நடிகர் மாதவன் தனது 42வது பிறந்தநாளை இன்று சிகாகோவில் கொண்டாடுகிறார். இன்றிரவு பிறந்தநாள் பார்ட்டி கொடுக்கிறார்.
இயக்குனர் மணிரத்னத்தின் அலைபாயுதே மூலம் தமிழுக்கு வந்தவர் மாதவன். மாதவன் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரது க்யூட் ஸ்மைல் தான். புன்னகை மன்னன் மாதவன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
பாலிவுட் நடிகை பிபாஷாவின் டுவீட்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடி. ராஜா மாதிரி வாழ வேண்டும். சீக்கிரம் திரும்பி வாருங்கள். நாங்கள் உங்களை மிஸ் பண்ணுகிறோம்.
குஷ்பு வாழ்த்து:
ஹே மேடி, பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்பம், வெற்றி, அமைதி கிடைக்க வாழ்த்துக்கள்.
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவும் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாதவன் தற்போது தனது குடும்பத்தோடு சிகாகோவில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை சிகாகோவில் இருப்பதிலேயே காஸ்ட்லியான கோல்ப் கிளப்பிற்கு அழைத்துச் செல்ல அவரது நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். இன்று இரவு மாதவன் தனது கையோலேயே சமைத்து தனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் விருந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
மாதவனுக்கு கோல்ப் என்றால் மிகவும் பிடிக்கும். எந்த ஒரு சினிமா நட்சத்திரத்துடனும் கோல்ப் விளையாடாத மணிரத்னம் மாதவன் சென்னைக்கு வரும்போது அவருடன் சேர்ந்து கோல்ப் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிரத்னத்தின் அலைபாயுதே மூலம் தமிழுக்கு வந்தவர் மாதவன். மாதவன் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரது க்யூட் ஸ்மைல் தான். புன்னகை மன்னன் மாதவன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
பாலிவுட் நடிகை பிபாஷாவின் டுவீட்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடி. ராஜா மாதிரி வாழ வேண்டும். சீக்கிரம் திரும்பி வாருங்கள். நாங்கள் உங்களை மிஸ் பண்ணுகிறோம்.
குஷ்பு வாழ்த்து:
ஹே மேடி, பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்பம், வெற்றி, அமைதி கிடைக்க வாழ்த்துக்கள்.
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவும் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாதவன் தற்போது தனது குடும்பத்தோடு சிகாகோவில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை சிகாகோவில் இருப்பதிலேயே காஸ்ட்லியான கோல்ப் கிளப்பிற்கு அழைத்துச் செல்ல அவரது நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். இன்று இரவு மாதவன் தனது கையோலேயே சமைத்து தனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் விருந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
மாதவனுக்கு கோல்ப் என்றால் மிகவும் பிடிக்கும். எந்த ஒரு சினிமா நட்சத்திரத்துடனும் கோல்ப் விளையாடாத மணிரத்னம் மாதவன் சென்னைக்கு வரும்போது அவருடன் சேர்ந்து கோல்ப் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment