வருடாவருடம் நடைபெறும் துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், சிறுவர்களுக்கான பல போட்டிகளுடன், தாயக விளையாட்டுக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான பல வேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன.
மேற்கு லண்டனில் அமைந்துள்ள றொஹாம்ரன் வேல் (Roehampton Vale) றிச்சர்ட்சன் ஈவான்ஸ் மெமோறியல் பிளேயிங் ஃபீல்ட்டில் (Richardson Evans Memorial Playing Fields, SW15 3PQ) எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு இந்த விளையாட்டு விழா நடைபெற இருக்கின்றது.
தாயக சுவை குன்றாத உணவுகளுடன் அனுமதி இலவசமாக நடத்தப்படும் இந்த விளையாட்டு விழாவில் சிறியோர் முதல் மூதாளர்கள்வரை பெருந் திரளமான மக்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாவீரர்கள் நினைவாக வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட இருப்பதால், இந்த விளையாட்டு விழாவிலும், பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என, தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக லண்டன் வானொலிக்கு செவ்வி வழங்கியிருந்த அவர், தமிழ் மக்களிற்காக உயிரீகம் செய்த மாவீரர்களை நினைவேந்தி நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
16வது ஆண்டாக நடைபெறும் தமிழர் விளையாட்டு விழா பற்றிய மேலதிக தகவல்களை கீழுள்ள தொலைபேசி இலக்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
078 78 38 31 84 அல்லது 078 78 37 55 98
No comments:
Post a Comment