இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிப்பது தான் தனது கனவு என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. அவரைத் தங்கள் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரோ மணிரத்னம் படத்தில் நடிக்க ஏங்குகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
முதலில் மாதவனுடன் அறிமுகமாகி பின்னர் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தற்போது அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகின்றது. படத்தை தேர்வு செய்வதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இயக்குனர் யார் என்று பார்த்து தான் படத்தை தேர்வு செய்யவிருக்கிறேன்.
தமிழில் எனக்கு நம்பிக்கை அளித்த படம் தெய்வத்திருமகள். தெலுங்கில் பாபு, தமிழில் மணிரத்னம் படங்களில் நடிப்பது எனது கனவு என்றார்.
கனவு நனவாக வாழ்த்துக்கள்...!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. அவரைத் தங்கள் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரோ மணிரத்னம் படத்தில் நடிக்க ஏங்குகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
முதலில் மாதவனுடன் அறிமுகமாகி பின்னர் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தற்போது அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகின்றது. படத்தை தேர்வு செய்வதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இயக்குனர் யார் என்று பார்த்து தான் படத்தை தேர்வு செய்யவிருக்கிறேன்.
தமிழில் எனக்கு நம்பிக்கை அளித்த படம் தெய்வத்திருமகள். தெலுங்கில் பாபு, தமிழில் மணிரத்னம் படங்களில் நடிப்பது எனது கனவு என்றார்.
கனவு நனவாக வாழ்த்துக்கள்...!
No comments:
Post a Comment