ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கோத்தபாய ராஜபக்ச'வின் கொடும்பாவியையும் எரித்தனர். எனினும் பொலிஸார் ஓடிவந்து அந்த கொடும்பாவியை பிடுங்கி தீயை அணைத்தனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
உலகளவில் மக்களின் உயிரை மதிக்காமல் இனபடுகொலை செய்யும் எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை பொருளதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பது நடைமுறையில் உள்ள ஒன்று. இதன் அடிப்படையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்தினார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தின்மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேவேளை படுகொலைக்கு காரணமான இலங்கை எம்.பி.க்கள் இந்தியாவிற்கு வந்தபோது மத்திய அரசு அவர்களுக்கு வெண்சாமரம் வீசியது. இச்செயலானது மத்திய காங்கிரஸ் அரசு தமிழின விரோத போக்கை கடைபிடிப்பதை காட்டுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருத்தை தவறாக விமர்சனம் செய்த இலங்கை அரசையும், ராஜபக்சவின் தம்பியான கோத்தபாய'வைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆணவத்துடன் ஹெட்லைன்ஸ் ருடே'க்கு பேட்டியளித்துள்ள கோத்தபாய'வுக்கும், இலங்கை ஆட்சியாளர்களுக்கும் மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு காலத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


No comments:
Post a Comment