8/10/2011 11:43:04 AM
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் இணைந்து தயாரிக்கும் படம், 'வேலூர் மாவட்டம்'. நந்தா, பூர்ணா, சந்தானம் நடிக்கின்றனர். 'மாசிலாமணி'யை அடுத்து ஆர்.என்.ஆர்.மனோகர் இதை இயக்குகிறார். அவர் கூறியதாவது: போலீஸ் உயர் அதிகாரியாக பதவி ஏற்கும் நந்தா, தனது நேர்மையான நடவடிக்கைகளால், அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். பிரபலமான அரசியல்வாதி ஒருவர், தனது பினாமியாக ஒருவரை வைத்துக்கொண்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார். அவரது முகமூடியைக் கிழிக்கும் போலீஸ் அதிகாரியின் வீரச்செயல்களை சொல்லும் கதை இது. வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாகியுள்ளன.
No comments:
Post a Comment