விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பான ‘அழகி' தொடரில் தன்னம்பிக்கை சுந்தரி. வீட்டு வேலை, ஹாஸ்பிடல், பெட்ரோல் பங்க் என பல வேலைகளைப் பார்த்து கஷ்டப்படும் பெண்ணாக நடித்து நடுத்தர குடும்பத்துப் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் சம்பாதித்து வைத்துள்ளார் விஜி சந்திரசேகர். சினிமாவில் நடித்த விஜி நீண்ட இடைவெளிக்குப் பின் சீரியலில் எண்ட்ரி ஆகியுள்ளார்.
முள்ளும் மலரும் தொடரில் துறு துறு என்று நடித்த விஜி சந்திரசேகர் சில வருடங்கள் காணமல் போய் கிழக்குச் சீமையிலே தொடரில் வடிவேலுக்கு ஜோடியாக வந்தார். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் என இருந்தாலும் கொஞ்சகாலம் மீடியாக்களின் கண்களில் சிக்கவில்லை. இப்பொழுது திடீர் சீரியல் பிரவேசம். எதனால் இந்த இடைவெளி என்று கேட்டோம்.
ரெண்டு குழந்தைகளை வளர்க்கவே நேரம் போதலை. பெரியவ காலேஜ் போறா சின்னவள் ப்ளஸ் டூ அதனால் இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சிருக்கு சீரியல்ல வந்துட்டேன்.
அழகி சீரியல் எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்திருக்கு. சில மாதங்களுக்கு முன் தி.நகர் பக்கம் ஷாப்பிங் போயிருந்தேன். கஸ்டமர்ஸ்ல இருந்து சேல்ஸ் கேர்ள்ஸ் வரைக்கும் 'சுந்தரி'யைக் கொண்டாடினது, எனக்கே சர்ப்ரைஸ்.
'சுந்தரி மேடம்... நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்க..?! வீட்டு வேலை, ஹாஸ்பிட்டல் வேலை, பெட்ரோல் பங்க் வேலைனு ஒவ்வொரு நாளும் அவ்வளவு உழைக்கிறீங்க. சோர்ந்து போகும்போதெல்லாம், 'சுந்தரியைவிடவா..?'னு உங்களைத்தான் நினைச்சுக்கிறோம்...'னு ஒரு பணிப்பெண் சொன்னப்போ, தொடர் ஆரம்பிச்ச சில மாசத்துல இப்படி ஒரு ரீச்சானு ஆச்சர்யமா, சந்தோஷமா இருந்தது.
நானும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதால் அதன் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து இந்த சீரியலில் நடிக்கிறேன் என்று கூறினார் விஜி சந்திரசேகர்.
ஒரு முக்கிய செய்தி: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜி நடித்திருக்கிறாராம். வீட்டில் விஜி சந்திரசேகர் ஸ்டிரிக்ட் அம்மா என்று கூறுகின்றனர்.
விஜியின் பெரிய பெண் சுரக்ஷா எம்.பி.பி.எஸ் மாணவியாம். சின்னபெண் லல்லின் ப்ளஸ் ஒன் படிக்கிறாராம். இருவருக்கும் செல்போன் வாங்கி கொடுத்தது கிடையாதாம். டிவி சேனல்ஸ் பார்க்க தடை விதித்துள்ளாராம். பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் எல்லாம் அவர்களுக்கு நட்பு வட்டம் கிடையாதாம். இப்போதைக்கு படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்று கூறி குழந்தைகளை வளர்க்கிறாராம்.
பொறுப்பான அம்மாதான்!
No comments:
Post a Comment