Wednesday 16 April 2014

விபூசிகாவை பார்வையிட அனுமதி மறுப்பு!

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விபூசிகாவை பார்வையிட தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.குறித்த மகாதேவா ஆச்சிரமத்தின் தலைவராக தற்போது செயற்பட்டுவரும் பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதவாளரான முன்னாள் அரச அதிபர் இராசநாயகமே அனுமதி வழங்க மறுத்ததாக தெரியவருகின்றது.

நீதிமன்ற அனுமதியுடன் வந்தாலே விபூசிகாவினை பார்வையிட அனுமதிக்கமுடியுமென அவர் தெரிவித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.தன்னுடன் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் விபூசிகாவின் நலன்களை கேட்டறிய முற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் விபூசிகா தம்மால் கைது செய்யப்பட்டிருக்கவில்லையெனவும் யாரும் அவரை பொறுப்பேற்காமையினால் பாதுகாப்பிற்காகவே குறித்த ஆச்சிரமத்தினில் தங்க வைத்துள்ளதாக இலங்கைப்பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசி பலன் 17-04-2014 | Raasi Palan 17-04-2014

மேஷம்
வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிறருக்காகப் பணப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வெளிநாட்டிலிருந்து வெற்றிச் செய்திகள் வந்து வியப்படையச் செய்யும்.

மிதுனம்
கடன்சுமை குறையும் நாள். நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். மற்றவர் செய்த உதவியை மறக்கமால் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். உடல் நலப் பாதிப்புகள் மாறி மகிழ்ச்சியைத் தரும்.

கடகம்
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும். இடம், பூமி வாங்கிச் சேர்க்க அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

சிம்மம்
கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். உன்னதமான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகனச் செலவு குறையும்.

கன்னி
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செல்லும் இடங்களில் சிறப்புகள் வந்து சேரும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மாமன், மைத்துனர் வழியில் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.

துலாம்
வங்கிச் சேமிப்பு உயர்ந்து வளம் காணும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்கள் வியக்கும் அளவிற்கு உங்கள் பெயரும், புகழும் உயரும்.

விருச்சகம்
பணத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பக்குவமாகப் பேசி பூமி சம்மந்தப்பட்ட வகையில் நல்ல முடிவு எடுப்பீர்கள்.

தனுசு
இடமாற்றத்தால் ஏற்றம் காண வேண்டிய நாள். திடீர் செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளிடம் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். புகழ் பெற்றவர்களின் சந்திப்பால் பெருமையடைவீர்கள்.

மகரம்
செல்வ வளம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். பணத்தேவைகள் எதிர்பார்த்ததை விட இருமடங்காக வந்து சேரலாம்.

கும்பம்
சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும் நாள். கட்டிடப் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பர். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

மீனம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். பணப்பற்றாக்குறை அகலும்.

விடுதலை மூச்சு (உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்….) | Viduthalai Moochu

விபரணம்:- விடுதலை மூச்சு (உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்….)

இயக்கம்:- க.ரமேஸ், சி.வினோதன்.

தயாரிப்பு:- தமிழ் திரைக்கண், தமிழீழம்.

குறிப்பு :- சிங்கள அரசால் எம்மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள், அவலங்கள், அல்லைப்பிட்டி படுகொலைகள் மற்றும் அல்லைப்பிட்டிப் படுகொலைகளை, அட்டூழியங்களையும் நேரில்கண்டவரும், அனுபவித்தவருமான வண பிதா ஜிம் பிறவுன் அடிகளார் நடந்தேறிய படுகொலைகளின் உண்மை நிலையினை உலகிற்கு அம்பலமாக்கிவிடக்கூடிய ஒரேயொரு ஆவனமாக இருந்தமையால் ஒரு கிழமைக்குள் அவர் சிங்கள படைகளால் மர்மமாக கடத்தப்பட்டு காணாமல் போன உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய ஓர் தமிழீழ சுதந்திர திரைக்காவியம்.


ஊழல்களில் முன்னணியில்! யாழ்.மாநகரசபை ஊழியர்கள் போராட்டம்!

பொதுசன ஜக்கிய முன்னணி வசமிருக்கின்ற யாழ்.மாநகரசபையினது காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் ஊழல் மோசடிகளினால் அங்கு பெருங்குழப்ப நிலை ஏற்படத்தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் மாநகரசபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்திருந்த போதும் இலங்கை அரசு மேலும் ஒரு வருட கால நீடிப்பினை செய்திருந்தது. இக்காலப்பகுதியில் நிதி மோசடிகள் மற்றும் பணம் பெற்றுக்கொண்டு அரச நியமனங்களென மாநகரசபை திண்டாடி வருகின்றது.

இந்நிலையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி யாழ். மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். நீண்டகாலமாக நிரந்தர நியமனமின்றி பணியாற்றி வரும் குறித்த சுகாதார ஊழியர்களுக்கும்  வேலைப்பகுதி தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ். மாநகரசபை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இருப்பினும்,  இதுவரையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
நானூறிற்கும் அதிகமான சுகாதார ஊழியர்களும்  வேலைப்பகுதி தொழிலாளர்களும் இவ்வார்ப்பாட்டத்தினில் பங்கெடுத்துள்ளனர். இன்று மாலை வரை அவர்கள் போராட்டத்திற்கான கால எல்லையொன்றை வகுத்துள்ளனர்.

நீதி கேட்டு யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டம்!

யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம்யுவதியின்; சடலத்துடன் அவரது உறவுகள் மற்றும் ஊர்மக்கள் யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.குறித்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயது மதிக்கத்தக்க யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் சடலத்துடனேயே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

மண்டைதீவினை சொந்த இடமாக கொண்ட அவர் இடம்பெயர்ந்த நிலையினில் குருநகரினில் வசித்து வந்திருந்த நிலையினில் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.இவரை தற்கொலைக்கு தூண்டியதாக சில இளம் மதகுருமார்கள் மீது குடும்பத்தவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.அவர்கள் வழங்கிய வாக்குமூலப்பிரகாரம் குறித்த மதகுருமாரை பொலிஸார் கைது செய்யவில்லையெனவும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லையெனவும் குற்றஞ்சாட்டும் குடும்பத்தவர்கள் இதனை கண்டித்தே இன்று காலை சடலத்துடன் யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த இரண்டு இளம் மதகுருமாரே அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருந்த நிலையினிலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தவர்கள் வாதிட்டுவருகின்றனர்.முன்னதாக ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் பிரதான வீதியிலுள்ள குருமடம் முன்பதாகவும் ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டது.எனினும் அவர்கள் அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் சடலத்துடன் மண்டைதீவிற்கு பயணமாகியிருந்தனர்.

கூட்டமைப்பின் சரவணபவனிற்கும் கொலை மிரட்டலாம்! அவரது பத்திரிகை செய்தி!!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சமயமே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈ.சரவணபவன் இது தொடர்பாக தெரிவிக்கையினில் குறித்த அழைப்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழில் உரையாடிய ஒரு நபர், நீங்கள் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் எவ்வாறு போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருகிறீர்கள் என்று பார்ப்போம் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசினார்.   0779908892 என்ற இலக்கத்தில் இருந்தே அந்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது'' என்று தெரிவித்தார்.

எனினும் வடக்கிலிருந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியலாளர்கள் நாள் தோறும் இத்தகைய கொலை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டே செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனக்கு வாக்களித்த மக்களிற்கு பதில் சொல்ல வேண்டும்! கொழும்பிற்கு அனந்தி பதிலடி!!

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மேல்மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட ஜாதிகஹெல அமைப்பினை சேர்ந்த உதயகம்பெல்லவ தமிழ்தேசிய கூட்டமைப்பைத் தடைசெய்யவேண்டும் எனவும் நான் உட்பட பாரளுமன்ற   உறுப்பினர்களான சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன்  ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் கருத்துவெளியிடடுள்ளார். இது ஒரு தனி நபர் ஒருவரின் கருத்தென்றோ அல்லது இனவாத அமைப்பான ஜாதிகஹெல உறுமயவின் கருத்தென்றோ புறமொதுக்கி விடமுடியாதென தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் மேலும் தெரிவிக்கையினில்: 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளாரல் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்பட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

நான் நடந்து முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் எண்பத்தெண்ணாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் வாக்குகளால் மாகணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவள். இலங்கை ஒரு ஜனநாயகநாடு என்ற வகையில் எனக்கு வாக்களித்த அந்த மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் உரிமைபெற்றவள். எமது மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும், தொடர்ந்து இழைக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க கடமைப்பட்டவள். அப்படி நான் குரல் கொடுப்பது குற்றமாகக்கருதப்படுமானால் இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவதில் எந்த ஒரு அர்த்தமும் இருக்கமுடியாது.

இலங்கையில் எமக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் பற்றி நான் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் தெரிவித்தமையே என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு  எட்டப்படமுடியாத நிலையில் தான் நான் சர்வதேச அரங்கில் முறையிட நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்ற உண்மையை எவரும் மறந்துவிடமுடியாது.

நான் எனது கணவரை எனது பிள்ளைகள் முன்னிலையில் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். இன்று வரை ஐந்து ஆண்டுகள் ஆகின்ற  போதிலும் அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதைக் கூட என்னால் அறியமுடியவில்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவில் , காணாமற் போனோhர் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவில் என அனைத்திடங்களிலும் நாம் முறையிட்டோம். எத்தனையோ வீதி போரட்டங்களை நடத்தினோம். ஆனால் எவ்வித பலனும் கிட்டவில்லை. இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதி அல்ல. இந்த நாட்டில் வாழும் எத்தனையோ தமிழ்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை.

இதற்கு இந்த அரசாங்கத்தாலோ எம்மேல் தேசத்துரோகிகள் எனக் குற்றம் சாட்டுபவர்களாலோ என்னைக் கைது செய்யவேண்டுமெனக் குரல் கொடுப்பவர்களோலோ பதில் தரமுடியவில்லை. அவர்கள் பதில் தருமளவுக்கு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவுமில்லை.
இப்படியாக இந்தநாட்டின் எல்லைக்குள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படமுடியாத நிலையில் நாம் சர்வதேச அரங்கில் முறையிடுவதில் என்ன தவறு இருக்கமுடியும். ஆனால் அதிகார மமதையும் ஆட்சியாளர்கள் என்ற வலிமையும் எம்மை தேசவிரோதிகளாக காட்ட முயல்கின்றன.
எமது தேசம் மனித உரிமைகளை மதிக்கவில்லை எனவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்கின்றது எனவும் சர்வதேசம் குற்றம்சாட்டும் வகையில் ஒரு ஆட்சியை நடத்தி எமது நாட்டை அவமானப்படுத்துவதற்கு உடந்தையானவர்களா? அல்லது நீதி நிலைநாட்டப்படுவதன் மூலம் எமதுதேசம் பெருமைப்படுத்தப்படவேண்டுமென எதிர்பார்ப்பவர்களா தேசத்துரோகிகள் என நான் கேள்வி எழுப்புகின்றேன்.

நாம் இந்தநாட்டை அவமானப்படுத்தவேண்டுமென்ற நோக்கம் கொண்டவர்களோ, மனநோயாளர்களோ அல்ல. நாம் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை தான் கேட்கின்றோம். சரணடைந்த, காணாமற் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியத்துடிக்கின்றோம். எங்கள் கோரிக்கைகளுக்கு விடை தரவேண்டியது ஆட்சி அதிகாரத்திற்குள் உள்ளவர்களின் மறுக்கமுடியாத கடமை.

ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பொறுப்புக்கூறல் என்ற புனி;தகடமை புறந்தள்ளப்பட்டுள்ளது. மாறாக எம்மீதான ஒடுக்குமுறைகள் பல்வேறுமுறைகளில் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. தேடுதல் வேட்டைகள் சுற்றிவளைப்புகள் கைதுகள் என எம்மக்கள் ஒவ்வொருவிநாடியையும் அச்சத்தில் கழிக்கவேண்டிய அவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எம்மீது இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நியாயம் வழக்கவேண்டியவர்களே மேலும் மேலும் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் போது நாம் சர்வதேச அரங்கில் முறையிட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். எம்மைக் கைதுசெய்வதன் மூலம் எமதுகுரலை அடக்கிவிடமுடியும் என எவராவது நினைத்தால் அது தவறான கணீப்பீடாகும். எம்மீது மேற்கொள்ளப்படும் கைது  நடவடிக்கைகளை கூட உலக அரங்கில் பாரிய எதிர்விளைவுகளை கொடுக்கும் நிலமையையே தேடும். சர்வதேச முனைப்பை மேலும் அதிகரிக்கவேண்டிய தேவையை உருவாக்கும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது பெரும்பான்மையான தமிழ் மக்களால் ஜனநாயகவழியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி. நானோ சகபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களோ மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். எனவே தமிழ் தேசிய  கூட்டமைப்பை தடைசெய்வதோ எம்மை கைது செய்வதோ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரும் உரிமையைக்கூட மறுக்கும் ஜனநாயகவிரோத செயலாகும். இதை இன ஒடுக்குமுறையாளர்கள் புரிந்து கொள்ளத் தவறினால் அதற்கான விலையை அவர்கள் கொடுக்கவேண்டிய நிலையே ஏற்படும் .
நாம் நாட்டையும் எமது இனத்தையும் நேசிக்கின்றோம். இந்நாடு  சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமென விரும்புகின்றோம். இந்நாடு ஜனநாயகவிரோதப் பாதையில் செல்வதற்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுத்து கௌரவத்தை பாதுகாப்போம் எனஉறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றுள்ளது.

தெனாலிராமன் படத்திற்காக அறிக்கைகள்? பின்னணி என்னவாம்...

தெலுங்கர், தமிழர் பிரச்சனையாகி விடும் போலிருக்கிறது தெனாலிராமன்.

இதில் ரொம்பவே அப்செட் ஆகியிருப்பவர் வடிவேலுதான். இது தொடர்பாக அறிக்கை, பேட்டியென்று ஒருபுறம் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தாலும் இன்னொருபுறம், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து முக்கியமானர்வளுக்கு போன் போகிறதாம். சார், நம்ம படத்தையும் வடிவேலுவையும் ஆதரிச்சு ஒரு அறிக்கை கொடுங்களேன் என்கிறார்களாம். கேட்பது சாதாரண நிறுவனமல்ல என்பதாலேயே ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை தர ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாரதிராஜா, சீமான் என்று தொடரும் இந்த லிஸ்ட்டில் மேலும் ஒருவர் இணைவார் என்கிறார்கள். படம் வெளியாகிற நேரத்தில், தமிழுக்கே அத்தாரிடி என்று வாழ்த்தப்படும் ஒருவரும் அறிக்கை கொடுக்கக் கூடும் என்கிறார்கள். இதற்கெல்லாம் தகுந்த சன்மானம் வழங்கப்படுகிறதோ என்கிற சந்தேகக் கண்ணையும் திறக்கிறார்கள் நிருபர்கள்.

இதற்கிடையில் பாரதிராஜாவின் அறிக்கை பற்றி ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது. மத்திய அரசின் அங்கமான தணிக்கை குழுவே சான்றிதழ் கொடுத்தபின்பு, படத்தை வெளியிட விட மாட்டோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என்றும் உங்களை போன்ற அமைப்புகளிடம் தனித்தனியாக வந்து படத்தை காண்பித்துதான் சர்டிபிகேட் வாங்க வேண்டுமா என்றும் பொருமியிருந்தார் அவர். டேம் 999, மெட்ராஸ் கஃபே, இனம் போன்ற படங்களும் முறையாக சென்சார் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு திரைக்கு வந்த படங்கள்தான். இவர் சொல்வது படி பார்த்தால் அந்த படங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழர் அமைப்புகள் குரல் கொடுத்ததையும் இவர் குறை சொல்வது போலாகிறதே என்பதுதான் பாரதிராஜாவின் அறிக்கையால் வந்திருக்கும் முணுமுணுப்பு.

தமிழகத்தில் 10 நாட்களில் மூன்றாவதுக் குழந்தை ஆழ்துழாய் கிணற்றில் விழுந்துள்ளது!:மீட்புப் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் இப்போது மூன்றாவதுக் குழந்தை ஆழ்துழாய் கிணற்றில் விழுந்துள்ளது.

நேற்று மாலை திருவண்ணமலையில் ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மீட்கும் பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகின்றன.

கடந்த 5ம் திகதி கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. இதை அடுத்து மூன்று நாட்களுக்கு முன்னர் சங்கரன் கோயில் ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தையை ரோபோ எந்திரம் கொண்டு உயிருடன் மீட்டனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று ஆழ்துழாய் கிணற்றில் விழுந்துள்ளது.

நேற்று மாலை கிணற்றில் விழுந்த அந்தக் குழந்தையை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியினர் விடிய விடிய ஈடுப்பட்டு வருகின்றனர். நவீன் ரோபோ எந்திரம் ஆழ்துழாய் கிணற்றின் உள்ளே செல்ல முடியாதபடி இருப்பதால், மீட்ப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது.

நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகளால் 100 பள்ளிச் சிறுமிகள் கடத்தல்

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் தாக்குதல் தொடுத்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து 100 பள்ளிச் சிறுமிகளைக் கடத்திச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

திங்கள் இரவு போர்னோ மாநிலத்தில் உள்ள சிபொக் நகரில் அமைந்துள்ள பாடசாலைக்குள் திடீரென நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கு ஹாஸ்டலில் தங்கி இருந்த இளம் பள்ளிச் சிறுமிகளை லாரிகளில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர்.

நைஜீரியப் பாடசாலைகளை அடிக்கடி குறி வைக்கும் மேற்குலகக் கல்வி தீமையானது என்ற கொள்கை உடைய போக்கோ ஹராம் தீவிரவாதிகள் இக்கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. திங்கட்கிழமை நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 70 பொதுமக்கள் கொல்லப்பட்ட அசம்பாவிதம் நிகழ்ந்து 24 மணித்தியாலத்துக்குள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய மதக் கொள்கைகள் அடிப்படையில் தனி மாநிலம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் போக்கோ ஹராம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திங்கள் இரவு 100 பள்ளிச் சிறுமிகள் கடத்தப் பட்ட சம்பவத்தை பிபிசி செய்திச் சேவைக்கு அரச அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியுள்ளார். எனினும் கடத்தப் பட்ட சிறுமிகளில் சிலர் கடத்தப் பட்ட வாகனங்களில் இருந்து தப்பி தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதால் எத்தனை பேர் உண்மையில் கடத்தப் பட்டனர் என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளது. முதற் தடவை பெற்றோர்கள் பிபிசிக்கு தகவல் அளிக்கையில் கடத்தப் பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 200 எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் இதுவரை வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள 3 மாநிலங்களில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதல்களில் 1500 பேர் வரை கொல்லப் பட்டுள்ளதுடன் இப்பகுதிகள் அவசரகால சட்ட ஆட்சி முறை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Tuesday 15 April 2014

இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை!- சீமான்

ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பாரதீய ஜனதா. இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்ச நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி. இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனவே அதற்காகவே அவரை நாம் ஆதரிக்கின்றோம்.

ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் அம்மையார் ஜெயலலிதா. இதையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்களே. அவர்களை போய் சீமான் ஆதரிக்கலாமா? என்று கேட்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சத்தியமாக அதை திருப்பி கட்டி விடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அழிவின் விளிம்பில் இருக்கிற தமிழ் சமுதாயத்துக்கு ஒரே தீர்வு தனி ஈழ சோசலிச குடியரசு. இலங்கை ஒரு நாடு அல்ல. அங்கு தமிழர்களும், சிங்களர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கையும், ஈழமும் பிரிய ஒரே வழி பொது வாக்கெடுப்பு தான் என்று தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் ஒரே தலைவர் ஜெயலலிதா தான்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தான் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும் அதற்கு ஒரே தீர்வு தனி ஈழம் தான். இந்த நிலைப்பாட்டை ஏற்கிறோம். அதனால் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கிறோம்.

ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்தியவர் இந்த மாநில முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கியில் பணமெடுக்கச் சென்ற இளம்பெண்ணைக் காணவில்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

செட்டிபாளையம் பிரதான வீதியை சேர்ந்த சிவலிங்கம் வைஸ்ணவி (21வயது) என்ற இளம்பெண் மட்டக்களப்பில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.

குறித்த பெண் குறித்த வங்கிக்குசென்று பணத்தினை மீள எடுத்துக்கொண்டு சென்றுள்ள நிலையிலும் இதுவரையில் குறித்த பெண் வீடு வந்துசேரவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சிங்கள அரசின் தடைப் பட்டியலுக்கு எதிரான தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்புக்கள்!

“தடை” என்பதனை நியாயத்துக்குப் புறம்பானதென நிறுவவும் சனநாயக இராசதந்திர வழிகளில், எம்மினத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதென, அமைச்சரவை தீர்மானித்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவையிலும் பின்னர் அதன் அமைச்சரவையிலும் முறையே சிங்கள அரசின் தடைப்பட்டியல் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் எடுக்கப்பட்டு செயல்முனைப்புக்கள் குறித்து நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசின் தடையினைச் செல்லுபடியற்றதாக்கும் முயற்சியில் நாங்கள் ஒன்றிணைந்த முறையில் இவ்விடயத்தை ஐ நா மனித உரிமைக் குழுவுக்கும், பேச்சு சுதந்திரத்திற்குப் பொறுப்பான ஐ.நா சிறப்புத் தூதுவரிடமும், மனித உரிமைகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிரான ஐ.நா சிறப்புத் தூதுவரிடமும், ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான குழுவிடமும் எடுத்துச் செல்லத் தீர்மானித்துள்ளோம்.

பாதிக்கப்பட்ட ஒரு மக்களாக பரிகாரம் தேடும்வகையில் எமக்கென இறைமையுடைய தமிழீழ சுதந்திர அரசை உருவாக்குவதற்கான தன்னாட்சி உரிமையை அமைதி வழியில் கோருவது ஒருபோதும் பயங்கரவாதமாகாது என்ற எமது தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்துவதோடு அந்த உரிமையை இத் தடைமூலம் மறுப்பது எமது பேச்சுச் சுதந்திரத்தை மீறுவதாகும் என்பதையும் வலியுறுத்தி வாதிடுவோம்.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக நாம் பின்வரும் மூன்று செயற்குழுக்களையும் நியமித்துள்ளோம்.

- தடைப் பட்டியலிலுள்ள ஏனைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படல்.

- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

- இவ் விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைக்கான குழுவின் முயற்சிகளை ஒருங்கிணைத்தல்.

எமது இந்தச் செயற் திட்டத்தினைத் தீவிரப் படுத்தும் நோக்குடன், மே18 தமிழீழத் தேசிய நாளையொட்டி நினைவேந்தல் வாரத்தின் போது, தமிழீழ தேசிய அட்டைகளை வழங்கும் வேலைத் திட்டத்தையும் துரித முறையில் செயற்படுத்துதல் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியவாறு “சிறிலங்காவைப் புறக்கணிப்போம்” என்ற செயற் திட்டத்தையும் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கபவுடள்ளது.

இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோ பாயங்களைக் கண்டறிவதற்காகவும்

மே18ம் தமிழீழத் தேசிய துக்க நாளிளை அண்டிய வாரத்தில் மாநாடொன்றினை பிரித்தானியாவில் நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த முன்னெடுப்புகளுக்குத் தாங்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவையும் வழங்குமாறு வேண்டுவதோடு எமது உறவுகளையும், எமது இனம் சாராத பிறரையும் இதில் பெருமளவில் கலந்து கொள்ள வைப்பது எங்கள் அனைவரதும் பெரும் பணி என்பதை இன்றயை இந்த முக்கிய கால கட்டத்தில் நான் வலியுறுத்த விரும்புகின்றேன் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.

இச்செயற்திட்டத்தினை அர்த்தமுள்ளதாக்கி வெற்றி பெறச் செய்வது முள்ளிவாய்க்காலில் மடிந்துபோன எமது உறவுகளுக்கு நாம் வழங்கும் புனிதமானதும் பொருத்தமானதுமான அஞ்சலியாகக் கருதி அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என அன்புடன் வேண்டுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நீசா பீஷ்வால் எரிக் சொல்ஹெம் இடையே சந்திப்பு!

மத்திய மற்றும் தென்னாசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஷ்வால், இலங்கைக்கான முன்னாள் நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹேம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது இலங்கை விவகாரம் தொடர்பில் இருவருக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு தொடர்பில் தமது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ள ஹெரிக் சொல்ஹேய்ம், நீசா பீஸ்வாலுடன் மேற்கொண்ட சந்திப்பைத் தொடர்ந்தும், இலங்கையில் ஜனநாயகத்தையும், அனைத்தின மக்களுக்கும் சம உரிமையையும் ஏற்படுத்த அமெரிக்க முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை புரிந்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றுக்கான பிரேரணை அமெரிக்கா நிறைவேற்றியுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை விசேடமாக கருதப்படுகிறது.

சோனியா காந்தி, மோடி இருவரும் நாளை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்!

காங்கிரஸ் தலைவர்  சோனியாகாந்தி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகிய  இருவரும் ஒரே நாளில் தமிழகத்தில் நாளை தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

மக்களவைக்கானத் தேர்தல் தமிழகத்தில் வருகிற 24ம் திகதி நடைப்பெறவுள்ள நிலையில், தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தயாராகியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இருவரும் நாளை ஒரே நாளில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

சோனியாகாந்தி நாளை நாகர்கோயிலில் நடைப்பெறவுள்ள பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார். பின்னர் அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்வார் அடுத்த இரண்டு நாட்களுக்கு என்று தமிழக காங்கிரஸ் தலைமைத் தெரிவித்துள்ளது. மோடி நாளை ஈரோடு, சேலம், திருப்பூர், விருதுநகர் என்றும், பின்னர் அதற்கடுத்த நாள் கோவை உள்ளிட்ட ஊர்களிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

'திருநங்கைகளை 3ம் பாலினமாக சேர்க்க வேண்டும்' : உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

திருநங்கைகளை 3ம் பாலினமாக சேர்க்கவேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருநங்களைகளை 3ம் பாலினமாக சேர்க்கவேண்டும் என்கிற மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று, இவ்வழக்குக்கான தீர்ப்பை  உச்ச நீதிமன்ற நீதிபதிகள வழங்கியுள்ளனர். அதன் படி திருநங்கைகளும் இந்திய நாட்டு குடிமக்கள்தான் என்றும். அவர்களை 3ம் பாலினத்தில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இன்னும் 6 மாத காலத்துக்குள் அவர்களை சட்டப்படி 3ம் பாலினமாக சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும், அவர்களுக்கு கல்வி வேலைவாய்புக்களில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளது. அதோடு சமூகம், பொருளாதாரம் இவைகளில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும், குடும்ப அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம்,   இவைகளை வழங்கி சமூகத்தில் அனைவருக்கும் சமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

குற்றப்பின்னணி உடைய எம்பி, எம் எல் ஏக்களுக்கு சிறைத்தண்டனை!: மோடி

குற்றப்பின்னணி உடைய எம்பி, எம் எல் ஏக்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நரேந்திர மோடி 3D தொழில் நுட்பத்தின் மூலம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் பேசி, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் குற்றப்பின்னணி கொண்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களை கண்டுப்பிடித்து அவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கும்படியாக தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் சிறையில்  அடைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியாவை குற்றவாளிகளிடமிருந்து மீட்டெடுப்போம் என்று மோடி சூளுரைத்துள்ளார். அரசியல் குற்றவாளிகள் வசமானதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குற்றப்பின்னணிக் கொண்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, பஞ்சாயத்து ராஜ் வரையிலான அதிகார மட்டத்திலிருக்கும் குற்றவாளிகளைக் கண்டுப்பிடித்து அவர்களுக்கும் தண்டனை வழங்குவதில் பாஜக முனைப்புடன் செயல்ப்படும் என்றும் மோடி கூறியுள்ளார்.

நைஜீரியா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு : 71பேர் பலி

நேற்று நைஜீரியா தலைநகர் அபுஜாவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில் 71பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியா தலைநகர் அபுஜாவில் உள்ள பேருந்து நிலையமொன்றில் நேற்று காலை எதிர்பாரதவிதமாக குண்டு வெடித்தது. இதில் அங்கே பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த நூற்றுக்காண பயணிகளில் 71க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நியான்யா மோட்டார் பார்க் மற்றும் பல வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை இத்தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் இருப்பினும் நைஜீரியாவில் அடிக்கடி தாக்குதல் நடத்திவரும் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பினர் இத்தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பில் போதிய விசாரணைகள் இல்லை: பிரித்தானியா

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்கள் தொடர்பில் போதிய விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது.

பாரிய குற்றங்கள் தொடர்பில் மிகவும் சொற்ப அளவிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொதுநலவாய மாநாடுகளினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரமும் சரியான விடயங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்று பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.

மோதல் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா வலியுறுத்தியதாகத் தெரிவித்த அவர், பிரதமர் டேவிட் கமரூனும் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்  என்று தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Monday 14 April 2014

இன்றைய ராசி பலன் 15-04-2014 | Raasi Palan 15-04-2014

மேஷம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். சொல்வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பொல்லாதவர்கள் உங்களைவிட்டு விலகுவர்.

ரிஷபம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். வரம் தரும் தெய்வங்களை வழிபட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். எதிரிகள் விலகுவர்.

மிதுனம்
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பலன் பெறுவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகி மன நிம்மதியைக் கொடுக்கும்.

கடகம்
உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் உள்ளம் மகிழ ஒத்துழைப்புச் செய்வர்.

சிம்மம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தெய்வீக நாட்டம் மேலோங்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி
வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினையன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். ஆலயவழிபாட்டில் ஆர்வம் கூடும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். விரயங்கள் கூடும். பயணத்தால் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.

விருச்சகம்
சித்ரகுப்தனை வழிபட்டு சிறப்புகளைக் காண வேண்டிய நாள். விருந்து விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். உறவினர் வருகை உண்டு.

தனுசு
புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும் நாள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இறைவழிபாட்டால் இன்பம் அதிகரிக்கும். வீடு கட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

மகரம்
வருமானம் இரட்டிப்பாகும் நாள். தெய்வ வழிபாடுகளில் சிந்தனையை செலுத்தி மகிழ்வீர்கள். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள் அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாக பழகுவது நல்லது. உற்ற நண்பர் ஒருவரின் வருகைக்காக காத்திருப்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.

மீனம்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கூடும் நாள். வெளியில் புறப்படும்போது உறவினர் வந்து தொல்லை தரலாம். வழிபாட்டால் வளர்ச்சி கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் இழுபறி நிலை நிலவும்.

தேர்தலில் எதிரொலிக்குமா ஈழத்தமிழர் பிரச்சனை? (காணொளி இணைப்பு)

தேர்தலில் எதிரொலிக்குமா ஈழத்தமிழர் பிரச்சனை? (காணொளி இணைப்பு).

தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய உள்ளது உள்ளபடி

வடமராட்சியில் ஊடகவியலாளர் மீது கொலை தாக்குதல்!

யாழ்ப்பாணத்தின் வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் (வயது 29) மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் பருத்தித்துறை சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? ஏன கேள்வி எழுப்பியதோடு தலையில் பலமாக கூரிய ஆயுதங்களினால் தாக்கியும் உள்ளனர். தாக்குதலில் தப்பி ஓட முற்பட்ட செல்வதீபன் மீது கலைத்துச் சென்ற இனம் தெரியாதோர் மேலும் தாக்கியபோது கால் முறிவடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

தமது மோட்டார் சைக்கிளில் விளக்குகளை அணைத்துவிட்டு அவரை பின் தொடர்ந்த நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தன்னை அடையாளம் கண்டிருக்கலாமென செல்வதீபன் தெரிவிக்கின்றார். தான் தன்னை வெளிப்படுத்த முன்பதாக தாக்குதல் நடந்ததாகவும் சுதாகரித்துக்கொண்டு ஆட்கள் அற்ற அப்பகுதியினிலுள்ள பற்றைகளினுடாக தப்பி செல்ல முற்பட்ட போதும் அவர்கள் துரத்தி துரத்தி கொலை செய்யும் பாணியினில் தாக்கியுள்ளனர். தினக்குரல் வலம்புரி மற்றும் வீரகேசரி பத்திரிகைகளிற்காக அவர் பணியாற்றியிருந்தார்.

இராணுவக்குவிப்பு மற்றும் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகளை அறிக்கையிட்டமையென பல செய்திகளை வெளிக்கொணர்ந்த செல்வதீபன் உயிருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்த அச்சுறுத்தலையடுத்து நாட்டைவிட்டு வெளியேற முற்பட்டிருந்தனர். அவ்வாறு அடைக்கலம் கோர அவர் விண்ணப்பித்த சுவிஸ் அரசு நிராகரித்திருந்ததுடன் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதுமில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கணிசமான வெற்றி இல்லையெனில் பதவி பறிக்கப்படும்:சோனியா எச்சரிக்கை!

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கணிசமான வெற்றிப்  பெறவில்லை என்றால், மாநில முதல்வர்கள் பதவி பறிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 3கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் சற்றே விழிப்படைந்துள்ளது. கருத்துக் கணிப்புக்கள் பாஜகவுக்கு சாதகமாக வந்துக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் பாஜகவை எப்படியும் பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்ப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் ஆளும் 11 மாநில முதல்வர்களுக்கும் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் படி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆளும் 11 மாநிலங்களிலும், அம்மாநில முதல்வர்கள் கடுமையாக உழைத்து மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும், அப்படி வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்றால் மாநில முதல்வர் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சோனியாகாந்தி. சோனியாகாந்தியின் இந்த எச்சரிக்கை மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேஷ் உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மே 12, 13 களில் இந்திய-இலங்கை மீனவத்தரப்பு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை?

இந்திய-இலங்கை மீனவர்கள் தரப்புப் பேச்சுவர்த்தையை மே 12,13 திகதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக, அரசின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை மீனவர்களின் மீன்ப்பிடிப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித் தீர்வுக்கான இரு நாட்டு அரசுகளும் முடிவெடுத்தன.

இதன் அடிப்படையில்  கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி சென்னையில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினர். இதில் சுமுகமானத் தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று இரு நட்டு மீனவப் பிரதிநிதிகளும் கூறினாலும், இலங்கை கடற்ப்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப் படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இலங்கையில் கொழும்பு நகரில் நடைப்பெறுவதாக இருந்தது.

ஆனால்,இலங்கை சிறையில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவித்த பிறகே பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு சம்மதம் தெரிவிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். இலங்கை அரசும் தமிழக மீனவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்தது. இருப்பினும், இலங்கை கடற்ப்படையினர் தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததை அடுத்து, இலங்கை அரசு சிறையில் இருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இதை அடுத்து மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் இரு தரப்பு மீனவப் பிரதிநிதிகளின்  பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு, இப்போது மே மாதம் 12 அல்லது  13 திகதிகளில் வைத்துக்கொள்ள சம்மதம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மத்திய அரசு தெரிவிக்கும் பதிலைப் பொறுத்தே மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இருக்கும் என்றும் தெரிய வருகிறது.

லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் ஈழத்தமிழரின் வித்தியாசமான போராட்டம்!

லண்டனில் மரதன் ஓட்டப் போட்டி நேற்று நடத்தப்பட்ட வேளையில், ஈழ இளைஞர் ஒருவர் வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்.

இந்த ஓட்டப் போட்டியில் ஆர்வலராக கலந்துக் கொண்ட அவர், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்திய பதாதைகளை தம்முடன் கட்டியவாறு இந்த போட்டியில் கலந்துக் கொண்டிருந்தார். 

அதில் இலங்கையில் இடம்பெற்றது வெறும் யுத்தம் இல்லை.

அங்கு நடைபெற்றது இனப்படுக்கொலைகள், தற்போது நடந்துக் கொண்டிருப்பதும் இனப்படுக்கொலைகளே என்று வசணங்கள் எழுதப்பட்டிருந்தன.

அத்துடன் இனப்படுக்கொலைகளுக்கு உள்ளான மக்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பைபிளில் கூறப்பட்டிருந்த உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி என்ற வசணமும் அதில் எழுதப்பட்டிருந்தது.

ஜெர்மனியில் பொப் பாடல் பாடி அசத்தியுள்ள ஈழத்துச் சிறுமி சபேசினி! (காணொளி இணைப்பு)

ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்து சிறுமி சபேசினி செந்தூர்ச்செல்வன் ஜெர்மனியில் நடைபெறும் All rights too The voice kids SAT 1 நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக பொப் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார்.

சபேசினியின் குரல் ஒரு வித்தியாசமான பொப் இசைக்கு ஏற்ற அருமையான குரல் மற்றும் தனது குரலுக்கு ஏற்ற பாடல் தெரிவு என்றும் பாராட்டினார்கள்.

மற்றும் மூன்று நடுவர்களில் சபேசினிக்கான பயிற்சியாளரை தெரிவு செய்யும் போது "ஜோகானஸ்"என்ற நடுவரை அவர் தெரிவு செய்கிறார்.

அப்போது ஜொகானஸ் அளவு கடந்த மகிழ்ச்சியை சொல்ல மற்றைய இரு நடுவர்களும் தம்மை பயிற்சியாளராக தெரிவு செய்யவில்லையென தமது கவலையை சொல்கிறார்கள்.

சபேசினியின் திறமையான வெளிப்பாட்டின் பெறுபேறுகள் நடுவர்கள், அவையோர்கள்,மற்றும் உறவுகளின் குதூகலிப்பிலும் வெளித்தெரிகிறது.

ஈழத்து சிறுமி  சபேசினிக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

ரத்தம் ஒழுக நிற்கும் தமிழன்: கண் மண் தெரியாமல் தாக்கிய சிங்கள இராணுவம்!

நேற்று இரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக மினிபஸ் உரிமையாளர் ஒருவர் மீதுஇராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் துரைராசா மகேந்திரராசா என்னும் மினிபஸ் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக் கிழமை குறித்த நபர் மினிபஸ்ஸை யாழ்.பிரதான தபால்கந்தோர் முன்பாக செலுத்திய வேளை மதுபோதையில் நின்ற இருவர் வாகனத்தை செலுத்த இடைஞ்சல் ஏற்படுத்தியதுடன்; வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது.

குறித்த கைகலப்பில் ஈடுபட்டவர்கள் சிவில் உடையில் நின்ற இராணுவத்தை சேர்ந்தவர்கள் என மினிபஸ் உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்று இரவு பண்ணை மினிபஸ் நிலையத்திற்கு முன்பாக கைகலப்பில் ஈடுபட்ட நபர் உட்பட 10 சிப்பாய்கள் இராணுவ உடையில் சென்று மகேந்திரராசாவை தனியாக அழைத்தனர். பின்னர் அவரிடம் எவ்வித கேள்விகளுமின்றி கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு சென்றனர்;. இதனால் அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ். பொலிஸாரால் ஒரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தோல்வி பயம் காரணமாகவே நரேந்திர மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்: கி.வீரமணி பேச்சு

இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மோடி அலை வீசவில்லை என்றும், மோடிதான் நாடு முழுவதும் அலைந்துகொண்டிருப்பதாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அரக்கோணம் திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவனை ஆதரித்து, ஆற்காடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது,

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்றால், அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் போட்டியிடாமல் வாரணாசியிலும் போட்டியிடுவது ஏன். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி என்று அவருக்கு பயம் வந்துவிட்டது. தோல்வி பயம் காரணமாகவே மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மோடி அலை வீசவில்லை. திமுக தலைமையிலான அணி பலமான கூட்டணி. மக்கள் பலம் இந்த கூட்டணியில் உள்ளது. எதிர்காலத்தில் மக்கள் பிளவுப்பட்டுவிடக் கூடாது என்பற்காகவும், அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதறக்ôகவும் மதசார்பற்ற வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

வாரணாசித் தொகுதியில் போட்டியிட பிரியங்கா விருப்பம் கொண்டார்?

வாரணாசித் தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா விருப்பம் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புனித நகரம் என்றழைக்கப்படும் வாரணாசியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவருக்கு எதிராகப்  போட்டியிட கனமான வேட்பாளர் வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுக் கொண்டிருக்கையில், தாம் அந்தத் தொகுதியில் நிற்க விருப்பம் கொண்டுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்திருந்திருக்கிறார். இதுக் குறித்து காங்கிரஸ் மூத்தத்  தலைவர்கள் ஆலோசித்து வந்ததாகவும், சோனியாகாந்தி இதை மவுனமாக கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்தத்  தலைவர்கள் பிரியங்கா காந்தி, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இவ்வேளையில் இடையில் கருத்துத் தெரிவித்த சோனியாகாந்தி, பிரியங்கா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறியுள்ளதோடு, தாம் மற்றும் ராகுல் காந்தி போட்டியிடவுள்ள தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டால் போதும் என்றும் கூறியதால், பிரியங்கா காந்தி போட்டியிட இருந்த விருப்பத்தை மாற்றிக்கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாயுள்ளன.

புதுவருடக் கொண்டாட்டங்களுள் மறந்துவிட்ட விபூசிகா....!

விடிந்தும் விடியாத அதிகாலையில் எழும்பி மருத்து நீர் தலையில் தெளித்து தோய்ந்து, புத்தாடை உடுத்தி, ஆலயங்கள் போய் அதன்பின் உற்றார், உறவினர் என்று குதூகலித்து ஒரு புத்தாண்டு வழமை போலவே எங்கள் எல்லோருக்கும்....ஆனால் விபூசிகா என்ற அந்த சிறுமிக்கு.....?

சிறைச்சாலைக்கு

சர்வதேச விசாரணை வரும் ஜூன் மாதமே நடைபெறும்!

இலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக ஐ.நா உயர்அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான பொறிமுறை பற்றிய தெளிவற்ற நிலை காணப்படுகிறது.

இந்த நிலை மே மாத இறுதியிலேயே முடிவுக்கு வரும்.

அதன்பின்னரே முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் இந்த விசாரணை முயற்சிகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பதுடன், அதற்கு அயல்நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், இலங்கைக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றன.

அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு. இலங்கை அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் வேலைத்திட்டம் குறித்து தமிழீழ அரசாங்கம் ஆராய்வு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய கூட்டம் ஒன்று எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரனின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சர்வதேச நாடுகள்  அறிந்துக் கொள்வதற்காக, சமாதானமானதும், ஜனநாயகமானதுமான வழிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போராடும் என்றும் அவர் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இலங்கைப் பொருட்களை புறக்கணிக்க கோரும் முன்னெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை செய்யும் வகையிலேயே எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி பிரித்தானியாவில் ஒன்று கூடவிருப்பதாக அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள தடைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் தாக்குதல் நடத்திய படையினருக்கு எதிராக மக்கள் போராட்டம்!

யாழ்.நகரினில் மினிபஸ் உரிமையாளர் மீது நேற்றிரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் துரைராசா மகேந்திரராசா படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக் கிழமை குறித்த நபர் மினிபஸ்ஸை யாழ்.பிரதான தபால்கந்தோர் முன்பாக செலுத்தினார். இதன் போது மதுபோதையில் நின்ற இருவர் வாகனத்தை செலுத்த இடைஞ்சலை ஏற்படுத்தியதுடன்; வாய் தர்கத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதன் பின்னர் மினிபஸ் உரிமையாளருக்கு குறித்த கைகலப்பில் ஈடுபட்டவர்கள் சம்பவ தினத்தன்று சிவில் உடையில் நின்ற இராணுவத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு பண்ணை மினிபஸ் நிலையத்திற்கு கைகலப்பில் ஈடுபட்ட நபர் உட்பட 10 சிப்பாய்கள் இராணுவ உடையில் சென்று மகேந்திரராசாவை தனியாக அழைத்தனர். பின்னர் அவரிடம் எவ்வித கேள்விகளுமின்றி கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு சென்றனர்;. இதனால் அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து அங்கு குழப்பகரமான நிலை ஏற்பட்டது.குறித்த படையினர் அங்கிருந்து வெளியேறிவிடாமல் முற்றுகையினில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் யாழ். பொலிஸாரால் ஒரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வடக்குக்கு வருகிறாராம் தென்னாபிரிக்காவின் ராமபோச!

தென்னாபிரிக்க அரசின் விசேட பிரதிநிதி சிறில் ராமபோச எதிர்வரும் மே மாத இறுதியில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு வருகை தரவுள்ளார். இவர் தென்னாபிரிக்க அரசால் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியாவார்.

இங்கு வரும் சிறில் ராமபோச கள நிலைமைகளை நேரடியாக ஆராய்வதோடு, தமிழ் சிவில் சமூக, அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்துக்கலந்துரையாடுவார். அதன் பின்னர் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுத் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனிடையே தென்னபிரிக்க சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுரேஸ்பிறேமச்சந்திரன் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே தென்னாபிரிக்க அரசு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட பிரதிநிதியான சிறில் ராமபோயை நியமித்தது.

எமது பயணத்தின்போது விசேட பிரதிநிதியான சிறில் ரமபோ மற்றும் தென்னாபிரிக்க அரசின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர், தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தினோம். குறித்த சந்திப்புக்களின் போது நாம் தமிழர் தரப்பு நியாயங்களை முன்வைத்தோம். இந்திய - இலங்கை ஒப்பந்தம், அதனூடான 13 ஆவது திருத்தச் சட்டம், அவற்றுக்கு என்ன நடந்தது, பிரேமதாசா மற்றும் சந்திரிகா ஆகியோரின் காலங்களில் கொண்டு வரப்பட்ட தீர்வுத் திட்டங்களுக்கு என்ன நடந்தது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நடந்த சர்வகட்சிக் குழுவின் அறிக்கைக்கு நடந்தவை என்பவை தொடர்பாக அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தோம்.

தமிழர் தரப்புக்கள் ஏமாற்றப்பட்டு வருவதை நாம் அவர்களுக்குப் புரிய வைத்தோம்.முக்கியமாகத் தற்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களையும் அவர்களுக்கு எடுத்துக் காட்டினோம். இராணுவ முற்றுகைக்குள்ளான தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வியல், கடத்தல்கள், காணாமற்போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துக்கூறியுள்ளோம் எனத்தெரிவித்துள்ளார்.

தொடரும் கைதுகள்! மட்டக்களப்பினை சேர்ந்த மூவர் வவுனியாவினில் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 3 பேர் வவுனியாவில் வைத்து பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் கணவனும் மனைவியும், கருணா குழுவில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.அவர்களுடன் கைது செய்யப்பட்ட அவர்களின் பிள்ளைகள் மூவர் மட்டக்களப்பில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொமன்வெல்த் விளையாட்டிற்கு மகிந்த தலைமை தாங்க விடக் கூடாது!

இனவழிப்பு செய்த கொடுங்கோலன் ராஜபக்ச காமன் வெல்த் விளையாட்டில் தலைமை தாங்கக் கூடாது எனக் கோரியும் எமக்கான நீதி கேட்டும் Glasgow வில் நடைபெறவிருக்கும் இப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் தயாராகுங்கள். இடம் நேரம் பின்னர் அறியத்தரப்படும்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா எத்தடைகள் வரினும் எமது தாயக விடுதலைக்காய் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்.

தமிழ் மக்களின் நலத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் - நரேந்திர மோடி

இலங்கை, மலேசியா, பிஜி போன்ற நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் நலத் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இலங்கை, மலேசியா, பிஜி போன்ற நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் நலத் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இதனை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். இதேவேளை இந்தியாவுக்கு அடிபணியாத இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தொடர்பில் கடுமையான அணுகமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறக்கும் புதுவருட பலன்களின் அதிஸ்ரம் | Raasi Palan 14-04-2014

கிரக சஞ்சாரங்களின் படி ஜய வருடத்தின் அனைத்து ராசிகளுக்கான புதுவருட ராசி பலன்கள்.

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.

பூமி காரகனான செவ்வாயை ஆட்சி வீடாக கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இவ்வருடம் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி முதல் அஷ்டம சனி தொடங்குகின்றது. ஆனி மாதம் 28ஆம் திகதியில் உங்கள் ராசியை விட்டு ராகு பகவான், கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். ஆனி மாதம் 5ஆம் திகதி ணிதல் குருபகவான் 3ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே செய்யும் பணியிலும் தொழிலும் கவனம் தேவை. உடல் நலம் பாதிப்படையும். ஆனால் ஆயுள் கண்டம் கிடையாது. இவ்வருடத்தில் அஷ்டம சனி ஆரம்பிப்பதாலும் இந்த ராசிக்கு குரு பார்வை வருடம் ணிழுவதும் சனீஸ்வரன் மேல் இருப்பதால் அதிகமாக கெட்ட பலன் இருந்த போதிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தொழிலில் விருத்தியும் முன்னேற்றணிம் உண்டாகும். மாணவர்கள் மிகவம் கஷ்டப்பட்டு படித்து நல்ல பெறுபேற்றை பெறுவார்கள். மிகவும் வேதனையை தந்த நோய் பாதிப்பு குறையும். ஆனால் ஆடி மாதத்தில் உடல்நிலையில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு. இவ்வருடத்தில் கொடுக்கல்- வாங்களை தவிர்க்கவும். இல்லையேல் அதிக பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை உருவாகும். கூட்டு வியாபாரத்தை தவிர்க்கவும். நீண்டகால முதலீட்டினால் இலாபம் அதிகரிக்கும். வைகாசி மாதத்தில் தங்கம் சேரும். இதுபோன்ற பலன்களை கொண்ட ஆண்டு இது.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நெய்தீபணிம் சனீஸ்வரனுக்கு எள்தீபமும் ஏற்றி வணங்கி வரவும். ஆடி மாத முதல் செவ்வாய் அன்று பழனி முருகனையும் ஸ்ரீ போகர் ஜீவ சமாதிக்கு குங்கும அர்ச்சனை செய்து வணங்கி வர துன்பம் விலகி நன்மை உண்டாகும்.

இடபம்

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

களத்திரகாரகனான சுக்கிரனின் ஆதிகத்தில் பிறந்த இடப ராசி அன்பர்களே..!

இவ்வருடம் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி நடக்கும் சனிபெயர்ச்சியும் ஆனி மாதம் 28இல் நடக்கும் ராகு பகவான், கேது பகவான் இடப்பெயர்ச்சியாலும் மிகவும் நல்ல பலன்களே உள்ளன. ஆனி மாதம் 5ஆம் திகதி ணிதல் குருபகவான் 2ஆம் இடத்தில் இருந்து 3ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவதால் சுப காரியங்களை வைகாசிக்குள் செய்து முடிப்பது நன்மையை தரும். ஏனெனில் வைகாசிக்குப் பிறகு நீங்கள் அநேக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட கூடும். ஐப்பசி மாதம் உங்கள் வாழ்க்கைத் துணையின் சரீரத்தில் சிறு சிறு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. அத்தோடு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும் எனவே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மையை தரும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் விருத்தி அடையும். சித்திரை, வைகாசி, மாசி, பங்குனி மாதங்களில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அதிகரிக்கும் இடையிடையே உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செயலால் செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் – வாங்களில் இவ்வருடம் பெரிய நன்மை இராது. எனவே கவனம் தேவை. இவ்வாறான பலன்களைக் கொண்ட ஆண்டு இது.

பரிகாரம்: ஐப்பசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு வியாழக்கிழமை அன்று கதிர்காமம் சென்று பிரார்த்தனை செய்துவருவதுடன் அடிக்கடி சிறு குழந்தைகளுக்கு இனிப்பு தானமாக கொடுத்து வர தடைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கல்விக்கு அதிபதியான புதனை ஆட்சி வீடாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!

இதுவரை காலம் நீங்கள் எதிர்நோக்கிய துன்பம் குறையும். நீங்கள் செய்த புண்ணியத்திற்கும் தானதர்மத்திற்கும் கடவுள் வழிபாடுகளுக்கும் நல்ல பிரதி பலன்களை தரக்கூடிய வருடம் இது. செய்யும் தொழில் அல்லது வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தனம் தானிய விருத்தி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு ஆனி மாதம் வேலை வாய்ப்பு கிட்டும். இவ்வளவு காலம் தொல்லை கொடுத்து வந்த நோய் நீங்கும். உங்களுக்கு வீடு, மனை கட்டுவதற்கு ஏற்ற காலமாக இருப்பதால் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய தொழில் முயற்ச்சியில் ஈடுபடலாம். பழைய கடன் வசூல் ஆகும். வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும். இவ்வருடத்தில் ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி ஆகியவை மிகவும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மாதங்கள் ஆகும். கார்த்திகை, மார்கழி மாதத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். மொத்தத்தில் யோகம் நிறைந்த ஆண்டு இது.

பரிகாரம்: உங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று ஜென்ம குருவுக்கும் குலதெய்வத்துக்கும் அபிஷேகம் செய்து தரிசனம் செய்து வர, வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றமும் செல்வணிம் இன்பமம் கிடைக்கும்.

கடகம்

புனர்புசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மாத்ருகாரணாகிய சந்திரபகவானை ஆட்சி வீடாக கொண்ட கடக ராசி அன்பர்களே..!

கடந்த வருடத்தில் திடீர் விரையம், தொழிலில் நஷ்டம், வாழ்வில் முன்னேற்றம் இன்மை போன்ற பலன்களையே அனுபவித்திருப்பீர்கள். ஆனால் இவ்வருடத்தில் இவைகள் ஓரளவு மாறும். ஐப்பசி மாதத்திற்கு பிறகு பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மார்கழி, தை, மாசி மாதங்களில் உடல் ரீதியான துன்பமும் மனரீதியான குழப்பங்களும் ஏற்படும். எனவே இம்மாதங்களில் முக்கியமான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். காரணம் அவை நல்ல பலன்களை தராது. அத்தோடு கூட்டு வியாபார முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். மற்றும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஈடுபடவேண்டாம். மாறாக பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. வீடு வாங்குவது, விற்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்களானால் பணம் கொடுக்கல் -வாங்களை உடனே செய்து முடித்தால் அது பூரணமாக முடிவடையும். இல்லையேல் பல சிக்கலை உருவாக்கும். உடனடி விரையம் நல்ல பலனைத் தரும். இவ்வாறான தடைகள் நிறைந்த வருடத்தில் நான்கு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று வீட்டில் கணபதி ஹோமம் செய்வதால் நன்மை உண்டாகும்.

பரிகாரம்: ஒவ்வொரு வியாழன் அன்றும் தக்ஷ்ணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து மனமுருக வேண்டி வர துன்பம் படிப்படியாக விலகி நன்மை உண்டாகும்.

சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

ஆத்மகாரகனாகிய சூரிய பகவானை ஆட்சி வீடாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வருடத்தில் சித்திரை, வைகாசி மாதத்திற்குள் நீங்கள் சுபகாரியம் மற்றும் சுப செலவுகளை செய்துகொள்ள கூடிய காலமாகும். ஆனி மாதம் 5ஆம் திகதி நடைபெற உள்ள குரு பெயர்ச்சியும் ஆனி மாதம் 28ஆம் திகதி நடைபெற இருக்கும் ராகு – கேது பெயர்ச்சியும் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல பலன்களை தராது. ஆனி மாதம் முதல் எதிர்பாராத வீண் விரயங்களும் உடல் நல பாதிப்பும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடும் ஏற்படும். வீண் செலவுகளால் கடன் ஏற்படுவதை தவிர்க்க சித்திரை, வைகாசி மாதத்துக்குள் நீங்களே உங்கள் சக்திக்கு ஏற்றாற் போல் வீடு, காணி அல்லது தங்கம் வாங்குவது நல்ஷது. இவ்வருடம் சொத்துக்களை விற்காமல் சமாளிப்பது நல்லது. ஆனி மாதம் கடன் வாங்கினால் கடனினால் தீமை அதிகரிக்கும். ஆனி மாதத்திற்கு பிறகு மனநிறைவான வாழ்க்கை அமையும். தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். புதிய தொழில் முயற்ச்சி வெற்றி அடையும். பெற்றறோருக்கு நன்மை. இதுபோன்ற பலனை கொண்ட வருடம் இது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுவதுடன் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்து வர தீமை விலகி நன்மை அதிகரிக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

புத்திர காரணாகிய புதனை ஆட்சி வீடாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். இவ்வருடம் திருமண யோகம் நிறைந்த வருடமாக இருப்பதால் தடைபெற்ற திருமணம் சுமூகமாக நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். ராகு – கேது கிரகங்களின் மேல் குரு பகவானின் பார்வை உள்ளதால் இக்காலத்தில் உங்கள் எண்ணம் போல் அனைத்தும் நன்மையாகவே நடைபெறும். மனக்குழப்பம் தீரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்ச்சி வெற்றி அடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சித்திரை மாதத்தில் சில கஷ்டங்கள் ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவும். மனவேதனை அதிகரிக்கும். மற்றவர்களிடம் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதற்கு பரிகாரமாக முன்னோர்களுக்கு படையலும் குலதெய்வ வழிபாடும் செய்வதால் பிரச்சினைகள் நீங்கும். மிகவும் நல்ல பலன்களை கொண்ட வருடம் இது.

பரிகாரம்: ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபம் இட்டு கற்கண்டு, துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்து வர தீமை விலகி நன்மை உண்டாகும்.

துலாம்

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

களத்திரகாரனான சுக்கிரனை ஆட்சி வீடாக கொண்ட துலா ராசி அன்பர்களே..!

இந்தவருடம் ஆனி மாதம் 28ஆம் திகதி நிகழும் ராகு – கேது பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன்களே உள்ளன. இக்காலத்தில் வாழ்வில் முன்னேற்றமும் வெற்றியும் கிட்டும். ஆனி மாதம் 5ஆம் திகதி நடைபெறும் குருபெயர்ச்சியால் தொழிலில் முன்னேற்றமும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் அமையும். ஐப்பசி மாதம் 16ஆம் திகதி நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் ஏழரை சனியின் கடைசி 2 ஆண்டுகள் ஆரம்பமாவதால் ஆனி மாதம் 5ஆம் திகதி முதல் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி வரை மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இக்காலத்தில் முக்கியமான எந்த முடிவுகளையும் எடுக்கவேண்டாம். அவ்வாறு எடுத்தால் அது நிறைவாகாது. சனிப் பெயர்ச்சியால் குருபார்வை இருப்பதால் நன்மையான பலன்களே விளையும். ஐப்பசி மாதத்திற்கு பிறகு யோகமான காலம் ஆகும். திருமணத்தடை நீங்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தனம் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும். இவ்வாறான நல்ல பலன்களே இவ்வருடத்தில் உள்ளது.

பரிகாரம்: வருடத்தில் இருமுறையாவது வியாழக்கிழமை அன்று ரம்பொட ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று சுவாமியை தரிசிப்பதோடு வடை மாலை சாத்தி வழிபட துன்பம் விலகி நன்மை உண்டாகும்.

விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை ணிடிய ஆக 9- பாதங்கள்.

சகோதரகாரகனாகிய செவ்வாயை ஆட்சி வீடாக கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..!

இவ்வருடம் ஆனி மாதம் 5ஆம் திகதி நடக்கும் குருபெயர்ச்சியும் ஆனி மாதம் 28ஆம் திகதி நடக்கும் சனி மற்றும் ராகு – கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு நல்ல பலன்களையே தரும் இடத்தில் அமைந்துள்ளது. ஐப்பசி மாதம் 16ஆம் திகதி ஏற்படும் ஜென்ம சனி உச்சம் பெற்று குருவின் பார்வையில் யோக காரணாக மாறுகிறார். எனவே இவ்வருடம் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் உதவி கிடைக்கும். வைகாசி மாதம் தங்கம் வாங்க ஏற்ற மாதம் ஆகும். பங்கு வர்த்தகம் போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். மார்கழி மாதம் ணிதல் பங்குனி மாதம் வரை பணத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் ணின்னேற்றம் அடைய சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எந்த காரியத்தை செய்தாலும் சில அலைச்சலுக்கு பிறகே வெற்றி அடையும். இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்கள் கிடைக்க சனிக்கிழமை நவகிரகங்களை வழிபாடு செய்து வர பாதிப்பு நீங்கும். இவ்வாறான நல்ல பலன்களை கொண்ட ஆண்டு இது.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வணங்கி வர தீமைகள் விலகி நன்மை உண்டாகும்.

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தேவகுரு பிரகஸ்பதியை ஆட்சி வீடாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

கடந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு குருபார்வை இருந்ததாலும் குருவுக்கு கேது பார்வை இருந்ததாலும் குருவுக்கு மிதுனம் பகை வீடாக இருந்ததாலும் குரு பார்வையால் உங்கள் ராசிக்கு நல்ல பலன்களை தரணிடியவில்லை. இவ்வருடம் ஆனி மாதம் 28ஆம் திகதி நிகழும் ராகு – கேது பெயர்ச்சி 4ஆம் இடத்தில் இருந்து 10ஆம் இடமான சுக ஜீவன் ஸ்தானத்தில் அமைகிறது. ஐப்பசி மாதம் 16ஆம் திகதி ஏற்படும் சனிப் பெயர்ச்சியால் ஏழரை சனி ஆரம்பிக்கின்றது. இவ்வருடம் வீடு அல்லது தொழில் ஸ்தாபனத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வயிற்றில் உஷ்ணம், வாயு சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை நோய் ஏற்படக்கூடும். மருத்துவரை நாடுவது நலம். வியாபாரத்தில் பல நஷ்டங்களை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்வில் சில சிக்கல், குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொடர்ச்சியாக பகை உருவாகும். கொடுக்கல் – வாங்களில் சிக்கல் ஏற்படும். இருந்தபோதிலும் ஆடி மாதத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று கணபதி ஹோமம், ஆயுள் ஹோமம் செய்துவர இப்பாதிப்பு குறைந்து நன்மை அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடும் 8 நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர துன்பம் விலகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2 -ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தொழில் காரகனாகிய சனிஸ்வரனை ஆட்சி வீடாக கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்த வருடம் ஆனி மாதம் 5ஆம் திகதி நிகழும் குரு பெயர்ச்சியில் உங்களுக்கு குருபலன் பரிபூரணமாக வருகிறது. ஆனி மாதம் 28ஆம் திகதி நிகழும் ராகு – கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாகவே அமைகிறது. ஐப்பசி மாதம் 16ஆம் திகதி உள்ள சனி பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாகவும் லாபஸ்தானத்தில் அமைகிறது. எனவே இவ்வருடம் அதிர்ஷ்டமானதாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் – மனைவி இடையே உள்ள பிணக்குகள் தீரும். வாழ்வில் பதவி உயர்வு தேடிவரும். மாணவர்களின் கல்வியில் ணின்னேற்றம் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம், தங்கம் வாங்கும் யோகம் உண்டு. குழந்தைகளால் மேன்மையும் சந்தோஷணிம் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவு அதிகரிக்கும். வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். வாழ்வில் அனைத்தும் நன்மையாகவே நடக்கும் காலம் இது.

பரிகாரம்: வியாழக்கிழமை கிருஷ்ணரை வழிபாடு செய்து வருவதால் அனைத்து யோகமும் தடையின்றி கிட்டும்.

கும்பம்

அவிட்டம் 3, 4, சதயம், புரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆயுள் காரணாகிய சனீஸ்வரனை ஆட்சி வீடாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

கடந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு குருபார்வை இருந்தாலும் உங்கள் ராசி நாதன் சனிபகவான் ராகுவின் பிடியில் இருந்தார். மற்றும் குருபகவான் பகை பெற்று இருந்ததால் குருவுக்கு பலமும் பர்வையும் இல்லாமல் இருந்தது. ஆகவே தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இருப்பீர்கள். இந்த வருடம் ஆனி மாதம் 5ஆம் திகதி குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய போகிறார். எனவே கடன் வாங்கி வீடு, காணி வாங்கும் யோகம் ஏற்படும். ஆனால் கடன்கொடுத்தால் தீமையே விளையும். ஆனி மாதம் 28ஆம் திகதி ராகு – கேது 2ஆம் இடத்தில் இருந்து 8ஆம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆனி, ஆடி மாதங்களில் தொலை தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்ஷது. மாணவர்கள் கடினமாக ணியற்சி செய்தால் மட்டுமே பரீட்சையில் நல்ல பெறுபேற்றை பெறலாம். சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களை மேற்கொள்ளலாம். ஐப்பசி 16ஆம் திகதி நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தை கொடுக்கும். மனநிறைவான வாழ்க்கை உண்டாகும். பெற்றறோருக்கு நன்மை அதிகம். ஆரோக்கியம் வலுவடையும். தேவைகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். மத்திம பலன்களை கொண்ட காலம் இது.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி கொழுக்கட்டை படைத்து மனமுருகி வணங்கிவர நன்மை உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

தேவ குருவை ஆட்சி வீடாக கொண்ட மீன ராசி அன்பர்களே..!

ஆனி மாதம் 5ஆம் திகதி உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்து உச்சம் பெறுகிறார். ஆனி மாதம் 28ஆம் திகதியன்று ராகு – கேதுக்கள் 1, 7ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ராகு – கேதுவுக்கு லனமும் கன்னியும் நட்பு ஸ்தானமாக இருப்பதாலும் கேதுவுக்கு குருபார்வை பெறுவதாலும் மிகவும் நல்ல பலன்களே உள்ளன. ஜப்பசி மாதம் 16ஆம் திகதியில் அஷ்டம சனியும் முழுமையாக விலகுவதால் இனிமேல் உங்களுக்கு மிகவும் யோகமான காலமாகும். கடந்த இரண்டரை ஆண்டு காலம் அனுபவித்த துன்பம், கஷ்டம், பிரச்சினைகள் விலகி நல்லதொரு வழிகிடைக்கும். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். மனமகிழ்ச்சி அடையும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குழந்தைப் பாக்கியம் கிட்டும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடலாம். வியாபாரம் விருத்தி அடையும். வீடு, மனை, வாகனம் வாங்கம் யோகம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். கணவன் – மனைவி உறவு மேம்படும். மிகவும் நல்ல பலன்களை தரக்கூடிய ஆண்டு இது.

பரிகாரம்: சித்திரை மாதத்தில் வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் செய்ய நன்மை அதிகரிக்கும். அத்தோடு சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமும் நல்ல பலன் கிட்டும்.

இன்றைய ராசி பலன் 14-04-2014 | Raasi Palan 14-04-2014

மேஷம்
வாழ்த்துச் செய்திகளால் வளம் காண வேண்டிய நாள். சந்திர வழிபாட்டால் சந்தோஷம் கூடும். தொழில், உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். உறவினர் வருகை உண்டு.

ரிஷபம்
சிறப்புகள் வந்து சேர சித்ரகுப்தனை வழிபட்டு மகிழ வேண்டிய நாள். பழைய நண்பர்களின் மூலம் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிட்டும்.

மிதுனம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கடகம்
பணவரவு பெருக பவுர்ணமி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். பொது நல ஈடுபாட்டால் புகழ் காண்பீர்கள். உடன் பிறப்புகள் உறுதுணைபுரிவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.

சிம்மம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பெரியவர்களின் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

கன்னி
கோவில் வழிபாட்டால் குதூகலம் அடையும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்பத்தினர்களின் அனுசரிப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.

துலாம்
காரிய வெற்றி ஏற்பட கணபதியையும், கந்தனையும் வழிபட வேண்டிய நாள். இடமாற்றம், ஊர்மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சகம்
மலை வலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். ஆன்மிகப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியாகச் சில புது முயற்சி எடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

தனுசு
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய முன் வருவீர்கள். மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள்.

மகரம்
புதிய நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். ஆனந்தம் பெருக ஆனைமுகனையும், ஆறுமுகனையும் வழிபட்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்குவதில், விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் மாறும்.

கும்பம்
நம்பிக்கைகள் நடைபெற தும்பிக்கையானை வழிபட வேண்டும் நாள். பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வி.ஐ.பி.க்கைளை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்
ஆற்றல் மிக்கவர்களை சந்தித்து ஆனந்தமடையும் நாள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

Sunday 13 April 2014

இன்றைய ராசி பலன் 13-04-2014 | Raasi Palan 13-04-2014

மேஷம்
திறமைகள் வெளிப்படும் நாள். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும். பழைய கடனை அடைக்கப் புதிய கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகும். அரசு வழி அனுகூலம் உண்டு.

ரிஷபம்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் மாற்றம் செய்ய புதுமுயற்சிகளை எடுப்பீர்கள்.

மிதுனம்
பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் உபத்திரவங்கள் அகலும்.

கடகம்
பொருளாதார நிலை உயரும் நாள். வம்பு, வழக்குகள் தீரும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். இளைய சகோதரத்தின் வழியில் இனிய உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்
வியாபார விருத்திக்கு வித்திடும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். தொலைதூரப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். கோவில் வழிபாட்டால் குதூகலம் காண இயலும்.

கன்னி
கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்
பக்குவமாகப் பேசிப் பாராட்டுக்களைப் பெறும் நாள். உற்றார், உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். மாலையில் மனநிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

விருச்சகம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

தனுசு
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். வீடுகட்டும் பணிகளுக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

மகரம்
சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும் நாள். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். ஆரோக்கியம் சீராகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். வீடுகட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

கும்பம்
விரயங்கள் மேலோங்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருத்தமடைவீர்¢கள். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும்.

மீனம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியன்று வந்து சேரும். நீண்ட நாளைய ஆசையன்று நிறைவேறும்.

Saturday 12 April 2014

மலேசிய விமானம் மாயமான போது துணை விமானி செல்போனில் அவசர அழைப்பு?

மாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னாள் அதன் துனை  விமானி தனது செல்போனில் அழைப்பு விடுத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் பீஜீங் சென்ற விமானம் கடந்த மாதம் 8-ந்தேதி அதிகாலையில் மாயமானது. இந்த விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்கள் மற்றும், கப்பல்கள் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மேலும் விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்கும் நோக்கில், அதற்கான நவீன கருவிகளுடன் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

 இந்த நிலையில், மலேசியாவில் வெளிவரும் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பினாங் தீவுக்கு மேலே விமானம் பறந்த போது, துணை விமானி, தனது செல்போன் மூலமாக யாருக்கோ அவசர அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் வேகமாக பறந்ததால் செல்போன் டவர் மாறியதால் இந்த இணைப்பு பாதியிலேயே துண்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் பரிக் அப்துல் ஹமிது யாருக்கு தொடர்பு கொண்டார் என்பதை கண்டறிய முடியவில்லை.

இந்த பகுதியில் பறந்த போது தான், விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது என்பதால், அவர் யாரையோ தொடர்பு கொள்ள முயன்றது தெளிவாகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கோத்தபாய படை குவிப்பிற்கு கூறும் நியாயம் ஏற்கமுடியாது! - சரவணபவன்

வடக்கின் இராணுவ மயத்தை நியாயப்படுத்தவே பாதுகாப்புச் செயலர் போர் ஒன்று உருவாகாமல் தடுக்கவே பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் போரை மக்கள் எப்போதும் தொடங்குவதில்லை என்பதும் இராணுவத்தினரின் ஆயுத ஒடுக்குமுறை மக்கள் மீது திணிக்கப்படும் போது மக்கள் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளே போராக வெடிக்கின்றன என்பதே உலகம் முழுவதிலும் உள்ள வரலாறு. 

உண்மையில் போர் விரிவதைத் தடுக்க வேண்டுமானால் வடக்குக் கிழக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட்டு இங்கு ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதே ஒரே வழி என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவக் கெடுபிடிகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிலவுப் பகுதியில் படையினரால் கட்டி அமைக்கப்பட்ட வீடுகளை பொது மக்களுக்கு வழங்கும் வைபவத்தின் போது உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சச­ அவர்கள் வெளியிட்ட ஒரு முக்கியமான கருத்தை நாம் கவனத்துக்கு எடுக்காமல் விடமுடியாது.   அவர் மட்டுமன்றி பல்வேறு அரச தரப்பினருமே வடக்குக் கிழக்கில் பெருந்தொகையான படையினர் நிலைகொண்டு இருப்பதற்குப் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இவற்றில் படையினர் நிலைகொண்டு இருப்பதற்குப் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இவற்றில் பல ஒன்றையொன்று சார்ந்தனவாகவும் இன்னும் சில ஒன்றுடன் ஒன்று முரண்பட்டனவாகவும் அமைந்திருந்தமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.   ஆனால் பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்த காரணம் ஏற்கெனவே வெளிவந்தவைகளை விட தாக்கமானதாகவும் வடபகுதி மக்கள் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை பூடகமாக உணர்ந்து வருவதாகவும் அமைந்துள்ளது.   அது மட்டுமன்றி தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் இராணுவச் சுற்றி வளைப்புகள், சோதனை நடவடிக்கைகள், கைதுகள் என்பவற்றை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளமையை நாம் அவதானிக்க முடியும். 

அதாவது மீண்டும் ஒரு போர் வராமல் தடுப்பதற்காகவே வடக்கில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கள் மேலும் மேலும் கெடுபிடிகள் தமிழ் மக்கள் மீது அதிகரிப்பதற்கான முன் அறிவித்தலாகவே தென்படுகின்றது.   மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க அணிதிரண்டு வருகின்றனர் எனக் கூறப்பட்டே இராணுவச் சுற்றிவளைப்புகளும் வீதிச் சோதனைகளும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 50 இற்கும் மேற்பட்டோர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கென கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.   பாதுகாப்புச் செயலரின் கருத்துப்படி இந்தக் கைதுகளும் போர் வராமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியே.

எனவே அதிகளவு இராணுவத்தினர்  வடக்கில் குவிக்கப்படுவது மீண்டும் சுற்றி வளைப்புகளும், கைதுகளும் நிறைந்த ஒரு அச்சமூட்டும் நிம்மதியற்ற ஒரு வாழ்வைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கே என்பதை மிகவும் தெளிவாகப் புரியும்படி பாதுகாப்புச் செயலாளர் கருத்துக்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.   ஆனால் இப்படியான நடவடிக்கைகள் மூலம் போர் உருவாகுவதைத் தடுக்க முடியாது என்பதும் இல்லாத போர்களையே உருவாக்கிவிடும் என்பதையும் உலக வரலாறு மீண்டும் மீண்டும் கற்பித்து வந்துள்ளது. ஆனால் ஆட்சி அதிகாரமும் அதிகாரப் பலமும் கொண்டவர்கள் எப்பொழுதுமே ஆயுத பலத்தால் போர் உருவாவதைத்  தடுத்து விட முடியும் என  நம்புகின்றனர்.   ஆனால் இந்த வழிமுறை மூலம் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்த முடியுமே ஒழிய போரை நிறுத்திவிட முடியாது.

போர் உருவாவதற்கான மூல காரணம் களையப்படுவதன் மூலமே போரை நிரந்தரமாக இல்லாமற் செய்யமுடியும். அதை உதாசீனம் செய்து ஆயுத பலத்தால் போரை இல்லாமல் செய்யும் முயற்சிகள் காலம் காலமாக தோல்விகளைச் சந்தித்து வந்துள்ளன.    1983 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சில வருடங்களில் வட பகுதியில் இராணுவம், பொலிஸ் என்பவற்றின் சுற்றி வளைப்புகள், தேடுதல் வேட்டைகள், கைதுகள் என ஒரு அச்சம் நிறைந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டது. எந்தவொரு இளைஞனும் எந்தவொரு காரணமுமின்றி கைது செய்யப்பட்டு சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிறையிடப்படலாம் என்ற நிலை நிலவியது.    ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் தப்பமுடியும் என்ற நிலை உருவானது.  எனவே, ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ ஒடுக்கு முறை தமிழ் மக்கள் மத்தியில் பல ஆயுதப் போராட்ட முறைகளை உருவாக்கின. ஆயுதப் போராட்டம் முனைப்புடன் வீறுகொண்டெழுந்தது.

காலப் போக்கில் ஏனைய அமைப்புக்கள் செயலிழந்து போக விடுதலைப் புலிகள் தனிப் பெரும் சக்தியாக எழுச்சி பெற்றனர். அவர்கள் பல பிரதேசங்களைத் தம்வசம் வைத்திருக்கும் அளவுக்கும் தனியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் பலம் பெற்றனர்.    ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இராணுவ ஒடுக்குமுறை வழி முறை இலங்கைத்தீவே பெரும் பேரழிவுகளைச் சந்தித்த ஒரு பெரிய போரையே உருவாக்கியது. ஏற்கெனவே இலங்கை பெற்ற இந்தக் கொடிய கசப்பான அனுபவத்தை இன்றைய ஆட்சியாளர்கள் நன்றே புரிந்து வைத்துள்ளனர். எனினும் இவர்களும் கூடப் போரின் மூல காரணத்தை களைந்து ஒரு நிரந்தர சமாதானத்தை உருவாக்கத் தயாரில்லை. மாறாக போர் உருவாகுவதற்கு முன்பே ஒடுக்கு முறைகளை மேலும் மேலும் அதிகரிப்பதன் மூலம் ஒடுக்கப்படும் மக்களைச் செயலற்ற நிலைக்குத் தள்ளி அடிமைகளாக்கி அமைதியை நிலைநாட்ட விரும்புகின்றனர். 

இனத் தனித்துவத்தை அடக்கி பெரும்பான்மை இனத்துக்குள் கரைத்து விடும் ஒரு நீண்டகால நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.  இதை ஆயுத முனையில் நிறைவேற்றிவிட முடியும் என நம்பும் நபர்களில் பாதுகாப்புச் செயலரும் ஒருவர். எனவே தான் அவர் போர் உருவாகாமல் இருக்க இராணுவ ஒடுக்குமுறைகளை வலுப்படுத்துவது என்ற வழி முறையைத் தெரிவுசெய்துள்ளார்.   அதேவேளையில், சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கும் வகையில் அரச தரப்பினர் வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் தொகையைக் குறைத்து காட்டி வருகின்றனர். எனினும் ஒவ்வொருவரும் வெளியிடும் கருத்துக்கள் ஒன்றில் இருந்து ஒன்று முரண்படுவதில் இருந்தே அவற்றின் உண்மைக்குப் புறம்பான தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.  

17.06.2012 இல் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­  வடக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவு  குறைக்கப்பட்டு விட்டதாகவும் தற்சமயம் 15, 600 படையினரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் 9.7.2012இல் யாழ். பாதுகாப்பு தலைமையகத்தின் இணையத்தளம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கிறது.    அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ ஆற்றிய உரை ஒன்றின் போதே 2009 இல் வடக்கில் 70 ஆயிரம் படையினர் இருந்ததாகவும் தற்சமயம் 12 ஆயிரம் பேரே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.   எப்படி இருப்பினும் வடக்கில் வாழும் 5 பொதுமக்களுக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக உத்தியோக பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா மாநாட்டை அண்மித்த காலப் பகுதியில் சில சிறுபடை முகாம்கள் மூடப்பட்டது உண்மை. ஆனால், அவர்கள் பெரிய முகாம்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனரேயொழிய வடக்கை விட்டு வெளியேற்றப்படவில்லை.   அதேவேளையில் சிவில் நிர்வாகமும் இராணுவத் தலையீடும் நிறுத்தப்படவில்லை. மேலும் மிருசுவில், இயக்கச்சி ஆகிய பகுதிகளில் முகாம்களை விஸ்தரிக்கும் நோக்குடன் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.   இப்படி இராணுவம் வடக்கில் குறைக்கப்பட்டு விட்டது எனக் கூறப்படும் ஏமாற்று வார்த்தைகள் பலவிதத்திலும் அம்பலப்படுத்தப்பட்டு, வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருப்பதை நியாயப்படுத்திப் புதிய போர்ப் பூச்சாண்டி காட்டப்படுகின்றது. அந்த நோக்கத்துக்காகவே புலி வேட்டை என்ற பெயரில் சுற்றி வளைப்புகளும் சோதனை நடவடிககைகளும் கைதுகளும் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளன.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா