வாரணாசித் தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா விருப்பம் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனித நகரம் என்றழைக்கப்படும் வாரணாசியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவருக்கு எதிராகப் போட்டியிட கனமான வேட்பாளர் வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுக் கொண்டிருக்கையில், தாம் அந்தத் தொகுதியில் நிற்க விருப்பம் கொண்டுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்திருந்திருக்கிறார். இதுக் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ஆலோசித்து வந்ததாகவும், சோனியாகாந்தி இதை மவுனமாக கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பிரியங்கா காந்தி, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இவ்வேளையில் இடையில் கருத்துத் தெரிவித்த சோனியாகாந்தி, பிரியங்கா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறியுள்ளதோடு, தாம் மற்றும் ராகுல் காந்தி போட்டியிடவுள்ள தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டால் போதும் என்றும் கூறியதால், பிரியங்கா காந்தி போட்டியிட இருந்த விருப்பத்தை மாற்றிக்கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாயுள்ளன.
புனித நகரம் என்றழைக்கப்படும் வாரணாசியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவருக்கு எதிராகப் போட்டியிட கனமான வேட்பாளர் வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுக் கொண்டிருக்கையில், தாம் அந்தத் தொகுதியில் நிற்க விருப்பம் கொண்டுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்திருந்திருக்கிறார். இதுக் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ஆலோசித்து வந்ததாகவும், சோனியாகாந்தி இதை மவுனமாக கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பிரியங்கா காந்தி, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இவ்வேளையில் இடையில் கருத்துத் தெரிவித்த சோனியாகாந்தி, பிரியங்கா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறியுள்ளதோடு, தாம் மற்றும் ராகுல் காந்தி போட்டியிடவுள்ள தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டால் போதும் என்றும் கூறியதால், பிரியங்கா காந்தி போட்டியிட இருந்த விருப்பத்தை மாற்றிக்கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாயுள்ளன.
No comments:
Post a Comment