எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை என்று நடிகை ரீமா சென் தெரிவித்துள்ளார்.
நடிகை ரீமா சென்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனுக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்புகிறது.
ரீமா சென் டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனை காதலிக்கிறார். ஆனால் திருமணம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் ரீமாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாத யாரோ என்ன ரீமா உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாமே, வாழ்த்துக்கள் என்று கூற அவர் கடுப்பாகிவிட்டார்.
இவர்களுக்கு எத்தனை தடவை தான் சொல்வதோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நொந்து கொள்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஆறு மாதத்திற்கு ஒரு முறை எனக்கு திருமண வாழ்த்து செய்திகள் வந்து குவிகின்றன. நடக்காத திருமணத்திற்கு வாழ்த்துக்களா? திருமணம் நடந்திருந்தால் நான் ஏன் மறைக்கப் போகிறேன். அது நடக்கும் போது கண்டிப்பாக சொல்வேன். என்னைப் பற்றி 6 மாதத்திற்கு ஒரு முறை இந்த வதந்தி எப்படி வருகிறது என்றே தெரியவில்லை என்றார்.
ஒரு பக்கம் திருமணம் வதந்தி இருக்க மறுபக்கம் ரீமா நடித்த வங்காள மொழிப் படத்தை தமிழில் தவறான வகையில் விளம்பரம் செய்கிறார்களே என்ற ஆதங்கம் அவருக்கு. இளவரசி என்ற பெயரில் வந்துள்ள இந்தப் பட விளம்பரம் தன் இமேஜையே கெடுக்கிறது என்று புலம்புகிறார்.
ரீமா கையில் இப்போது 2 இந்தி படங்கள், 1 தெலுங்கு படம் உள்ளது. தமிழில் ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் ரீமாவை ஆளையே காணோம்!
நடிகை ரீமா சென்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனுக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்புகிறது.
ரீமா சென் டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனை காதலிக்கிறார். ஆனால் திருமணம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் ரீமாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாத யாரோ என்ன ரீமா உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாமே, வாழ்த்துக்கள் என்று கூற அவர் கடுப்பாகிவிட்டார்.
இவர்களுக்கு எத்தனை தடவை தான் சொல்வதோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நொந்து கொள்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஆறு மாதத்திற்கு ஒரு முறை எனக்கு திருமண வாழ்த்து செய்திகள் வந்து குவிகின்றன. நடக்காத திருமணத்திற்கு வாழ்த்துக்களா? திருமணம் நடந்திருந்தால் நான் ஏன் மறைக்கப் போகிறேன். அது நடக்கும் போது கண்டிப்பாக சொல்வேன். என்னைப் பற்றி 6 மாதத்திற்கு ஒரு முறை இந்த வதந்தி எப்படி வருகிறது என்றே தெரியவில்லை என்றார்.
ஒரு பக்கம் திருமணம் வதந்தி இருக்க மறுபக்கம் ரீமா நடித்த வங்காள மொழிப் படத்தை தமிழில் தவறான வகையில் விளம்பரம் செய்கிறார்களே என்ற ஆதங்கம் அவருக்கு. இளவரசி என்ற பெயரில் வந்துள்ள இந்தப் பட விளம்பரம் தன் இமேஜையே கெடுக்கிறது என்று புலம்புகிறார்.
ரீமா கையில் இப்போது 2 இந்தி படங்கள், 1 தெலுங்கு படம் உள்ளது. தமிழில் ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் ரீமாவை ஆளையே காணோம்!
No comments:
Post a Comment