காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கணிசமான வெற்றிப் பெறவில்லை என்றால், மாநில முதல்வர்கள் பதவி பறிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 3கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் சற்றே விழிப்படைந்துள்ளது. கருத்துக் கணிப்புக்கள் பாஜகவுக்கு சாதகமாக வந்துக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் பாஜகவை எப்படியும் பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்ப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் ஆளும் 11 மாநில முதல்வர்களுக்கும் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் படி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆளும் 11 மாநிலங்களிலும், அம்மாநில முதல்வர்கள் கடுமையாக உழைத்து மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும், அப்படி வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்றால் மாநில முதல்வர் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சோனியாகாந்தி. சோனியாகாந்தியின் இந்த எச்சரிக்கை மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேஷ் உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 3கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் சற்றே விழிப்படைந்துள்ளது. கருத்துக் கணிப்புக்கள் பாஜகவுக்கு சாதகமாக வந்துக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் பாஜகவை எப்படியும் பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்ப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் ஆளும் 11 மாநில முதல்வர்களுக்கும் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் படி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆளும் 11 மாநிலங்களிலும், அம்மாநில முதல்வர்கள் கடுமையாக உழைத்து மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும், அப்படி வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்றால் மாநில முதல்வர் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சோனியாகாந்தி. சோனியாகாந்தியின் இந்த எச்சரிக்கை மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேஷ் உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment