Saturday 29 March 2014

ஆழ்!கடலில் மாயமான விமானம்! - விடை தெரியாத கேள்விகள்

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகும் மாயமான விமானம் பற்றிய மர்மங்கள் விலகவில்லை. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8-ந்தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், 2 மணி நேரத்தில் தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது, நடுவானில் மாயமானது. விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான விமானத்தை இந்தியா, அமெரிக்கா உள்பட 26 நாடுகள் தீவிரமாக தேடின.

இரண்டு வாரங்கள் கடந்தும் விடை தெரியாமல் இருந்த நிலையில், மார்ச் 24-ந் தேதி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 2500 கி.மீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி விழுந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் ஏற்கனவே இது குறித்து மலேசிய பிரதமரிடம் தெரிவித்திருந்ததை கடந்த மார்ச் 22-25 தேதியிட்ட இதழிலேயே குறிப்பிட்டிருந்தோம். அதன்பின் பிரிட்டிஷ் செயற்கைகோள் அனுப்பிய தகவல் மூலம் இதனை உறுதி செய்து அறிவித்திருக்கிறார் மலேசிய பிரதமர்.

"விமானம் எம்.எச்-370 தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கி விட்டது என்பதை ஆழ்ந்த சோகத்துடன் உறுதி செய்கிறேன். எனவே பயணிகளை மீட்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்த தகவலை பயணிகளின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளோம்'' என்று சோகத்துடன் மலேசிய பிரதமர் சொன்னார்.

விழுந்து நொறுங் கிய விமானம் கடலுக்குள் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கிடப்பதாகவும், அதிலிருந்து தொடர்ந்து சில சமிக்ஞைகள் வந்துகொண்டிருப்பதாகவும் இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம் அறிவித்துள் ளது. விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்று இன்னமும் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. விமானி மற்றும் விமானி அறையின் கடைசிகட்டத் தகவல்கள் விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவாகியிருக்கும் என்பதால் அதனை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  அதற்கான தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி அமெரிக்கா விடம்தான் உள்ளது.

"விமானத்தின் உடைந்த பாகங்கள் இருக் கும் இடம் தெரியும்பட்சத்தில் அதில் இருந்து வெளிவரும் சமிக்ஞைகள்  உதவியுடன் கருப்புப் பெட்டியை மீட்க முடியும். கருப்புப் பெட்டியின் பேட்டரி தற்போது செயல்பட்டு வருகிறது' என்று அமெரிக்காவின் 7-வது கப்பல்படை அதிகாரி கிறிஸ்புட்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கமோ விமானம் விபத்துக்குள் ளானது என்பதை ஏற்க மறுக்கிறது. விமானத்தில் பயணித்தவர்களில் சீனப்பயணிகள் 154 பேர். "விபத்து ஏற்பட்டுள்ளதென்றால் அதற்கான அனைத்து ஆதாரங்களையும் எங்களிடம் அளிக்க வேண்டும்' என  மலேசியாவிடம் சீன துணை வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜீ ஹாங்ஷெங் கேட்டுள்ளார். பயணிகள் இறந்துவிட்டார்கள் என்பதை அவர்களின் உறவினர்கள் தாங்கமுடியாமல் கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள். "மலேசிய அரசு தவறான தகவல்களைத் தருகிறது' என்று சொல்லி பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தை ஏராள மானவர்கள் திரண்டு சென்று முற்றுகையிட்டு, "பொய் சொல்லாதே' என்றபடி பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி எறிந்தனர்.

விமானம் மாயமானதிலிருந்து மலேசிய அரசு தெரிவித்து வந்த தகவல்கள்தான், தற்போதைய செய்தியை நம்பமுடியாமல் சீனப்பயணிகளின் உறவினர்கள் கதறுவதற்குக் காரணம். விமானத் தின் பைலட் கேப்டன்... ஜஹாரி அகமதுஷா மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமின் உற வினர் என்றும், சிறையில் உள்ள அன்வருக்கு ஆதர வாக விமானத்தை பைலட்டே கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தை முதலில் கிளப்பியது மலேசிய அரசுதான். தீவிரவாதிகளுடன் பைலட் டீமும் சேர்ந்து கடத்தியிருக்கலாம் என்றும் மங்கோலியா, சோமா லியா போன்ற நாடுகளில் ஒன்றில் விமானத்தை ரகசியமாகத் தரையிறக்கியிருக்கலாம் என்றும் மலேசிய அரசு சொன்னதுடன், 1000 மீட்டர் ஓடுபாதையில் விமானத்தை இறக்கவும், ஏற்றவும் பைலட் பயிற்சி பெற்றிருப்பதுடன், அது தொடர்பான விவரங்களை தன்னுடைய கம்ப்யூட்டரிலிருந்து அழித்திருக்கிறார் என் றும் மலேசிய அரசு கூறியிருந்தது. அத்தனை பயணி களையும் கொன்று தாங்களும் தற்கொலை செய்து கொள்ளும் வகையிலான தீவிரவாதிகளின் திட்டமாக வும் இருக்கலாம் என்று இப்போது சொல்லப்பட்டது.

விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித் தால் மர்மத்துக்கு விடை கிடைக்குமா என்று இது குறித்த வல்லுநர்களிடம் கேட்டால், ""தற்போது கிடைத்து வரும் சிக்னல் என்பது விமானத்தின் சிக்னல்தானா என்பதை உறுதி செய்தால்தான் கருப்புப் பெட்டி பற்றி முடிவு செய்ய முடியும்'' என்கிறார்கள். ""சாட்டிலைட் இமேஜ் துல்லியமான இடத்தை சுட்டிக் காட்டவில்லை. தோராயமான ஒரு பகுதியைத்தான் காட்டுகிறது. அதில் எங்கு விமானத்தின் பகுதி விழுந்து கிடக்கிறது என்பதற்கே கடலில் பல மைல்கள் ஆய்வு நடத்தவேண்டும். அதன்பின் மிக ஆழத்திற்குச் சென்று விமானத்தின் பகுதிகளைத் தேடவேண்டும். அதில் கருப்புப்பெட்டி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். தற்போதுள்ள தட்பவெப்பமும் காற்றும் அதற்கு சாதக மாக அமையவேண்டும்'' என்று கூறும் ஆஸ்திரேலியா வின் ஏர்மார்ஷல் மார்க் பின்ஸ்கின், ""எங்களால் வைக் கோல் போரில் ஊசியைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. வைக்கோல்போர் எங்கே இருக்கிறது என்பதைத்தான் இப்போது தேடிக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார். அதாவது, "விமானத்தின் பாகங்கள் எங்கே என்கிற இடத்தைத்தான் தேடுகிறோம் என்றும், கருப்புப்பெட்டி பற்றி இப்போது எதுவும் சொல்வதற் கில்லை' என்கிறார் வெளிப்படையாக.

மலேசிய அரசு அறிவிப்பை வெளியிட, சீனப் பயணிகளின் உறவினர்கள் கதறியழுது போராட, விமானத் துறையினரும் விஞ்ஞானிகளும் உறுதியான முடிவுக்கு வர முடியாத நிலையில் இருக்க, மாயமான விமானம் குறித்த கேள்விகளுக்கான விடைகள் அந்த விமானம் போலவே ஆழ்கடலில் அமிழ்ந்து கிடக்கின்றன.

-லெனின்

nakkheeran

இனம் - ஒரு பார்வை!

ஈழத்தில் நடந்த கொடுமைகளை சொல்ல வார்த்தைகளே இல்லாத சூழ்நிலையில் போரின் போது கைக்கைட்டி வேடிக்கைப் பார்த்த உலக சமுதாயத்தின் முகத்தில் அறைவது போல இனம் என்ற படைப்பு வெளியாகி இருக்கிறது.

இனம் படத்தைப் பொறுத்தவரை, அதை ஒரு கதையாக வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. அது ஒரு வலி! அடையாளத்தை இழந்து, குடும்பத்தை இழந்து, உடமைகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்து இதயத்தில் ரணங்களையும், வலிகளையும் மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளின் சொல்ல முடியாத சோகத்தை பதிவு செய்த 'இனம்' படத்தை வெளியிட முன் வந்த லிங்குசாமிக்கு ஒரு பெரிய சல்யூட்!

அங்கே நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான அடிப்படை விஷயங்களோ, காரணங்களோ படத்தில் விவாதிக்கப்படவில்லை என்றாலும், அங்கே நடந்ததும்... நடந்துகொண்டிருப்பதும் இனப்படுகொலை என்ற உண்மையை பதிவு செய்த இனம்  படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான சந்தோஷ் சிவனுக்கு நம் நன்றியை பதிவு செய்வதே தர்மமாகும்.

படம் எப்படி இருக்கிறது என்று நான்கு வரிகளில் விமர்சனம் எழுத இது வழக்கமான சினிமா இல்லை. ஈழத்தமிழரின் அவலங்கள் கடலாய் இருக்க, அதில் ஒரு துளியை பதிவு செய்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அந்த ஒரு துளியின் ஒரு துளிதான் இந்த வார்த்தைகள்...


கடல்தாண்டி அகதியாய் வந்த ஒரு பெண் தன் கடந்தகாலக் கொடுமைகளையும் தனக்கு நேர்ந்த அவலங்களையும் பகிர்ந்துகொள்வது போலத்தான் படத்தின் கதை அமைகிறது. நான்கு புறமும் குண்டுமழை... எப்போது சாகப்போகிறோம் என்று தெரியாத நிலை... என்றாவது ஒரு நாள் அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பு... என  கனவுகளை சுமந்து கொண்டு வாழும் ரஜினி என்ற பெண். அவளுடன் குடும்பத்தைத் தொலைத்தவர்கள் பலரும் ஒரு குடும்பமாய் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிஞ்சுப் பூக்களை அரவணைத்து பாதுகாப்பவர் சுனாமி அக்கா எனும் சரிதா. அந்த பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஸ்டான்லியாக கருணாஸ்.

கடற்கரையில் கையில் சின்னக் கத்தியுடன் ஒரு சிறுவன் மயங்கிய நிலையில் கிடக்க, அவனை சுனாமி அக்காவின் காப்பகத்திற்கு கொண்டுவருகிறார்கள் பிள்ளைகள். கையில் கத்தி வைத்திருந்தாலும் அவன் பேச்சு வெகுளியாய் இருக்கிறது. ஆட்டிஸத்தோடு இருக்கும் விஷேசக் குழந்தை எனத் தெரியவருகிறது.  அவன் பெயர் நந்தன். அங்கே நடக்கிற அத்தனை விஷயங்களையும் நந்தனின் பார்வையிலேயே பதிவு செய்வதுபோல அமைகிறது காட்சிகள். ரஜினிக்கு அவன் மீது தனி அக்கரை ஏற்படுகிறது. மற்ற பிள்ளைகள் அவனை கிண்டலும் கேலியும் செய்யும்போது கூட ரஜினி அவர்களை கண்டித்து அவன் மேல் கரிசனத்துடன்நடந்துகொள்கிறாள்.


அதே முகாமில் இருக்கும் ஒரு வாலிபனோடு காதலில் விழுகிறாள் ரஜினி. அந்த நிலை நீடிப்பதற்குள்ளாகவே தான் காதலித்தவன் விடுதலை போராட்டத்தில் ஈடுபட காப்பகத்தில் இருந்து வெளியேறி விடுகிறான். பெண் மீது வைத்திருக்கும் காதலைவிட, மண் மீது வைத்த காதல் தான் மேன்மையானது என்று நினைத்ததே காரணமாக இருந்திருக்கலாம்.

ஆகாயத்தில் விமானங்கள் பறக்கும்போதும் குண்டு சத்தங்கள் கேட்கும்போதும் வெட்டிய குழிகளில் பதுங்கிக் கொள்ளும் தன் பிள்ளைகளை பார்த்து இதயம் கொதிக்கும் சுனாமி அக்கா, கோபத்தின் உச்சத்தில் ‘என் பிள்ளைகளுக்கு நான் கல்யாணம் செய்துவைக்கப் போகிறேன்’ என்ற முடிவெடுக்கிறார்! பூமியில் அமைதி பூக்கும்... காதலன் என்றாவது ஒரு நாள் திரும்புவான்... என்ற ஏக்கங்கள் கண்களில் மிதக்க, தன்னை காப்பாற்றிக்கொள்ள நந்தனை தன் கணவனாக தேர்ந்தெடுக்கிறாள் ரஜினி.


தாய்மை உள்ளத்தோடு நந்தனை நேசித்தாலும் இதயமெல்லாம் காதலனே நிறைந்திருக்கிறான். காட்சிகள் நகர... இலங்கை இராணுவத்தினர் அவளை பரிசோதனை என்ற பெயரில் உடலை விரல்களால் தடவிப்பார்க்க, அவளை விட்டுவிடுங்கள் என கருணாஸ் கையில் கிடைத்த ஒரு கம்பைக் கொண்டு மிரட்ட, வேறு வழியில்லாமல் தமிழர்கள் துப்பாக்கியால் பேசுகிறார்கள்... தப்பி செல்ல நினைத்த ரஜினி ஒரு சிங்கள வெறிநாயிடம் சிக்கிக்கொள்ள, அந்த நாய் அந்தப் பெண்ணை சின்னாபின்னமாக்குகிறது. அந்த கற்பழிப்புக் காட்சியை தன் செல்போனில் பதிவு செய்வது இன்னொரு சிங்கள நாய்.

ஒரு மருத்துவ முகாமில் தான் லீடர் என அழைக்கும் தம்பியை பார்த்துவிட்டு தப்பிசெல்ல ரஜினியோடு படகின் அருகில் வரும் நந்தனுக்கு தன் தம்பியின் நினைவு வர, ரஜினி எவ்வளவோ அழைத்து திரும்பிப்பார்க்காத நந்தன் மறைந்த இடத்தில் ஒரு குண்டுவிழுவதப் பார்க்கிறாள் ரஜினி...


மனிதர்களையும் தாண்டி குண்டு வெடிக்கும் நேரத்தில் அலரித் துடிக்கும் பறவைகளையும் விலங்குகளையும் தன் கேமராக் கண்கள் கொண்டு பதிவு செய்த சந்தோஷ் சிவன் அந்தக் காட்சிகளில் மனதை உருக்குகிறார்.

இங்கிருந்து போகவேண்டாம் என்று வெள்ளைக்காரர்களை தமிழ் மக்கள் கெஞ்சும் காட்சியில் மீன்களுக்கு நடுவில் கேமராவை நகர்த்துவது பிரம்மிப்பு. அந்தக் காட்சியின் முடிவில் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பதிவு செய்வது சந்தோஷ் சிவனின் துணிச்சல்.


‘எல்லா நாட்டிலும் தான் வெடி செய்கிறார்கள், ஆனால் எல்லாம் இங்கே தானே வெடிக்கிறது’ என்பது வசனமல்ல நிஜம் என்ற உண்மையை நிரூபிக்கிறது இனம். ‘பாட்டன் முப்பாட்டன் காலத்துல தொடங்கிய சண்டை இப்போ குழந்தைங்க சத்தமே கேக்குறதில்லை...’ என சரிதா சடலங்களுக்கு நடுவில் புலம்புகிறாரே... அது ஒட்டுமொத்த தமிழர்களின் குரல்.

சிங்கள ராணுவம் இரக்கமில்லா மிருகங்களாக மாறும்போது, கையில் கிடைத்த கம்பைக் கொண்டு, என் குடும்பத்தை காப்பாற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என புலியாய் உருமுகிறாரே ஸ்டான்லியாக நடித்திருக்கும் கருணாஸ்... இதைத் தீவிரவாதம் என்று சொல்கிறவன் முட்டாள் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்.


தமிழுணார்வு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்ய வேண்டியதை சந்தோஷ் சிவன்  செய்திருக்கிறார். ஈழ விடுதலைக்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும் இந்தப் படைப்பில் எங்கே சொல்லப்படுகிறது என்ற விமர்சனங்கள் கண்டிப்பாக எழும்... இப்படி நடந்தது என்ற உலகத்துக்கு ஒரு பதிவை செய்ய ஒருவர் வேண்டுமல்லவா... அந்த விதத்தில் இனம் படத்தை ஆதரிப்பது நியாயம் என்றே தோன்றுகிறது!

ஈழ விடுதலைப் போராட்டத்தோடு பயணித்தவர் அல்ல என்பதை வைத்து அந்தப் படைப்பை கொச்சைப்படுத்துவது நியாயமில்லை. இத்தனை கொடுமைகள் நடந்தும் நீயும் நானும் என்ன செய்தோம், இனி என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியை எழுப்புகிற துணிச்சல் சந்தோஷ் சிவனுக்கு வந்திருப்பதில் என்ன தவறு!

என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தை நான் சந்திப்பேன் என நம்பிக்கையுடன் ஈழத்தின் திசை நோக்கிப்பார்க்கும் இறுதிக்காட்சி நமக்குள்ளும் அதே நம்பிக்கையை விதைக்கிறது!

இனம் - வலியின் ஒரு துளி...!

------------------------------------------------------------------------------------------

 இனம் - நீக்கப்பட்ட காட்சிகள்?

சந்தோஷ் சிவன் தயாரித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள இனம் திரைப்படம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் 28.03.14 அன்று ரிலீஸானது.

ஈழவிடுதலைப் போரின்போது இனப்படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் தங்களால முடிந்தவரை உலகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காக இனம் திரைப்படத்தை வெளியிட்ட லிங்குசாமி,  படத்தைப் பார்த்த தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க

* பள்ளிக்கூடக் காட்சி.

* புத்தமதத் துறவி தமிழர்களுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி.

* சிங்கள ராணுவத்தான் குழந்தை ஃபோட்டோ வைத்திருக்கும் காட்சி.

* தலைவர் கொல்லப்பட்டார் என்ற வசனம்.

* படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் இடம்பெறும் காட்சி.

ஆகிய ஐந்து காட்சிகளையும் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்.


nakkheeran


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ”இனம்” திரைப்படம்!

சில படைப்பாளிகள் கூடத் தனி ”இனம்” தான்..

UNHRC வாக்கெடுப்பிற்கு நீடித்த அமைதி தொடர இலங்கை தள்ள முயற்சிக்கின்றது

navi_pillay
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் " இலங்கை , இரு கட்சிகளும் கூறப்படும் மீறல்கள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் மீறல்கள் ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள " ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அழைப்பு விடுக்கின்றது என்று இலங்கைக்கு எதிராக ஒரு நாட்டின் குறிப்பிட்ட தீர்மானம் எடுப்பதில் மீண்டும் ஒரு இறையாண்மை மாநில பிரச்சினைகள் சர்வதேச விசாரணை என , இலங்கையில் உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தில் நடந்த கொலைகள் மீது எவ்வளவு கவனம் கொண்டு வருகிறது. இல்லை முன்னேற்றம் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தில் படுகொலைகளை பொறுப்பை சரி செய்யப்பட்டது .
தீர்மானம் , 41 நாடுகள் இணை அனுசரணை மற்றும் அமெரிக்க இயக்கப்படுகின்றன , இலங்கை மூன்று தசாப்த கால உள்நாட்டு போர் முடிவிற்கு வந்த பின்னர் சமரசம் அடைய தவறிவிட்டது என்று திருப்தியாகவும். ஆனால் அது இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானங்களை உருவாக்க முடியாது ; அதை விட புறப்படும் ஒரு கவலை குறிக்கிறது . இதுவரை, முக்கியத்துவம் ' ஊக்கம் ' இலங்கை ' வலியுறுத்தி ' வருகிறது .
சர்வதேச விசாரணை பொறிமுறையை புதிய உத்தரவை எனக்கூற முடியாது . தீர்மானம் எதிர்ப்பாளர்கள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் ( OHCHR ) பங்கு விரிவாக்குவதன் மூலம் ஒரு சர்வதேச விசாரணை , மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறப்பு நடைமுறைகள் சுமத்துவதற்கு எதிராக இருந்தன. தீர்மானம் பல பரிந்துரைகள் கூறுகளை உள்ளடக்கியது . அமெரிக்க நீடித்த அமைதி தொடர இலங்கை தள்ள முயலும் செயல் என வாக்கு பார்க்கிறது , மற்றும் வீட்டில் Justice and Accountability காத்திருக்க முடியாது என்று புள்ளி ஓட்ட வேண்டும் .
இந்தியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25 வது அமர்வு வெளிச்சத்திற்கு இருந்தது . அது நிபந்தனையின்றி விரைவில் போர் முடிவுக்கு வந்த பின்னர் , 2009 அமர்வில் இலங்கை ஆதரித்தார். இது மற்ற தீவிர சென்று 2012 மற்றும் 2013 ல் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. உண்மையில், 2013 ல் கூட தீர்மானம் கடுமையான மொழி செய்ய வேலை. 2013 அதே நிலையில் இப்போது உள்ளன: வடக்கு மாகாண சபை தேர்தலில் , செப்டம்பர் 2012 ல் நடைபெற்றது . சுற்று இந்தியாவின் வாக்கு கடைசி நேரத்தில் தாக்கம் என்று தமிழ்நாடு காரணி காங்கிரஸ் மற்றும் திமுக பிளவுபட்டது வழிகளில் நீராவி இழந்துள்ளனர் தெரிகிறது .
அதன் உயரத்தில் சமீபத்திய தீர்மானம் கற்பனைசெய்யப்பட்ட சர்வதேச விசாரணைகளுக்கு ஊடுருவும் இந்திய நீண்டகால எதிர்ப்பை சமாளிக்க வேண்டும் என்று எந்த விஷயத்தில், அது விவாதத்திற்குரியது. கடந்த ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக இருமுறை வாக்களிப்பதன் மூலம் , இந்தியா ஏற்கனவே பெரும்பாலான சிங்களம் சமூகம் பகைத்துக்கொள்ளும் இருந்தது. இந்தியா இந்த நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, வடக்கு இந்தியாவில் நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிகிறது . பல OHCHR விசாரணை மேற்கொள்கிறது என்றால் எதையும் இலங்கை தமிழர்களுக்கு மாற்ற என்று நான் நம்புகிறேன். ஒரு ஊடுருவும் விசாரணை இதுவரை உண்மையான இணக்கப்பாட்டை , எங்கும் மக்கள் கண்ணியம் மற்றும் சுய மரியாதை ஒரு வாழ்க்கை ஒப்பு கொள்ளவில்லை. இலங்கை வேறு இருக்க முடியாது .

புதிய அரசு இலங்கைக்கு எதிராக ஐ.நா. வில் தீர்மானம் செல்ல வேண்டும்: ஜெயலலிதா

angry-jayalalitha
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் நடவடிக்கைகளை இந்தியா போரின் போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் இலங்கை மீது நடவடிக்கை கோரி ஐ.நா. வில் தீர்மானம் நகர்த்த செய்ய எடுத்து கூறினார் . வெள்ளிக்கிழமை மதுரை நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் , அவர் இனப்படுகொலை பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உறுதி கூறினார். உத்தரவாதம் மையம் இலங்கை போர் குற்றங்கள் மீது USbacked தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பில் கலந்து கட்சிகள் மற்றும் ஆர்வலர்கள் சம்பவத்தை எதிர்கொள்ளும் ஒரு நாள் வருகிறது .
" உங்கள் அரசாங்கத்தின் மையத்தில் உருவாகும் போது, இந்திய தண்டனை யுத்தத்தின் போது இலங்கையில் கொலை செய்தவர்கள் பெற ஐ.நா. வில் தீர்மானம் நகர்த்த வேண்டும் , " ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் தமிழ்நாடு மீனவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடி தொடர முடியும் தமிழர்களின் உரிமைகளை நிறுவப்பட வேண்டும் என தெரிவித்தார் .
ஜெயலலிதா மையம் தமிழ்நாடு மீனவர்கள் stepmotherly சிகிச்சை அவுட் சந்தித்ததில் , இலங்கை தமிழர்கள் என்று குற்றஞ்சாட்டி காங்கிரஸ் எதிராக தனது கண்டனத்தை தொடர்ந்து .
அவர் ஹெலி துள்ளல் , அவரது பிரசார இடங்களுக்கு என அவர் கள யதார்த்தங்களை தெரியாது என்று மத்திய நிதியமைச்சர் ப சமீபத்திய கருத்து பதில், அவர் மாநில ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்று தனது 32 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கூறினார். " நான் 1984 முதல் மக்களவை போது மாதங்களில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஒவ்வொரு கிராமத்தில் நடந்து வருகின்றன," என்று அவர் கூறினார். " நான் சிதம்பரம் தன்னை பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர் ஒரு திறந்த ஜீப்பில் என்னை பின்பற்றி வருகிறது , "என்று அவர் கூறினார் அவள் ஒரு குறுகிய காலத்தில் பல இடங்களில் மறைக்க வேண்டும் என்று கூறி அவரது ஹெலிகாப்டர் டிராவல்ஸ் நியாயப்படுத்தினார்.

இலங்கை அரசோடு கைகோர்த்து செயல்படும் காங்கிரஸ் செயல் கண்டிக்கத்தக்கது: பொன். ராதாகிருஷ்ணன்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் புறக்கணித்ததன் இலங்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை விசாரிக்க வேண்டும் என உலக நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது. இது தமிழர்களின் மத்தியி்ல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான மனநிலையில் மத்திய காங்கிரஸ் அரசு இருப்பதை தமிழர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசோடு கைகோர்த்து செயல்படும் காங்கிரஸ் செயல் கண்டிக்கத்தக்கது என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அரசையும் அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்!- வைகோ

அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது.

2010 அக்டோபர் 25 ல் சனல்-4 ல் வெளியான காணொளியில், 8 தமிழ் இளைஞர்கள் அம்மணமாக கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோரக் காட்சி,

அதே ஆண்டின் டிசம்பர் 2 ல் வெளியான காணொளியில் தமிழ்ப் பெண் இசைப்பிரியா சிங்கள இராணுவ மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு, மிகக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட காட்சி,

2013 பெப்ரவரி 17 ல் வெளியான காணொளியில் மாவீர மகன் 12 வயதான பாலச்சந்திரன் மார்பில் 5 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், மண்ணில் சடலமாகக் கிடந்த காட்சி,

இந்த 2014 ஜனவரி இறுதி வாரத்தில் தெரிய வந்த காணொளியில் தமிழ் இளம்பெண்கள் சிங்கள இராணுவ வெறி நாய்களால் கோரமாகக் கற்பழிக்கப்பட்டு, அங்கங்களைச் சிதைத்துக் கொல்லப்பட்ட நிலையில், ஆடைகளற்ற நிலையில் கிடந்த அந்தச் சடலங்களை, சிங்களக் கூட்டத்துக்கு மத்தியில் மண்ணில் போட்டு, அந்த உடல்களின் மீது இதுவரை உலகில் எங்கும் நடைபெறாத விதத்தில் நெஞ்சை நடுங்கச் செய்வதும், சொல்லிலோ எழுத்திலோ கூற முடியாததுமான அக்கிரமத்தில் சிங்கள ஓநாய்கள் ஈடுபட்ட காட்சி,

கடந்த வாரத்தில் கிடைத்த காணொளியில் ஒரு குளக்கரையில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் அம்மணமாகத் துப்பாக்கி முனையில் உட்கார வைக்கப்பட்டு, பின்னர் ஒவ்வொருவராக கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் கொடுந்துன்பக் காட்சி

இவை அனைத்தும் அனைத்துலக மனித குலத்துக்கு இன்னமும் மனச்சாட்சி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பும் அறைகூவல் ஆகும்.

நானிலத்தில் தமிழ் இனத்துக்கு நாதியே இல்லையா? நீதியே கிடையாதா? என்ற தமிழ்க் குல மக்களின் ஓலக்குரல் உலகின் மனச்சாட்சியின் கதவுகளைப் பலமாகத் தட்டியதால், அதுவரை குருடாக இருந்த உலகோரின் கண்கள் மெதுவாக விழித்தன. செவிடாக இருந்த உலகத்தின் காதுகள் மெதுவாகத் திறந்தன.

அதன் விளைவாகவே, 2009 ல் சிங்கள அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய ஜெனீவாவின் மனித உரிமை கவுன்சிலில் 2011ல் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு, 2012ல் தமிழகத்தில் வெடித்த மாணவர் கிளர்ச்சியால் சிங்கள அரசுக்கான ஆதரவு நிலை மாறி, தமிழர்களுக்கான நியாயத்தின் குரல் மேலும் வலுப்பெற்று, 2013ல் அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போனது என்றாலும், எதிர்காலத்தில் நீதிக்கான நம்பிக்கையை விதைத்தது.

இந்த ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 25வது கூட்டத் தொடரில் அமெரிக்க அரசு, இங்கிலாந்து, மாண்டிநீரோ, மாசிடோனியா, மொரிசீயÞ ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அந்தத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தமிழர்களுக்கு முழு நீதிக்கான அழுத்தம் குறைக்கப்பட்டது.

எனினும் இத்தீர்மானம் நேற்றைய தினம் 2014 மார்ச் 27 ல் விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது, பாகிஸ்தான் அரசின் பிரதிநிதி, இந்த விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தியாவும், சீனா, கியூபா, ரஷ்யாவும் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்து வாக்கு அளித்தன. எனினும் நீதியின்பால் தாகமுள்ள பல நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக வாக்கு அளித்ததால், அக்கோரிக்கை மனித உரிமை கவுன்சிலில் நிராகரிக்கப்பட்டது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அரசு இன்னொரு அக்கிரமத்தைச் செய்தது. அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளின் வரைவுத் தீர்மானத்தில் 10வது பத்தியில் உள்ள ஏ, பி, சி, மூன்று உட்பிரிவுகள் அடங்கிய பத்தாவது பத்தியின் வாசகங்கள் முழுமையாக தீர்மானத்தில் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

10ஆவது பத்தி கூறுவது இதுதான்:

இலங்கையில் நீதிக்கான நம்பகமான விசாரணை உள்நாட்டு அளவில் நடைபெறாத சூழலில், மனித உரிமைகள் அழிக்கப்பட்டது குறித்துச் சுதந்திரமான அனைத்துலக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையர் தந்துள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளவும், சிங்கள அரசே நியமித்த நல்லிணக்க ஆணைய விசாரணை நடத்தியதாகச் சொல்லும் கால கட்டத்தில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மனித உரிமை கவுன்சிலின் 27 வது கூட்டத் தொடரில் வாய்மொழியாக மனித உரிமை ஆணையர் அறிக்கை தர வேண்டும். 25வது கூட்டத் தொடரில் இப்பொழுது நிறைவேற்றப்படும் தீர்மானம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விவாதித்து, எழுத்து மூலமாக ஒரு விரிவான அறிக்கையை 28 வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழர்களுக்கு நீதிக்கான வெளிச்சத்தை தர முற்பட்ட இந்த பத்தாவது பத்தியை முழுமையாக நீக்க வேண்டும் என்று நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைப்பதற்காக சிங்களக் கொலைகார அரசுக்குக் கைக்கூலியாக பாகிஸ்தான் அரசு கொண்டு வந்த அயோக்கியத்தனமான இந்தக் கோரிக்கை மீது, மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்து, சீனா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஓட்டுப்போட்டது. எனினும் உலகில் நீதி செத்து விடவில்லை என்பதால், ஓட்டெடுப்பில் பாகிஸ்தான் கோரிக்கையை எதிர்த்துப் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்துத் தோற்கடித்தன.

அதன்பின்னர் வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்க அரசின் தீர்மானத்தை ஆதரித்து 23 நாடுகள் ஓட்டுப்போட்டன. கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, பாகிÞதான், பெலாரஸ், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து வாக்கு அளித்தன.

வாக்கெடுப்பில் பங்கு ஏற்காமல், பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுகிற விலாங்கு மீன் ஏமாற்று வேலையைச் செய்த 12 நாடுகளின் பட்டியலில் இந்திய அரசும் சேர்ந்துகொண்டது. இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து இந்தியாவின் பிரதிநிதி திலீப் சின்கா தனது அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்:

அமெரிக்கத் தீர்மானம், இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்து உள்ளது. இலங்கை அரசு ஆக்கபூர்வமான புனரமைப்பு வேலையைச் செய்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 2009, 2012, 2013 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது’ என்கிறார் இந்த யோக்கிய சிகாமணி.

1970 ஆம் ஆண்டில், பாகிÞதானின் ஒரு பகுதியான கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திர வங்கதேசம் வேண்டும் என்று முஜிபுர் ரகுமான் தலைமையில் கிழக்கு வங்காள மக்கள் போராடியபோது, முக்தி வாகினியை ஆதரித்து இந்தியத் தளபதி மானக்ஷா தலைமையில், இந்திய இராணுவத்தை கிழக்கு பாகிÞதானுக்குள் அனுப்பி, பாகிஸ்தான் இராணுவத்தோடு போர் புரிந்து, தோற்கடித்து, பாகிஸ்தான் இராணுவத்தினரை கைதாக்கிச் சரணடையச் செய்து, சுதந்திர வங்கதேசத்தை அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அமைத்துத் தந்தபோது, கிழக்கு பாகிஸ்தானில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, அனைத்துலகத்தின் மனித உரிமைகள் பிரச்சினை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த வரலாறு சோனியா காந்தியின் கைப்பாவையான மன்மோகன் அரசுக்கு மறந்துவிட்டதா? அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு புத்தி பேதலித்துவிட்டதா?

1983 ஆகஸ்ட்16 ல், இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இலங்கையில் நடப்பது தமிழ் இனப்படுகொலை. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்வகுடிமக்கள் என்று அறிவித்ததை அறியாத முட்டாள்களின் அரசா இன்றைய காங்கிரஸ் அரசு.

2009ம் ஆண்டு மனிதகுல வரலாற்றின் பேரழிவுகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை மே 17, 18 தேதி வரை நடத்தப்பட்ட பிறகு, ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகள் ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கான தாக்கீதை எழுத்து மூலமாகத் தந்ததால், 2009 மே 26ம் தேதி, மனித உரிமை கவுன்சில் அவசரக் கூட்டம் கூடியது.

ஆனால், அனைத்துலகத்தின் நீதி பகிரங்கமாகத் தூக்கில் இடப்பட்டது போல, கவுன்சிலில் உறுப்பினர் அல்லாத சிங்கள அரசு தன்னைத்தானே பாராட்டித் தயாரித்த தீர்மானத்தை கியூபாவும், இந்தியாவும் வரிந்துகட்டிக் கொண்டு ஆதரவைத் திரட்டி, நிறைவேற்றியபோது, இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் தமிழ் இனக்கொலை செய்ததற்காக மகிந்த ராஜபக்சே அரசுக்குக் கிரீடம் சூட்டிய தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தன.

12 நாடுகள் இப்பாராட்டுத் தீர்மானத்தை எதிர்த்து வாக்குப்போட்டன. மொத்தம் உள்ள 47 நாடுகளில், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அப்பொழுது மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க நாடு உறுப்பினர் அல்ல.

தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க முடியாத துரோகத்தை அன்றும் செய்த இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து ஊர் ஊராகச் சென்று என் மனக்குமுறலை மேடைகளில் கொட்டினேன். “ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” என நான் தயாரித்த குறுந்தகட்டில் மேற்கூறிய செய்தியை ஆவணம் ஆக்கினேன்.

இந்திய அரசின் பிரதிநிதி 13 வது சட்டத் திருத்தம் பற்றி உளறி இருக்கிறார். 1987 ல் விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து, ஜெயவர்த்தனவோடு இணைந்து ராஜீவ் காந்தி போட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு-கிழக்கு இணைப்புப் பற்றிச் சொல்லப்பட்டது. ஒப்பந்த மையின் ஈரம் உலர்வதற்குள் ஜெயவர்த்தன இணைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றார். ராஜீவ் காந்தி அரசு வாய்மூடி பதுங்கியது. 13 வது சட்டத் திருத்தத்தை அப்போதே ஈழத் தமிழர்கள் ஏற்கவே இல்லை.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் கொழும்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, இந்திய அரசு அதனை எதிர்த்து முணு முணுக்கக்கூட இல்லை. அப்படியானால், இந்திய அரசு தன்நினைவு இழந்து கோமா நிலைக்குச் சென்றுவிட்டதா? என்பதே கேள்வி ஆகும்.

ராஜீவ்காந்தி பிரதமரானதில் இருந்து நேற்று வரை, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் மன்னிக்கவே முடியாத துரோகம் செய்வதற்குக் காரணம் என்ன?

ஒரே ஒரு காரணம்தான். கடந்த பத்து ஆண்டுகளாக நான் கூறிவரும் காரணம்தான். ஈழத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளி என்பதே அக்காரணம் ஆகும்.

நீர்த்துப்போன தீர்மானம் என்று நான் குறை கூறியபோதிலும், உலகில் நீதி மரித்துப் போகவில்லை என்பதால், சிறிதளவாவது நீதிக்கான நகர்வாக அமெரிக்க வரைவுத் தீர்மானம், ஜெனீவா வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.

உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களும், தமிழ்க்குல மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இனி மேற்கொள்ள வேண்டிய சூளுரை ஒன்றுதான். இனக்கொலைக் குற்றவாளியான ராஜபக்ச அரசையும், கூட்டுக் குற்றவாளியான சோனியா காந்தி இயக்கிய இந்திய காங்கிரஸ் அரசையும், அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.

ஈழத் தமிழர் தாயகத்தில், சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டு, இராணுவமும், போலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஐ.நா.சபையின் மேற்பார்வையில் ஒரு இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

2011 ஜூன் 1 ம் தேதி பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டிட அரங்கில் நான் முதன்முதலாகப் பிரகடனம் செய்ததுபோல், அகிலத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பில் அவர்கள் வாழும் நாடுகளிலேயே பங்கு ஏற்கும் நிலையை ஐ.நா.மன்றம் ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் இனப்படுகொலை செய்த சிங்கள அரசையும், கூட்டுக் குற்றவாளியான இந்தியக் காங்கிரஸ்  அரசையும் அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

தமிழ் ஈழ விடுதலைக்காக செங்குருதி சிந்தி உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் மீது ஆணை! சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தின் மீது ஆணை! ஈழத் தமிழரைக் காக்க மரணத் தீயை தழுவிய முத்துக்குமார் முதல் முருகதாஸ் வரை உயிர்த் தியாகம் செய்த உத்தமர்கள் மீது ஆணை!

அறம் வெல்லும்! தமிழர்களுக்கான நீதி கிடைக்கும்!  நாளைய பொழுதில் தமிழ் ஈழம் மலரும்!

மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு!

காணாமல் போன எம்.எச்.370 விமானத்தின் பாகம் ஒன்று இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நியுசிலாந்தின் விமானம் ஒன்று இதனை கண்டுபிடித்த நிலையில், ஐந்து விமானங்கள் இதனை உறுதிப்படுத்தி இருப்பதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதனை மீட்டு சோதனைக்கு உட்படுத்துவதற்காக கப்பல் ஒன்று குறித்த பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இன்றைய தினம் அதனை மீட்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில் தேடுதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து மாற்றுப் பகுதி ஒன்றிலேயே நேற்றையதினம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே குறித்த பாகத்தை அடையாளப்படுத்த கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (காணொளி இணைப்பு)

சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ்  தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என அந்த விபரணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோர் தங்கள் விருப்பத்தை புரிந்து கொள்வதில்லை என்றும் தங்கள் பாரம்பரிய கலாசாரத்தை பேணுமாறும் திருமண விடயத்தில் தங்கள் விரும்பங்களை விட பெற்றோரின் விருப்பம் சில வேளையில் முக்கியத்துவம் பெற்று விடுவதாகவும் அவர்கள் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டிற்குள் தமிழ் மொழியை தமிழ் கலாசாரத்தை பேண வேண்டிய நிலை, வீட்டை விட்டு வெளியில் வந்தால் வேறு ஒரு மொழி, வேறு ஒரு கலாசாரம், இந்த இரட்டை வாழ்க்கை பற்றி விபரிக்கிறது இந்த விபரணப்படம்.இந்த ஆவணப்படம், தமிழர்களின் பெற்றோர்களுடைய கலாச்சார பராம்பரிய கட்டுப்பாடு மற்றும் கட்டுக்கோப்புகளைக் காணும் தமிழ் பிள்ளைகள், வாலிப வயதினர் சுவிட்சர்லாந்தின் மேற்கத்திய முற்றிலும் சுதந்திரமான கலாச்சாரத்தைக் கண்டு வியந்து அதன்மேல் ஆவல் கொண்டுள்ளனர் என்று 22 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவி லாவண்யா சின்னத்துரை அவர்கள் கூறியுள்ளார்,

சுவிட்சர்லாந்தில் உள்ள புதிய தலைமுறை இளைஞர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எதிர்க்கின்றனர், ஜாதி, மதம், மொழி தொடர்பில் திருமணத்தை வெறுக்கின்றனர். இதனால் இளைய சமுதாய புதிய தலைமுறையினர் பெற்றோர்களை திருப்திபடுத்த கட்டுப்பாடான வாழ்க்கையையும், தங்களை தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள சுவிட்சர்லாந்தின் சுதந்திரமான மேற்கத்திய ஜரோப்பிய கலாச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்பதை இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது.


அனைவரும் இறந்துவிட்டதாக எப்படி சொல்வீர்கள்? கதறும் பயணிகளின் உறவினர்கள்

விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாக எப்படி கூறுகிறீர்கள் என்று மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது, அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இதை நம்ப பயணிகளின் உறவினர்கள் சிலர் மறுக்கிறார்கள். செயற்கைக்கோள் படங்களில் மிதக்கும் பொருட்கள் தெரிந்தாலும் அவை மலேசிய விமானத்தின் பாகங்கள் தான் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டியும் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக கூறுவதை நம்ப தாங்கள் தயாராக இல்லை என்று பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் பயணித்த ஒருவரின் தந்தையான மலேசியாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் குருசாமி(60) கூறுகையில், என் மகன் இறந்துவிட்டான் என்று நான் நம்பும் வரை அவனுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய மாட்டேன். விமானத்தையும் கண்டுபிடிக்கவில்லை, கருப்புப் பெட்டியும் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் அனைத்து பயணிகளும் இறந்துவிட்டார்கள் என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவிருக்கும் புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐநாவில் நிறைவேற்றும்!

இந்தியாவில் அமைய இருக்கும் புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றும் என தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்தியாவின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் அவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் தமிழக மீனவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த்தின் சகோதரர் திடீரென அதிமுகவில் இணைந்தார்!

விஜயகாந்த்தின் சகோதரர் கே.பால்ராஜ் தனது மனைவியுடன் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னிலையில் விஜயகாந்த் தம்பி பால்ராஜ் அவருடைய மனைவி வெங்கடலட்சுமி ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களுடன் மேலும், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த அன்புச்செழியன், செல்வின்ராஜ், கபடி கழக தலைவர் சோலைராஜ், பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த சாந்தி கண்ணன், தே.மு.தி.க.வைச் சேர்ந்த நந்தகோபன், குமார் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 770 பேர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது ஏமாற்றமே: அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு தடவைகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தது. அவ்வாறானதொரு நிலையில், இம்முறை வாக்களிப்பை தவிர்த்தமை ஏமாற்றத்தை அளித்ததாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளரான மேரி ஹார்ப் தெரிவித்துள்ளார்.


அத்தோடு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு முந்திய விவாதத்தில் இந்தியாவின் பிரதிநிதி வெளியிட்ட கருத்துக்களும், நடந்து கொண்ட விதமும் கூட திருப்தியளிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது: சுஜாதா சிங்

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று, இந்திய வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததுக்  குறித்து பேசிய சுஜாதா சிங், தேசத்தின் நலனைக் கருத்தில்  கொண்டே இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால்தான் இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும்  மேலும் அவர் கூறியுள்ளார்.

இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தைக்கான  திகதிக் குறித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சுஜாதா சிங் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்கள் நலன் காக்கவே ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை: இந்தியா விளக்கம்!

இலங்கைத் தமிழ் மக்களின் நலம் காக்கவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சுஜாதா சிங்கினை மேற்கொள் காட்டி ‘தி ஹிந்து’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஜாதா சிங் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கைத் தமிழர் நலன் மற்றும் முன்னேற்றம் காப்பதில் இந்திய அரசு எப்போதும் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009இல் முடிவுக்கு வந்தது, ஒருங்கிணைந்த இலங்கையில் அனைவரின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் வாய்ப்பினை அளித்துள்ளது.

இலங்கைத் தமிழர் உட்பட அனைத்து சமூகத்தவர்களின் நலம் மற்றும் உரிமைகளை காப்பதே, இந்திய அரசின் நோக்கமாகும். இதுவரை இலங்கை தொடர்பாக இந்தியா எடுத்த நிலைப்பாடுகள் அனைத்தும், இதன் அடிப்படையில் ஆனதே.

ஜெனீவாவில் வியாழக்கிழமை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததும், இந்த நோக்கத்தை வலுப்படுத்துவதாக அமையும் என்று நம்புகிறோம்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் நியாயம் பெறவும் முன்னேற்றம் காணவும் பன்னாட்டு சமூகம், இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஜெனீவாவில் இந்திய அரசு எடுத்த நிலைப்பாடு என்பது இதற்கான சுயவிளக்கமாக அமைகிறது. இலங்கையில் இதுவரை நடந்துள்ள முன்னேற்றப் பணிகளை நாம் அங்கீகரிக்கிறோம்.

இத்துடன், அதிதீவிர பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை குறைப்பது, காணாமல் போனவர்கள் விவகாரம், இராணுவம் கையகப்படுத்திய நிலங்களை படிப்படியாக உரிமையாளர்களிடம் திருப்பி அளிப்பது, குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை குறைப்பது உட்பட தமிழர்களின் பல்வகை நலன்களில் இந்தியா மிகுந்த கவனம் கொண்டுள்ளது.

இதைச் செயல்படுத்த, ஐ.நா.வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதது உதவியாக இருக்கும் என எண்ணுகிறோம். இது இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றத்திற்கும், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும். இதனுடன், தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களுக்கும் பயன் தருவதாகவும் இருக்கும்” என்றுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்று நம்புகிறேன்: டேவிட் கமரூன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேசப் பொறிமுறையுடன் கூடிய விசாரணைக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பார் என்று நம்புவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களில் போது இலங்கை அரச படையினர் மற்றும் விடுதலைப் புலிகளினால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சரியான சுயாதீன விசாரணைகளை நடத்த தவறியமையே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிற்கு காரணமென்று டேவிட் கமருன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்தது!

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. காலை ஆரம்பித்துள்ள வாக்களிப்பு மாலை 04 மணிக்கு நிறைவுக்கு வரும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இரு மாகாண சபைகளுக்குமாக 155 உறுப்பினர்களை தேர்வு செய்ய நடைபெறும் இன்றை தேர்தலில் மொத்தமாக 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சுமார் 25000 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இந்தத் தேர்தல்களில் போட்டியிடும் பிரதான கட்சிகளாகும்.

இன்று மாலை 04.00 மணிக்கு தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்ததும், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இரவு 07 மணியளவில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் என்று தேர்தல்கள் செயகலம் அறிவித்துள்ளது. அத்தோடு, முதலாவது முடிவு இன்று நள்ளிரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (தனுசு)

தனுசு இராசி அன்பர்களே…

19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

“குரு அஷ்டமத்தில் வருகிறாரே அகப்பட்டோமடா சாமி” என்று அலற வேண்டாம்.

குரு உங்கள் ஜென்மாதிபதியும், சுகாதிபதியும் ஆவார்.

8-ம் வீட்டில் அமர்ந்தாலும் அவர், 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடத்தை பார்வை செய்வதால், இந்த இடங்கள் உங்களுக்கு நன்மைகளை வரங்களாக தர காத்திருக்கிறது.

விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், “சுண்டைக்காய் கால், பணம் சுமைக்கூலி முக்கால் பணம்” கதையாக இருக்கும்.

அதாவது நாலணா சுண்டைக்காய் வாங்கி விட்டு, அதை சுமந்து கொண்டு வந்தவனுக்கு 4 ரூபாய் கூலி என்பார்கள்.

இப்படிபட்ட வீண் செலவு, ஆடம்பர செலவு குறையும்.

குடும்பத்தில் திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

உங்கள் பேச்சு மதிப்பு பெற்று, அதனால் வருமானம் கிடைக்கவும் செய்யும்.

உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பால் நன்மைகள் தேடி வரும்.

பழைய இருப்பிடம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். வாகன வசதி பெறும் பாக்கியம் உண்டு.

சகோதர – சகோதரி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப கோர்ட்டில் பிரச்னை இருந்தால் தீரும்.

பல நாட்களாக இருந்த உறவினர் பகை அகலும். சிலருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மனைவிக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்படலாம்.

ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. சிலர், “அஷ்டம குரு படாதபாடு படுத்திவிடும்” என்பார்கள்.

கவலையோ, பயமோ அடைய தேவையில்லை.

8-ல் குரு இருந்தாலும், 2-ம் இடம், 4-ம் இடம் ஆகியவை அருமையான பார்வை பெற்று, பவர் ஆகிவிட்டது.

ஆகவே பிரச்னைகள் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும்.

சரி, 8-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் முன்னேச்சரிக்கைகாக சொல்லும் ஆலோசனை என்ன என கேட்டால், “பயணங்களில் கவனம் தேவை.

உடல்நலனில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்பதே ஆலோசனை.

விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி, வெற்றிபடியில் கால் வையுங்கள்.

ஸ்ரீதனலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.

இன்றைய ராசி பலன் | 29.03.2014

மேஷம்
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். நீண்ட தூரதேசப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். கல்வி முயற்சி கைகூடும். பெரிய மனிதர்களின் தொடர்பு நன்மை தரும்.

ரிஷபம்
இல்லத்திற்கு தேவையா பொருட்களை வாங்கி மகிழும் நாள். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். கட்டிடப் பணி தொடரும்.

மிதுனம்
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வேலைப்பளு கூடினாலும் மன மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்த உறவினர் ஒருவரை திடீரெனச் சந்திக்கலாம்.

கடகம்
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையும். சிக்கனமாக இருந்தாலும், திடீர் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும்.

சிம்மம்
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். புதிதாக கடன்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். உற்றார், உறவினர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக நிற்கலாம்.

கன்னி
தடைகள் அகலும் நாள். நீண்ட நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பிறர் நலனில்அதிகஅக்கறைகாட்டுவீர்கள். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும்.

துலாம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமையடைவீர்கள். அரசு வழிச் சலுகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். புதிய மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

விருச்சகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். பணத்தேவைகளை நண்பர்கள் பூர்த்தி செய்வர்.

தனுசு
அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் உற்சாகம் அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும்.

மகரம்
விருப்பங்கள் நிறைவேற விரயம் செய்யும் நாள். வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். தொழில் தொடர்பாக புதிய மனிதர்களைச் சந்திப்பீர்கள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

கும்பம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொலைபேசி வழியில் முக்கியச் செய்திகளைக் கேட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களை நம்பிச் செய்த வேலை நல்ல விதத்தில் முடிவடையும்.

மீனம்
அமைதியாகச் செயல்பட வேண் டிய நாள். சிறிய தவறு ஒன்றை நினைத்துப் பெரிய அளவில் கவலைப்படுவீர்¢கள். வழிப்பயணத்தில் சந்தித்தவர்களால் பிரச்சினைகள் உருவாகலாம்.

Friday 28 March 2014

நடிகர் கார்த்திக் காங்கிரசுடன் கூட்டணி: அழகிரி ஆதரவுடன் மதுரையில் போட்டி!

கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனராக  உள்ளார். இக்கட்சி நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

மதுரை தொகுதிக்கு காங்கிரஸ் ஏற்கனவே, வேட்பாளரை அறிவித்துவிட்டது. இந்நிலையில் கார்த்திக், கூட்டணி சேர்ந்துவிட்டதால், அவருக்கு மதுரை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சம்மதித்துள்ளது.

மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவை பெற்று வெற்றிக்கனி பறித்துவிடலாம் என்று கார்த்திக்கும், காங்கிரஸ் தலைவர்களூம் முடிவு செய்துள்ளனர்.  இதற்காக அழகிரியை சந்தித்து ஆதரவை கேட்க உள்ளனர். அழகிரியின் ஆதரவு தனக்கு நிச்சயம் கிடைத்துவிடும் என்று காங்கிரஸிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் கார்த்திக்.

இலங்கை தீர்மானம் பற்றிய சூடான ஒரு விவாதம்!! (காணொளி இணைப்பு)

இன்று 29.3.2014ல் காலையில் நடிகர் கார்த்திக், வீட்டிற்கு செல்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன். காங்கிரஸ் மேலிடம் நாடாளும் மக்கள் கட்சியை கூட்டணியாக அறிவித்த அதிகாரப் பூர்வமான கடிதத்தை கார்த்திக்கிடம் தருகிறார். பின்னர் வெற்றி வியூகம் - பிரச்சாரம் குறித்து ஆலோசனை செய்யவிருக்கிறார்கள்.

nakkheeran


லண்டனில் காணமல்போன "நிடா" சடலமாக மீட்ப்பு!

பிரித்தானியாவில் உள்ள நியூபோர்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதம் மர்மமான முறையில் காணம்ல்போன "நிடா" என்னும் ஆசியப் பெண்ணின் சடலத்தை பொலிசார் இன்று கண்டுபிடித்துள்ளார்கள். நிடா என்னும் 19 வயதுப் பெண், கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இரவு 8 மணிக்கு தனது வீட்டில் உள்ள கழிவு பையை வெளியே எறியச் சென்றார். ஆனால் அவர் அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை. வீட்டில் உள்ள சமையல் அறையில் உள்ள கழிவு பையை வீட்டிற்கு வெளியே உள்ள பின்னில் போடச் சென்றவர், நீண்ட நேரமாகத் திரும்பவில்லை என்று அவரது சகோதரி மற்றும் பெற்றோர்கள் தேடியுள்ளார்கள். இருப்பினும் வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் நிடாவின் பெற்றோர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.

பொலிசார் அவரது வீட்டைச் சுற்றி தேடுதலை நடத்தினர்கள். அன்று முதன் இன்றுவரை நிடாவின் பெற்றோர் அவர் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார் என்று நினைத்தார்கள். ஆனால் இன்றைய தினம் நிடாவின் வீட்டில் இருந்து சுமார் 6.5 மைல் தொலைவில் அவரது சடலம் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். கடந்த 3 மாதங்களாக வரது சடலம் அங்கே இருந்ததா? இல்லை தற்போது தான் அவர் இறந்துள்ளாரா என்ற விடையம் தெரியவில்லை. குறித்த இடத்தைச் சுற்றி பொலிசார் பாதுகாப்பு போட்டு தடையவியல் நிபுணர்களை அழைத்து, அவ்விடத்தை சோதித்து வருகிறார்கள். நிடா சடலமாக மீட்க்கப்பட்டது, அவ்வூர் மக்களை பெரும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.

உயர்தர படிப்பை முடித்துவிட்டு, பல்கலைக்கழக அனுமதிக்காக நிடா காத்திருந்துள்ளார். இருப்பினும் அவருக்கு பல்கலைக்க்கழகம் கிடைக்கவில்லை. இதனால் அவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தற்போது பெற்றோர் கூறியுள்ளார்கள். இருப்பினும் என்ன நடந்தது என்பது பெரும் சந்தேகமாக உள்ளதாக நியூ போர்ட் பொலிசார் கூறியுள்ளார்கள்.

இலங்கை தீர்மானம் பற்றிய சூடான ஒரு விவாதம்!! (காணொளி இணைப்பு)

இலங்கை தீர்மானம்: மத்திய அரசுக்கு சீமான் - தமிழருவி மணியன் கண்டனம்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காத மத்திய அரசுக்கு சீமான் மற்றும் தமிழருவி மணியன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு தமிழக அரசியல் கட்சிகளும், தமிழர் ஆலுவலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை தீர்மானம் பற்றிய சூடான ஒரு விவாதம்!! (காணொளி இணைப்பு)

மத்திய அரசின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில், ''ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பின் பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட கோரிய அமெரிக்க தீர்மானம் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

நமக்கு சம்பந்தமே இல்லாத அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்த நிலையில், இந்தியா புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஒரு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது.

போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணையை நடத்தினால் இந்தியா செய்த உதவிகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று பயந்தே மத்திய அரசு அதனை புறக்கணித்துள்ளது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருப்பதன் காரணமாக, இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச விசாரணைக்கு பிறகு தனி ஈழம் உருவாக வழிபிறக்கும்'' என்றார்.

காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், ''தமிழகர்களுக்கு துரோகம் செய்வதையே மத்திய அரசு கொள்கையாக கொண்டுள்ளது. இதற்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் காரணமாகவே ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது. எப்போதும் போல இப்போதும் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது'' என்றார்.

இலங்கை தீர்மானம்: மன்மோகன் சிங்குக்கு சாமி பாராட்டு!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சுப்பிரமணியசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு சுப்பிரமணிய சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என இந்தியக் குழுவினருக்கு உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கை வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

இலங்கை தீர்மானம் பற்றிய சூடான ஒரு விவாதம்!! (காணொளி இணைப்பு)

நீதி விசாரணை சரியாக நடக்க ராஜபக்சவை பதவி நீக்க வேண்டும்! - திருமாவளவன் வேண்டுகோள்!

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்க வேண்டுமென சர்வதேச சமூகம் எண்ணுமேயானால், ராஜபக்சவை அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறேன்.

தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசு, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இலங்கை தீர்மானம் பற்றிய சூடான ஒரு விவாதம்!! (காணொளி இணைப்பு)

ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையீடு செய்வதாக இந்தியா கருத்துத் தெரிவித்திருப்பது சர்வாதிகாரிகள் வழக்கமாகச் சொல்லும் காரணத்தை இந்திய அரசு வழிமொழிந்திருப்பது வேதனை அளிக்கிறது.

தற்போது, நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டுமெனில், இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து ராஜபக்ச நீக்கப்பட வேண்டும்.

அவரை அதிபராக வைத்துக்கொண்டு அங்கு நியாயமான விசாரணையை நடத்த முடியாது.

உண்மையிலேயே போர்க் குற்றங்களுக்கு நீதி வழங்க வேண்டுமென சர்வதேசச் சமூகம் எண்ணுமேயானால், ராஜபக்சவை அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கை வர அனுமதிக்கப்பட மாட்டாது - இலங்கை அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தும் குழுவினருக்கு இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு எதிரான விசாரணை குழுவை நியமிக்குமாக இருந்தால், அந்த குழு இலங்கைக்கு பிரவேசித்தே தமது விசாரணையை நடத்த வேண்டும்.

எனினும் அந்த குழுவுக்கு இலங்கை வீசாவை வழங்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கைக்கு வீசா வழங்குவது தொடர்பில் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும், இது இலங்கையின் இறைமை சம்பந்தப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கமே அமெரிக்கத் தீர்மானம் - தூதுவர் மிச்செல்

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்காவின் பிரேரணை ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதாக, அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்செல் ஜெ.செசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை நீண்டகாலமாக பல வன்முறைகளை சந்தித்துள்ளது.

யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் பாதிக்கப்பட்ட மக்கள், சுய கௌரவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த விடயங்களை மனதில் வைத்தே அமெரிக்காவின் பிரேரணை தயாரிக்கப்பட்டதே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் முழுமையாக அமுலாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விபூசிகாவை தடுத்து வைக்கவில்லையாம்! இலங்கை பொலிஸார் அறிவிப்பு!

கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் இல்லத்தில்  சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையினில் தர்மபுரத்தை சேர்ந்த விஜயகுமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தாயார் பூசாவுக்கும் மகள் சிறுவர் இல்லத்தில் அனுப்பப்பட்டும் உள்ளனர். கிளிநொச்சி விடயம் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களில் உண்மையில்லை.

ஒரே வீட்டிலேயே இருவரும் வசித்து வந்தனர். எனினும் அன்றைய சம்பவத்தை அடுத்து தாய் கைது செய்யப்பட்டதனால் தனிமையில் 13வயது சிறுமியை விட்டுச் செல்ல முடியாது . அதன்டிப்படையிலேயே சிறுமி விபூசிகாவையும் அழைத்துச் சென்று நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

எனினும் கைது நடந்த போது விபூசிகாவை பொறுப்பேற்குமாறு அயலில் உள்ள உறவினர்களிடம் கேட்கப்பட்டது. எனினும் அவர்கள் எவரும் முன்வரவில்லை இதனாலேயே அவரையும் சேர்த்து அழைத்துச் சென்றனர். இது கைது கிடையாது.

எனவே சிறுமியை பாதுகாப்போம் என்று கூறி அவர்களது உறவினர்கள் வந்தால் நீதிமன்ற உத்தரவின்படி அவர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம்!

ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம். சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம். என வைகோ அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில்  எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது.

2010 அக்டோபர் 25 இல் சேனல்-4 இல் வெளியான காணொளியில், 8 தமிழ் இளைஞர்கள் அம்மணமாக கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோரக் காட்சி,

அதே ஆண்டின் டிசம்பர் 2 இல் வெளியான காணொளியில் தமிழ்ப் பெண் இசைப்பிரியா சிங்கள இராணுவ மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு, மிகக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட காட்சி,

2013 பிப்ரவரி 17 இல் வெளியான காணொளியில் மாவீர மகன் 12 வயதான பாலச்சந்திரன் மார்பில் 5 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், மண்ணில் சடலமாகக் கிடந்த காட்சி,

இந்த 2014 ஜனவரி இறுதி வாரத்தில் தெரிய வந்த காணொளியில் தமிழ் இளம்பெண்கள் சிங்கள இராணுவ வெறி நாய்களால் கோரமாகக் கற்பழிக்கப்பட்டு, அங்கங்களைச் சிதைத்துக் கொல்லப்பட்ட நிலையில், ஆடைகளற்ற நிலையில் கிடந்த அந்தச் சடலங்களை, சிங்களக் கூட்டத்துக்கு மத்தியில் மண்ணில் போட்டு,  அந்த உடல்களின் மீது இதுவரை உலகில் எங்கும் நடைபெறாத விதத்தில் நெஞ்சை நடுங்கச் செய்வதும், சொல்லிலோ எழுத்திலோ கூற முடியாததுமான அக்கிரமத்தில் சிங்கள ஓநாய்கள் ஈடுபட்ட காட்சி,

கடந்த வாரத்தில் கிடைத்த காணொளியில் ஒரு குளக்கரையில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் அம்மணமாகத் துப்பாக்கி முனையில் உட்கார வைக்கப்பட்டு, பின்னர் ஒவ்வொருவராக கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் கொடுந்துன்பக் காட்சி இவை அனைத்தும் அனைத்துலக மனித குலத்துக்கு இன்னமும் மனச்சாட்சி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பும் அறைகூவல் ஆகும்.

நானிலத்தில் தமிழ் இனத்துக்கு நாதியே இல்லையா? நீதியே கிடையாதா? என்ற தமிழ்க் குல மக்களின் ஓலக்குரல் உலகின் மனச்சாட்சியின் கதவுகளைப் பலமாகத் தட்டியதால்,  அதுவரை குருடாக இருந்த உலகோரின் கண்கள் மெதுவாக விழித்தன. செவிடாக இருந்த உலகத்தின் காதுகள் மெதுவாகத் திறந்தன.

அதன் விளைவாகவே,  2009 இல் சிங்கள அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய ஜெனீவாவின் மனித உரிமை கவுன்சிலில் 2011 இல் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு, 2012 இல் தமிழகத்தில் வெடித்த மாணவர் கிளர்ச்சியால் சிங்கள அரசுக்கான ஆதரவு நிலை மாறி, தமிழர்களுக்கான நியாயத்தின் குரல் மேலும் வலுப்பெற்று, 2013 இல் அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போனது என்றாலும், எதிர்காலத்தில் நீதிக்கான நம்பிக்கையை விதைத்தது.

இந்த ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்க அரசு, இங்கிலாந்து, மாண்டிநீரோ, மாசிடோனியா,  மொரிசீயÞ ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அந்தத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தமிழர்களுக்கு முழு நீதிக்கான அழுத்தம் குறைக்கப்பட்டது.

எனினும் இத்தீர்மானம் நேற்றைய தினம் 2014 மார்ச் 27 இல் விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது, பாகிÞதான் அரசின் பிரதிநிதி, இந்த விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியாவும், சீனா, கியூபா, ரஷ்யாவும் பாகிÞதான் கோரிக்கையை ஆதரித்து வாக்கு அளித்தன. எனினும் நீதின்பால் தாகமுள்ள பல நாடுகள் பாகிÞதானுக்கு எதிராக வாக்கு அளித்ததால், அக்கோரிக்கை மனித உரிமை கவுன்சிலில் நிராகரிக்கப்பட்டது.

இதனை அடுத்து பாகிÞதான் அரசு இன்னொரு அக்கிரமத்தைச் செய்தது. அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளின் வரைவுத் தீர்மானத்தில் 10ஆவது பத்தியில் உள்ள ஏ, பி, சி, மூன்று உட்பிரிவுகள் அடங்கிய பத்தாவது பத்தியின் வாசகங்கள் முழுமையாக தீர்மானத்தில் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

10ஆவது பாரா கூறுவது இதுதான்: “இலங்கையில் நீதிக்கான நம்பகமான விசாரணை உள்நாட்டு அளவில் நடைபெறாத சூழலில், மனித உரிமைகள் அழிக்கப்பட்டது குறித்துச் சுதந்திரமான அனைத்துலக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையர் தந்துள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளவும், சிங்கள அரசே நியமித்த நல்லிணக்க ஆணைய விசாரணை நடத்தியதாகச் சொல்லும் கால கட்டத்தில்  நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மனித உரிமை கவுன்சிலின் 27 ஆவது கூட்டத் தொடரில் வாய்மொழியாக மனித உரிமை ஆணையர் அறிக்கை தர வேண்டும். 25ஆவது கூட்டத் தொடரில் இப்பொழுது நிறைவேற்றப்படும் தீர்மானம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விவாதித்து, எழுத்து மூலமாக ஒரு விரிவான அறிக்கையை 28 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.

”தமிழர்களுக்கு நீதிக்கான வெளிச்சத்தை தர முற்பட்ட இந்த பத்தாவது பத்தியை முழுமையாக நீக்க வேண்டும் என்று நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைப்பதற்காக சிங்களக் கொலைகார அரசுக்குக் கைக்கூலியாக பாகிÞதான் அரசு கொண்டு வந்த அயோக்கியத்தனமான இந்தக் கோரிக்கை மீது, மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, பாகிÞதான் கோரிக்கையை ஆதரித்து, சீனா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஓட்டுப்போட்டது.

எனினும் உலகில் நீதி செத்து விடவில்லை என்பதால், ஓட்டெடுப்பில் பாகிÞதான் கோரிக்கையை எதிர்த்துப் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்துத் தோற்கடித்தன. அதன்பின்னர் வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்க அரசின் தீர்மானத்தை ஆதரித்து 23 நாடுகள் ஓட்டுப்போட்டன. கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, பாகிÞதான், பெலாரÞ, ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து வாக்கு அளித்தன.

வாக்கெடுப்பில் பங்கு ஏற்காமல், பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுகிற விலாங்கு மீன்  ஏமாற்று வேலையைச் செய்த 12 நாடுகளின் பட்டியலில் இந்திய அரசும் சேர்ந்துகொண்டது. இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து இந்தியாவின் பிரதிநிதி திலீப் சின்கா தனது அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: “அமெரிக்கத் தீர்மானம், இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்து உள்ளது. இலங்கை அரசு ஆக்கபூர்வமான புனரமைப்பு வேலையைச் செய்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 2009, 2012, 2013 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது’ என்கிறார் இந்த யோக்கிய சிகாமணி.

1970 ஆம் ஆண்டில், பாகிÞதானின் ஒரு பகுதியான கிழக்கு பாகிÞதானில் சுதந்திர வங்கதேசம் வேண்டும் என்று முஜிபுர் ரகுமான் தலைமையில் கிழக்கு வங்காள மக்கள் போராடியபோது, முக்தி வாகினியை ஆதரித்து இந்தியத் தளபதி மானக்ஷா தலைமையில், இந்திய இராணுவத்தை கிழக்கு பாகிÞதானுக்குள் அனுப்பி, பாகிÞதான் இராணுவத்தோடு போர் புரிந்து, தோற்கடித்து, பாகிÞதான் இராணுவத்தினரை கைதாக்கிச் சரணடையச் செய்து, சுதந்திர வங்கதேசத்தை அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அமைத்துத் தந்தபோது, கிழக்கு பாகிÞதானில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, அனைத்துலகத்தின் மனித உரிமைகள் பிரச்சினை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த வரலாறு சோனியாகாந்தியின் கைப்பாவையான மன்மோகன் அரசுக்கு மறந்துவிட்டதா? அல்லது காங்கிரÞ கட்சியின் தலைமைக்கு புத்தி பேதலித்துவிட்டதா?

1983 ஆகÞட்16 இல், இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இலங்கையில் நடப்பது தமிழ் இனப்படுகொலை. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்வகுடிமக்கள் என்று அறிவித்ததை அறியாத முட்டாள்களின் அரசா இன்றைய காங்கிரÞ அரசு.

2009 ஆம் ஆண்டு மனிதகுல வரலாற்றின் பேரழிவுகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை மே 17, 18 தேதி வரை நடத்தப்பட்ட பிறகு, ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகள் ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கான தாக்கீதை எழுத்து மூலமாகத் தந்ததால், 2009 மே 26 ஆம் தேதி, மனித உரிமை கவுன்சில் அவசரக் கூட்டம் கூடியது.

ஆனால், அனைத்துலகத்தின் நீதி பகிரங்கமாகத் தூக்கில் இடப்பட்டது போல, கவுன்சிலில் உறுப்பினர் அல்லாத சிங்கள அரசு தன்னைத்தானே பாராட்டித் தயாரித்த தீர்மானத்தை கியூhபவும், இந்தியாவும் வரிந்துகட்டிக் கொண்டு ஆதரவைத் திரட்டி, நிறைவேற்றியபோது, இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் தமிழ் இனக்கொலை செய்ததற்காக மகிந்த ராஜபக்சே அரசுக்குக் கிரீடம் சூட்டிய தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தன.

12 நாடுகள் இப்பாராட்டுத் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டுப்போட்டன. மொத்தம் உள்ள 47 நாடுகளில், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கு ஏற்கவில்லை. அப்பொழுது மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க நாடு உறுப்பினர் அல்ல.

தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க முடியாத துரோகத்தை அன்றும் செய்த இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து ஊர் ஊராகச் சென்று என் மனக்குமுறலை மேடைகளில் கொட்டினேன். “ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” என நான் தயாரித்த குறுந்தட்டில் மேற்கூறிய செய்தியை ஆவணம் ஆக்கினேன்.

இந்திய அரசின் பிரதிநிதி 13 ஆவது சட்டத் திருத்தம் பற்றி உளறி இருக்கிறார். 1987 இல் விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து, ஜெயவர்த்தனாவோடு இணைந்து ராஜீவ்காந்தி போட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு-கிழக்கு இணைப்புப் பற்றிச் சொல்லப்பட்டது. ஒப்பந்த மையின் ஈரம் உலர்வதற்குள் ஜெயவர்த்தனா இணைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றார். ராஜீவ்காந்தி அரசு வாய்மூடி பதுங்கியது. 13 ஆவது சட்டத் திருத்தத்தை அப்போதே ஈழத் தமிழர்கள் ஏற்கவே இல்லை.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் கொழும்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, இந்திய அரசு அதனை எதிர்த்து முணு முணுக்கக்கூட இல்லை. அப்படியானால், இந்திய அரசு தன்நினைவு இழந்து கோமா நிலைக்குச் சென்றுவிட்டதா? என்பதே கேள்வி ஆகும்.

ராஜீவ்காந்தி பிரதமரானதில் இருந்து நேற்று வரை, காங்கிரÞ தலைமையிலான இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கும், தமிழ் இனத்துககும் மன்னிக்கவே முடியாத துரோகம் செய்வதற்குக் காரணம் என்ன?

ஒரே ஒரு காரணம்தான். கடந்த பத்து ஆண்டுகளாக நான் கூறிவரும் காரணம்தான். ஈழத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளி என்பதே அக்காரணம் ஆகும். நீர்த்துப்போன தீர்மானம் என்று நான் குறை கூறியபோதிலும், உலகில் நீதி மரித்துப் போகவில்லை என்பதால், சிறிதளவாவது நீதிக்கான நகர்வாக அமெரிக்க வரைவுத் தீர்மானம், ஜெனீவா வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.

உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களும், தமிழ்க்குல மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இனி மேற்கொள்ளவேண்டிய சூளுரை ஒன்றுதான். இனக்கொலைக் குற்றவாளியான ராஜபக்சே அரசையும், கூட்டுக் குற்றவாளியான சோனியாகாந்தி இயக்கிய இந்திய காங்கிரÞ அரசையும், அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.

ஈழத் தமிழர் தாயகத்தில், சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டு, இராணுவமும், போலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஐ.நா.சபையின் மேற்பார்வையில் ஒரு இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

2011 ஜூன் 1 ஆம் தேதி பிரÞஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டிட அரங்கில் நான் முதன்முதலாகப் பிரகடனம் செய்ததுபோல், அகிலத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பில் அவர்கள் வாழும் நாடுகளிலேயே பங்கு ஏற்கும் நிலையை ஐ.நா.மன்றம் ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் இனப்படுகொலை செய்த சிங்கள அரசையும், கூட்டுக் குற்றவாளியான இந்தியக் காங்கிரÞ அரசையும் அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

தமிழ் ஈழ விடுதலைக்காக செங்குருதி சிந்தி உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் மீது ஆணை! சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தின் மீது ஆணை! ஈழத் தமிழரைக் காக்க மரணத் தீயை தழுவிய முத்துக்குமார் முதல் முருகதாÞ வரை உயிர்த் தியாகம் செய்த உத்தமர்கள் மீது ஆணை!

அறம் வெல்லும்; தமிழர்களுக்கான நீதி கிடைக்கும்; நாளைய பொழுதில் தமிழ் ஈழம் மலரும்!

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
28.03.2014 மறுமலர்ச்சி தி.மு.க

பிரேரணையை இந்தியா புறக்கணித்தமை அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மகிந்த உத்தரவு!

அமெரிக்க பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்திய புறக்கணித்தமைக்கான எதிரொளியாக, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் அனவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் மாத்திரம் மற்றும் 100 தமிழக மீனவர்கள் வரையில் கைது செய்யபபட்டிருந்தனர்.

அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று அமெரிக்காவின் பிரேரணை விடயத்தில் இந்திய இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதன் நிமித்தம், விசேட உத்தரவின் பேரில் அவர்களை விடுவிக்கப்படுகின்றனர்.

இந்திய பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி இலங்கை அரசாங்கத்துடன் ஏற்கனவே பேசி வைத்து இவ்வாறு செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் தொண்டரின் கன்னத்தில் அறைந்த நக்மா

உத்திரப்பிரதேசம் மீரட் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் நக்மா, கூட்ட நெரிசலால் தொண்டரின் கன்னத்தில் அறைந்தார்.

நடிகை என்பதால் மீரட் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் மீரட் தொகுதி வேட்பாளர் நக்மாவிற்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிகிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் அவஸ்தைக்கு உள்ளாகிறார் நக்மா. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் நக்மாவின் கன்னத்தில் முத்தமிட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால், நக்மா அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், மீரட் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த நக்மாவிடம் தொண்டர் ஒருவர் சில்மிஷம்  செய்ததாகவும், யார் என்று தெரியாத நக்மா எதிரில் இருந்தவரின் கன்னத்தில் கடுப்பாகி அறை விட்டதும் ஊடகங்களில்  பதிவாகியுள்ளது.இதுப் போன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்றாலும், இனி இதுப் போன்று நடந்தால் வாக்கு சேகரிக்க வர மாட்டேன் என்று நக்மா கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதை அடுத்து கட்சித் தொண்டர்கள் நக்மவிற்குப் பாதுகாப்புக் கொடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள் என்றும் தகவல் தெரிய வருகிறது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் வெற்றியடைந்தது கவலையளிக்கிறது: ஐ.தே.க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் வெற்றியடைந்தமை கவலையளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை அழுத்தமான விடயங்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் அரசாங்கத்திற்கு ஆதரவா இருப்பதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக கடந்த காலங்களிலும் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்து வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் வெற்றி பெற்றதைக் கண்டு சோர்ந்து போகவில்லை: மஹிந்த

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைக் கண்டு சோர்ந்து போகவில்லை என்றும், அந்தத் தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் எந்த வகையிலும் உதவாது. அது, இலங்கையில் பிரச்சினைகளையே தோற்றுவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இனநல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வுக்கான பணிகள் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வாறான நிலையில் இலங்கை மீது சர்வதேச தலையீட்டுடான விசாரணை கோரும் தீர்மானம் பொருத்தமற்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவில்லை!: ப.சிதம்பரம்

தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா அமெரிக்காவின் தீர்மானம் நீர்த்துப் போன ஒன்று என்று கூறியுள்ளார். கருணாநிதி அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், பாஜக நடுநிலை வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளது என்று சிதம்பரம் எடுத்துக் கூறியுள்ளதோடு, இப்படித் தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால்தான் இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்திய கலந்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். 

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து இருக்க வேண்டுமென்பது தமது தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ள சிதம்பரம், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்காமல் விட்டது வெளியுறவுத் துறை அதிகாரிகள் எடுத்த முடிவு என்றும், இது மத்திய அமைச்சரவை எடுத்த முடிவல்ல என்றும் கூறியுள்ளார்.  அதோடு, மதசார்பின்மைக்கு மையமே காங்கிரஸ்தான் என்றும், இதில் திமுக இணைந்தால் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா