பருத்திவீரன் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா மீது கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் அமீர் புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தின் பணம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. இந்நிலையில் பருத்திவீரனை தெலுங்கில் டப் செய்து வெளியிட உள்ளார் ஞானவேல்ராஜா. டப்பிங் பணி முடிந்து ஆடியோ வெளியீட்டு விழாவும் நடந்ததாகத் தெரிகிறது.
ஒரு படத்தை வேறு மொழியில் டப் செய்து வெளியிடும் போது படத்தின் கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் ஆகியோருக்கு முறைப்படி டப்பிங் உரிமையின் குறிப்பிட்ட சதவீதத்தை தயாரிப்பாளர் தந்தாக வேண்டும். இந்த விதியை மீறி அமீருக்குத் தெரியாமல் படத்தை தெலுங்கில் வெளியிட இருப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் அமீர் புகார் தந்துள்ளார்.
ஆக, மீண்டும் பருத்திவீரன் சர்ச்சை தொடங்கியிருக்கிறது.
No comments:
Post a Comment