இப்படியொரு செய்தி கொஞ்ச நாட்களாக கால் இல்லாமல் கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு K.V.ஆனந்தை அழைத்து ரஜினி பேசிய பிறகு வதந்திக்கு றெக்கை முளைத்தது.
இன்றைய தேதியில் கமர்ஷியல் விஷயங்களை பிரமாண்டமாகவும் மக்களுக்குப் பிடித்த மாதிரியும் எடுப்பதில் ஷங்கருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் K.V.ஆனந்த். ஷங்கருடன் தொடர்ந்து இரு படங்கள் நடித்ததால் வேறொரு ஜோடி ரஜினிக்கு தேவைப்படுகிறது. மேலும் கோச்சடையான் சரித்திரப் படம். அது முடிந்ததும் அதே பாணியில் அமைந்த ராணாவில் நடிக்க ரஜினிக்கு விருப்பமில்லை. கோச்சடையானுக்கும், ராணாவுக்கும் நடுவில் வேறொரு படம் நடிக்க ரஜினி ப்ரியப்படுவதாகக் கூறப்படுகிறது.
அந்தப் படத்தை இயக்க சரியான ஆள் K.V.ஆனந்த் என்பதால்தான் அவரை அழைத்து ரஜினி பேசியதாகவும், சுபா ரஜினிக்கேற்ற கதையை தயார் செய்து வருவதாகவும் பலமாகப் பேசப்படுகிறது. இதுகுறித்து முன்பு கருத்து தெரிவித்த K.V.ஆனந்த் முற்றாக இதனை மறுக்காதது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment