செல்வராகவனின் அடுத்த படம் இரண்டாம் உலகம். இதில் தனுஷ், ஆண்ட்ரியா ஜோடியாக நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தனுஷுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டு ஆண்ட்ரியா வெளியேறினார்.
செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.
பின்னர் நடந்தது தான் உங்களுக்கே தெரியும். செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் திருமணம் நடந்து அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்.
ஆண்ட்ரியா விலகியதை அடுத்து ரிச்சா தான் கதாநாயகி என்றார்கள். இவராவது நிலைப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது அது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. அவரும் போய் விட்டார். அதேசமயம்,தனுஷும் மாறி விட்டார்.
இரண்டாம் உலகத்தில் நடிக்க ஆர்யாவும், அனுஷ்காவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இரண்டாம் உலகம் தெலுங்கிலும் உருவாகிறது. தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். அடுத்த மாதம் இரண்டாம் உலகம் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
No comments:
Post a Comment