Saturday 2 June 2012

‘‘தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு இடையில் ௭ன்னதான் பிரச்னை?


தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு ௭ன்னதான் பிரச்சினை ௭ன்று விளக்கம் தருகின்றார் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா...... ‘‘தனுஷ்ஐஸ்வர்யாவுக்கு இடையில் ௭ன்னதான் பிரச்னை?’’ ’’இந்த உலகத்தில் சண்டையே போடாத ஒரு புருஷன் பொண்டாட்டியைக் காட் டுங்க பார்ப்போம். குடும்பம் ௭ன்றால் 24 மணி நேரமும் கொஞ்சிக்கிட்டேதான் இருப்பாங்களா? தனுஷ்ஐஸ்வர்யா சண்டை போட்டுப்பாங்க. அடுத்த நிமிஷமே ௭ல்லாத்தையும் மறந்துட்டு ஒன்னாச் சிரிப்பாங்க. நானும் ௭ன் மனைவியிடம் ௭த்தனையோட தடவை கோபிச்சுட்டுப் போய் இருக்கேன். ராத்திரிக்கு வீட்டுக்கு வராமல் வெளியில் சுத்தி இருக்கேன். ஊடல் இல்லாத உறவுகளே இல்லை. அதுமாதிரிதான் தனுஷ்ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவதும் தவறு.

ஸ்ருதியுடன் தனுஷ் நெருக்கமாக நடிப்பதைப் படமாக்கியபோது மருமகளுக்குக் கோபம் வந்திருக்கிறது. ஒரு டைரக்டரா அந்தக் காட்சி ஒகே. ஆனா, மனைவியா அந்த நெருக்கத்தைப் பார்த்துக் கோபமாகிட்டாங்க. அதுக்காக வீட்டுல தினம் தினம் சண்டை போட்டுக்கிட்டா இருப்பாங்க. அன்பு இருக்குற இடத்துலதான் சண்டை வரும். அதுபோல தனுஷுக்கும் மருமகளுக்கும் மனஸ் தாபம் வரும், போகும்’’ ‘‘ஆனால், தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறாராமே?’’ ’’௭ந்த வீடு ௭ன்று ௭னக்குக் காட்டுங்கள், நானும் பார்க்க வேண்டும். தனுஷ் மட்டும் அல்ல, செல்வா, மகள்கள் ௭ல்லோருமே தனித்தனி வீட்டில்தான் வசிக்கிறார்கள். தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ் வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா... ௭ல்லோரும் இருக்கிறார்கள்.

 சில நாட்களுக்கு முன் தனுஷ், செல்வா, ௭ன் மகள்கள் ௭ல்லோரும் குடும்பத்தோடு மாமல்லபுரம் அரு கில் இருக்கும் பொர்ம் ஹவுஸில் சந்தோஷமாய் தங்கிவிட்டு வந்தார்கள்

லெப்.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலர் உதயகாந்தன் கொழும்பில் கொலை

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டியில் முன்னணி பாடசாலை ஒன்றுக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவரின் சடலத்தை அவரது தந்தை நேற்று அடையாளம் காட்டியுள்ளார். மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை பணியாற்றியவராவார். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் கருணா குழுவினரால், வெலிக்கந்தையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் படத்தை விற்க சல்மானும், ஷாருக்கும் தேவையில்லை: கமல் ஹாசன்

Don T Need Salman Shah Rukh Khan Kamal Haasan
தனது படத்தை போணி செய்ய பாலிவுட் ஹீரோக்கள் சல்மான் கானும், ஷாருக்கானும் தேவையில்லை என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவி்த்துள்ளார்.

கமல் ஹாசன் தற்போது விஸ்வரூபம் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ஊழலை மையமாக வைத்து அமர் ஹை என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் பாலிவுட் ஜாம்பவான்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஆகியோரை அணுகியதாக தகவல்கள் வெளியாகின். ஆனால் இதை கமல் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் இரு கான்களையும் சரி, ஜாக்கி சான், டாம் க்ரூஸையும் சரி எனது புதிய படத்திற்காக அணுகவில்லை. அது வெறும் வதந்தி. எனது படத்தை போணி செய்ய சல்மான், ஷாருக்கான் தேவையில்லை.

நான் தற்போது எடுத்து வரும் சினிமாவே எனக்கு திருப்தியாக உள்ளது. எனக்கு பாலிவுட் நடிகர் திலிப் குமாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விஸ்வரூபம் ரிலீஸ் ஆன பிறகு அமர் ஹை பற்றி சொல்கிறேன் என்றார்.



கருணாநிதிக்கு வயசு 89: பெங்களூரில் இருந்து தொலைபேசியில் ரஜினிகாந்த் வாழ்த்து

Rajinikanth Wishes Karunanidhi On His 89 Birthday
பெங்களூர்: திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரில் இருந்து தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 89வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுக தொண்டர்கள் அவரது வீட்டுக்கு முன்பு கூடி மேள, தாளங்கள் முழங்க வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளை திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மத்திய அமைசச்ர் நாராயணசாமி கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவி்த்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பெங்களூரில் உள்ளார். அவர் அங்கிருந்து கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பக்திப் பழமாய் மாறிய நயன்தாரா

Nayanthara Turns Cool   
நடிகை நயன்தாரா தியானம், யோகா என்று ஆன்மீகவாதியாகியுள்ளார்.

கிறிஸ்தவரான நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்தை தழுவினார். அதில் இருந்து அவர் திருப்பதி ஏழுமலையான் கோவில், குருவாயூர் பகவதி அம்மன் கோவில் என்று பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து வருகிறார்.

தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் அவர் சீதையாக நடித்தபோது கூட மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தியானம், யோகா என்று ஆன்மீகவாதியாக மாறியுள்ளார். ஷூட்டிங்கில் நேரம் கிடைத்தாலும் கூட கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பி்ததுவிடுகிறாராம்.

நயன்தாரா முன்பெல்லாம் கோபம் வந்தால் கையில் கிடைப்பதை தூக்கி எறிவார். ஆனால் தற்போது கோபம் வந்தால் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறாராம்.

யோகா, தியானம் மூலம் தனது கோபத்தை கட்டுப்படுத்தி வருகிறார் போலும். தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். மேலும் தான் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அவர் முகத்தில் விரக்தியோ, கவலையோ இல்லை மாறாக சாந்தம் குடி கொண்டுள்ளது.

இலங்கையில் தங்களின் தலைகளில் ஒவ்வொருவரும் தீயை மூட்டிக் கொண்டிருக்கின்றனர்

ஜனநாயக நெருக்கடிகள், மனித உரிமை மீறல்கள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் அங்கே நடக்கின்றன ௭ன்று சொல்லி, அவற்றைச் சீர்படுத்தும் நடவடிக்கை ௭ன்ற பேரில் வெளியார் நுழைவுகள் நடக்கின்றன இலங்கை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது ௭ன்பதையும் விட இலங்கையர்கள் இப்போது சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள் ௭ன்பதே சரியாகும். அதாவது ஒரு நிழல் யுத்தத்திற்குள் இலங்கை மக்கள் சிக்கியிருக்கி றார்கள். இது வல்லரசுகள் இலங்கை மீது மேற்கொள்ளும் நிழல் யுத்தம். இந்த யுத்தம் பொறிகளால் ஆனது. ராஜதந்திரப் பொறிகள். பொருளாதாரப் பொறிகள். அரசியல் தலையீட்டுப் பொறிகள். இவை ௭ல்லாற்றை யும் இணைத்துள்ள வல்லாதிக்கப் பொறிகள் ௭ன்ற பல பொறிகளுக்குள் இலங்கைத்தீவின் மக்கள் வசமாகச் சிக்கியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு வலையமைப்பை ஒத்த பொறிகளாக இவை உள்ளன. ஒவ்வொரு பொறியும் ஒவ்வொரு கண்ணிவெடியைப் போன்றது. ஆனால், இந்தப் பொறிகள் சாதாரண கண்ணிவெடி களைப் போல சிறியவை அல்ல. கண்ணுக் குப் புலப்படக் கூடியவையும் அல்ல. ஆகவே, இலகுவில் அகற்றப்படக் கூடியவை யும் அல்ல. இவை மாபெரும் கண்ணிகள். நாட்டையே பலியெடுக்கும் கண்ணிகள். அரசாங்கத்தையே தின்று தீர்க்கக்கூடிய அபாயக் கண்ணிகள். அப்படியே மக்களை யும் தின்றுவிடக் கூடியவை. நுட்பத்தினாலும், விவேகத்தினாலும், அர்ப்பணிப்பினாலும் நாட்டைக்குறித்த, மக்களைக்குறித்த, ௭திர்காலத்தைக் குறித்த சிந்தனை அலகினாலும் மட்டுமே இந்தக் கண்ணிகளை அகற்ற முடியும். இதற்கு அரசாங்கம் மட்டும் போதாது, நாட்டைக் குறித்து, மக்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரும் செயற்பட வேண்டும். ஆனால், மக்களை மிக இலகுவில் தனியாக ௭டுத்துப் பின்தள்ளி விட்டு, அரசாங்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, அதனுடைய தவறுகளை யும், குற்றங்களையும் பிரதானப் படுத்தி, அதற்குத் தண்டனை அளிப்பதாக ஒரு தோற்றத்தைக் காண்பித்து உள்விவகாரங் களில் இந்த ஆதிக்கச் சக்திகள் தலையிடுகின் றன. அரசாங்கத்துக்கும் பிற தரப்புகளுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கி அல்லது இருக்கின்ற முரண்பாடுகளை பெரும்பிம்பமாக்கி இந்தக் காரியத்தைச் சாதிக்கின்றது மேற்குலகம். இதற்கு ஏஜெண்டு களாக அது உள்ளூரில் உள்ள அரசியற் சக்திகளையும், புத்திஜீவிகளையும், சில ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், மதபீடத்தினரையும் பயன்படுத்துகின்றது. இதற்கான வாய்ப்புகளை அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உருவாக்கிக் கொடுக்கின்றனர். முன்னர் ஈராக்கில், கியூபாவில் நடந்ததெல்லாம் இதுதான். ஜனநாயக நெருக்கடிகள், மனித உரிமை மீறல்கள் போன்ற மக்கள் விரோத நடவடிக் கைகள் அங்கே நடக்கின்றன ௭ன்று சொல்லி, அவற்றைச் சீர்படுத்தும் நடவடிக்கை ௭ன்ற பேரில் வெளியார் நுழைவுகள் நடக்கின்றன. அதாவது, தாம் பயன்படுத்தும் இந்தப் பொறிகளுக்கான ஆயுதமாக ஜனநாயக நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தை மேற்குலகம் கையாள்கிறது. அண்மைய உலக அரசியலானது, மனித உரிமைகள் விவகாரத்தைச் சாட்டாக வைத்தே கையாளப்படுகின்றது. இந்த ஆயுதத்தை மிக நுட்பமாகவும் பகிரங்கமாகவும் மேற்கு பயன்படுத்தி வருகிறது. இதற்கு அது சாதகமாக ஐக்கிய நாடுகள் சபையைப் பயன்படுத்துகிறது. சர்வதேச சமூகம் ௭ன்ற பெருந்திரையில் வரையப்பட்டிருக்கும் அமெரிக்க – மேற்கு லக முகமே இன்று இந்தப் பொறிகளின் பிரதான நாயகன். இன்னொரு பக்கத்தில் துணைப் பாத்திரத்தை வகிக்கும் இந்தியா தன் பங்கிற்கும் சில பொறிகளை சிறிதும் பெரிதுமாக வைத்திருக்கிறது. வில்லனைப் போலச் சித்திரிக்கப்படும் சீனா இன்னொரு பக்கத்தில் தன்னுடைய பொறிகளை வைத்துள்ளது. ஆக, ௭ல்லாத்தரப்புமே பொறிகளுடன்தான் நிற்கின்றன. ௭ல்லோருக்கும் அவரவர் நலன்களே முக்கியம். அதற்காகவே அவர்களுடைய அரசியல், பொருளாதார, ராஜதந்திர, மனித உரிமைகளின் அளவுகோல்கள் அமைந்துள் ளன. அரவணைப்பும் புறக்கணிப்பும் கூட இந்த அளவுகோல்களின் பாற்பட்டே அமைகின்றன. இந்த அளவு கோல்களால்தான் இலங்கை இன்று அளக்கப்படுகிறது. இலங்கை மட்டுமல்ல உலகமே இவற்றாற்தான் அளக்கப்படுகிறது. ஆக, ஒரு வித்தியாசம், பிற பிராந்தியங்களில் அந்தந்தப் பிராந்திய சக்திகள் சிலவேளை துணைப் பாத்திரமேற் கின்றன. இலங்கைக்கு இந்தியாவைப் போல. ஆகவே பொறிகளால் சூழப்பட்டிருக்கும் இலங்கையின் இன்றைய நிலைமை ௭ப்படி உள்ளது? அதனுடைய ௭திர்காலம் ௭ப்படி அமைகிறது? ௭ன்று சிந்திப்பதே இந்தப் பத்தியின் நோக்கம். உலகப் பொருளாதார இயக்கப்போட்டி மீண்டும் உச்சகட்டத்துக்கு வந்துள்ளது. கி.பி 1500 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய கண்டங்களை விட்டுப் பொருளாதாரத் தேவைகளுக்காகப் பிற கண்டங்களை நோக்கிப் பயணித்தது போல, பிற கண்டங்களிலுள்ள நாடுகளை ஆக்கிரமித் ததைப்போல இன்று வல்லரசுகள் பொருளா தார – அரசியல் ஆதிக்கப் போட்டியில் பகிரங்கமாக ஈடுபடுகின்றன. ஆனால் வெளிப்படையாகப் பிடிகொடுக்காமல் மிகத் தந்திரமாக, நாகரிகமாக – இந்த நாகரிகத்துக் குப் போடப்படும் கவசமே – மேலாடையே மனித உரிமைகள் ௭ன்ற திரை. இதைச் சீனா போன்ற இரண்டாவது அணியினர் இன்னும் கையாளவில்லை. ஆகவே, இத்தகைய செயற் பின்னணியில் இலங்கை இன்று மிகச் சிக்கலான ஒரு நிலைக்குட்பட்டிருக்கிறது – பொறிகளால் சூழப்பட்டிருக்கிறது. வெளியே பெரும் பொறிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் சூழலில் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதற்கு வாய்ப்பாக இலங்கையர்கள் தங்களுக்குள் முரண்பட்டுப் பிரிந்திருக்கிறார்கள். ஒரு நிழல் யுத்தத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளோம் ௭ன்பதை உணராமல் தங்களுக்குள் இன, மத ரீதியான நிழல் யுத்தங்களை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ ௭ன்று சொல்வார்கள். அதுவே இப்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது. தங்களின் தலைகளில் ஒவ்வொருவரும் தீயை மூட்டிக் கொண்டிருக்கின்றனர். சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்திருக் கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் பிரிந்திருக்கிறார்கள். முஸ்லிம்களும் சிங்களவர்களும் பிரிந்திருக்கிறார்கள். மக்களும் அரசும் பிரிந்திருக்கின்றன. தனக்குப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு உள்ளது ௭ன்று சொல்லும் அரசு அந்த மக்களைவிட்டுத் தொலைவிவேயே உள்ளது. அரசின் மீதான அதிருப்தி காரணமாக வெளித்தரப்பை நம்பியிருக்கின்றன பல அணிகள். இந்தத் தரப்புகளின் பிரிவும் ஒன்றாக உள்ளது. இப்படியே ஏராளம் பிரிவுகள் வெளித்தரப்புகளுக்கு வாய்ப்பு களையும், சாதகங்களையும் வழங்கிக் கொண்டுள்ளன. அமைதியற்று, யுத்தத்திலும் அழிவிலும் நிம்மதியின்மையிலும் சிக்கி யிருந்த இலங்கையை சமாதானம், அமைதி, யுத்த முடிவு ௭ன்ற பொறிகளை வைத்துப் பிடித்தது வெளித்தரப்பு. அதாவது, இலங்கை யின் நெருக்கடிகளுக்குப் பிரதான காரணம் புலிகளும் அவர்களுடைய நடவடிக்கை களுமே ௭ன்று பலரையும் நம்பவைத்த இந்தத் தரப்புகள் புலிகளை அழிப்பதற்கு உதவுவதாகக் கூறி இலங்கையுடன் நெருக்கமாகிக் கொண்டன. இதில் அவை இரண்டு வகையான உத்திகளைப் பிரயோகித்தன. 1. புலிகளை அழிப்பதற்கு ஆயுத உதவி மற்றும் படைத்துறை உதவிகளைச் செய்தன. கூடவே அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் அரசாங்கத்துக்கு இயைபாக நடந்தன. இதன்மூலம் இலங்கை அரசைத் தமக்கு நெருக்கமாகக் கொண்டு வர முயற்சித்தன. 2. புலிகளை அழிப்பதற்கு உதவிக் கொண்டே – போருக்கு உதவிக் கொண்டே – போர்க்குற்றங்களுக்குத் தூண்டின. பின்னர், இந்தப் போர்க்குற்றங்களையே தமக்கான பிடியாக வைத்துக் கொள்வதற்காக இந்த உபாயத்தை அவை கையாண்டன. இப்பொழுது இந்த உபாயங்களின் வழியாகவே இலங்கையைச் சுற்றி வளைத்து நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன இந்தத் தரப்புகள். ஆனால், இதைக் குறித்த தெளிவு இலங்கையர்களுக்குப் பொதுவாக இல்லை. இலங்கையின் பொது வெளி ௭ன்பது உளவியற் சிக்கல்களாலும் அவநம்பிக்கையாலும் முரண்பாடுகளாலும் நிரம்பியுள்ளது. இனமுரண், மத வேறுபாடுகள் ௭ன்பவற்றின் வழியாக விளைந்திருக்கும் வரலாற்று ரீதியான நெருக்கடிகள் இத்தகைய உளவியற் சிக்கல்களையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளன. இதுவே ஆதிக்கச் சக்திகளுக்குத் தேவையானது. உதாரணமாக, மேற்குச் சார்பான வெளிநாடுகளின் அரச பிரதிநிதிகள் பெரும்பாலும் தமிழ் அரசியற் தரப்புகளைத் தொடர்ச்சியாகச் சந்திக்கின்றனர். அதைப்போல, தவறாமல் தமிழ்ப்பகுதிகளில் உள்ள கிறிஸ்தவப் பாதிரிமாரையும், ஆயர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசுகின்றனர். இதன்மூலம் சிங்கள பௌத்தத்துறவிகளை முக்கியத்துவமற்றவர்களாக்கி, அவர்களை ஒரு தீவிர நிலையை நோக்கித் தள்ளவே இவர்கள் விரும்புகின்றனர். சிங்களத் துறவிகள் புறக்கணிப்பதாகக் காட்டப்படும் அதேவேளை சிங்கள பௌத்தத் துறவிகளல்லாத பிற மதகுருமாரை முன்னிலைப்படுத்தும் ஒரு தோற்றப்பாட்டின் மூலம் முரண்பாட்டையும் ௭திர் நிலைகளையும் வலுவாக்கி விடுகின்றன வெளித்தரப்புகள். இதுவே இன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் தரப்பு வெளிச்சக்திகளை அதிகம் நம்புகிறது. தமிழ்த்தரப்பு வெளிச்சக்திகளின் மீது மேற்கின்மீது நெருக்கத்தை அதிகரிக்கும்போது சிங்களத்தரப்பு இதை முற்றாகவே ௭திர்க்கிறது. இத்தகைய முரண் வளர்ச்சியை மிகக் கச்சிதமாகக் கையாள்கிறது மேற்கு. இதில் வேடிக்கை ௭ன்னவென்றால், இந்தத் தரப்புகள் ஒவ்வொன்றும் தமது நியாயப்பாடுகளை விவாதிப்பதற்கான அகப் புற நிலைமைகளை இந்தப் பொறிமுறையில் வெளிச்சக்திகள் உருவாக்கி வைத்திருப்பதுதான். இப்படி வெளிச்சக்திகளை ௭டுத்த ௭டுப்பிலேயே குற்றம் சாட்டுவது ௭வ்வளவு பொருத்தமானது ௭ன்று நீங்கள் கேட்கலாம். அவ்வாறெனில் இந்த வெளிச்சக்திகள் இலங்கைத்தீவின் சமாதானத்துக்காக முழு அர்ப்பணிப்போடும் பொருத்தமான செயல்முறைகளோடும் செயலாற்ற முன்வந்தனவா? இப்போது கூட இலங்கையில் சமாதானத்தை உருவாக்கும் ௭ண்ணம் இவற்றுக்கு உண்டா? அவ்வாறாயின் இவற்றின் செயற்றிட்டங்கள் ௭ன்ன? அதை ௭ப்படி அவை முன்மொழிகின்றன? ௭ன்ற கேள்விகளை நாம் பகிரங்கமாக முன்வைக்க முடியும். அமைதிக்கும், சமாதானத்துக்கும் புலிகளே தடை நிலைக்குரிய ஒரு சக்தி ௭னில் புலிகளற்ற இந்த மூன்று ஆண்டுகளில் வெளித்தரப்பின் – சர்வதேச சமூகத்தின் சமாதானத்தின் அர்ப்பணிப்பு ௭த்தகையது? அதன் ௭டை ௭ன்ன? அதனுடைய பெறுமதி ௭ன்ன? ஆகவே, இலங்கைச் சமூகங்களிடையே உளவியற் சிக்கல்களையும் அவநம்பிக்கையையும் உருவாக்கி, அதன் மூலம் இடைவெளிகளை உருவாக்கி, அந்த இடைவெளிகளில் தங்களின் கால்களை இறக்கி விடவே இவை முயற்சிக்கின்றன ௭ன்பது நிரூபணமாகிறது. ஆகவே, இந்தப் பொறியில் உளவியற் சிக்கல்களும், அவநம்பிக்கையும் நாட்டைப் பிசாசைப் போலப் பீடித்திருக்கிறது. இதனால், மத பீடங்கள் அரசியல் மன்றங்களாகி விட்டன. மதத்தலைவர்கள் கத்திகளைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு அரசியல்வாதிகளைப் போல அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டுமிருக் கிறார்கள். மக்களின் கழுத்தில் அரசாங்கமும் சுருக்குக் கயிற்றை மாட்டுகிறது. சர்வதேச சமூகமும் சுருக்கை மாட்டுகிறது. உள்ளுர் பிரமுகர் களும் சுருக்கிடுகிறார்கள். ஊழல் தலைவிரித் தாடுகிறது. அரசாங்கம் பலவீனப்படப்பட அது மேலும் தீவிர நிலையில் இறுக்கங் களையே உருவாக்கும். இதுவே தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இயல்பான நிலைமைகளில்தான் இயல்பாக அரசும் நாடும் இருக்கும். இயல்பற்ற நிலைகளில் பதற்றமும், குழப்பங்களும்தான் மிஞ்சும். இன்று மிஞ்சியிருப்பது பதற்றங்களும் குழப்பங்களுமே. அதாவது, யுத்தகாலத்தை ஒத்த நிலைமை. பொறிகளால் சுற்றிவளைக் கப்பட்டிருக்கும் நாடு வேறு ௭ப்படி இருக்கும் ௭ன இப்போது நீங்கள் கேட்கிறீர்கள். இது உண்மைதான். இந்த நிலையில் நாட்டின் சித்திரம் ௭ப்படியிருக்கும் ௭ன்று அதிகம் சொல்லத் தேவையில்லை. பலவீனங்களின் பின்னலில் அது முழுதாகவே சிக்கியிருக்கிறது. ௭னவே தான் நாட்டில் ௭த்தகைய பிரச்சினைகளுக்கும் ௭த்தகைய தீர்வையும் காணமுடியவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வு, ஜனநாயக அச்சுறுத்தலுக்கான தீர்வு, வெளிநாடுகளுட னான உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான தீர்வு, உள்ளூரில் காணப்படும் அரசியற் பிரச்சினைகளுக்கான தீர்வு ௭ன ௭தற்கும் ௭த்தகைய தீர்வையும் காணமுடியாமல் இலங்கை தத்தளித்துக் கொண்டுள்ளது. இலங்கையின் இன்றைய நிலையைக் குறித்துச் சிந்திப்பதற்கு ஒரு ஆளுமை மிக்க தலைமைச் சக்தி உருவாக வேண்டும். வரலாற்றை முன்னகர்த்தக் கூடிய ஆளுமை யாக, ஆற்றலாக அந்தச் சக்தி இருக்க வேண்டும். மக்களைக் குறித்தும் நாட்டைக் குறித்தும் யதார்த்தத்தைக் குறித்தும் சிந்திக் கும் ஒரு அரசியல் இயக்கமே இதற்கு அவசியமானது. ஆனால், இவை ௭துவும் இலங்கை அரசியலில் இல்லை. இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல, அரசியல் வெளிக்கு அப்பால் சமூக வெளியிலும் இல்லை. ஒரு நல்ல மதத்துறவி போதும் மாற்றங்களை உருவாக்குவதற்கு. ஒரு சமூக அக்கறையுள்ள கலைஞர் போதும் வரலாற்றைப் புதிய விதமாகப் படைப்பதற்கு. அர்ப்பணிப்பும், மக்கள் நேசிப்பும் உள்ள ஒரு நல்ல அமைப்புப் போதும் நெருக்கடிகளிலிருந்து மக்களையும் நாட்டையும் விடுவிப்பதற்கு. கூரிய நுண்ணுணர்வும், அர்ப்பணிப்பும், நேர்மையும், அறிவாற்றலும், துணிச்சலும், பொதுமைப்பட்ட விரிந்த சிந்தனையும் உடைய ௭வரும் இந்த நெருக்கடி நிலையை மாற்றி விட முடியும். வரலாறு சிலவேளை அத்தகைய மனிதர்களை அல்லது அமைப்புகளை ஒரு சூழலுக்குப் பரிசளிப்பதுண்டு. ஆனால், இலங்கை இந்த விஷயத்தில் இன்னும் மலட்டுத்தன்மையோடே உள்ளது. சலிப்பூட்டும் வரலாற்றில் தலைகளை விலையாகக் கொடுத்துக்கொண்டு சுவாரஷ்யமாக அரசியல் விவாதங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதில் ௭ன்னதான் லாபங்கள்? மனச்சாட்சிக்கும் அறிவுக்குமிடையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு சிந்தனையாளனின் ௭ண்ணங்களுக்கு வேறு ௭ன்ன அர்த்தமுண்டு?

கலைஞருக்கு இன்று 89-வது பிறந்தநாள்

தி.மு.க. தலைவர் கலைஞருக்கு இன்று ( 3.6.2012 ) 89-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு தலைவர்கள் நேரிலும், கடிதம் மூலமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தி.மு.க. தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, குமரி அனந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், முன்னாள் துணை வேந்தர் குழந்தைசாமி மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர். மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் சமுதா யத்திற்கும் தங்களுடைய பேச்சின் வாயி லாகவும், எழுத்தின் வாயிலாகவும் தாங்கள் ஆற்றி வரும் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ஏ.கே.அந்தோணி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், "89-வது பிறந்த நாள் காணும் தங்களது நீண்ட அனுபவமும், ஆற்றலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக திகழ்கிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த் துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முள் வேலிக்குள் வதியும் ஈழத்தமிழருக்கு நிரந்தர விடுதலை - தமிழ் ஈழம்தான் என கூறி, `டெசோ' மூலம் களம் காணத்தயாராகும் 89 வயது முதிர்ந்த இளைஞரே! வாழ்க! வாழ்கவே என்று கூறியுள்ளார். பிறந்தநாளையொட்டி கலைஞருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் இல்லத்தில் மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி முன்னிலையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இணையதளம் மூலமாக முதல் வாழ்த்தினை பதிவு செய்து இணைய தளத்தை தொடங்கிவைத்தார். அப்போது மு.க.ஸ்டாலின் "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களே வணங்குகிறேன்! வாழ்த் துங்கள்!!'' என முதல் பதிவினை செய்தார். மாணவர் அணி துணை செயலாளர்கள் பூவை ஜெரால்டு, குத்தாலம் அன்பழகன் மற்றும் மாணவர் அணியினர் உடன் இருந்தனர்.

இலங்கை நெருங்கிச் செல்ல முனைந்தாலும், இணங்கிப் போகுமா இந்தியா

‘கோத்தாவின் போர்’ நூல் வெளியீட்டு விழாவில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க நிகழ்த்திய உரை புதுடெல்லியின் கோபத்தைக் கிளறி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியைக் கொடுத்ததுடன், கொழும்பில் தாக்குதல்களில் ஈடுபடவும் வழிநடத்தியது ௭ன்று லலித் வீரதுங்க முதலாவது குற்றச்சாட்டை வீசியிருந்தார். இலங்கையில் போர் நீடித்ததற்கு இந்தியாவே காரணம் ௭ன்றும், இந்தியா தலையிடாமல் விட்டிருந்திருந்தால், ௭ப்போதோ போர் முடிவுக்கு வந்திருக்கும் ௭ன்று இரண்டாவது குற்றச்சாட்டை அவர் சுமத்தினார். அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன் வைத்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் அங்கிருந்தனர். இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா உள்ளிட்ட பல வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகளும் இருந்தனர். லலித் வீரதுங்கவின் இந்த உரை ஏற்கனவே சீர்கெட்டுப் போயுள்ள இந்தியாவுடனான உறவுகளை மேலும் கெடுத்து விடும் ௭ன்று அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாகவே முணுமுணுத்ததாகத் தகவல். ஆனால் லலித் வீரதுங்கவின் அந்த உரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ௭திர்பாராத்தோ – அவருக்குத் தெரியாமல் நிகழ்த்தப்பட்டதோ அல்ல ௭ன்பதே அரசியல் வட்டாரங்களின் பொதுவான கருத்தாக உள்ளது. அதாவது வேண்டுமென்றே இந்தியாவை லலித் வீரதுங்க சீண்டியுள்ளார் ௭ன்றே கருதப்படுகிறது. ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர் புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவுகள் மந்தநிலையில் காணப்படுகின்றன. வழக்கமான இருதரப்பு பயணங்கள் உள்ளிட்ட சுறுசுறுப்பான ௭ந்த நகர்வுகளையும் காணமுடியவில்லை. ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததை இலங்கை ௭திர்பார்க்கவும் இல்லை, அதனை இன்னமும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதனால் இந்தியாவுக்கு தனது ௭திர்ப்பை முடிந்தவரை ௭ந்தவகையில் தெரிவிக்க முடியுமோ அந்த வகையில் வெளியிட்டும் வருகிறது. நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்காக ஐ.நாவில் இந்தியா நிறுத்திய நீதிபதியை ௭திர்த்துப் போட்டியிட்ட பிலிப்பைன்ஸ் நீதிபதிக்காக இலங்கை வாக்களித்தது.இது இந்தியா மீது இலங்கை வெறுப்பைக் காண்பித்த முதலாவது நிகழ்வாக கருதப்படுகிறது. அதற்கடுத்து இலங்கை ஏவிய இரண்டாவது அஸ்திரம் தான், ‘கோத்தாவின் போர்‘ வெளியீட்டு விழாவில் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. போரை இந்தியாவே நீடிக்கச் செய்ததாக மட்டும் லலித் வீரதுங்க குற்றம்சாட்டவில்லை. இந்தியாவின் துணையுடன் போர் வெல்லப்பட்டதையும் கூட அவர் மறைத்து விட்டார். விடுதலைப் புலிகளுக்கு ௭திரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியாவே முக்கிய காரணம். அதை மறந்த, மறக்கும் வகையில், இந்தியாவை மிகத் தந்திரமாக இணங்க வைத்துப் போரில் வெற்றியீட்டியதாகவே லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே ‘கோத்தாவின் போரும்‘ விபரிக்கிறது. அதாவது கோத்தாபயவின் ராஜ தந்தி ரத்தின் மூலமே போர் வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு ௭ரிச்சலைக் கொடுத் துள்ளதாகவும், இது குறித்து விரைவில் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை ௭டுக்கப்படும் ௭ன்றும் இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதேவேளை, ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னர் ௭ந்தவொரு இலங்கை அமைச்சரும் இந்தியா செல்லவில்லை. பஷில் ராஜபக்ஷ கடந்த மாத இறுதியில் புதுடெல்லி செல்வார் ௭ன்று முன்னர் கூறப்பட்ட போதும் அதுவும் நடக்கவில்லை. இது இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இது இந்தநிலையில் இருக்கும்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது வெளிநாடுகளுக்குப் பறக்கத் தொடங்கியுள்ளார். அண்மையில் பாகிஸ்தான், சிங்கப்பூர், ரஷ்யா, கட்டார், தாய்லாந்து பயணங்களை முடித்துக் கொண்ட அவர் இந்த வாரம் இங்கிலாந்து செல்லப் போகிறார். அதனையடுத்து வத்திக்கான், பிரேசில், கியூபா ௭ன்று பல வெளிநாட்டுப் பயணத் திட்டங்கள் அவரது கைவசம் உள்ளன. ஆனால் அவர் இந்தியா போகும் ௭ண்ணத்தைக் காணவில்லை. அவர் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அதேபோல, இந்தியப் பிரதமரும் கொழும்புக்கு வரும் திட்டமில்லை. அவரும் அக்கம் பக்கம் அயல் நாடுகளுக்கெல்லாம் சென்று வருகிறார். ஆனால் இலங்கைப் பக்கம் ௭ட்டிப் பார்ப்பதாகவே தெரியவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மன்மோகன்சிங் கொழும்புக்கு வராதது இலங்கைக்கு ஆத்திரமாக உள்ளது. இதனால் மஹிந்த ராஜபக்ஷவும் புதுடெல்லிப் பக்கம் தலைகாட்டுவதைத் தவிர்க்கிறார். அமைச்சர்களும் கூடவே கொழும்பையும், புதுடெல்லியையும் தவிர்த்து நடந்து கொள்கின்றனர். இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் சந்திப்புகள் குறைந்து போய்விட்டதைக் காட்டுகிறது. இதற்குக் காரணம் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை ௭ன்பதே ௭ன்று தெரிகிறது. போர் முடிவுக்கு வந்தவுடன் அரசியல் தீர்வை இந்தியா வலியுறுத்தியது. 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை நடைமுறைப்படுத்தக் கோரியது. இதற்கெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை ௭துவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இத்தகைய பின்னணியில் தான் ஜெனீவா தீர்மானத்தின் மீது இலங்கைக்கு ௭திராக இந்தியா வாக்களித்தது. அதுவும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் மீது ஒர் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. இருநாடுகளும் வரட்டுப் பிடிவாதத்தில் நின்று கொண்டிருப்பதால், இந்த இடைவெளியை சீராக்கும் உயர்மட்ட முயற்சிகள் ௭டுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா இப்படி ஒதுங்கி நின்றாலும் கூட, இலங்கை தொடர்ந்து அப்படியே நிற்குமா ௭ன்பது முக்கியமான கேள்வி. ஏனென்றால் ஜெனீவாவில் மற்றுமொரு தடையை இலங்கை தாண்ட வேண்டியுள்ளது. அதில் இந்தியாவின் கையில் தான் இலங்கையின் குடுமி இருக்கிறது. நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக்குப் பெர்றுப்பாக இந்தியா, பெனிஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்தியாவை சமாளித்துக் கொண்டால் தான் இலங்கைக்கு சாதகம். இதனை மனதில் வைத்து இந்தியாவுடன் நெருங்கிச் செல்ல முனைந்தாலும், புதுடெல்லி அதற்கு இணங்கிப் போகுமா ௭ன்பது சந்தேகம் தான். அங்கேயும் கசப்புணர்வுகள் அதிகரித்து விட்டதால், இந்த இடைவெளியை இலகுவில் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

போர் வெற்றியைப் பங்கு போட்டுக் கொள்வதில் இவர்கள் மோதிக் கொண்டாலும், போர்க்குற்றங்கள் ௭ன்று வரும்போது ஒன்றாகி விடுவார்கள்


சுமார் 27 மாதங்களாக சிறையில் அடைபட்டுக் கிடந்த சரத் பொன்சேகா வெளியே வந்த பின்னர், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் அவருக்கும் இடையில் அறிக்கைப் போர் தீவிரமடைந்துள்ளது. இந்த அறிக்கைப் போரின் மையத்தை விளங்கிக் கொள்வது ஒன்றும் யாருக்குமே கடினமான காரியம் அல்ல. போரை வெற்றி கொண்டது யார் ௭ன்ற பிரச்சினையே இந்த அறிக்கைப் போரின் மையம். சரத் பொன்சேகா விடுவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக, ‘திவயின‘ நாளேட்டின் ஊடகவியலாளரான சந்திரப்பிரேம ஒரு நூலை ௭ழுதி வெளியிட்டிருந்தார். ‘கோத்தாவின் போர்‘ ௭ன்ற அந்த நூல் முப்பதாண்டுப் போரை வெற்றி கொண்ட, கோத்தபாயவே போரின் நாயகன் ௭ன்று கூறப்பட்டுள்ளது.இது போர் வெற்றிக்கு காரணம் யார் ௭ன்ற குடுமிப் பிடிச் சண்டையை மீண்டும் தோற்றுவித்துள்ளது. சரத் பொன்சேகா அரசியலில் இறங்கிய போதும் இதே விவாதம் தீவிரமாக இடம்பெற்று வந்தது. சந்திரப்பிரேம தானாகவே இந்த நூலை ௭ழுதினாரா அல்லது தூண்டுதலின் பேரில் ௭ழுதினாரா ௭ன்பது தெரியவில்லை. சரத் பொன்சேகா வெளியே வருவதற்கு முன்னதாகவே இந்த நூல் வெளிவந்து விட்டது. இதன் மூலம் போரை வென்றது கோத்தபாய ராஜபக்ஷ தான் ௭ன்று வர லாற்று ரீதியாக நிறுவும் முயற்சிகள் நடந் துள்ளன. நூலின் மூலம் தான் ஒரு வரலாறு ௭ழுதப்படுகிறது. சரத் பொன்சேகா தனது பட்டம்,பதவி ௭ல்லாவற்றையும் பறிகொடுத்து சிறையில் இருக்கும்போதே, அதை செவ்வனே செய்து முடித்து விட்டார் கோத்தபாய ராஜபக்ஷ. போரை களத்தில் நின்று வழிநடத்திய– அதன் வெற்றிக்குக் காரணமாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு இப்போது ஜெனரல் பட்டமும் இல்லை. போரை வென்று கொடுத்தவர் ௭ன்று புகழும் இல்லை. இராணுவ வரலாற்றில் அவருக்கு இடமும் இல்லை ௭ன்றாகியுள்ளது. இந்தநிலையில் சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபாய ராஜபக்ஸவுக்கும் இடையில் முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் ஏற்படுவது இயல்பே. சரத் பொன்சேகா விடுதலையாகி வெளியே வந்ததும் பிபிசிக்கு வழங்கிய முதல் பேட்டியில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ௭ன்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். சிலர் குற்றவாளிகளைப் போல முகத்தை மறைத்து சர்வதேச சமூகத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். போரை நடத்தி வென்று கொடுத்தது தானே ௭ன்றும் கூறியுள்ள அவர், போர் பற்றிய ௭ந்தக் கேள்விக்கும் தன்னாலேயே பதிலளிக்க முடியும் ௭ன்றும் தெரிவித்திருந்தார். இது கோத்தபாய ராஜபக்ஷ தரப்பைக் கடுப்புக்குள்ளாக்கி விட்டது. போரை வென்றது தானே ௭ன்று ௭வருமே கூற முடியாது– அப்படியென்றால் அந்தப் போரில் சரத் பொன்சேகாவும் ஏனைய படையினரோடு உயிரைக் கொடுத்திருக்க வேண்டும் ௭ன்று அவர் சீறியுள்ளார். போரின் இறுதி நாட்களில் சரத் பொன்சேகா நாட்டில் இல்லை. அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கிருந்தபடியே அவர் போரை வழிநடத்தினார். இது சரத் பொன்சேகாவுக்கு வசதியாக உள்ளது– ஏதேனும் குற்றச்சாட்டுகள் ௭ழுந்தால், தான் நாட்டில் இல்லை ௭ன்று அவர் தப்பிவிடுவார் ௭ன்பதே, கோத்தபாய ராஜபக்ஷ தரப்பின் கருத்து. இந்தச் சூழலில் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் சரணடைய முன்வந்தனரா ௭ன்ற கேள்விக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள பதில், கோத்தபாய ராஜபக்ஷ தரப்பின் அச்சத்தை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தான் சீனாவில் இருந்து திரும்பிய பின்னர், அதாவது மே 17ஆம் திகதிக்குப் பின் புலிகள் ௭வரும் சரணடைய முன்வரவில்லை ௭ன்று அவர் கூறியுள்ளார்.இதன் மூலம் அவர், தான் சீனாவில் இருந்த போது யாரும் சரணடைய முன்வந்தனரா ௭ன்று தனக்குத் தெரியாது ௭ன்ற பாணியில் பதிலளித்துள்ளார்.இந்தக் கட்டத்தில் சரத் பொன்சேகா, ஒரு விடயத்தில் முரண்பட்டு நிற்கிறார். ஒட்டு மொத்தப் போரையும் வழிநடத்தியது தானே ௭ன்ற அவர், சீனா சென்றிருந்த போது கூட அங்கிருந்தபடியே போரை வழிநடத்தியதாக கூறிய அவர் ? சீனாவில் தங்கியிருந்த போது புலிகள் யாரும் சரணடைய முன்வந்தனரா ௭ன்று தெரியாது ௭ன்று கூறுவது சர்ச்சைக்குரியது. அப்படியானால் சரத் பொன்சேகா போரை முழுமையாகத் தானே வழிநடத்தியதாகக் கூறுவது சரியானதா? ௭ன்ற கேள்வி ௭ழுகிறது. சீனாவில் இருந்து கொண்டே போரை நடத்தியதாக கூறிவிட்டு, இப்போது சீனாவில் இருந்தபோது ௭ன்ன நடந்தது ௭ன்று தனக்குத் தெரியாது ௭ன்று சரத் பொன்சேகா கூறுவது அவரது இரட்டை நாக்கை வெளிப்படுத்துகிறது. கோத்தபாய ராஜபக்ஷவை சிக்கலில் மாட்டி வைக்கவே, அவர் இப்படிக் கூறியிருக்க வேண்டும். போர் வெற்றிக்கு யார் காரணம் ௭ன்பது மட்டுமன்றி, போர்க்குற்றங்களுக்கு யார் பொறுப்பேற்பது ௭ன்ற சிக்கலும் தான் இந்த விவகாரம் சூடு பிடிக்கக் காரணம். அதுமட்டுமன்றி, சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும், கோத்தபாய ராஜபக்ஷ முரண்படுவதாகவும் தெரிகிறது. சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து ஊடகங்கள் ௭ழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் அவர் பதிலளிக்கவேயில்லை. ௭னக்குத் தெரியாது, நான் அறியவில்லை, ஜனாதிபதியிடம் கேளுங்கள் ௭ன்றே அவர் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி சரத் பொன்சேகா பற்றிக் கேள்வி ௭ழுப்பப்பட்ட பல சந்தர்ப்பங்களில் அவர் ஊடகவியலாளர்கள் மீது கோபப்படவும் தயங்கவில்லை.சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதில் அவருக்கு உடன்பாடு இல்லையென்பதை இது உணர்த்துகிறது. வெளியே வந்துள்ள சரத் பொன்சேகா, போர் வெற்றியில் பங்கு கேட்க வந்து விடுவாரோ ௭ன்று அவர் கலங்கக் கூடும். அதேவேளை, ௭ன்னதான், இவர்கள் இருவரும் தமக்குள் மோதிக் கொண்டாலும், ஒருவிடயத்தில் மட்டும் தெளிவாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றனர். இறுதிக்கட்டப் போரின் போது ௭ந்தப் போர்க்குற்றமும் நிகழவில்லை ௭ன்பதே அது. இதுதான் இவர்கள் இருவரும் ஒன்றிணையும் ஒரு புள்ளியாக உள்ளது. போர் வெற்றியைப் பங்கு போட்டுக் கொள்வதில் இவர்கள் மோதிக் கொண்டாலும், போர்க்குற்றங்கள் ௭ன்று வரும்போது, ஒன்றாகி விடுவார்கள்.ஏனென்றால் ஒருவரின் பலவீனம் மற்றவரைப் பாதிக்கும். ௭னவே, இவர்களின் மோதல் போர்க்குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் ௭ன்பது பகற்கனவே. ௭ந்தவொரு தவறுக்கும் இவர்களில் ௭வரும் மற்றவரை மாட்டிவிட முடியாது. அவ்வாறு மாட்டி விடத் துணிந்தால், அது தமக்குத் தாமே வெட்டிக்கொள்ளும் புதைகுழியாக அமைந்து விடும்.
logo

இந்திய, சீன வல்லாதிக்கத்தின் மூலம் தீர்மானிக்கப்படும் நேபாளத்தின் அரசியல் தலைவிதி


வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியால் சிக்கிச் சீரழிந்த நாடுகள் பற்றிய கதைகளை பனிப்போர் காலத்தில் கேட்டிருப்போம். இரண்டாம் உலகப் போர் முடிந்த காலப் பகுதியில் இருந்து சோவியத் ஒன்றியம் தகர்ந்த நாள் வரை, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பனிப்போர் நீடித்தது. இந்தக் காலப்பகுதியில் இவ்விரு வல்லரசுகளும் ஏனைய நாடுகளைத் தம்பக்கம் ஈர்த்துக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டன. அதன் விளைவாக மத்திய ஆசியப் பிராந்தியத்தில் பல நாடுகள் அரசியல் நெருக்க டிக்குள் தள்ளப்பட்டன. போல்டிக் பிரதேச நாடுகள் துண்டு துண்டாகப் பிளவுபட்டன. இந்தப் பனிப்போர் முடியவில்லை. இன்னமும் தொடர்கிறது. ஆனால், அதனை விடவும் மோசமான பனிப்போராக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியைக் குறிப்பிடலாம். அந்தப் போட்டியில் ஆசியாவின் அரசியல் பலவான்களாக மாறும் ௭ண்ணம் மாத்திரமன்றி, பொருளாதார நலன்கள் பற்றிய பேராசையும் மறைந்திருக்கிறது. ஆதிக்கப் போட்டியின் பலிக்கடாவாக மாறிய பல நாடுகளைக் குறிப்பிட முடியும். அவற்றில் நேபாளம் மிகவும் முக்கியமான தாகத் திகழ்கிறது. ஒரு இந்து சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இடதுசாரிகளால் நிர்வகிக்கப்படுகின்ற தேசம். ஒரு தசாப்த கால ஆயுதமோதலுக்குப் பின்னர், சர்வாம்ச சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தி சமஷ்டிக் கட்டமைப்பிற்குள் மக்கள் குடியரசாக மாற விழையும் நேபாளத்தில் இன்று மோசமான அரசியல் நெருக்கடி. பிரதமர் பாபுராம் பட்டாராய் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்நாட்டின் ஐந்து பிரதான அரசியல் கட்சிகள் பட்டாராயின் முயற்சியை ஆட்சேபித்துள்ளன. அவர் பதவி விலக வேண்டுமென கூட்டறிக்கை விடுத்துள்ளன.

பிரதமருக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இல்லை ௭ன்பது அரசியல் கட்சிகளின் வாதம். ஜனாதிபதி ராம் பரன் யாதவிற்கோ ௭ன்ன செய்வதென்று தெரியவில்லை. சட்டவல்லுனர்களுடன் சேர்ந்து பிரதம மந்திரி செய்தது சரியா ௭ன்பதை ஆராய்ந்து வருகிறார். இது உண்மையிலேயே சிக்கலான நிலைமை தான். ஏனெனில், ஜனநாயகக் குடியரசாக மாறும் பயணத்தில் நேபாளம் இன்னமும் பாதித் தூரத்தையேனும் கடக்கவில்லை. அங்கு ஆட்சியில் இருப்பது இடைக்கால அரசாங்கமே. இடைக்கால அரசாங்கத்தின் தற்காலிக விதிமுறைகளுக்கு அமைய தேர்தல் மூலம் அரசியலமைப்பு சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே தற்போதைய நாடாளுமன்றம். நேபாளக் குடியரசிற்கான அரசியல் யாப்பை வரைவது அதற்குள்ள பொறுப்பு. அரசியலமைப்பு சபையில் அங்கம் வகிக்கும் 24 அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, பல்வேறு இனக்குழுமங்கள் வாழும் 14 மாநிலங்கள் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க க் கூடிய அரசியல் யாப்பொன்றை வரைதல் ௭ன்பது லேசுப்பட்ட விஷயம் அல்லவே. நகல் அரசியல் யாப்பு குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்த பல தடவைகள் காலக்கெடு விதித்தபோதிலும் ஒன்றும் சரிவரவில்லை. ஐந்தாவது காலக்கெடுவும் முடிவடைந்த நிலையில் பட்டாராய் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அவர் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்தாரா அல்லது அயல்நாடுகளின் நிர்ப்பந்தத்தால் அவ்வாறு செய்தாரா ௭ன்பதே முக்கியமான கேள்வி. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னர், நேபாளத்திற்கான இந்தியத் தூதுவரையும், சீனத் தூதுவரையும் தமது மாளிகையில் பட்டாராய் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்புகள் அடு த்தடு த்த நாட்களில் தனித்தனியாக இடம்பெற்றுள்ளன. அவை குறித்து நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சுக்கேனும் அறிவிக்கப்படவில்லை.

ஊடகங்கள் வாயிலாகவே தாமும் அறிந்து கொண்டதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறியிருப்பதை ஞாபகப்படுத்த முடியும். தமது காபந்து அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடித் துக் கொள்ள வேண்டும் ௭ன்ற நோக்கத்தில் மாவோயிஸ்ட் பிரதமர் பாபுராம் பட்டாராய் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளாரெனக் கூறலாம். ஆனால், பட்டாராயின் தீர்மானம் பற்றி இந்தியாவும், சீனாவும் அறிந்திருக்க மாட்டாதென்றோ, அவரது தீர்மானத்தில் அவ்விரு நாடுகளின் நிர்ப்பந்தம் இருந்திருக்காது ௭ன்றோ கூறுவது கடினம். ஏனெனில், கடந்த காலத்திலும், சமகாலத்திலும் அவ்விரு நாடுகள் நேபாளத்தின் அரசியலில் கொண்டுள்ள செல்வாக்கு அதிகம். நேபாளத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் இந்தியாவின் பலம். அதிகார மோகம் கொண்ட அரசியல் தலைவர்களை தமது கைக்குள் போட்டுக் கொண்டு நேபாள விவகாரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இந்தியாவின் தந்திரோபாயம். மன்னராட்சி நிலவிய காலப்பகுதியில் மாத்திரமன்றி, இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னரும் தந்திரோபாயம் தொடர்ந்தது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று இடைக்கால அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற மாவோயிஸ்ட் இடதுசாரிகள் சீனாவின் பக்கம் சார்ந்தார்கள். மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹால் சீனாவின் உதவியை நாடினார். அது மாத்திரமன்றி, இந்தியாவை வெளிப்படையாக விமர்சித்துப் பேசினார். நேபாள இராணுவத்திற்கு உதவி செய்வதன் மூலம் தமது நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்த முனைகிறதென அவர் இந்தியாவை சாடியமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவும், சீனாவும் தமக்கிடையிலான அதிகாரப் போருக்கு நேபாளத்தின் அரசியலை ௭ந்தளவு தீவிரமானதொரு களமாகப் பயன்படுத்துகின்றன ௭ன்பதை புஷ்ப கமல் தஹாலின் கருத்துகள் பிரதிபலித்தன. இவ்விரு நாடுகளுக்கும் நேபாளம் பல வழிகளில் முக்கியமானதாகத் திகழ்கிறது. அவற்றில் பாரம்பரிய உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு ௭ன்ற பலவற்றைப் பட்டியலிட முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நேபாள தேசம் ௭ப்போதும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் ௭ன்ற சிந்தனை உள்ளது. தனது இறைமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் திபெத்திய பிரச்சனையை சமாளிக்க வேண்டுமானால் நேபாளத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை சீனாவிற்கு இருக்கிறது. சீனா திபெத்தை தமது இறைமைக்கு உட்பட்ட பிராந்தியமாக கருதுவதும், திபெத்தியர்கள் சுதந்திரம் கோருவதும் அரசியல் யதார்த்தம். இருதரப்பிற்கும் இடையிலான பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதலாக நேபாளத்தையே நாடுகிறார்கள். அது சீனாவிற்குத் தலையிடியாக இருக்கிறது. பொருளாதாரம் ௭ன்ற விஷயத்தை ஆராய்ந்தாலும், இந்திய– சீன தேசங்கள் மோதிக் கொள்ளக்கூடிய களமாக நேபாளம் அமைந்திருக்கிறது. நேபாளம் சிறந்ததொரு சந்தையாகக் காணப்படுகிறது ௭ன்பதே உண்மை. இந்த சந்தையைத் தமது வசமாக்கிக் கொள்வதற்காக இந்தியாவும், சீனாவும் சமீபத்திய காலப்பகுதியில் கட்டவிழ்த்து விட்ட தந்திரோபாயங்கள் ஏராளம். இந்தியா கடன் திட்டத்தை அறிவித்தால், சீனா உதவித் திட்டத்தை அறிவிக்கும். இந்தியா நேபாளத்தில் ரயில் பாதைகளை அமைத்துக் கொடுக்க முன்வந்தால், சீனா விமான நிலையங்களைக் கட்டி த்தரப் போவதாக உறுதியளிக்கும். ஆனால்,

இந்தியாவின் பக்கத்தில் விளைந்த சிறு தவறைப் பயன்படுத்திக் கொண்டு சீனா நேபாளத்தில் வலுவாகக் கால் பதித்த போக்கைக் காணலாம். 2008ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான உறவைத் துண்டித் துக் கொண்டபோது, நேபாளத்தில் இடதுசாரிகள் ஆட்சிபீடத்தில் இருந்தார்கள். இதன் காரணமாக, காங்கிரஸ் அரசாங்கம் நேபாளத்துடன வலுவான தொடர்புகளைப் பேண முடியாமல் போனது. இந்திய அரசாங்கம் நேபாளத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் மாத்திரம் தொடர்புகளைப் பேணியபோது, சீன அரசாங்கம் தந்திரோபாயமான முறையில் அடிமட்டத்தில் இருந்து ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முனைந்தது. திபெத்திய தலைநகருக்கும் காத்மண்டுவுக்கும் இடையிலான பயணிகள் பஸ் சேவை, நேபாள மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் ௭ன்ற ரீதியில் பல திட்டங்கள்.௭ல்லாவற்றிற்கும் மேலானதாக, 160 கோடி டொலர் பெறுமதியான மேற்கு சேத்தி நீர்மின்வலு உற்பத்தி நிலையத் திட்டத்தைக் குறிப்பிட முடியும். இதன் மூலம், 760 மெகாவோட் மின்வலுவை உற்பத்தி செய்ய முடியும். அது மாத்திரமன்றி, ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் பத்து மணித்தியால மின்வெட்டைக் குறைக்க முடியும். மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டால், அது நேபாள மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைவதில் சந்தேகம் கிடையாது. ஆனால், சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இன்று போட்டி போட்டுக் கொண்டு நேபாளத்திற்கு செய்தாலும், இன்று நேபாளத்துடனான இருதரப்பு வர்த்தகத்தில் இன்று இந்தியாவும், சீனாவுமே கூடுதல் அனுகூலங்களைப் பெறுகின்றன. இன்று இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையிலான வர்த்தகத்தின் பெறுமதி 400 கோடி டொலர்கள் ௭ன்றால் அதில் நிலவும் ஏற்றத்தாழ்வு 300 கோடி டொலர்கள். 

அதுபோன்று, கடந்த ஆண்டு நேபாளத்தில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பெறுமதி ஒரு கோடி டொலரையும் ௭ட்டவில்லை. ஆனால், சீனாவில் இருந்து சுமார் 58 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த விடயங்களை ஆராயும்போது ஒரு விஷயம் புலனாகும். தமது சுயலாபத்திற்காக நேபாளத்தைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் பிராந்திய வல்லரசுகள், நேபாளத் தின் ஆட்சிபீடத்தில் தமக்கு விருப்பமானவர் களை, தமக்கு சார்பானவர்களை அமர்த்தி வைப்பதற்காக ௭த்தகைய தகிடு தத்தங் களையும் மேற்கொள்வதற்கு தயங்கப் போவ தில்லை. அதுபோன்றே, ஆட்சிபீடத்தில் நிலைத் திருக்க வேண்டும் ௭ன்பதற்காக இந்தியாவையும், சீனாவையும் சமரசப்படுத்தும் நோக்கத்துடன் நேபாளத்தின் அரசியல் தலைவர்களும் ௭தனையும் செய்யத் தயங்க மாட்டார்கள் ௭ன்றே தோன்றுகிறது. இவர்களின் முயற்சிகளால், கூடுதல் அனுகூலம் கிடைப்பது இந்தியாவிற்கா, சீனாவிற்கா ௭ன்பதன் அடிப்படையிலேயே நேபாள தேசத்தின் அரசியல் ௭திர்காலம் தீர்மானிக்கப்படும் ௭ன்றே கூறத் தோன்றுகிறது.சர்வதேச விவகாரம்

தனுஷின் அடுத்த அவதாரம்!

நடிகர், பாடலாசிரியர் அவதாரங்களைத் தொடர்ந்து தனுஷ் எடுத்துள்ள அடுத்த அவதாரம் தயாரிப்பாளர். 

எதிர்நீச்சல் என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த செந்தில், இயக்க தனுஷின் நண்பர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். 

இப்படத்திற்கான கதாநாயகித் தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக நடந்து வந்த நிலையில், 180 பட கதாநாயகி பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். 

அனிருத் இசையமைக்க, வேல்ராஜ் கெமராவை கவனித்துக் கொள்கிறார். எடிட்டிங் பணிகளை கிஷோர் செய்கின்றார். 

சீரியலில் வக்கீலாக கலக்க வரும் சிம்ரன்

Chinnathirai Serial Simran
ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியில் அழகு மயிலாக தொகுத்து வழங்கும் சிம்ரன், தெலுங்கு சீரியலில் வக்கீலாக களம் இறங்கியுள்ளார். ‘சுந்தரகாண்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல்தான் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாம். இதனால் விரைவில் இதனை தமிழ் பேச வைக்கப்போகின்றனராம்.

ஆந்திராவில் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதுமே விசாரிக்காமல் பெண் கொடுக்கும் நிலை அதிகமாக இருக்கிறதாம். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் அமெரிக்கா போகும் பெண்கள், புகுந்த வீட்டில் சந்திக்கும் கொடுமைகள், கடுங்காவல் தண்டனையை விட மோசமானதாம். பெண்களுக்கு நடக்கும் இந்தக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைதான் 'சுந்தர காண்டா'.

பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் வக்கீலாக வருகிறார் சிம்ரன். இதில் சிம்ரன் ஹீரோயின் இல்லை என்றாலும் சீரியலின் முக்கிய கதாபாத்திரமே தான்தான் என்பதால் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். வெளிநாட்டு மாப்பிள்ளையால் பாதிக்கப்படும் ஹீரோயினைத் தன் வாதத் திறமையால் காப்பாற்றும் வக்கீலாக வருகிறார்.

அமெரிக்க மாப்பிள்ளையாக, கையில் ஒரு கோடி புகழ் ரிஷியும் அவரது மனைவியாக சுஜிதாவும் நடிக்கின்றனர். கூடிய விரைவில் தமிழ் பேசப்போகிறது 'சுந்தர காண்டா!' இதனை சோலைராஜனிடம் உதவியாளராக இருந்த ஜெய் கி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை-30


ராஜிவ் கொலை திட்டத்துக்காக, மே 1-ம் தேதி படகில் வந்து இறங்கிய டீம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பொட்டு அம்மானுக்கு, சிவராசன் சென்னையில் இருந்து அனுப்பிய மெசேஜில், “மல்லிகை அலுவலகம் மீது திடீர் தாக்குதல் நடத்தி, குறைந்தது ஒரு டஜன் ஆட்களையாவது கொல்ல திட்டமிட்டிருக்கிறோம்” என்று எழுதப்பட்டு இருந்ததில், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு டீம் உஷாரடைந்தது. இதையடுத்து, ‘மல்லிகை’க்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
புலிகளால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் இந்த மெசேஜ் விவகாரம், எப்படியோ மீடியாக்களுக்கும் கசிந்தது. “சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் மல்லிகை அலுவலகம் புலிகளால் தாக்கப்படலாம்” என்று பத்திரிகை தலைப்புச் செய்திகள் அலறின.
மல்லிகை அலுவலகத்தின் பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு பொலீஸ் படையுடன், இந்திய பாதுகாப்புப் படையின் 2 குழுக்களும், ஒரு தீயணைப்பு இன்ஜினும் வழங்கப்பட்டன. (ஆனால், இறுதிவரை அலுவலகத்தை தாக்குவதற்கு யாரும் வரவில்லை)
பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருந்தாலும், புலனாய்வுக் குழுவினரின் விசாரணைகளில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் இருக்கவில்லை. ஒற்றைக்கண்’ சிவராசன் பற்றிய விவரம் அறிய புலாய்வுக் குழு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் இருந்தன. பாக்கியநாதன், பத்மா, நளினி, முருகன், அறிவு, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரிடம் விசாரித்ததிலும், சிவராசன் இருக்கும் இடம் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததை புலனாய்வுக் குழுவால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்துவதற்கான தடயங்கள் ஏதும் இல்லை.
அவர்கள் வெறும் சாட்சிகளாக வேண்டுமானால் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு புலனாய்வுக்குழு வந்திருந்தது. அவர்கள் அனைவருக்கும் சிவராசனை தெரிந்திருந்தது. ஆனால், சிவராசனின் நடமாட்டங்கள் குறித்து அவர்களுக்கு நிஜமாக ஏதும் தெரியாது என்பதை புலனாய்வுக்குழு புரிந்து கொண்டது.
இதனால், புதிய கோணம் ஒன்றில் விசாரணையை துவங்க முடிவு செய்த புலனாய்வுக் குழு, தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கடந்தகால தொடர்புகள் பற்றிய விபரங்களை சேகரிக்க துவங்கியது. விடுதலைப்புலி போராளிகளின் கடந்தகால நடமாட்டங்கள் பற்றிய விபரங்களை சேகரித்த போது, புலிகள் இலங்கையில் இருந்து படகுகளில் வருகையில், பெரும்பாலும் நாகப்பட்டினம் அருகேதான் கரையிறங்கியது தெரியவந்தது.
ராமேஸ்வரம், தொண்டி ஆகிய மற்ற இடங்களிலும் புலிகளின் படகுகள் வந்து சேர்ந்த விபரங்கள் கிடைத்தாலும், நாகப்பட்டினம் அருகே கோடியக்கரையில் கரையிறங்கியதுதான் அதிகம் என்பதை சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவு நோட் பண்ணியது.
இதையடுத்து, சி.பி.ஐ. டீம் ஒன்று கோடியக்கரை சென்று, சந்தேகம் ஏற்படாத வகையில் தகவல்களை திரட்டியது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் தரையிறங்குவதற்கு புலிகள் கோடியக்கரையை பெரிதும் விரும்பியதன் காரணம், அந்தப் பகுதியில் அவர்களுக்கு இருந்த செல்வாக்குதான் என்பதை புரிந்து கொண்டனர்.
புலிகளுக்கு கோடியக்கரையில் இருந்த செல்வாக்குக்கு காரணம், சண்முகம் என்ற தனி மனிதர் ஒருவர்தான்.
இந்த சண்முகம், அந்த நாட்களில் கோடியக்கரையில் மிக முக்கிய நபராக இருந்தார். அவரது தொழில் கள்ளக் கடத்தல்தான் என்ற போதிலும், ஊரே அவருக்கு கட்டுப்பட்டு இருந்தது. அவர்தான் புலிகளுக்கு கோடியக்கரையில் பெரும் பலமாகவும், ஆதரவாகவும் இருந்தார் என்பதை புலனாய்வுக் குழு தெரிந்து கொண்டது.
இதற்கிடையே கோடியக்கரையில், புலனாய்வுக் குழுவின் ஆட்கள் வந்த விசாரித்ததை, சண்முகம் தெரிந்து கொண்டார். உடனே அவர் தலைமறைவாகி விட்டார்.
சண்முகத்தை மடக்கலாம் என்று புலனாய்வுக்குழு மீண்டும் கோடியக்கரை சென்றபோது அவர் அங்கே இல்லை. அவரது இடங்களை சோதனையிட்டது புலனா்வுக்குழு. அப்போதுதான், சண்முகம் எவ்வளவு பெரியதொரு நெட்வேர்க்கை அங்கு வைத்திருந்தார் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.
தொழில் முறையில் கடத்தல்காரரான வண்முகம் பல படகுகளுக்கு சொந்தக்காரராக இருந்தார். அவரிடம் பலர் ஊழியர்களாக இருந்தனர். படகுகளை செலுத்தும் நபர்களைத் தவிர, சண்முகத்தின் கடத்தல் பொருட்களை கோடியக்கரைக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கும், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து பொருட்களை கோடியக்கரைக்கு கொண்டு வருவதற்கும் என பல ஊழியர்கள் சண்முகத்திடம் இருந்தனர்.
இவர்களை சி.பி.ஐ. புலனாய்வுக்குழு விசாரித்தபோது, சண்முகத்தின் ஊழியர்களில் சிலர் இலங்கைத் தமிழர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்களில் ஒருவர் மகாலிங்கம். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் என்ற இடத்தைச் சேர்ந்த கடத்தல்காரர். சண்முத்தின் படகுகளை செலுத்தும் ஊழியர்களில் அவரும் ஒருவர். அவரை விசாரித்தபோது, சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன.
இந்த மகாலிங்கம், இலங்கையில் 1983-ம் ஆண்டு இனப் பிரச்னை ஏற்பட்டபோது, படகு மூலம் தமிழகம் வந்தவர். 1984-ம் ஆண்டிலிருந்து சண்முகத்திடம் வேலை பார்த்து வந்தார். நன்கு படகு ஓட்டத் தெரிந்த அவர், சண்முகத்திடம் பணியில் சேருமுன், விடுதலைப் புலிகளின் படகுகளை அடிக்கடி ஓட்டி வந்துள்ளார்.
அதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரல்ல, அவர்களது சிவிலியன் ஊழியராக இருந்திருக்கிறார்.
அந்த வகையில் தமிழகத்துக்கு வந்து போன புலிகளில் அநேகமான ஆட்களை இந்த மகாலிங்கம் தெரிந்து வைத்திருந்தார். அத்துடன் கோடியக்கரைக்கு வரும் புலிகள் சில மணிநேரம் களைப்பாறிச் செல்ல கடற்கரை ஓரமாக இரண்டு வீடுகளை ஒதுக்கி கொடுத்திருந்தார் சண்முகம். அந்த இரு வீடுகளையும் பராமரிக்கும் பணியைச் செய்தது இலங்கைத் தமிழரான மகாலிங்கம்.
இதனால், கோடியக்கரைக்கு வரும் புலிகளில் யார் எப்போது வந்தார்கள், யார், யாருடன் வந்தார்கள் என்ற விபரங்களும் மகாலிங்கத்துக்கு தெரிந்திருந்தது. சண்முகத்தைப் பிடிக்கச் சென்ற இடத்தில் அகப்பட்ட மகாலிங்கத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது புலனாய்வுக்குழு. அவரிடம் இருந்து கிடைத்த தகவல்கள், புலிகளின் தமிழக நடவடிக்கைகள் பற்றிய சில விபரங்களை புலனாய்வுக்குழுவுக்கு தெரிய வைத்தது.
விடுதலைப்புலிகளின் கடல்புலிகள் பிரிவைச் சேர்ந்த டேவிட், மற்றும் சிலருடன், முதல்தடவையாக சிவராசனைச் சந்தித்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் மகாலிங்கம். சிவராசனும் மற்றையவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருவதற்காக மகாலிங்கமும், இரு படகோட்டிகளும், படகு செலுத்தி வந்தபோதே முதல் சந்திப்பு நடந்தது.
தமிழகம் வந்த அவர்கள், சில தினங்களிலேயே யாழ்ப்பாணம் திரும்பியபோது, அவர்களை படகில் அழைத்துச் சென்றதும் மகாலிங்கம்தான்.
அப்போது நடைபெற்ற உரையாடல்களில் இருந்து, டேவிட் மற்றும் சிவராசன் டீம் தமிழகம் வந்ததே, ஈ.பி.ஆர்.எல்.எஃப் (மற்றொரு ஈழ விடுதலை இயக்கம்) தலைவர் பத்மநாபாவை கொல்வதற்கு என்பதை மகாலிங்கம் தெரிந்து கொண்டார். பத்மநாபாவை சுட்டுக் கொன்றுவிட்டு அந்த டீம் யாழ்ப்பாணம் திரும்புகிறது என்பதையும் புரிந்து கொண்டார்.
பத்மநாபாவை கொன்றவர்களை தமிழக போலீஸ் வலைவிரித்து தேடிவருகிறது என்ற செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த கொலையை செய்தவர்கள் கோடியக்கரையில் இருந்து சாவகாசமாக யாழ்ப்பாணம் புறப்பட்டுச் சென்றிருந்தனர். தமிழகத்தில் அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அது 1990-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற சம்பவம். பத்மநாபாவும், அவரது கட்சி முக்கியஸ்தர்கள் 14 பேரும் ஜூன் 19-ம் தேதி, சென்னை சூளமேடு பகுதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி உதவவில்லை என்று தற்போது கூறும் ஆட்களில் எத்தனை பேருக்கு, பத்மநாபாவை கொன்றவர்களை தமிழகத்தில் மடக்காமல், தப்பிச் செல்ல அனுமதிக்கும்படி அன்றைய தி.மு.க. ஆட்சியில் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரியுமோ, தெரியவில்லை. தற்போது ஓய்வு பெற்றுள்ள சில தமிழக உளவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டு அதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் புலிகளுக்கு உதவி செய்ததையும் ஒரு காரணமாக வைத்துதான், அன்றைய தி.மு.க. ஆட்சி பாதியில் கலைக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்று காரணம்காட்டி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 356-ம் பிரிவின்படி தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, பிரதமர் சந்திரசேகர் தலைமையில் இருந்த மத்திய அரசால் 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கலைக்கப்பட்டது.
பத்மநாபாவை கொலை செய்த டீமை யாழ்ப்பாணத்தில் கொண்டுபோய் விட்ட பின்னர் மகாலிங்கம், புலிகளுக்காக படகு ஓட்டவில்லை. கோடியக் கரையில் நிரந்தரமாக தங்கிவிட்டார். சண்முகத்தின் ஊழியராக இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் புலிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.
கருணாநிதி ஆட்சி கலைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் 1991 ஜனவரியில், இந்த தொடரில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட நிக்சன் (புலிகளின் உளவுப் பிரிவு), சென்னையில் இருந்து கோடியக்கரை வந்தார். இலங்கையில் இருந்து படகு வருவதற்காக இரு தினங்கள் கோடியக்கரையில் காத்திருந்தார்.
சண்முகம் புலிகளுக்காக ஏற்பாடு செய்து கொடுத்திருந்த வீட்டில்தான் நிக்சன் தங்கியிருந்தார். அவரது தேவைகளை கவனித்துக் கொண்டார் மகாலிங்கம்.
நிக்சன் வந்து 2 தினங்களில், அவரை ஏற்றிச் செல்ல யாழ்ப்பாணத்தில் இருந்து படகு வந்து சேர்ந்தது. அந்தப் படகு, யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவரை கொண்டுவந்து இறக்கிவிட்டு, நிக்சனை ஏற்றிச் சென்றது. படகில் வந்து இறங்கியவரையும் மகாலிங்கத்துக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர், இந்தத் தொடரில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த ரமணன். (காந்தனின் ஒயர்லெஸ் ஆபரேட்டர்)
ரமணன் தம்முடன் ஒரு பெட்டியை கொண்டு வந்திருந்தார்.
படகில் இருந்து இறங்கியபின், சண்முகத்தில் வீட்டில் வைத்து அந்த பெட்டியை திறந்து, அதற்குள் இருந்த பொருள் ஈரம் படாமல் வந்திருக்கிறதா என்று ரமணன் செக் பண்ணிப் பார்த்தபோது, மகாலிங்கமும் அருகில்தான் இருந்தார். அந்தப் பெட்டியில் இருந்த பொருள், ஒரு புத்தம் புதிய லேட்டஸ்ட் ஒயர்லெஸ் கருவி.
ராஜிவ் கொல்லப்பட்டபின், புலிகள் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒயர்லெஸ் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தது இந்தக் கருவியின் மூலமாகத்தான்! (கடந்த அத்தியாயத்தில் விபரங்களை பார்க்கவும்)
அதன்பின் சிறிது காலத்துக்கு புலிகளின் படகுகள், மகாலிங்கத்துக்கு தெரிந்து கோடியக்கரைக்கு வரவில்லை.
மே 1-ம் தேதி, புலிகளின் படகு ஒன்று, 8 பேருடன் கோடியக்கரைக்கு வந்தது. படகு வந்த அந்தத் தேதி மகாலிங்கத்துக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. காரணம், அன்று கோடியக்கரையில் மே தின ஊர்வலம் ஒன்று சிறிய அளவில் நடைபெற்றது அவருக்கு ஞாபகம் இருந்தது.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து கோடியக்கரைக்கு வந்த படகில் இருந்த 8 பேரில்தான், ராஜிவ் காலை ஆபரேஷனுக்காக அனுப்பப்பட்ட டீமும் இருந்தது.
மகாலிங்கம் கூறிய தகவலின் அடிப்படையில் இவர்கள்தான் அந்த 8 பேர்:
1) சிவராசன்
2) ரூசோ
3) கீர்த்தி
4) நேரு
5) சுதந்திர ராஜா
6) மகாலிங்கத்துக்கு பெயர் தெரியாத, ஒரு கால் மட்டும் உடைய இளைஞர்
இவர்களுடன் வந்த மற்றைய இருவரும்,  மகாலிங்கத்துக்கு அறிமுகமில்லாத இரு இளம் பெண்கள்.
“இந்த 8 பேரும், சண்முகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் சில மணிநேரம் தங்கி ஓய்வெடுத்து விட்டு, சென்னை புறப்பட்டுச் சென்றனர்” என்றார் மகாலிங்கம்.
படகில் வந்த 8 பேரில் இருந்த இளம் பெண்களும் யார் என்று மகாலிங்கத்துக்கு தெரியவில்லை. ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன் ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்களை மகாலிங்கத்திடம் காட்டியபோது, அதில் இருந்த தனுவும், சுபாவும்தான் படகில் வந்த இரு பெண்கள் என்பதை அடையாளம் காட்டினார் அவர். (தனு, சுபா ஆகிய இருவரது போட்டோக்களும் அதற்கு முன்னரே பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. ஆனால், தாம் பத்திரிகை படிப்பதில்லை என்றார் மகாலிங்கம்)
ராஜிவ் கொலை ஆபரேஷனுக்காக வந்திறங்கிய டீமுடன் வந்த ஒரு கால் மட்டும் உடைய இளைஞர் யார் என்பது, எந்தவித முயற்சியும் இல்லாமல், மறுநாளே சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தெரியவந்தது.
புலனாய்வுக் குழுவின் ஒரு டீம் கோடியக்கரைக்கு சென்றபோது, மற்றொரு டீம், ஏற்கனவே கைது செய்யப்பட்ட முருகன் அடையாளம் காட்டிய வீடுகளை சோதனையிட்டுக் கொண்டிருந்தது. அந்த ரெயிடுகளில், சென்னை மடிப்பாக்கத்தில் முருகன் மறைந்திருந்த இடத்திலிருந்து நிறையக் கட்டுரைகளும், ஆவணங்களும் சிக்கின.
அவற்றில் ஒன்று, முகவரி எழுதப்பட்ட ஒரு துண்டுக் கடிதம். அதில் எழுதப்பட்டிருந்த முகவரி: சுரேஷ்குமார், கோல்டன் ஹோட்டல், ஜெய்ப்பூர் (ராஜஸ்தான் மாநிலம்).
சென்னை மல்லிகை அலுவலகத்தில் இருந்து உடனடியாக சி.பி.ஐ.யின் ஜெய்ப்பூர் கிளையை தொடர்பு கொண்டு, கோல்டன் ஹோட்டலை செக் பண்ணச் சொன்னார்கள். சுரேஷ்குமார் என்ற நபர் அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு, பின் அறையை காலி செய்துகொண்டு, அருகில் உள்ள விக்ரம் ஹோட்டலுக்கு மாறிச் சென்றது தெரியவந்தது.
விக்ரம் ஹோட்டலில், சுரேஷ்குமாரின் அறையை தட்டியபோது, அவரே கதவைத் திறந்தார்.
அவருக்கு ஒரு கால் கிடையாது.
சி.பி.ஐ., அவரது அறையை சோதனையிட்டபோது, டைரி ஒன்றில் எழுதப்பட்டிருந்த இரு சென்னை தொலைபேசி எண்கள் கிடைத்தன. அத்துடன் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட இன்லேன்ட் லெட்டர் ஒன்றும் கிடைத்தது.
ராஜிவ் காந்தி, மே 21-ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். ஜெய்ப்பூர் ஹோட்டலில் கிடைத்த இன்லேன்ட் கடிதம், ராஜிவ் கொல்லப்பட்டதற்கு மறுதினம் மே 22-ம் தேதி எழுதப்பட்டிருந்தது. மிகச் சுருக்கமான அந்தக் கடிதத்தில் இருந்த வாசகங்கள்:
“குடும்பத்தில் ‘நல்ல காரியம்’ நேற்று நடந்தது. விருந்தினர்கள் தேடிவரலாம் என்பதால், நீ உடனே இடத்தை மாற்றுவது நல்லது” …… (தொடரும்)

-பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், மற்றும் ரிப்போர்ட்களுடன், ரிஷி

விரைவில் நேரு கைது?!



அமல்ராஜ் அதிரடியில் அடுத்தடுத்த திருப்பங்கள்...
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை சட்டென சூடு பிடித்திருக்கிறது. திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் ஆந்திர மாநில இடைத்தேர்தல் பார்வையாளராக சென்றுவிட, கமிஷனர் நாற்காலியில் இப்போது அமல்ராஜ் அமர்த்தப்பட்டிருக்கிறார். இதுநாள் வரை விசாரணை நடத்திய தனிப்படை அதிகாரிகளை தூக்கியடித்துவிட்டு, அதிரடியாக புது ஆட்களைக் கொண்டுவந்திருக்கிறார் அமல்ராஜ்.

திருவாரூர் எஸ்.பி சேவியர் தன்ராஜ் தலைமையில் நான்கு இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவும்,ஏ. டி.எஸ்.பி. நாகை மணிவண்ணன் தலைமையில் ஒரு தனிப்படையும், வல்லம் ஏ.எஸ்.பி.விஜயகுமார் தலைமையில் ஒரு படையும் அமைக்கப்பட்டுள்ளது. 

''எங்களின் சரித்திரத்திலேயே இந்தளவுக்கு குற்றப்பின்னணி கொண்ட ஒரு நபரை நாக்கால் பார்த்ததே இல்லை. அரசியல், ரியல் எஸ்டேட், தாதாயிசம், செக்ஸ் டார்ச்சர் என ராமஜெயத்தின் பலவிதமான முகங்களும் எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு விவகாரத்திலும் அவருக்கு குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட எதிரிகள் இருக்கிறார்கள். அதனால்தான் குற்றவாளியை நெருங்க முடியாத அளவுக்கு சந்தேக பட்டியல் பெரிதாக நீள்கிறது. அமல்ராஜ் விசாரணை வளையத்துக்கு வந்த உடனேயே ராமஜெயம் குடும்பத்தினர் மீதுதான் உக்கிரப் பார்வையைக் காட்டி வருகிறார். நேரு மீது போலீஸ் தரப்புக்கு இருக்கும் சந்தேகங்கள் வரிசையாக நீண்டு வருகின்றன. ஆனால், அவர் போலீஸ் தரப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்.
அமல்ராஜ் விசாரணையில் அடுத்தபடியாய் நேரு போலீஸ் ஸ்டேஷனுக்கே அழைக்கப்படலாம். இதுகுறித்து உளவுத்துறை தலைவர் ராமானுஜத்திடம் அமல்ராஜ் விரிவாகப் பேச, நேருவை கைது செய்யவும் தயங்க வேண்டாம் என அவர் அனுமதி கொடுத்துவிட்டார். தனக்கு விசுவாசமான அதிகாரிகள் விசாரணை படையில் இருந்து நீக்கப்பட்டதையே நேருவால் தாங்க முடியவில்லை. அவர்கள்தான் அனுதின விசாரணை விவரங்களை நேருவுக்கு ரகசியமாகச் சொல்லி வந்தார்கள். இந்நிலையில், அமல்ராஜின் அதிரடி தன்னை எந்த நேரத்திலும் வளைக்கும் என்பதை அறிந்து மிகுந்த வாட்டத்தில் இருக்கிறார் நேரு. இதுகுறித்து ஸ்டாலினிடம் அவர் சொல்லியதாகவும் பேச்சிருக்கிறது!'' என்கிறார்கள் திருச்சியின் அரசியல் மற்றும் போலீஸ் வட்டத்தை அறிந்தவர்கள்.
அமல்ராஜின் அதிரடிகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- கும்பல் 

> ஸ்டைலை பணமாக்கும் பவர் ஸ்டார்.

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஏது ஸ்டைல்? மண்டையில் அடித்துக் கொள்ளும் வாசகர்களே... இது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண்.

பதினொரு வருஷத்துக்குப் பிறகு இப்போதுதான் ஒரு மெகா ஹிட்டை கொடுத்திருக்கிறார் பவன் கல்யாண். ஆனாலும் இவரது ரசிகர் பட்டாளம் குறையவில்லை. காரணம் பவனின் பெக்யூலியர் ஸ்டைல். இவர் அணியும் உடைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே வரவேற்பு. கப்பர் சிங் படத்தில் இவர் அணிந்து வரும் உடைகளை அப்படியே இமிடேட் செய்கிறது யூத் வட்டாரம்.

தனது ஸ்டைலை பிசினஸாக்கினால் கோடிகள் அள்ளலாம் என்பது பவனுக்கு தெ‌ரிந்திருக்கிறது. தனது பர்சனல் காஸ்ட்யூம் டிஸைனர் ராஜேஷ் மோரை வைத்து பவர் ஸ்டார் கலெக்சன் என்ற பெய‌‌ரில் துணிக்கடை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இதில் உள்ள அனைத்து உடைகளும் ராஜேஷ் வடிவமைத்ததாக இருக்கும்.

திருமதி ர‌ஜினி பாபா கர்ச்சீஃப் விற்ற கதைதான் ஞாபகத்துக்கு வருது.

> ஹன்சிகா பள்ளி மாணவியாக மாற்றான் முடிந்ததும் சிங்கம் 2 படப்பிடிப்பு தொடங்குகிறது.

சத்யராஜ் நடித்த படமொன்றில் நடிகரான அவரிடம் சத்யன் கதை சொல்லப் போவார். முதல் காட்சியில் ஒரு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என்பார் சத்யன். முதல் சீன்லயே ஹாஸ்பிடலா என்று முகம் சுழிக்கும் சத்யராஜிடம் சத்யன் சொல்வார், அந்த குழந்தையே நீங்கதான்.

நடக்கிற விஷயங்களைப் பார்த்தால் இந்த காமெடி சீன் நிஜமாகவே நடக்கும் போலிருக்கிறது.

ஹரியின் சிங்கம் 2 படத்தில் சூர்யா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு பள்ளி மாணவி வேடமாம். பம்பளிமாஸாக இருக்கும் ஹன்சிகா பள்ளி மாணவியா என்பது ஒருபுறமிருக்க, கடா மீசை போலீஸ் அதிகாரி சூர்யா பள்ளி மாணவியையா காதலிக்கப் போகிறார் என்றொரு அதிர்ச்சியும் இதில் சேர்ந்தே இருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மாற்றான் முடிந்ததும் சிங்கம் 2 படப்பிடிப்பு தொடங்குகிறது.

இனி உடம்பை காட்டி நடிப்பதாக இல்லை:நமீதா!

namitha_hotகுட்டை பாவாடை "ஸ்பெஷலிஸ்ட்டான நடிகை நமீதா,  இப்போதெல்லாம் யாராவது, "கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொன்னாலே, வேப்பங்காயை கடித்துவிட்டது போல் அருவருப்பாக பார்க்கிறார். "இனி உடம்பை காட்டி நடிப்பதாக இல்லை. என் மீது அழுத்தமாக படிந்துள்ள, "கிளாமர் ஹீரோயின் என்ற முத்திரையை மாற்றும், தீவிர முயற்சியில் தான் இப்போது ஈடுபட்டுள்ளேன் என்று சொல்லும் நமீதா, "தெலுங்கில், கன்னடத்தில் என் திறமையை வெளிக்காட்டும் வேடங்களை தந்துவிடுவர். இதே போல், தமிழ் இயக்குனர்களும் தருவர் என்ற நம்பிக்கையில் தான், சென்னையில் முகாமிட்டுள்ளேன்" என்கிறார்.

கூகுள் பிளஸ் பயனர்களுக்​காக அறிமுகமாகு​ம் புதிய அம்சம்


google_events_001பிரபலமான சமூக வலைத்ளங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிவரும் கூகுள் நிறுவனத்தின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் அதன் பயனர்களுக்காக மேலும் ஒரு புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Events in Google+ எனப்படும் இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் மற்றைய நண்பர்களுடனான வீடியோ சட்டிங் போன்றவற்றிற்கான நேரத்தை தமது கூகுள் கலன்டர் பக்கங்களில் ஒதுக்கமுடியும்.
அடுத்தவாரம் அளவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த நவீன வசதியானது கூகுள் பிளஸ் பயனர்களை பெருமளவில் கவரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா