பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் இந்த ஹெட்லைன் ருடே தொலைக்காட்சியே ஆகும்.
இந்த நிலையில் இன்றிரவு இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி- இலங்கையில் நடந்த கொலைக்களங்கள் (I witnessed Genocide: Inside Lankas Killing Fields) என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார். மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment