Saturday 22 March 2014

கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்? மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி

மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை.
இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19-ம் தேதி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் கிடைத்தபடி இருக்கின்றன!

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்குக்கு கடந்த மார்ச் 8-ம் தேதியன்று அதிகாலை நேரத்தில் கிளம்பிச்சென்றது போயிங் விமானம். சீனக் கடலுக்கு மேலே வியட்நாம் அருகே உள்ள ஒரு தீவுக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென மாயமானது.

இந்த விமானத்தில் 239 பேர் இருந்தனர். இவர்களில் 153 பேர் சீனர்கள். ஐந்து பேர் இந்தியர்கள். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.  விமானத்தைத் தேடும் பணியில் சீனா அதிக தீவிரம்காட்டுகிறது.

இந்த நிலையில், மாயமான விமானத்தின் தலைமை பைலட் ஜகாரி அகமது ஷா-வின் மர்மப் பின்னணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அவருடைய வயது 53. விமானப் பணியில் 30 வருட சர்வீஸ் கொண்டவர் அவர்.

ஐ.நா. கண்காணிப்பு அமைப்பினர், 'அணுகுண்டு வெடிப்பு மற்றும் பூகம்பங்களைக் கண்டறியும் வகையில் அதி நவீன தொழில்நுட்பக் கண்காணிப்புக் கருவிகளை உலகெங்கும் பல்வேறு இடங்களில் நிறுவியுள்ளோம். அதை வைத்துப் பார்க்கும்போது, மலேசிய விமானம் நடுவானில் எங்கும் வெடித்துச் சிதறவில்லை. தரையில் எங்கும் விழுந்து நொறுங்கவில்லை. கடலில் எங்கும் மோதியதாகவே தெரியவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சொன்னார்கள். அப்படியானால், விமானம் என்ன ஆகியிருக்கும் என்கிற சஸ்பென்ஸ் இன்னும் கூடியிருக்கிறது. ஒட்டுமொத்த விசாரணை ஏஜன்சிகளின் பார்வை விமான பைலட் அகமது ஷா மீது திரும்பியிருக்கிறது. 

இந்த நிலையில் இந்தியன் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு கவுன்சிலின் அட்வைஸராக இருக்கும் அ.ரெங்கநாதனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டோம். இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான பைலட்டாக இருந்தவர். மலேசியன் விமானம் மாயமாக மறைந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார். இனி, ரெங்கநாதன் பேசுகிறார்...

''என்னுடைய 40 வருட அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்... 1997-ம் வருடம் சிங்கப்பூர் நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டது. அதன் பைலட் திடீரென்று விபரீதமான காரியத்தைச் செய்தார். மிக உயரத்துக்கு விமானத்தை ஓட்டிச் சென்றவர், வழியில் இந்தோனேஷியா நாட்டில் ஓடும் நதி ஒன்றை நோக்கி விமானத்தைச் செலுத்தி, விபத்தை ஏற்படுத்தினார். அந்தக் கோரச் சம்பவத்தில் 104 பயணிகள் இறந்தனர்.

அதாவது, பைலட் தானும் தற்கொலை முடிவை எடுத்து, மற்ற பயணிகளையும் கொலைசெய்யக் காரணமாக இருந்தார். அதே பாணியில்தான் இந்த மலேசிய நாட்டு விமான மர்மச் சம்பவம் அரங்கேறி இருக்குமோ என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

மலேசிய விமானத்தை ஓட்டிய விமானியின் வீட்டில் 'சிமுலேட்டர் என்கிற கருவி சிக்கியுள்ளது. அதை பரிசோதித்தபோது, தென்னிந்திய ஏர்போர்ட், மாலத்தீவின் ஏர்போர்ட்... போன்ற சிறிய விமான தளங்களில் பெரிய விமானத்தை எப்படி லேண்ட் ஆவது என்பது பற்றிய புரோகிராம்களை வைத்திருந்தாராம். இந்தக் கோணத்தில் அவர் ஏன் ரகசிய பயிற்சி எடுத்தார் என்று விசாரணை அதிகாரிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். விமானிக்கும் அந்த ஏர்போர்ட்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

அன்றைய தினம் விமானத்தை 45 ஆயிரம் அடி உயரத்துக்குத் திடீரென கொண்டுசென்றிருக்கிறார். அப்போது, விமானத்தின் உள்ளே பயணிகள் இருக்கும் கேபினின் பிரஷர் தொடர்பான முக்கியக் கருவிகளின் செயல்பாட்டை திடீரென விமானி நிறுத்தியிருக்கக் கூடும். அப்படி செய்தால், விமானத்தின் உள்பக்கம் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம். ஒன்பது விநாடிகளில் செயற்கை ஒக்சிஜனை பயணிகள் சுவாசிக்கவில்லை என்றால், மூளைச்சாவு நிச்சயம். அதிகாலை நேரத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சுதாரிப்பதற்குள் மரணத்தைத் தழுவியிருக்கலாம். இந்த நேரத்தில், விமானி உஷாராக செயற்கை சுவாசக் கருவிகளை அணிந்திருப்பார் என்பதால், அவருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

அடுத்து, மலேசியாவை கிராஸ் செய்து வியட்நாம் பக்கம் பறந்திருக்க வேண்டும். அங்கிருந்து வடக்குப் பக்கம் போயிருந்தால், பாகிஸ்தான், சீன நாடுகளின் கண்கொத்தி ரேடார் கண்காணிப்பில் எப்படியும் சிக்கியிருக்கும். அப்படி போகாமல், தெற்குப் பக்கமாக விமானத்தை சாதுர்யமாக ஓட்டியிருக்கக் கூடும். அதாவது, இந்திய எல்லையில் வரும் அந்தமான், நிகோபார் தீவுகள் திசைநோக்கி விமானம் பறந்ததற்கான ரேடார் குறிப்புகள் கிடைத்துள்ளன. இரவு நேரத்தில் அந்தமான், நிகோபார் தீவுகளில் ரேடார் செயல்பாட்டை ஏனோ நிறுத்திவைக்கிறார்கள். அதனால், விமானம் சென்றது பற்றிய துல்லியத் தகவல்கள் அங்கே பதிவாக வாய்ப்பு இல்லை. அது சென்ற திசை பற்றித்தான் தெரியும். இதைவைத்து கணக்குப்போட்டால், இந்தியப் பெருங்கடல் மீது மலேசிய விமானம் பறந்திருக்க வேண்டும். அதன் பிறகு, வேறு எங்கும் சென்றதற்கான சுவடுகூட தெரியவில்லை.

இந்தியப் பெருங்கடல் மிகவும் ஆழமானது. 10,000 அடி ஆழத்தில் விமானம் சொருகியிருந்தால், அதை உடனடியாகக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். தற்போது அவுஸ்திரேலிய நாட்டு பிரதமரும் இதே கோணத்தில் கருத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்!

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மலேசிய விமானி ஏன் திசை மாறி விமானத்தை ஓட்டினார்? விமானத்தின் பிரஸர் கருவிகளை ஏன் ஓப் செய்தார்? அதற்கு என்ன நோக்கம்... என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளன. ஒருவேளை, ஹைஜாக்கர்கள் மூலம் விமானிக்கு மிரட்டல் ஏதாவது வந்ததா? அல்லது, அவர்கள் விமானியை மிரட்டி இதுபோன்ற விபரீதத்தை அரங்கேற்றினார்களா? இந்தக் கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றார் ரெங்கநாதன். 

இதற்கிடையில், தலைமை பைலட் ஜகாரி அகமது ஷா, மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு ஒரு வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாம். அந்தத் தீர்ப்பு வழக்கப்பட்ட நாளில்தான் விமானம் மாயமானது. தீர்ப்பு வழங்கப்பட்ட கோர்ட்டுக்கு அன்வர் இப்ராகிம் போயிருக்கிறார்.

அவருடன் விமானி அகமது ஷாவும் போயிருக்கிறார். தீர்ப்பை கேள்விப்பட்டு, புலம்பிக்கொண்டிருந்தாராம். பிறகு, விமான நிலையத்துக்குப் பணிக்குப் போனாராம். அதன் பிறகு, அவர் ஓட்டிய விமானம் மாயமானது. தனது தலைவருக்குத் தரப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்த விபரீதத்தை அமகது ஷாவே அரங்கேற்றியிருப்பாரா? என்றும் மலேசிய பிரமுகர்கள் சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள்.

பொறுப்பு கூற வேண்டிய விடயத்தில் இருந்து இலங்கை விலக முடியாது – ஐ.நா பேச்சாளர்

இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டிய விடயத்தில் இருந்து விலக முடியாது என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும். 

உறுப்பு நாடுகளின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் சபை செயற்படும். 

இதேபோன்ற நிலைப்பாட்டை தாருஷ்மானுடன் இணைந்து யாசீம் சூகா முன்வைத்த அறிக்கையிலும் பின்பற்றப்பட்டது.

அந்த அறிக்கையைத் தொடர்ந்து இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்த உள்ளக விசாரணையை முன்னெடுக்க பான் கீ மூன் வலியுறுத்தி இருந்தமையையும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். 

அதேநேரம் இலங்கை தொடர்பில் சட்டத்தரணி யாசிம் சூகா முன்வைத்துள்ள புதிய அறிக்கை தொடர்பில் தற்போதைக்கு ஐக்கிய நாடுகளின் கருத்துக்கள் எவையும் தம்மிடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீராலியோன் போன்று இலங்கைக்கு எதிராக உருவாக்க வேண்டும் - பிரித்தானியா

மேற்கு ஆப்பிரிக்க நாடான சீராலியோனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட விசேட சர்வதேச நீதிமன்றம் ஒன்றை போல, இலங்கைக்கு எதிராகவும் உருவாக்க வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்று பிரித்தானியாவின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 
எதிர்வரும் 28ம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மாநாட்டில் அமெரிக்காவின் பிரேரணை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று, இந்தியாவை, பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் கோரியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த பிரேரணையின் ஊடாக இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்னை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படுமாக இருந்தால், இதே நோக்கத்துடன் இலங்கைக்கு எதிராக விசேட நீதிமன்றம்ஒன்றை உருவாக்க அவர் ஐக்கிய நாடுகளில் கோரவிருப்பதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளார்.

திமுகவிலிருந்து குஷ்பூ ஓரம் கட்டப்படுகிறாரா? : கருணாநிதி விளக்கம்

தி.மு.க.வில் நடிகை குஷ்பு ஓரம் கட்டப்படுகிறாரா? என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நடிகை குஷ்பு

கேள்வி:–தி.மு.க. முன்னணிப்பேச்சாளர்களில் ஒருவரான குஷ்பு, தி.மு.க.வில் ஓரம் கட்டப்படுவதாகவும், தேர்தல் பிரசாரம் செய்ய தடை செய்திருப்பதாகவும் செய்தி வருகிறதே?

பதில்:–குஷ்பு புறக்கணிக்கப்படவும் இல்லை, தேர்தல் பிரசாரத்திற்குத்தடை விதிக்கப்படவும் இல்லை. தி.மு.க.வின் முன்னணிப்பேச்சாளர்கள் அனைவருமே என்னுடைய சுற்றுப்பயணம் வெளி வருவதற்காகக்காத்திருந்தார்கள்.

காரணம், எந்தத் தேதியில் நான் எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப்பொறுத்து, அவர்களுடைய நிகழ்ச்சிகளை வகுத்துக்கொள்வதற்காகத்தான் தாமதம். தற்போது என்னுடைய சுற்றுப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டு ஏடுகளில் வெளிவந்து விட்டதால், அவர்களின் சுற்றுப் பயணங்கள் தலைமைக்கழகத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அவை வெளிவந்துவிடும்.

அனல் மின்திட்டம்

கேள்வி:–‘‘எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டம் குறித்து சில தவறான தகவல்களை கருணாநிதி தெரிவித்ததற்கு நான் விரிவாகப் பதில் அளித்திருந்தேன்’’ என்று ஜெயலலிதா சங்கரன் கோவிலில் பேசியிருக்கிறாரே?

பதில்:–மார்ச் 13–ந் தேதியன்று முதல்–அமைச்சர் அளித்த விளக்கத்தில், ‘‘எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டம் என்னால் (ஜெயலலிதாவால்) 29–3–2012 அன்று அறிவிக்கப்பட்டது. எந்த ஒரு மின் திட்டத்தை அறிவித்தாலும், அதைத் துவக்குவதற்கு முன் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பல்வேறு அனுமதிகள் பெற வேண்டும். மத்திய அரசின் அனுமதி 24–1–2013 அன்று கிடைத்தது. இதன் பின்னர் ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது. இதற்கான பணி ஆணையினை மேற்படி நிறுவனத்திடம் 27–2–2014 அன்று நான் வழங்கினேன்’’ என்று பேசியிருந்தார். நான் கூறியதைத்தான் ஏற்றுக்கொண்டு ஜெயலலிதா அப்படியே பேசியிருக்கிறாரே தவிர, தவறான தகவல்கள் என்று எதையும் குறிப்பிட்டுக் கூறவில்லை.

இட ஒதுக்கீடு

கேள்வி:–சங்கரன்கோவிலில் பேசிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இன்று வரை பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படாமல், மத்திய அரசின் ஏ,பி,சி,டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். இதைத் தீர்க்க தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., இதுபற்றி மத்திய அரசை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறாரே?

பதில்:–இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமானது. சமூக நீதியின் ஓர் அடிப்படைக் கூறுதான் இட ஒதுக்கீடு. மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்தி, தமிழகச் சட்டப்பேரவையில் 12–5–1989 அன்று நான் முதல்–அமைச்சராக இருந்த போது, தி.மு.க. ஆட்சியில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கைகொடுக்காது

2006–ம் ஆண்டு தமிழக முதல்–அமைச்சர் பொறுப்பிலே 5–வது முறையாக நான் அமர்ந்தவுடன், அனைத்து மாநில முதல்–அமைச்சர்களுக்கும் இட ஒதுக்கீடு குறித்து விரிவாகக் கடிதம் எழுதினேன். அந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று 10–4–2008 அன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நண்பர் அர்ஜுன் சிங் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த அளவிற்கு தொடர்ந்து பாடுபட்டு வந்த, போராடி வந்த என்னைப் பார்த்து ஜெயலலிதா, மத்திய அரசை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று கேட்டிருப்பது விந்தையான ஒன்றல்லவா? ஜெயலலிதா எதை வேண்டுமானாலும் பேசட்டும், இட ஒதுக்கீடுப் பிரச்சினை எப்போதும் அவருக்குக் கைகொடுக்காது! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

திமுகவில் பிரசாரம் செய்ய குஷ்புவுக்கு தடை?

பாஜக ஆட்சிக்கு வந்தால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படும்! : வைகோ

பாஜக ஆட்சிக்கு வந்தால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு வழியாக பாஜக கூட்டணி உறுதியாவிட்ட நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தூக்குத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், காவிரி டெல்டா  மாவட்டங்களின் விளை  நிலங்களில் மீத்தேன் எடுப்பது தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அவரது தேர்தல் அறிக்கையில் மேலும் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அதாவது, மீனவர்களின் உரிமைக்காக மதிமுக போராடும் என்பது, வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என்பது, விளையாட்டு வீரர்களுக்கு இலவசப் பயிற்சி, ஒப்பந்த தொழிலாளர் ஒழிப்பு முறை போன்றவை வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும்  யுனைட்டெட் ஸ்டேட் ஆப் இந்தியா என்று இந்தியா அழைக்கப்படும் என்றும், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். மொத்தம் 46 தேர்தல் அறிக்கைகளில் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப்படும் என்கிற அறிக்கையும் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஜெனீவாவில் கட்டுக்கதைகளை கூறுவதற்காக அரசாங்கம் தமிழ் மக்களை பலிகடாவாக்குகிறது: சி.வி.விக்னேஸ்வரன்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கட்டுக் கதைகளைக் கூறுவதற்காக அரசாங்கம் தமிழ் மக்களை பலிகடாவாக்கி வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எமது பிரச்சினைகளை சர்வதேசத்திடம் கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இன்று மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக அரசாங்கம் வடக்கில் அச்சுறுத்தலான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு வேண்டும் என்று கோரி மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தியிலேயே மேற்கண்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண தமிழ் மக்கள் அன்றும் இன்றும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இனியும் அவ்வாறான இன்னல்கள் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே இவ் உண்ணாவிரதமும் பிரார்த்தனையும் இடம்பெறுகின்றது.

அண்மையில் யாழ் குடாநாட்டுக்கு ஒரு புதிய கட்டளைத் தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். முன்னர் கிளிநொச்சியில் பதவியேற்றிருந்த அவர் யாழ்.குடாநாட்டில் பதவி ஏற்றதும் பல நல்ல காரியங்களைச் செய்தார். 220 இற்கும் அதிகமாக இராணுவ பணி இடங்களைவ வாபஸ் பெற்றுக்கொண்டார். எமது விவசாயிகள் பாதிக்கப்படக்கூடது என்பதால் படையினரின் உற்பத்தியான மரக்கறிகளை திருநெல்வேலி சந்தைக்கு அனுப்பாது தடுத்தார். ஏ 9 வீதியில் குடாநாட்டுக்குள் இராணுவத்தால் நடத்தப்பட்ட இயக்கச்சி தவிர்ந்த கடைகளை அவர் மூடச்செய்தார். இராணுவத்தினர் மத்தியில் கட்டுப்பாடுகளையும் கட்டுக்கோப்புகளையும் கொண்டு வந்தார்.

இவ்வாறு இருக்கும் போதுதான் ஜெனீவா வந்தது. நேற்றைக்கு முந்தைய தினம் என்னிடம் வந்து விடுதலைப் புலிகள் மீண்டும் வடக்கில் மீள் இணைகின்றார்கள்; இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவது எனது கடமை என்றார். பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது என்றார். படம் போட்டு எவ்வாறு மீள் இணைப்பு நடைபெற்றிருக்கின்றது என்று தாங்கள் நம்புகின்றார்கள் எடுத்துக் காட்டினார்.

இதை ஏன் உங்களுக்கு சொல்கின்றேன் என்றால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. பழைய நாட்களை எமக்குணர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. ஆகவே அன்று நடந்தவற்றை என்றும் நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட இருக்கின்றன. அவ்வாறு நடந்துகொண்டிருப்பதற்கு எதிராகத்தான் இந்த உண்ணாவிரதமும் பிரார்த்தனையும் இடம்பெறுகின்றன. சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28 ஆம் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனீவாவிலும் கூறப்பட்டு வருகின்றன.

நான் இராணுவத் தளபதியிடம் கேட்டேன் 'ஜெயக்குமாரி வீட்டினுள் இருந்து யாரோ ஒருவர் வந்த வேளையில் இராணுவத்தினர் அங்கு இருக்கவில்லையா?' என்று. தூரத்தில் இருந்தார்கள் என்றார். இராணுவத்தினர் அங்கு இருக்கும் போதே சுட்டுவிட்டுத் தப்பிப் போய்விட்டார் என்றால் அதை ஏற்பது சற்றுக் கடினமாக இருக்கின்றது என்றேன். அவர் பதில் கூறவில்லை. எப்படியாவது வடக்கு மாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை வரவழைக்கவே இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்பதே தமிழ் மக்கள் அனைவரின் ஏகோபித்த முடிவு.

எமது வருங்காலம் மேலும் இடர்தருவதாக அமையாது. நல்லவிதமாக அமையவேண்டும் என்பதற்காகவே நாம் இந்த அடையாள உண்ணாவிரத்தினையும் பிரார்த்தனையையும் நடத்துகின்றோம்.

ஆனால், எமதருமை மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். வன்முறைகளுக்கு எத்தருணத்திலும் இடம்கொடுக்காதீர்கள். அகிம்சை முறையே எமது ஆயுதம். எமது பிரார்த்தனையே எமது கேடயம். இந்நிலையில் எம்மை உரசிப்பார்க்கும் அனைவரையும் தர்மத்தின் பக்கம் சாய வைப்போம்.

நாம் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்க எதிர்ப்பில் ஈடுபடவில்லை. ஆனால், போர்க்கால முடிவில் இடம்பெற்றவை தொடர்பில் ஆய்வு செய்ய இடமளிக்கப்படவில்லை. நடப்பவை தொடர்பாக அரசாங்கம் ஆர அமர சிந்தித்து பார்க்கவில்லை. அத்துடன் எதேச்சதிகாரமாக இங்கு நடப்பவற்றின் அடித்தளத்தை ஆராய்வதற்கு எமக்கும் அனுசரனைகள் வழங்கப்படவில்லை. ஆகவே, அடுத்த நாடுகளுக்கு சொல்லி அழ வேண்டிய நிலைமையை அரசாங்கமே எடுத்து தந்துள்ளது. இதற்காக எம்மைக் குற்றங் கூறுவதில் பயனில்லை.

மனித உரிமையாளர்கள் ருக்கி பெர்ணான்டோ, அருட்தந்தை பீரவீன் மகேசன் ஆகியோர் அநியாயமாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இன்று பூஸா முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி கூட ஒருநாள் வழக்கேதுமின்றி விடுதலைப்பட வேண்டியவரே. ஆனால், அதுவரையில் அவர் அனுபவிக்கப்போகும் நரக வேதனைகள், அவரின் மகள் அனுபவிக்கப்போகும் அவலங்கள் ஆகியனவற்றிற்கு யார் பதில் சொல்லப் போகின்றார்கள்? ஜெனீவாவில் கதை அளக்க இவர்கள்தான் கிடைத்தார்களா? அரசாங்கமும், இராணுவமும் 'புலி வந்துள்ளது, புலி வந்துள்ளது!' என்று ஜெனீவாவில் கூக்குரல் இட இவர்கள்தான் பலிக்கடாக்களாகக் கிடைத்தார்களா?

இராணுவத்தை வெளியேறச் சொன்னால் இதே புலிக்கதை கூறி எமக்கு இராணுவத்தின் பாதுகாப்புத் தேவை என்கின்றார்கள் அரசாங்கமும், இராணுவமும். வேண்டுமானால் சிவில் பொலிஸ் படையை விருத்தி செய்யுங்கள். கூடிய தமிழ்ப் பேசும் பொலிஸ்காரர்களை பொலிஸ் பதவிகளில் நிறுத்துங்கள். அதை விட்டு விட்டு அப்பாவிகளை கைது செய்து அவர்களுக்கு அவலங்களை ஏற்படுத்தாதீர்கள்.

இதைவிட எமது காணிகளை அரசாங்கம் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாரை வார்த்துக்கொடுப்பதை எதிர்த்தும் இவ் விரத்தை நோற்போம். எமது அவலங்கைளயும் இது வரை காலமாக எம்மை இடக்கி ஆண்டு வந்த நிலைமைகளையும் அனைத்து உள்ளுர் மக்களுக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் எடுத்தியம்ப இந்த அகிம்சை வழியை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று சி.வி.விக்னேஸ்வரன் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

நீங்கள் அனுப்பி வைத்திருப்பது கற்பனைகளுடன் கூடிய கடிதம்; சந்திரிக்காவிற்கு, மஹிந்த பதில்!

தன்னுடைய தனிப்பட்ட விடயங்கள் தற்போதைய அரசாங்கத்தினால் அதீத கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

அத்தோடு, ‘உங்களை அரசாங்கம் கண்காணிப்பதாக’ நீங்கள் (சந்திரிக்கா குமாரதுங்க) குற்றஞ்சாட்டி எழுதியுள்ள கடிதம் ஆதாரங்கள் இன்றி கற்பனைகளுடன் கூடியதாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, தான் அதீத கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அண்மையில் கடிதமொன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதம் ஊடகங்களிடமும் பகிரப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை பதிலளிக்கப்பட்டுள்ளது. அதிலேயே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் முழுமையான பகுதி,

மேன்மை தங்கிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
27 சுதந்திர சதுக்கம்,
கொழும்பு - 07

சட்டவிரோத கண்காணிப்பினூடாக முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கு இடையூறு விளைவித்தல்.

மேற்படி விடயம் தொடர்பாக 2014 மார்ச் 05 ஆம் திகதி அனுப்பப்பட்ட உங்களின் கடிதத்திற்கு பதில் அளிக்குமாறு மேன்மை தங்கிய சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நான் பணிக்கப்பட்டுள்ளேன்.

இக்கடிதத்தில் அரசாங்கத்திற்கெதிராகவும் இந்த நாட்டின் பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைக்கு எதிராகவும் நீங்கள் தெரிவித்துள்ள பல குற்றச்சாட்டுக்கள் அவற்றை நியாயப்படுத்துவதற்கான எத்தகைய சிறியதொரு சான்றையேனும் கொண்டிருக்கவில்லை என மேன்மைதங்கிய சனாதிபதி குறிப்பிடுகிறார்.

இக்குற்றச்சாட்டுக்களின் தன்மையைக் கருத்திற்கொண்டு தேவையான சான்றுப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லாத நிலையில், நீங்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்துகொள்வதற்கு விசாரணைகளைச் செய்ய வேண்டியிருந்தமையினாலேயே உங்களது கடிதத்திற்கு பதிலளிக்கத் தாமதமானது.

உங்களது அந்தரங்கத்தன்மை மீறப்பட்டிருப்பதாகவும், உங்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாகவும், உங்களது தனிப்பட்ட பாதுகாப்பு கரிசனைகள் குறித்தும் உங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், உங்களது நடமாடும் சுதந்திரம் தடுக்கப்பட்டது தொடர்பாகவும், நீங்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தபோதும் அத்தகைய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என மேன்மைதங்கிய சனாதிபதி குறிப்பிடுகிறார்.

உண்மையில் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை எத்தகைய அடிப்படைகளுமற்ற உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களாகும்.

உங்களது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்பாடல்களோ கொழும்பு, ஹொரகொல்லையிலுள்ள உங்களது இல்லங்களிலோ எவ்வித கண்காணிப்பும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய சனாதிபதி விரும்புகிறார்.

நீங்கள் தேசிய புலனாய்வு சேவை பிரிவின் அதிகாரிகள் என அடையாளம் கண்ட ஒரு பிரிவினர் உங்களது நண்பர்கள் பலரின் வீடுகளுக்குச் சென்று விசாரணை செய்திருப்பதாக நீங்கள் 2009 ஓக்டோபர் 10ம் திகதி, அப்போதைய பொலிஸ் மா அதிபராக இருந்த ஜயந்த விக்ரமரடன் அவர்களுக்கு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள எழுத்துமூல முறைப்பாடு மட்டுமே உங்களது குற்றச்சாட்டுக்களில் காலப் பகுதி குறிப்பிடப்பட்டிக்கும் குற்றச்சாட்டாகும்.

இவர்கள் உண்மையிலேயே அதிகாரிகளா? அல்லது புலனாய்வு துறையைச் சார்ந்தவர்களா என்பது தொடர்பில் நியாயமான சந்தேகம் எழுகின்றது. இம்முறைப்பாடு செய்து பல வருடங்கள் சென்றுள்ளதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். எனவே, பொலிஸ் திணைக்களத்திற்குப் பொறுப்பான ஒரு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய ஒரு முறைப்பாடு விசாரணை செய்யப்படாதது குறித்தோ அல்லது அதற்கு முறையான பதில் கிடைக்காமை குறித்தோ அப்போது சனாதிபதிக்கு ஏன் நீங்கள் அறிவிக்கவில்லை என்றும் சனாதிபதி ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு சேவை அதிகாரிகள் நீங்கள் செல்லும் ஹோட்டல்களில் முகாமையாளர்களிடம் விசாரணை செய்வதாகவும் நீங்கள் சந்திக்கும் நபர்கள் குறித்து அறிக்கையிடுவதாகவும், இதனால் ஹோட்டல்களில் தனிப்பட்ட சந்திப்போ அல்லது கூட்டமோ நடத்துவதற்கு முடியாதிருப்பதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அது தொடர்பான இடங்கள், ஆட்கள் நேரம், திகதி குறித்த எத்தகைய சான்றுகளும் முன் வைக்கப்படவில்லை என்பதையும் சனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள உங்களது நீண்டகால நண்பர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக செய்யப்பட்ட குற்றச்சாட்டும் அநுராதபுரத்தில் நீங்கள் வெளிநாட்டு நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றில் இருக்கும் போது நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ள நிகழ்வு குறித்தும் அதனையே சொல்ல வேண்டியுள்ளது.

இந்த எந்த குற்றச்சாட்டுத் தொடர்பிலும் இடம், ஆட்கள் காலப்பகுதி உட்பட எத்தகைய சாட்சியோ சான்றுகளோ இல்லாத காரணத்தினால் அவற்றின் உண்மைத் தன்மை தொடர்பில் விசாரணை ஒன்றை செய்ய முடியாது என்பதையும் சனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உங்களது நண்பர்களுக்கும் உதவியாளர்களுக்கும் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் அதன் மூலம் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டும் சனாதிபதி பதவிக்கு வந்து எட்டு வருட காலப்பகுதியில் ‘எமது கட்சியில்’ மற்றும் ‘எமது அரசாங்கத்தின்’ சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு உங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதிலிருந்து தவிர்ந்து இருக்குமாறு சனாதிபதியால் குறிப்பிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டானது, சனாதிபதி அவர்கள் அப்படி யாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள் என்று எவருடைய பெயரையும் நீங்கள் முன் வைத்திருந்தால் அதன் உண்மைத் தன்மையை கண்டறிய உதவியாய் இருக்கும் என்பது சனாதிபதியின் கருத்தாகும்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘ஒரு வெள்ளை வேன் கலாசார சூழல்’ குறித்து சனாதிபதி ஆச்சரியமடைந்துள்ளார். அத்தகையதொரு ‘கலாசாரம்’ உங்களது சனாதிபதி பதவி காலத்திற்கு முன்னரே தோன்றி உங்களது சனாதிபதி காலப்பகுதி முழுவதும் தொடர்ந்திருந்தது.

மிகுந்த வன்முறைகளுக்கும் இரத்த ஓட்டத்திற்கும் காரணமான பயங்கரவாதத்தை இந்த அரசாங்கம் தோற்கடித்தது என்ற வகையில் வெள்ளை வேன் கலாசாரம் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் கிடையாது.

இது இந்த நாட்டுக்கு எதிராக அணிவகுத்திருக்கும் வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு பொருந்துகின்ற வகையில் இந்த நாட்டின் பிரதிமையை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதில் குறியாய் உள்ளவர்களின் மனங்களிலேயே உள்ளது.

“உங்களது அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் எவரையும் கொலை, காணாமல் போதல், தாக்குதல்கள் மூலம் அழித்துவிடும் நடவடிக்கை நிலவுவது” உங்களது பாதுகாப்பு குறித்த கரிசணைக்கு வினைமையான காரணமாக இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பதை மேன்மை தங்கிய சனாதிபதி முழுமையாகவும் உறுதியாகவும் நிராகரிக்கின்றார்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கூற்றாகும். பெரும்பாலான முக்கியமான நபர்கள் இந்த அரசாங்கத்திற்கும் அதில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களுக்கும் எதிராக வெளிப்படையாக விமர்சனங்களை தெரிவித்தும் கடுமையாக எதிர்த்தும் வருவது நிருபனம். சமாதானமும் சுதந்திரமும் கிடைக்கப்பெற்றுள்ள சூழலில் இந்த அரசாங்கத்தின் கொள்கைளை எதிர்க்கும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் மிகத் தெளிவாக காணக்கூடியதாக இருப்பதை சனாதிபதி சுட்டிக் காட்டுகிறார்.

இது தொடர்பாக நீங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் நாட்டில் சமாதானத்தை பலப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கும் விரும்பாதவர்களினால் வெளிநாடுகளிலும் இங்கும் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஒத்தவையாகவே உள்ளன.

நீங்கள் விரும்பிய எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்குத் தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக சனாதிபதி தெரிவித்துள்ளார்.

உங்களது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் உங்களது அந்தரங்கத்தன்மை மீறப்பட்டிருப்பதாகவும் உங்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இக்கடிதத்தில் நீங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கும் சனாதிபதி, உங்களது தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் சந்தேகப்படுவதற்கு எவ்வித காரணமும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி என்ற வகையில் நாட்டின் எல்லா பிரஜைகளினதும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதோடு, அந்த வகையில் முன்னாள் சனாதிபதியின் அடிப்படை சுதந்திரத்தை உறுதி செய்வதிலிருந்து எந்த வகையிலும் விலகியிருக்கவில்லை.

முன்னர் குறிப்பிட்டதுபோன்று தேசிய புலனாய்வு சேவையின் நடவடிக்கைகள் குறித்து நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றதென நிராகரித்துள்ள சனாதிபதி, உங்களது காலப்பகுதியில் உங்களது சனாதிபதி பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் எத்தகைய பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதையும் நினைவுபடுத்துகிறார்.

இன்று அத்தகைய நிலைமைகள் இல்லாதிருப்பதையிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கண்காணிக்கப்படுவதாக நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் சனாதிபதி என்ற வகையில் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் நீங்கள் செல்லும் இடங்களில் தேவையான பாதுகாப்பை வழங்குவது பொலிசாரின் கடமையாகும் என்பதையும் சனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஒரு பாதுகாப்பு முறைமையாகும். நீங்களும் உங்களது உதவியாளர்கள் தொடர்பிலும் இந்த நடைமுறைகள் தொடர்பில் வித்தியாசமான மனோ நிலையில் தேவையற்ற விதத்தில் உணர்ச்சிவசப்பட்டு வேண்டுமென்றே கண்காணிக்கப்படுவதாக நீங்கள் குறிப்பிடுவது அறிவார்ந்த ஒரு விடயமல்ல என்றும் சனாதிபதி கருதுகிறார். அதேபோன்று யதார்த்தம் பற்றிய தெளிவின்றி நீங்கள் தேவையற்ற வகையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருப்பதாக தெரிகிறது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றங்களை தடுப்பது தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் நன்கு அறியும் என்பதோடு, அந்த சட்டங்களை மீறுகின்ற எந்த ஒருவருக்கெதிராகவும் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் சனாதிபதி உறுதிப்படுத்துகின்றார்.

கடைசியாக நீங்கள் முன் வைத்திருக்கும் கற்பனைகளுடன் கூடிய இக்கடிதத்தை நீங்கள் அனுப்பி இருப்பது ஜெனிவாவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் உள்ள சர்வதேச சக்திகள் இலங்கைக்கு எதிராக முழுமையாக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்ற சந்தர்ப்பத்திலாகும் என்றும் சனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படிக்கு
உண்மையுள்ள
லலித் வீரதுங்க
சனாதிபதியின் செயலாளர்

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (ரிஷபம்)

ரிஷப இராசி அன்பர்களே…

உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு 19.6.2014 வியாழன் அன்று, குரு பகவான் பிரவேசிக்க போகிறார். 3-ம் இடம் கீர்த்தி ஸ்தானம் என அழைக்கப்படும் இடமாகும்.

தற்காலம் 2-ம் இடத்தில் இருக்கும் குரு, கீர்த்தி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடத்திற்கு செல்வதால் நன்மையா, தீமையா? என்று பட்டிமன்றம் வைத்தால், 3-ஆம் இடம் நன்மை இல்லை என்று சிலர் கூறலாம், எழுதலாம்.

ஆனால் என்னை பொறுத்தவரையில் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்குரிய குரு பகவான், 3-ஆம் இடத்திற்கு செல்லுவது “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்” என்கிற ஜோதிட விதிப்படி யோகமே ஆகும்.

ஆகவே உங்கள் இராசிக்கு 8-க்கும், 11-க்கும் உரிய குரு பகவான், 3-ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் இராசிக்கு 7-ம் இடம், 9-ம் இடம், 11-ம் இடங்களை பொன்னான பார்வை செய்வதால், அவ்விடங்கள் மகா பலம் பெற்று வாரி வழங்க இருக்கிறது.

7-ம் இடம், திருமணத்தை குறிக்கும் இடம். 9-ம் இடம் பாக்கியம் கொடுக்கும் இடம். 11-ம் இடம் லாபத்தை கொடுக்கும் இடம்.

தடைபட்ட திருமணம் நடைபெறும். பழைய சொத்துக்கள் வந்தடையும். மேலதிகாரியின் உதவிகள் தேடி வரும்.

கடல் கடந்து செல்லும் பாக்கியம் வரும். அன்னியர்கள் நட்பும், அதனால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதுமட்டுமல்ல, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல திருப்பமும் வரும். பெற்றோர்களால் உங்களுக்கு சில நன்மைகள் வந்தடையும்.

திருமணம் ஆனவர்களுக்கு மனைவி மூலமாக ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதரர், சகோதரி இருப்பின் அவர்களால் சில நன்மைகளைப் பெறுவீர்கள்.

பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கினாலும் கூட, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வாக்குறுதியை யாருக்கும் வாரி கொடுக்க வேண்டாம்.

தேவையில்லா செலவு வரும். அதனை கட் செய்யுங்கள். பிறகென்ன அன்பவர்களே…

உங்களுக்கு யோகமோ யோகம்தான். ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தி மற்றும் குருபகவானையும் வணங்குங்கள். தொட்டது துலங்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.

இன்றைய ராசி பலன் | 22.03.2014

மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுப்பீர்கள். பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. வாங்கல்-கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.

ரிஷபம்
சேமிப்பு உயரும் நாள். உறவினர்கள் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். குழந்தைகளின் வழியில் பிரியம் கூடும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக அனுகூலம் உண்டு.

கடகம்
மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் முயற்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். சுபச்செய்தி வந்து சேரலாம்.

சிம்மம்
தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். பணியாளர்களின் தொல்லை அகலும்.

கன்னி
பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும் நாள். நீண்ட நாளைய ஆசையன்று நிறைவேறும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புது முயற்சிகளில் பாராட்டுப் பெறுவீர்கள் சகோதரர்களால் சகாயம் உண்டு.

துலாம்
தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வரன்கள் வாயிற் கதவைத் தடடும். கனிவாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை கூடும். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

விருச்சகம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். சொல்லைச் செயலாக்கிக்காட்ட முன்வருவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

தனுசு
விரயங்கள் கூடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். மாலை நேரம் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.

மகரம்
வளர்ச்சி கூடுகின்ற நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தந்தை வழி உறவினர்களால் தனலாபம் கிடைக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

கும்பம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தடைகள் விலகி தனலாபம் பெருகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் அகலும். திருமண முயற்சி கைகூடும்.

மீனம்
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். நேற்றைய பணி இன்றும் தொடரும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர்.

Friday 21 March 2014

ஐ.நாவில் காட்சிப்படுத்தப்பட்ட போர்க்குற்ற காணொளி!

கடந்த வியாழன் இலங்கைப் பெண்களின் பாலியல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்பச் சபை முக்கிய கூட்டம் ஒன்றை நடாத்தியது.

அதில் மனித உரிமை ஆர்வலர் ஜஸ்மின் சூக்கா பல நாட்டு பிரதிநிதிகள் பன் நாட்டு பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் சனல்-4 ஊடகவியலாளர் கலும் மக்ரேயின் இலங்கைப் பெண்களின் அவலம் குறித்தத காணொளி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இலங்கையில் நடந்த கொடுமைகளை பார்த்த பல நாட்டு பிரதிநிதிகள் கலங்கி நின்றதை அவதானிக்கக் கூடியதாய் இருந்ததுடன், கலும் மக்ரேயுடன் ஆர்வமாய் இலங்கை விடயம் குறித்து கலந்துரையாடினர்.

தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு வேண்டும்; மன்னார் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தல்!

காணாமற்போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரியும், தமிழ் மக்களுக்கு மனித மாண்போடு கூறிய நீதியான தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தியும் மன்னார் பொது விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான சுயாதீன விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட பாரிய வன்முறைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் சர்வதேசம் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சீன கப்பற்படையை இந்தியப் பெருங்கடலில் அனுமதிக்க இந்தியா மறுப்பு!

இந்தியப் பெருங்கடலில் காணாமல் போன மலேசிய விமானத்தை, சீன கடற்படைத் தேட அனுமதி மறுத்துள்ளது இந்தியா.

இந்தியப் பெருங்கடலில் காணாமல் போன மலேசிய விமானம் விழுந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது. இதை அடுத்து இந்தியப் பெருங்கடலில் காணமல் போன மலேசிய விமானத்தைத் தேட, சீன அரசு  இந்தியாவிடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு இந்திய ராணுவப்படை கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, மத்திய அரசு சீன கப்பற்படைக்கு இந்தியப் பெருங்கடலில் மலேசிய விமானத்தைத் தேட அனுமதி மறுத்துள்ளது.

காணாமல் போன மலேசிய விமானம் குறித்து பலரும் பல்வேறுக் கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்க, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் விமானத்தைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்தியர்கள் கூகிளில் அதிகமாக தேடும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்?

இந்தியர்கள் கூகிளில் அதிகமாக தேடும் தலைவர்கள் பட்டியலில் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரந்திர மோடி முதலிடத்தில் உள்ளதாக கூகிள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூகிள் நிறுவனம், கூகிளில் தேடப்படும் அரசியல் தலைவர்கள் ப பெயர்ப் பட்டியலை ஆய்வறிக்கை செய்துள்ளது. அதன் படி கூகிளில் அதிகம் தேடப்படும் பட்டியலில் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதா உள்ளார். மூன்றாவது இடத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளார் என்றும், அடுத்தடுத்து உள்ள 10 இடங்களில் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் கூகிள் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வவுனியாவில் நள்ளிரவு வேளையில் இராணுவம் தேடுதலில் ஈடுபடுகிறது: சிவசக்தி ஆனந்தன்

வவுனியாவிலுள்ள கிராமங்களில் நள்ளிரவு வேளையில் சிவிலுடை தரித்த இராணுவத்தினர் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் பிரதான கிராமங்களான பூந்தோட்டம், அண்ணாநகர், மகாரம்பைக்குளம், கருப்பணிச்சங்குளம் மற்றும் காத்தார்சின்னக்குளம் கிராமங்களில் புதன் நள்ளிரவில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட இராணுவத்தினர் நேற்று வியாழன் நண்பகல் வரை அதனைத் தொடர்ந்தனர். இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுக்காலை தமது கடமைகளுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரால் ஆங்காங்கே அடையாள அட்டை பரிசோதனை மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

வவுனியாவில் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராமத்தவர்களை ஒரு பொது மைதானத்திற்கு விசாரணைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிய வருவதாக சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

என் கைது எதிர்க் கருத்துக்களை கொண்டவர்களை அடக்கும் செயற்பாடுகளில் ஒன்று: ருக்கி பெர்ணான்டோ

இலங்கையில் எதிர்க் கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் செயற்பாடுகளில் ஒன்றாகவே தன்னுடைய கைதைக் கருத முடியும் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தன்னுடைய கைதின் மூலம் இலங்கை மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை சர்வதேசம் நடத்துவதைத் தூண்டி விட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீ.என்.என் (CNN) செய்தி நிறுவனத்திற்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

‘என்னுடைய கைதினை திட்டமிட்ட முயற்சியாகவே நான் கருதுகின்றேன். எதிர் கருத்துக்களைக் கொண்டவர்கள், விமர்சிப்பவர்கள் மற்றும் சவால் விடுபவர்களை அடக்குவதற்கான தலையீடாகவே உணர முடிகிறது. இலங்கைக்கு வெளியில் வாழ்பவர்களால் நாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதனை அறிய முடிவதில்லை. ஆகவே, இது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன். என்னுடன் நெருக்கமானவர்கள் மற்றும் கடந்த காலங்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலையடைகின்றேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் கிளிநொச்சியில் வைத்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்ணான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் இரண்டு நாட்களின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச விசாரணை கோரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு: அமெரிக்க செனட் சபை

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கச் செனட் சபை அறிவித்துள்ளது.

அமெரிக்கச் செனட் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான பணிப்பாளர் பெப் ரொபேர்ட் மெனென்டஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எழுதியுள்ள கடிதமொன்றின் மூலம் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக அமெரிக்கச் செனட் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஜனநாயகக் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான நிலமைகள் தொடர்பில் முழுமையாக அதிர்ப்தி அடைந்துள்ளதாக ரொபேர்ட் மெனென்டஸ் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சரியான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வரை அதன் பொறுப்புக்கூறல், அரசியல் நல்லிணக்கம், மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பிரயத்தனங்கள், சர்வதேச சமூகத்தினருக்கு பதிலளிக்கும் வகையில் உரிய காலவரையறைக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டமானது, மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு காரணியாக அமைந்துள்ளதுடன், பிரதேச மட்டத்தில் உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்கும் வழிகோலியுள்ளது. இதன் மூலம் மறுசீரமைப்புக்கும், கலந்துரையாடலுக்கும் சட்ட ரீதியில் வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், துரதிர்ஷ்டவசமாக 13வது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், வடக்கு மாகாண சபையின் தலைமைத்துவத்துடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலையும், அரசியல் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாகவும் ரொபேர்ட் மெனென்டஸ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான அரசியல் நல்லிணக்கத்திற்கு, அபிவிருத்தித் திட்டங்கள் என்றைக்குமே மாற்றீடாக அமையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது இரு மகள்களுடன் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மிச்சேல் ஒபாமா

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் துணைவியாரும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மிச்சேல் ஒபாமா தனது இரு மகள்களுடன் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவரை சீன அதிபரின் துணைவியார் வரவேற்று கௌரவம் வழங்கியுள்ளார்.

அமெரிக்க - சீன உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ள போதும், இது அரசியல் விடயங்களை குறிப்பாக, மனித உரிமை மீறல் சம்பவங்கள், சைபர் பாதுகாப்பு ஆகியவற்றை தவிர்த்து மேற்கொள்ளப்படும் தனிப்பட்ட சுற்றுப் பயணமே என அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கல்வியின் சக்தி மற்றும் முக்கியத்துவம் குறித்து தனது சீனச் சுற்றுப் பயணத்தில் கவனம் செலுத்தப் போவதாக மிச்சேல் ஒபாமா தெரிவித்துள்ளார். இதன் போது, சீனப் பெருஞ்சுவர், சீனாவின் மறக்கப்படிக்கப்பட்ட நகரம், டெராகொட்டா வாரியர்ஸ் மியூசியம், செங்க்டு பண்டா காட்சியகம் போன்றவற்றிற்கும் மிச்சேல் ஒபாமா சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

அதோடு பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவர்கள் முன்னிலையில் சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்துகிறார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். எனினும் இதில் சீனா இடம்பெறவில்லை.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹோலி நடனமாடியதால் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்பைஸ் ஜெட் பணிப் பெண்கள்!

பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு நடனமாடியதால், பயணிகளின் பாதுகாப்பின் மீது அலட்சியம் காட்டியதாக ஸ்பைஸ் ஜெட் விமான பணிப்பெண்கள், மற்றும் விமான நிர்வாகம் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியாவில் அண்மையில் ஹோலி பண்டிகை நாடங்கும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு கட்டமாக கடந்த மார்ச் 17ம் திகதி ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணித்த பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஸ்பைஸ் ஜெட் விமானக் குழுவினர் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்கனவே திட்டமிட்டு பயிற்சி பெற்றிருந்த நடனத்தை ஆடிப்பாடினர்.

இதனை ஆர்வமாக பயணித்த பயணிகள் பலரும், வீடியோ பதிவு மேற்கொண்டு யூடியூப், பேஸ்புக் போன்ற சமூகவலைத் தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.  எனினும் நடுவானில் விமானம் பறக்கும் போது ஹோலி நடனம் ஆடி விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு விமானத்துறை கட்டுப்பாட்டு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்பெஸ் ஜெட் நிறுவனத்தின்  8 விமானங்களில் நடத்தப்பட்ட இந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது விமானி ஒருவர் விமானி அறையிலிருந்து வெளியே வந்து கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இது விமான நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற முறைகளை ஏற்படுத்தியதற்காக இரண்டு விமானிகள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர்.

எனினும் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் குறித்த ஹோலி பண்டிகை நடனத்தில் ஈடுபட்ட விமானப் பணிப்பெண்கள், அதனை ஒழுங்கு செய்த நிர்வாகிகளுக்கு சார்பாகவே தனது கருத்தை நியாயப்படுத்தியுள்ளது. எங்களின் பயணிகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம். விமானி அறையில் எப்போதும் ஒரு விமானி இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். ஹோலி நடனம் மொத்தம் 2.5 நிமிடம் மட்டுமே நடைபெற்றது. ஐரோப்பாவில், மேற்குலக நாடுகளில் இவ்வாறு விமானத்தில் திடீரென கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தியா என்றதும் மாத்திரம் ஏன் நிராகரிக்கிறீர்கள். எப்படியாயினும் டிஜிசிஏவின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் என ஸ்பைஸ் ஜெட் நிர்வாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Thursday 20 March 2014

லெப். கேணல் வானதியின் 5ம் ஆண்டு நினைவலைகள்

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம்.

ஆனாலும் மறைமுக கரும்புலிகள், போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும், தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது.

தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது ..குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா, லெப் கேணல் கமலி, மேஜர் சுடரேந்தி, லெப் கேணல் வரதா, கேணல் தமிழ் செல்வி, லெப் கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப் கேணல் வானதி /கிருபாவும் இணைந்து கொண்டாள்.

ஆம், குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத் தலைவிகளாகவும் தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்.....!

லெப் கேணல் வானதி /கிருபா

சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப் கேணல் கிருபா/ வானதி. ஆரம்ப காலம் முதல் லெப் கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள் , ஊடுருவி தாக்குதல்கள், வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள்.

கவிதை, கட்டுரை, நாடகங்களென இவளது திறமைகள் வெளிவந்து கொண்டிருந்தது. அமைதியான சுபாபத்திற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.

பல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது. சிறுத்தை படையணியினை சோதியா படையணியுடன் இணைத்து வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள் ,,,மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள்.

மேஜர் சோதியா படையணியில் கேணல் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பல புரிந்தாள். சமாதான காலத்தின் போது யாழ் மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்ய பட்ட சோதியா படையணி போராளிகளிற்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள். சமாதான காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள், இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது.

2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்து கொண்டாள்.

திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும், நிர்வாக செயற்பாடுகளிலும் முன்னுதாரணமாக செயற்ப்பட்டாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும், அவளது செயற்பாடு தொடர்ந்த வண்ணமிருந்தது..

இறுதி சமர் வன்னியெங்கும் வியாபித்த போதும், குடும்ப வாழ்வும், களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது ..தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள், மக்களின் கொடூர மரணங்கள், தொடர் விமான தாக்குதல்கள், இடப்பெயர்வின் அவலங்கள், மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம் தனது குழந்தையென வாழாது தாயகத்தை நேசித்தாள்.
துணைவன் ஒரு சமர் களத்தில் , இவளோ எதிரியின் வரவை எதிர் பார்த்து வேறொரு சமர் களத்தில். இவர்களின் குழந்தை செல்

மோ உறவினர்கள், நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள் இப்படியாக தான் இறுதி யுத்த நேரங்களில் போராளிக் குடும்பங்களின் வாழ்விருந்தது. அதற்கு மேலாக எதிரி மீதான தாக்குதல் களங்களேயே அதிகம் நேசித்தனர்.

இறுதி யுத்தத்தில் குடும்பங்களாகவே எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்க்கொண்டதை கண்டது வன்னி மண்.

21 / 03 / 2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கான திட்டமிடல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை எதிரியின் எறிகணை வீச்சொன்றில் இம் மண்ணை முத்தமிட்டாள் லெப் கேணல்.வானதி /கிருபா.

விடுதலைக்காய்
வீச்சாகி -நின்றவள்
களங்களிலே
கனலாகி நின்றவள்
சிறுத்தையணியில்
சீற்றமுடன் பகையளித்தவள்
சோதியா படையணியின்
சோதியாய் நின்றவள்
கனவுகள் தாங்கி
நினைவெல்லாம் நடப்போம்.

நினைவுப் பகிர்வு :- ஈழமதி

சிறீலங்கா அரசாங்கத்தின் அச்சுறுத்தல் காரணமாகவே பொய் சொன்னேன் - மருத்துவர் வரதராஜா

வன்னியில் சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தின் போது மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை மற்றும் பொதுமக்கள் காயமடைந்தது தொடர்பில் உண்மையான அறிக்கையை வெளியிட்டேன் என முல்லைத்தீவில் பணியாற்றி மருத்துவர் டி.வரதராஜா கூறியுள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம் ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தனது  அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பின்னர் பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான் நான்காவது மாடியில் தடுத்து வைத்திருந்த காலத்தில், பொய் கூறுமாறு அரசாங்கம் தனக்கு அழுத்தம் தரப்பட்டது. யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி ஐந்து வைத்தியர்களும், பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டோம். 2009ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது புலிகளின் அச்சுறுத்தலினால் யுத்த களம் தொடர்பில் கருத்துகளை தெரிவித்ததாக கூறினார்.

அதற்கு பின்னர் அவர்கள் அனைவருக்கும் ஓமந்தையில் சேவையாற்றுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்தது என அவர் கூறியுள்ளார்.

யுத்த காலத்தில் தான் எவ்விதமான மிகைப்படுத்தல் செய்திகளையும் வழங்கவில்லை என்றும் தான் அக்காலப்பகுதியில் தான் கூறியவை உண்மையானவை என்றும் தான் வழங்கிய செய்திகள் உண்மை என்பதை அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களிடம் வருவர். ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு புலிகள் எங்களிடம் கூறவில்லை எனக்  கூறியுள்ளார்.

நாங்கள் சேவையாற்றிய தற்காலிக வைத்தியசாலைகள் பலவற்றின் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் செஞ்சிலுவை சங்கத்தினால் படுகாயமடைந்த 9,000 பேர், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களிலிருந்து திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்பதை நினைவுபடுத்தினார்.

யுத்த வலயத்தில் 3 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த வேளையில் அங்கு 80 ஆயிரம் பேர் மாத்திரமே எஞ்சி இருந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டினார்.

மருந்துகள்,சாப்பாடு உள்ளிட்ட சகலதையும் 80 ஆயிரம் பேருக்கும் போதுமான அளவு கொடுத்தோம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் மயக்கமடைய செய்யும் மருந்து இல்லை, இரத்தம் கொடுக்கவில்லை, அதனால் பெரிய பெரிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மருந்துகள் இன்றி, சிகிச்சை இல்லாமல் மரணமடைந்தனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மேஷம்)

மேஷ இராசி அன்பர்களே…

உங்களுக்கு குரு பாக்கிய-விரயாதிபதி ஆவார். அவர், 19.6.2014 வியாழன் அன்று மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு பிரவேசிக்கிறார்.

உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு செல்லும் குரு யோகத்தை வாரி வழங்க போகிறார்.

உங்கள் இராசிக்கு 8-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடங்களை குருபார்வை செய்வதால், தடைபட்ட திருமணம் நடக்கும்.

தொழில் உத்தியோகம் சிறப்பாக அமையும். விரயங்கள் தவிர்க்கப்படும்.

பொதுவாக குரு 4-ம் இடத்தில் அமர்ந்தால் உங்கள் இராசிக்கு யோகத்தை கொடுப்பார்.

எப்படியெனில், திரிகோணாதிபதி கேந்திரத்தில் அமர்ந்தால் வராத பணமும் கைக்கு டக்கென்று வந்து விடும்.

அதுமட்டுமல்ல, 4-ம் இடத்தை குறிக்கும் வீடு, வாகனம், கல்வி அத்தனையும் அவன் அருளால் உங்களை வந்தடையும்.

8-ம் இடத்தை பார்வை செய்வதால், இதுவரையில் இழுத்துக்கொண்டு வந்த வழக்கு பிரச்னை தீர்வுக்கு வரும்.

உறவினர் வருகையால் நற்செய்தி, கேளிக்கை, ஆடம்பர செலவு அதிகமாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

தாயாருக்கு உடல் நலக்குறைவு இருந்தாலும் பிணி நீங்கும்.

கடந்த ஆண்டு மூன்றாம் இடத்திலிருந்த குரு பகவான் அவ்வளவு திருப்தியான நன்மையை செய்யவில்லை என கவலையில் இருந்திருக்கலாம்.

தேவையில்லா பகை, விரயம், மனக்குழப்பத்தை கொடுத்து இருந்தாலும், தற்காலம் அவர் 4-ம் இடத்திற்கு வருவதால், இனி உங்களுக்கு நல்ல நேரமே.

இருப்பினும் சிறு விஷயத்தை மட்டும் கவனத்தில் வைத்திருங்கள்.

அது என்னவெனில், வாகனத்தை ஓட்டும் போது மட்டும் சற்று நிதானம் தேவை. கடக குரு உச்சம் பெற்ற குரு.

ஆகவே நன்மைகள் உங்களை தேடி, நாடி வரும். குரு பெயர்ச்சி அன்று விநாயகப்பெருமானையும், தட்சிணா மூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள்.

அன்று காலை முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, உற்சாகமாக உங்கள் வேலையை தொடங்குங்கள்.

சோதனைகள் பறந்துவிடும். சாதனைகள் உங்களை வந்தடையும். ஸ்ரீகஜலஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.

இன்றைய ராசி பலன் | 21.03.2014

மேஷம்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். எதையும் நன்கு யோசித்துச் செய்வது நல்லது. இல்லத்தில் அமைதி குறையலாம். உடன் பணிபுரிபவர்களால் உபத்திரவங்கள் வந்து சேரும்.

ரிஷபம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்.

மிதுனம்
விரயங்கள் மேலோங்கும் நாள். இருப்பினும் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. பொருளாதார வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். மாலைநேரம் பொருள் சேர்க்கை உண்டு.

கடகம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் பெருமையான செய்தி வந்து சேரும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

சிம்மம்
வாகன யோகத்தால் வளம் காணும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பொறுப்புகள் கூடும்.

கன்னி
தனவரவு திருப்தி தரும் நாள். சகோதர வழியில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு அகலும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

துலாம்
நிதி நிலை உயரும் நாள். மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்

விருச்சகம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். எதிர்பார்த்தபடியே இடம், பூமியால் லாபம் கிடைக்கும். எதிரிகள் உங்கள் சொல்லிற்கு அடிபணிவர். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு
வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். நண்பர்கள் உங்கள் இல்லம் தேடி வருவர். நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில தடைகள் ஏற்படும். கூட்டு முயற்சி வெற்றி தரும். மாலை நேரம் பயணத்தால் பலன் கிடைக்கும்.

மகரம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். வெளியுலகத் தொடர்பு விருத்திக்கும். மருத்துவச்செலவு குறையும். உறவினர்களால் உதிரி வருமானம் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்
தொல்லைகளில் இருந்து விடுதலையடையும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களை தள்ளி வைப்பீர்கள்.

மீனம்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். வருமானத்திற்கு வழிவகுத்துக் கொள்வீர்கள். பதவி வாய்ப்புகள் வந்து சேரும். தேவைஇல்லாத பிரச்சினையிலிருந்து விலகிக் கொள்வது நல்லது.

காணாமல் போன விமானத்தினது என நம்பப்படும் பாகங்கள் தென்பட்டுள்ளன

காணாமல் போன மலேசிய விமானத்தினது பாகங்கள்(?) காணப்படுகின்ற இடம் என நம்பப்படும் பகுதிக்கு அவுஸ்திரேலிய விமானப்படை விமானம் தேடுதலுக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோட் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 8ம் திகதி காணாமல் போன MH370 விமானத்தின் எந்தவொரு அடையாளங்களும் கண்டுபிடிக்கபடாத நிலையிலையே இத்தகவல் வெளியாகியுள்ளது.செய்மதியில் தென்பட்ட இரு பொருட்களை ஆராய்வதற்கே அவுஸ்திரேலிய விமானபடை விமானம் அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.மேற்படி விமானம் அவுஸ்திரேலிய நேரப்படி இன்று வியாழக்கிழமை மாலை அவ்விடத்தை அடையவுள்ளது.

டொனி அபோட் மேற்படி பாகங்களை கண்டுபிடிப்பது கடினமானது என்றும் அவை காணாமல் போன விமானத்தினது தேடுதலுக்கு தொடர்பில்லாமலும் இருக்கலாம் என குறிபிட்டுள்ளார்.மேலும் 3 விமானங்கள் அவ்விடத்துக்கு மேலதிக தேடுதலுக்காக அனுப்பி வைக்கபட்டுளதாகவும் தெரிவித்தார்.

உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு 9வது இடம்

பிரபல சினிமா இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சினிமா வரலாற்றினை நுணுக்கமாக ஆராயும் டேஸ்ட் ஆஃப் சினிமா நடத்திய இக்கருத்துக் கணிப்பில் இந்தியாவிலிருந்து இளையராஜா மாத்திரமே தெரிவாகியுள்ளார்.

சிறந்த இசைக் கோர்ப்பு, சிறந்த இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர், இன்ஸ்ட்ருமெண்டலிஸ்ட் ஆகிய அனைத்துப் பிரிவிகளும் இக்கருத்துக் கணிப்பில் எடுத்துக் கொள்ளபப்ட்டன. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 4500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. குறித்த இணையத்தளத்தின் இப்பட்டியலில் முதலிடத்தை எனியோ மொரிகோன் பிடித்துள்ளார்.

இப்பட்டியலின் முழு விபரம் :

1. Ennio Morricone
2. Max Steiner
3. John Williams
4. Bernard Herrmann
5. Nino Rota
6. Tōru Takemitsu
7. Michel Legrand
8. Alan Menken
9. Ilayaraja
10. Jerry Goldsmith
11. Maurice Jarre
12. John Barry
13. Hans Zimmer
14. Joe Hisaishi
15. James Horner
16. Georges Delerue
17. Dimitri Tiomkin
18. Elmer Bernstein
19. Howard Shore
20. Thomas Newman
21. Danny Elfman
22. Philip Glass
23. James Newton-Howard
24. Vangelis
25. Alan Silvestri

மேலும் விபரங்களுக்கு: tasteofcinema

ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், இலங்கை அதனைப் பொருட்படுத்தாது: ஜீ.எல்.பீரிஸ்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எமது செயற்பாடுகளை மற்றொரு நாட்டுக்கு ஒப்படைக்க நாம் தயாரில்லை. ஜெனீவா தீர்மானம் எதுவாக இருப்பினும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஜெனீவா மனித உரிமைப் பேரவை நிலவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக அரசாங்க தகவல் மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் எமக்கு பலமான சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகளை இன்று அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அரசியல் நோக்கங்களுக்காக மிகவும் சூட்சுமமான முறையில் மனித உரிமைகள் என்ற போர்வையின் கீழ் கொண்டு வருகிறார்கள். மார்ச் 29 ஆம் திகதியுடன் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாக தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. நவநீதம்பிள்ளை ஏற்கனவே இலங்கைக்கு எதிரான மனப்பான்மையை கொண்டவர் என்பது நாம் அறிந்த விடயமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற தீர்மானத்தின் 8வது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை நவநீதம்பிள்ளையிடம் கையளிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது திருடனின் தாயிடமே திருடனை பற்றி கேட்பது போன்றது. ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், இலங்கை அதனை பொருட்படுத்தாது. அவ்வாறான நிலைமையில் எமது செயற்பாடுகளை மற்றுமொரு நாட்டுக்கு ஒப்படைக்க வேண்டிய நிலை உருவாகும். அதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. இது எமது அரசியலமைப்புக்கு முரணானது மட்டுமல்ல, இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்படும்: ராஜித சேனாரத்ன

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரையில் ஏற்பகவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மீறும் வகையில் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர் படகுகளை அரசுடமையாக்க தீர்மானித்துள்ளதாகவும், அதன் மூலமாவது அத்துமீறல்கள் குறையுமென்று எதிர்பார்ப்பதாகவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் குற்றவாளிகள்: மும்பை நீதிமன்றம்

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரைக் குற்றவாளிகள் என்று உறுதி செய்துள்ளது மும்பை அமர்வு நீதிமன்றம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி மும்பையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.இதில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேரைக் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் சிறுவனைத் தவிர மற்ற 4 பேரையும் குற்றவாளி என்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

சிறுவனின் வழக்கு மும்பை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிரான ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்: கூட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையின் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகள் தொடர்பிலேயே சர்வதேச ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதனை அனைத்து தமிழ் மக்களும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கேட்டுக் கொண்டுள்ளார்.


‘ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கையினை முறியடிப்போம்’ என்ற கோசத்தோடு திருகோணமலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றியம் என்ற பெயரில் ஹர்த்தாலுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச, தனியார் நிலையங்களை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு கோரியுள்ள இரா.துரைரெட்னம், கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருட காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வீரமுனைப் படுகொலை, காரைதீவு படுகொலை, வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, உடும்பன்குள படுகொலை என படுகொலைகளின் பட்டியல்கள் நீண்டுசெல்கின்றன.

இந்த படுகொலைகள் நடந்து இன்று வரையில் எதுவித விசாரணைகளும் அற்ற நிலையே உள்ளது. இவைகள் நீதிக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட கொலையாகும். ஒரு நாட்டின் அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்களையே கொலை செய்த வரலாறாகும். இவற்றினை நாங்கள் சர்வதேசம் மூலம் இன்று வெளிக்கொணர்ந்துள்ளோம். இந்த படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய விசாரணை நடத்த மறுத்ததன் காரணமாகவே நாங்கள் சர்வதேச விசாரணையை நாடவேண்டிய தேவையேற்பட்டது.

எங்களை அடக்கியாள நினைத்த சக்திகளுக்கு எதிராகவே நாங்கள் போராடி வருகின்றோம். நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை. எங்களை கொன்று குவித்தவர்களுக்கு எதிராகவே போராடுகின்றோம். வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச ரீதியில் இன்று தமிழ் மக்களுக்கு சார்பான ஒரு நிலை தோன்றியுள்ளது. இதனை வலுவாக்க வேண்டியது தமிழர்களின் இன்றைய முக்கிய கடமையாகும்.

இந்த நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் பெயர் அற்றவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றியம் என்ற பெயரில் ஒரு போலிக்குழுவினர் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்ககூடாது. தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை அற்ற நிலையிலேயே சர்வதேசத்திடம் சென்றுள்ளனர் என்பதனை எமது மக்கள் விளங்கிக்கொண்டு அதனை பலவீனப்படுத்துவதற்கு அரச ஆதரவு அடிவருடிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் வழக்கு தாக்கல்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சரினால் தன்னுடைய அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே, அவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையுடன் கலந்தாலோசிக்காமல் மாகாணத்தின் பிரதம செயலாளராக விஜயலக்ஷ்மி ரமேஸ் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் நியமிக்கப்பட்டமை தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அதிர்ப்தி வெளியிட்டு வந்தனர்.

இது, தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் ஜனவரி மாதம் நடைபெற்ற சந்திப்பின் போதும் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டிருந்தது. ஆனாலும், ஜனாதிபதியினால் இதுவரை தீர்வுகள் ஏதும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் பல தடவைகளில் குறைபட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சரினால் மாகாணத்தின் பிரதம செயலாளரின் அதிகாரங்கள் குறைப்பட்டுள்ளதாக தெரிவித்தே விஜயலக்ஷ்மி ரமேஸினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூலம், 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிய வரும் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது தெரிவித்தார்.

Wednesday 19 March 2014

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015

திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும்.

கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும்.

தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும்.

ரயில், விமானம் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும்.

பங்கு சந்தை லாபகரமாக நடக்க வாய்ப்புள்ளது. நவதானியங்கள் விலை குறையும். பொன் ஆபரணங்கள் விலை ஏறும். இரும்பு, எண்ணை பொருட்கள் விலை அதிகரிக்கும்.

கடக குருவாக இருப்பதால், உலகில் சில பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றம், வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம்.

பொதுவாக உச்ச குரு நன்மைகளை செய்வார். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள்.

குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான்.

உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம்.

மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும்.

துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். இனி பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை குரு பகவான் தந்தருளுவார் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தொடரும்…

இன்றைய ராசி பலன் | 20.03.2014

மேஷம்
மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் சூழ்நிலை அமையும்.

ரிஷபம்
காலை நேரத்திலேயே கலகப்பான செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். பயணம் பலன் தரும்.

கடகம்
குடும்பச் சுமை கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துகள் சம்மந்தமாக ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.

சிம்மம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். மாமன், மைத்துனர் வழியில் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கன்னி
நீண்ட நாளைய பிரச்சினையன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். அதிகாரிகளின் அனுகூலம் உண்டு. அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். சொத்து விற்பனை எதிர்பார்த்தபடி அமையும்.

துலாம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொல்லை தந்த உறவினர்கள் மனம் மாறுவர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

விருச்சகம்
நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வியாபார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும்.

தனுசு
வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். தொழில் ரீதியாக புதிய வழிமுறையைக் கையாளுவீர்கள். ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வழக்குகளில் திசை, திருப்பம் ஏற்படலாம்.

மகரம்
குதூகலம் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். வியாபாரப் போட்டிகள் விலகும். வீட்டில் சுகபாரியப் பேச்சு முடிவாகும். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்
வருமானம் திருப்தி தரும் நாள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வரவு போதுமானதாக இருக்கும். திருமணப் பேச்சு முடிவாகும்.

மீனம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடன்சுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். மாலை நேரம் சிறுவிரயம் ஏற்படலாம். தொழில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிங்கள புலனாய்வுப் பிரிவால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கர்பிணிப் பெண் இவர்தான்!

தனது கணவர் காணமல் போயுள்ளார் என்று முறையிட்ட காரணத்தால், மனைவியின் வீட்டிற்குச் சென்ற சிங்கள புலனாய்வுப் பிரிவினர் கர்பிணிப் பெண் என்றுகூடப் பாராமல் தர்மிளாவை அடித்து இழுத்துச் சென்றுள்ளார்கள். இச் சம்பவம் கடந்த 11ம் திகதி திருகோணமலை உப்புவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மீடியாக்களில் செய்திகள் சில வெளியாகி இருந்தது. இருப்பினும் எமக்கு மேலதிகத் தகவல்கள் தற்போது இதுதொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது.

26 வயதாகும் மற்றும் 7 மாதக் கற்பிணியாக இருக்கும் தர்மிளாவின் கணவர் காணமல்போயுள்ளார். இதனை இவர் முறைப்பாடுசெய்துள்ளார். பொலிசாரும் சிங்கள புலனாய்வுப் பிரிவினருமாக இணைந்து இவரது வீட்டிற்குச் சென்று, கர்பிணி என்று கூடப் பாராமல் அவரை தாக்கியுள்ளார்கள். பின்னர் கொழும்பில் உள்ள 4ம் மாடிக்கு கொண்டுசென்றுள்ளார்கள். தடுத்துவைத்து விசாரணைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இது இவ்வாறு இருக்க, குறித்த இந்தப் பெண்ணின் வீட்டுக்கு முன்னதாக புலனாய்வுப் பிரிவினர் CCTV கமரா ஒன்றையும் இரகசியமாகப் பொருத்தியுள்ளார்கள் என்ற செய்தியும், அவ்வூர் மக்களூடாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இவர்களது உறவினர் வீடு யாழ் ஏழாலையில் இருக்கிறது. அங்கும் புலனாய்வுப் பிரிவினர் சென்று நோட்டமிட்டு வருகிறார்கள்.

அதாவது இலங்கையில் இனி எவராவது காணமல்போனால், மனித உரிமை கழகத்திலும் சரி, பொலிஸ் நிலையத்திலும் சரி, எங்கும் சென்று முறையிடவேண்டாம் என்று நேரடியாகவே அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள், சிங்கள புலனாய்வுப் பிரிவினர். மீறி முறைப்பாடு செய்தால் இப்பெண் தர்மிலாவை தாம் கையாண்டது போலவே உங்களையும் கையாள்வோம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இவர்கள். இந்த நாட்டில் எப்போது மனித உரிமை மேம்படப்போகிறது? ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் கூட, சிங்கள இராணுவம் இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடுகிறது. இதில் இருந்து நமக்கு புலப்படுவது என்னவென்றால், இந்த அமெரிக்க பூச்சாண்டிக்கு எல்லாம் மகிந்தர் அடிபணியப்போவது இல்லை என்பது தான்.

அனந்தி அதிரடியாக ஜெனீவாவில் தமிழில் பேசிச் சாதனை!

அனந்தி சசிதரன் மீண்டும் தடாலடியாக நேற்று ஜெனீவா அமர்வில் தனித்தமிழில் உரையாற்றி இலங்கை அரசை அதிர வைத்துள்ளார். அத்துடன் முதன் முதலாக தமிழில் ஜெனீவாவில் பேசி ஆங்கிலம் தெரியாதவர்களிற்கு அங்கு இடமில்லையென்ற சுமந்திரன் கும்பலது போலி முகத்தையும் அவர் கிழித்துள்ளார். அவர் 2 நாட்கள் கலந்து கொண்டது மட்டுமல்ல மொத்தம் நான்கு முறை இன அழிப்பு, சர்வதேச விசாரணை, ஐ.நா ஈழத் தமிழர்களுக்குச் சரியான தீர்வு வழங்குவதற்குத் தவறுவதையும், அரை குறை தீர்மாங்கள் குறித்து ஈழத் தமிழர்கள் கடும் அதிருப்தி அடைத்திருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

இவர் முன்வைத்த 4 உரைகளும் ஒரு தொகுப்பாக நோக்கப்படும் என்றும் தனக்கு கிடைத்த 8 நிமிடங்களில் ஈழத் தமிழருக்கான குரலை அவர் தெளிவாக முன்வைத்திருப்பதாகவும் புலம் பெயர் வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, இன அழிப்பு என்று கதைக்க வேண்டாம், சர்வதேசத்தை விமர்சிக்க வேண்டாம், அதிகமாக எதையும் வலியுறுத்தவேண்டாம், அது ராஜதந்திரமாகாது என்று அங்கலாய்க்கும் செயற்பாட்டாளர்களுக்கே அனந்தி அவர்களின் உரை உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஜெனீவாவில் இருக்கும் புலம் பெயர் வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.

ஐ. நா மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் புள்ளி 4 இன் கீழ் பொது விவாதம் இடம்பெறும் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 2 நிமிடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.  இதில் இடம் பெறுவதற்கு குறித்த நிறுவனத்திற்கு எகோசொக் எனப்படும் அங்கீகாரம் இருக்கவேண்டும். பல வருடங்களாக ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் கரன் பார்க்கர்  போன்றவர்கள் இந்த வெளியைப் பயன்படுத்தி வருகின்றனர். 

கரன் பார்க்கர் அம்மையார் இவ்வருடம் இன அழிப்பு என்பதையும், சுயநிர்ணய உரிமை என்பதையும் வலியுறுதி தனது கருத்தைப் பதிவு செய்தார். சென்ற வருடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதே இடத்தில் உரையாற்றியிருந்தார்.

அந்த இடத்தில் இம்முறை அனந்தி உரையாற்றியுள்ள நிலையில் அனந்தியின் துணிகரமான முதல் நாள் உரையின் பின்னர், பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இன அழிப்பு என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர். நேற்றுச் செவ்வாய்க்கிழமையன்று அனந்தி உள்ளடங்கலாக குறைந்தது மூவர் ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்பு குறித்து பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

தவிரவும், ஐ நா மனித உரிமை சபையில் எமது கருத்தை தமிழ் மொழியிலேயே முன்வைக்க முடியும் என்பதையும் அனந்தி நிறுவியிருக்கிறார். அவரது தமிழ் உரையின் முழு வடிவமும் பின்வருமாறு:

பெரு மதிப்புக்குரிய இந்தப் பேரவையானது பெருங்குற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.
இலங்கைத்தீவின் வட மாகாண சபையில் தேர்தலூடாகாத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவும் இன்று நான் இங்கு நிற்கிறேன். போரின் முடிவில் எனது கணவர் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைவதை நேரடியாக பார்த்த சாட்சியமாக காணாமற்போரைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருள் ஒருத்தியாக அவர்களையும் நான் இங்கு பிரதிதிநிதுவப்படுத்துகிறேன்.
இன அழிப்புப் போரின் பின்னராக இன்னமும் 146,000 இற்கும் அதிகமானவர்களின் கதி தெளிவு படாத நிலையில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். 

2009ம் ஆண்டில் ஆயிரக்கணக்கில் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐ.நா மன்றமும் சொல்லியிருக்கிறது.
2009 மே மாதத்திற்குப் பின்னரும் இன அழிப்பு வேறு வடிவங்களில் அதிகரித்திருக்கும் ஒரு தொடர்நிலையாகி விட்டது. 
சிங்களவர்களைப் படையினராகக் கொண்ட சிறீலங்கா இராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் தொகை அதிகரித்து வருகிறது. எமது காணிகள் மீது எமக்கே உரிமை இல்லாத நிலை காணப்படுகிறது. எமது மண் எம்மிடமிருந்து சிறீலங்கா இராணுவத்தாலும் சிங்களவர்களாலும் பறிக்கப்படுகிறது.

நான் இன்று இங்கு பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் கூட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவர், அருட்தந்தை பிரவீன் அவர்களும், ருக்கி பெர்ணாண்டோ அவர்களும் ஒரு தமிழ்த் தாயினதும், மகளினதும் மனித உரிமைக்கு குரல் கொடுக்க கிளிநொச்சி சென்றதற்காகப் பயங்கரவாத தடைச் சட்ட சரத்துக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ ஆக்கிரமிப்பினால் எமது பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லாதிருக்கிறது. பாலியல் வன்புணர்வும், பாலியல் வன்முறையும் நாளாந்தம் நடக்கின்ற நிலையாகிவிட்டது.  பல கோயில்களும் தேவாலயங்களும் அழிக்கப்பட்டு அங்கு புத்த சிலைகள் நிறுவப்படுகின்றன. எமது பண்பாடு நாளாந்தம் சீரழிக்கப்படுகிறது. சிங்கள அரசு எமது மண்ணையும், பண்பாட்டையும், வரலாற்றையும், ஏன் எமது மனப் பதிவுகளையும் கூட அழித்துவிட முனைகிறது. இவையெல்லாவற்றையும் பற்றி பல அறிக்கைகள் பேசுகின்றன.

பிறேமனில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்ததென்பதையும், இன அழிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது என்பதையும் அறுதியிட்டுச் உரைத்திருக்கிறது. அப்படியிருந்தும், ஐ.நா மன்றம் இதைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை. இன அழிப்பு நடைபெறுகிறது என்பதை அங்கீகரிக்கவும் இல்லை. தாயகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு குரல் கொடுக்கவல்ல ஒருத்தியாக நான் இதைச் சொல்கிறேன். இங்கு கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானங்கள், தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் நகல் உட்பட, பலனளிக்காமல் இருப்பது குறித்து எமது மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவை தீர்க்கவில்லை. தமிழ் என்ற சொல்லே இல்லாத நிலையே காணப்படுகிறது.

சிறீலங்கா அரசு தன்னைத் தானே மாற்றிக்கொள்ளும் தகைமை அற்றது. அது ஒரு இன அழிப்பு அரசு. அது தன்னைத் தானே விசாரிக்கும் ஆற்றல் அற்றது. எனவே இன அழிப்பு மீதான ஒரு சுயாதீனமான, சர்வதேச விசாரணை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படவேண்டும்.

நான் இங்கு மீண்டும் ஒரு தாயாகவும், எமது தாயகத்தில் தமிழ்த் தாய்மாரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருத்தியாகவும் பேசுகிறேன். எமது குழந்தைகளினதும் எமதும் எதிர்காலம் எமது அடையாளத்துடனும், பாதுகாப்பானதாகவும், அமைதியானதாகவும், சுயமரியாதை கொண்டதாகவும், நியாயமானதாகவும் அமைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

மிகவும் கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கு 60 வருடத்துக்கு மேலாக உட்படுத்தப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசத்திற்கு நியாயம் நல்க வேண்டிய கடமைப்பாடு இந்த உலகின் கைகளில் உள்ளதென  தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் துப்பாக்கிச்சூடு குறி தவறுமா? ரவிகரன் கேள்வி!

தமிழீழ விடுதலைப்புலிகள் துப்பாக்கியால் சுட்டிருந்தால் யாராவது தப்பியிருப்பார்களா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கருத்துக்கு பதில கேள்விளை தொடுத்தார் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்

வட மாகாண சபையின் ஏழாவது அமர்வு நேற்று காலை 9.30 மணியளவில் பேரவைச்செயலகத்தில் ஆரம்பமானது.

இதில் எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மத்திய அரசுடன் பேச்சுக்களை நடாத்தி நாட்டிற்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த முனைய வேண்டும் எனவும் உள்நாட்டுக்குள் நடக்கும் எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்திடம் கொண்டு சென்று அவர்களிடம் தீர்வை எதிர்பார்ப்பது எவ்வித பலனையும் தராது.

இது தொடர்பிலான கூட்டமைப்பினதும் மாகாண சபை உறுப்பினர்களினதும் நடவடிக்கைகளில் மாற்றம் வேண்டும். இவற்றை மீண்டும் பரிசீலித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியதாக தெரிய வருகிறது.

இதற்கு வடமாகாண சபையின் முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும் தமது வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தனது கருத்தை காட்டமாக முன்வைத்திருந்தார்.

கிளிநொச்சி தர்மபுரப்பகுதியில் கடந்த 13ம் திகதி இராணுவத்தினரின் சுற்றிவளைப்பின் பின்னர் கைதுசெய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளான விபுசிகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக கூறி அவரை தேடும் நாடகத்தை நடாத்தி குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

இங்கு சமுகமளித்திருக்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடமும் கேட்கிறேன் உங்கள் மனச்சாட்சியை முன்னிறுத்தி பதிலளியுங்கள். தமிழீழ விடுதலைப்புலிகளாலோ அல்லது அவர்களின் அமைப்பில் பயிற்சி பெற்றிருந்த நபரால் சுடப்பட்டிருந்தால் குறித்த நபர் உயிருடன் இருந்திருப்பாரா? அவர்கள் இலக்கு குறி தப்பியிருக்குமா? இவற்றை நீங்களும் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

எனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை உடனே விடுதலை செய்யவேண்டுமென அவர் மேலும் தெரிவித்து இருக்கையில் அமரும்போது அவையில் அமைதி மட்டுமே நிலவியதாக அறியமுடிகிறது.

நோர்வேயில் நடைபெற்ற கவனயீர்பு போராட்டம்

19.03.2014 புதன்கிழமை பிற்பகல் 14:00மணியில் இருந்து பிற்பகல் 15:00 மணிவரை நோர்வே ஒஸ்லோவில் அமைந்திருக்கும் வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்காக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டமானது சிறீலங்கா அரசின் சதித்திட்டத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் திருமதி யெயக்குமாரி; மற்றும் சிறுவர் இல்லம் எனும் போர்வையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் யெயக்குமாரியின் மகளான சிறுமி விபூசிகா மற்றும் மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தியும் இவர்களின் விடுதகை;கு நோர்வே அரசு காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் நோர்வே மக்களவை ஆகிய அமைப்புக்களால் நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்காக கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மனித உரிமை மீறலை செய்து கொண்டருக்கும் சிறீலங்கா பேரினவாத அரசானது. தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன ஒழிப்பை மூடிமறைக்க அதன் சாட்சிகளை பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதோடு தமிழ்மக்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்கலாம் என கனவுகண்டுள்ள கோத்தபாய இப்படியான மிலேச்சத்தனமான மனிதஉரிமை மீறல்களை செய்வதை வன்மையாகக்கண்டிக்கின்றோம்.

தாயகத்தில் எமது உறவுகளின் குரல்கள் சிறீலங்காவின் அகோரக்கரங்களால் நெரித்தாலும் தமிழகத்திலும் புலத்திலும் தமிழ்மக்களின் விடுதலை;காக குரல்கள ஒலித்துக்கொண்டே இருக்கும்.

சர்வதேசத்தின் மனச்சாட்சி கதவுகள் திறக்கப்படும் வரை சிறீலங்காவின் கோரமுகத்தினை பதிவுசெய்து கொண்டே இருப்போம்
நாம் உறுதியோடும் நம்மிக்கையோடும் எப்படி போராட்வேண்டுமென்பதை எமது தேசியத்தலைர் கற்றுத்தந்துள்ளார் அவரின் வழிகாட்டலில் எமது மக்கள்மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் மக்களின் விடுதலைக்காகவும் கொண்டகொள்கை விலாகாது ஒற்றைத்தமிழன் உள்ளவரை.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா