
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முள்ளிவாய்க்காலில் காவு கொடுக்கத் தயாராக இருந்த பல்லாயிரம் பேரில் இருந்து மீண்டு, ஸ்ரீலங்கா படையிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11000 பேரில் புனர்வாழ்வு பெற்ற 152 பேர் நேற்று 2011.08.12 ஆம் திகதி புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். புனர்வாழ்வு பெற்று விடுதலையான 8240 முன்னாள் விடுதலைப் போராளிகளும் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள், இன்னும் 2700 பேர் ஏழு மத்திய நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வருகின்றார்கள், இவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்களென மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment