
பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“யாழ்.போதனா மருத்துவமனை இரத்தவங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் சிறிலங்கா படையினரே.
ஒவ்வொரு மாதமும் சிறிலங்கா இராணுவம், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்கிறது.
இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு 125 தொடக்கம் 150 லீற்றர் வரையான இரத்தம் சிறிலங்காப் படையினரால் வழங்கப்படுகிறது.
இப்போது பெரும்பாலான யாழ்ப்பாண மக்களிடம் ஓடுவது சிங்கவர்களின் இரத்தம் தான்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment