Saturday 13 August 2011

வன்னியில் செஞசோலை செந்தளிர்கள் செந்நீரான நாள் (காணொளி இணைப்பு)



வன்னிப் பிரதேசத்தில் வள்ளிபுனம் கிராமத்தில் 2006 ம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் நாள் விடியற்காலை 7.30 மணியளவில் செந்தளிர்கள் செங்குருதியால் செந்நிறமானது செஞ்சோலை.எதிர்கால கனவுகளோடு தமது பள்ளி நாளை தொடங்கிய சின்னஞ்சிறு சிட்டுகளை நான்கு விமானங்களில் ஏறிவந்த கழுகுகள் கொத்தோடு பறித்து சென்ற கோரச் சம்பவம் நடந்தேறி இன்றோடு ஐந்து வருடங்களாகின்றன.





சொல்லொணா துயருடன் மரித்தும் மலரான நம் செல்வங்களின் ஆத்ம சாந்திக்காக செங்குருதியால் எழுதப்பட்ட இந்த நாளில் ஏக்கங்களுடன் பிரார்த்திக்கிறோம் .....

இலங்கைக்குள் அமெரிக்க போர் விமானங்கள் ஊடுருவினவா?



அமெரிக்காவின் எச்சரிக்கைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் தான் அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையின் வான்பரப்புக்குள் அத்துமீறியதான செய்தி கடந்தவாரம் வெளியாகியது.அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான “யூ.எஸ்.எஸ். ரொனால்ட் கன்“ இல் இருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட 10 போர் விமானங்கள் இலங்கையின் வான் எல்லைக்குள் அனுமதியின்றி அத்துமீறிப் பிரவேசித்ததாகவும், இலங்கை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அவை வெளியேறிச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.



முதலில் இந்த ஊடுருவலை சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும், விமானப்படை அதிகாரிகளும் உறுதி செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் கூறின.



விமானப்படைப் பேச்சாளர் குரூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய, அமெரிக்கப் போர் விமானங்கள் தற்செயலாகவே ஊடுருவியதாகக் குறிப்பிட்டார். இதற்கு அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் மறுப்புத் தெரிவித்தார். ஆனாலும், விமானப்படைப் பேச்சாளர் விடவில்லை. அமெரிக்கப் போர் விமானங்கள் ஊடுருவியது உண்மையே என்று சாதித்தார்.



இந்த நிலையில், இலங்கை வான்பரப்புக்குள் அவ்வாறான ஊடுருவல் எதுவும் இடம்பெறவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனாலும், அரசதரப்பு விடுவதாக இல்லை. ஊடுருவல் நடந்தது உண்மையே. ஆனால், உள்நோக்கம் ஒன்றும் இல்லை என்பது போல கூறிக் கொண்டிருந்தது.



இந்த நிலையில் ஜே.வி.பி., தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்றன அமெரிக்கா உளவு பார்க்க வந்துள்ளதாகப் பிரசாரம் செய்யத் தொடங்கின. இந்தப் பிரச்சினை தீவிரமான கட்டத்தை அடைந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.



அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட எல்லைக்குள் அத்துமீறிப் பறக்கவில்லை என்றும், அவை கொழும்பு விமானத் தகவல் பிராந்தியத்துக்குள் தான் பிரவேசித்தன என்றும் அவர் அறிவித்தார்.



கொழும்பு விமானத் தகவல் பிராந்தியத்துக்குள் எவரும் நுழையலாம் என்றும் அதற்கு அனுமதி பெறத் தேவையில்லை என்றும் கூறிய அமைச்சர், கரையோரத்தில் இருந்து 12 கடல்மைல் தொலைவு வரையே இலங்கைக்குச் சொந்தமானது என்றும் அவர் விளக்கமளித்தார்.



ஒரு நாட்டின் இறையாண்மைக்குட்பட்ட வான்பகுதிக்கும் விமானத் தகவல் பிராந்திய எல்லைக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் நியாயப்படுத்தினார். இதையடுத்து அரசாங்கம் கூறியது பொய்யா அல்லது விமானப்படை கூறியது பொய்யா என்று கேள்வி எழுப்பியுள்ளார் சோமவன்ஸ அமரசிங்க.



பத்து அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையின் வான் எல்லைக்குள் பிரவேசித்தன என்று உறுதி செய்தது விமானப்படை தான். அரசாங்கம் அதை நிராகரித்துள்ளதன் மூலம் விமானப்படையின் கூற்று பொய்யாகியுள்ளது.



ஒன்றில் விமானப்படை பொய் கூறியுள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது விமானப்படைக்கு இறையாண்மைக்குட்பட்ட வான் எல்லைக்கும், கொழும்பு வான் தகவல் பிராந்திய எல்லைக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பது தெரியாமல் இருக்க வேண்டும்.



பிதுருதலாகல மலையின் உச்சியில் அமைந்துள்ள ரேடரில் தான் இந்த ஊடுருவல் முதலில் பதிவானதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த ரேடர் விமானப்படைக்குச் சொந்தமானதோ, அதன் கட்டுப்பாட்டில் இருப்பதோ அல்ல.



இரத்மலானை விமான நிலையக் கட்டுப்பாடு அறையுடன் தொடர்புடைய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் தான் இந்த ரேடர் உள்ளது. இந்த ரேடர் நிலையத்தில் இருந்து 200 கடல் மைல் தொலைவு வரையான வான் பிராந்தியத்தைக் கண்காணிக்கலாம்.



அமெரிக்கா தனது அறிக்கையில் இலங்கை தனது எல்லைக்கு வெளியே அமெரிக்கப் போர் விமானங்களின் பறப்பை அவதானித்திருக்கலாம் என்று கூறியபோது, விமானப்படைப் பேச்சாளர் தமது ரேடரின் கண்காணிப்புத் திறன் உள்ள பகுதி வரை கண்காணிப்போம் என்று முகத்தில் அடித்தாற்போலக் கூறியிருந்தார்.



விமானப்படை இந்த ஊடுருவலை எவ்வாறு கண்காணித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், இலங்கை விமானப்படையிடம் உள்ள ரேடர்கள் அனைத்துமே குறைந்த மற்றும் நடுத்தர உயரத்தில் பறக்கும் விமானங்களை மட்டுமே கண்காணிக்கும் திறன் கொண்டவை.



சீனத் தயாரிப்பு முப்பரிமாண ரேடரும் சரி, இந்தியத் தயாரிப்பு இரு பரிமாண ரேடர்களும் சரி அதிக தொலைவுக்கு உணரும் திறனோ அல்லது அதிக உயரத்தில் பறக்கக் கூடிய அமெரிக்கப் போர் விமானங்களை கண்காணிக்கும் திறனையோ கொண்டிருக்க வாய்ப்பில்லை.



இந்த ரேடர்கள் புலிகளின் சிறிய விமானங்களைக் கண்காணிக்க வாங்கப்பட்டவையே தவிர, வெளிநாட்டுப் போர் விமானங்களைக் கண்காணிப்பதற்கானவை அல்ல. ஆனாலும், விமானப்படைப் பேச்சாளர் அமெரிக்கப் போர் விமானங்கள் ஊடுருவியது உண்மையே என்று உறுதியாகக் கூறிவந்தார். இதை அவர் எதன் அடிப்படையில் கூறினார் என்பது தெளிவில்லை.



அதேவேளை, இதில் உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தற்செயலாகவே ஊடுருவியிருக்கலாம் என்றும் அவர் கூறியது தான் வேடிக்கையான விடயம். ஏனென்றால், அமெரிக்கப் போர் விமானங்கள் அதிநவீனமானவை.



அவற்றில் எங்கு பறக்கிறோம், யாருடைய எல்லைக்குள் நுழைகிறோம் என்ற உணர்திறன் வசதிகள் கூட இல்லை என்ற வகையில், விமானப்படை கூறப்பட்டுள்ளது. ஒரு தேர்ச்சிமிக்க விமானப்படை என்று கூறும் இலங்கை விமானப்படை இப்படி சிறுபிள்ளைத்தனமாக கருத்தை வெளியிடுவது அழகல்ல.



அதுவும் ஒரு விமானம் தற்செயலாக நுழைந்திருந்தாலும் பரவாயில்லை. 10 விமானங்கள் ஊடுருவின என்று கூறியது தான் ஆச்சரியம். அவ்வாறு 10 விமானங்களுக்கும் இலங்கையின் எல்லைக்குள் நுழைகிறோம் என்று தெரியாமல் போயிருக்காது.



அவ்வாறு 10 போர் விமானங்கள் நுழைந்திருந்தால், அதற்கு நிச்சயம் ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், அமெரிக்கா திரும்பத் திரும்ப, தாம் எல்லை மீறவில்லை என்று அழுத்திக் கூற அரசாங்கம் வழிக்கு வந்து விட்டது.



ஆனாலும், அமெரிக்கப் போர் விமானங்கள் ஊடுருவியது உண்மையா...? பொய்யா...? என்ற கேள்வியும் சந்தேகம் பலரிடம் இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவின் அழுத்தங்களும் எச்சரிக்கைகளும் இலங்கைக்கு அதிகரித்து வருகின்ற நிலையில், இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருந்தாலும் சரி அல்லது நிகழாமலேயே போயிருந்தாலும் கூட விவகாரமாக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை.



அதிலும், தற்செயலாகவே நிகழ்ந்திருந்தாலும் கூட இதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ““யூ.எஸ்.எஸ். ரொனால்ட் கன்'' பசுபிக்கில் இருந்து இந்து சமுத்திரத்துக்கு நகர்த்தப்பட்ட நிலையில் தான் அமெரிக்கப் போர் விமானங்கள் எல்லை மீறியதாகக் கூறப்பட்டுள்ளது.



இந்தப் போர்க்கப்பலின் நகர்வு இலங்கைக்கு ஒருவேளை அச்சத்தைக் கொடுத்திருக்கலாம். சிங்களத் தேசியவாதிகள் சிலர், அமெரிக்கா முற்றுகையிட வேவு பார்ப்பதாக அச்சம் வெளியிட்டுள்ளனர். ஆனால், போர் விமானங்களை அனுப்பித் தான் இலங்கையை வேவு பார்க்க வேண்டும் என்ற அவசியம் அமெரிக்காவுக்குக் கிடையாது.



அமெரிக்காவின் விரல் நுனியில் இலங்கை பற்றிய எல்லாத் தரவுகளும் உள்ளன. அமெரிக்கா தனது செய்மதிகளைக் கொண்டே எல்லாவிதமான வேவுகளையும் செய்ய முடியும். போரின் இறுதிக்கட்டத்தை அமெரிக்க செய்மதிகள் படமாக்கி வைத்திருக்கின்றன. அந்தளவுக்கு அதனிடம் தொழில்நுட்பங்கள் உள்ளன.



அதைவிட, இலங்கையை வேவு பார்ப்பதற்கு இங்கு என்னதான் இருக்கிறது? அப்படி வேவு பார்ப்பதென்றால் கூட அந்தப் போர் விமானங்கள் கடலுக்கு மேலாகப் பறந்து விட்டுப் போனால் போதாது. தரைக்கு மேலாக வந்திருக்க வேண்டும்.



அதேவேளை, அமெரிக்காவும், எல்லாவற்றையும் நேரடியாகவோ அல்லது வெளிப்படையாகவோ செய்வதில்லை. சில விடயங்களை மறைமுகமாகவும், நாசூக்காகவும் வெளிப்படுத்துவதும் உண்டு. அத்தகையதொரு மிரட்டலாக இது இருக்கலாமோ...? என்ற அச்சத்தை சிங்களத் தேசியவாதிகள் மத்தியில் இந்த விவகாரம் எழுப்பியுள்ளது.



சீனாவின் பக்கம் இலங்கை அதிகம் சாயத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க விரோத உணர்வுகளைத் தூண்டிவிட இந்தச் சம்பவம் காரணமாகியுள்ளது.



-சுபத்ரா



வன்னியில் அதிகரிக்கும் பாலியல் தொல்லைகள்



வன்னிப்பகுதியில் பெண்கள் மீதுகட்டவிழ்த்துவிடப்படும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மோசமான சூழலை தோற்றிவித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது





சிறீலங்காப்படையினரின் தடுப்பு முகாம்களில்இருந்த பெருமளவான பொண்கள் தற்போது விடுதலைஆகிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்கள் மீதாக வன்முறைச்சம்பவங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் அண்மையில் 12 குழந்தைகள் முறைதவறிப்பிறந்துள்ளன

குறிப்பாக காணவனை இழந்த அல்லது கணவன் தடுப்பில் உள்ள பெண்களை இலக்குவைத்தே இந்த குற்றசாட்டுக்கள் எழுப்பபட்டுவருகின்றது இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்திலும் பாலியல்வல்லுறவு அதிகரிக்கும் அதேவேளை எல்லாம் இயல்பிற்கு திரும்பி விட்டது என கூறிக்கொள்ளும் சிறீலங்கா அரசு

யாழ்ப்பாணத்தில் கடந்த மே மாதம் வரை ஜந்து மாதங்களில் 18 அகவைக்கு உட்பட்ட 75 பாடசாலை மாணவிகள் முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரித்திருக்கின்றார்கள் இவ்வாறு தமிழ் சிறார்களின் கலாச்சாரத்தினை அழிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது .இந்த சம்பவங்களை யார் தட்டிக்கேட்ப்பது.



யாழில் படையினரின் வீதிச்சோதனையினால் மக்கள் பெரும் சிரமம்



யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் சிறீலங்காப்படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக யாழ் நகரினை அண்டியபகுதிகளில் படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் சகல ஊர்திகளும் மறிக்கப்பட்டு சோதனைகள்மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கின்றார்கள். மாலை வேளைகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்துள்ளன

காரணங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கையினால் பயணம் மேற்கொள்ளம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள் படையினரின் இவ்வாறான சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில்தான் யாழ்ப்பாணத்தில் திருட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 47Share

இன்று மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்



இன்று மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசு அரசையும்,சோனியா, மற்றும் பிரதிபா பாட்டில் ஆகியோரை கண்டித்தும் கோசங்கள் முழங்கப்பட்டன.



இப்படிக்கு,துரை.....













மிகிந்தலை ரஜமஹா விகாரையின் பிக்குவை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு



மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதியான பௌத்த பிக்குவை கைது செய்யுமாறு அனுராதபுரம் மஜிஸ்திரேட் பிரதம நீதவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி ஒருவரை பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

13 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகக்

கச்சதீவில் இந்திய தேசிய கொடியை பறக்கவிட சிலர் முயற்சி?



கச்சதீவில் இந்திய தேசியக் கொடியை பறக்க விடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்து மக்கள் அமைப்பு என்ற தமிழக அமைப்பினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சுதந்திர தினத்தில் இவ்வாறு தேசிய கொடியை ஏற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் குழுவினருக்கு படகுகளை வழங்க வேண்டாம் என தமிழக மீனவர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

1976ம் ஆண்டு முதல் இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தததின் அடிப்படையில் கச்சதீவு ஒப்படைக்கப்பட்டது.

விடுதலை பெற்ற 152 முன்னாள் விடுதலைப் புலிகள்! - காணொளி



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முள்ளிவாய்க்காலில் காவு கொடுக்கத் தயாராக இருந்த பல்லாயிரம் பேரில் இருந்து மீண்டு, ஸ்ரீலங்கா படையிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11000 பேரில் புனர்வாழ்வு பெற்ற 152 பேர் நேற்று 2011.08.12 ஆம் திகதி புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். புனர்வாழ்வு பெற்று விடுதலையான 8240 முன்னாள் விடுதலைப் போராளிகளும் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள், இன்னும் 2700 பேர் ஏழு மத்திய நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வருகின்றார்கள், இவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்களென மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டார்.

Friday 12 August 2011

எமது இலக்கு சுதந்திர தமிழீழமே!: பிரதமர் வி.ருத்ரகுமாரன்

தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தை புறந்தள்ளி விட்டு, சலுகை - அபிவிரித்தி அரசியலை முன்னிறுத்தும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்குள், விடுதலைப் போராட்டத்தை பயணிக்க முடியாது. எமது இலக்கு சுந்திர தமிழீழமே என நாடு கடநத தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.



சமகால அரசியல் நிலைவரங்கள், நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகள், தமிழர் அரசியல் முன்னெடுப்புகள் என பல்வேறுபட்;ட விடயங்களுக்கு, மக்களின் கேள்விகளுக்கு பதிலுரைக்கும், ஐ பி சி தமிழ் வானொலியின் நிகழ்ச்சியொன்றில் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள் பங்கெடுத்திருந்தார்.



இந்நிகழ்ச்சியில், நேயர் ஒருவரின் கேள்விக்கு பதிலுரைக்கும் பொழுதே மேற்குறிப்பிட்ட கருத்தினை பிரதமர் அவர்கள் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,



இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான அரசியல் வெளி முழுiமாக அற்ற காரணத்தினாலேயே, புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற்றது.



இந்நிலையில், சலுகைகளையும - அபிவிரித்திகளையும் முன்னிறுத்தி, மகிந்தாவினால் முக்கியத்துவப்படுத்தப்பட்டு வரும் தேர்தல் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள், விடுதலைப் போராட்டத்தை பயணிக்க முடியாது. எமது இலக்கு சுதந்திர தமிழீழமே.



இதனை வெளிப்படுத்தும் முகமாகவே, தாயக மக்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தலில், மகிந்தவினால் முன்னிறுத்தப்பட்ட சலுகை - அபிவிருத்தி அரசியலை முற்றாக நிராகரித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர் என பிரதமர் தெரிவித்தார்.



தாயக மக்களின் இந்த உறுதியான நிலைப்பாட்டு தலைசாய்ப்பதென குறிப்பிட்ட பிரதமர் அவர்கள், இலங்கைத் தீவை நோக்கியதாக சர்வதேசத்தின் கவனம் இருக்கின்ற நிலையில், தமிழர் தாயகத் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற சாத்வீக வழியிலான போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுமென குறிப்பிட்டார்.



சாத்வீகவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போதே, எமக்கான அரசியல் வெளி மெது மெதுவாக பெரிதுபெறும் என தெரிவித்ததோடு, நிலத்திலும் - புலத்திலும் சமாந்திரமாக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக இது மாற்றம் பெறும் பொழுது, விடுதலைப் போராட்டத்தின் வீச்சு வலுவடையும் என தெரிவித்தார்.



தமிழீழம் என்பதான புலம்பெயர் தமிழர்களின் இறுக்கமான நிலைப்பாட்டினால் தான், தாயகத்தில சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதாக குறித்துரைத்த நேயர் ஒருவரின் கேள்விக்கு பதிலுரைத்த பிரதமர் அவர்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதலே, இலங்கைத் தீவை சிங்களத் தீவாக்கும் நோக்கில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதனை சுட்டிக்காட்டினார்.



இதேவேளை, உள்நாட்டு விவாகாரம் என்ற நிலைக்குள் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் என்ற கட்டத்தைக் கடந்து, தமிழர் போராட்டம் சர்வதேச மயப்பட்டிருக்கும் இவ்வேளை, தற்போது வலுதீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள் குடியேற்றங்களை, அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கான வழிவகைகளை காண வேண்டுமென தெரிவித்தார்.



ஐ.நா நிபுணர் குழு அறிக்கை - சனல் 4 காணொளி ஆவணம் உட்பட சிறிலங்கா தொடர்பிலான வேகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாட்டை, எமது விடுதலைப் போராட்டத்துக்கு, சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில்தான், எமது இராஜதந்திரம் தங்கியுள்ளதென, நேயர் ஒருவரின் இன்னுமொரு கேள்விக்கு பதிலுரைத்த பொழுது தெரிவித்தார்.



நாதம் ஊடகசேவை

தகவல்துறை அமைச்சகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

கோத்தபாய'வை சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்து தண்டிக்க முடியும்!: வீரமணி

தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஈழத் தமிழர் பிரச்னை குறித்த தீர்மானத்தை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய விமர்சனம் செய்தது குறித்து மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.



சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய அரசியல் தீர்மானம் குறித்து வெளிநாட்டவர் இவ்வாறு முதல்வரையும், அதன்மூலம் தமிழக சட்டப்பேரவையையும் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.



இதுபோன்றவர்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுக்க முடியும் என வீரமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



இதேவேளை, திருச்சியில் இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'ஓவர்' செலவு வைக்கும் இலியானா: புலம்பும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்


நடிகை இலியானா 1 கோடி சம்பளத்தை வாங்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் படபிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் பாக்கெட்டுகளை காலியாக்கும்வகையில் ஏகப்பட்ட செலவுகளை வைத்து கலக்கி வருகிறாராம்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்த கேடி நாயகியை படத்தில் நடிக்கை வைக்க வேண்டும் என்றால் கோடி கொடுக்க வேண்டும். சரி கோடி கொடுத்தாச்சு அம்மணி ஒழுங்காக படத்தை நடித்து முடித்துக் கொடுப்பார் என்று நினைத்தால் தவறு.

கோடியை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்வார். படபிடிப்புக்கு வரும்போது கூடவே 6 பேரை அழைத்து வருகிறாராம். அவர்களுக்கான பயணச் செலவு, தங்கும் வசதி, உணவு என எல்லா செலவுகளையும் தயாரிப்பாளர்கள் தான் ஏற்க வேண்டுமாம். அவர்கள் அனைவரும் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவார்களாம். அவர்கள் தங்க ரொம்ப எல்லாம் இல்லை வெறும் 3 அறைகளை புக் செய்தால் போதும் என்கிறாராம் இலியானா.

நடு அறையில் இலியானாவும், மற்ற 2 அறைகளில் உதவியாளர்கள் தங்குகிறார்களாம். அம்மணி வைக்கும் செலவைப் பார்த்து தயாரிப்பாளர்கள் நொந்து போயுள்ளனராம்.

கல்யாணம் செய்யவெல்லாம் இப்போ எனக்கு நேரமில்லை-வித்யா பாலன்


எனக்குக் கல்யாணம் நடைபெறவில்லை. அதற்கெல்லாம் இப்போது எனக்கு நேரமும் இல்லை. நான் அவ்வளவு பிசியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன். சில்க்கின் பிறந்த நாளான டிசம்பர் 2ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் வித்யா பாலனுக்கும், சித்தார்த் ராய் கபூருக்கும் ரகசிய கல்யாணம் நடந்து விட்டதாக செய்திகள் பரவின. ஹனிமூனுக்கு இருவரும் போகப் போவதாகவும் தகவல்கள் கூறின.

ஆனால் இதை வித்யா பாலன் மறுத்தார். தற்போது தான் மும்பை அருகே டர்ட்டி பிக்சர்ஸ் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனக்கு கல்யாணம் ஆகவில்லை. அதற்கான நேரமும் எனக்கு வரவில்லை. எனக்கு இப்போது நிறைய வேலைகள் உள்ளன. எனவே கல்யாணத்திற்கு எனக்கு நேரமில்லை என்பதே உண்மை. இப்போது டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பில் நான் பிசியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.

வித்யா பாலன் திருமணச் செய்தி குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் மும்பைக்கு அருகே படப்பிடிப்புக்காக முகாமிட்டுள்ள அவரை நேரில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.

ராணி லட்சுமிபாய் வேடம் பூணும் 'கவர்ச்சி ராணி' சலோனி


தெலுங்குத் திரையுலகில் கவர்ச்சிகரமான நாயகிகளில் ஒருவராக வலம் வரும் சலோனி, ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கம்மாயி என்ற பெயரில் தயாராகும் படத்தில்தான் ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக கத்தி பிடித்து சண்டை போட்டுக் கலக்கியுள்ளாராம்.

இப்படத்தில் சலோனிக்கு நிறைய சண்டைக் காட்சிகளையும் வைத்துள்ளனராம். இதற்காக தீவிர பயிற்சிகளில் குதித்துள்ள சலோனி இந்த வேடம் மூலம் தனது நடிப்புத் திறமையை பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறாராம்.

படத்தில் வரும் ஒரு காட்சியில் குதிரை மீது அமர்ந்தபடி கையில் வாளைச் சுழற்றிக் கொண்டு ஆவசேமாக கோஷமிட்டபடி வரும் காட்சியில், சலோனியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் மிரண்டு விட்டார்களாம்.

முதலில் குதிரை மீது சலோனி அமர பெரும் சிரமப்பட்டாராம். குதிரை சில முறை அவரை கீழே தள்ளி விட்டதாம். பின்னர் அதை பழக்கப்படுத்தி சலோனியிடம் நட்பு கொள்ள வைத்து பின்னர் காட்சிகளைப் படமாக்கினார்களாம்.

என்ன அதிரடி ராணியாகி விட்டீர்களே என்று சலோனியிடம் கேட்டால், ஒரு நடிகை கவர்ச்சிகரமான உடை அணிந்து, மரத்தை சுற்றி வந்து ஆடிப் பாடுவது மட்டுமே நடிப்பாக கருதக் கூடாது. இதுபோன்ற வேடங்கள்தான் உண்மையிலேயே ஒரு நடிகையின் திறமையை வெளிக்கொணர உதவும் என்றார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு டப் ஆகி வரும் உருமி


கேரளாவில் சக்கை போடு போட்ட உருமி தமி்ழில் வெளியாகவிருக்கின்றது.

பிரித்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பில் வெளியான மலையாளப் படம் உருமி. இதை சந்தோஷ் சிவன் இயக்கி இருந்தார். பிரித்விராஜ், ஷாஜி நடேசன் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோர் தயாரித்திருந்தனர். 15 நூற்றாண்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம்.

வாஸ் கோட காமா எப்படி இந்தியாவுக்கு வந்தார், இந்தியர்களை எவ்வாறு இரக்கமின்றி சுரண்ட முயன்றார் என்பது தான் கதை. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இப்படம் விரைவில் தமிழில் வெளியாக உள்ளது.

கடந்த 8-ம் தேதி ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் தமிழ் உருமியின் சிறப்பு காட்சி காண்பிக்கப்பட்டது. அதை இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர்.

மதுரையில் விஜய்யின் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் வரும் 28-ம் தேதி நடக்கிறது.

விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்துள்ள புதிய படம் வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ரூபாய் 45 கோடி செலவில் உருவாகியுள்ள படம் இது. ஆடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

அதிமுகவுக்கு தீவிர ஆதரவாளராக விஜய் மாறிவிட்டதால், இந்தப் படத்தின் ஆடியோவை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் இசை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலாயுதம் பட பூஜையை ரசிகர்கள் முன்னிலையில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினோம். இப்போது படத்தின் ஆடியோவை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை மதுரையில் இந்த விழா நடக்கிறது. ரசிகர்கள் இந்த விழாவை சிறப்பித்துத் தரவேண்டும்," என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்கள் தொடர்பான மீண்டும் ஒரு தெளிவான குரல்



தமிழகத்திற்கும் ஈழத்தமிழகத்திற்கும் “தொப்புள்கொடி உறவு” உள்ளதாக நாம் அடிக்கடி பெருமையுடன் பேசிக்கொள்வோம். அந்த மண்ணிலிருந்து நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் எமக்கு ஆபத்துக்கள் ஏற்படும் காலங்களில் எல்லாம் தமிழகத்திலிருந்தும் அங்குள்ள அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் அவர்கள் கரங்கள் நீளும் என்றெல்லாம் பல தடவைகள் காத்திருந்தோம்.ஆனால் நமக்கு கடந்த காலங்களில் கிடைத்தது எல்லாம் கபடமும் பொய்மையும் காட்டிக் கொடுப்புக்களும் தான். இந்திரா காந்தியும் மக்கள் திலகம் எம்ஜிஆரும் கவனமெடுத்து வளர்த்த நம் விடுதலை வேட்கையின் ஆணிவேரை வெட்டியெறிய மத்திய அரசிற்கு மந்திரம் சொல்லிக் கொடுத்த “மகத்தான” முதலமைச்சர் கருணாநிதி நமது மண்ணை செருப்புக்கால்களாலும் மிதித்தார். இறுதியில் அவர் செய்த அதர்மக் காரியங்களுக்கு தமிழகத்தின் மக்கள் தகுந்த “செருப்படி” கொடுத்தார்கள்.



ஆனாலும் தற்போது தமிழக மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா ஈழத்தமிழ் மக்களையும் ஒரு கையால் அணைத்துக் கொள்ளும் தாயைப் போல தோன்றுகின்றார்



தான் முதலமைச்சர் பதவி ஏற்ற நாள் தொடக்கம் அவர் எமது மக்களின் துன்பங்களை கவனிக்கும் தாயாகவே தெரிகின்றார். எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் தலைவியாகவும் தெரிகின்றார். மேலும் எம்மீது ஏறி நின்று மிதக்க எண்ணும் கொடியவர்களுக்கு கண்டனக் குரல் எழுப்பும் ஒரு போராளியாகவும் அவர் கைகொடுக்கின்றார்.



ஆமாம் அன்பர்களே! தமிழகத்திலிருந்து எமது ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு தெளிவான அரசியல் தலைவராகவே அவர் காட்சியளிக்கின்றார்.



நேற்று வியாழக்கிழமை தனது சட்டசபையில் அவர் நமது மக்கள் தொடர்பாக ஆற்றிய உரை நமக்கு இனிப்பாகவும் இலங்கை அரசின் தலைவர் மகிந்தாவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் கசக்கும் மருந்தாகவும் இருக்கும் என்பதே உண்மை. நமது மக்களுக்கு ஆதரவாக தமிழக சட்ட சபையில் “சனல் நான்கு” வீடியோ பிரதி தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் மகிந்தாவின் சகோதரர் கோதபாயா ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவும் அவரை எச்சரிக்கும் முகமாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரை தொடர்பாகவே நாம் இந்த விடயத்தை எழுதுகின்றோம்.



நேற்று தமிழக சட்டசபையில் தான் கொண்டுவந்த சிறப்புக் கவனயீர்;ப்பு தீர்மானத்தை முன்வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை இன்றைய நாளில் உலக முக்கியத்துவம் பெறுகின்றது. ஏற்கெனவே தமிழக அரசின் தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் திரு கோதபாயா ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே மேற்படி சிறப்புக் கவனயீர்ப்பு தீர்மானம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது என்பதை நாம் காணுகின்றபோது எமக்காக தமிழத்திலிருந்து நம்பிக்கை நட்சத்திரம் ஒன்று தோன்றியுள்ளது என்றே கருதக்கூடியதாக உள்ளது.



முதல்வர் ஜெயலலிதா அங்கு உரையாற்றும்போது திட்டவட்டமாக ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அது என்னவென்றால் “ இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையான அந்தஸ்த்து இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது” என்ற போர்க்குணமுள்ள கருத்துக்களை அவர் அள்ளி வீசியுள்ளார்.



அத்துடன் தமிழக அரசின் உத்தியோகபூர்வமான தீர்மானம் ஒன்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கோதபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இந்தியாவி;ன் மத்திய அரசு இலங்கை அரசிற்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்” என்ற கருத்தை முதல்வர் ஜெயலல்pதா வலியுறுத்தியுள்ளார்.



“போர்க்குற்றங்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஏற்றதான விளக்கங்களை அளிக்காமல் தேவையற்ற வகையில் பேட்டிகளை இலங்கை அரசு வழங்கிவருவது குறித்தும் ஜெயலலிதா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இவற்றையெல்லாம் நாம் கவனிக்கும் போது ஈழத்தமிழர்கள் தொடர்பாக தமிழகத்திலிருந்து தெளிவாகக் குரல்கொடுக்கும் முக்கிய அரசியல் தலைவியாக முதல்வர் ஜெயலலிதா தொடரந்து இருப்பார் என்ற நம்பிக்கையைத் தருகின்றது அல்லவா?



பிரபு தேவாவுடன் முதல்நாள் ஷூட்டிங்கில் நயன்தாரா!


இந்து மதத்துக்கு மாறிய கையோடு, தன் வருங்காலக் கணவர் பிரபுதேவாவுடன் இணைந்தே காணப்படுகிறார் நயன்தாரா.

மதம் மாறிய பின் முதல் நிகழ்ச்சியாக மும்பை சென்ற நயன்தாரா, அங்கு பிரபுதேவாவின் இரண்டாவது இந்திப் படமான ரவுடி ரதோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தில் அக்ஷய் குமாரும் சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். ஷூட்டிங்கின் முதல் நாள் பிரபுதேவாவுக்கு துணையாக இருந்தார் நயன்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஆண்டுக்கு ஒரு படம் செய்யத் திட்டமிட்டுள்ள பிரபு தேவா, இப்போது மும்பையில் தானும் நயனும் வசிப்பதற்கு புதிய ப்ளாட் ஒன்றையும் பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, திருமண ஏற்பாடுகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார்கள் இருவரும். அடுத்த மாதம் மும்பையில் திருமணம் நடக்கும் சிலரும், கொச்சியில்தான் திருமணம் என இன்னொரு தரப்பும் கூறி வருகிறது.

5 ஏக்கர் நிலத்தை மாஜி திமுக எம்.எல்.ஏ. அபகரித்து விட்டதாக குட்டி பத்மினி மகள் புகார்


சென்னை: திருத்தணி தொகுதி முன்னாள் எம்எல்ஏ இ.சிவாஜி தங்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக நடிகை, டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குட்டி பத்மினியின் மகள் கீர்த்தான காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தனது தாயாருடன் கமிஷனர் ஜே.கே. திரிபாதியை சந்தித்து கீர்த்தனா இந்தப் புகாரைக் கொடுத்தார். கீர்த்தனாவும் ஒரு நடிகைதான் காதலே சுவாசம் என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவர் சரிவர நடிக்கவில்லை.

கமிஷனரை சந்தித்து கீர்த்தனா கொடுத்த புகாரில்,

எனது தாயார் குட்டி பத்மினி. பிரபல நடிகை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரைப்படத் துறையில் பல வருடம் இருந்துள்ளார். டிவி தொடர்களையும் தயாரித்துள்ளார்.

எனக்கு 2 சகோதரிகள் உள்ளனர். 1994ம் ஆண்டு கும்மிடிபூண்டியில் உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் எனது பாட்டியின் பணத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதில், ஒரு ஏக்கர் நிலம் எனது தாயார் பெயருக்கும், ஒரு ஏக்கர் நிலம் எனது பெயரிலும் மீதமுள்ள நிலம் எனது சகோதரிகள் பெயரிலும் மாற்றப்பட்டது.

இதற்கிடையில், எனது தாயாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் திமுக எம்எல்ஏ மற்றும் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் திமுக மாவட்ட செயலாளருமான இ.சிவாஜியிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றார். அது வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் ஆகிவிட்டது. எனவே, பணத்தை திரும்ப கேட்டார்.

இதனால், எனது தாயார் பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலம் சிவாஜியின் பினாமி பெயருக்கு மாற்றப்பட்டது. பின்னர், ஒருநாள் எங்கள் வீட்டிற்கு சிவாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து, நிலத்திற்கான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், 2006ம் ஆண்டு எனது தாயார் கும்மிடிப்பூண்டி சென்று பார்த்தபோது 5 ஏக்கர் நிலத்தையும் வேலி போட்டு சிவாஜி மடக்கி வைத்திருந்தார். எங்கள் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மாந்தோப்பின் வருமானத்தையும் அவரே அனுபவித்து வந்தார்.

இப்போது, எனது சகோதரி படிப்பிற்காக அந்த நிலம் தேவைப்படுவதால் அந்த நிலத்தை திருப்பிக் கேட்டோம். ஆனால், சிவாஜி எங்களை மிரட்டினார். நீதிமன்றம் செல்லக் கூடாது என்று மிரட்டும் வகையில் அது இருந்தது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 5 கோடி என்று கூறப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கியுள்ள சிவாஜி, முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்து.

என் இனிய தமிழ் மக்களே என எத்தனை காலம்தான் ஏமாற்றுவேன்...! - பாரதிராஜா


என் இனிய தமிழ் மக்களே என கரகரப்பான குரலில் பேசி இன்னும் எத்தனை காலத்துக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்றுவேன், என இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார்.

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மக்கள் சிந்தனை பேவை சார்பில் முதல் புத்தகதிருவிழா நடந்தது. அதன் நிறைவு விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "இந்த புத்தக திருவிழாவில் அறிவு சார்ந்தவர்கள் பலர் பேசி இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு அப்படி பேச தெரியாது. காட்டாற்று வெள்ளம் போல் பேசுவேன். என் இனிய தமிழ் மக்களே என்ற கரகரப்பான குரலில் பேசி நான் இன்னும் எத்தனை காலம் தான் உங்களை ஏமாற்றுவேன், எனினும் இந்த பாரதிராஜாவுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் நீங்கள். சமுதாயநோக்கம் - சமூக பார்வை நமக்கு இருக்க வேண்டும்.

நாம் எந்த செயலை செய்தாலும் அதை துணிச்சலுடன் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் எதிலும் வெற்றி பெற முடியும். கருத்தம்மா படத்துக்கு கிடைத்த விருது இந்த தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரம். அதனால்தான் என் இனிய தமிழ் மக்களே... என்று கூறுகிறேன்.

நல்ல புத்தகங்களை படிப்பது போன்று மகிழச்சியான விஷயம் எதுவும் இல்லை. புத்தகங்களை படிப்பது குழந்தைகளை கொஞ்சுவது போன்றது. படைப்பாளிகள் எதிர்காலத்துக்கு வழி சொல்பவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். வீடுகளில் பூஜை அறைக்கு பதில் புத்தகங்களை வாங்கி நூலகமாக வையுங்கள்.

அதில் உள்ள புத்தகங்களை கொண்டு உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் அறுந்த போது தமிழனாக இருந்து நாம் என்ன செய்தோம். பார்த்து கொண்டுதானே இருந்தோம். மொழி-இனம் என்ற உணர்வு நமது ரத்த நாளத்தில் குறைந்து வருகிறது," என்றார்.

Thursday 11 August 2011

ஈழத்தில் இனக் கொலை ... இதயத்தில் இரத்தம்.வைகோவின் படம் (வீடியோ இணைப்பு)



ஈழத்தில் இனக் கொலை ... இதயத்தில் இரத்தம் என்கிற பெயரில் இந்தியாவின் ம.தி.மு.க தலைவர் வைகோவால் வெளியிடப்பட்டு இருக்கின்றது இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு படம். உரையாக்கம், இயக்கம் ஆகியன வைகோதான். இப்படம் யூ ரியூப் தளத்தில் வெளியாகி உள்ளது.

போர்க்குற்றவாளி கருணாநிதி



இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதில் கருணாநிதிக்கும் பங்கு இருக்கிறது. எனவே கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளி தான். என்று தமிழக சட்டசபையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான கலைராஜன் தெரிவித்தார்.



நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்துக்கான பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.



அவர் அங்கு இலங்கைப் பிரச்சினை தொடர்பாக முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,



இலங்கைத் தமிழ் மக்களின் நலன் காக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அவர்களுக்காக பாடுபடுவதுபோல் நாடகம் நடத்தினார்.



மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிற்கு மகள் கனிமொழியை அனுப்பி, பரிசுப் பொருள்களை வாங்கிவரச் செய்து மகிழ்ந்தவர் தான் கருணாநிதி.



இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில், ராஜபக்ஸ மட்டும் போர்க்குற்றவாளி கிடையாது.



கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளி தான்.



கருணாநிதி மூன்றுமணி நேரம் நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க உண்ணாவிரதப் போராட்டத்தை இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறி நிறுத்தினார். ராஜபக்ஸ போர்நிறுத்தத்தை அறிவித்ததாகவும் கூறினார். கருணாநிதி இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறி அரை மணிநேரத்திலேயே தமிழ் மக்கள் தங்கியிருந்த பாதுகாப்பு வலயங்களின் மீது இலங்கை இராணுவம் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்ததே.



செஞ்சோலை படுகொலை 5 ஆம் ஆண்டு நினைவாக .தமிழ் பெண்கள் அமைப்பு .யேர்மனி



சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்,எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்,இப்படித் தான் கௌசிகா குருதி தோய்ந்த இறுதி நேரத்தில் அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.



மறக்குமா எம் நெஞ்சம் ?????.

பிஞ்சு வயதில் சிங்கள இனவெறி அரசின் கொடூர தாக்குதலால் பெற்றோரை இழந்து அன்பு பாசம் அரவணைப்பு பாதுகாப்பு அனைத்தையும் பறிகொடுத்து அநாதரவாக தத்தளித்து நின்ற இந்தக் குழந்தைகளுடைய சோகத்தை, தேவையை, உணர்ந்து அவர்களது துயரைத்துடைத்து தனது பிள்ளைகளாக அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக வளர்த்தெடுப்தற்காக தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் உருவாகி செயலில் கண்ட அமைப்பு தான் செஞ்சோலை.அனைத்து யேர்மன் வாழ் தமிழ் மக்களும் அவ் நிகழ்வில் கலந்து கொண்டு எம் உறவுகளின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டி எம் விடுதலையின் பாதையில் உண்மை உள்ள மனிதர்களாக எம் உறவுகளுக்காக நீதி வேண்டி தொடர்ந்தும் போராடுவோம்.



2008.08.14 ஆம் திகதி அதிகாலை ஏனைய பள்ளி மாணவர்கள் உட்பட செஞ்சோலையில் முதலுதவி பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள், மொத்தமாக 61 பேர் கொல்லப்பட்ட கொடூரம் மனதை உருக்கக் கூடியதாகும்.எண்ணற்ற கனவுகளுடன் பரீட்சைக்காகக் காத்திருந்த எம் இன மொட்டுக்களை கிள்ளி எறிந்து எரித்த சிங்கள இனவெறி அரசு இன அழிப்பு அவர்களுடைய தேசியக் கொள்கையாக இருப்பதை அடையாளம் காட்டியது.



வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள். ஆசிரியர்கள், அரசியல்வாதிகள்,அறிஞர்களென எமக்குக் கிடைக்கவிருந்த அருமருந்துகள் எத்தனை எத்தனை?



அத்தனை குஞ்சுகளையும் பிஞ்சு வயதினில் அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அள்ளி எறிந்தான் இனவெறியன் குண்டுகளை உலகின் மனிதம் தொலைந்த நாள் என்ற தலைப்பில் அன்று 22 நகரங்களில் யேர்மனியில் நீதி கேட்டோம் .இன்றும் நாம் உறுதி தளராது கடந்த வாரங்களுக்கு முன்னும் 20 நகரங்களுக்கு மேலாக கறுப்பு ஜூலை நினைவு சுமந்து அன்றில் இருந்து இன்று வரை ஓயாமல் போராடுகிறோம்.உலகத் தமிழர்களின் ஒன்றிணைந்த உரிமைப்போராட்டம் வலுப்பெறும் இவ் வேளையில் முழு மூச்சோடு முன்னகர்வோம்.தமிழீழத்தில் பிறக்கும் எந்தக்குழந்தையும் அநாதரவாக நிற்கக்கூடாது என்கிற தேசியத் தலைவரின் உயரிய சிந்தனையை எம் தலை மேல் சுமந்து எம் உறவுகளுக்கு உதவிக்கரத்தை வழங்குவோம்.



குருதியில் உறைந்த அந்த கொடிய நினைவுகள் சுமந்த நாளை நினைவுசுமந்து எதிர்வரும் 14 .08 .2011 அன்று யேர்மனியில் இரு நகரங்களில் சுடர்வணக்கம் செலுத்தி எம் இன மொட்டுக்களை நினைவுகூற யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு அழைக்கின்றனர்.



செஞ்சோலை நினைவுசுமந்து சுடர்வணக்க நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் :

1.Am 14.08.2011,Um 10,00 Uhr,Wedell Str.57,12249 Berlin



2.Am 14.08.2011,Um16,00 Uhr,Saalbau Titus Forum,Waller-Möller-Platz,60439 Frankfurt am Main



ஏனைய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.



நன்றி.



tfogermany@gmail.com



தமிழ் பெண்கள் அமைப்பு -யேர்மனி



கருணை மனுக்கள் நிராகரிப்பு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது!: சீமான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீகரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.



இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999ம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000வது ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர்.



அந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு – மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இது எதிர்பாராத, வேதனை தரும் முடிவாகும்.



தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்.



வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும். மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாக்காதா? என்று கேட்கிறோம்.



தனது ஒரே மகனின் மரண தண்டனை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பேரறிவாளனின் தாயார் இன்றைக்கு நொருங்கிப் போயுள்ளார். ஒரு நாள் தனது தந்தை விடுதலைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நளினியின் மகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு துயரமான அதிர்ச்சி.



இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் பார்ப்பட்ட நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது.



தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.



மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வராத நிலையில், மானுடம் வெறுக்கும் மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மனிதாபிமானத்தோடு ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்ற வேண்டும்.



அதன் மூலம் வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனைக்கு முதலில் முற்றுப் புள்ளி வைத்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும், அதனைச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

கலைஞர் டிவி எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது: கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.



டில்லி வழக்கறிஞர்கள், நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று, வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார்.



இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக, அதிகாரபூர்வமற்ற வகையில், எடுத்து வைத்தனர்.



தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ‘’கலைஞர் டிவி' செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள், எப்படி செயல்படுகின்றனர் என்பதும், அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியாது'என்றார்.



கலைஞர் டிவி' மேலாண் இயக்குனர் சரத் குமார் கூறுகையில், ’’கடந்த சில மாதங்களாக, சிறையில் நாங்கள் அவதிப்படுகிறோம்.



குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீது, இன்னும் குற்றப்பத்திரிகை கூட, தாக்கல் செய்யவில்லை'என்றார்.

அதிகாரப்பரவலாக்கல் சாத்தியமற்றதென கூறும் நிலையில் தெரிவுக்குழுவில் எவ்வாறு நம்பிக்கை வைக்கமுடியும்? த.தே.கூட்டமைப்பு கேள்வி

தமிழ் மக்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எவ்வாறு கோர முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.



இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழ்வதற்கு தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டம் போதுமானது. தற்போதைய அதிகார பரவலாக்கல் முறைமையைவிடவும் சற்று முன்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முறைமையானது அனைத்து மக்களும் ஒருமித்து வாழ்வதற்கு போதுமானதாகும்.



அந்த வகையில் இதனைவிட மேலதிகமாக எதுவும் தேவைப்படும் என நான் எண்ணவில்லை என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



2011 ஜனவரி 10 ஆம் திகதி அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தபோது 2006 ஜூலையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையை தீர்வை நோக்கிய திசையில் முன்மாதியாகக் கொள்வது என்று இணங்கப்பட்டது.



ஜனாதிபதி ஆற்றிய உரையில் மக்கள் தங்கள் அரசியல் பொருளாதார தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் அரசியல் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை உருவாக்குவதும் ஒரு கூட்டு முயற்சியாலேயே சாத்தியமாகும் என்றும் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் 2011 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரசாங்கத்தின் அழைப்பிற்கு இணங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.



இருந்தபோதிலும் ஆகஸ்ட் நான்காம் திகதிவரை நடைபெற்ற 10 சுற்றுப் பேச்சுக்களின் போது எந்தவொரு பதிலும் முன்வைக்கப்படவில்லை.



இந்தப் பின்னணியில் பேச்சுக்களைத் தொடரவும் இதற்கான பதிலை முன்வைக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.



தற்போது அரசாங்கம் மற்றுமொரு பொறிமுறையை முன்வைக்கப் பார்க்கின்றது. அதாவது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை முன்னிறுத்த முயற்சிக்கின்றது.



தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த முறையாக இருக்கும் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்ததாக தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இதன்மூலம் இந்த நாட்டில் சகல சமூகத்தவரும் இணங்கக்கூடிய தீர்வு ஒன்றைக் காண முடியும் என தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருக்கின்றார்.



தேசிய இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைத்த அரசியல் தீர்வை காண்பதற்கு முன்வைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் எந்தவிதமான நிலைப்பாட்டை அது கொண்டுள்ளது என்பதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆராயவேண்டியுள்ளது.



இருந்தபோதிலும் சமகாலத்தில் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ இதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளதுடன் அது குறித்து பகிரங்கமாக தெரிவித்தும் உள்ளார்.



அதாவது பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என தாங்கள் உறுதியளித்துள்ள நிலையில் பாதுகாப்பு செயலரின் கொள்கைக் கூற்றை எவ்வாறு அது சமரசப்படுத்துவதாக அமையும்? என நாம் அரசாங்கத்திடம் கேள்வி ஒன்றை முன்வைக்க விரும்புகின்றோம்.



பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் இந்தக் கூற்றின் பின்னணியில் அதிகாரப்பரவலாக்கல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவாக பகிரங்கப்படுத்தவேண்டும்.



பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் மேலதிகமாக எதுவும் தேவையில்லை என உறுதிபட தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற தெரிவுக் குழு மீது நம்பிக்கை வைக்குமாறு எவ்வாறு கோர முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேள்வியெழுப்புகிறது.

6-வது அறையை திறப்பவரின் வம்சம் அழிந்துபோகும்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6-வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழிந்து போகும் என, தேவ பிரசன்னத்தில் தெரிய வந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள் கூறினர்.



பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி திறந்து பார்க்கப்பட்டன. அப்போது அந்த அறைகளில் ரூ.11/2 லட்சம் கோடிக்கும் அதிகமான அரிய பொற்குவியல் இருப்பது தெரிய வந்தது. பி என்று பெயரிடப்பட்ட 6-து அறையை திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.



இந்த அறைகள் திறப்பு மற்றும் பொற்குவியல் பட்டியலிடும் பணிகள் தொடர்பாக கோவிலில் தேவபிரசன்னம் எனும் ஜோதிட நிகழ்ச்சி நடத்த திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 8-ந்தேதி கோவிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.



இந்த நிகழ்ச்சியில், கோவில் தந்திரி தரணநல்லூர் பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு, ஜோதிட பண்டிதர்கள் மதூர் நாராயண ரங்கபட், இரிங்காலக்குடை பத்மநாப சர்மா, அரிதாஸ், தேவிதாஸ் மற்றும் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா உள்பட பலர் கலந்துகொண்டனர்.



தேவபிரசன்னத்தின் முதல் நாள் காலையில் சோழிகள் உதவியுடன் ராசி பூஜையும், தொடர்ந்து தங்க ஆரூடம் பார்த்தலும், அதன் பிறகு 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 வெற்றிலைகள் உதவியுடன் தாம்பூல ஜோதிடமும் பார்க்கப்பட்டது.



முதல் நாளில் இருந்தே பல அபசகுன அறிகுறிகள் தோன்றியதாகவும், இதனால் நாட்டுக்கும், ராஜ குடும்பத்தினருக்கும் கெடுதல் ஏற்படும் என்பது உள்பட பல விளக்கங்கள் கூறப்பட்டன. இதில், 12 வெற்றிலைகள் பயன்படுத்தி ஜோதிடம் கூறும் தாம்பூல பிரசன்னம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.



நேற்று 4-வது நாளாக காலை 8 மணிக்கு தேவபிரசன்னம் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக கணித்து கூறப்பட்ட சம்பவங்கள் மற்றும் பார்க்கப்பட்ட சகுனங்கள் பற்றியும் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.



இதுவரை தோராயமாக கூறப்பட்ட பல விஷயங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன. நேற்று, குத்துவிளக்கு மற்றும் கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தி தேவபிரசன்னம் பார்க்கப் பட்டது. குத்துவிளக்கில் போடப்பட்டுள்ள திரிகள், அவற்றின் திசை, ஒளிரும் ஜோதியின் தன்மை- வடிவம் ஆகியவை மூலம் ஜோதிடர்கள் கணித்து கூறினார்கள். நேற்று தேவபிரசன்ன முடிவில் அதிர்ச்சி தரும் தகவல்களை ஜோதிட பண்டிதர்கள் வெளியிட்டனர்.



தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள்,



’’பத்மநாப சாமி கோவிலில் பரிகாரமாக செய்யப்பட்டு வந்த சில பூஜைகள்- நிகழ்ச்சிகள் தடைபட்டதால் சாமி கோபத்துக்கு உள்ளானது, நாட்டுக்கும் ராஜ குடும்பத்துக்கும் கெடுதல் ஏற்படுத்தி உள்ளதாக தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. இதனால் ராஜ குடும்பத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.



கோவில் நம்பிகள் புறப்படா சாந்திகளாக கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது கடைப்பிடிக்கப்படவில்லை. கோவிலுக்குள் ரத்தம் சிந்தப்பட்டு உள்ளதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.



இதற்கு பரிகாரமாக, கோவில் மற்றும் நாட்டின் ஐஸ்வர்யத்துக்காக பத்ர தீபம் ஏற்ற வேண்டும். (5 திரிகள் போட்டு தீபம் ஏற்றுவது தான் பத்ர தீபம் அல்லது பஞ்சாக்னி ஆகும்.)



பிராயசித்தமாக நடத்தி வந்த இந்த தீபம் ஏற்றும் வழக்கத்தை கோவில் ஆசாரப்படி, மீண்டும் தொடங்கி, தடைபடாமல் செய்வதாக கோவில் நிர்வாகிகள் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. பத்ர தீபம் ஏற்றுவதற்கு இந்த கோவிலில் தனி அறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



கோவிலில் கொள்ளை முயற்சி நடக்கலாம் என்றும் பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. நேபாள நாட்டின் கண்டகா நதியில் இருந்துதான், பத்மநாபசாமி மூலவர் சிலை அமைப்பதற்கு தேவையான சாளகிராமங்கள் திருவனந்தபுரத்துக்கு கொண்டுவரப்பட்டன.



இதில் தொடர்பு உடையவர்களை கவுரவிப்பது சம்பந்தமான பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க வேண்டும்.



பத்மநாபசாமி கோவிலில் பணம் செலவிடுவதில் மோசடி நடந்துள்ளது. வரவு-செலவு கணக்குகளிலும், வழிபாடுகள் தொடர்பான கணக்குகளிலும் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது.



கோவில் நீண்ட காலம் சிறப்பாக செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அனந்தன்காடு உள்பட கோவிலுடன் தொடர்புடைய இடங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். கோவில் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் தேவபிரசன்னத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.



தெய்வீக காரியங்களுக்காக, தகுந்த ஆட்களையே நியமிக்க வேண்டும்.



திறக்கப்படாத 6-வது பாதாள அறைக்குள்(`பி' அறை) செல்ல சாமிக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதனால் இந்த அறையை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது.



இந்த அறையை திறந்தால், திறப்பவருக்கு விரைவில் மரணம் நிச்சயமாக ஏற்படும். அறையை திறப்பவரின் வம்சம் அழிந்து போகும்.



அறையை திறப்பவரின் குடும்பத்தினர் பாம்பு உள்பட விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு அழிய நேரிடும். இந்த அறையை திறக்காமல் இருந்தால், தற்போதுள்ள நிம்மதி-அமைதியான நிலை தொடர்ந்து காணப்படும் என்றும் தேவ பிரசன்னம் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்று கூறினர்.

இந்தியாவில் தரையிறங்கிய பாகிஸ்தான் “குண்டு'

பாகிஸ்தானின் புதிய வெளிவிவகார அமைச்சரும் அந்நாட்டின் முதலாவது பெண் வெளிவிவகார அமைச்சருமான ஹினா ரப்பானி கார் கடந்த மாதம் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற் கொண்டு இந்தியா சென்றிருந்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் பகை நாடுகளாக வர்ணிக்கப் படுகின்ற போதிலும் இரண்டு நாடுகளும் இராஜதந் திர தியாக உறவினை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



இதற்கு முன்னரும் இரு நாட்டுத் தலைவர்களும் இராஜதந்திகளும் பரஸ்பரம் விஜயங்களை மேற்கொண்டுள்ள போதிலும் ஹினா ரப்பானியின் விஜயமானது இந்திய ஊடகங்களில் மாத்திரமன்றி சர்வதேச ஊடகங்களிலும் பாரிய கவனயீர்ப்பை பெற்றிருந்தது. அதற்கு அவரது வசீகர தோற்றம், நவநாரிகக ஆடை அணிகளுமே பிரதான காரணமாகும்.



அதற்கேற்ப இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் பேசிக்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை ஒரு புறம் வைத்து விட்டு ஹினா ரப்பானியின் அழகு பற்றியும் அவரது வசீகரத் தோற்றம் பற்றியும் இலட்சக்கணக்கான ரூபா பெறுமதி வாய்ந்த அவரது ஆடை அணிகலன்கள் பற்றியுமே அதிகமான இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.



இந்தியாவில் அதி கூடுதலாக விற்பனையாகும் ஆங்கில தினச யான “டைம்ஸ் ஒப் இந்தியா' ஹினா ரப்பானியின் வருகை பற்றிய செய்திக்கு, ““பாகிஸ்தான் அதன் சிறந்த “முகத்தை' வெளிக்காட்டியுள்ளது'' என தலைப்பிட்டிருந்தது.



அதேபோல் ஹிந்தி நாளிதழான “நவ் பாரத் டைம்ஸ்' ““மொடலைப்போன்ற அமைச்ரிடம் இந்தியா வீழ்ந்தது'' என்றும் “ம்பாய் மிரர்' பத்திகை ““பாகிஸ்தான் குண்டு இந்தியாவில் தரை இறங்கியது'' என நகைச் சுவையாகவும் தலைப்பிட்டிருந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயுததாகள் அண்மைக் காலமாக இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதாக தெவிக்கப்படும் குற்றச் சாட்டுகளின் அடிப்படையிலேயே இப் பத்திகை குறித்த தலைப்பை நகைச்சுவையாக இட்டிருந்தது.



மற்றுமொரு பத்திகையான “மெயில் டுடே' 34 வயதான பாகிஸ்தான் அமைச்சர் டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது உச்சபட்ச நாகரிகமாகவும் பருவகாலத்தை குறிக்கும் நீலநிற ஆடையை அணிந்திருந்தார்'' எனவும் வர்ணித்திருந்தது.



அத்துடன் ““அரசியல் வாதிகள் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள் என யார் சொன்னது?'' என்ற கேள்வி யையும் அது எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி அவரது அணிகலன்களான “சண் கிளாஸ்', வெண்ணிற முத்துமாலை என்பன அவரை மேலும் கவர்ச்சிகரமாக காட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தது.



“த டெலி கிராப்' பத்திகையானது திருமணமான இரண்டு குழந்தைகளின் தாயாரான ஹினா, 79 வயது முதியவரான இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்தார் என தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. “ரெடிப்' எனும் பிரபல இணையதளமானது ““எல்லாக் கண்களும் கவர்ச்சிகரமான பாகிஸ்தான் அமைச்சரையே மொய்த்தன'' என வர்ணித் திருந்தது. இந்தியாவின் ஊடகவியலாளரும் எழுத் தாளருமான சீமாகொஸ்வானி இன்னும் ஒரு படி மேலே சென்று ““ஹினாவை கண்டு புதுடில்லி மேகங்கள் கூட எச்சில் வடித்தன'' என வர்ணித்திருந்தார்.



ஹிந்துஸ்தான் பத்திகையின் எழுத்தாளர் ஒருவர், பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சரான ஹினாவை அந்நாடு கவர்ச்சிகரமான ஆயுதமாகப் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.



இந்தியாவின் நவநாகரிகம் தொடர்பான எழுத்தாளரான அமாரா ஜாவித், ஹினா ரப்பானி கேம்பிட்ஜ் சீமாட்டி கெத்தன் மிடில்டனை விட அழகானவர் என வர்ணித்திருந்தார்.



வழக்கமாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் என்ன விடயங்களைப் பேசிக் கொண்டார்கள் என்பதை அறிய ஆவல் காட்டும் ஊடகங்கள் இம் முறை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரைப் பற்றி மட்டுமே செய்திகளை வெளியிட்டதும், ஊடகவியலாளர்கள் எந்த நேரம் அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டதும் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கதாகும்.



ஓடத்தில் இந்திய ஊடகவியலாளர்களைக் கடிந்து கொண்ட ஹினா ரப்பானி, என்னைப் பற்றிப் பேசு வதில் நீங்கள் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் எனக் கேட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

பரவாயில்லை, ஆடும்வரை ஆடட்டும்: கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்வுடன் போடப்பட்ட வழக்கு என்று நீதிபதியே கூறியுள்ளார். ஜாமீனில் வெளியே வந்த கலைவாணன் மீது 7 பிரிவுகளில் அவசரம் அவசரமாக அதிமுக அரசு மற்றொரு வழக்கைப் பதிவு செய்தது.



போலி ஆவணங்கள் மூலம் 250 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டார்.



அதிமுகவினர் மீது நிலஅபகரிப்பு புகார்கள் உண்மையாகவே வந்தாலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் சமாதானம் பேசி அனுப்புகின்றனர். ஆனால் நிலத்தை விற்றவர்கள் திமுகவினர் மீது புகார் கூறினால், அதனை விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்துகைது செய்யப்படுகின்றனர்.



கைது செய்துவிட்டு புகாரைத்தேடி போலீசார் அலைகின்றனர். ஜாமீன் கிடைத்துவிட்டால் இன்னொரு புகாரைத் தயார் செய்கின்றனர். நீதிமன்றங்களின் மீது உள்ள கோபத்தின் காரணமாக குண்டர் சட்டம் என்னும் கொடுமையான அஸ்திரம் ஏவி விடப்படுகிறது.



நிலஅபகரிப்பு என்று சொல்லி அதற்கு அதிமுக அரசு அளித்து வரும் ஊக்கமும், ஆக்கமும் எதிர்காலத்தில் சிவில் பிரச்சனைகளில் காவல்துறையினரின் தலையீடு, கட்டப் பஞ்சாயத்து போன்ற

விரும்பத் தகாத விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்திவிடும்.



காவல்துறையின் துணையோடு திமுகவை நிலை குலையச் செய்து விடலாம் என்கிற அதிமுக ஆட்சியாளர்களின் கனவு நிறைவேறப்போவதில்லை. இதுபோன்ற சிந்தனைகளைத் தவிர்த்து, ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்காக சிந்தித்து செயலாற்றுவதே ஆட்சியாளர்களுக்கு அழகு.



மோசமான முன்மாதிரிகளை உருவாக்குவதில் நேரத்தையும் நினைப்பையும் வீணாக்குவது நல்லதல்ல, பரவாயில்லை, ஆடும்வரை ஆடட்டும். இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

காஸ்ட்லி நடிகை கரீனா கபூர் : ஒரு படத்துக்கு ரூ.8 கோடி!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
காஸ்ட்லி நடிகை கரீனா கபூர் : ஒரு படத்துக்கு ரூ.8 கோடி!

8/11/2011 5:15:45 PM

இந்தியில் ஒரு படத்துக்கு நடிகை கரீனா கபூர் அதிரடியாக ரூ.8 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இந்தி சினிமா டைரக்டர் மதூர் பண்டார்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க முதலில் கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானார். பின்னர், கர்ப்பமாக இருப்பதால் நடிக்க முடியாது என்று கூறி ஒப்பந்தத்தில் இருந்து ஐஸ் விலகினார். இதனால் மீண்டும் கதாநாயகி தேடலில் இறங்கினார் டைரக்டர் பண்டார்கர். பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன், கரீனா கபூர் இந்த 3 பேரில் ஒருவரை ஹீரோயினாக்குவது என்று முடிவு செய்தார். படத்தின் கதையமைப்பு பேஷன் படத்தின் கதையை ஒட்டி இருந்ததால் பிரியங்கா ஜகா வாங்கினார். சில்க் ஸ்மிதாவின் கதையான 'த டேர்ட்டி பிக்சர்' படத்தில் பிசியாக இருப்பதாக கூறி வித்யா பாலனும் மறுத்தார்.

இதனால் மறுபடியும் கரீனாவிடம் பேசினார் பண்டார்கர். தான் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த பாடி கார்ட், ஏஜென்ட் வினோத் படங்களுக்கு கொடுத்திருந்த தேதியை அட்ஜஸ்ட் செய்து இந்த படத்துக்கு தேதி ஒதுக்கினார். டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏக சந்தோஷம். தேதி ஒதுக்கல் விஷயம் முடிந்து அடுத்து சம்பள விஷயத்துக்குவந்தனர். கரீனா பத்து விரலை நீட்டினாராம். ரூ.10 கோடி கேட்டு. பேரம் பேசி ரூ.8 கோடிக்கு முடித்திருக்கிறார்கள். இதையடுத்து, பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலில் முதல் இடத்துக்கு வந்திருக்கிறார் கரீனா கபூர்.




ஜனாதிபதி மஹிந்தவுக்கு சீனாவில் கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிப்பு(பட இணைப்பு)



சீனா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு கௌரவ கலாநிதிப் பட்டமொன்றை வழங்கியுள்ளது.



சீனாவின் வெளிநாட்டு மொழிக் கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகமே இந்தக் கௌரவத்தை வழங்கியுள்ளது.



இதற்கென இன்று அங்கு ஒரு விழா எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.











சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது: ஜெயலலிதா

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே விமர்சித்ததால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து 11.8.2011 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது,







கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.



எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப் படுகொலையை நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும்; இது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது, பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபக்சே Headlines Today கூடினயல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது.







இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபய ராஜபக்சே கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.



இந்தோனேஷியாவைச் சேர்ந்த Marzuki Darusman; அமெரிக்காவைச் சேர்ந்த Steven Ratner; தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Yasmin Sooka ஆகியோர் அடங்கிய, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.







சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.







இலங்கை ராணுவத்திற்கும் எல்.டி.டி.ஈ.க்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை குழு,







இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது; மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது; மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது; இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை ராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.













இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.







மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.



அடுத்தபடியாக, இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோத்தபய ராஜபக்சே.







கச்சத்தீவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல்லும் போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழை விசைவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.







மேலும், கோத்தபய ராஜபக்சே, வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தான் தற்போதைய முக்கியப் பணி என்றும்; போர்க் குற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார். இலங்கையில் நிலவும் உண்மை நிலவரம் என்னவென்றால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பது தான்.







இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்து இருக்கிறது; இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது.







கோத்தபய ராஜபக்சே, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.







இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் போர்க்குற்றத்திற்கு இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில்,



“போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபசேவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.





இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்; தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு;



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபசேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

சினேகாவைச் சூழ்ந்த ரசிகர்கள்... லேசான தடியடி நடத்தி மீட்ட போலீஸ்


திருப்பூரில் நகைக்கடை திறக்க வந்த நடிகை சினேகாவைக் காண கூட்டம் முண்டியடித்தது. இதனால் அவர் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார்.

அவரை மீட்க போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

பிரபல நடிகை சினேகா ஏராளமான கடை திறப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போதெல்லாம் அவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சூழந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்த முறையும் இதே மாதிரி சம்பவம் நடந்தது. சமீபத்தில் திருப்பூரில் ஒரு பெரிய நகைக்கடை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார் சினேகா. திருப்பூரில் சினேகா இறங்கியதுமே கூட்டம் எக்கச்சக்கமாகக் கூடிவிட்டது.

ஆரம்பத்தில் உற்சாகமாக கையசைத்தபடி, தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்துக் கொண்டிருந்த சினேகா, கூட்டம் சூழ்ந்துவிட்டதால், வெளியேற முடியாமல் தடுமாறினார்.

வேறுவழியின்றி போலீசார் உதவிக்கு அழைக்கப்பட்டனர். உடனே அவர்கல் லேசான தடியடி நடத்திய பிறகே கூட்டம் கலைந்தது. பின்னர் சினேகா நகைக்கடையைத் திறந்துவைத்துவிட்டு பாதுகாப்பாக கோவை விமான நிலையம் விரைந்தார்.

கருணை மனுக்கள் நிராகரிப்பு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது:சீமான்



முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா தேவி சிங் பாட்டீல் நிராகரித்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.



இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999ஆம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000வது ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். அந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு – மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி - முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இது எதிர்பாராத, வேதனை தரும் முடிவாகும்.



தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்? வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும். மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாக்காதா? என்று கேட்கிறோம்.



தனது ஒரே மகனின் மரண தண்டனை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பேரறிவாளனின் தாயார் இன்றைக்கு நொருங்கிப் போயுள்ளார். ஒரு நாள் தனது தந்தை விடுதலைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நளினியின் மகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு துயரமான அதிர்ச்சி.



இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் பார்ப்பட்ட நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது. தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.



மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வராத நிலையில், மானுடம் வெறுக்கும் மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மனிதாபிமானத்தோடு ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனைக்கு முதலில் முற்றுப் புள்ளி வைத்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும், அதனைச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.





தமிழகத்தை இழிவுபடுத்திய கோத்தபயா ராஜபக்சே: முதல்வர் ஜெயலலிதா

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. அவரது பேச்சுக்கு இந்தியா, இலங்கை தூதரை நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.



இலங்கையில் தமிழர்களை கொடூரமாகக் கொல்ல உத்தரவிட்டவர் கோத்தபயா. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சியினரும் வரவேற்றிருந்தனர்.



இந்த நிலையில் தமிழக சட்டசபைதீர்மானத்தையும், தமிழக அரசியல் தலைவர்களையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேட்டி அளித்துள்ளார் கோத்தபயா. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இந்தநிலையில் இந்த விவகாரம் இன்றுசட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கோத்தபயாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். கோத்தபயாவின் விஷமப் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேணடும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.



அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை இந்திய அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதுதான் இன்று கோத்தபயா ராஜபக்சே அந்தத் தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசும் அளவுக்குப் போயுள்ளது.



கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. இது இந்தியா இலங்கை இடையே கச்சத்தீவு தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது.



தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க முழு உரிமையும் உள்ளது. இதை இந்திய அரசு, இலங்கையிடம் தெரிவித்து கோத்தபயாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.



தமிழக சட்டசபை தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசிய கோத்தபயாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்



தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீ்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழகத்தை இழிவுபடுத்திய கோத்தபயா ராஜபக்சே: முதல்வர் ஜெயலலிதா

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. அவரது பேச்சுக்கு இந்தியா, இலங்கை தூதரை நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.



இலங்கையில் தமிழர்களை கொடூரமாகக் கொல்ல உத்தரவிட்டவர் கோத்தபயா. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சியினரும் வரவேற்றிருந்தனர்.



இந்த நிலையில் தமிழக சட்டசபைதீர்மானத்தையும், தமிழக அரசியல் தலைவர்களையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேட்டி அளித்துள்ளார் கோத்தபயா. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இந்தநிலையில் இந்த விவகாரம் இன்றுசட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கோத்தபயாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். கோத்தபயாவின் விஷமப் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேணடும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.



அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை இந்திய அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதுதான் இன்று கோத்தபயா ராஜபக்சே அந்தத் தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசும் அளவுக்குப் போயுள்ளது.



கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. இது இந்தியா இலங்கை இடையே கச்சத்தீவு தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது.



தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க முழு உரிமையும் உள்ளது. இதை இந்திய அரசு, இலங்கையிடம் தெரிவித்து கோத்தபயாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.



தமிழக சட்டசபை தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசிய கோத்தபயாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்



தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீ்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

ஈழத் தமிழர்களுக்கு சம வாழ்வும் கிடைக்கும் வரை அரசு ஓயாது: ஜெயல‌லிதா

இலங்கை‌த் தமிழர்களுக்கு மறுவாழ்வும், சிங்களர்களுக்கு இணையான சம வாழ்வும் கிடைக்கும் வரை என் தலைமையிலான அரசு ஓயாது என்றும், தமிழர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்கும் வரையிலும் தமது அரசு ராஜதந்திர நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.



சட்ட‌ப்பேரவையில் கடந்த 8.6.11 அன்று இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ச கண்டித்திருந்தார். அவருடைய செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.



இந்த தீர்மானத்தின் மீது பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க), சௌந்தரராஜன் (சி.பி.எம்), குணசேகரன் (சி.பி.ஐ), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் பேசின‌ர்.



இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகை‌யி‌ல், கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது இலங்கை அரசு மனிதாபிமான, ஈவுஇரக்கமின்றி ராணுவ தாக்குதலை நடத்தியதால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்து போனார்கள். இதையொட்டி என்னுடைய தலைமையிலான அரசு இனப்படுகொலைகளை நடத்திய போர்க் குற்றவாளியாக இலங்கை அரசு அறிவிக்க ஐ.நா. மன்றத்தை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வும், சமஉரிமையும் கிடைக்கிற வரையில் அந்நாட்டின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த 8.6.11ல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.



தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலரான கோத்தபய ராஜபக்ச ஒரு தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் விமர்சித்துள்ளார்.தாங்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்துவது போல பேசியிருக்கிறார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவே நான் தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக அவர் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.



ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் இந்தோனேஷியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 3 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்பி இந்த குழுவினர் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அல்ல.



இலங்கையில் உள்ள சிங்களர்களும், தமிழர்களும், இஸ்லாமியர்களும் எந்தவித பாகுபாடுமின்றி நல்ல முறையில் வாழ்வதாகவும், மற்றவர்களை விட தங்கள் மக்களின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பதாகவும் அந்த இலங்கை அமைச்சர் பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல; முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும்.



உச்சக்கட்ட போர் நடைபெற்ற செப்டம்பர் 2008 மற்றும் மே 2009 கால கட்டங்களில் பலமுறை துப்பாக்கிச்சூடுகள் நடத்தி அப்பாவித் தமிழர்கள் கொன்று குவித்ததாக ஐ.நா. மன்றத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.குண்டுவீச்சு நடத்தக் கூடாது என்று விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் குண்டுவீசி தாக்கியுள்ளனர். மனிதாபிமான முறையில் அனுப்பப்பட்ட உதவிகளையும் அவர்களுக்கு சேர விடாமல் தடுத்துள்ளனர்.



தடை செய்யப்பட்ட மிக பயங்கரமான ஆயுதங்களை கொண்டும், குண்டுமழை வீசி பல ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்திருப்பதாகவும், நிவாரணப் பொருட்களை தடுத்ததாகவும் அந்த குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும் கோரமான வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டு அதில் கொடிய முறையில் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதும் வெளிவந்திருக்கிறதே?



இலங்கையின் கடற்பகுதியில் மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் கோத்த பய ராஜபக்ச அறிவுரை வழங்கியிருக்கிறார். கச்சத்தீவு பகுதியில் எஞ்சிய மீனவர்கள் புனித பயணம் மேற்கொள்ளலா‌ம், இந்திய மீனவர்கள் அந்தப் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம். கச்சத்தீவில் வலைகள் உயர்த்தலாம் என்றெல்லாம் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி செயல்படுவது இலங்கைதான்.



இந்த நிலையில் இலங்கையின் அயலுறவுச் செயலாளர் இதற்கு முற்றிலும் மாறாக நடந்து கொண்டு தமக்கு அறிவுரை வழங்குவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமாகும்.



வட தமிழ் பகுதிகளில் மறுவாழ்வுக்கான முக்கிய பணிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மறுவாழ்வு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அவர் அளித்துள்ள டிவி பேட்டி மூலம் இலங்கை போர்க் குற்றம் செய்திருக்கிறது என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.



இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தை சந்திக்க தயார் என்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். மாறாக இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை மறைக்கும் முயற்சியில்தான் இத்தகைய செயலில் ஈடுபடுகிறார்கள்.



முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அனைத்துக் கட்சி கூட்டம், பிரதமருக்கு தந்தி, மனித சங்கிலி, எம்.பி.க்கள் ராஜினாமா என்றெல்லாம் பல்வேறு கண்துடைப்பு நாடகங்களை நடத்தியபோது அது பற்றி வாய் திறக்காத கோத்தபய ராஜபக்ச என்னுடைய தீர்மானத்தை தாக்கி பேசுவது என்பது இந்த தீர்மானம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அனைவரும் அறியலாம்.



சர்வதேச நாடுகள் எல்லாம் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான். அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எனவே இந்திய அரசும், இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.



இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களுக்கு சென்று சிங்களர்களுக்கு இணையாக வாழும் வரையிலும் மற்ற நாடுகளோடு இணைந்து மத்திய அரசு அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற இந்த அரசின் தீர்மானம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனவே இதன் மீது இந்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்தான் கோத்தபய ராஜபக்ச இது போன்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.



இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வும், சிங்களர்களுக்கு இணையான சம வாழ்வும் கிடைக்கும் வரை என் தலைமையிலான அரசு ஓயாது. இலங்கை தமிழர்களுக்கான நியாய உரிமையை வென்றெடுக்கும் வரை எங்களின் ராஜதந்திர நடவடிக்கை தொடரும். தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது என்று கருத்து தெரிவித்த கோத்தபய ராஜபக்சவுக்கு மத்திய அரசு இந்திய தூதர்கள் மூலம் தம்முடைய கண்டனத்தை தெரிவிக்க வேண்டு‌ம் எ‌ன்று ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா