடன்.

அதற்கு அவர் அளித்த பதில், இன்னொரு சாளரத்தை திறந்துவிட்டது போலிருந்தது.

''அதில் நல்லெண்ணத்தின் கோஷம் இருந்தது. ஆனால், ஆழமான அரசியல் பார்வைகள் இல்லை. ஹஜாரே எம்.பி-க்களை விமர்சிக்கிறாரே தவிர, நாடாளுமன்றத்தை உருவாக்கும் தேர்தல் முறையை விமர்சிக்க வில்லை. உண்மையில் விமர்சிக்கப்பட வேண்டியது நாடாளுமன்ற அமைப்புதான். இங்கு இருக்கும் தேர்தல் முறையிலேயே ஏராளமான கோளாறுகள் உள்ளன.

1961-ல் அண்ணா தலைமையில் நடந்த கோவை தி.மு.க. தேர்தல் மாநாட்டில் 'விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று தீர்மானம் போட்டார்கள். அந்தத் தீர்மானத்துக்கான தேவை இன்றும் இருக்கிறது.

தோழர் லெனின், 'சுவிட்சர்லாந்து நாட்டு நாடாளுமன்ற முறை முதலாளித்துவ ஜனநாயகத்தின் உச்சம்’ என்றார். அங்கு பெரும்பான்மையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது இல்லை. மக்களின் பொது வாக்கெடுப்பு மூலம்தான் நிறைவேற்றப்படுகின்றன. அங்கு மக்களிடம்தான் இறையாண்மை இருக்குமே தவிர, ஆளும் அரசிடம் இல்லை.

அமீரும் சீமானும் இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக ஆட்சியாளர்கள் சொன்னார்கள். உண்மையில் அவர்கள் வாதப்படி அண்ணா ஹஸாரேதான் இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார். தான் உருவாக்கிய கமிட்டியிலேயே தென்னிந்தியர்களுக்கும் தலித்துகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்காத ஹஸாரேவுக்கு மக்கள் பிரதிநிதித்துவம்பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அம்பேத்கர் பற்றி இவர் பேசலாமா?

தீப்பந்தம் ஏந்த வேண்டியவர்களை மெழுகுவத்தி ஏந்த வைத்ததுதான் ஹஜாரே செய்த சாதனை. அது மத்தியதர வர்க்கம் கொண்டாடிய தேசிய தீபாவளி.

இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதற்கு என்று கணிசமான தொகையைத் தங்கள் பட்ஜெட்டில் ஒதுக்குகின்றன. அந்தத் தொகையைக் குறைக்க வேண்டும் அல்லது இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட சினிமாதான் அண்ணா ஹஸாரேவின் போராட்டம்!

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை: ரீமா சென்


எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை என்று நடிகை ரீமா சென் தெரிவித்துள்ளார்.

நடிகை ரீமா சென்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனுக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்புகிறது.

ரீமா சென் டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனை காதலிக்கிறார். ஆனால் திருமணம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் ரீமாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாத யாரோ என்ன ரீமா உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாமே, வாழ்த்துக்கள் என்று கூற அவர் கடுப்பாகிவிட்டார்.

இவர்களுக்கு எத்தனை தடவை தான் சொல்வதோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நொந்து கொள்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஆறு மாதத்திற்கு ஒரு முறை எனக்கு திருமண வாழ்த்து செய்திகள் வந்து குவிகின்றன. நடக்காத திருமணத்திற்கு வாழ்த்துக்களா? திருமணம் நடந்திருந்தால் நான் ஏன் மறைக்கப் போகிறேன். அது நடக்கும் போது கண்டிப்பாக சொல்வேன். என்னைப் பற்றி 6 மாதத்திற்கு ஒரு முறை இந்த வதந்தி எப்படி வருகிறது என்றே தெரியவில்லை என்றார்.

ஒரு பக்கம் திருமணம் வதந்தி இருக்க மறுபக்கம் ரீமா நடித்த வங்காள மொழிப் படத்தை தமிழில் தவறான வகையில் விளம்பரம் செய்கிறார்களே என்ற ஆதங்கம் அவருக்கு. இளவரசி என்ற பெயரில் வந்துள்ள இந்தப் பட விளம்பரம் தன் இமேஜையே கெடுக்கிறது என்று புலம்புகிறார்.

ரீமா கையில் இப்போது 2 இந்தி படங்கள், 1 தெலுங்கு படம் உள்ளது. தமிழில் ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் ரீமாவை ஆளையே காணோம்!

தேர்தல் முடிவு பற்றி கருத்து: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி


சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதும், கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த நடிகை குஷ்பு, இது திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. பொதுமக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. தமிழக மக்கள் இனி 5 ஆண்டுகளுக்கு கஷ்டப்படப்போகிறார்கள். அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறி இருந்தார்.

இது தொடர்பாக சேலம் அதிமுக வழக்கறிஞர் அறிவழகன் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில், சட்டசபை தேர்தலில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் 202 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆனால் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி தமிழக மக்கள் 5 வருடங்களுக்கு கஷ்டப்பட போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கருத்து கூறுவதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அவரது வார்த்தையில் ஏதோ அர்த்தம் உள்ளது. ஆட்சியில் அமரும் முன்பே மக்கள் 5 வருடம் கஷ்டப்பட போகிறார்கள் என்று கூறுவது தவறு. இது வாக்களித்த மக்களை வேதனைப்படுத்துவது போல் உள்ளது.

நடிகை குஷ்பு பல கோடி தமிழக வாக்காளர்களின் மனதை புண்படுத்தி பேசி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் குஷ்புவின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளேன என்று கூறியிருந்தார்.

தனது புகாரின்பேரில் குஷ்பு மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரி்த்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்தார்.

'60 படங்களில் பழைய சம்பளத்தில்தான் வேலை செய்கிறோம்...' - ஃபெப்சி தொழிலாளர்கள்


சென்னை: சம்பளப் பிரச்சினையில் தொழிலாளர் - தயாரிப்பாளர் தரப்பில் எந்த உடன்பாடும் இன்னும் எட்டப்படாததால் பெரும் தவிப்புடன் உள்ளது திரையுலகம்.

இதற்கிடையே, பழைய சம்பளத்தில்தான் நாங்கள் 60க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றுகிறோம். எனவே படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் என ஃபெப்சி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில், மொத்தம் 24 பிரிவுகள் உள்ளன. சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த மூன்று வருடங்களுக்கான சம்பள உயர்வு பற்றிய பேச்சுவார்த்தை கடந்த 2 மாதங்களாக நடைபெறுகிறது. பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைவதற்குள் தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் படப்பிடிப்புகளில், தொழிலாளர்கள் சிலர் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

புதிய படங்கள் நிறுத்தம்

இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த பட அதிபர்களின் கூட்டுக்கூட்டம், சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் நடந்தது. அதில், 7-ந் தேதி (நேற்று) முதல் புதிய படங்களை தொடங்குவதில்லை என்றும், வருகிற அக்டோபர் 31-ந் தேதிக்குள் படப்பிடிப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தயாரிப்பாளர்களின் இந்த திடீர் முடிவு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பழைய சம்பளத்திலேயே....

இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூறுகையில், "நாங்கள் இன்னும் பழைய சம்பளத்திலேயே வேலை செய்கிறோம். 60 சினிமா படப்பிடிப்புகள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைபெறுகின்றன. தொழிலாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பணி புரிந்து வருகிறார்கள்,'' என்றார்.

மீண்டும் மாயவரம் ஷூட்டிங் ரத்து

இதற்கிடையில், தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட 'மாயவரம்' படக்குழுவினர், பிரச்சினை காரணமாக மீண்டும் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதாக கூறினார்கள்.

இது பற்றி அந்த படத்தின் கதாநாயகன் டைரக்டர் ஸெல்வன் கூறுகையில், "ஏற்கனவே மாயவரத்தில் படப்பிடிப்பு ரத்து ஆனதால், நாங்கள் அனைவரும் சென்னை திரும்பி விட்டோம். சென்னையில் நேற்று ஒரு பாடல் காட்சியை படமாக்க முடிவு செய்தோம். டான்ஸ் மாஸ்டர் தினா மேற்பார்வையில், அந்த பாடல் காட்சி படமாக இருந்தது. நடனக் கலைஞர்கள் பழைய சம்பளத்தில் வேலை செய்ய மறுத்து, அதிக சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனால், சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டோம். நடனக் கலைஞர்களைப் போலவே சண்டை கலைஞர்களும் பழைய சம்பளத்தில் வேலை செய்ய மறுத்து, அதிக சம்பளம் கேட்டார்கள். இதனால் சண்டை காட்சியையும் படமாக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது? என்று யோசித்து வருகிறோம்,'' என்றார்.

Wednesday 7 September 2011

மிஸ்டர் பீன்: ஓய்வு பெறுகிறார் ரோவன் ஆட்கின்சன்


மிஸ்டர் பீன் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ரோவன் ஆட்கின்சன்.

மிஸ்டர் பீனைத் தெரியாத குட்டீஸே இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள குட்டீஸ்களின் விருப்பத் தொடர் எது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ” மிஸ்டர் பீன்”. அந்த நகைச்சுவை தொடரில் மிஸ்டர் பீனாக வந்து நம் வீட்டு குழந்தைகளை குலுங்க, குலுங்கச் சிரிக்க வைப்பவர் ரோவன் ஆட்கின்சன்(56).

ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் நம்ம வாண்டுகள் பையை ஒரு பக்கமும், ஷூவை மறுபக்கமும் வீசிவிட்டு அவசர, அவசரமாக உட்கார்வது டிவி முன்பு தான். காரணம் இந்த மிஸ்டர் பீன். இந்த தொடரை 18 மில்லியன் பேர் கண்டு ரசிக்கிறார்கள் என்றார் பாருங்களேன்.

இந்த தொடரின் வெற்றியைப் பார்த்து அதை அடிப்படையாக வைத்து 1997-ம் ஆண்டு பீன்: தி அல்டிமேட் டிசாஸ்டர் மூவி மற்றும் 2007-ம் ஆண்டு மிஸ்டர் பீன்ஸ் ஹாலிடே என்ற இரண்டு படங்கள் வெளியாகின.

இத்தனை பிரபலமான தொடரில் இனி மிஸ்டர் பீனாக நடிக்கப்போவதில்லை என்று ரோவன் ஆட்கின்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் இனிமேல் மிஸ்டர் பீனாக நடிக்க மாட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. மிஸ்டர் பீன் கதாபாத்திரம் வயதாகாமல் அப்படியே இருப்பது. அதனால் இனியும் நான் மிஸ்டர் பீனாக நடிப்பது சரியல்ல. மிஸ்டர் பீன் எப்பொழுதும் இளமையாக இருந்து தான் நான் பார்த்துள்ளேன். எனவே, வயதாகும் நான் இதில் நடிப்பதில் உகந்தது அல்ல என்றார்.

தனுஷ், ரிச்சாவுக்கு 'அவுட்'-ஆர்யா, அனுஷ்கா 'இன்'!


செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் தனுஷ், ரிச்சாவுக்கு பதில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கவிருக்கின்றனர்.

செல்வராகவனின் அடுத்த படம் இரண்டாம் உலகம். இதில் தனுஷ், ஆண்ட்ரியா ஜோடியாக நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தனுஷுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டு ஆண்ட்ரியா வெளியேறினார்.

செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.

பின்னர் நடந்தது தான் உங்களுக்கே தெரியும். செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் திருமணம் நடந்து அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்.

ஆண்ட்ரியா விலகியதை அடுத்து ரிச்சா தான் கதாநாயகி என்றார்கள். இவராவது நிலைப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது அது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. அவரும் போய் விட்டார். அதேசமயம்,தனுஷும் மாறி விட்டார்.

இரண்டாம் உலகத்தில் நடிக்க ஆர்யாவும், அனுஷ்காவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இரண்டாம் உலகம் தெலுங்கிலும் உருவாகிறது. தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். அடுத்த மாதம் இரண்டாம் உலகம் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

பாலிவுட்டில் புழங்கும் 'அண்டர்வேர்ல்டு தாதாக்கள்' கறுப்புப் பணம்!


மும்பை: சட்டவிரோதமாக தாங்கள் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை மறைமுகமாக பாலிவுட் படங்களில் முதலீடு செய்வதாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் தாதாக்கள் பல கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவர்கள் பெரிய தொழில் அதிபர்கள், முன்னணி நடிகர்- நடிகைகள், சினிமா பிரமுகர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இதனால் மும்பையில் சினிமா நட்சத்திரங்கள் தங்களுக்கென்று தனியாக பாதுகாப்பு ஊழியர்களை நியமித்துக் கொள்வது சகஜமாக உள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறான். ஆனால் அவனது கூட்டாளிகள் இன்னும் மும்பையில் இருந்து கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடு படுகிறார்கள். இவர்களில் சிலர் இந்திப் படங்களில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். தாதாக்கள் கையில் பல கோடி பணம் புரள்கிறது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள், நிலங்கள் என தாவூத்தின் பணம் பாய்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் இந்த கறுப்பு பணம்தான் திரைப்படங்களாக வெள்ளையாகின்றன என்பது தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் பெயரில் படங்கள் எடுக்க இந்த தாதாக்கள் பணம் தருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பல மும்பை தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளில் வெளி நாட்டு பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன்மூலம் சினிமா படங்களில் தாதாக்கள் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது.

இதேபோல் சில அரசியல்வாதிகளும் தங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்தை சினிமா படங்களில் முதலீடு செய்து வெளியே கொண்டு வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் மத்திய அரசுக்கு தெரிந்திருந்தும் அதை தடுக்க முடியவில்லை. சட்ட விரோத பண முதலீடு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியாரிடம் கடன் பெற்று படம் எடுக்கும்போது 100 சதவீதம் வரை வட்டி வசூலிப்பதாகவும், இந்த அண்டர்வேர்ல்டு டான்கள் குறைந்தவட்டிக்கு தருவதால் கறுப்புப் பணத்தை இரு கரம் நீட்டி வரவேற்கிறது பாலிவுட் என்று திரையுலகினர் சிலர் கூறியுள்ளனர்.

பாலிவுட்டில் புழங்கும் 'அண்டர்வேர்ல்டு தாதாக்கள்' கறுப்புப் பணம்!


மும்பை: சட்டவிரோதமாக தாங்கள் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை மறைமுகமாக பாலிவுட் படங்களில் முதலீடு செய்வதாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் தாதாக்கள் பல கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவர்கள் பெரிய தொழில் அதிபர்கள், முன்னணி நடிகர்- நடிகைகள், சினிமா பிரமுகர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இதனால் மும்பையில் சினிமா நட்சத்திரங்கள் தங்களுக்கென்று தனியாக பாதுகாப்பு ஊழியர்களை நியமித்துக் கொள்வது சகஜமாக உள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறான். ஆனால் அவனது கூட்டாளிகள் இன்னும் மும்பையில் இருந்து கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடு படுகிறார்கள். இவர்களில் சிலர் இந்திப் படங்களில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். தாதாக்கள் கையில் பல கோடி பணம் புரள்கிறது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள், நிலங்கள் என தாவூத்தின் பணம் பாய்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் இந்த கறுப்பு பணம்தான் திரைப்படங்களாக வெள்ளையாகின்றன என்பது தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் பெயரில் படங்கள் எடுக்க இந்த தாதாக்கள் பணம் தருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பல மும்பை தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளில் வெளி நாட்டு பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன்மூலம் சினிமா படங்களில் தாதாக்கள் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது.

இதேபோல் சில அரசியல்வாதிகளும் தங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்தை சினிமா படங்களில் முதலீடு செய்து வெளியே கொண்டு வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் மத்திய அரசுக்கு தெரிந்திருந்தும் அதை தடுக்க முடியவில்லை. சட்ட விரோத பண முதலீடு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியாரிடம் கடன் பெற்று படம் எடுக்கும்போது 100 சதவீதம் வரை வட்டி வசூலிப்பதாகவும், இந்த அண்டர்வேர்ல்டு டான்கள் குறைந்தவட்டிக்கு தருவதால் கறுப்புப் பணத்தை இரு கரம் நீட்டி வரவேற்கிறது பாலிவுட் என்று திரையுலகினர் சிலர் கூறியுள்ளனர்.

தனுஷ், ரிச்சாவுக்கு 'அவுட்'-ஆர்யா, அனுஷ்கா 'இன்'!


செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் தனுஷ், ரிச்சாவுக்கு பதில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கவிருக்கின்றனர்.

செல்வராகவனின் அடுத்த படம் இரண்டாம் உலகம். இதில் தனுஷ், ஆண்ட்ரியா ஜோடியாக நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தனுஷுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டு ஆண்ட்ரியா வெளியேறினார்.

செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.

பின்னர் நடந்தது தான் உங்களுக்கே தெரியும். செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் திருமணம் நடந்து அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்.

ஆண்ட்ரியா விலகியதை அடுத்து ரிச்சா தான் கதாநாயகி என்றார்கள். இவராவது நிலைப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது அது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. அவரும் போய் விட்டார். அதேசமயம்,தனுஷும் மாறி விட்டார்.

இரண்டாம் உலகத்தில் நடிக்க ஆர்யாவும், அனுஷ்காவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இரண்டாம் உலகம் தெலுங்கிலும் உருவாகிறது. தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். அடுத்த மாதம் இரண்டாம் உலகம் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

காதலிக்கிறேன், ஆனால் திருமணமாகவில்லை: வித்யா பாலன்


யுடிவி நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் ராய் கபூரை காதலிப்பதாக நடிகை வித்யா பாலன் ஒப்புக் கொண்டுள்ளார்.

நடிகை வித்யா பாலனுக்கும், யுடிவி நிறுவனத்தின் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. பினனர் இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டு தேன் நிலவுக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வந்தது.

நானோ படப்பிடப்புகளில் பிசியாக இருக்கிறேன். என்னைப் போய் காதலிக்கிறாள், கல்யாணம் முடித்து விட்டாள் என்கிறார்களே என்று கேட்டார் வித்யா பாலன். ஒரு வழியாக தற்போது சித்தார் ராய் கபூரை காதலிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எனக்கு சித்தார்த்தை பிடித்திருக்கிறது. நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். மணப்பெண்ணாக ஆசையாகவும் இருக்கு. ஆனால் எனக்கு ஒன்றும் ரகசியமாக திருமணம் ஆகவில்லை என்றார்.

அன்மையில் வித்யாவும், சித்தார்த்தும் ஜோடியாக கோவா சென்றுள்ளனர். அங்கு ஜோடியாக சுற்றிய வித்யாவை பார்த்தவர்கள் தான் அவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்று வதந்ததியை பரப்பினர்.

புது வீடு வாங்கி வித்யாவும், சித்தார்த்தும் அதில் குடியேறவிருக்கின்றனர் என்பது தான் வித்யா பற்றிய லேட்டஸ்ட் வதந்தி.

ஒரு வேளை ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ வந்த பிறகு கல்யாணம் செஞ்சுக்குவாங்களோ, என்னவோ…!

அக்டோபர் 3-ம் தேதி முதல் ரஜினியின் ராணா... உற்சாகத்தில் கோலிவுட்!


வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் மீண்டும் ரஜினியின் ராணா படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற செய்தி கோடம்பாக்கத்தை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்ட சரித்திரப் படம் ராணா. ரஜினியின் கனவுப் படம் இது. ரஜினியே எழுதிய கதை இது.

கேஎஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் பிரதான நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் ஏவிஎம்மில் தொடங்கியது. இதில் பங்கேற்ற கையோடு ரஜினியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மே, ஜூன் மாதங்களில் அவர் சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றார். ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பிய அவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார்.

மீண்டும் ராணா படப்பிடிப்பை தொடங்குவது குறித்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் குழுவினருடன் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தார் ரஜினி.

இந்த நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் மீண்டும் ராணா படப்பிடிப்பைத் தொடங்க ரஜினி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது கோடம்பாக்கத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. "இந்தப் படம் மூலம் பல ஆயிரம் கலைஞர்களுக்கு வேலை கிடைப்பது ஒருபக்கம், மறுபக்கம் திரைப்பட வர்த்தகத்தில் இருக்கும் தேக்க நிலை நீங்குவதற்கான வாய்ப்பு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி இது," என்றார் பெப்சி அமைப்பச் சேர்ந்த ஒரு நிர்வாகி.

ராணா படப்பிடிப்பை மூன்று கட்டங்களாக 200 நாட்களுக்கு நடத்த இயக்குநர் ரவிக்குமார் திட்டமிட்டுள்ளார். முதல்கட்டப் படப்பிடிப்பு ஏவிஎம்மில் நடக்கிறது. சில தினங்களில் வெளிநாடு செல்லும் படக்குழு, மீண்டும் இந்தியா திரும்பி, ஆக்ரா, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளது.

படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை முழுவதுமாக முடித்துவிட்டார் ஏ ஆர் ரஹ்மான். இப்போது பாடல்களை மாஸ்டரிங் செய்யும் பணியையும் துவங்கிவிட்டாராம்.

'காஞ்சனா பேய்' பயத்தில் பள்ளி மாணவன் தற்கொலை!


ஈரோடு: சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ள தமிழ் சினிமா காஞ்சனா படத்தைப் பார்த்த பள்ளி மாணவன் ஒருவன், பேய் பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

ஈரோடு ராஜாஜிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் தண்டபாணியின் மகன் இளவரசன். பதினைந்து வயது சிறுவனான இவன், அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளவரசனும் அவனது நண்பர்களும் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா என்ற திரைப்படம் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.

அன்று முதல் பேய் பயத்தில் தவநித்த இளவரசன், இரவில் தூங்கும் போது எழுந்து பல தடவை பயத்தில் சத்தம் போட்டானாம். அவனை அமைதிப்படுத்திய பெற்றோர்கள் தொடர்ந்து அவனது பயத்தை போக்க கோவிலுக்குப் போய் திருநீர் கொண்டுவந்து இளவரசனுக்குக் கொடுத்துள்ளனர்.

தற்கொலை

கடந்த 4ம் தேதி இரவில் தூங்கிக்கொண்டிருந்த இளவரசன் எழுந்து வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தீக்காயத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளவரசனுக்கு மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தான்.

இதுகுறித்து இளவரசனின் அப்பா தண்டபாணி கூறுகையில், "காஞ்சனா திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த பின்னர் சி.டி.யை வாங்கி வந்து வீட்டில் உள்ள டிவியில் மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்தான்.

பின்னர் ஏதோ ஒரு உருவம் தன் கண்முன்னால் வந்து நிர்ப்பாதாக எங்களிடம் சொன்னான்,

பள்ளிக்கூடத்திலும் யாரிடமும் பேசாமல் பைத்தியம் பிடித்தவன் போல இருந்துள்ளான். அதற்கு தலைமை ஆசிரியர், "உன் அப்பாவையோ, அம்மாவையோ நாளைக்கு கூட்டிக்கொண்டு வா....", என்று சொல்லியனுப்பியுள்ளார்.

எங்களிடம் 'என்னைக் கொன்று விடுங்கள், எனக்கு பயமாக உள்ளது' என்றும் கூறி அழுதான். சம்பவத்தன்று நானும் என் மனைவியும் வெளியில் படுத்திருந்தோம், தனியறையில் படுத்திருந்த இளவரசன் நடு ராத்திரியில் எழுந்து மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துகொண்டான்," என்றார் கண்ணீருடன்.

இளவரசனின் தீக்குளிப்பு பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.

படங்களைத் தடை செய்ய வேண்டும்

சிறார்களின் மனங்களைப் பாதிக்கும் வகையிலான, இதுபோன்ற படங்களை சென்சார் போர்டு எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட கதைகளுடன் கூடிய படங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைவில் ரஜினி, கமல் வருகை! பரபரப்பில் படக்குழு


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படப்பிடிப்புக்கு திடீர் என்று வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த ரஜினியும், கமலும் திட்டமிட்டுள்ளனர். இதனால் படக் குழுவினர் ஒரு வித எதிர்பார்ப்போடு தான் பணிபுரிகின்றனர்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்தில் தனுஷும், கமல்ஹாசன் மகள் ஸ்ருதியும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. கமல், ரஜினி குடும்பங்கள் பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வருவதால் ஸ்ருதி தனுஷுடன் பிரண்ட்லியாக இருக்கிறார். என்ன இருந்தாலும் தோழியின் கணவராச்சே.

3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். மகள் எப்படி படத்தை இயக்குகிறார் என்று பார்க்க ரஜினியும், ஸ்ருதி எப்படி நடிக்கிறார் என்பதைப் பார்க்க கமலும் ஆர்வமாக உள்ளனர். இன்னொரு பக்கம் மருமகனின் நடிப்பை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து ரசிக்க ரஜினிக்கு ஆசை. இதனால் ரஜினியும், கமலும் ஒன்றாக சேர்ந்து வந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைவில் வந்து அசத்தவிருக்கின்றனர்.

இந்த விஷயம் யூனிட்காரர்களுக்கும் தெரிந்துவிடவே, எப்போ வருவார்கள் ரஜினி, கமல் என்ற எதிர்பார்ப்புடனேயே பணிபுரிகின்றார்களாம்.

ரஜினியும், கமலும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலே மக்கள் டிவியை விட்டு ஒரு இன்ச் நகராமல் பார்ப்பார்கள். அப்படி இருக்க இருவரும் ஒன்றாக ஷூட்டிங் பார்க்க வந்தால் படக்குழுவினருக்கு எவ்வளவு குதூகலமாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?

பாலிவுட் ரஜினிகாந்த் சல்மான் கான்: சினிமா வர்த்தக நிபுணர்கள்


பாலிவுட்டின் ரஜினிகாந்த் சல்மான் கான் என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகையன்று வெளியான வாண்டட், தபாங் மற்றும் பாடிகார்ட் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதிலும் பாடிகார்ட் மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளதாம். படம் ரிலீஸான 5 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து வர்த்தக ஆய்வாளர்கள் சல்மானை தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் ஒப்பிடுகின்றனர்.

இது குறித்து ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பாலிவுட் திரையுலக வர்த்தக நிபுணர் கோமல் நாத்தா கூறியதாவது,

கடந்த 3 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகை அன்று சல்மான் படங்கள் ரிலீஸ் ஆகின. அனைத்தும் ஹிட்டானதற்கு பண்டிகை, சல்மான் மற்றும் அவரது அதிரடி ஆக்ஷன் தான் காரணம். பொதுவாக ரம்ஜான் பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் வசூல் வெகுவாக குறைந்துவிடும். ஆனால் பாடிகார்ட் 6-வது நாளில் கூட வசூலை அள்ளிக் குவித்துள்ளது என்றார்.

வர்த்தக ஆய்வாளர் சஞ்சய் கை கூறுகையில், பாடிகார்ட் ரிலீஸ் ஆகும் நாளில் அனுராக் கஷ்யப் தனது படத்தை வெளியிட்டிருக்கக் கூடாது. பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள போல் படத்தின் வெளியீட்டுத் தேதி கூட மாற்றப்பட்டது. வேறு நாளில் வெளியிடுவதால் நல்ல வசூல் கிடைக்கும். ஆனால் தற்போது வேறு எந்த படமும் ஓடும் வாய்ப்பில்லை. முதன்முறையாக ஒரு படம் பட்டி, தொட்டியெல்லாம் வெற்றிகரமாக ஓடுவது இப்போதுதான் என்றார்.

படம் வெளியான சில நாட்களிலேயே வசூலை அள்ளிக் குவித்துள்ளதால் நிபுணர்கள் சல்மானை ரஜினிகாந்துடன் ஒப்பிடுகின்றனர். சல்மானுக்கும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சரி உயிருக்கு உயிரான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதுவே சல்மானின் இந்தப் பிரமாண்ட வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.

Tuesday 6 September 2011

சுவிஸ் ஈழத்தமிழரவை அறைகூவல்.


உலகம் துங்குகிறது, அதனால் உண்மையும் தூங்குகிறது.
நீதி விலைபோய்விட்டது, அதனால் எதையும் விலைகொடுத்து வாங்கிவிடமுடிகிறது.

அதிகாரம் உள்ளவர்கள் செய்வது குற்றமில்லை, தமிழர்கள் செய்வதெல்லாம் குற்றமாகிறது,

கேட்க யாருமில்லையா ! எட்டு திக்கும் எமக்கு எதிரிகள், எழடா தமிழா எழு,

விட்டகுறை தொட்ட குறை வேண்டாம், விடாது தொடர்வோம் விடிவைத்தேடி.

இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசினால் கேட்கிறார்கள் இல்லை,

இந்திய பாராளுமன்றில் பேச முழுமையாக அதை செவிமடுக்க மற்றவர்கள் தயாராக இல்லை,
உலகமன்றத்தில் பேசினால் வல்லரசுகள் தடுக்கிறது, எங்கு முறையிடுவது தமிழா
நீ உன்னையே நம்பு, தியாகி செங்கொடி அவர்கள் போல் எழுச்சி கொள்! வெளியே வா தமிழா!
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட என தியாகி முத்துக்குமார் அவர்கள் கூறியுள்ளதை நினைவில்நிறுத்திக் கொள்ளுங்கள்! தமிழீழத்தின் உதயம் உலகத்தமிழரின் விடிவு ஆகும்! தமிழனின் விடிவிற்காய், தாமதப்படுத்தாது ஆரம்பிக்கும் போராட்ட திடலே19.09.2011ல் ஜக்கிய நாடுகள் சபை ஜெனிவா முன் உரிமைக்காகத் திரளுங்கள்! மீண்டும் எமது உரிமைக்குரலை எழுப்புவோம் வாருங்கள்! சிங்கள தேசம்தன் பலத்தைக்காட்டி உண்மையை மறைக்க 13ம் திகதி சிங்கள மக்கள் ஆற்பாட்டம் நடத்தவருகிறார்கள். நாம் பாதிக்கப்பட்ட இனம் பல உயிர்களை பறி கொடுத்த இனம் உண்மையை மறைக்க விடலாமா வாருங்கள் அலைபோல 19.09.2011ல் ஜெனிவா நோக்கி!

ஈழம் இன்னும் இரத்த வெள்ளத்தில் நனைகிறது, போர் முடிந்தும் இராணுவ அடக்குமுறை, மக்களைத்தாக்குதல், பெண்களை பலாத்காரம், பிரச்சனையைகண்டு மக்கள் கொதித் தொழுந்தால், அரசாங்கம் பயங்கரவாதிகளில் சதியே கிறீஸ் மனிதர்கள் என கூறி மக்கள் பிரச்சனையை மறைக்கிறது.

எங்கு நடக்கிறது என்றும், இது வதந்தி என்றும் கூறுகிறது, இலங்கை அரசு மீண்டும் மீண்டும் தப்பு செய்கிறது, தமிழ் மக்களை வதைக்கிறது, பிரச்சனையை தீருங்கள் அல்லது உலகநாடுகளே இனி நீங்கள் எமது விடையத்தில் தலையிடாதீர்கள் என கூறும் காலம் விரைவில் வரப்போகிறது. அல்லது தமிழரின்குணத்தை உலகம் இலங்கைக்கு வெளியில் பார்த்தால் தான் கண்திறக்குமா! உலகமே தப்பு செய்கிறாய். லிபியா மக்கள் சில நூறு இறந்தால் நீபடையெடுக்கிறாய், எமது மக்கள் கொத்து கொத்தாய் இறந்தால் படமெடுக்கிறாய், ஏன் இப்படி பாரபட்சம்,

அமெரிக்காவே! இங்கிலாந்தே, பிரான்சே, இத்தாலியே, ஜேர்மனியே, அவுஸ்திரேலியாவே, கனடாவே, இந்தியாவே, சீனாவே மற்றய நாடுகளே உங்களுக்கு என்ன இலங்கைக்கு பயமா! அல்லது உங்களுக்கு இலங்கை பொருளாதாரத் தடை விதிக்குமா, அல்லது உங்கள் நாட்டுடன் போர் தொடுக்கும்மென்ற பயமா! பல உயிர்கள் பரதவிக்கிறதே பார்த்து கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் வல்லரசுகளா அல்லது வியாபாரிகளா! பதில் கூறுங்கள்!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்திலுள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சை யூனிஅணிந்த வேற்படைகள் வந்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பாரதியார் ஈழத்தமிழருக்காய் எழுதிய வரிகளாகவே நாம் இப்போ பார்க்கின்றோம்! உலகமே எம்மை எதிர்த்தது, இப்போ இரக்கம் காட்ட யாருமில்லை, வசதியோடு வாழ்ந்தோம் பிச்சையெடுத்து வாழும் நிலைக்கு தள்ளிவிட்டது உலகமும் அரசாங்கமும், ஆனால் எம்மை அழித்து சீரழித்து விட்டு உதவிசெய்யகூட முடியாத அரசு எம்மை மேலும் மேலும் சித்திரவதை செய்து நாடகமாடுகிறது,

மக்களுக்காக ஆட்சியா, ஆள்பருக்காக ஆட்சியா! வெறுப்பின் நிலையில் துணிவு தான் மிஞ்சும். அச்சமடையோம் என நிமிந்து நிற்கும் தமிழிச்சிகளைபாரதி தேடினார். ஈழத்தில் நாம் பார்த்தோம், இப்போதும் பார்க்கின்றோம், தியாகி.செங்கொடிபோல் அத்தகைய புதுமைப்பெண்கள் உதிந்த நாட்டில்தற் சமயம் அடக்குமுறை மீண்டும் ஒரு போரை ஏற்படுத்த முனைகிறதா. உயிரைப்பற்றி கவலை போய்விடும் போது அங்குவரும் துணிவு பயங்கரமானதுஎன அரசாங்கம் புரிந்து கொள்ளாது இருக்கிறதா! உலக நாடுகளே உங்கள் வியாபாரத்தை விட்டு விட்டு மனித உயிர்களைக் காப்பாற்ற வாருங்கள்!

ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தை காட்டிலும்
ஆணுக்கு பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகப்பெரியது
அதைவிட மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் தலைவன்
அந்த நாட்டு மக்களை கொடுமைப்படுத்துவது கொடுமையிலும் கெடிது,
இந்த கொடுமை எதுவரை, லிபிய தலைவரின் நண்பரே
நீங்கள் வாழ்வதை விட மக்கள் வாழ்வதற்காக ஆட்சி செய்யுங்கள்,
நீங்கள் வாழ வேள்வி செய்கிறீர்கள், செய்த பலிகள் போதாதா
நீங்கள் அழிய யாகம் செய்கிறீர்கள்
அரக்கர்களை யாகம் அழிக்கும், காக்காது கொடுமையின் அரசரே!

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ ? - என்றும்
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?
பாரதி அன்று சொன்னார் அதை மக்கள் பின்பற்றியதால் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது, நாம் அதை மீண்டும் செய்கின்றோம்! எமக்கும் விடுதலைகிடைக்கும்!

1)கிறிஸ் பூதமாம், பெண்களைத்தாக்குகிறது, வீட்டில் பாதுகாப்பான ஆண்களைப் பிடித்து மறியல் வைக்கிறீர்கள், கிறிஸ்பூதத்தை நாம் பிடிக்ககூடாதாம், அடிக்ககூடாதாம், அப்படியானால் அவர்கள் யார். அரசே உங்கள் நண்பர்களா! என்ன கொடுமை, என்ன ஆட்சி, சரத் பொன்சேகராவே கத்துகிறார் பாவம்!

2)இரவில் யார் துணை, ராணுவம் கிறிஸ் மனிதர்களை வீடுகளுக்கு அனுப்பி கொடுமை செய்கிறது. பயத்தை உருவாக்கிறது. எமது பிரச்சனையை கூட பாராளுமன்றத்தில் கூறமுடியவில்லை என்றால், எங்குகூறுவது! அரசாங்கம் என்ன செய்கிறது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை, ஆதாரம் இருக்கிறதா என பொறுப்புள்ள அமைச்சர் வாதம் போடுகிறார், போர் குற்ற விடையத்தில் சனல் 4 வெளியிட்ட ஒளி நாடாவே பொய்என்கிறது, கிறிஸ் மனிதர்களைப் பற்றி பொலிஸ் நிலைங்களில் முறைப்பாடு கொடுத்தால், குற்றவாளியை காப்பாற்றி, நிரபராதி மக்களை தாக்குகிறது, இலங்கை அரசு கொடுமை செய்கிறது. காரணம் வெளிநாடுகள் இலங்கை அரசுக்கு பயப்பிடுகிறார்கள். ஏனோ தெரியவில்லை! யாரிடம் முறையிடுவது மக்களே விழித்துக் கொள்ளுங்கள்! எமது மக்களைக் காப்பாற்றுங்கள்!
3)பாதுகாக்கவேண்டியவர்கள், படுகொலைகள் செய்கிறார்கள், போர் முடிந்தது, ஆனாலும், பெண்களை ராணுவம் படுவேதனைப்படுத்துகிறார்கள். மீண்டும் இரத்தங்கள் கொதிக்கப்போகிறது. எமதுபெண்களைக்காக்க பெண்ணின் சபதத்தால் மீண்டும் பாரதப்போர், இலங்கையில் உருவாகப்போகிறது. தன் கணவனுக்கு அநீதி கிடைத்ததால் மதுரையை எரித்தார் கண்ணகி அது நியாயம், அது போல் எமதுபெண்குலத்தை காக்க ஆண்குலம் மீண்டும் குருதி சிந்தித்தான் விடுதலை பெற வேண்டுமா! உதவுங்கள் இதயமுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரே! இந்திரா அம்மையார் இருந்திருந்தால் இன்று இன்னுமொருபங்களாதேஷ் உருவாகி இருக்கும், நீங்களும் கொள்கையில் உறுதியான இந்திரா காந்தி அமையார் போன்ற பெண் தானே, அதோடு தமிழ் தலைவியல்வா, தமிழை, தமிழரை காப்பது உங்கள் கடமையல்லவா!அடிக்கு மேல் அடி கொடுங்கள். நடுவன் அரசானால் என்ன, இலங்கை அரசானால் என்ன, நீதி கேளுங்கள்! நாம் உங்கள் இனமல்லவா உரிமையுண்டு நீங்கள் குரல் கொடுக்க பயன் படுத்துங்கள் உங்கள்வல்லமையை, முதலமைச்சரே! மக்களே உங்கள் சக்தியை வலுப்படுத்துங்கள்!

4)மக்கள் புரட்சி வெடித்தே பல நாடுகளில் அமைதி பிறந்திருக்கிறது, இந்த வருடமே பல புரட்சிப்புயல் நடந்திருக்கிறது, எமது மக்களே நீங்கள் புரட்சியில் இறங்கவேண்டும், அடிக்குமேல் அடி கொடுக்கவேண்டும்,அப்போ தான் தூங்கி கொண்டிருக்கும் வியாபாரிகள், வியாபாரம் கெட்டுவிடும் என்று எமது விடையத்தை கவனிப்பார்கள், கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்றார் யேசு,வாருங்கள், திறக்காத கதவுகளை இடைவிடாது தட்டுவோம், உங்கள் ஒவ்வொருவருடைய கதவுகளையும் நாம் தட்டுகின்றோம்,

விடுதலை நோக்கி எமது உரிமைக்குரல் எழுப்ப ஜெனிவா நோக்கி வாருங்கள் தமிழ் மக்களே!

எட்டுத்திக்கும் தமிழன் எழுந்தால் உலகம் முழுவதும் தமிழன் கொடி பறக்கும் வாருங்கள் உலகதமிழரே!

சுவிஸ் ஈழத்தமிழரவை

மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள்,கடைகள்,சிங்களவர்களால் தீக்கிரை


சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளும், வழிபாட்டு இடம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

சிங்களவர்கள் சிலர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த தகவல் மேலும் கூறியுள்ளது.

இந்த மோதலைக் கட்டுப்படுத்த சிறிலங்கா காவல்துறை தவறிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அதிரடிப்படையை அனுப்பி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அரசியல் மற்றும் வர்த்தகப் போட்டியே இதன்பின்னணியில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்பாயில் இராணுவத்தினரை அடைத்துவைத்த வீரத்தமிழ் பெண்கள்


பெண்களுடன் சேட்டை புரிய முனைந்த இராணுவத்தினரைக் அடைத்துவைத்த சம்பவம் ஒன்று நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றித்தெரியவருவதாவது :

நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள இளம் பெண்களிடம் 4 இராணுவத்தினர் சேட்டை விட முயன்றுள்ளனர்.

உடனடியாக அப் பெண்கள் 3 இராணுவத்தினரை தமது வீட்டுனுள் அடைது வைத்துள்ளதுடன் அவர்கள் பயணித்த துவிச்சக்கர வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

மற்றைய இராணுவத்தினரை அனுப்பி உங்கள் இராணுவ பொறுப்பாளரை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். உடனடியாக அவ்விடத்திற்கு வந்த இராணுவ பொறுப்பாளரை எச்சரிக்கை செய்து விடுதலை செய்தனர்.

ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: சீமான் ஆவேசம்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை எனது தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறவுள்ளது.

வேலூர் மத்திய சிறைக்கு அருகேயிருந்து 06.09.2011 (செவ்வாய் கிழமை) காலை புறப்பட்டு, 5 நாட்களுக்கு இந்த பரப்புரை பயணம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது அறிக்கையில் அறிவித்திருந்தார்.

அதன்படி நடைப்பயணம் வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்கத்தினருடன் சீமான் கைது செய்யப்பட்டார். பின்னர் மாலை 6.30 மணி அளவில் அவர்களை போலீசார் விடுதலை செய்தனர். திருமண மண்பத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் ஆர்க்காட்டில் நடக்கும் அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சீமான் பேசுகையில்...

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் இவர்களின் விடுதலையே தமிழினத்தின் விடுதலை. அதற்காகத்தான் போராடுகிறோம். இவர்கள் விடுதலை அடைந்தால் ஈழத் தமிழினமே விடுதலை அடைந்ததாக அர்த்தம். இவர்களுக்கான போராட்டத்தில் நாம் எப்போதும் உள்ளோம்.

கடந்த ஆட்சிகளில் ஒன்றரை ஆண்டுகளில் ஐந்து முறை என்னை கைது செய்தார்கள். சட்டத்தை மதிப்பவன் நான். ஆகையால் கைதுக்கு பயப்படாமல் கைதானேன். போலீசார் அழைத்துச் சென்ற இடத்திற்கெல்லாம் சென்றேன். நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டேன். கருணாநிதியைப் போல கைதுக்கு பயந்து நான் ஒருமுறைக் கூட கத்தியதில்லை. நடித்ததில்லை. இப்போதும் கூட என்னை கைது செய்தார்கள். நான் கைதானேன். நடைப் பயணத்தை நிறுத்துங்கள் என்றார்கள். சட்டத்தை மதிப்பவன் நான். அதனால் தான் காவல்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க போராட்டத்தை கைவிட்டோம்.

ஆனால் லட்சியத்தையோ, நோக்கத்தையோ கைவிடவில்லை. ஈழத்தில் சுதுமனத்தில் தலைவர் பிரபாகரன் ஒரு பிரகடனம் செய்தார். நம் தொப்புள் கொடி உறவான தமிழர்கள் வாழும் நமது இந்தியா, நம் நலனை காக்கும் இந்தியா நம்மை ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்கிறது. நாம் அவர்களிடம் ஆயுதங்களை மட்டுமே ஒப்படைக்கிறோம். லட்சியத்தை ஒருபோதும் கைவிடவில்லை.

அதைப்போலத் தான் இன்று போராட்டத்தை கைவிட்டுள்ளோம். அதற்கு மற்றொரு காரணம் நமது முதலமைச்சர் அம்மா, நமது தம்பிமார்கள் 3 பேரை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கைத்தான். அவர்களை நாம் நம்புவோம். அவர் சட்டமன்றத்தில் மூன்று பேரை காக்க தீர்மானம் கொண்டு வரும் முன்பு எத்தனை அழுத்தம், எதிர்ப்புகளை சந்தித்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

மற்றவர்கள் பேசியதை விட அம்மா செய்து காட்டினார். இவர்களை காப்பாற்ற ரயில் மறியல், ஆளுநர் மாளிகை முற்றுகை, ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் செய்தோம். நம்மை அவர் கைது செய்யவில்லை. நசுக்க முற்படவில்லை. நம்மை அழிக்க முற்படவில்லை. நம்மை மதித்தார்.

இதையெல்லாம் மத்திய அரசு, தமிழக அரசை அம்மாவின் பெயரை கெடுக்க வேண்டும் என முடிவு செய்தது. ராஜபக்சே மீது போர்க்குற்றம சுமத்தி பொருளாதார தடை விதிக்க வேண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை மத்திய அரசு விரும்பவில்லை.

அம்மாவுக்கு உலக தமிழர் மத்தியில் அம்மாவுக்கு ஏற்பட்ட நற்பெயரை கெடுக்க, புகழை கெடுக்க மத்திய காங்கிரஸ் அரசு இந்த மூன்று பேரை தூக்கிலிட்டு முதல் அமைச்சர் அம்மாவை புகழை கெடுக்க முடிவு செய்தது. உடனே இதை தடுக்க கருணாநிதி ஆலோசனை சொல்கிறார். இவர் என்ன அம்மாவுக்கு அரசியல் ஆலோசகரா. 6 மாதத்திற்கு முன்பு நீ தானே ஆட்சி புரிந்தீர். காப்பாற்ற வேண்டியதுதானே, காப்பாற்றும் எண்ணம் உனக்கு இல்லை. இப்ப நீ ஏன் துள்ளுரன்னு எங்களுக்கு தெரியும்.

இந்த அரசு தமிழனுக்காக ஆளும் அரசாக உள்ளது. வரும் உள்ளாசித் தேர்தலில், அதற்கு அடுத்து வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ்காரர்களையும், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருபவர்களையும் ஒரு இடத்தில் கூட ஜெயக்க விடமாட்டேன்.

ஒருத்தன் டெல்லியில் இருந்து, தமிழ்நாட்டு தீர்மானம் எங்களை கட்டுப்படுத்தாது என்கிறான். அப்படி என்றால் உன் முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்றுவிடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உண்வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்ந்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது.

இந்தியாவை ஆளப்போவதை யார் என்பதை எங்கள் முதல் அமைச்சர் அம்மா தான் தீர்மானிக்கப்போகிறார். அம்மாவே நீங்கள் கவலைப்படாதீர்கள். தென்னிந்தியா முழுவதும் சுற்றி வெற்றிக் கனியை பறித்து வந்து உங்கள் காலடியில் நான், என் தம்பி மார்களும் சமர்ப்பிக்கிறோம்.

இந்த மூவரின் விடுதலை அம்மா கையில் தான் உள்ளது. நமது அன்னை அற்புதம்மாளின் கண்ணீரை முதல்வர் அம்மாதான் துடைக்க வேண்டும் என்று பேசினேன். அவர் ஒரு கண்ணீரில் விழுந்த நீரை துடைத்துவிட்டார். இன்னொரு கண்ணின் நீரையும் அம்மா துடைப்பார் என நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள்.

இவவாறு சீமான் பேசினார்.

ஜெ.வை பாராட்டி பயணம் - சீமான் கைது (படங்கள் இணைப்பு)

சிறிலங்காவின் மோதகமும் கொழுக்கட்டையும்

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் கடந்த மாதம் 30ம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்பட்டு விட்டது.

அவசரகாலச்சட்டத்தை இனிமேல் நீடிக்கப் போவதில்லை,அது இனிமேல் தேவையில்லை என்றெல்லாம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவசரகாலச்சட்டம் தேவைப்பட்டது. இப்போது எல்லாமே முடிந்து போய்விட்ட நிலையில் அவசரகாலச்சட்டம் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கமே வலிந்து போய் அதை அகற்ற முன்வந்திருப்பது போன்றிருந்தது அவரது கதை.

இனிமேல் அவசரகாலச்சட்டமோ, அதன் விதிகளோ தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்த சிறிலங்கா ஜனாதிபதியே, அவசரகாலச்சட்டப் பின் விளைவுகள் ஏற்பாட்டுச் சட்டமூலத்தை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் புதிய விதிகளை சேர்க்கவும் அவர் கையெழுத்திட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இப்போது அவசரகாலச்சட்டத்தின் சத்துகள், சாறுகள் அனைத்தையும் உறுஞ்சிக் கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் அதிகபலத்துடன் நிற்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம், இப்போது அதிக அதிகாரங்களை முப்படையினருக்கும், பொலிசாருக்கும் வழங்குகின்ற அளவுக்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் இதை சட்டரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டால், உயர் பாதுகாப்பு வலயங்களை வைத்திருக்க முடியாது, அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது- விடுவிக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையைத் தொடரவும், அவசரகாலச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தொடர்ந்து தடுத்து வைக்கவும், உயர் பாதுகாப்பு வலயங்களை தொடர்ந்து பேணவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இப்போது கொழுக்கட்டை, மோதகமாக மாறியிருப்பது தான் வித்தியாசம்.

வடிவங்கள் தான் வேறுபடுகிறதேயன்றி இரண்டும் ஒன்றாகத் தான் இருக்கிறது.

உயர் பாதுகாப்பு வலயங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக வழிதேடியுள்ளது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தான் இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம் செய்யப்பட்டன.

போரைக் காரணம் காட்டியே உயர் பாதுகாப்பு வலயங்களை அரசாங்கம் உருவாக்கியது,

இப்போது போரும் இல்லை, அவசரகாலச்சட்டமும் இல்லை. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் தேவைப்படுகின்றன.

இந்த உயர் பாதுகாப்பு வலயங்களை நாட்டின் எங்காவது ஒரு மூலையில் பிரகடனம் செய்திருந்தால் பரவாயில்லை.

ஆனால் பொதுமக்களின் நிலங்களைப் பறித்தே இவை உருவாக்கப்பட்டுள்ளன.

மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வகையிலேயே இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் செயற்படுகின்றன.

இந்த நிலையில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதன் பலனை உயர் பாதுகாப்பு வலயங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவசரகாலச்சட்டம் போனாலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அவர்களின் சொந்த மண் மீதான உரிமையை மறுக்கிறது.

இந்த உயர் பாதுகாப்பு வலயங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் தான்.

அதனால் தான் இந்த விடயத்தை சிறிலங்கா அரசாங்கம் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது.

தெற்கிலும் சில உயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்தாலும், அவற்றினால் சிங்கள மக்களின் அன்றாட இயல்பு வாழ்வுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்கள் தான் இந்த உயர் பாதுகாப்பு வலயங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் இவர்களின் அவலங்கள் தீரப்போவதில்லை.

அதற்கு அப்பாலும் பயங்கரவாத தடைச்சட்டம் இவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், முன்னாள் பேராளிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தாலும் அதுபற்றி குழப்பங்கள் தான் மிஞ்சியுள்ளன.

அவசரகாலச் சட்டம் நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதுமே, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார 6000 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று கூறினார்.

ஆனால் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸ, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ், அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த போன்றோர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரைக் கூட வெளியேவிட முடியாது என்கின்றனர்.

அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும், மேலும் 1000 இற்கும் அதிகமானோர் மீது வேறொரு புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

ஆனால் அரசாங்கம் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தொடர்ந்து தடுத்து வைப்பதற்கென்ற சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளது.

அதன் கீழ் தான் அவசரகால சட்டத்தின் கீழ் கைதானவர்களை அரசாங்கம் தடுத்து வைக்கவுள்ளது.

ஆக சட்டங்கள் தான் மாறப் போகின்றனவே தவிர,சிறையில் உள்ளவர்களின் விடுதலை சாத்தியமாகப் போவதில்லை.

அதுமட்டுமன்றி அவசரகாலச்சட்ட நீக்கம் தொடர்பாகவும் சரி, அதன் விதிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தில் சேர்ப்பது பற்றியும் சரி அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

ஏனென்றால் இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டிருந்தால், அமைச்சர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளியிட்டிருப்பார்கள்.

ஆனால் ஒரு தரப்பு சொல்கிறது ஒருவரைக் கூட விட முடியாது என்று, இன்னொரு தரப்பு சொல்கிறது ஒரு பகுதியினர் விடுவிக்கப்படவுள்ளனர் என்று இதில் எது சரி, யார் சொல்வது உண்மை?

எல்லோரும் அமைச்சர்களாகவும், உயர் அரச அதிகாரிகளாகவும் இருக்கும் நிலையில் எவரது கருத்தை நம்புவது என்று குழப்பங்கள் மக்களுக்கு மிஞ்சியுள்ளது.

அவசரகாலச் சட்டம் இப்போது பெயரளவில் தான் நீக்கப்பட்டுள்ளது.

அது வேறொரு வடிவத்தில்- பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரால் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கப் போகிறது.

அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு கோரி வந்த நாடுகள், ஜனாதிபதி மகிந்த ராஜஸபக்ஸவின் முடிவை வரவேற்றிருந்தன.

ஆனால் அந்த நாடுகளுக்கு அவசரகாலச்சட்டத்தை நீக்குகிறோம் என்று கூறிக் கொண்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பலப்படுத்தியுள்ளது அரசாங்கம்.

சிறிலங்கா என்னதான் அழுத்தங்கள் கொடுத்தாலும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

அதுபோல,சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையை சர்வதேச சமூகமும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

சர்வதேச சமூகத்தின் இந்தப் போக்கு சிறிலங்கா அரசுக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

முகிலன்
ஈழநேசன்

சோனியாவை பிரதமராக்க ஆசைப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி: விக்கிலீக்ஸ்

கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், “காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும், அவர் பிரதமராக வேண்டும் என, வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம்; தென் மாநில மக்கள் அவரை விரும்ப மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சென்னையில், ஒரு காலகட்டத்தில் சந்தித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும், தான் பிரதமராக தி.மு.க., ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் ரூ. 2 கோடி: முதல்வர் ஜெயலலிதா

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைக்களுக்கான ஊக்கத் தொகை ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில் விதி எண் 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:இளைஞர்கள் ஒரு நாட்டின் மதிப்பு மிக்க செல்வம். 10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விளையாட்டில் உயர்தர நுணுக்கங்களுடன் கூடிய, விஞ்ஞான ரீதியான பயிற்சி அளிக்க, சென்னையில் உலகத் தரம் வாய்ந்த முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைக்கப்படும்.தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர் இந்த மையத்தில் தங்கி சிறப்பு பயிற்சி பெறுவர். இந்த மையத்தில் தங்கும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுச் சீருடை, விளையாட்டு உபகரணங்கள், நவீன உடற்பயிற்சிக் கூடம், விஞ்ஞான ரீதியிலான பயிற்சி, வெளிநாடுகளில் போட்டிகளில் கலந்து கொள்ள உதவி மற்றும் பயிற்சி ஆகிய வசதிகள் செய்து தரப்படும்.

சென்னையில் உள்ள சிறந்த பள்ளிகளில் கல்வி பயிலவும், இந்த மாணவ, மாணவியருக்கு அரசால் உதவி செய்யப்படும். இந்த மையம் அமைப்பதற்காக, அரசுக்கு ஒரு கோடி ரூபாய் தொடரா செலவினமும், ஆண்டு ஒன்றுக்கு 70 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும்.ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில், பதக்கம் பெற வாய்ப்புள்ள திறன் வாய்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளைத் தயார் செய்வதற்கான ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி ஐந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களை சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு, ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைக்களுக்கான ஊக்கத் தொகை ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாகவும். வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடியாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சமாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சமாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

விளையாட்டு விடுதி மற்றும் பள்ளிகளில் சேர்க்கப்படும் வீரர்கள், வீராங்கனைகளின் எண்ணிக்கை 860 லிருந்து 1,100 ஆக உயர்த்தப்படும். இதற்காக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் தொடரா செலவினமும், ஒரு கோடியே 16 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டு விடுதி வீதம் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 60 மாணவ, மாணவியருக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக ஐந்து மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மனிதாபிமானத்தையே காற்றில் பறக்க விடும் உலகின் பெரிய ஜனநாயக நாடு!

மனித உயிரை பலியெடுக்கும் உரிமை பிறருக்கு இல்லையென்கிற வாதத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே பல உலக நாடுகள் ஏற்று, உயிர்ப் பலி எடுக்கும் கொடூரமான தூக்குத் தண்டனையை ஒழித்தார்கள். உலகின் மூத்த ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவோ, வேதனையான தண்டனையான தூக்குத் தண்டனையை அமுலில் வைத்துள்ளது.

ஒருவரை பலியிடுவதன் மூலமாக அக்குறித்த நபரை திருத்த முடியாது. குற்றவாளியை தண்டித்து, புனர்வாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் நல்லதொரு பிரஜையாக வாழ வைப்பதற்காகவேதான் சட்டம் இயற்றப்படுவது.

ஆயுள் தண்டனை மூலமாக குறித்த குற்றவாளியை தான் செய்த குற்றத்தை உணர்வதற்கு கால அவகாசம் வழங்கப்படும். சிறையில் நல்லவராக திருந்தி நடந்தால் குறித்த நபரை 14 வருடங்களுக்கு பின்னர் வெளியில் செல்ல அனுமதிக்கப்படும்.

ராஜீவ் கொலையில் தண்டனை வழங்கப்பட்ட குறித்த மூன்று மரண தண்டனை குற்றவாளிகள் 21 வருடங்கள் எதுவித குற்றமும் செய்யாமல் நல்ல மனிதர்களாக வாழ்ந்துள்ளார்கள்.

குறித்த மூன்று பேருடைய நன்னடத்தையே போதும் அவர்களை விடுதலை செய்ய. இவர்கள் மூன்று பேரையும் தூக்கில் போட இந்திய நடுவன் அரசு இப்பொழுது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதையே காட்டி நிற்கின்றது.

பத்து வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட கருணை மனுவை இப்போது நிராகரித்து தண்டனையை இந்திய ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். இது ஒரு சட்ட அநீதி;இ அரசியல் அநீதி என்று அடித்துக் கூறுகிறார்கள் சட்ட வல்லுனர்கள்.

இத்தனை வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட இவ்வழக்கை இன்று தூசு தட்டி தீர்ப்பளிக்க முனைந்திருப்பதன் மர்மம் ஒன்றும் புரியாத புதிர் அல்ல. போர்க்குற்ற விசாரணை, சிறிலங்கா அரசுக்கு எதிரான தமிழ் நாட்டின் கடும் போக்கு இவற்றை தற்காலிகமாக திசை திருப்புவதுதான் இதன் நோக்கம்.

இக்கொலை வழக்கில் இந்திய அரசின் பட்டியல் படி பிரதான குற்றவாளிகள் பற்றிய விபரங்கள் முறையாக முடிக்கப்படாமலேயே நேரடியாக சம்பந்தப்படாத இம்மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசால் நீக்கம் செய்யப்பட்டுள்ள தடா சட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் சாட்சியங்களும் இவ்வழக்கிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளையோ, டெல்லி உச்ச நீதிமன்றத்தின் பழைய தீர்ப்புகள் எதையும் கணக்கில் எடுக்காமல் அடாவடித்தனமாக இத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது. 21 வருடமாக எந்த இடைவெளியுமின்றி ஒரு ஆயுள் தண்டனை அனுபவித்தபின் தூக்கு தண்டனை என்பது உலகநாடுகள் பின்பற்றும் எந்த பொது நீதிக்குள்ளும் அடங்காது.

உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்திய அரசின் ஜனநாயகம் இதுதானோ என கேட்கிறார்கள் மனிதவுரிமை அமைப்புக்கள்.

நீதி தேவதையின் தீர்ப்பு

தமிழீழத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பேரறிவாளன் ஆகிய மூவரும் உண்மையிலேயே குற்றம் புரிந்தவர்களா என்பது பற்றி பலத்த சந்தேகங்கள் இந்தியாவிலேயே எழுப்பப்பட்டுள்ளன.

ராஜீவ் படுகொலை தொடர்பில் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வர்மா ஆணைக்குழு செயற்படவில்லை. அதேபோல் ஜெயின் ஆணைக்குழு இடைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் பிரபல ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ண அய்யர், குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை நிரபராதியென அறிவித்துள்ளார்.

ராஜீவின் படுகொலை ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாகும். இது சிறிலங்காவின் இனப்பிரச்சினை ஆயுத போராட்ட வடிவம் பெற்றமையுடன் நேரடி தொடர்பு கொண்டதாகும். அப்படுகொலைக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் செயற்பாடுகளுடன் அந்த படுகொலைக்கு தொடர்பு இருக்கின்றது.

இன்றுவரை சிறிலங்காவின் இனப்பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டில் ராஜீவின் படுகொலை செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இந்த கொள்கை நிலைப்பாட்டின் பின்னணியிலேயே ஈழத்தில் இறுதிக்கட்ட யுத்தத்தை சிறிலங்காவின் ராஜபக்ச அரசு முன்னெடுத்தது. இது வரலாறு ஆகும்.

எனவே மரண தண்டனை கைதிகள் விவகாரமும், சிறிலங்கா இனப்பிரச்சினையுடன் தொடர்பு கொண்டதாகும். ராஜீவின் மண்டையை உடைத்து அவரை கொலை செய்வதற்கு கொழும்பில் வைத்து 1987-ஆம் ஆண்டு ஒரு முயற்சி நடைபெற்றது. அவரது பாதுகாப்பு அதிகாரியின் முயற்சியினால் ராஜீவ் அன்று பாதுகாக்கப்பட்டார்.

அந்த கொலை முயற்சியும் சிறிலங்கா இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதாகும். எனவே சிறிலங்கா இனப்பிரச்சினையுடன் தொடர்புகொண்ட ஆயுதப்போராட்டம், யுத்தம் ஆகியவை தொடர்பில் படுகொலை செய்தவர்களையெல்லாம் தூக்கில் போடவேண்டும் என்றால், பெருந்தொகையானோரை தூக்கில் போடவேண்டும் என்று சிறிலங்காவின் மூத்த தமிழ் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நபர்களின் கருணை மனுக்கள் ஜனாதிபதியினால் நிராகரிக்கபட்ட பின்னர் செப்டம்பர் 9-ஆம் தேதி தூக்கிலிடுமாறு இந்தியாவின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி தீ மூட்டித் தன்னைத்தானே அழித்துக் கொண்டார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அட்டவணைபுதூரை சேர்ந்த பில்லாமணி (வயது 44) என்பவர் மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினார்.

உடலில் எரிந்த தீயை அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் அணைத்து விட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இப்படியாக பல உணர்சிகரமான நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.

குறித்த மூன்று பேரையும் தூக்கிலிடும் தேதி அறிவித்தவுடன், இதை எதிர்த்து மூவரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர். துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிடுகையில், “கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை.

ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11 வருடங்கள் ஆகி விட்ட பின்னர், திடீரென கூப்பிட்டு உன்னை நாளை சிறையில் போடப் போகிறோம் என்று சொல்வது எந்தவகையில் நியாயம். இது மனிதாபிமானமே இல்லாத ஒன்று.

இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்டு நிச்சயம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. அடிப்படையிலேயே தவறு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கு இதில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

21 வருடங்கள் சிறையில் அடைபட்டிருப்பதே ஒருவருக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும் விஷயமாகும். இந்த வழக்கில் மிகப் பெரிய உளைச்சலை சந்தித்த ஒருவரை தூக்கில் போடும் முடிவை அரை மணி நேரத்தில் எடுத்துள்ளனர். இதை சாதாரணமாகஎடுத்துக் கொள்ளக் கூடாது."

கருணை மனுவை நிராகரிக்க ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலமாக நீதி தேவதை மீண்டும் கண்ணைத் திறந்துவிட்டாள் என்றே தோன்றுகிறது.

இருப்பினும், குறித்த மூன்று பேருக்கு வழங்கப்படவிருந்த தூக்குத் தண்டனை எட்டு வாரங்களுக்கே தள்ளி வைக்கபடுகிறது. ஆகவே, இப்பிரச்சினையை இனிவரும் காலங்களில் அரசியல் ரீதியாகவேதான் அணுக வேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் குறித்த மூன்று பேருக்கும் வழங்கப்பட இருக்கும் தூக்குத் தண்டனைக்கெதிராகவே பேசி வருகிறார்கள். எதுவித அரசியல் சாயமுமில்லாமல் அனைவரும் ஓரணியில் திரண்டிருப்பது குறித்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படமாட்டாது என்பதையே காட்டி நிற்கிறது.

தமிழகத்தின் ஒருமித்த குரல்

மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபை கூடியதும் ஜெயலலிதா அவர்கள் குறித்த தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், “மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளமையானது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது," என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர். இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது என்று கூறியுள்ளார் ம.தி.மு.காவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

அவர் மேலும் கூறுகையில், “பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோடான கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல் அமைச்சர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது," என்றார் வைகோ.

ராஜீவ் மட்டும் இன்னேரம் இருந்திருந்தால், தூக்குக் கயிற்றுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரையும் மன்னித்து அவர்களின் உயிரையும் காப்பாற்றியிருப்பார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் உருக்கமாக கூறினார்.

அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை, “மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்குத் தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை.

நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது." அவர் மேலும் கூறுகையில்,

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் மரணத்தில் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும். தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய தூய வாழ்க்கையைத் தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை கருணை மனுவாக கருதி தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார். கலைஞர் போன்றே பல தமிழக அரசியல் தலைவர்கள் வேண்டுகோள்களை விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசு மற்றும் அரசியல் வாதிகளின் அழுத்தத்தை இந்திய நடுவன் அரசு அசட்டை செய்யாது என்றே கருதப்படுகிறது.

மனிதாபிமான நோக்குடன் களமிறங்கியுள்ள பல சட்ட வல்லுனர்களின் போராட்டம் தோல்வியில் முடியாது என்றே நம்பப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சோகத்தை உண்டாக்கியிருக்கும் நிகழ்வே குறித்த மூன்று பேருக்கும் வழங்கப்பட இருக்கும் தூக்குத் தண்டனை ஆகையால் தனக்கு பல வழக்குகள் இருந்தும் அனைத்தையும் தள்ளிப்போட்டுவிட்டு சென்னை வந்தார் இந்தியாவின் புகழ்பூத்த சட்டத்தரணி ஜெத்மலானி.

மூன்று தமிழர்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. கோடிக் கணக்கான தமிழர்களின் சார்பாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மறுப்பு ஏதும் சொல்லிவிடாதீர்கள்!” என்று எடுத்த எடுப்பிலேயே வைகோ ஜெத்மலானியிடம் கூற," எந்தத் தேதியாக இருந்தாலும், அனைத்து வழக்குகளையும் தள்ளிவைத்துவிட்டுத் தமிழர்களுக்காக வருகிறேன்!'' என்று ஜெத்மலானி சொல்லி இருக்கிறார்.

இவர்கள் மூவரையும் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது” என்றார் நெகிழ்வாக ஜெத்மலானி. 'மூன்று தமிழர்களின் உயிர்தான் எனக்கு முக்கியம். வாதாடுவதற்கான கட்டணத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை!” என்று சொன்னாராம் ஜெத்மலானி என்று ஜூனியர் விகடன் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

மூன்று பேரின் தூக்குத் தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது நீதிக்கு கிடைத்த வெற்றியே. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தியாவின் பிற மாநில அரசாங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று இந்திய நடுவன் அரசிற்கு அழுத்தத்தை கொடுத்து அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும்.

இந்தியா என்கிற கூட்டாட்சிஇ மாநிலங்களின் அழுத்தங்களுக்கு கட்டுப்பட முடியாமல் இருக்க முடியாது. இந்தியாவின் உள்துறைக்கு தமிழக அரசு உட்பட பிற இந்திய மாநிலங்களும் ஒன்று சேர்ந்து அழுத்தங்;களைப் பிரயோகிப்பதனால் நிச்சயம் தூக்குக் தண்டனையை எதிர்பார்த்திருக்கும் மூன்று தமிழ் இளைஞர்களுக்கும் உயிர்ப் பிச்சை பெற்றுத்தர முடியும்.

இந்திய நடுவன் அரசின் ஆலோசனையின் பேரிலையே இந்தியாவின் ஜனாதிபதி தனது முடிவை எடுப்பார். இன்னும் எட்டு வாரத்தில் சாக இருக்கும் மூன்று பேருக்கும் ஜனாதிபதியினாலேயே காப்பாற்ற முடியும்.

ஜனாதிபதிக்கு அரசியல் அழுத்தத்தை கொடுக்கும் வல்லமை இந்திய நடுவன் அரசையே சாரும். இந்திய நடுவன் அரசிற்கு நெருக்குதலை கொடுக்கும் சக்தி இந்தியாவின் மாநில அரசாங்கங்களுக்கும், அரசியல் வாதிகள் மற்றும் போதுமக்களுக்குமே உண்டு.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா, ஜனாநாயக கோட்பாடுகளை அசட்டை செய்யக் கூடாது. தூக்குத் தண்டனை என்பது மாநிடத்திற்கே ஒவ்வாத செயல் என்பதை பல உலக நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

இந்தியா இன்னும் இதனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடானது. உலகத்திற்கே அகிம்சை போதித்த புத்தன், காந்தி பிறந்த தேசம் இன்று கொலை வெறியுடன் செயற்படுவது மனித நீதிக்கு எதிரானது. இதனை புரிந்து செயற்படுமா இந்திய நடுவன் அரசு என்பதை இன்னும் இரு மாதங்களில் தெரிந்து விடும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா