Friday 2 March 2012

> ஷங்க‌ரின் அடுத்த ஆட்டத்துக்கு ஆட்ட நாயகன் யார்?

அடுத்த ஆட்டத்துக்கு ஷங்கர் தயார். ஆனால் ஆட்ட நாயகன் யார்?

நண்பன் என்ற ‌ரிலாக்ஸ் படத்துக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் தனது ட்ரேட் மார்க் பிரமாண்டத்துடன் வருகிறார். பிள்ளையார் சுழி போட்டு கதையை எழுதத் தொடங்கிவிட்டார்.

ஷங்கர் படத்தில் அனேகமாக ஹீரோ யார் என்பது முதலிலேயே தெ‌ரிந்துவிடும். ஆனால் இம்முறை படுபயங்கர குழப்பம். கமல், ர‌ஜினி, விக்ரம், அ‌‌‌ஜீத் என்று பல பெயர்கள் உச்ச‌ரிக்கப்படுகின்றன. ஆனால் உதட்டில் உட்காரப் போவது எந்தப் பெயர்?

கண்டிப்பாக கமல்தான் என்று ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வட்டாரத்தில் சலசலப்பு கேட்கிறது. என்றாலும் உலக நாயகன் விஷயமில்லையா... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சாந்தகுமார் இயக்கத்தில் ஜீவா, கார்த்தி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அருள்நிதி நடித்த 'மவுனகுரு' படத்தை இயக்கிய சாந்தகுமார், அடுத்து படத்தில் ஜீவா அல்லது கார்த்தி நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். 'மவுனகுரு' படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததால், இயக்குனர் சாந்தகுமார் அடுத்த பட வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டது. இந்த படத்தை ஒரு முன்னணி ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என சாந்தகுமார் எண்ணியதால், கார்த்தி மற்றும் ஜீவா ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சு நடந்து வருகிறதாம்.


அர்ஜுன் படத்தில் மாற்றுத்திறன் சிறுவன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அர்ஜுன் மகனாக காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுவன் நடிக்கிறான். இப்படம் குறித்து இயக்குனர் மனோஜ் சதி கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் அர்ஜுன் நடிக்கும் படம் 'பிரசாத்'. சாதாரண மெக்கானிக்கான தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் வளர்ந்து ஆளாகி குடும்ப கஷ்டத்தை போக்குவான் என்று எண்ணுகிறார். ஆண் குழந்தை பிறக்கிறது. மாற்று திறனாளியாக பிறக்கும் அக்குழந்தையால் வாய் பேச முடியாது. காது கேட்காது. அதன்பிறகு அர்ஜுன் எடுக்கும் முடிவு கிளைமாக்ஸ். அர்ஜுன் மகனாக சிறுவன் சங்கல்ப் நடிக்கிறார். இந்த சிறுவன் உண்மையிலேயே மாற்று திறனாளி.  காது கேட்காது, வாய்பேச முடியாது. அர்ஜுன் என்றதும் ஆக்ஷன்தான் ஞாபகம் வரும். இந்த படத்தில் துளிகூட சண்டை காட்சி கிடையாது, டூயட்டும் கிடையாது. ஹீரோயின் மாதுரி பட்டாச்சார்யா. இசை இளையராஜா. தயாரிப்பு அசோக் கேணி.


கமல் பட இன்னொரு நாயகியும் வெளியேறினார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சோனாக்ஷி சின்ஹாவை தொடர்ந்து கமல் படத்திலிருந்து இன்னொரு நாயகியும் வெளியேறினார். கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் புதிய படம் 'விஸ்வரூபம்'. இதன் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா தேர்வானார். ஷூட்டிங் தொடங்க தாமதமானதால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இஷா ஷெர்வானி நடிக்க  ஒப்பந்தம் ஆனார். தற்போது அவரும் வெளியேறிவிட்டார். இதுபற்றி அவர்கூறும்போது, 'கமல்சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் வெளியேற வேண்டியதாகிவிட்டது. கமலுடன் நடிப்பது எனது கனவு. அந்த கனவு நனவாகவில்லை.  மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.  மாற்றான் படத்தில் சூர்யாவுடன், டேவிட் என்ற படத்தில் விக்ரமுடன் நடிக்கிறேன். இவ்வாறு இஷா ஷெர்வானி கூறினார்.


> பருத்திவீரன் சர்ச்சை மீண்டும் தொடங்கியிருக்கிறது

பருத்திவீரன் படத்தை தயா‌ரித்த ஸ்டுடியோ கி‌‌ரீன் ஞானவேல்ராஜா மீது கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் அமீர் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தின் பணம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. இந்நிலையில் பருத்திவீரனை தெலுங்கில் டப் செய்து வெளியிட உள்ளார் ஞானவேல்ராஜா. டப்பிங் பணி முடிந்து ஆடியோ வெளியீட்டு விழாவும் நடந்ததாக‌த் தெ‌ரிகிறது.

ஒரு படத்தை வேறு மொழியில் டப் செய்து வெளியிடும் போது படத்தின் கதாசி‌ரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் ஆகியோருக்கு முறைப்படி டப்பிங் உ‌ரிமையின் குறிப்பிட்ட சதவீதத்தை தயா‌ரிப்பாளர் தந்தாக வேண்டும். இந்த விதியை மீறி அமீருக்கு‌த் தெ‌ரியாமல் படத்தை தெலுங்கில் வெளியிட இருப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் அமீர் புகார் தந்துள்ளார்.

ஆக, மீண்டும் பருத்திவீரன் சர்ச்சை தொடங்கியிருக்கிறது.

Thursday 1 March 2012

> சண்டை போட ட்ரெய்னிங் எடுத்த அனுஷ்கா.

செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்கா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த ரகசியத்தை அனுஷ்காவே போட்டுடைத்திருக்கிறார்.

பல வருடங்களாக செல்வராகவன் இரண்டாம் உலகம் என்று சொல்லி வருகிறார். ஆண்ட்‌ரியாவை வைத்து இப்படத்தை தொடங்கிய அவர் பிறகு ஆண்ட்‌ரியாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மயக்கம் என்ன படத்தை எடுத்தார். இதில் வரும் மலையோர‌க் காட்சிகள் பல இரண்டாம் உலகத்துக்காக எடுக்கப்பட்டவை.

ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகத்தில் குடும்பத் தலைவியாகவும், மலைஜாதி பெண்ணாகவும் இரு வேடங்களில் அனுஷ்கா நடிக்கிறாராம். இதில் மலை ஜாதி பெண்ணாக வரும் கதாபாத்திரத்துக்கு சண்டைக் காட்சிகள் படத்தில் உள்ளது. இதற்காக ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுக்கயிருக்கிறாராம் அனுஷ்கா.

சமீபத்தில் இந்தப் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக செல்வராகவன் பிரேசில் போய் வந்தது முக்கியமானது.

> காதலில் சொதப்புவது எப்படி பாலிவுட் செல்கிறது.

சிம்பிளான கதையை எடுத்து சிக்ஸர் அடித்திருக்கிறார் பாலா‌ஜி மோகன். அவ‌ரின் காதலில் சொதப்புவது எப்படி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பட்டையை கிளப்புகிறது. இந்தியில் இப்படத்தை ‌ரீமேக் செய்ய இதைவிட‌க் காரணம் வேண்டுமா? களத்தில் குதித்துவிட்டார் பாலா‌ஜி மோகன்.

நமக்குக் கிடைத்த தகவலின்படி விரைவில் இந்தியில் இந்தப் படம் தயாராகப் போகிறது. படத்தை தயா‌ரித்த சித்தார்த் இந்தி தயா‌ரிப்பாளர் ஒருவருடன் இணைந்து ‌ரீமேக்கை தயா‌ரிப்பார் என தெ‌ரிகிறது. ஹீரோ, வேறு யார் சித்தார்த்தேதான். அதிர்ஷ்டம் இருந்தால் இந்தப் படத்தின் மூலம் அமலா பாலின் இந்தி பிரவேசம் அமையும் என்கிறார்கள்.

> காதலில் சொதப்புவது எப்படி முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. மெ‌ரினா
பாண்டிரா‌ஜின் இந்த பீச் ரசிகர்களின் புறக்கணிப்பால் காற்று வாங்குகிறது. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் இப்படம் 1.9 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 3.56 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. தோனி
நல்ல படம் என்று பெயர் எடுத்தும் தோனி பாக்ஸ் ஆஃபிஸில் தடுமாறுகிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 4 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இரண்டு வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 73 லட்சங்கள்.

3. அம்புலி
சின்ன பட்ஜெட்டில் எடுத்த அம்புலி 3டி படம் பரவலாக அனைவரையும் கவர்ந்திருக்கிறது. சென்ற வார இறுதியில் 5.6 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 19 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

2. முப்பொழுதும் உன் கற்பனைகள்
கரன்சியை இறைத்து எடுக்கப்பட்ட இப்படம் சென்ற வாரம் முதலிடத்தில் இருந்தது. இந்த வாரம் இரண்டாவது இடம். மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் படத்தின் வசூல் பரவாயில்லை. சென்ற வார இறுதி வசூல் 33.2 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.17 கோடி வசூலித்ததுள்ளது இப்படம்.

1. காதலில் சொதப்புவது எப்படி
சென்ற வாரம் இரண்டாவது இடத்தில் இருந்த படம் இந்த வாரம் முதலிடத்தில். ஓபனிங் வீக் எண்டைவிட சென்ற வார இறுதி வசூல் அதிகம். 46.8 லட்சங்கள். இதுவரை 1.51 கோடியை வசூலித்திருக்கும் இப்படம் சென்னையில் ஐந்து கோடிகளை தாண்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

Tuesday 28 February 2012

இந்தியாவைக் கூட்டுக் குற்றவாளி ஆக்காதீர்கள் : பிரதமருக்கு வை.கோ. கடிதம்

உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசு நிறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பு என்ற நிலைமையே ஏற்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

வைகோ, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதத்தில்; இலங்கையின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது.

ஆனால், உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக, இலங்கை அரசு, தனக்குத்தானே ஒரு விசாரணைக்குழுவை நியமித்துக்கொண்டது. அந்தக் குழு, அனைத்து உண்மைகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, கோயபெல்ஸ் பாணியில், இலங்கை அரசின் நடவடிக்கைளை நியாயப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம், இரண்டு மூன்றாவது வாரங்களில் நடைபெற்ற கொடூரமான படுகொலைகளுக்குப் பிறகு, ஜெர்மனியின் முன்னெடுப்பில், பதினாறு நாடுகள், ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தை, ஜெனீவா நகரில் கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அக்கூட்டம், 2009 மே மாதம் கடைசி வாரம் நடைபெற்றது.

ஆனால், அந்தக் கூட்டத்தில், போர்க்காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகின்ற வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற, இந்தியா பெரிதும் உதவியது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ் இனத்துக்கு எதிராக மேற்கொண்ட, மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இப்போது, உலக நாடுகளின் மனசாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டது.

எனவே, பிப்ரவரி 27 ஆம் நாள், ஜெனீவா நகரில் நடைபெறுகின்ற, ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை, அமெரிக்காவும், மேலும் பல நாடுகளும் கொண்டு வருகின்றன. இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் இனக்கொலை நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான அத்தகைய ஒரு தீர்மானத்தை, இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு எவ்வித ஆதரவும் அளிக்கக்கூடாது என்று, நான் தங்களுக்கு ஏற்கனவே எழுதி உள்ள பல கடிதங்களில் கேட்டுக் கொண்டு உள்ளேன். ஆனால், பிப்ரவரி 27 ஆம் நாள், மகிந்த சமரசிங்கே என்ற இலங்கை அரசுப் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் நடைபெற இருக்கின்ற மிக முக்கியமான வாக்குப்பதிவில், “இந்தியா இலங்கை அரசை ஆதரிக்கும்” என்று தெரிவித்து இருப்பது, பேரதிர்ச்சியாக உள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராஜபக்சேவை பிப்ரவரி 26 ஆம் நாள் நேரில் சந்தித்து, ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கையை இந்தியா ஆதரிக்கும் என உறுதி அளித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.இது உண்மையாக இருக்குமானால், இந்த நடவடிக்கை, ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழர்களின் படுகொலையால், தமிழகத்திலும், உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களின் இதயத்தில் குருதி வடிந்து கொண்டு இருக்கின்றது.

உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசு நிறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பு; கூட்டுக் குற்றவாளி என்ற நிலைமையே ஏற்படும். ஏற்கனவே காயப்பட்டுப் புண்ணாகி இருக்கின்ற தமிழர் நெஞ்சில் மேலும் தீ வைக்கின்ற எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள் என வேண்டுகிறேன். ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு ஆதரவான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டடுள்ளதாக அறிய வருகிறது.

ஐ.நா.முன்றலில் நேற்று நடைபெற்ற நீதிக்காய் ஒன்றிணைவோம்.


சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளைச்சேர்ந்த மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி லண்டனிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு ஜெனிவா முன்றலை சென்றடைந்த ஜெய்சங்கரும் கௌரவிக்கப்பட்டார்


கூட்டமைப்பின் நல்லெண்ண சமிக்ஞைக்கு சிறிலங்கா அரசின் கைமாறு என்ன? - மனோ

ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தவிர்ததிருப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞை காட்டியுள்ளது.

இந்த நல்லெண்ண நடவடிக்கைக்கு பிரதியுபகாரமாக சிறிலங்கா அரசு எவ்விதமான செயற்பாட்டினை மேற்கொள்ளப் போகின்றது என்பதே முக்கியமான கேள்வி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெருக்கடிமிக்க இன்றைய தருணத்தில், தமிழர் தரப்புகளிலிருந்து பாரிய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானமானது, தமிழர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகக் கருத முடியும். ஆனால் இந்த நல்லெண்ண முயற்சியை விழலுக்கு இறைத்த நீராக சிறிலங்கா அரசு மாற்றிடக் கூடாது என்பது முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா சிறீலங்காவுக்கெதிரான பிரேரணையை பேரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்!


இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்க சிறீலங்காவுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ராபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக தெரிகிறது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சிறீலங்காவுக்கு தண்டனை பெற்றுத்தரும் நோக்கில் பன்னாட்டு மன்னிப்புச் சபை உள்ளிட்ட 37 அமைப்புகள் ஜெனிவாவுக்கு சென்றுள்ளனர். இதனை தவிர தென்னாப்பிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மன் டுடு, முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும், மனித உரிமை பேரவையில், சிறீலங்காவுக்கு எதிராக கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என சிறீலங்கா அமைச்சர்கள் குழு, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கையானது உலகில் உள்ள பிற நாடுகளையும் பாதிக்கும். அவ்வாறு ஒரு நிகழ்வு நடந்தால் ஜக்கிய நாடுகள் சபையின் ஆர் 2 எஸ் தலையீடு செய்யும் நடைமுறையை செயற்படுத்த வாய்ப்பு ஏற்படும் என சிறீலங்கா குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறீலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இடமளித்தால். இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினை, சீனாவின் பிரிவினைவாத பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிட வாய்ப்பு ஏற்ப்படும் என இணைய ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவையெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பின்லேடனின் மறைந்திருந்ததை முன்னரே அறிந்திருந்த பாகிஸ்தான்: விக்கிலீக்ஸ்

பாகிஸ்தானிய இராணுவத்தினரின் உளவுப் பிரிவிலிருந்த முக்கிய அதிகாரிகளுக்கு பின்லேடன் அங்கு மறைந்திருந்தமை பற்றி முன்னரே அறிந்திருந்தனர் என விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிலீக்ஸ் அமெரிக்க உளவு நிறுவனத்தின் இரகசிய மின்னஞ்சல்களை வெளியிட்டது. அதில் அமெரிக்க உளவு நிறுவனமான Stratfor's இன் உப தலைவர் எழுதிய மின்னஞ்சல் ஒன்றில்

“Mid to senior level ISI [[Inter-Services Intelligence]] and Pak Mil [[Pakistani military]] with one retired Pak Mil General that had knowledge of the OBL [[Osama bin Laden]] arrangements and safe house,”

என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday 27 February 2012

செய்தியாளர் மேரி கொல்வினின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு: அனலை நிதிஸ் ச. குமாரன்

கடந்த வருடம் ஜனவரியிலிருந்து மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள சிரிய நாட்டில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சி நடைபெற்று வருகிறது.

மேற்கத்தைய நாடுகளின் தூண்டுதலின் பேரிலேயே இக்கிளர்ச்சிகள் இடம்பெற்று வருவதாக சிரியா அறிவித்துள்ள நிலையில், மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

கிளர்ச்சிக் குழுக்களின் ஆதரவுடன் சில வீரமிகு பத்திரிகையாளர்கள் அந்நாட்டுக்குள் நுழைந்து அங்கு நடைபெறும் உண்மைச் சம்பவங்களை உலகப் பத்திரிகைகள் ஊடாக வெளிக்கொண்டு வந்தவர்களில் பிரித்தானியாவின் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பிரபல போர் முனைச் செய்தியாளர் மேரி கொல்வின் மற்றும் பிரபல பிரெஞ்ச் புகைப்படக்காரர் ரெமி ஓச்லில் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இவ்விரு பத்திரிகையாளர்களும் அரச படையினரின் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி இறந்து விட்டார்கள் என்கிற செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது.

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற வெளிநாட்டுச் செய்தியாளரான மேரி கொல்வின், 1956-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தவர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த மேரி கொல்வின், உலகின் மோதல் நடக்கும் நாடுகளுக்குச் சென்று செய்தி சேகரிப்பதில் துணிச்சல் மிக்கவர். 1985-ஆம் ஆண்டிலிருந்து இவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றுகிறார்.

சிரியாவின் ஹோம்ஸ் என்கிற நகரில் மேரி கோல்வின், பிரெஞ்சுப் புகைப்படக்காரர் ரெமி ஒச்லிக் மற்றும் சில பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த கட்டடம் மீது பெப்ரவரி 22, 2012-இல் சிரிய அரச படைகள் எறிகணைத் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் மேரி கொல்வின் மற்றும் ரெமி ஓக்லிக் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், மூன்று பத்திரிகையாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

பல உலக நாடுகள் தமது கண்டனங்களைச் சிரிய நாட்டிற்கு எதிராக விடுத்து வருகிறார்கள். உலக நாடுகளின் கண்டனங்களை உதாசீனப்படுத்திவிட்டு தொடர்ந்தும் இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது சிரிய அரசு. அதிபர் பஷர் அல் அசாத்தின் தந்தையார் 30 ஆண்டுகளாக இறக்கும் வரையில் ஆட்சியில் இருந்தார். சிரிய நாட்டின் அரசியல் சாசனத்தின்படி 40 வயதிற்கு மேற்பட்டவர்களே நாட்டின் அதிபராக வரமுடியும் என்கிற நியதி இருந்தது.

2010-இல் தந்தையார் இறக்கும் போது பஷர் அல் அசாத்திற்கு 34 வயதாக இருந்த காரணத்தினால், அந்நாட்டின் சட்ட யாப்பையே திருத்தி 34 வயதானவர்கள் அதிபராக வரமுடியும் என்று மாற்றினார்கள்.

இவ்மாற்றத்தின் பின்னர் பஷர் அல் அசாத் அதிபராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையும் மகனும் தொடர்ச்சியாக 42 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறார்கள்.

எப்படியேனும், அதிபர் பஷர் அல் அசாத்தை பதவியிறக்கி மக்களின் ஆதரவுடனான கட்சி ஒன்றை பதவிக்கு கொண்டுவருவதுடன், ஜனாநாயகத்தை மலரவைக்கலாம் என்கிற கருத்து மேற்கத்தைய நாடுகளிடம் பரவலாக இருக்கிறது.

பெரும்பாலான சிரிய மக்களும் மேற்கத்தைய நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் கூறுகிறது. இதனை தாங்க முடியாத சிரிய அரசு மக்கள் செறிந்து வாழும் இடங்கள் மீது குண்டுகளை ஏவி பலத்த உயிரிழப்புக்களை மேற்கொண்டு வருகிறது.

மேரி கொல்வின் போன்ற வீரமிகு பத்திரிகையாளர்களையும் சிரிய அரச படையினர் விட்டுவைக்கவில்லை. பத்திரிகை உலகில் இவருடைய இறப்பு என்பது பாரிய இழப்பே. தமிழ் மக்களும் இவருடைய இறப்பை தமது குடும்ப இழப்பாகவே கருதுகிறார்கள்.

துணிச்சலானவர்களே பத்திரிகையாளர்கள்

உண்மைச் சம்பவங்களை பிறர் அறியும் வண்ணம் செய்வதே பத்திரிகைத் தர்மம். இதன் மூலமாக அழிவுகளைத் தடுப்பதுடன், அழிவுகள் செய்பவர்களைத் தண்டிக்க உதவியாக இருப்பவர்களும் பத்திரிகைத் துறையென்றால் மிகையாகாது. பத்திரிகையில் வரும் செய்திகளை ஆவணப்படுத்தி அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணமாக பத்திரிகைச் செய்திகள் இன்றுவரை இருந்து வருகிறது.

குற்றவாளிகளை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி, குற்றவாளிகளுக்கு இலகுவாக தண்டனையைப் பெற்றுத்தர உதவியாக இருப்பவர்களும் பத்திரிகையாளர்களே. வாய் மூலமாக கூறுவதை நீதிமன்றங்கள் சாட்சிகளாக ஏற்றுக்கொள்வதில்லை.

ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அவ்வகையில், பத்திரிகைத்துறை என்பது செய்திகளை வழங்கும் ஊடகங்களாக இருப்பது மட்டுமன்றி, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையைப் பெற்றுத்தரும் பலம் பொருந்திய சாட்சிகளாகவும் செயற்படுகிறது.

தமது உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் களம் காண்பவர்களே பத்திரிகையாளர்கள். சிறந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்கான பிரிட்டிஷ் அரசின் விருதை வென்றவர் மேரி கொல்வின். இறப்பதற்கு முதல் நாளன்று (பெப்ரவரி 21, 2012) சனல்-4 தொலைக்காட்சியில் தோன்றி, சிரியாவில் நடக்கும் தாக்குதலின் கொடூரத்தை விவரித்தார்.

சிரியாவில் நிலைமைகள் மோசமாகி வருவதாகவும், அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அதிபர் கேட்டுகொண்டதற்கு, தனது பணிகள் இன்னும் பூர்த்தியாகாததால் இருக்கும் தினத்தன்றே நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார் மேரி கொல்வின்.

தான் எடுத்துக்கொண்ட பணியை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டு திரும்புவதற்கு முன்னரே படுபாவிகள் கொன்றுவிட்டார்கள் என்று கதறியுள்ளார் அவருடைய தாயார். மக்களுக்கு நடக்கும் சம்பவங்களை நேரடியாக கேட்டறிந்தும், நேரில் பார்த்த சம்பவங்களை செய்தியாகவும் தொகுத்து வழங்கி வந்த உலகப் புகழ்பெற்ற பத்திரிகைப் பெண்மணியின் துணிவு என்பது நிச்சயம் பிற பத்திரிகையாளர்களுக்கும் உந்துசக்தியாக அமையும் என்றால் மிகையாகாது.

இதைப் போன்றே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பல பத்திரிகையாளர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது தமது சேவைகளை செய்து வந்துள்ளார்கள்.

உலகின் மோதல் நடக்கும் நாடுகளுக்கு துணிச்சலுடன் பிரவேசிக்கும் தன்மைகொண்ட மேரி கொல்வின் நடக்கும் உண்மைச் சம்பவங்களை உலகமயமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோசோவோ, செசென்யா, கிழக்கு ரிமோர்இ, லிபியா உட்பட பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் உடையவரே மேரி கொல்வின். அரசியல் இஸ்திரத்தன்மையற்ற பல அரபு நாடுகளிலும் தனது பணியினை மேற்கொண்டு அங்கு நடக்கும் சம்பவங்களைத் துணிச்சலுடன் பேசியும் எழுதியும் வந்தவரே மேரி கொல்வின் அம்மையார்.

கடந்த 2001-ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் செய்தி சேகரிக்க, எல்லையைத் தாண்டியபோது சிங்களப் படைகள் வீசிய குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த கொல்வின், தனது ஒரு கண்ணையும் இழந்தார்

. ஒரு கண்ணை இழந்தாலும், மனதின் உறுதியை இம்மியும் இழக்காத மேரி கொல்வின், தனது போர் முனை செய்தியாளர் பணியைத் தொடர்ந்தார். தனது ஒரு கண்ணை கறுப்புத் துணியினால் மூடியே இதுவரை காலமும் வந்துள்ளார். இதற்கான காரணத்தைக் கேட்டபோது போரின் வலியைப் பிரதிபலிக்கும் முகமாகவேதான் இப்படியாக கறுப்பினால் கண்ணை மூடித் துக்கத்தை வெளிப்படுத்துவதாக கூறியிருந்தார்.

தமிழர்களுக்கு பேரிழப்பு

இறுதிக் கட்ட ஈழப் போரின் போது சிங்களப் படையினர் செய்த குற்றங்களை நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் மேரி கொல்வின் இருந்துள்ளார்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது, வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் பி. நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோருடன் கடைசியாகப் பேசியவர் மேரி கொல்வின்.

கடைசியாக விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுக்குள் இருந்து கொண்டு மே 17திகதி 2009 இல் செய்மதித் தொலைபேசியில் பி. நடேசன் அவர்கள், “நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்” என்று தனக்கு கூறியதாக மேரி கொல்வின் “சண்டே டைம்ஸ்” மற்றும் “த கார்டியன்” பத்திரிகைகளுக்கு முன்னர் பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில், “விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்களைப் பின்புறத்தில் என்னால் கேட்க முடிந்தது. ‘ஓபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானிய அரசிடமிருந்து எங்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம்.

எங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?’ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையான 26 வருட போரில், வெற்றியோடுள்ள சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைவது மிக அபாயமானதென்று பி. நடேசனுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.”

மேரி கொல்வின் மேலும் கூறுகையில், “8 வருடங்களுக்கு முன்பே நடேசன் மற்றும் புலித்தேவனை எனக்குத் தெரிந்திருந்தது. அப்போது தீவின் 3 இல் 1 பங்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

இப்போது, இவ்விரண்டு பேரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர். கடந்த பல நாட்களாகவே விடுதலைப்புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து கொண்டிருந்தேன்.”

“நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுக்குப் பறிமாறுமாறு கேட்டுக் கொண்டார்:

(1) நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்

(2) எங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தர வேண்டும்

(3) ஒரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வைக்கப்படும் என்ற நிச்சயம் வேண்டும்."

மேரி கொல்வின் தொடர்ந்து கூறுகையில், “உயர் பிரித்தானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர் விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்கு தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதைச் சிறிலங்கா அரசிற்குத் தெரிவிப்பதாகக் கூறினார். இந்த நடவடிக்கை ஒரு சமாதானம் வருவதற்கான அறிகுறியாக எனக்குத் தோன்றியிருந்தது.”

எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். கடைசி ஞாயிறு இரவின் போது, சிறிலங்கா இராணுவம் மிக நெருங்கிய போது, புலிகளிடமிருந்து ஒரு அரசியல் கோரிக்கைகளும் புகைப்படங்களும் இருக்கவில்லை. நடேசன் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். விடுதலைப்புலிகளின் பாதுகாப்பிற்கு நம்பியாரின் வருகை வேண்டுமென்றும் கேட்டார்."

“திரும்பவும், நியுயோர்க் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஊடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன், அப்போது அங்கே காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன். தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலின் பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார்.”

“சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார்.

லண்டனில் அப்போது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனின் தொலைபேசிக்கு அழைக்க முயற்சியெடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்பிற்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன்.

தென் ஆசியத் தொடர்புடன் இருந்து திங்கள் காலை 5 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கு நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று மாலை, சிறிலங்கா இராணுவம் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள்" இவ்வாறு பல இரகசியத் தகவல்களை தெரிவித்திருந்தார் மேரி கொல்வின் அவர்கள்.

தமிழ் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மட்டுமன்றி, விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் கொலைகளுக்கும் சாட்சியாகவே மேரி அவர்கள் இருந்துள்ளார். தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன்னல்களை நேரடியாக தனது ஊடக நண்பர்கள் மூலமாக சிங்கள அரச படைகளின் அட்டூழியங்களை உலக நாடுகள் அறியும் வண்ணம் பல வேலைத் திட்டங்களையும் செய்தவரே இவ் அம்மையார்.

மேரியுனுடைய இறப்பு உலக பத்திரிகையாளர்கள், அவரது குடும்பத்தினர் அல்லது நீதி கேட்டுப் போராடும் மக்களுக்கு மட்டும் இழப்பில்லை. இவ் அம்மையாரின் இறப்பு என்பது தமிழர்கள் வேண்டி நிற்கும் நீதிக்கான பயணத்திற்கு வீழ்ந்த பேரிழப்பே. தான் தனியாகவே செய்த பணிகளை இவர் போன்ற வீரமிகு பல நூறு பத்திரிகையாளர்களினாலேயே செய்ய முடியும்.

இவருடைய வழியிலான பணியினை செய்வதுதான் அவருக்கு நாம் அளிக்கும் இறுதி மரியாதையாக இருக்கும். இவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் பல கோடி மக்களில் நாமும்.

nithiskumaaran@gmail.com

இலங்கையைப் பற்றி வாய் திறவாத நவநீதம்பிள்ளை!

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக எந்த கருத்துக்களை வெளியிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன

எனினும், தனது ஆரம்ப உரையில் சிரியாவில் நிலவும் யுத்த நிலைமைகள் குறித்து அவர் கூடிய கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை உறுப்பு நாடுகள் செயற்படுத்துவதை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு அவசியம் என நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு இலங்கையிடம் வெளிநாடுகள் கோருவது, இலங்கையில் ஒன்றிணைந்து செயற்படும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமே என்பதை இலங்கை புரிந்துக்கொள்ள வேண்டும் என பேரவையில், பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஜெரோம் பிரவுண் தெரிவித்தார்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்த நாடுகள் தவறும் போது, மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிறுவனம் செயற்பட்டு, உதவுவது அவசியம் எனவும் அவர் இக்கூட்டத்தொடரில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய பேச்சுக்கள் இடம்பெறும் என, அரசாங்கத் தரப்பு அச்சத்தில் இருந்ததகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

22வது நாளைக் கடந்து நீதிக்கான நடைப்பயணம் - இந்திய தேசத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தமிழினம் காலம் காலமாய் நசுக்கப்படுவதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருந்த போதிலும் மௌனமாக இருப்பது ஏன்? சர்வதேசமே உன் அமைதியை கலைத்து ஒடுக்கப்படும் தமிழ் இனத்திற்கு விடிவைப் பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 22வது நாளைக் கடந்து எழுச்சிமிக்க உணர்வோடு ஐ.நாவை நோக்கி செல்கின்றது.

இந்திய தேசமானது சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு அமைக்க சர்வதேசத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் உலக நாடுகள் பல இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை உணர்ந்து இலங்கை அரசிற்கு எதிராக பல்வேறுபட்ட அழுத்தங்களை பிரயோகிக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவும் எமக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என்று நீதிக்கான நடைபயணத்தின் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இன்று ஆரம்பமாகும் ஐ.நா கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வலியுறுத்தி மார்ச் 5ம் திகதி நடைபெற இருக்கும் எழுச்சி கொண்ட பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நீதிக்கான நடைப்பயணத்தை மேற்கொள்ளும் உணர்வாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

ஐரோப்பா தழுவிய ரீதியில் எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டி மார்ச் 5ம் திகதி நடைபெற இருக்கும் ஒன்றுகூடலிற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு நாட்டினுடைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, நீங்கள் உங்கள் நாட்டுத் தழிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிராந்திய செயற்பாட்டாளர்களோடு தொடர்பு கொண்டு இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

கூட்டமைப்பு தமிழ் மக்களை மிகப்பெரிய ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது: கஜேந்திரன்

கடந்த 60 வருடமாக தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா அரசாங்கத்தினைக் காப்பாற்றும் நோக்கத்துடனே தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது இதனாலேயேஜெனீவா அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது கூட்டமைப்பு தமிழ்மக்களை மிகப்பெரிய ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களை மிகப் பெரிய ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது என்று தனது கவலையை வெளியிட்டுள்ளார்.எமது புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் போர்க்குற்றம் மற்றும் தமிழ்ர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தொடர்பான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்து அவ் விசாரனைக்கான காலத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

இவர்களுடைய நிலைப்பாட்டிலேயே ஆரம்பத்தில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் இருந்து வருகின்றது.ஆனால் ஜெனீவா செல்லவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை விடுத்துள்ள அறிக்ககை புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளின் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக செய்துவரும் போராட்டங்களையும் ஏனைய செயற்பாடுகளையும் கைவிட வேண்டும் என்ற தகவலையே செல்லி நிற்கின்றது. குறிப்பாக தற்போதைய நிலை தொடருமானால் வன்முறைக்கு வித்திடலாம், தமிழ் மக்கள் மீண்டும் பாதிக்கப்படலாம்என்று குறிப்பிட்டிருப்பதன் மூலமாக சர்வதேச சமூகத்திற்கே தனது செய்தியினை தமிழ் தேசியக் கூட்டமைப்புதெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் சிறிலங்கா அராசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகளால் சிறிலங்காவில் உள்ள சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீது கோவப்பட்டு மீண்டும்வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாலம் எனவே புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் சிறிலங்கா அரசுக்கு எதிராகசெய்யும் போர்க்குற்றத்தினை வலியுறுத்தும் செயற்பாடுகளை கைவிடவேண்டும் என்னும் அர்த்தத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அரசியல் தீர்வு என்பது எந்தளவுக்கு முக்கியமானதோ அதே போன்று சரிநிகர் சமமானதேவை தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாகவிசாரனையும.; அவ் விசாரனையின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும் தண்டனையும் மிக முக்கியமானது.தற்போது தமிழ் மக்கள் ஓரளவேனும் அமைதியாக இருப்பதற்கும் சிங்களவர்கள் தமிழர்கள் மீது வன்முறைகளில் ஈடுபடாமல் இருப்பதற்குக் முக்கியகாரணம் சர்வதேசத்தில் பேர்குற்றம் தொர்பாக நடைபெறும் விசாரனையின் வலியுறுத்தல்கள் உள்ளதனாலேயே. சர்வதேசம் சிறிலங்காவைக் கைவிட்டு போர்குற்ற விசாணையில் இருந்துசிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றப்பட்டால் மட்டுமே தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும்.

அவ்வாறு தண்டனை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே தமிழ் மக்கள் மீது கை வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அஞ்சும். எனவே நாம் இவ் விசாரணை விடையத்தில் பின்னிற்கக் கூடாது.தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ்; தேசியக் கூட்டமைப்பு சிறிலங்காஅரசாங்கத்தை பேற்க்குற்றத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுமானால் தமிழ்மக்கள் அனைவரும் தாமாகவே சென்று கடலுக்குள் விழும் நிலையே தோண்றும்.சர்வதேசம் தமிழருக்கான வரும் அரிய சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் கைவிடக்கூடாது.ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பினையும் நிச்சையம் நிறைவேற்ற வேண்டும்.

மேற்படிஅமர்வுகளில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. தமிழ் மக்களைதொடர்ந்து ஏமாற்றத்திற்குள் தள்ள வேண்டாம் என்றும் செ.கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவுக்கு சிங்களவர் செருப்பு மாலை

ஐநாவுக்கும், ஏனைய மேற்கத்தைய நாடுகளுக்கும் எதிராக இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இலங்கையில் பல இடங்களில் நடந்திருக்கின்றன.

இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையை புலன்விசாரணை நடத்தக் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு பிரேரணையை ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கொண்டுவருவதற்கான மேற்கு நாடுகளின் திட்டம் குறித்து தாம் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

சில மதகுருமார், முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்பில் அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்களில் பலர் வந்திருந்தனர். அவர்களுடன் உள்ளூரவர்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். தேசியக் கொடியையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படங்களைக் கொண்ட கார்போர்ட் அட்டைகளையும் அவர்கள் தாங்கிச் சென்றனர்.

இலங்கை மனித உரிமைகளை மீறவில்லை என்று அவர்களது பாதாதைகளில் எழுதப்பட்டிருந்தது.அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் போடப்பட்டிருந்த பொலிஸாரின் வீதித்தடைகளையும் தாண்டிக்கொண்டு சிலர் சென்றார்கள். ஆனால் மகஜர் ஒன்றை அங்கு கையளிப்பதற்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டார்கள். வடக்கு கிடக்கு மாகாணங்களிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கூட்டமைப்பு எதிர்பார்த்தது போல பல்டி அரியநேந்திரன் நாடகம்

“ஜெனிவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்க வேண்டும் என்பதுதான் அநேக உறுப்பினர்களின் ஒருமித்த நிலைப்பாடாக இருந்தது. எனினும், இந்த முடிவைத் தலைமைப்பீடம் திடீரென மாற்றியமைத்ததற்கு அச்சுறுத்தல்கள் ஏதாவது விடுக்கப்பட்டனவா என்பது தொடர்பிலும், அழுத்தங்கள் ஏதும் பிரயோகிக்கப்பட்டனவா என்பது குறித்தும் தலைவர் சம்பந்தன் எமக்கு நேரில் தெளிவுபடுத்த வேண்டும். அவர் அவ்வாறு செய்வார் என நம்புகின்றோம்”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

இந்தியா சென்றுள்ள எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக் கலநாதன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நாடு திரும்பியதும் இது தொடர்பில் அனைவரும் ஒன்றுகூடி பரிசீலித்துப் பார்த்தால் சிறந்ததாக அமையும் என்று தான் கருதுகின்றோம் என்றும் அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரசன்னமாகும் என முன்னர் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்றுமுன்தினம் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்றும், தாம் அவ்வாறு கலந்துகொண்டால், நாட்டில் கலவரம் ஏற்படக்கூடிய அபாயத்தன்மை உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் திடீர் முடிவு தமிழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து மக்கள் பல்வேறு கோணங்களிலும் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர். அவர் மேலும் கூறியவை வருமாறு:

“தலைவரின் முடிவை ஏற்கவேண்டியது எமது தார்மீகக் கடமையாகும். அந்த வகையில் தலைமைப்பீடத்தின் முடிவை நான் ஏகமனதாக ஏற்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா மாநாட்டில் பிரசன்னமாக வேண்டும் என்பதுதான் அநேக உறுப்பினர்களின் ஏகமனதான நிலைப்பாடாக இருந்தது. இது விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட கூட்டத்தின் போது சாதகமானதொரு முடிவே எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் (நேற்று முன்தினம்) தொலைபேசி ஊடாக தொடர்புகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவை தெளிவுபடுத்தினார். சில முக்கியமான காரணிகளைக் கருத்திற்கொண்டே இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தலைமைப்பீடத்தின் முடிவை நாம் ஏற்கின்றோம். இருப்பினும், சக உறுப்பினர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடாமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் தெளிவற்ற நிலை எமக்குள் ஏற்பட்டுள்ளது. இறுதி நொடியில் எமது முடிவை மாற்றியமைத்ததற்கு ஏதாவது அழுத்தங்கள் வந்தனவா, எச்சரிக்கை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் தலைமைப்பீடம் எமக்கு நேரடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். இதனை சம்பந்தன் ஐயா செய்வார் என்று நாம் கருதுகின்றோம். ஜெனிவா மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அநேக உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.

இருப்பினும், நாம் மற்றைய பக்கத்தையும் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது. காரணமில்லாமல் எமது தலைமைப்பீடம் எதையும் செய்யாது. ஏனெனில், ஜெனிவா மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொண்டால் நாட்டில் அசாதாரண நிலைமையைத் தோற்றுவித்து கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முயற்சிக்கலாம்.

அதுமட்டுமின்றி, ஜெனிவாவில் இலங்கைக்கு சாதகமானதொரு நிலை ஏற்பட்டால், அது எமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இவை உட்பட தமிழ்மக்களின் அபிலாஷைகளைக் கருத்திற்கொண்டும் முடிவு மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.

இக் கூட்டத் தொடரில் பார்வையாளராக கலந்துகொண்டிருந்தால், சில முக்கிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கலாம். அந்தச் சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்கின்றேன்” என்றார்.

ஜெனீவாவில் சுணாமி: மகிந்தர் கையில் கிரிகெட் மட்டை!

இன்றைய தினம் ஜெனீவா மனித உரிமை கவுன்சில் அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளது. சுமார் 23 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கின்றனர் என்ற செய்திகள் பரவலாக அடிபடிம் வேளை இது.

ஆபிரிக்க நாடுகளில் ஆதரவுதேடி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தென்னாபிரிக்கா பயணமானார். ஆனால் கொழும்பில் மகிந்தர் படு ஜோராக காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கிறார் என அதிர்வு இணையம் அறிகிறது. கொழும்பு நாலந்தா கல்லூரியில் விளையாட்டரங்க தொகுதியினை மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை திறந்துவைத்தார்.

இதன்போது மகிந்தர் கிரிகெட் விளையாடியுள்ளார். பார்த்துப் பார்த்துப் போடப்பட்ட மிக சுலபமான பந்துகளை அடித்த மகிந்தர் இறுதியா மட்டையை அதிபரின் கைகளில் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார்.

சில்க் வேடத்தில் நடிக்க தயங்கினேன்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
வித்யாபாலன் கூறியதாவது: சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு என்னை தேடி வந்தது. அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டினேன். எதிர்பார்த்ததைவிட படம் ஹிட் ஆனது. படத்தின் பெயர்தான் டர்ட்டி (அழுக்கு) என்றிருந்ததே தவிர அழுக்கான படம் கிடையாது. இதில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதாவை வாழ்க்கையில் உயர்த்துவதாக கூறி அவரை தவறான வழியில் பயன்படுத்தி சீரழித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவும் இருந்தது. அப்படத்தை பார்த்தவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள். சில்க் போல் வேடம் ஏற்று நடித்தேனே தவிர என் வாழ்க்கை அவரது வாழ்க்கைபோல் கிடையாது. அதிர்ஷ்டவசமாக அவரைபோல் என்னை யாரும் சீரழிக்கவில்லை. திரையுலகினர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். விரைவில் நான் திருமணம் செய்துகொள்வேன் என்பதுபோல் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.


நடிகை என்றால் எல்லா வேடத்திலும் நடிக்க வேண்டும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார் மேக்னா ராஜ். இது பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சரத்குமாருடன் நான் நடித்துள்ள 'நரசிம்மன் ஐபிஎஸ்' என்ற படம் வெளியாகிறது. இது மலையாளத்தில் 'அச்சன்டே ஆண்மக்கள்' என்ற பெயரில் உருவானது. கோவை போலீஸ் அதிகாரியாக சரத் நடிக்கிறார். 2 வயது குழந்தைக்கு தாயாக வேடம் ஏற்றிருக்கிறேன். 'அம்மா வேடத்தில் நடிக்கிறீர்களே' என்கிறார்கள். நடிகை என்றால் எல்லா வேடத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டும். இதில் நடிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2 வயது குழந்தைக்குத்தான் தாயாக நடிக்கிறேன். எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்கவில்லை, அப்படி நடிக்கவும் மாட்டேன். ஏனென்றால் நானே ஹீரோயின்தான். இப்படத்தை சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். ஜாஸிகிப்ட் இசை. அடுத்து 'நந்தா நந்திதா' வெளியாக உள்ளது. இவ்வாறு மேக்னா ராஜ் கூறினார்.


மூக்கு ஆபரேஷன் செய்தது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சில வருடங்களுக்கு முன் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்ட தகவலை இப்போதுதான் வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன். நடிகைகள் பலர் முக அழகை கெடுக்கும் வகையில் இருக்கும் மூக்கு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வது வாடிக்கை. ஆனால் அதை மறுத்து விடுவதுண்டு. ஆனால் அது பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார் ஸ்ருதி. அவர் கூறியதாவது: சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. இதனால் இரவில் தூங்கும்போது அவஸ்தைபடுவேன். இதுபற்றி ஆலோசித்தபோது மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மூக்கில் ஆபரேஷன் செய்தால் குரல் மாறிவிடும் என்று சிலர் பயமுறுத்தினார்கள். இதனால் முதலில் யோசித்தேன். அப்படி எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிந்தபின் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன். இந்தியில் 'லக்கி' என்ற படத்தில் நடிப்பதற்கு முன்பே அமெரிக்கா சென்று மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். இரவிலும் நிம்மதியாக தூங்குகிறேன். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


ஸ்லம்டாக் மில்லினர் தான்வி தமிழ் ஹீரோயின் ஆனார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆஸ்கர் விருது பெற்ற 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தான்வி லோன்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனார். முன்னாள் பள்ளித் தோழர்கள் சிலர் இணைந்து, யூ அன்ட் மீ புரொடக்ஷன் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் 'காதல்தீவு'. இதில் 'அழகி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராம்சரண் ஹீரோவாகவும் 'ஸ்லம்டாக் மில்லினர்' குழந்தை நட்சத்திரம் தான்வி லோன்கர் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். மனோஜ் கே.பாரதி வில்லனாக நடிக்கிறார். மிதுன் ஈஸ்வர் இசை. முகேஷ்ஞானி ஒளிப்பதிவு. 'இது காதல் கதை. அதோடு சுற்றுலாத் தலங்களில் நடக்கும் சில திகிலூட்டும் சம்பவங்களையும் காதலோடு இணைத்து சொல்கிறோம்" என்றார் படத்தை இயக்கும் வெற்றி வீரன். ஹீரோயினாக நடிப்பது பற்றி தான்வி கூறும்போது, "கன்னட படம் ஒன்றில் நடிக்க வந்தபோது வெற்றி வீரன் அறிமுகமானார். அவரது கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஹாலிவுட் படத்தில் நடித்ததால் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டேன். தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்கிறேன். 16 வயதில் ஹீரோயினாகியிருக்கிறேன். திறமையை வளர்த்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்" என்றார்.


நல்ல வேடத்துக்கு காத்திருக்கிறார் ஸ்ருதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'காதலர் குடியிருப்பு', 'ஆண்மை தவறேல்' படங்களில் நடித்தவர் ஸ்ருதி. அவர் கூறியதாவது: கன்னடப் படங்களில் நடித்தபோது, தமிழில் அழைப்பு வந்தது. எனது நடிப்பில் இரு படங்கள் ரிலீசானது. இப்போது 'அமரா'வில் நடிக்கிறேன். இதையடுத்து, தமிழில் அதிக கவனம் செலுத்த விரும்பி,  சென்னையில் குடியேறியுள்ளேன். நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன். சினிமா உலகம் போட்டி நிறைந்ததுதான். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. வழக்கம்போல காதலிக்கவும் டூயட் பாடவும் அல்லாமல் கதையை நகர்த்தி செல்லும் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அப்படியொரு வேடத்துக்கு காத்திருக்கிறேன்.


ரெடியாகிறது முனி 3

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' மற்றும் முனியின் 2ம் பாகமான 'காஞ்சனா' ரிலீசாகி வெற்றிபெற்றது. இதையடுத்து 'ரிபெல்' தெலுங்கு படத்தை இயக்கி, இசையமைக்கும் அவர், ஜூன் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். பிறகு 'முனி 3ம் பாகம்' உருவாக்குகிறார். இதுகுறித்து லாரன்ஸ் கூறியதாவது: ஏப்ரலில், முனி 3ம் பாகத்தின் ஷூட்டிங்கை தமிழ், தெலுங்கில் தொடங்குகிறேன். டைட்டில் முடிவாகவில்லை. இயக்கி நடிக்கும் நான், என் தம்பி வினோவை அறிமுகம் செய்கிறேன். அவரும், நானும் சேர்ந்து ஆடுகின்ற நடனக்காட்சி ஹைலைட்டாக இருக்கும்.


அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் நடக்குமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஆஞ்சநேயன்தான் என் கணவர். எங்கள் திருமண தேதி விரைவில் முடிவாகும்' என்றார் அனன்யா. 'நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இவருக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இத்திருமணம் நடக்காது என்று தகவல் வெளியானது. இதை மறுத்த அனன்யா, 'ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன்' என்றார். அவர் மீண்டும் அதை உறுதி செய்து நேற்று அளித்த பேட்டி:

எங்களைப் பற்றி ஆதாரமில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். ஆஞ்சநேயன்  திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதை என்னிடம் கூறி இருக்கிறார். என்னை ஏமாற்றவில்லை. இருவரும் விரும்பியே திருமணம் செய்ய முடிவு செய்தோம். பத்திரிகைகளில் வந்ததுபோல் அவருக்கு குழந்தைகள் கிடையாது. சிறந்த நணபரான அவருடன் என் உறவு உறுதியாக இருக்கிறது. ஆஞ்சநேயன் பெற்றோரும், என் பெற்றோரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விரைவில் திருமண தேதி முடிவாகும். எனக்கும் இதயம் இருக்கிறது. இதில் எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நாங்கள் வேலைக்கு செல்ல வேண்டும். இதை மற்றவர்கள் மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். இப்போதுகூட மலையாள பட ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அனன்யா கூறினார்.


இந்திக்காக தமிழ் வாய்ப்பை இழக்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்திப்பட வாய்ப்புக்காக, தமிழ் படங்களை இழக்க மாட்டேன் என்று சமந்தா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழ்தான் என்னை அறிமுகப்படுத்தியது. ஆனால் வாழ்க்கை கொடுத்தது தெலுங்கு. எனவே இரண்டும் எனக்கு இரு கண்கள் மாதிரி. மணிரத்தினம், கவுதம் மேனன் என்று  நான் உயர்வாக மதிக்கும் இயக்குனர்கள் படத்தில் இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என்று நினைக்கவில்லை.இடையில் இரண்டு இந்திப்பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் கால்ஷீட் கேட்டார்கள். கொடுத்தால் ஒரு தமிழ் படத்தையும், ஒரு தெலுங்கு படத்தையும் இழக்க வேண்டியது வரும். அதனால் மறுத்து விட்டேன். இந்தி வாய்ப்பை விட தமிழ், தெலுங்கில் முக்கியமான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே  ஆசை. தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது போன்று தமிழிலும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு. அதுவும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


திகில் படத்தில் நடுங்கிய சதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சதா நடித்த இந்தி திகில் படம் தமிழுக்கு வருகிறது. 'சில காட்சிகளில் நிஜமாகவே நடுங்கிவிட்டேன்' என்றார் சதா. இதுபற்றி அவர் கூறியதாவது: 'ஜெயம்' படம் தொடங்கி 'அந்நியன்', 'பிரியசகி', 'வர்ணஜாலம்' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். பி.வாசு இயக்கத்தில் நடித்த 'புலிவேஷம்' சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. இந்தியில் 'கிளிக்' என்ற படத்தில் கிளாமராக நடித்திருக்கிறேன். இது தமிழில் 'கிளிக் 3' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. சங்கீத் சிவன் இயக்கி இருக்கிறார். சினேகா உல்லால், ரியா சென் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதில் மாடல் அழகியாக நடித்திருக்கிறேன். என் வேடம் கிளாமராகவும், சவாலாகவும் அமைந்தது. திகில் படமான இதில் சில காட்சிகள் நடிக்கும்போது நிஜமாகவே நடுங்கி பயந்திருக்கிறேன்.

புது அனுபவமாக இருந்தது. தமிழ், இந்தி. தெலுங்கு 3 மொழிகளிலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த துறையில் 90 சதவீதம் திருப்தி இருக்கிறது. ஸ்டார் அந்தஸ்து என்பது என்னைப் பொறுத்தவரை எட்டாக்கனியாக இருக்கவில்லை. பெரிய இயக்குனர், பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். நிறைய படங்கள் வந்தாலும் தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்கவே விரும்புகிறேன்.


மார்ச் 2 முதல் இங்கிலாந்தில் கோச்சடையான் ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் 'கோச்சடையான்' ஷூட்டிங் நடக்கிறது என்றார் சவுந்தர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா தம்பதிக்கு நேற்று 31வது ஆண்டு திருமண விழா. போயஸ்கார்டன் வீட்டில் எளிமையான கொண்டாட்டத்துடன் விழா நடந்தது. நெருக்கமான நண்பர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து கூறினார்கள். ஐஸ்வர்யா தனது குழந்தைகளுடன் நேரில் சென்று பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். இதுபற்றி டுவிட்டரில் ஐஸ்வர்யா கூறும்போது,''ஞாயிறு மாலை அப்பா, அம்மாவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். 31 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து அசத்தி உள்ளனர். இருவரையும் நான் மனமாரா விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'கோச்சடையான்' பட பணிக்காக ஹாங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, ''சிறந்த தம்பதிகளாக அம்மாவும், அப்பாவும் வாழ்கின்றனர். கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹாங்காங்கில் இருக்கிறேன். பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ஷூட்டிங் நடக்கிறது'' என்று கூறி உள்ளார்.


LLRC பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை ஒத்துழைக்க வேண்டும் - ஜெனீவாவில் பிரித்தானியா


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு சர்வதேசம் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை செயற்படுத்தும் என தாம் நம்புவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமை கவுக்ஸில் கூட்டத் தொடரில் பிரித்தானியா சார்பில் சற்று முன்னர் உரையாற்றிய அதன் பிரதிநிதி ஜெரமி பிரவுன் இவ்வாறு குறிப்பிட்டார்.

பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெரமி பிரவுன் தெரிவித்துள்ளார்.

Sunday 26 February 2012

> ஹா‌ரிஸின் துப்பாக்கி சுறுசுறுப்பு

பெப்சி போராட்டத்தால் படப்பிடிப்புகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. எனினும் ஒரு குரூப் மட்டும் தங்கு தடையில்லாமல் தங்களுடைய பணியை செய்து வருகின்றன. அவர்கள் இசைக் கலைஞர்கள். இவர்களுக்கு வாத்தியம் இசைப்பவர்களும் கூலாக தங்கள் வேலையை செய்து கரன்சி பார்க்கிறார்கள்.

துப்பாக்கியின் படப்பிடிப்டபு இந்தப் போராட்டத்தால் தடைபட்டாலும் ஹா‌ரிஸின் பணிக்கு எந்த இடையூறும் இல்லை. கிருஷ் குரலில் ஒரு பாடலை பதிவு செய்திருக்கிறார்.

இன்று முதல் மும்பையில் துப்பாக்கியை தொடங்குவதாக பிளான். சென்னைக்கு வராமல் மும்பையிலேயே மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடுவதாக திட்டமிட்டுள்ளார்கள் விஜய்யும், முருகதாஸும். இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் விஜய் என்பது முக்கியமானது.

> அஞ்சலி மகேஷ்பாபுவின் அண்ணியாக.

ஆனாலும் அஞ்சலிக்கு துணிச்சல் ஜாஸ்தி. ஹீரோயினாக நடிக்கும் போதே பிரபல நடிகருக்கு அண்ணியாகியிருக்கிறார்.

என்ன அதிர்ச்சியாகயிருக்கிறதா? முழுக்கதையும் கேட்டால் அவ்வளவு காட்டமாக இருக்காது. தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் மகேஷ்பாபுவும் நடிக்கிறார், அவ‌ரின் தம்பியாக. தம்பி மகேஷுக்கு ஜோடி சமந்தா. ரொம்ப எளிதாக கிடைத்துவிட்டார். அண்ணன் வெங்கடேஷுக்கு ஜோடி என்று போனாலே கதவடைக்கிறார்கள் பிரபல நடிகைகள்.

வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிப்பது வெல்லக்கட்டிதான். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவர் மகேஷ்பாபுக்கு அண்ணியாகிவிடுவார். அனுஷ்கா முதல் த்‌ரிஷா வரை ஊஹும் என்று ஓட்டம் எடுத்த இந்தக் கேரக்ட‌ரில் நடிக்க அஞ்சலி உடனடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மகேஷ்பாபுவுடன் எப்போதும் ஜோடியாக முடியாது. அப்புறம் எதுக்கு அண்ணி கேரக்டருக்கு கவலைப்படணும் என்று நினைத்திருப்பாரோ?

ஊடக அடக்குமுறையும் மக்கள் போராட்டங்களும் - இதயச்சந்திரன்!

போர்க்கள ஊடகவியாலாளர் மரி கொல்வின் சிரியாவிலுள்ள ஹொம்ஸ் பிரதேசத்தில் கொல்லப்பட்ட செய்தி உலக ஊடகப் பரப்பில் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம்.

அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வந்த மரி கொல்வின் கடந்த 25 வருட காலமாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னி பெருநிலப் பரப்பிற்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டுத் திரும்பும்போது, 16 ஏப்ரல் 2001 அன்று அரச படைகளின் கிரனேட் வீச்சில் அவர் ஒரு கண்ணை இழந்ததாகக் கூறப்பட்டது.

இறுதிப் போர் உச்ச கட்டத்தை அடைந்த வேளையில் வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் மரி கொல்வின் உரையாடிய செய்தி அவரால் உறுதிப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

ஒரு கண்ணை இழந்திருந்த நிலையிலும் வெள்ளைக் கொடி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்தி, உலகின் கண்களைத் திறந்த நேர்மையான ஊடகச் சமராடியாக இவர் பார்க்கப்பட்டார்.

படைகளால் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள, சிரியாவின் ஹொம்ஸ் (HOMS) பிரதேசத்தில், இம் மாதத்தில் மட்டும் இதுவரை மசார் ரயாரா, ரமி அல் சயிட், ரமி ஒச்லிக் என்கிற சுதந்திர ஊடகவியலாளர்களும், பிரித்தானிய சண்டே ரைம்சை சேர்ந்த மரி கொல்வினும் கொல்லப்பட்டுள்ளார்கள். அதேவேளை, 55 வயதான மரி கொல்வினின் கொலை, ஊடகவியலாளர்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு (CPJ) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 1992 இலிருந்து இதுவரை, 902 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக இவ்வமைப்பின் இணையத்தளம் புள்ளி விபரங்களோடு வெளிப்படுத்துகிறது. இதில் 34 சதவீதமானவர்கள், யுத்த வலய செய்தி சேகரிப்பின்போது கொல்லப்பட்டதாகவும், அதில் 7 சதவீதம் பெண்கள் என்றும் பகுப்பாய்வினூடாகச் சொல்லப்படுகிறது.

ஆபத்தான 20 நாடுகளின் பட்டியலில் 151 பேர் கொல்லப்பட்ட ஈராக் முதலிடத்திலும், 19 பேர் கொல்லப்பட்ட இலங்கை 13 ஆவது இடத்தையும் வகிக்கிறது. இவை தவிர, காரணம் கண்டறியப்படாத வகையில், இலங்கையில் மேலும் 6 பேர் கொல்லப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சர்வதேச அச்சு ஊடக மையம் வெளியிட்ட தகவலில் 2012இல் மொத்தமாக 21 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் எனச் கூறப்பட்டுள்ளது.

பத்திரிகை மற்றும் செய்தி வெளியீட்டாளர்களின் உலக அமைப்பானWAN-IFRA(WORLD ASSOCIATION OF NEWSPAPER & NEWS PUBLISHERS) தனது செய்தியில் குறிப்பிடும்போது, உலகளாவிய ரீதியில் 64 ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் 2011 இல் இறந்ததாகக் குறிப்பிடுவதோடு, இதில் அரைவாசிப் பேர் பாகிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் யெமனில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கின்றது.

மிக ஆபத்தான அரபுலகில், மக்கள் எழுச்சிக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடும் அரசுகளின் வன்முறைகளைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட 24 ஊடகத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இவை தவிர, தமது அதிகாரத்தை நிலை நிறுத்த, மக்கள் மீது படையினரை ஏவி விடும் அரசுகளின் நிஜமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்த முனைந்த பல ஊடகவியலாளர்கள் சிறையில் வாடுவதை நோக்க வேண்டும்.

2011 ஆம் ஆண்டிற்கான புள்ளி விபரத் தகவலில், உலகம் முழுவதும் 179 ஊடகவியலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஈரானில் 42 பேரும், எரித்திரியாவில் 28 பேரும் சீனாவில் 27 பேரும் சிறைப்பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இந்நாடுகளிலிருந்து சரியான எண்ணிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியாதென்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல. சிறையிலடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், கடந்த பத்து வருடங்களில் இது அதிகமானதென்று பார்க்கலாம்.

ஆகவே ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள், அதிகரித்துச் செல்லும் இவ்வேளையில் இலங்கையின் ஒற்றையாட்சி மையக் குவிமுக பரிமாணம் விரிவடைந்து, ஊடகப் பரப்பில் தனது வல்லாதிக்கத்தைச் செலுத்த முனைவதைக் காணலாம். விலைவாசியேற்றத்திற்கு எதிராக மக்கள் போராடும் செய்திகளைச் சிறியதாக்கி, ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு எதிரான செய்திகளை முதன்மைப்படுத்தும் போக்கினை உணரக்கூடியதாகவிருக்கிறது. இலங்கை அரசினைத் தண்டிக்க சர்வதேசம் முனைப்புக் காட்டுவதாகவும், குறிப்பாக அமெரிக்க அரசு அதில் தீவிரமாகச் செயற்படுவதாகவும் பூதாகாரமாக்கப்படுகிறது.

ஆகவே ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் 27 ஆம் திகதியிலிருந்து, நாடளாவிய ரீதியில் போராட்டங்களை ஆரம்பிக்கப் போவதாக அரசு அறிவித்த செய்தி, விலைவாசி உயர்வால் திணறும் மக்களின் தன்னியல்பான எழுச்சிப் போராட்டங்களை திசை திருப்பும உத்திபோல் தோன்றுகிறது.

அரசிற்கெதிராகப் போராடும் மக்களை ஏகாதிபத்தியத்தியங்களின் நிகழ்ச்சி நிரலிற்குத் துணை போகும் தேசிய எதிர்ப்பாளர்களென்றும் சித்தரிக்க முற்படுவார்கள். தற்போது, முள்ளிவாய்க்காலில் போரை முன்னின்று நடாத்திய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி பறிபோகிறது என்கிற பரப்புரையை முன்னிறுத்துவதில் தென்னிலங்கை ஊடகங்கள் அதிக கரிசனை கொள்வதைக் கவனிக்க வேண்டும். 50 வருடங்களிற்குப் பின்னர் கிடைத்த ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைக்கான விசேட மதியுரைக் குழுவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிநிதித்துவத்தை இழக்கப் போகிறோமென்கிற கவலையும் இலங்கைக்கு இருக்கிறது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில், சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டப்பட்டாலும், அதனைக் கருத்தில் கொள்ளாது, அவருக்கு பல சலுகைகளை வழங்கி அவரை ஆசுவாசப்படுத்த முனைகிறது இலங்கை அரசு என்கிற செய்தியும் தென்னிலங்கை ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளது. இலங்கையின் ஐ.நா. விற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி, பாலித கோகண்ணவிற்கு கிடைக்காத ஆடம்பர வாழ்க்கை, உதவி நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கு கிட்டியிருப்பதாக அவை தெரிவிக்கின்றன.

ஒரு இலட்சம் பெறுமதியான பி.எம்.டபிள்யூ. காரும், மாதமொன்றிற்கு வாடகையாக 11,500 டொலர் செலுத்தப்படும் வீடும் அண்மையில் சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திண்டாடும் மக்களுக்கு இச் செய்திகள் பரவலாகச் சென்றடையாமல் தடுக்கப்படுவது சோகமானது.

அதேவேளை, ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்து, பரந்துபட்ட மக்கள்மீது பெருஞ் சுமையை திணிக்க ஆரம்பித்துள்ளதைக் காணலாம். அத்தோடு நாட்டின் இறக்குமதி, பொருண்மிய அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதென நியாயப்படுத்தும் அரச, பெரும் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் தேயிலை ஏற்றுமதியில் பின்னடைவைச் சந்திக்கப்போவதை கொழும்பு தேயிலை ஏலம் விடும் நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.

கடந்த 6 மாத காலமாக ஈரானுக்கு தேயிலை விற்ற பணமான 25 மில்லியன் டொலர்களைப் பெற முடியாமல் தவிக்கிறது இலங்கை அரசு. இங்கு தேயிலையின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதத்தை ஈரான் கொள்வனவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ஈரான் நெருக்கடி மட்டுமல்லாது, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் எழுந்துள்ள கடன் நெருக்கடிகள், தேயிலையின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளெனச் சுட்டிக் காடடுகிறார் இலங்கை தேயிலை வர்த்தகர்கள் சம்மேளனத் தலைவர் ஜெயந்த கெரகல.

வழமையாக, நாட்டின் 95 சதவீதமான தேயிலை உற்பத்தி கொழும்பு ஏலத்தினூடாகவே சந்தைப்படுத்தப்படுகிறது. கடந்த வருடம் முதல் எட்டு மாதங்களில், 220.9 மில்லியன் கிலோ கிராம் தேயிலை இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இலங்கை பெருந்தோட்டப் பயிர் செய்கையின் வரலாற்றை நோக்கினால்,1824இல் முதன் முதலாக சீனாவிலிருந்து தேயிலைச் செடியை கொண்டு வந்தார்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள்.

இதில் இலங்கையின் தேயிலை உற்பத்தி துறை முன்னோடியாக ஜேம்ஸ் ரெயிலர் என்கிற பிரித்தானியர் குறிப்பிடப்படுகின்றார். சீனாவிலிருந்து தேயிலையும், அப்பயிர் செய்கையில் ஈடுபடுத்துவதற்கு தமிழகத் தமிழர்களும் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்டு மலையகத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

அதேவேளை தேயிலை ஏற்றுமதியில் ஏற்படப் போகும் வீழ்ச்சியானது. தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய விளிம்பு நிலை வாழ்வினை மேலும் மோசமடையச் செய்யப் போகிறது என்பது தான் மிக முக்கிய விவகாரமாகும்.

1927 இல் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்களாவிருந்த தேயிலை உற்பத்தி, 2000 ஆம் ஆண்டு மூன்று இலட்சமாக அதிகரித்தாலும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மூன்று மடங்காக உயரவில்லை என்கிற உண்மையை, கடந்த 73 வருட கால வரலாறு உணர்த்துகிறது.

யுத்தம் செய்வதற்கும், ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், அரச உயர் மட்டத்தினர் வெளிநாடுகளுக்கு கூட்டாகப் பயணம் செய்வதற்கும் செலவிடப்பட்ட பணத்தில், எத்தனை சதவீதம் இம் மக்களின் வாழ்வாதார உயர்விற்கு பயன்படுத்தப்பட்டது?

அதேவேளை, உலகச் சந்தையில் நிலவும் கடும் போட்டியினால் தேயிலையின் விலை வீழ்ச்சியை சாட்டாக வைத்து, தோட்டத் தொழிலாளிகளின் தினக் கூலியைக் குறைக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புமுண்டு. இந்த வருடம் தமது தேயிலை உற்பத்தியை ஒரு பில்லியன் கிலோ கிராமாக உயர்த்துவோமென பெருமிதப் பிரகடனங்களை விடுக்கும் இந்திய தேயிலை உற்பத்தியாளர்சபை, தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுக்கப்படுகிறது என்கிற பரப்புரையில் ஈடுபடுவதைக் காணலாம்.

இவை தவிர ஈரானிற்கான நிதிப் பரிமாற்றத்தில் சிக்கல்கள் எழுவதால், ரஷ்யாவிற்கான 80 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க இந்தியா திட்டமிடுகிறது.
இந்தியா மட்டுமல்லாது, வருடமொன்றிற்கு 1.3 பில்லியன் டொலர்களை தேயிலை ஏற்றுமதியினூடாகப் பெறும் ஆபிரிக்க நாடுகளும் இலங்கையோடு போட்டி போட முன்வருவதை கவனிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயர்வடைந்துள்ளதென பெருமைப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, 1000 பில்லியன் ரூபாய் தேசிய வருமானத்தில் 550 பில்லியன் ரூபாய் எரிபொருள்களுக்கு அரசு செலவிடுகிறதென சோகமாகக் கூறிய விடயத்தைப் பார்த்தால், தேயிலை ஏற்றுமதியில் ஏற்படப் போகும் வீழ்ச்சி, நாட்டின் திறைசேரியை அனைத்துலக நாணய நிதியத்திடம் அடகு வைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

ஆகவே மலையகத்தில் சிவில் சமூக அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென மனோ கணேசன் விடுத்த செய்தி, கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாக அமைவதைக் காணலாம். ஏனெனில் மலையக சமூகம் சந்திக்கப் போகும் பாரிய வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கையின் பொருளாதார பின்னடைவு உணர்த்துகிறது.

நன்றி - வீரகேசரி

26 /02 /2012

எம் பியின் வீடா எனக்கேட்டு கிளிநொச்சியில் ஆயுதமுனையில் கொள்ளை!

கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் ஆயுமுனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த ஆயுதாரிகள் பிரதேசசபை எம் பியின் வீடா எனக்கேட்டு மகாலிங்கம் என்பவரது வீட்டில் கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையிட வந்தவர்களிடம் முரண்பட்டு உலக்கையால் வீட்டார் தாக்க முற்பட்டபோது ஆயுததாரிகள் பத்திற்கும் மேற்பட்டவேட்டுக்களை மேல் நோக்கி தீர்த்துள்ளதுடன் மகாலிங்கத்தை மண்டையில் தாக்கி உடைத்துள்ளர்.

மகாலிங்கம் என்பவரது அயல்வீடு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் அன்ரன் டானியல் (ஒஸ்மன்) என்பவருடையது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் உறவுகளே சுதந்திர உரிமையினை பெற்றுத்தா​ருங்கள் – தாயகத்திலி​ருந்து மடல்!

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஈழத்தில் நாங்கள் இன்றும் ஏங்கித்தவிக்கின்றோம், புலம்பெயர் தமிழ் உறவுகளே எங்களுக்கான சுதந்திர உரிமையினை பெற்றுத்தாருங்கள் என தாயகத்திலிருந்து புலம் பெயர் உறவுகளுக்கு அறைகூவல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

அடக்குமுறை எங்கு நடக்கிறதோ அந்த அடக்கு முறைக்கான எதிர்பலைகளும் அங்கு இருக்கும் அந்தவகையில்தான் நான் அடக்கு முறைக்குள் இருந்துகொண்டு எனது எதிர்பலைகளை காட்டமுடியாத சூழ்நிலையில் எனது எழுத்து மடலினை அனைத்து புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் விடுக்கின்றேன்.

இன்றைய நிலையில் ஈழத்து தமிழ்மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்ற எழுச்சி நிலைப்பாட்டினை புலம்பெயர் தமிழ்மக்கள்தான் கொண்டிருக்கின்றார்கள், எங்களை வைத்து பகடைக்காய்கள் நகர்த்தும் அரசியல்வாதிகள்தான் தமிழ்மக்களின் அரியல் வாதிகளாக இருக்கின்றார்கள்.

லண்டனில் இருந்தும் பிரான்சில் இருந்தும் தமிழ்மக்களுக்கான நடைபயணத்தினை மேற்கொண்டு ஈழத்தில் வாழும் எங்களின் இறுதி தீர்வினை பெற்றுத்தாருங்கள். வெளிநாட்டில் வாழும் எம் சககோதரங்களே ஜெனீவா நோக்கி நீங்களும் திரண்டு சென்று முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைந்த உறவுகளின் கனவினை நனவாக்க விரைந்து செயற்படுங்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாத நெஞ்சத்துடன் உறுதியாக இந்த மடலினை எழுதி எந்தனையோ இடர்களுக்கு மத்தியில் உங்கள் விழிகளுக்கு கிடைக்கின்றது. இனப்பற்றாளனாக வாழ்ந்துகொண்டும் அதனை காட்டமுடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.

எழுச்சிகொண்ட தமிழ்மக்கள் புலம்பெயர் மண்ணில் இருக்கின்றார்கள் என்பதை செய்திகள் ஊடாக அறிந்துகொண்டு அவர்களின் எழுச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.

கொண்ட இலட்சியம் குன்றிடாததோர் கொள்கைவீரனின் காலடிமண்ணிலே நின்றுகொண்டொரு கூக்குரல் இடுகின்றேன்.

நிச்சயம் தீர்வு பெற்றுத்தருவீர்!

தாயகத்திலிருந்து சாணாக்கியன்

இலங்கையில் ஆட்கடத்தல் தொடர்பாக ஐ.நா கூட்டத்தொடரில் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல்போதல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனமொன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டளவில் பெருமளவான ஆட்கடத்தல் சம்பவங்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள இக்கூட்டத்தொடரில் இது குறித் தஅறிக்கை சமர்ப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சந்தர்ப்பம் அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரையில் உரிய பதிலளிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால் நியூயோர்க் தமிழர்களின் மக்கள் போராட்டம்!

சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி உலகத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் மக்களின் போராட்டங்களின் வரிசையில், அமெரிக்க - நியூயோர்க் வாழ் தமிழர்கள், மக்கள் போராட்டம் ஒன்றினை கடந்த 24ம் நாள் வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளனர்.வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால், பேரணியாகத் திரண்ட மக்கள், சர்வதேசத்திடம் நீதிகேட்கும் பதாகைகளையும் தாங்கியவாறு, ஒரே குரலில் அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி நின்றனர்.

உலக மானிடம் வெட்கித் தலைகுனியும் வகையில், இந்த நூற்றாண்டின் பெரும் அவலமாக, இலங்கை அரசாங்கத்தினால் ஈழத் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட, போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலை தொடர்பில், சுயாதீனமான அனைத்துலக விசாரணையொன்றுக்கான பொறிமுறையொன்றினை, தொடங்கவிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரின் போது, அமெரிக்க அரசானது, முன்னின்று முன்னெடுக்க வேண்டுமென்பதே, ஒன்றுதிரண்ட மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக அமைந்தது.

ஐ.நா மனித உரிமைச் சபைக் 19வது கூட்டத் தொடரினை மையப்படுத்தி, அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொடர் மக்கள் போராட்டங்களின் தொடக்கமாக, நியூயோர்க்கில் இந்த மக்கள் போராட்டம் அமைந்திருந்தது.







சம்பந்தர் – சுரேஷ் கருத்துப் பிளவு – பி.பி.சி தகவல்!

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஐ.நா. மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக முடிவெடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
சனிக்கிழமை தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அதேசமயம், இதற்கான காரணங்களை ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். என்று பிபிசி தமிழோசை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

“பிரபாகரனைக் கேளுங்கள்” – முகாம் மக்களை திட்டும் இராணுவ அதிகாரி!


வவுனியா செட்டிகுளம் கதிர்காமர் நலன்புரி முகாமில் உள்ள இடம்பெயர் மக்கள் மீதான தொடர் கெடுபிடி நடவடிக்கையில் முகாமின் இராணுவப் பொறுப்பதிகாரி அபயக்கோன் ஈடுபட்டுவருவதாக மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.முகாம்மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களை அபகரிப்பது, அவர்களை கொச்சைப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற குறிப்பிட்ட அதிகாரி இன்று முகாம் மக்கள் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு குடும்பத்தவர்களும் தலா நூற்றைம்பது ரூபா கட்டாயமாகச் செலுத்தவேண்டும் என்று இராணுவ அதிகாரியால் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே ஆறு தடவைகள் தாம் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஏழாவது தடவையாகவும் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள் இராணுவ அதிகாரி தனது புகைப்படக் கருவி மூலமே புகைப்படம் எடுக்க இருப்பதாகவும், தனக்கு பணம் சுருட்டும் நடவடிக்கையாகவே இம் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் மக்களின் குடிசைகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பு வயர்களை பொலிஸார் அபகரித்துச் சென்றிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் இராணுவ அதிகாரியிடம் முறையிடச் சென்ற மக்களைப் பார்த்து இவற்றினை உங்கள் தலைவர் பிரபாகரனிடம் சென்று கேளுங்கள் என மிரட்டி கெட்ட வார்த்தைகளில் திட்டியிருக்கின்றார்.

எமது பகுதிகளில் குடியேற அனுமதித்தால் இவ்வாறான கெடுபிடிகளை நாங்கள் ஏன் சந்திக்கவேண்டும், எந்த ஒரு தொழில் வாய்ப்புக்களும் இல்லாத நிலையில் தொடர்ந்தும் முகாமில் அடைப்பட்டுக்கிடக்கும் நாங்கள் இராணுவத்தினர் தேவைக்காக கேட்கும் நேரங்களில் பணத்தினை வழங்குவதற்கு எங்கே செல்வது என்று முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த திருநாவுக்கரசு சின்னாச்சி என்ற வயது முதிர்ந்த பெண் கண்ணீர் மல்க எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

கதிர்காமர் நலன்புரி முகாமில் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த 684 குடும்பங்கள் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா