சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதும், கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த நடிகை குஷ்பு, இது திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. பொதுமக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. தமிழக மக்கள் இனி 5 ஆண்டுகளுக்கு கஷ்டப்படப்போகிறார்கள். அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறி இருந்தார்.
இது தொடர்பாக சேலம் அதிமுக வழக்கறிஞர் அறிவழகன் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில், சட்டசபை தேர்தலில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் 202 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆனால் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி தமிழக மக்கள் 5 வருடங்களுக்கு கஷ்டப்பட போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து கூறுவதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அவரது வார்த்தையில் ஏதோ அர்த்தம் உள்ளது. ஆட்சியில் அமரும் முன்பே மக்கள் 5 வருடம் கஷ்டப்பட போகிறார்கள் என்று கூறுவது தவறு. இது வாக்களித்த மக்களை வேதனைப்படுத்துவது போல் உள்ளது.
நடிகை குஷ்பு பல கோடி தமிழக வாக்காளர்களின் மனதை புண்படுத்தி பேசி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் குஷ்புவின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளேன என்று கூறியிருந்தார்.
தனது புகாரின்பேரில் குஷ்பு மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரி்த்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்தார்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதும், கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த நடிகை குஷ்பு, இது திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. பொதுமக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. தமிழக மக்கள் இனி 5 ஆண்டுகளுக்கு கஷ்டப்படப்போகிறார்கள். அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறி இருந்தார்.
இது தொடர்பாக சேலம் அதிமுக வழக்கறிஞர் அறிவழகன் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில், சட்டசபை தேர்தலில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் 202 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆனால் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி தமிழக மக்கள் 5 வருடங்களுக்கு கஷ்டப்பட போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து கூறுவதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அவரது வார்த்தையில் ஏதோ அர்த்தம் உள்ளது. ஆட்சியில் அமரும் முன்பே மக்கள் 5 வருடம் கஷ்டப்பட போகிறார்கள் என்று கூறுவது தவறு. இது வாக்களித்த மக்களை வேதனைப்படுத்துவது போல் உள்ளது.
நடிகை குஷ்பு பல கோடி தமிழக வாக்காளர்களின் மனதை புண்படுத்தி பேசி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் குஷ்புவின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளேன என்று கூறியிருந்தார்.
தனது புகாரின்பேரில் குஷ்பு மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரி்த்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment