Monday 25 June 2012

மீண்டும் சுமா ரங்கநாதன்!

Suman Ranganathan S Comeback   

சுமா ரங்கநாத்தை நினைவிருக்கிறதா... தொன்னூறுகளின் ஆரம்பத்தில் பெரிய அளவில் வருவார் என்று பேசப்பட்ட நடிகை. முதல் படம் புதுப்பாட்டு (எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிறே... பாட்டு ஞாபகத்துக்கு வருதா...) அதன் பிறகு விஜயகாந்த் ஜோடியாக மாநகரக் காவல் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், இந்தியில் பிஸியானார். ஃபாரெப், ஆ அப் லோட் சலேன் என வெற்றிப் படங்களில் நடித்தவர், மலையாளப் படங்களிலும் நடித்தார்.

2006-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது சீக்கிரமே விவாகரத்தில் முடிய, மீண்டும் கன்னடப் படங்களில் பிஸியாகிவிட்டார்.

அவரை தமிழுக்கு மீண்டும் அழைத்து வருகிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அஜீத் நடிக்கும் புதிய படத்தில் இவருக்கு முக்கிய வேடமாம்.

தனது தமிழ் மறுபிரவேசம் பற்றி சுமா (சுமன் ரங்கநாதன்) கூறுகையில், "பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது தமிழ் சினிமா பக்கம் வந்து. இத்தனைக்கும் நன்றாக தமிழ் பேசத் தெரிந்த நடிகைதான் நான். எனக்கான டப்பிங்கை கூட நான்தான் பேசுகிறேன்.

பாலித் தீவில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறேன். பெங்களூரில் கடந்த சனிக்கிழமை முதல் காட்சி எடுத்தார்கள். ரொம்ப வித்தியாசமாக உணர்ந்தேன்," என்றார்.

மடோனாவின் 'டி.என்.ஏ'வை இனி யாரும் திருட முடியாது...!!

Madonna Scared Fans Stealing Her Dn

'பாப் தேவதை' மடோனா ஒரு நூதனமான உத்தரவைப் பிறப்பித்துள்ளாராம் தனது உதவியாளர்களுக்கு. அதாவது அவர் எந்த ஷோவில் கலந்து கொண்டாலும், ஷோ முடிந்ததும், அவரது உடை மாற்றும் அறையை பக்காவாக சுத்தப்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. ஏனாம்... அவர் மீது வெறித்தனமாக உள்ள ரசிகர்கள் மடோனாவின் டிஎன்ஏவைத் திருடும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகப்படுகிறாராம் மடோனா. அதனால்தான் இந்த 'சுத்தப்படுத்தும்' உத்தரவாம்.

இதனால் இப்போதெல்லாம் மடோனாவின் டிரஸ்ஸிங் அறையை அவர் போன பிறகு சுத்தமாக 'ஸ்டெரிலைஸ்' செய்து விடுகிறார்களாம். இந்த சுத்தப்படுத்தும் பணிக்காக கூடவே ஒரு டீமையும் கூட்டிக் கொண்டு திரிகிறார் மடோனா. மடோனாவின் டிஎன்ஏ எந்த ரூபத்திலும் சிக்கி விடாத வகையில் இந்த குழுவினர் மிக மிக கவனமாக ஸ்டெரிலைஸ் செய்கிறார்கள். அவரது தலைமுடி, நகம், எச்சில் உள்பட எதுவும் யார் கையிலும் சிக்கி விடாத வகையில் இந்த வேலை நடக்கிறதாம்.

மடோனாவுக்கு இப்போது 53 வயதாகிறது. இருந்தாலும் அதில் பாதி வயதுடையவர் போல இளமையுடன், சிக்கென காணப்படும் மடோனாவுக்கு உலகம் பூராவும் ஏகப்பட்ட ரசிகர்கள். இதனால் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியுள்ளது மடோனாவால்.

மடோனா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின்போது, மேடையின் பின்பக்க அறைக்குள் அவர் மற்றும் அவருடன் வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வேறு யாரும் அனுமதிக்கப்படக் கூடாது என்று மடோனா உத்தரவு போட்டுள்ளார்.

இது போதாதென்று, தனது டிரஸ்ஸிங் ரூம் மற்றும் தான் தங்கப் போகும் அறை உள்ளிட்டவற்றில் யாராவது கேமராவை புதைத்து மறைத்து வைத்துள்ளனரா என்பதையும் தனது குழுவினர் மூலம் தீவிரமாக பரிசோதித்து விட்டு அதன் பின்னரே அறைக்குள் என்ட்ரி கொடுக்கிறார் மடோனா.

தற்போது உலக இசைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் மடோனா. தற்போது போர்ச்சுகலில் முகாமிட்டுள்ளார். ஏற்கனவே இஸ்ரேல், துருக்கி, இத்தாலி, ஸ்பெயினை கலக்கி விட்டு வந்தார்.

இஸ்ரேலில் பயணம் மேற்கொண்டிருந்தபோது தனது மார்புக் காம்பைக் காட்டி ரசிகர்களை அதிர வைத்தார். அதேபோல இத்தாலியில் கலந்து கொண்டபோது தனது பின்பக்கத்தைக் காட்டி மிரள வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

விஜய் டிவி நடத்திய அசத்தலான திருமண வரவேற்பு

Saravanan Meenakshi Wedding Reception

தொலைக்காட்சி தொடரில் வரும் திருமணத்திற்காக நிஜ திருமண வரவேற்பு போல பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றினை மக்கள் முன்னிலையில் நடத்தி அசத்தியுள்ளனர் விஜய் டிவி நிறுவனத்தினர்.

அந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30 மணிக்கு சரவணன் - மீனாட்சி என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகன், நாயகி இடையே திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் பற்றி எதிர்பார்ப்பு இந்த தொடரை பார்ப்பவர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் மக்கள் முன்னிலையில் நிஜ திருமண வரவேற்பு ஒன்றினை நடத்தி அசத்தியுள்ளனர் விஜய் டிவி. இந்த நிகழ்ச்சி ஞாயிறுக்கிழமை ஒளிபரப்பானது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நகைச்சுவை பேச்சாளர் ரோபோ சங்கர் தொகுத்து வழங்கினார். கதையின் நாயகர்கள் சரவணன் - மீனாட்சி பிரம்மாண்டமான மேடையில் நிற்க அவர்களுக்கு போட்டிகளும் நடைபெற்றன. இருவரும் தங்களின் திருமணநாளன்று போடுவதற்கான உடைகளையும், நகைகளையும் ஒரே கருத்துடன் தேர்ந்தெடுத்து ரசிகர்களின் பாராட்டினை பெற்றனர்.

இந்த திருமண வரவேற்பில் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழக தொலைக்காட்சி வரலாற்றிலேயே நெடுந்தொடர் ஒன்றில் நடைபெற உள்ள திருமணத்திற்காக ரிசப்ஷன் நடத்தப்பட்டது இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைக்கு பை... கோயில் கோயிலாக சுற்றும் மனீஷா கொய்ராலா!

Manisha Koirala Turns Spiritual   

மும்பையின் ஐந்து நட்சத்திர பார்களில் அடிக்கடி பார்க்க முடிந்த நடிகை மனீஷா கொய்ராலா... இப்போது சதா சர்வகாலமும் சுற்றிக் கொண்டிருப்பது மும்பை, நேபாளத்தில் உள்ள கோயில்களைத்தான்!

உல்லாச வாழ்க்கை வெறுத்துப் போய், ஆன்மீக வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாராம்.

தமிழில் முதல்வன், இந்தியன், பாபா படங்களில் நாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ரலா. இந்தியிலும் முன்னணி நடிகை.

இவருடன் இணைத்துப் பேசப்படாத முன்னணி நடிகர்கள் குறைவு. நடிகர்களைத் தாண்டி வெளிநாட்டு தூதர்களுடனும் நெருக்கமாக இருந்தார்.

கடந்த 2010-ல் நேபாளத்தை சேர்ந்த சாம்ராத் தாஹப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின் நடிப்பதை நிறுத்தி விட்டார். சந்தோஷமாக இருந்த அவரது குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீச துவங்கி உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இப்போது பிரிந்து வாழ்கிறார்கள்.

கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மனீஷா, விவாகரத்துக்கு மனுவும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மணவாழ்க்கையில் விடுதலை அடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட, மும்பையில் குடியேறி இரவு விருந்துகளில் பங்கேற்று வந்தார். அவர் போதையில் தள்ளாடியபடி பார்களிலிருந்து வெளியேறும் காட்சிகள் நாளிதழ்களில் அடிக்கடி இடம்பெற ஆரம்பித்தன.

முன்னணி நடிகர், நடிகைகள் மனிஷா நிலை கண்டு பரிதாபப்பட்டார்கள். பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

இதைத் தொடர்ந்து மனிஷாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. போதையை மறக்க ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார். தினமும் கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிடுகிறார்.

தன் சொந்த நாடான நேபாளத்தில் உள்ள இந்துக் கோயில்களுக்கும் சென்றுவர ஆரம்பித்துள்ளார். சென்னையில் உள்ள ஒன்னஸ் தியான மையத்துக்கும் அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார்.

500 தியேட்டர்களில் பில்லா 2 - 10-ம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பம்!

Billa 2 On July 13    | அஜீத்  

அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர்.

இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது.

இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2 திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்," என்று கூறியுள்ளார்.

Sunday 24 June 2012

யாழ்ப்பாண மக்களிடம் சிங்கள இரத்தம் தான் ஓடுகிறதாம் –யாழ்.படைத்தளபதி


பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“யாழ்.போதனா மருத்துவமனை இரத்தவங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் சிறிலங்கா படையினரே.

ஒவ்வொரு மாதமும் சிறிலங்கா இராணுவம், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்கிறது.

இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு 125 தொடக்கம் 150 லீற்றர் வரையான இரத்தம் சிறிலங்காப் படையினரால் வழங்கப்படுகிறது.

இப்போது பெரும்பாலான யாழ்ப்பாண மக்களிடம் ஓடுவது சிங்கவர்களின் இரத்தம் தான்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கர்ணன் படம் 100-வது நாள் விழா!48 வருடங்களுக்கு பின்பு சாதனை படைத்த சிவாஜி கனேஷன்


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 48 வருடங்களுக்கு முன்பு நடித்து பெரும் வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. பல தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடின. சென்னை சத்யம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியுள்ளது.

இப்படத்தின் 100-வது நாள் விழாவை சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் இன்று கொண்டாடினார்கள். இதையொட்டி சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான சிவாஜி ரசிகர்கள் கர்ணன் படம் பார்க்க திரண்டு வந்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் இதில் பங்கேற்று ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசியதாவது:-

திரைப்படங்களில் சிவாஜி கணேசன் தொடாத இடமே இல்லை. எல்லா கதாபாத்திரத்திலும் நடித்தார். காதல் உணர்வுகளை கதாநாயகியை தொடாமலேயே வெளிப்படுத்தினார். தேசிய தலைவர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.

48 வருடங்களுக்கு பிறகும் கர்ணன் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சிவாஜி கணேசன் தமிழர்கள் மனதில் இப்போதும் நிறைந்து இருக்கிறார் என்பதற்கு இது சாட்சி.

தமிழக காங்கிரஸ் கட்சி இப்போதும் வலுவாக இருப்பதற்கு இரு தலைவர்கள் காரணம். அதில் ஒருவர் பெருந்தலைவர் காமராஜர். இன்னொருவர் சிவாஜி கணேசன்.

வாழ்நாள் முழுவதும் பல நல்ல காரியங்களை சிவாஜி செய்து உள்ளார். விளம்பரம் இல்லாமல் நிறைய நன்கொடைகள் அளித்துள்ளார். சீன யுத்த களத்திற்கு சென்று தனது சொந்த நகைகளையே நிதியாக அளித்தார். சிவாஜிக்கு புகழ் சேர்க்க கடற்கரையில் அவரது சிலையை அமைத்த கலைஞருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட ஜெயலலிதா ஏற்கனவே முதல்- அமைச்சராக இருந்தபோது நிலம் ஒதுக்கீடு செய்தார். இன்னும் மணி மண்டபம் கட்டப்படவில்லை. சிவாஜி மணி மண்டபத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதை அவர் செய்தால் ஜெயலலிதா சாதனை மைல் கல்லில் சிவாஜி மணி மண்டபமும் இடம் பெறும்.

சிவாஜியை பற்றி முதல்வருக்கு நன்றாக தெரியும். அவரோடு படங்களில் நடித்துள்ளார். எனவே மணி மண்டபத்தை கட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிவாஜி சமூகநல பேரவை தலைவர் சந்திரசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் என்.ரங்கபாஷ்யம், மணிபால், சிவராமன், சூளை ராஜேந்திரன் மற்றும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ராமஜெயம், தியாகராஜன், சம்பந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.

நான் பொறுப்பான அம்மா ... விஜி சந்திர சேகர்

Azhagi Serial Amma Viji Chandrasekar

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பான ‘அழகி' தொடரில் தன்னம்பிக்கை சுந்தரி. வீட்டு வேலை, ஹாஸ்பிடல், பெட்ரோல் பங்க் என பல வேலைகளைப் பார்த்து கஷ்டப்படும் பெண்ணாக நடித்து நடுத்தர குடும்பத்துப் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் சம்பாதித்து வைத்துள்ளார் விஜி சந்திரசேகர். சினிமாவில் நடித்த விஜி நீண்ட இடைவெளிக்குப் பின் சீரியலில் எண்ட்ரி ஆகியுள்ளார்.

முள்ளும் மலரும் தொடரில் துறு துறு என்று நடித்த விஜி சந்திரசேகர் சில வருடங்கள் காணமல் போய் கிழக்குச் சீமையிலே தொடரில் வடிவேலுக்கு ஜோடியாக வந்தார். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் என இருந்தாலும் கொஞ்சகாலம் மீடியாக்களின் கண்களில் சிக்கவில்லை. இப்பொழுது திடீர் சீரியல் பிரவேசம். எதனால் இந்த இடைவெளி என்று கேட்டோம்.

ரெண்டு குழந்தைகளை வளர்க்கவே நேரம் போதலை. பெரியவ காலேஜ் போறா சின்னவள் ப்ளஸ் டூ அதனால் இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சிருக்கு சீரியல்ல வந்துட்டேன்.

அழகி சீரியல் எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்திருக்கு. சில மாதங்களுக்கு முன் தி.நகர் பக்கம் ஷாப்பிங் போயிருந்தேன். கஸ்டமர்ஸ்ல இருந்து சேல்ஸ் கேர்ள்ஸ் வரைக்கும் 'சுந்தரி'யைக் கொண்டாடினது, எனக்கே சர்ப்ரைஸ்.

'சுந்தரி மேடம்... நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்க..?! வீட்டு வேலை, ஹாஸ்பிட்டல் வேலை, பெட்ரோல் பங்க் வேலைனு ஒவ்வொரு நாளும் அவ்வளவு உழைக்கிறீங்க. சோர்ந்து போகும்போதெல்லாம், 'சுந்தரியைவிடவா..?'னு உங்களைத்தான் நினைச்சுக்கிறோம்...'னு ஒரு பணிப்பெண் சொன்னப்போ, தொடர் ஆரம்பிச்ச சில மாசத்துல இப்படி ஒரு ரீச்சானு ஆச்சர்யமா, சந்தோஷமா இருந்தது.

நானும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதால் அதன் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து இந்த சீரியலில் நடிக்கிறேன் என்று கூறினார் விஜி சந்திரசேகர்.

ஒரு முக்கிய செய்தி: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜி நடித்திருக்கிறாராம். வீட்டில் விஜி சந்திரசேகர் ஸ்டிரிக்ட் அம்மா என்று கூறுகின்றனர்.

விஜியின் பெரிய பெண் சுரக்ஷா எம்.பி.பி.எஸ் மாணவியாம். சின்னபெண் லல்லின் ப்ளஸ் ஒன் படிக்கிறாராம். இருவருக்கும் செல்போன் வாங்கி கொடுத்தது கிடையாதாம். டிவி சேனல்ஸ் பார்க்க தடை விதித்துள்ளாராம். பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் எல்லாம் அவர்களுக்கு நட்பு வட்டம் கிடையாதாம். இப்போதைக்கு படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்று கூறி குழந்தைகளை வளர்க்கிறாராம்.

பொறுப்பான அம்மாதான்!

இலங்கை அரசின் வலைக்குள் சிக்கி விடுவாரோ ஜெயலலிதா? - ஹரிகரன்

இந்திய – இலங்கை அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மந்தமான நிலை தொடர்ந்து நீடிக்கின்ற நிலையில், இந்தமாத இறுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரப் போகிறார்.

அவரது பயணம் பற்றிய தகவல்கள் முதலில் இந்திய ஊடகங்களில் தான் வெளியாகின.

புதுடெல்லியிலும் கொழும்பிலும் உள்ள இந்திய அதிகாரிகள் சிவ்சங்கர் மேனனின் பயணத்தை உறுதி செய்துள்ளனர்.

ஆனால், இலங்கை வெளிவிவகார அமைச்சோ மேனனின் வருகை பற்றி தமக்கு ௭ந்தத் தகவலும் வரவில்லை ௭ன்று கூறியுள்ளது.

இது இருதரப்புக்கும் இடையிலான உறவில் நிலவும் இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

முன்னர் கொழும்புக்கான தூதுவராக இருந்த சிவ்சங்கர் மேனன், இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அதைத் தீர்க்கின்ற பாலமாக இருந்தவர்.

விடுதலைப் புலிகளுக்கு ௭திரான போரின் போது, வெளியக நெருக்கடிகளை சமாளிக்க கோத்தபாய ராஜபக்ச – பசில் ராஜபக்ச – லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழுவுடன் உறவுகளைக் கையாள இந்தியா நியமித்த மூவர் குழுவில் சிவ்சங்கர் மேன்னும் ஒருவர்.

இவரது கொழும்புப் பயணத்தின் நோக்கம் இலங்கையின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நேரில் விசாரிப்பதே ௭ன்று தகவல்கள் கூறுகின்றன.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க சிவ்சங்கர் மேனனின் பயணம் உதவுமா ௭ன்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாட்டுடன் குறிப்பாக, ஜெயலலிதா அரசுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒரு தகவல் உள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே அவரைக் கைக்குள் போட்டுக்கொள்ள அரசாங்கம் முயன்றது.

ஆனால், அதற்கு அவர் பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டார். இதனால் மிலிந்த மொறகொடவைப் பயன்படுத்தி பா.ஜ.க. மூலம் ஜெயலலிதாவுடன் உறவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சியும் கைகூடவில்லை.

இருந்தாலும், அரசாங்கம் ஒய்ந்து விட்டதாகத் தெரியவில்லை. தற்போது வர்த்தகர் ஒருவரை நடுநிலையாளராகப் பயன்படுத்தி ஜெயலலிதாவுடன் தொடர்பை ஏற்படுத்த அரசாங்கம் முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குக் காரணம். இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் நடக்கப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தான்.

இந்தத் தேர்தலில் ௭ந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை.

தனிக்கட்சி ஆட்சி யுகம் இந்தியாவில் மாறிவிட்டது. கூட்டணிக் கட்சிகள் தான் இனிக் கோலோச்சப் போகின்றன.

ஊழல் குற்றச்சாட்டுகள், மோசமான நிர்வாகம், பொருளாதாரப் பின்னடைவு ௭ன்பவற்றினால் காங்கிரஸின் செல்வாக்குச் சீரழிந்து விட்டது.

இத்தகைய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான மாற்று அணியினர் ஆட்சி அமைக்க லாம் ௭ன்ற கருத்து வலுவாக உள்ளது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வின் கை ஓங்கும் ௭ன்ற கணிப்பு உள்ளது.

ஜெயலலிதாவின் கை மத்திய அரசில் ஓங்கும் சந்தர்ப்பத்தில் அவரை அரவணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ௭ன்றுணர்கிறது இலங்கை அரசாங்கம்.

இது ௭ந்தளவுக்குச் சாத்தியமாகும் ௭ன்று உறுதியாக கூற முடியாது.

ஆனால், இனிமேலும் தமிழ்நாட்டில் இருந்து தூர விலகி நிற்கவோ, அதனைத் தூர விலக்கி வைக்கவோ இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை.

அண்மையில் கோவையில் ஒரு கருத்தரங்கிற்காகச் சென்றிருந்த அமைச்சர் றெஜினோல்ட் குரேக்கு ௭திராக அங்கு போராட்டம் நடத்தப்பட்டது.

இதனால் அவர் உடனடியாக கொழும்பு திரும்ப நேரிட்டது.

இது இலங்கை அரச பிரமுகர்களுக்கு நேர்ந்த முதலாவது சம்பவம் அல்ல.

இலங்கையின் அமைச்சர்கள், அரச பிரமுகர்கள் வருவதை தமிழ்நாட்டில் உள்ள அமைப்புகள் ௭திர்க்கின்றன.

தூத்துக்குடி – கொழும்பு கப்பல்சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

இப்படியாக தமிழ்நாட்டுடனான உறவுகள் சுருங்கிப் போவதை அரசாங்கம் விரும்பவில்லை.

ஏனென்றால், முன்னர் ஜே.ஆர் காலத்தில் இப்படித் தான் இந்தியாவை அவர் பகைத்துக் கொள்ள புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் கொடுத்து இந்தியா வளர்த்து விட்டது.

அதுபோன்ற நிலை மீண்டும் உருவாவதை – தனக்கு ௭திரான தளம் தமிழ்நாட்டில் அமைவதை இலங்கை விரும்பவில்லை.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் இந்தியாவைப் பின்தளமாகக் கொண்டு புத்தெழுச்சி பெறுவதைத் தடுக்க வேண்டும் ௭ன்றால், தமிழ்நாட்டை அரவணைக்க வேண்டும்.

இதற்கு இரண்டு அணுகுமுறைகள் தேவை. முதலாவது மத்திய அரசின் நிழலில் தங்கி நிற்காமல், மாநில அரசுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கான முயற்சிகளில் இலங்கை இப்போது இறங்கியுள்ளது.

அண்மையில் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்றக் குழு வந்து சென்ற பின்னர், இந்தியாவின் ௭ல்லா மாநில முதல்வர்களுக்கும் வெளிவிவகார அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அப்படி கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை ௭ன்று வெளிவிவகார அமைச்சு கூறியது.

இருந்தாலும் இந்திய மாநிலங்களுடன் இலங்கை அரசாங்கம் உறவுகளை வளர்க்க முனைகிறது ௭ன்பது உண்மையே.

கடந்த 13ஆம் திகதி இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம், திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்தார்.

அங்கு அரசு விருந்தினராக மூன்று நாட்கள் தங்கியிருந்து, அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களுடன் பேசினார்.

இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தாரூர் தனி விமானத்தில் கேரளா சென்றிருந்தார்.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்து போயுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட் டுள்ள நிலையில் தான்– இந்தச் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன.

இது ௭திரிக்கு ௭திரி – நண்பன் ௭ன்ற வகையிலான நகர்வா அல்லது தமிழ்நாட்டைப் பணிய வைக்க கேரளாவைப் பயன்படுத்த முனைகிறதா ௭ன்ற கேள்வி ௭ழுந்துள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர், இலங்கைக்கு ௭திரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய போது, தமக்கும் மாநிலங்களுக்கும் இடையில் ௭ந்த உறவும் கிடையாது– மத்திய அரசுடன் தான் நாம் தொடர்பு வைத்திருப்போம் ௭ன்று அரசாங்கம் கூறியது.

அதற்கு மாறாக இப்போது மாநிலங்களின் தயவை இலங்கை நாடத் தொடங்கியுள்ளது.

அதிலும் கேரளாவும், தமிழ்நாடும் தான் இலங்கைக்கு மிகவும் முக்கியம்.

இவையிரண்டும் தான் மிக அருகில் உள்ளன. ஒருபக்கத்தில் கேரளாவுடன் இல ங்கை அரசு உறவு கொள்ள முனைவது தமிழ் நாட்டுக்கு ௭ரிச்சலூட்டுவதற்காக ௭ன்று கூறப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பகைத்துக் கொள்ள இலங்கை அரசு விரும்பவில்லை ௭ன்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் றெஜினோல்ட் குரே கோவையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட போது, இதை சும்மா விட்டு வைக்கக் கூடாது ௭ன்று ௭திர்க்கட்சிகள் கண்டித்தன.

இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும் கூறின. ஆனால் இலங்கை அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை.

தமிழ்நாடு பொலிஸார் தனது பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தியதாக சான்றிதழ் கொடுத்தார் றெஜினோல்ட் குரே.

தமிழ்நாட்டை வளைத்துப் போட இலங்கை அரசாங்கம் முனைகிறது ௭ன்பதை உணர்ந்து கொள்வதற்கு இது ஒன்றே போதும்.

கேரளாவுடன் தந்திரோபாயமான உறவைப் பேண அரசாங்கம் முயன்றாலும், அதன் பிரதான குறி தமிழ்நாடு தான் ௭ன்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை அரசு இந்த இரு மாநிலங்களுடன் அரசியல், பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொள்ள முனைகின்ற போதும், தமிழ்நாடு விடயத்தில் அது இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை.

காரணம் கருணாநிதியும் இப்போது ஈழத்தமிழர் விவகாரத்தை கையில் தூக்கியுள்ளார்.

இந்தநிலையில், ஈழத்தமிழர் விவகாரத்தை விட்டுக் கொடுத்து இலங்கை அரசின் வலைக்குள் ஜெயலலிதா இலகுவாக வீழ்ந்து விடுவார் ௭ன்று ௭திர்பார்ப்பது கடினம் தான்.

ஹரிகரன்

உலகின் புதிய ஒழுங்கில் மண் மீட்புப் போராட்டங்கள் -இதயச்சந்திரன்

உலகின் புதிய ஒழுங்கில், நிலத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.மூலவளச் சுரண்டலிற்காக, வர்த்தகச் சந்தைக்காக வல்லரசுகளும் முட்டி மோதிக் கொண்டிக்கின்றன.
பெருந் தேசிய இனவாத ஆட்சியாளர்களும் தமது இறைமையை நிலை நிறுத்திக் கொள்ள, பூர்வீக தேசிய இனங்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றார்கள்.அகண்ட பார்வையில், உலகப் பொருளாதாரத்தின் எண்பது சத வீதத்தைக் கொண்ட முதலாளித்துவ முறைமை, நில ஆக்கிரமிப்பின் பின் புலத்தில் நின்று செயற்படுவது தெரிகிறது.தேசிய பாதுகாப்பிற்கும் மூலவளச் சுரண்டலிற்கும் தென் சீனக் கடலில் தீவுகளுக்கு உரிமை கோரும் சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைக் காணலாம்.மலை வாழ் மக்களை அவர்களது பிரதேசங்களிலிருந்து விரட்டி அடித்து கனிம வள சுரண்டிலிற்காக அரசோடு கைகோர்க்கும் பன்னாட்டு கம்பனிகளை இந்தியாவின் மத்திய பகுதியில் பார்க்கலாம்.திருமலைத் துறை முகத்தில் முதலீடு செய்யும் பல் தேசியக் கம்பனிகளின் நகர்வு, சம்பூர் மண்ணை ஆக்கிரமிக்கிறது என்கிற செய்தியை கடந்த வாரம் கண்டோம்.

முதலீட்டு ஆதிக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை, ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் நிலங்களையும் கபளீகரம் செய்கிறது.
மனித உரிமை மீறல் குறித்துப் பேசும் வல்லரசாளர்கள், நில ஆக்கிரமிப்புக் குறித்து வாய் திறப்பதில்லை. முதலில் பிராந்தியங்களின் ஆதிக்கம் ஊடாக, புதிய உலக ஒழுங்கினை தமக்கேற்றவாறு கட்டமைக்க முயலும், வல்லரசுச் சக்திகள் குறித்தான வரலாற்று ரீதியிலான படிமுறை வளர்ச்சியை அவதானிக்க வேண்டும். ஆரம்பத்தில் கைத்தொழில் புரட்சி மூலம் முதலாளித்துவத்தின் பண்புகள், உலகளாவிய ரீதியில் விரிவடையத் தொடங்கின. வங்கி முறைமையின் பரிணாம வளர்ச்சி, தகவல் தொழில் நுட்பம் ஊடாக நிதியியல் கட்டமைப்புக்களின் பரவலாக்கம், கைத்தொழில் வளர்ச்சி என்பன முதலாளித்துவத்தை அடுத்த கட்ட நிலைக்கு உயர்த்தியுள்ளன.

அத்தோடு இயற்கை மூல வளச் சுரண்டலிற்கான தேவையை கைத் தொழில் புரட்சி ஏற்படுத்தியதெனலாம். கைத் தொழில் மயமாக்கல், புதிய தொழில் நுட்பத்தின் அவசியத்தை உருவாக்கி, முன்னெப்பொழுதும் இல்லாதவாறு உலகச் சந்தையின் கூட்டிணைவினை முன்னிறுத்தியது.இதில் கொலனித்துவ சக்திகளின் பிராந்திய ஆதிக்கத்தை இரண்டாம் உலகப் போரிற்கு முன்பாகக் கண்டோம்.தற்போதைய உலக ஒழுங்கில் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்குமிடையே நிலவும் சந்தை மற்றும் பிராந்திய ஆதிக்கப் போட்டியே முதன்மை பெறுகிறது. ஜீ 20 என்கின்ற கூட்டமைப்பில் இவை ஒரே மேடையில் அமர்ந்து பேசினாலும் பிரிக்ஸ், ஆசியான், சாங்காய் கூட்டிணைவு ஒன்றியம் (SCO) போன்ற கூட்டணிகளும் உலக ஒழுங்கின் புதிய வரவாக இருக்கிறது. மத்திய கிழக்கில் மோதும் வல்லரசுகள், ஆசியாவிலும் முரண்பட ஆரம்பித்திருப்பதற்கு மேற்குலகப் பொருளாதாரத்தின் பின்னடைவு முக்கிய காரணியென்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.உலகச் சம நிலையில் ஏற்படும் இத்தகைய மாற்றத்தில், மேற்கின் தேய்வும் கிழக்கின் வளர்ச்சியும் கணிசமான பங்கினை வகிக்கின்றது.

ஆனாலும் நிதியியல் நிர்வாகத்தை ஆளுமை செலுத்தும் பாரிய நிறுவனங்கள் இன்னமும் மேற்கின் பிடிக்குள் இருப்பது தான் கிழக்கின் வளர்ச்சியுறும் வல்லரசுகளுக்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது.இருப்பினும் மெக்ஸிக்கோவிலுள்ள லொஸ் கபோசில் (Los Cabos) நடைபெறும் ஜீ 20 மாநாட்டில் அனைத்துலக நாணய நிதியத்தினை பலப்படுத்தும் வகையில், 10 பில்லியன் டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ள விடயம் மேற்குலகின் பலவீனத்தை வெளிப்டுத்துகிறது.அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்தாலும், ஐரோப்பாவின் வர்த்தக சந்தையை இழக்கக் கூடாது என்கிற வகையில் அதன் நிமிர்விற்காக, அனைத்துலக நாணய நிதியத்திற்கு இந்தியா உதவி செய்கிறது எனலாம்.அதேவேளை, சர்வதேச கடன் மதிப்பீட்டு முகவர் அமைப்பான 'பிச்' (Fitch), இந்தியாவை தரமிறக்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகள், இவ்வாறு தரமிறக்கப்பட்டுள்ளன. இதனால் கடன் பெறும் தகைமையை இழந்து, பெறும் கடனிற்காக அதிகளவு செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை இந் நாடுகள் எதிர் நோக்குகின்றன.

விற்கப்படும் நீண்ட கால அரச முறிகளுக்கு செலுத்தப்படும் வட்டி, ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில் அதிகரிப்பதால் அதனைக் குறைக்கும் வகையில், அனைத்துலக நாணய நிதியத்தினூடாக உதவி வழங்கப்பட வேண்டுமென ஜீ 20 மா நாட்டில் பரவலாகப் பேசப்பட்டது. இதில் 43 பில்லியன் டொலர்களை வழங்க சீனா முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2009 இல் நடைபெற்ற ஜீ 20 லண்டன் மாநாட்டில் 50 பில்லியனை சீனா முதலீடு செய்தது.இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இந்தியாவோ அல்லது சீனாவோ ஐரோப்பியச் சந்தையை இழக்கத் தயாரில்லை என்பதாகும்.உலகப் பொருளாதார மீட்சிக்கு சீனாவின் உதவி எவ்வளவு அவசியமோ, அதேயளவு முக்கியத்துவம், யூரோ நாணயத்தின் ஸ்திரத் தன்மையிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார மீள் எழுச்சியிலும் தங்கியுள்ளது.

இவைதவிர, இம்மாநாட்டில் கலந்து கொண்ட 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் உறுப்புநாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா போன்றவற்றின் தலைவர்கள் , தமக்குள் கூடிப் பேசியுள்ளனர்.அனைத்துலக நாணய நிதியத்தில் தமது முதலீடுகளை அதிகரிக்கும் அதேவேளை, உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் நிதிச் சிக்கல் ஏற்படுவதால் ,தம்மிடையே வெளிநாட்டு நாணய சேமிப்பு நிதியத்தையும், சொந்த நாணயப் பரிவர்த்தனை ஏற்பாட்டினையும் மேற்கொள்ள வேண்டுமென இவை தீர்மானித்துள்ளன.யூரோவலய நாடுகளில் உருவாகியுள்ள நிதிநெருக்கடி மேலும் பரவாமல் தடுப்பதற்கு, தத்தமது மத்திய வங்கிகள் ஊடாக இவ்வகையான ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்வது அவசியமானதொன்றாக 'பிரிக்ஸ்' கருதுகிறது.
உலக நாணயமான அமெரிக்க டொலரிற்கு மாற்றீடாகவும், தனது யுவான் நாணயத்தை வர்த்தகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தவும்,இத்தகைய நகர்வினை சீனா முன்னெடுப்பதாக மேற்குலகில் விமர்சனங்கள் உண்டு.

"பிரிக்ஸ்' கூட்டமைப்பானது உலக சனத்தொகையில் 42 விழுக்காட்டை கொண்டிக்கிறது. நாணய நிதியத்தின் கணிப்பீட்டில், இந்த 5 நாடுகளின் மொத்த உள்ளூர் உற்பத்தி 13. 6 ரில்லியன் டொலர்களாகும். இதை விட சீனாவின் வெளி நாட்டு நாணயக் கையிருப்பு 3 ரில்லியன் டொலர்களைத் தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சந்தைகளை இழக்கும் "பிரிக்ஸ்' இற்கும், பொருளாதாரப் பின்னடைவை அனுபவிக்கும் மேற்கிற்கும் பரஸ்பர உதவிகள்தேவைப்படுகிறது என்பதையே ஜி 20 மாநாட்டு புலப்புடுத்துகிறது.இதன் பின்னணியில், இந்த மாற்றங்களும் முரண்பட்ட சக்திகளின் இணக்கப்பாட்டு அரசியலும், இலங்கையிலும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதுவே எமது பிரச்சினையாகும்.அனைத்துலக நாணய நிதியம் சீனாவிடம் கையேந்த, அந்த நிதியத்தின் தயவை எதிர்பார்க்கிறது இலங்கை அரசு.

விற்ற அரச பிணையங்கள் மற்றும் முறிகளுக்கான முதிர்ச்சி நிலை ஏற்படும்போது, அதனை எவ்வாறு திருப்பிக் கொடுப்பது என்பதில்தான் மத்தியவங்கி அதிக நேரத்தை செலவிடுகிறது.
கடன் வாங்கிக் கடனை அடைக்கும் சங்கிலித்தொடர் நிகழ்வுகளால் சலிப்படையும் அரசு, திறைசேரியும் மத்தியவங்கியும் என்னதான் நிபுணர் குழுக்களை அமைத்து பரப்புரை செய்தாலும், எதிர்பாத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகையைப் பெற முடியவில்லையே என்கிற ஏமாற்றத்தால், மேற்குலகோடு சுமூகமான நிலையொன்றினை உருவாக்க வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டது. அடுத்த மாத முதல் வாரத்தில், வெளிநாடுகளில் இருக்கும் தூதரக உயர் அதிகாரிகளை அழைத்து, தமது புதிய வெளியுறவுக் கொள்கையை அரசு அறிமுகம் செய்யுமென்று செய்திகள் கூறுகின்றன அதில் நிச்சயமாக, மேற்குலகு சார்பாக எடுக்கவுள்ள நிலைப்பாடு, முக்கிய பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்ககப்படுகின்றது.

மனித உரிமை பேரவை வழங்கிய ஒரு வருட காலத் தவணைக்குள் வடக்கின் குடிசனப் பரம்பலை பெரும் தேசிய வாதத்திற்கு சார்பாக மாற்றிமையப்பதோடு, சில விட்டுக் கொடுப்புகளை முன் வைத்து, மனித உரிமை மீறல் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளும் மேற்குலகை திருப்திப் படுத்தி, தனது அரசியல் இருப்பினைத் தக்க வைக்கலாமென்று அரசு வியூகம் அமைப்பது போல் தெரிகிறது.இந் நிலையில் படையினர் மேற்கொள்ளும் நிலஅபகரிப்பிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், இலங்கை அரசிற்கு புதிய தலைவலியைக் கொடுப்பதையும் கவனிக்க வேண்டும். இலங்கை அரசால் தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்கிற செய்தி சர்வ தேசத்திற்கும் எட்டுகிறது.

யாழ். நகரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம், காவல்துறை மேற்கொண்ட முயற்சியினால் நீதிமன்றத்தால் இடை நிறுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த தெல்லிப்பளைப் போராட்டம், காவல் துறையின் பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் நடந்தேறியது.வருகிற 26 ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடக்கவிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.இதில் கருத்து வேறுபாடு இல்லாமல் சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து கொள்வதைக் காணலாம்.ஆகவே நிலமற்ற தேசிய இனங்கள் முன்னெடுக்கும் வாழ்வுரிமைப் போராட்டங்களை, முதலீடுகளில் தமது கவனத்தைக் குவிக்கும் வல்லரசாளர்கள் கருத்தில் கொள்வார்களாவென்று தெரியவில்லை.

சம்பூர் மக்கள் இலங்கை நீதிமன்றில் தமக்கான நீதியை எதிர்பார்க்கின்றனர். யாழ். குடாவில் ஆங்காங்கே இந்த நில அபகரிப்புக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியே புதிய பாதையை திறந்து விடும் என்பதுதான் உண்மை.

இசை பிரியா திட்டமிட்டபட்ட கொலை புதிய படங்களால் சிக்கிய இலங்கை! – (வீடியோ இணைப்பு)

விடுதலை புலிகளின் நிதர்சனம் பிரிவில் அறிவிப்பாளராக பணியாற்றிய இசை பிரியா இறுதி யுத்தத்தின் போது

சிங்கள படைகளினால் கைது செய்ய பட்டு கூட்டு இராணுவ கும்பலினால் கோரமாக கற்பழிக்க பட்ட பின்னர்

கைகள் கட்ட பட்டு சுட்டு படுகொலை செய்ய பட்டிருந்தார் .

அந்த ஆதராங்கள் .காணொளிகள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பர பரப்பினை கிளப்பின .

ஆனல் சற்று வித்தியாசமாக அந்த காணொளி உள்ளது

இதில் தான் சிங்கள இராணுவம் மனித உரிமை அமைப்பிடம் வசமாக சிக்கியது .

அதாவது அவரது கைகள் கட்டவிழ்க்க பட்டு தலையில் வடிந்த இரத்தங்கள் அகற்ற பட்ட நிலையில்

பிற ஆண் போராளிகள் அருகில் அவரது உடலம் நிரையில் அடுக்கி வைக்க பட்டுள்ளது .

அதில் சிங்க இராணுவ சிப்பாய் இப்படி சிங்களத்தில் கூறுகின்றார் .

மே மே..கொட்டியா எண்டே கொட்டியா எண்டே நிவேதிகா என ..அதாவது இவர் புலி அறிவிப்பாளர் என்றதான வார்த்தை பிரயோகத்தை

பயன் படுத்துகின்றார் .

இந்த வசனத்தையே சட்ட தாரணி வாசுகி அவர்களுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரும் நேரடியாக தெரிவித்திருந்தார் .

மேலே நாம் சுட்டி காட்டிய விடயங்கள் முக்கிய ஊடக வட்டாரங்களில் சுட்டி காட்ட பட்டுள்ளதுடன் முக்கிய தொலை காட்சிகள்

சிலவற்றிலும் இவை தொடர்பான விடயங்கள் உரிய நகர்வுகளின் பின் உலக பரப்பெங்கும் எடுத்து செல்ல பட இருகின்றன .

தற்போது இந்த முக்கிய ஆதாரங்களை கொழும்பு டெலிகிராம் மற்றும் சலீம் ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு பர பரப்பினை கிளப்பியுள்ளன .

மேலும் பல விடயங்கள் வெளி வரவுள்ளன .

சில வல்லரசு நாடுகில் உள்ள ஊடகங்களுக்கும் இவை வழங்க பட்டுள்ளன அந்த முக்கிய பிரபல ஊடகங்கள் வாயிலாக இவை வெளி வரவுள்ளன

ஆங்கில ஊடகங்களில் வெளிவந்த விரிவான பர பரப்பு செய்திகளை படிக்க கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள்




இரண்டாம் உலகத்தில் 2 அனுஷ்கா!

Anushka Dons Double Roles Irandam Ulagam    | அனுஷ்கா  

செல்வராகவன் இயக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்கா இரண்டு வேடத்தில் நடிக்கிறாராம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ராதிகா, சிவ கார்த்திகேயன் உள்ளிட்டோரின் நடிப்பில், செல்வராகவன் இயக்கும் படம்தான் இந்த இரண்டாம் உலகம்.இப்படத்தில் அனுஷ்காதான் நாயகி. அவருக்கு இரண்டு வேடமாம்.

ரெண்டு படம் மூலமாக தமிழில் அறிமுகமான அனுஷ்கா இதுவரை தமிழில் இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. தற்போதுதான் முதல் முறையாக டபுள் ஆக்ட் கொடுக்கப் போகிறார். இதனால் கலக்கலாக நடிக்க அவர் ஆர்வமாக உள்ளாராம்.

ஒரு வேடம் குடும்பப் பெண்ணாம், இன்னொரு வேடம் பழங்குடியினப் பெண்ணாம். எனவே சரியான முறையில் வித்தியாசம் காட்டி நடிக்க ஆர்வமாக ஹோம் ஒர்க் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா.

ஒரு அனுஷ்காவைப் பார்த்தாலே ரசிகர்களுக்குப் பத்திக்கும், இதில் இரண்டு அனுஷ்காவா...

இனிமேல் எனக்கு 'ஐட்டம்' வேண்டாம்... 'ரேணிகுண்டா' சஞ்சனா சிங்!

No More Item Numbers Renigunta Star   

ரேணிகுண்டா படத்தில் கலக்கலான கவர்ச்சி வேடத்தில் அறிமுகமாகி, பின்னர் குத்துப்பாட்டுக்களில் புகுந்த சஞ்சனா சிங் இனிமேல் தான் அதுபோல நடிக்கப் போவதில்லை, ஆடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

ரேணிகுண்டா படத்தில் விபச்சாரப் பெண்ணாக நடித்திதருந்தார் சஞ்சனா சிங். பின்னர் குத்துப் பாட்டுகளுக்கு ஆடி வந்த அவர், சமீபத்தில் வெளியான மறுபடியும் ஒரு காதல் படத்திலும் களேபரமான ஆட்டத்தைப் போட்டிருந்தார். இருப்பினும் இனிமேல் குத்துப்பாட்டுகளுக்கு ஆடப் போவதில்லை என்று டிக்ளேர் செய்துள்ளார் சஞ்சனா.

சஞ்சனா சிங்கின் நடிப்பில் ரகளைபுரம், ரெண்டாவது படம், வெற்றிச் செல்வன் என படங்கள் அணிவகுத்து நிற்கின்றனவாம். தனக்குள் இருக்கும் நல்ல நடிகையை வெளிக் கொணருவதில்தான் இப்போதைக்கு சஞ்சனாவின் ஒரே லட்சியமாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் நான் எல்லோருக்கும் தெரிந்த பெண்ணாக மாற வேண்டும் என்று விரும்பினேன். இதனால்தான் குத்துப் பாட்டுக்கள் என்னைத் தேடி வந்தபோது அதை நான் தட்டவில்லை. இப்போது எல்லோருக்கும் தெரிந்த முகமாகி விட்டேன். எனவே மறுபடியும் குத்துப்பாட்டுக்களுக்குப் போக விரும்பவில்லை என்றார்

ரகளைபுரத்தில் கான்ஸ்டபிள் வேடத்தில் வருகிறாராம். கருணாஸை விழுந்து விழுந்து காதலிப்பவராக வருகிறாராம். மேலும் படத்தில் காமெடியிலும் கலக்கியுள்ளாராம் சஞ்சனா சிங்.

அதேபோல ரெண்டாவது படம் படத்தில் அரசியல்வாதி வேடமாம். கஞ்சா கருப்புடன் இணைந்து வெற்றிச்செல்வனில் காமெடி செய்துள்ளாராம். அப்படத்தில் அவர் தொழிலதிபராக வருகிறாராம். அவரைக் கவரை கடுமையாக முயற்சிப்பவராக வருகிறாராம் கஞ்சா கருப்பு.

இதுபோல அமளிதுமளி என்ற படத்தில் 2வது நாயகியாகவும் நடிக்கிறாரம் சஞ்சனா சிங்.

இன்று ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் காவியமான 84 மாவீரர்களின் நினைவு தினம் !


ஜெயசிக்குறு எதிர்ச்சமரானது தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

பெரியமடுப் பகுதியில் 24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.

இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேலும் 9 மாவீரர்களினதும் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி, மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.

இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் படுகாயமடைந்தனர். இதன்போது 120மி.மீ ஆட்டிலறி பீரங்கி உட்பட பெருமளவான ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில் லெப்.கேணல் தனம் அவர்களுடன் 83 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

இதேநாளில் வவுனியா மாவட்டம் புளியங்குளம், பகுதியிலும் பனிக்கநீராவியடிப் பகுதியிலும் ஜெயசிக்குறு படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதல்களில் 9 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.

பெரியமடு ஆட்டிலறி – மோட்டார் ஏவுதளங்கள் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள்.

லெப்.கேணல் தனம் (ஐங்கரன்), நாகலிங்கம் யோகராஜ், கேப்பாப்புலவு, முல்லைத்தீவு

மேஜர் சிவதீபன் (திருமகன்), பாக்கியராஜா புலேந்திரராஜா கதிரவெளி, மட்டக்களப்பு

மேஜர் துளசி (இராமலிங்கம் குகபாலிகா) காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

மேஜர் ரதி (சாமித்தம்பி தேவி) சந்திவெளி, மட்டக்களப்பு

மேஜர் இந்திரா (இராமு சித்திராதேவி) இறம்பைக்குளம், வவுனியா

மேஜர் கோகுலநாதன் (சாந்தன்), சூசையா பயஸ், கல்லடி, மட்டக்களப்பு

மேஜர் விமல் (நிமல்) பத்திநாதன்பீரிஸ் விமல்பீரிஸ், பேசாலை, மன்னார்

மேஜர் விவேகன் (சந்திரபிரபா) யோகராசா தில்லைநாதன், பெரியபேரதீவு, மட்டக்களப்பு

மேஜர் ஈழமூர்த்தி (வரதராஜ்) அன்பழகன் துஸ்யந்தன் , செங்கலடி, மட்டக்களப்பு

கப்டன் அன்பரசி (இராஜரட்ணம் ரஜனி) மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் பவளம் (விக்னேஸ்வரராஜா கேமலதா), மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் இந்திராணி (கந்தையா புஸ்பராணி ), புளியங்குளம், வவுனியா

கப்டன் அறிவுமாறன் (அரி) (கந்தையா சுதாகரன்), தர்மபுரம், கிளிநொச்சி

கப்டன் பெரியதம்பி (முகுந்தன்) தியாகரராஜா நிதிராஜா, அல்வாய், யாழ்ப்பாணம்

கப்டன் பரமலிங்கம் (நடராஜா ராஜரஞ்சித்) , பொத்துவில், அம்பாறை

கப்டன் பூலோகன் ( இராமநாதன் பரமசிவம்) கொடிகாமம், யாழ்ப்பாணம்

கப்டன் ஜெயச்சந்திரன் (சிதம்பரப்பிள்ளை சிவநாதன்), மாங்குளம், முல்லைத்தீவு

கப்டன் அனார்தன் (சுஜி) நாகமணி கோபாலரத்தினம், கோவில்போரதீவு, மட்டக்களப்பு

கப்டன் லீலாகரன் (ரவி) செல்வராசா ரவீந்திரன், வெல்லாவெளி, மட்டக்களப்பு

கப்டன் மதனரூபன் (சோமசுந்தரம் இசைச்செல்வன்), கல்லடி, மட்டக்களப்பு

கப்டன் புதியவள் (லோகிதாஸ் சாந்தமீனா), மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்

கப்டன் அன்பு (தங்கராசா மகேஸ்வரி) உருத்திரபுரம், கிளிநொச்சி

கப்டன் நித்திலா (சுபைதா), ( கனகலிங்கம் தர்சனி), அரியாலை, யாழ்ப்பாணம்

கப்டன் தமயா ( விஸ்வலிங்கம் சித்திராதேவி) ,முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

கப்டன் கலை (இரத்தினம் ராஜகுமாரி), சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் திவ்யா ( இராமலிங்கம் தேவகி), பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் கீர்த்திராஜ், (யோகநாதன் புஸ்பநாதன்), கொம்மாதுறை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சுரேஸ் (சுந்தரலிங்கம் சந்திரசேகர்), செங்கலடி, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சக்கரபாண்டி (நிதர்சராஜ்), வீரக்குட்டி பிரகலாதன், கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கேதீஸ்வரராஜ் (குமாரசாமி குலசிங்கம் ) மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயமூர்த்தி (நாகையா அசோக்குமார் ), மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயவன் (குகராசா ரவீந்திராஜா), பெரியபோரதீவு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கனகமுகன் (கோபாலசிங்கம் நிர்மலன்), மட்டக்களப்பு

லெப்டினன்ட் பௌணராஜ் ( சீனித்தம்பி ஜெகன்), ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட் பொன்னப்பன் (நாகமணி கேந்திரமூர்த்தி), காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கமண்டலன் (நடராசா யோகராசா), ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட் (பரமேஸ் கவிதா ), கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு

லெப்டினன்ட் ஆரணி ( கறுப்பையா அமுதவல்லி ) பெரியகுளம், வவுனியா

லெப்டினன்ட் நிரஞ்சனா (சின்னையா லோஜினி), சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நித்தியா (திரவியம் அமுதினி), கோப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் யோகமதி (ஜெயமதி) இரத்தினம் வதனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நந்தா (கணபதிப்பிள்ளை குலரஞ்சிதம்), வேலணை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் சுயந்தன் ( பழனியாண்டி சங்கர்), புளியங்குளம், வவுனியா

லெப்டினன்ட் ஈழவண்ணன் (கேசவன் வாமதேவன்), மாத்தளை, கண்டி

லெப்டினன்ட் ஈழமாறன் (செல்வன் செல்வச்சந்திரன்), தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் மித்திரன் (செல்லத்துரை சுரேஸ்குமார்), மூதூர், திருகோணமலை

லெப்டினன்ட் இயல்வாணன் (தியாகராசா சிறிகாந்தன்), இரத்தினபுரம், கிளிநொச்சி

லெப்டினன்ட் ஈசன் (வேலு ரவி), நொச்சிக்குளம், வவுனியா

லெப்டினன்ட் அப்பன் (காந்தி) முருகுப்பிள்ளை சிறிபஞ்சநாதன், சித்தங்கேணி, யாழ்ப்பாணம்,

லெப்டினன்ட் சிவநேசன் (சிவகணேசன்) பொன்னுத்துரை கிருபாகரன், சுழிபுரம், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் இசைமொழி, சித்திரவேல் மோகன், கதிரவெளி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குமரலிங்கம், தங்கராசா சிவலிங்கம், கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் கதிரன் (உருத்திரமூர்த்தி கரிகாலன்), கொக்குவில், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ரஜனி (ராஜன்) கணேஸ் புனிதரூபன், இருதயபுரம், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் தர்மதேவன் (கந்தசாமி சசிகரன்), செங்கலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் புவிதாசன் (ஆறுமுகம் ரஞ்சன்), வாழைச்சேனை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் திருமேனி (மகேசன் ரஜினிகாந்), நாவலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குருகுலன் (நல்லதம்பி பாஸ்குமாரன்), கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் வரோதயன் ( மோகனசுந்தரம் தேவராஜ் ), ஆரையம்பதி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ஜெயப்பிரியா (நித்தியானந்தன் செல்வானந்தி), நல்லூர், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் பரிமளா ( அழகுதுரை கோமதி), சம்பூர், திருகோணமலை

2ம் லெப்டினன்ட் யாழமுது (யாழரசி) கடம்பேஸ்ரன் வசந்தமலர், ஜெயந்திநகர், கிளிநொச்சி

2ம் லெப்டினன்ட் ஈழநிலா ( ஐயாத்துரை றேணுகாதேவி), ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

2ம் லெப்டினன்ட் இளம்பிறை ( சிவலிங்கம் மகேந்திரன்), கொம்மாதுறை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன் (கனகலிங்கம் சுலேந்திரகுமார்), திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் சரவணன் (சுப்பிரமணியம் கருணாகரன்), திருகோணமலை

வீரவேங்கை ஜெயாதுயிலன்( இராஜகோபால் கரிகிஸ்ணன்) திருக்கோவில், அம்பாறை

வீரவேங்கை சகாதேவன்( ஏரம்புமூர்த்தி மேகநாதன்) பேத்தாளை, மட்டக்களப்பு

வீரவேங்கை ஜெயானந்தன் (சித்திரவேல் ஜெயக்குமார்), வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை இன்பன் (நவரட்ணம் சுபானந்தம்), கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரவேங்கை நீலரட்ணம் ( விநாயகப்பிள்ளை யோகராசா), கிரான், மட்டக்களப்பு

வீரவேங்கை லோகதாசன் (கண்ணப்பன் சந்திரமோகன்), செங்கலடி, மட்டக்களப்பு

வீரவேங்கை வேணுகோபன் (வல்லிபுரம் குணரட்ணம்), தாளங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை சண்முகதாஸ் ( ஐயாத்துரை சந்திரகுமார்), கரடியனாறு, மட்டக்களப்பு

வீரவேங்கை நன்மாறன் ( பொன்னுத்துரை யமுனாநந்தன்), வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை ரட்ணேஸ்வரன் ( யோகராசா செந்தில்நாதன் ), பெரியபோரதீவு, மட்டக்களப்பு

வீரவேங்கை சுபத்தனன் (இளையதம்பி விநாசித்தம்பி), வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை முரளீஸ்வரன் (இராசசிங்கம் பவளசிங்கம் ) களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரவேங்கை சம்மந்தக்குமார் (பொன்னம்பலம் சிவகுமார்), கன்னங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை வசந்தா (முத்துரட்ணம் ரஜனி) மூதூர், திருகோணமலை

வீரவேங்கை திருச்செல்வி (சண்முகராசா ரமா), முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

வீரவேங்கை செம்பருத்தி (கௌரியாப்பிள்ளை அருள்ரஞ்சனி), கட்டைக்காடு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை இன்னழகன் (சின்னராசா சிவசண்முகம்), புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

இதேநாள் பனிக்கநீராவியடிப் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரரின் விபரம்.

மேஜர் தயாபரன் (கதிர்வேல் கிருஸ்ணகுமார்) உருத்திரபுரம், கிளிநொச்சி

புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள்.

மேஜர் சிவகுரு சந்திரன் அருளாநந்தன், மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் சிந்தையன், செல்லையா சௌந்தரராஜா கிரான், மட்டக்களப்பு

கப்டன் புயல்வீரன் நித்தியானந்தன் பிரபுகாந்தன், இணுவில், யாழ்ப்பாணம்

கப்டன் கஜமுகி (மதி) மயில்வாகனம் கீதாஞ்சலி, பொக்கணை, முல்லைத்தீவு

கப்டன் தமிழினி (வர்ணா) அந்தோனிப்பிள்ளை ஆனந்தி, செட்டிகுளம், வவுனியா

கப்டன் தேவகி( சின்னராசா பத்மராணி ), யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் பவளராணி ( கனகரத்தினம் கலாநிதி), அல்வாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் காங்கேசன் ( செல்லத்துரை சுரேஸ்குமார்) ,விசுவமடு, முல்லைத்தீவு

களமும் புலமும் ஒன்றிணைவதிலேயே போராட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது.


களத்திலுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும் புலத்தில் இருந்து ஈழ விடுதலையை முன்னெடுக்கும் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைவதில் தான் தமிழ் மக்களின் வெற்றி தங்கியுள்ளது.

இலங்கையில் புலிகளின் போராட்டத்திற்குப் பிறகுதான் இனப் பிரச்சினை உண்டு ௭ன்பதனை சர்வதேசத்திற்கு தெரிய வந்ததுடன் இன்றைய ஜெனீவா பிரேரணை வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்ததிலிருந்து தான் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் முன்னெடுக்கக் கூடிய நிலைக்கு வந்ததெனலாம்.

இந்த விடயத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கலாம். அவ்வாறு இருந்தாலும் கூட இலங்கையின் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை இலங்கையில் ஆட்சி செய்த பேரினவாத அரசாங்கங்கள் சர்வதேசத்திற்கு இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையென்றும், ஒரு குழுதான் இலங்கையில் பயங்கரவாதம் செய்வதாகவும் அந்தப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் தான் ௭ன்றெல்லாம் சர்வதேசத்திற்கு கூறி வந்தது.

இலங்கை பேரினவாத அரசு தெரிவித்து வந்த போதிலும் இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் 30 வருடம் உலகப் புகழ் பெற்ற ஒரு போராட்ட இயக்கமாக சர்வதேசத்தால் புகழப்பட்ட காலம் இருந்ததை உலகம் அறியும். தமிழர்களின் இனப் பிரச்சினையைத் தீர்க்கவென இலங்கை அரசுகளுடன் தமிழரசுக் கட்சி செய்த பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் ௭ல்லாம் கிழிந்தெறிந்த வரலாற்றை நாம் அறிவோம்.

இவ்வாறு பல உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு பின்பு செயலிழந்த போதிலும் தமிழ் அரசு கட்சி, தமிழ் விடுதலை கட்சி, தமிழர் கூட்டமைப்பு ௭ல்லாம் அரும்பாடு பட்டு வந்திருந்தாலும் சர்வதேசத்திற்கு தமிழர்களின் இனப்பிரச்சினையை கொண்டு சென்ற அமைப்பு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்புதான்.

மேலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்த நோர்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தையையும் குறிப்பிடலாம். மேலும் இன்னும் பல ஒப்பந்தங்களும் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் யுத்த நிறுத்தங்களுமாக பல பேச்சுவார்த்தைகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டுத் தொடர்புடனும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நடந்து முடிந்துள்ளது.

2009 மே 18 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரைக்கும் தமது வயோதிப பருவத்தில் கூட தமிழ் மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமலும் மிகவும் கஸ்டத்திற்கு மத்தியிலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் துணிவுடன் நின்று தமிழ் மக்களின் உரிமைக்காக கருமமாற்றியவர் இரா. சம்பந்தன் ஐயா ௭ன கூறலாம்.

முடிவடைந்த போர் பெருந்தொகையான தமிழ் மக்களே பலியானதுடன் இடம்பெயர்ந்த மக்கள், அகதியான மக்கள், காணாமல் போன மக்கள் ௭ன பல்லாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் ௭ன இந்த நிர்க்கதிக்குள் ஆக்கப் பட்டனர். இந்த நிலை இன்றுவரைக்கும் முடிவில்லாத கதையாகத்தான் இருக்கின்றது. மேலும் அகதி வாழ்க்கை வாழும் மக்களாகத்தான் காணப்படுகின்றனர்.

இந்த யுத்தத்தின் பின்பு அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தி சிங்கள மக்களும் சிங்கள அரசும் சந்தோசமாக இருந்த போது தான்… சர்வதேச சமூகம் சம்பந்தப்பட்டு சர்வதேச சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீறியதாக கூறி தமிழ் மக்களை மீளக்குடியேற்றுமாறு கூறிய போதும் கூட இலங்கை அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தாமல் அகதி மக்களை கம்பி வேலி போட்டு அடைத்து ஆடு மாடுகளைப் போன்று வைத்திருந்தது.

இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. மேலும் இந்த நடிவடிக்கை மூலமாக தமிழ் மக்களை ஏமாற்றியும், துன்புறுத்தியும் வந்த நிலைதான் அமெரிக்கா நாடு சம்பந்தப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ௭திராக ஒரு பிரேரணையை அமெரிக்கா முன் வைத்து அந்த பிரேரணையில் இலங்கை தோல்வி அடைந்த நிலையில் தான் இன்று இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்ட விடயத்தில் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை சர்வதேச அரங்கில் மேலோங்க வைக்க தமிழ் கூட்டமைப்பு பங்களித்தது போன்று புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு பெரிதும் பாராட்டத்தக்கதாக அமைந்தது. அத்துடன் இந்திய தமிழ் மக்களின் பங்களிப்பும் பெரியதெனலாம்.

புலம்பெயர் அமைப்புக்களும் புலம் பெயர் மக்களால் அமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இவற்றையெல்லாம் ஒருங்கமைத்து ஐ.நா. சபை முன்பாக ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டங்களிலும் ஒன்றுபட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தும் இலங்கைக்கு ௭திரான ஜெனீவா பிரேரணையில் இலங்கைக்கு ௭திராக ஆதரவைப் பெற்றதுடன் தமிழ் மக்களின் இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு ௭ட்டும்படி செய்தமையை நாம் அறிவோம்.

மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அதன் பரிந்துரைகளை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினைத் தீர்வு கொடுக்க விரும்பாத அரசாங்கம் சர்வதேசத்திடம் தப்பிக் கொள்ளவே அந்த ஆணைக்குழு அறிக்கையை சர்வதேசத்திடம் முன் வைத்தது.

ஆனால் அரசாங்கம் ஜெனீவா பிரேரணையில் தோல்வி அடைந்த போதுதான் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும்படி சர்வதேசமும் ஐ.நா. சபை, மனித உரிமைப் பேரவையும் அமெரிக்காவும் கூறி வரும் நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்று சர்வதேசத்தின் கைகளில் உள்ளது.

இந்த கால கட்டம் தமிழ் மக்களின் இன அழிப்பு அதிகமாக நடந்ததென்ற வலி அதிகரித்திருந்த போதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் முக்கியமான ஒரு கட்டமாகும். ௭னவே தான் சர்வதேச மயமாக்கப்பட்ட இந்த நிலையில் தமிழ் கூட்டமைப்பு மிக முக்கியமாக பங்காற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனித்து தமிழ் கூட்டமைப்பு மாத்திரம் தமிழர் இனப்பிரச்சினையை முன்னெடுத்து ௭திர்காலத்தில் வெற்றி பெறுவது கஸ்டமாகிவிடும் ௭ன்பதால் தமிழ் கூட்டமைப்பு சர்வதேசத்தில் புலம் பெயர் தமிழ் மக்களுடன் அங்குள்ள அமைப்புக்களுடனும் தமிழ் ஈழ அரசுடனும் இணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடும் தேவையும் உண்டு.

இவ்வாறு செய்யாது விடும் பட்சத்தில் இலங்கை பேரினவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு ௭ந்தவிதமான தீர்வுத் திட்டமும் இனிக் கொடுக்காது இலங்கை அரசாங்கம் இதற்கென தனது இலக்கை அடையவென தமிழ் – முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிறு கட்சிகளின் தலைவர்களைக் கொண்டு அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாவும் ஆக்கி அவர்களைக் கொண்டு இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு திட்டம் கொடுபடாமல் இருப்பதற்கான சகலவிதமான நடவடிக்கைகளையும் இந்த இரு சமூகத்திலுள்ள சிறு கட்சித் தலைவர்களையும் கொண்டு தமிழ் இனத்தின் தீர்வுத் திட்டம் கொடுபடாமல் ஆக்குவதில் பேரினவாத அரசாங்கங்கள் மிகவும் மும்முரமாக செயற்படும் ௭ன்பதில் ௭ந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

மேலும் முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். தமிழர் பிரச்சினை தீர்க்கப்பாடாததற்கு அதற்கு முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருந்து விடக் கூடாது ௭ன்பதற்காக வேண்டியும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸையும் இணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனுக்கு உண்டு. இதில் பெரிதும் கவனம் ௭டுக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் அதிகம் உண்டு ௭னலாம்.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 2000 பேரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புகிறது சுவிஸ்


புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 2000 தமிழர்களை சுவிற்சர்லாந்து அரசாங்கம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பத் தீர்மானித்துள்ளதாக சுவிஸ் குடிவரவு குடியகல்வு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவையடுத்து பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்ற கூட்டம் ஒன்று பேர்னில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட்டப்பட்டு, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அகதிகளுக்கான ஐ.நா உயர்ஆணையர் அதிகாரிகள், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பின் பிரதிநிதிகள், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள், சுவிஸ் குடிவரவு , குடியகல்வு பணியகத்தின் அகதிகள் விவகார அதிகாரிகளும் பங்கேற்றனர்.

சிறிலங்கா தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை நாடுகடத்தும சுவிஸ் அரசின் முடிவு குறித்து சுவிஸ் அதிகாரிகள் இங்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.

மாதம் ஒன்றுக்கு 100 சிறிலங்கர்கள் சுவிசில் புகலிடம் கோருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தமது கோரிக்கைக்கு வலுவான காரணங்களை காட்டுவதில்லை என்றும் சுவிஸ் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கூறியுள்ளனர்.

சிறிலங்காவுக்கு தமிழர்களை திருப்பி அனுப்பும் முடிவுக்கு எதிராக அனைத்துலக அகதிகள் நாளன்று சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக சில நாட்களுக்கு முன்னர் போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே 1952ம் ஆண்டு இரண்டாவது உலகப் போரை அடுத்து சவிஸ் அரசாங்கம் கொண்டு வந்த குடிவரவு குடியகல்வு நடைமுறைகளைப் புதுப்பிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
,

காஷ்மீரில் காணாமல் போன பாக். நடிகை துபாயில் தாவூத் கூட்டாளியுடன் குடித்தனம்!

Missing Bollywood Starlet Laila Khan Alive In Dubai

பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்கு வந்து காணாமல் போனதாக கூறப்பட்ட நடிகை லைலா கான், தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஒருவனை மணந்து கொண்டு துபாயில் குடித்தனம் நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் லைலா கான். இவர் ஒரு நடிகை. வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பலுக்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உண்டு. இந்தநிலையில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இவர் தனது தாயார் மற்றும் தங்கை, குடும்பத்தினருடன் காஷ்மீர் வந்தார். வந்த இடத்தில் காணாமல் போனார்.

அவரை யாராவது கடத்தியிருக்கலாம், கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பர்வேஸ் அகமது தக் என்பவரை காஷ்மீர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

காணாமல் போன நடிகை லைலாகான் உயிரோடுதான் இருக்கிறாராம். துபாயில் அவர் தற்போது வசித்து வருவதாகவும், நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியை மணந்து கொண்டு அவருடன் குடித்தனம் இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக பர்வேஸ் கூறுகையில், லைலாவும் அவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவை விட்டு தப்பி விட்டனர். அவர்கள் தற்போது துபாயில் உள்ளனர்.

லைலா, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சோனு என்பவரை மணந்து கொண்டுள்ளார். அவருடன் வசித்து வருகிறார் என்றார் பர்வேஸ்.

பர்வேஸ்தான் லைலா கானை கார் மூலம் கிஷ்த்வார் என்ற இடத்திற்குக் கொண்டு போய் விட்டவர் ஆவார். இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த அவரைப் பிடித்து விசாரித்த பிறகே லைலா கான் மர்மம் விலகியுள்ளது.

ஜூலை 13ல் பில்லா 2 ரிலீஸ்?

Billa 2 Hit Screens On July 13th    | அஜீத்  

அஜீத் குமாரின் பில்லா 2 படம் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள பில்லா 2 படம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சென்சாருக்கு போன இடத்தில் பல இடங்களில் கை வைக்கப்பட்டது. மேலும் 'ஏ' சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போகிறது. ஜூன் 22ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கார்த்தியின் சகுனி அதே நாளி்ல் ரிலீஸானதால் படத்தின் வியாபாரத்தை கணக்கில் கொண்டு ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 29ம் தேதியும் படம் ரிலீஸ் இல்லையாம். மாறாக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமையன்று படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

ஜூலை 13லாவது ரிலீஸ் செய்துவிடுவார்களா என்று அஜீத் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

இதற்கிடையே விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத பட ஷூட்டிங் பெங்களூரில் நடந்தது. இதில் அஜீத் குமார் கலந்து கொண்டார். இந்த செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துவிட்டார்களாம். அவர்களை கட்டுப்படுத்துவதற்குள் போலீசாருக்கு போதும், போதும் என்றாகிவிட்டதாம்.

அதிவேக பைக்கில் ஊர் சுற்றும் நமீதா

Namitha Loves Superbikes   

நமீதாவுக்கு அதிவேக பைக்குகளில் ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.

வழக்கமாக ஆண்கள் தான் அதிவேக பைக்குகளில் ஊர் சுற்றுவார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக நமீதா அப்படி ஊர் சுற்றுகிறார். நமீதா கையில் அவ்வளவாக படங்கள் இல்லை. ஆனாலும் அம்மணி கடை திறப்பு விழா, வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கை நிறைய பணம் சம்பாதிக்கிறார். நமீதாவின் பொது சேவையை நம்மாட்கள் கண்டு கொள்ளாவிட்டாலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அவரைப் புகழந்து தள்ளுகிறார்கள். நமீதா போல வருமா என்கிறார்கள்.

இந்நிலையில் நமீதா பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது நமீதா ஷூட்டிங் இல்லாத நேரங்களி்ல் சூரத் மற்றும் ஹம்பிவேலியில் அதிவேக பைக்கில் பறக்கிறாராம். நமீதாக்குள் இப்படி ஒரு வீரியா என்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

நீங்கள் சூரத் அல்லது ஹம்பிவேலியில் இருக்கிறீர்களா? பார்த்து, ரோட்டில் பைக்கில் யாராவது பறந்தால் அது நமீதாவாக கூட இருக்கலாம்.

விஸ்வரூபம் சமஸ்கிருதப் பெயர், மாற்றுங்கள்.. கமலுக்குக் கோரிக்கை

Hmk Wants Change The Name Viswaroopam   

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.

இந்து மக்கள் கட்சதியின் தலைவரான கண்ணன் இதுதொடர்பாக சர்ச்சையை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்?

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா