இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற எந்த விசாரணைகளிலும் நம்பிக்கை கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை மீது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முன்வைக்கவுள்ள தீர்மானம் எதிர்வரும் 27ஆம் திகதி கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான தீர்மானத்தில் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமைகளுக்கு விரோதமான போர்க்குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர். எனவே, அவர் தலைமையிலான எந்த விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இலங்கை மீது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முன்வைக்கவுள்ள தீர்மானம் எதிர்வரும் 27ஆம் திகதி கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான தீர்மானத்தில் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமைகளுக்கு விரோதமான போர்க்குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர். எனவே, அவர் தலைமையிலான எந்த விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
No comments:
Post a Comment