8/11/2011 11:44:43 AM
மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தப் போகிறாராம் மணிரத்னம். நாயகி உள்பட முக்கிய பாத்திரங்களுக்கு புதுமுகங்களையே ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது. கார்த்திக்கும் கவுரவ வேடத்தில் தோன்றுவார் என்கிறார்கள். இந்தப் படத்துக்காக லொக்கேஷன் கூட பார்த்தாகிவிட்டதாம். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை தமிழில் மட்டுமே எடுக்கிறார் மணிரத்னம். 2002 ம் ஆண்டுக்குப் பிறகு நேரடியாக தமிழில் மட்டுமே அவர் இயக்கும் படம் இதுதான்.
No comments:
Post a Comment