பொதுசன ஜக்கிய முன்னணி வசமிருக்கின்ற யாழ்.மாநகரசபையினது காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் ஊழல் மோசடிகளினால் அங்கு பெருங்குழப்ப நிலை ஏற்படத்தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் மாநகரசபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்திருந்த போதும் இலங்கை அரசு மேலும் ஒரு வருட கால நீடிப்பினை செய்திருந்தது. இக்காலப்பகுதியில் நிதி மோசடிகள் மற்றும் பணம் பெற்றுக்கொண்டு அரச நியமனங்களென மாநகரசபை திண்டாடி வருகின்றது.
இந்நிலையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி யாழ். மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். நீண்டகாலமாக நிரந்தர நியமனமின்றி பணியாற்றி வரும் குறித்த சுகாதார ஊழியர்களுக்கும் வேலைப்பகுதி தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ். மாநகரசபை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இருப்பினும், இதுவரையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
நானூறிற்கும் அதிகமான சுகாதார ஊழியர்களும் வேலைப்பகுதி தொழிலாளர்களும் இவ்வார்ப்பாட்டத்தினில் பங்கெடுத்துள்ளனர். இன்று மாலை வரை அவர்கள் போராட்டத்திற்கான கால எல்லையொன்றை வகுத்துள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி யாழ். மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். நீண்டகாலமாக நிரந்தர நியமனமின்றி பணியாற்றி வரும் குறித்த சுகாதார ஊழியர்களுக்கும் வேலைப்பகுதி தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ். மாநகரசபை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இருப்பினும், இதுவரையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
நானூறிற்கும் அதிகமான சுகாதார ஊழியர்களும் வேலைப்பகுதி தொழிலாளர்களும் இவ்வார்ப்பாட்டத்தினில் பங்கெடுத்துள்ளனர். இன்று மாலை வரை அவர்கள் போராட்டத்திற்கான கால எல்லையொன்றை வகுத்துள்ளனர்.
No comments:
Post a Comment