இந்திய-இலங்கை மீனவர்கள் தரப்புப் பேச்சுவர்த்தையை மே 12,13 திகதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக, அரசின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய-இலங்கை மீனவர்களின் மீன்ப்பிடிப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித் தீர்வுக்கான இரு நாட்டு அரசுகளும் முடிவெடுத்தன.
இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி சென்னையில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினர். இதில் சுமுகமானத் தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று இரு நட்டு மீனவப் பிரதிநிதிகளும் கூறினாலும், இலங்கை கடற்ப்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப் படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இலங்கையில் கொழும்பு நகரில் நடைப்பெறுவதாக இருந்தது.
ஆனால்,இலங்கை சிறையில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவித்த பிறகே பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு சம்மதம் தெரிவிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். இலங்கை அரசும் தமிழக மீனவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்தது. இருப்பினும், இலங்கை கடற்ப்படையினர் தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததை அடுத்து, இலங்கை அரசு சிறையில் இருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதை அடுத்து மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் இரு தரப்பு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு, இப்போது மே மாதம் 12 அல்லது 13 திகதிகளில் வைத்துக்கொள்ள சம்மதம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மத்திய அரசு தெரிவிக்கும் பதிலைப் பொறுத்தே மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இருக்கும் என்றும் தெரிய வருகிறது.
இந்திய-இலங்கை மீனவர்களின் மீன்ப்பிடிப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித் தீர்வுக்கான இரு நாட்டு அரசுகளும் முடிவெடுத்தன.
இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி சென்னையில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினர். இதில் சுமுகமானத் தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று இரு நட்டு மீனவப் பிரதிநிதிகளும் கூறினாலும், இலங்கை கடற்ப்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப் படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இலங்கையில் கொழும்பு நகரில் நடைப்பெறுவதாக இருந்தது.
ஆனால்,இலங்கை சிறையில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவித்த பிறகே பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு சம்மதம் தெரிவிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். இலங்கை அரசும் தமிழக மீனவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்தது. இருப்பினும், இலங்கை கடற்ப்படையினர் தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததை அடுத்து, இலங்கை அரசு சிறையில் இருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதை அடுத்து மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் இரு தரப்பு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு, இப்போது மே மாதம் 12 அல்லது 13 திகதிகளில் வைத்துக்கொள்ள சம்மதம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மத்திய அரசு தெரிவிக்கும் பதிலைப் பொறுத்தே மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இருக்கும் என்றும் தெரிய வருகிறது.
No comments:
Post a Comment